வெள்ளி, 3 ஜூலை, 2009

ஏக சந்த: க்ராஹி

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் மதுரகவியா என்று நினைக்க வேண்டாம். சமீபத்திலே அடியேனை மிகவும் லயிக்க வைப்பவை, படிக்கும் போதெல்லாம் இப்படி ஒரு அற்புதக் கவி தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமாக வில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாகிறது.

ஏகசந்தக்ராஹி என்றால் எதையும் ஒரு முறை ஒரே ஒரு முறை படித்தாலும், கேட் டாலும் பசுமரத்தாணி போல் நினைவில் கொள்பவர் என்பது எல்லாரும் அறிந்தது தான். அப்படி ஒரு அசாத்தியத் திறமை காரணமாகவே கூரத்தாழ்வாரால் அவர் ஒருமுறை கேட்ட போதாயன வ்ருத்தியை நினைவில் கொண்டு பாஷ்யகாரருக்கு உதவ முடிந்தது என்பது சரித்திரம். இப்போது எத்தனை பேர் அப்படி இருக்கி றார்களோ தெரியாது. சில வருடங்களுக்கு முன் இருந்த அஷ்டாவதானிகள் கூட இப் போது காணோம். ஆனால் நம் மதுரகவி அப்படி ஒரு ஏகசந்தக்ராஹியாக இருந்து அதற்கும் ஒருபடி மேலே போய் ஒரு முறை கேட்டவற்றை உடனே தன் வழியில் கவிதைகளாகப் பொழிந்துள்ளார். அதிலும் நோய்வாய்ப்பட்டு தனது இறுதி நாட்களில் இருந்த சமயத்தில்கூட  ஸ்வாமி தேசிகன் அருளிய கோதாஸ்துதியை தமிழாக்கவேண் டிய அன்பரின் விருப்பத்தை ஏற்று மூலத்தை  ஒருமுறை படிக்கச் சொல்லி அதைத் தமிழில் பாடிக் கொடுத்து பிரமிப்பை ஏற்படுத்தியவர்.

  டெல்லி அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி அனுப்பி இன்று காலை எனக்கு வந்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்களில் அந்த கோதாஸ்துதியும் ஒன்று. இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்த ஒருவர் கூறுவதை இங்கு படங்களாகக் கொடுத்துள்ளேன். படத்தின்மீது க்ளிக் பண்ணி படித்துப் பாருங்கள்.

 

002001

 004

003

005

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக