வெள்ளி, 1 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 5

வினா 121.- இப்படிப்‌பாண்டவர்கள்‌ விருத்தி யடைவதைக்‌கண்டு யார்‌யார்‌ என்னென்ன வெண்ணினார்கள்‌?

விடை.- ஜனங்கள்‌யாவரும்‌திருப்தியோடு பாண்டவர்களைப்‌புகழ்ந்து பேசினர்‌. பீஷ்மர்‌, விதுரர்‌, யுயுத்ஸு, துரோணர்‌, கிருபர்‌ முதலிய தர்மாத்மாக்கள் ‌யாவரும்‌ ஆனந்தித்தனர்‌. ஆனால்‌ திருதிராஷ்டிரனுக்கும்‌, விகர்னனைத்‌தவிர மற்றைய துர்யோதனாதியருக்கும் அடங்காப்‌ பொறாமை வந்துவிடப்‌ பாண்டவர்கள்‌ ஐவரையும்‌ எப்படியாவது ஒழித்துத் ‌தமது கீர்த்தியை நாட்டி தாம்‌ நிலைபெற வேண்டுமென்று அவர்களுக்குத்‌தோன்றியது.

வினா 122.- துர்யோதனாதியர்‌ பாண்டவரிடத்தில்‌ இருந்த விரோதத்தை எவ்வாறு முதலில்‌ வெளியிட்டார்கள்‌?

விடை... துர்யோதனாதியர்‌ திருதராஷ்டிரனோடு ஆலோசித்து பாண்டவர்களை மெதுவாய்‌ வாரணாவதம்‌(பிரயாகை) என்ற பட்டணத்திற்கு அனுப்பிவிட்டுத்‌ தாம்‌ ஹஸ்தினாபுரியில் ‌தமது கீர்த்தியை நிலை நிறுத்த எண்ணினார்கள்‌. பாண்டவர்களை அடியோடு ஒழிப்பதற்கு அவர்களை வாரணாவதத்தில் ‌புரோசனன்‌ என்ற தச்சனால்‌ முன்னமேயே கட்டப்பட்ட அரக்குமாளிகையில்‌ இறங்கும்படி செய்து, பாண்டவர்கள் ‌நிச்சிந்தையாய்‌ தூங்கும்‌ ஓரிரவில்‌ அந்த மாளிகையைக்‌ கொளுத்தி விடும்படி புரோசனனை ஏவி பாண்டவர்களோடு கூடவே அனுப்பி விட்டார்கள்‌.

வினா 123.- இதைத்‌தெரிந்துகொண்டு யார்‌ பாண்டவர்களுக்கு உதவி செய்தது?

விடை.- விதுரர்‌ இதைத்‌ தெரிந்துகொண்டு, முன்பு யுதிஷ்டிரருக்கு மாத்திரம்‌ மிலேச்ச பாஷையில்‌ ஜாடையாக அரக்கு மாளிகையின் ‌ஸ்வரூபத்தையும்‌, அவர்கள் ‌கூடவே வரும்‌ புரோசனனது மோசக்‌கருத்தையும்‌ வெளியிட்டார்‌. ‌

வினா 124.- இதைத்‌ தெரிந்துகொண்டு தர்மபுத்திரர்‌ என்ன செய்தார்‌? புரோசனன்‌ பின்பு என்ன செய்தான்‌?

விடை... தர்மபுத்திரர்‌ ஒன்றும்‌தெரியாதவர்போல்‌ குந்தி தனது தம்பிமார்‌ யாவரையும்‌கூட்டிக்கொண்டு, வாரணாவதம்‌ சென்று அவர்களுக்காகத்‌ தயாராய்‌ இருந்த அரக்கு மாளிகையில்‌ வாஸம்‌செய்து வந்தார்‌. புரோசனனும்‌ கொஞ்ச காலம்‌ தனது எண்ணப்படி மாளிகையைக்‌ கொளுத்தி விடாது நல்லஸமயம்‌ பார்த்துக்‌ கொண்டு சும்மா விருந்தான்‌.

வினா 125.- இப்படி இருக்கையில்‌ விதுரர்‌, பாண்டவர்கள்‌ தப்புவித்துக்கொள்ள வேறு என்ன ஏற்பாடுகள்‌செய்தார்‌?

விடை... தமக்குத்‌தெரிந்தவனாயும்‌, நல்ல நம்பிக்கையுடைய வனாயுமுள்ள ஒரு சுரங்கம் ‌வெட்டுபவனை தர்மபுத்திரரிடம்‌ அனுப்பி, இரகஸ்யமாய்‌ அரக்குமாளிகையிலிருந்து கங்கைக்கரை வரையில்‌ ஒரு சுரங்கம்‌ இயற்றி அரக்கு மாளிகையுள்‌ இருக்கும்‌ இதன்‌ வாயை ஒரு கற்பாறையால் ‌அடைத்துவிட்டு, தர்மபுத்திரரிடம்‌ இந்தச்‌சுரங்கத்தின் ‌ரஹஸ்யங்களைச்‌சொல்லி வரும்படி கட்டளையிட்டார்‌. மேலும்‌ அவர் ‌கங்கைக்‌கரையில் ‌சுரங்கத்தின்‌வாயண்டையில் ‌ஒரு குறிப்பிட்ட இராத்திரியில்‌ தப்பிவரும் ‌பாண்டவர்கள் ‌எளிதில் ‌கங்கையைக் ‌கடப்பதற்காக ஒரு நம்பிக்கையான ஓடக்காரனைத் ‌தனது ஓடத்தோடு இருக்கும்படி செய்து இதையும்‌ யுதிஷ்டிரரிடம்‌ வெகு ரஹஸ்யமாய்த்‌ தெரிவித்தார்‌.

வினா 126.- யுதிஷ்டிரர்‌ இவைகளைத் ‌தெரிந்துகொண்டு என்ன செய்தார்‌? பின் ‌என்ன விசேஷம் ‌நடந்தது?

விடை... இவ்விஷயங்கள்‌ யாவையும் ‌பீமஸேனனிடம் ‌சொல்ல, அவன் ‌விதுரரால்‌ குறிப்பிட்ட இரவில் ‌அரக்கு மாளிகையைக் ‌கொளுத்திவிட்டு சுரங்கத்தின்‌வழியாய்‌ தனது தம்பிமார்‌, தாயார் ‌இவர்களைத் ‌தூக்கிகொண்டு போவதாகத் ‌தீர்மானித்தான்‌. இதே மாதிரி குறிப்பிட்ட நாள்‌ இரவு வரவே புரோசனன் ‌முதலியவர்கள் ‌ஒரு ஸந்தேகமுமின்றி உறங்குகையில்‌, பீமன்‌ கொள்ளிக்‌கட்டையை எடுத்துக்கொண்டு அரக்குமாளிகையின்‌ நான்குபுறங்களிலும்‌ நெருப்பை வைத்துவிட்டு, தனது தம்பிமார்‌, தாயார்‌ இவர்களைத் ‌தனது தோளிலும்‌, முதுகிலும்‌, கையிலும் ‌தூக்கிக்‌ கொண்டு, தனது காலால் ‌சுரங்கத்தின்‌ கல்லைப்‌ புரட்டிவிட்டு, அதன்‌வழியாய்‌ கங்கைக்‌கரையை அடைந்தான்‌. அங்கு ஓடக்காரன்‌ தயாராய்‌ இருக்க, கங்கையைக்‌ கடந்து அக்கரையில் ‌இருந்த ஹிடும்ப வனத்துட்‌சென்று பீமன் ‌தனது உறவினர்‌களை மெதுவான ஓர்‌இடத்தில்‌ படுக்க வைத்துவிட்டு காவல்‌ காத்து வந்தான்‌.

வினா 127.- அரக்குமாளிகை தீப்பற்றி எரிந்தபின்பு வாரணாவதவாஸிகள்‌, திருதிராஷ்டிரன்‌ முதலியோர்‌ என்ன செய்தார்கள்‌?

விடை.- வாரணாவதவாஸிகள்‌, திருதிராஷ்டிரன்‌ முதலியவர்களைப்‌ பழித்தார்கள்‌. திருதிராஷ்டிரன் ‌முதலியோர்‌ அதிக துக்கப்படுவதுபோலப் ‌பாசாங்கு செய்தார்கள்‌. பாண்டவர்களுக்கு வேண்டியவர்கள்‌ துக்கக்கடலில் ‌ஆழ்ந்தனர்‌. விதுரர்‌மாத்திரம்‌ இவைகளை எல்லாம்‌பார்த்து துக்கிக்காது மனத்துள் ‌நகைத்து வந்தார்‌. விதுரரைத்‌ தவிர யாவரும்‌ பாண்டவர்கள்‌ அநியாயமாய்‌ இறந்தனர்‌ என்றே எண்ணினார்கள்‌.

வினா 128.- பாண்டவர்கள்‌ ஹிடும்ப வனத்திற்குப்‌ போனார்களே அங்கு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- அந்த வனத்துக்கு அதிபதியான ஹிடும்பாஸுரன்‌ மனிதர்‌ வந்திருப்பதாக நாற்ற மூலமாய்த்‌ தெரிந்து கொண்டு தனது தங்கை ஹிடும்பியை மனிதர்கள்‌ எங்கு இருக்கிறார்கள்‌ என்று பார்த்துவர அனுப்பினான்‌. அவள்‌வந்து மஹா கம்பீரமாய்‌ உட்கார்ந்திருக்கும்‌ பீமனைக்‌கண்டதும்‌ இராக்ஷஸகுணம்‌போய்‌, அவளுக்குப்‌ பீமனை கல்யாணம்‌ செய்துகொள்ள வேண்டுமென்ற நல்ல எண்ணம்வர, பீமனிடம்‌ சென்று அவளுக்குத்‌ தனது தமையனால் வரும்‌அபாயத்தைத் ‌தெரிவித்து, அவர்கள்‌ தப்புவதற்கு வேண்டிய உபாயம் ‌சொன்னாள்‌. பீமன்‌ இதைக்‌ கவனியாது தைர்யமாய்‌ இருப்பதைக்‌ கண்ணுற்ற ஹிடும்பிக்கு அவனிடம்‌இருந்த காதல்‌ அதிகரிக்க, பீமனோடு பேசிக்கொண்டே அவனது அழகைப்‌ பார்த்துப்‌ பிரமித்து, அங்கு வெகு நாழிகை தனது தமையனது கட்டளையை மறந்து நின்றுவிட்டாள்‌.

வினா 129.- இதற்குள்‌ ஹிடும்பன்‌ என்ன செய்தான்‌? இது என்னமாய்‌முடிந்தது?

விடை.- வெகு நாழிகை தன்‌தங்கை வராதது கண்டு, தங்கைக்குப்‌ போனவிடத்தில்‌ என்ன அபாயம்‌வந்ததோ என்று பயந்து, ஹிடும்பன்‌ கோபமாய் ‌பீமனிருக்குமிடம்‌ வர, அங்கு தனது தங்கை வெட்கத்தோடும்‌, அடக்கத்தோடும்‌நிற்பதை அவன்‌ கண்டான்‌. உடனே பீமன் ‌தனது தங்கையை ஏதோ மந்திராதிகளால்‌ கட்டிவிட்டான்‌ என்ற எண்ணம்‌வர ஹிடும்பனுக்கு அடங்காக்‌ கோபம்‌வந்தது. உடனே பீமனோடு சண்டைக்குப்‌போனான்‌. கொஞ்சநேரம்‌ இருவரும்‌ சப்தம்‌ அதிகம்‌ உண்டாகாமல்‌ சண்டை செய்து கடைசியில்‌ பீமன்‌ ஹிடும்பனைக்‌ கொன்றான்‌.

வினா 130.- ஹிடும்பன்‌ இவ்வாறிறந்ததும்‌ ஹிடும்பி கதி என்னவாயிற்று?

விடை- ஹிடும்பனுக்கும்‌ பீமனுக்கும்‌ சண்டை நடந்து கொண்டிருக்கையில்‌ உண்டான சப்தத்தால்‌ குந்தி முதலானவர்கள்‌ எழுந்திருக்க, அவர்களுக்கு ஹிடும்பி தனது எண்ணத்தை வெளியிட்டு வெகுவாகச்‌சொன்னாள்‌. அவர்கள்‌ ஹிடும்பியினது வேண்டுகோளுக்கிசைந்து, மத்தியானமெல்லாம்‌ பீமனோடு ஸுகமாய்‌ இருந்துவிட்டு இரவில்‌பீமனைத்‌ தம்மிடம்‌கொண்டுவந்து விட்டுவிட வேண்டுமென்று ஹிடும்பிக்குக்‌ கட்டளையிட்டார்கள்‌. பீமனோ தனது தாய்‌முதலியவர்களது வார்த்தைக்கு இசைந்து, ஹிடும்பிக்கு ஒரு பிள்ளை உண்டாகிறவரையில்‌ அவளோடிருப்பதாகவும்‌, பின்பு போய்விடுவதாகவும்‌ அவளுக்கு வாக்களித்து கொஞ்சகாலம்‌ அவளோடு அங்கேயே ஸுகித்திருந்தான்‌.

வினா 131.- ஹிடும்பிக்குப்‌ பிள்ளை பிறந்ததா? அந்தப்‌பிள்ளை என்ன செய்தான்‌? ‌

விடை.- ஹிடும்பிக்குக்‌ கொஞ்ச காலத்திற்கெல்லாம்‌ பீமனைப்போல்‌ மஹா விரயவானான கடோத்கசன்‌ என்ற ஒரு பிள்ளை பிறந்தான்‌. உடனே கடோத்கசன்‌ பாண்டவர்களிடம்‌வந்து “நீங்கள்‌எப்பொழுது காரியார்த்தமாய்‌என்னை நினைக்கிறீர்களோ அப்பொழுது நான்‌உங்களுக்கு என்னாலியன்ற ஸஹாயம்‌ செய்யத்‌தயாராய்‌வந்துவிடுகிறேன்‌" என்று வாக்குக்‌கொடுத்துவிட்டு தனது தாயை கூட்டிக்கொண்டு இஷ்டப்படி அந்த வனத்தில் ‌உலாவிவந்தான்‌.

வினா 132.- இதன்‌பின் ‌பாண்டவர்கள் ‌என்ன செய்தார்கள்‌? யார் ‌இக்காலத்தில்‌ இவர்களுக்கு எவ்வாறு உதவி செய்தார்கள்‌?

விடை.- பாண்டவர்கள்‌ காட்டுவழியாய் ‌போய்க்கொண்டிருக்கையில்‌, இவர்கள்‌ கண்முன் ‌பாட்டனாரான வியாஸ மஹாரிஷி தோன்றி, பாண்டவர்களைத்‌தேற்றி, இவர்களுக்குப் ‌பிராம்மணவேஷம் ‌போட்டு, பக்கத்தில் ‌இருந்த ஏகசக்ரபுரி என்ற பட்டணத்திற்கு இவர்களை கூட்டிக்‌கொண்டு போனார்‌. அங்கே தான்‌ மறுபடியும்‌ வரும்வரையில்‌ இவர்களைப்‌ பிராமணர்‌ வீட்டில்‌இருக்கும்படி ஏற்பாடு செய்துவிட்டு வியாஸர்‌மறைந்தார்‌.

வினா 133.- பாண்டவர்கள்‌ ஏகசக்ர நகரத்திலிருக்கும்‌பொழுது என்ன நல்ல காரியம்‌ செய்தார்கள்‌?

விடை.- குந்தியின்‌உத்தரவின்படி, பீமன்‌ அவர்களிருந்த விட்டுக்காரர்‌ கொடுத்த சோற்று வண்டியைக்‌ காட்டுக்குக்‌ கொண்டுபோய்‌ அங்கு வயிறார அதில்‌உள்ள உணவுகளைப்‌ புசித்து, அவ்வுணவுக்காக வெகு பசியோடு வந்த பகாஸுரன்‌ என்பவனோடு வெகு நாழிகை சண்டைசெய்து கடைசியில்‌ அவனைக்‌ கொன்றுவிட்டான்‌. அப்பட்டணத்திற்கு அதுவரையில்‌ பகாஸுரனால் ‌நேரிட்டிருந்த பயத்தை இவ்வாறு பீமன்‌ நிவர்த்தி செய்தான்‌.

வினா 134.- பகன்‌யார்‌? அவன்‌ ஏகசக்ர நகரத்தவரை எவ்வாறு வருத்தி வந்தான்‌?

விடை. - இவன்‌ ஏகசக்ர நகரத்தருகிலுள்ள 10,000-யானை பலமுள்ள இராக்ஷஸன்‌. இவன்‌ அடிக்கடி பட்டணத்துள்‌வந்து அங்கு அகப்படுவர்‌ எல்லோரையும்‌ வயிறு நிறைகிறவரையில்‌ தினம்‌ புசித்துவிட்டுப்‌ போவது வழக்கம்‌. இதை ஸகிக்க முடியாமல்‌ அவ்வூரார்‌ பகனோடு ஒரு உடன்படிக்கை செய்துகொண்டார்கள்‌. அதன்படி ஊரார்‌ ஒழுங்காய்‌ ஒவ்வொரு நாளைக்கு ஒவ்வொரு வீட்டுக்காரராக ஒரு வண்டி நிறைய சோற்றையும்‌ அதற்கு வேண்டிய உபகரணங்களையும்‌ அந்த வண்டியில்‌ கட்டி இருக்கும்‌ எருதுகளையும்‌ அதை ஓட்டும்‌ ஒரு சிறு பிள்ளையையும்‌ பகனுக்கு ஆகாரமாகக் ‌கொடுப்பதாகவும்‌, அதற்குப்‌பதிலாக பகன்‌ அகப்பட்டவரை புசியாமலும்‌ வேறொருவர்‌ ஊராரை வருத்தாமலும்‌ அவர்களைப்‌ பாதுகாத்து வருவதாகவும் ‌ஏற்பாடு செய்யப்பட்டது. தினம்‌ ஒரு பிள்ளையை இழப்பது என்பது பகனால்‌ ஏற்பட்ட ஒரு பெரிய துன்பமாக ஊரார்‌எண்ணி துக்கித்து வந்தனர்‌. ‌

வினா 135.- இவ்விஷயம்‌ குந்திக்கு எப்படித் ‌தெரியவந்தது? குந்தி அப்பொழுது என்ன செய்தாள்‌?

விடை.- பாண்டவர்கள்‌ அங்கு வாஸம்‌செய்கையில்‌அவர்கள் ‌இறங்கி இருக்கும்‌ வீட்டுக்காரன்‌ பகனுக்குச்‌ சோறு படைக்க வேண்டிய தினம்‌வர, அவ்விட்டுக்காரர்கள்‌ தமது அருமைக்குழந்தை ராக்ஷஸனுக்கு அநியாயமாய்‌ இரையாகி மாளப்‌ போகிறானே என்று கூக்குரலிட்டு அழத்தொடங்கினார்கள்‌. இதைக்‌ குந்தி கேட்டு ஓடிவந்து அவர்களிடம்‌இருந்து பகனது கொடுமையைத்‌ தெரிந்து கொண்டு அவர்களைத்‌தேற்றி தனது பிள்ளைகளுள்‌ ஒருவனை அன்றைக்கு வண்டி ஓட்ட அனுப்புவதாகச்‌சொல்லி பீமனை அன்று வண்டியை ஓட்டிப்போகும்படி ஏற்பாடு செய்து, பகாஸுரனை ஸம்ஹாரம்‌செய்வித்து, ஏகசக்ரபுரிக்கு நன்மையை உண்டாக்கினாள்‌.

வினா 136.- ஊரார்‌பகாஸுரன்‌எவ்வாறு இறந்ததாக எண்ணினார்கள்‌?

விடை. - குந்தியின்‌ வேண்டுகோளின்படி அவர்கள்‌ இறங்கி இருந்த வீட்டுப்‌ பிராம்மணர்‌ உண்மையை ஒளித்து யாரோ ஒரு மஹாப்பிராம்மணர்‌ தன்மேல்‌ கருணை கூர்ந்து தமது மந்திர பலத்தால் ‌பகனை ஸம்ஹரித்தார்‌ என்ற வதந்தி உண்டாகிவிட, அது ஊரெங்கும் பரவிற்று. இவ்வதந்தியே ஸத்தியமென ஊரார்‌நம்பி இருந்தனர்‌.

வினா 137. இந்த ஸத்கிருத்யம்‌ முடிந்ததும்‌, பாண்டவர்களுக்கு என்ன நல்ல ஸமாசாரம்‌, யார்‌வந்து சொன்னார்கள்‌?

விடை... பாண்டவர்கள்‌ இறங்கி இருக்கும் ‌வீட்டில் ‌ஒரு பிராம்மண சிரேஷ்டர்‌ வந்து தமது யாத்திரை விசேஷங்களைச்‌சொல்லி வருகையில்‌, பாஞ்சால தேசத்தரசனும்‌ துரோணரது ஸ்நேகிதனுமான துருபதனுக்குச்‌ சிகண்டி, திரெளபதி, திருஷ்டத்யும்னன்‌ ஆகிய இக்குழந்தைகள் ‌உண்டான விதத்தையும்‌, அப்பொழுது திரெளபதிக்கு ஸ்வயம்வரம்‌ நடக்கப்போகிறது என்பதையும்‌, எடுத்து வெளியிட்டார்‌.

வினா 138.- இந்த திரெளபதி, திருஷ்டத்யும்னன்‌யார்‌? இவர்கள்‌ எவ்வாறு பிறந்தார்கள்‌?

விடை. துருபதன்‌, துரோணர்‌ தன்னை ஹஸ்தினாபுரியில்‌ அவமானித்த உடன்‌, இரண்டு எண்ணங்களோடு புறப்பட்டு, அதைப்‌ பூர்த்திசெய்ய ஸதா முயன்றான்‌ என்று 119-ம்‌விடையில்‌சொல்லியிருக்கிறோம்‌. இதற்காகக்‌ காடெங்கும்‌ திரிந்து ஒரு பிராம்மண சிரேஷ்டரைக் ‌கண்டுபிடித்து அவரால்‌ ஒரு யக்ஞத்தை நடத்தி அந்த யக்ஞகுண்டத்திலிருந்து துரோணரைக்‌ கொல்லத்தக்க திருஷ்டத்யும்னன்‌ என்ற பிள்ளையையும்‌ அர்ஜுனனுக்குத்‌தக்க கிருஷ்ணை என்ற பெண்ணையும்‌ அடைந்தான்‌.

வினா 139.- இக்கதைகளைக்‌ கேட்ட பாண்டவர்களுக்கு என்ன எண்ணமுண்டாயிற்று?

விடை.- பாண்டவர்கள்‌ ஐவருக்கும்‌ திரெளபதி ஸ்வயம்வரத்திற்குப்‌ போகவேண்டு மென்று தோன்ற, குந்தியும்‌ இதற்கிசைந்தாள்‌.

வினா 140.- இந்த எண்ணத்தை யார்‌ எப்படி ஸ்திரப்படுத்தியது?

விடை.- வியாஸர்‌ முன்‌சொல்லிப்போயிருந்தபடி பாண்டவர்கள்‌ முன்‌தோன்றி திரெளபதியின்‌ பூர்வஜன்ம சரித்திரத்தில்‌ ஒரு பாகத்தைச்‌சொல்லி அவளே பாண்டவர்களுக்குப்‌ பெண்சாதியாகப்‌ போகிறாள்‌ என்றும்‌, அவளால்‌ பாண்டவ குலத்திற்கு மேன்மை வரப்போகிறதென்றும்‌ எடுத்துக்காட்டி, பாண்டவர்களது எண்ணத்தை உறுதிப்படுத்தினார்‌.

வினா 141.- வியாஸர்‌ திரெளபதியின்‌ பூர்வஜன்ம சரித்திரத்தில்‌ எந்த பாகத்தைச்‌ சொன்னார்‌?

விடை. - திரெளபதி பூர்வஜன்மத்தில்‌ சங்கரரைக்‌ குறித்து தபஸுசெய்து 'எனக்குப்‌ பதிவேண்டும்‌' என்று ஐந்து தடவை சங்கரரைக்‌கேட்டதால்‌, பகவான்‌ உனக்கு அடுத்த ஜன்மத்தில்‌ ஐந்து புருஷர்‌ ஏற்படுவார்கள்‌என்று சொல்லிப்போனதாக உள்ள சரித்திர பாகத்தை வியாஸர்‌ பாண்டவர்களுக்குச்‌சொன்னார்‌.

வினா 142.- திரெளபதி ஸ்வயம்வரத்திற்காகப்‌ பாண்டவர்கள்‌ போகையில்‌ என்ன ஆபத்து நேரிட்டது? அது எப்படித்‌தீர்ந்தது?

விடை.- இவர்கள்‌ இரவும்‌பகலும்‌ வழிநடந்து போகையில்‌, இரவில்‌ முன்புறம்‌ அர்ஜுனன்‌ ஒரு தீவட்டியைப்‌பிடித்துப்‌போவது வழக்கம்‌. ஓரிரவில்‌ கங்கைக்‌ கரையில்‌வந்து அதைத்‌தாண்ட யத்தனிக்கையில்‌, அங்கு ஜலக்கிரீடை செய்துகொண்டிருந்த சைத்தரரதன்‌ என்ற கந்தர்வராஜன்‌ இவர்களைத்‌தடுக்க, மிகுந்த சண்டை உண்டாயிற்று. இதில்‌ கடைசியாக அர்ஜுனன்‌ தனது கையிலிருந்த தீவட்டியில்‌ ஆக்னேயாஸ்திரத்தை மந்திரித்து விட, அது சென்று கந்தர்வராஜனது இரதம்‌ முதலியவைகளைக் கொளுத்தி, அவனைக்‌கீழே தள்ளியது. உடனே அர்ஜுனன்‌ கந்தர்வனைப்‌பிடித்துக்கொல்ல யத்தனிக்கையில்‌, அக்கந்தர்வனது பெண்சாதி தன்‌தமையன்‌ இவர்களது வேண்டுகோளின்படி கந்தர்வராஜனை உயிரை வாங்காது அர்ஜுனன்‌விட்டுவிட்டான்‌.

வினா 143.- இப்படித்‌தோல்வியடைந்ததும்‌கந்தர்வன்‌என்ன செய்தான்‌?

விடை... தனக்கும்‌, அர்ஜுனனுக்கும்‌ ஸ்நேஹம்‌ ஸதா இருக்க வேண்டும்‌ என்கிற எண்ணத்துடன்‌, மனுவினிடமிருந்து பரம்பரையாய்‌ வந்ததும்‌, ஒருவன்‌ நினைத்தவைகளை யெல்லாம்‌ அவன்‌ கண்முன்‌ கொண்டுவந்து காட்டும்‌திறனுடையதுமான சாக்க்ஷஷி என்கிற மந்திரத்தையும்‌, தன்னிடமிருந்த மஹா மகிமை வாய்ந்த குதிரைகளையும்‌ அர்ஜுனனுக்கு நல்ல மனதோடு கொடுத்து, அவனிடமிருந்து ஆக்னேயாஸ்திரத்தைக்‌ கற்றுக்கொண்டான்‌. இதன்‌பின்பு அர்ஜுனன் ‌தன்னை ஜயித்ததற்கு அவனது பிரம்மசரியமும்‌, தான்‌ ஸ்திரீ மத்தியத்திலிருந்ததுமே காரணமென்று எடுத்துக்‌காட்டி, பின்பு பாண்டவர்களுக்கு ஒரு புரோஹிதரால்‌ அரசனுக்‌குண்டாகும்‌ நன்மைகளை எடுத்துச்சொல்லி, கூடிய சீக்கிரத்தில்‌ ஒரு நல்ல புரோஹிதரை அடைய வேண்டும் ‌என்று அவர்களுக்குப்‌ புத்திமதி கூறினான்‌.

புதன், 29 ஜூன், 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 5

ஶ்ரீ மஹாபாரதம் முதல் பாகம்

வினா 101 முதல் வினா 120 வரை

 

வினா 101.- முன்‌ சொல்லியபடி ரஹஸ்யமாயிருந்த துரோணரது ஸாமர்த்தியம்‌ எவ்வாறு வெளிவந்தது?

விடை...  ஒரு நாள்‌ பாண்டவ கெளரவர்கள்‌ பந்து விளையாடத்‌ தொடங்கினார்கள்‌. அவர்கள்‌ பந்து கிணற்றில்‌ விழ, யாவரும்‌ திகைத்து நின்றனர்‌. அங்கு அப்பொழுது துரோணர்‌ தற்செயலாய்‌ வர அவரைச்‌ சூழ்ந்து கொண்டு, இவர்கள்‌ நடந்த விஷயத்தைத்‌ தெரிவித்தனர்‌. உடனே அவர்‌ துடைப்பக்‌ குச்சிகளில்‌ ஒரு அஸ்திரத்தை மந்திரித்துவிடப்‌ பந்து கரைமேல்‌ வந்து விழுந்தது. இதைக்‌ கண்டு ராஜ குமாரர்கள்‌ இவரது வல்லமையை பீஷ்மரிடம்‌ சொல்ல, அவர்‌ இவர்‌ யாரென்பதையும்‌, என்ன எண்ணத்தோடு ஹஸ்தினாபுரிக்கு வந்தார்‌ என்பதையும்‌ இவரிடமிருந்தே தெரிந்துக்கொண்டு அன்று முதல்‌ துரோணரையே ராஜ குமாரர்களுக்கு தனுர்வேத ஆசிரியராக நியமித்தார்‌.

வினா 102.- யார்‌ யார்‌ எவ்வாறு துரோணரிடம்‌ வில்வித்தை கற்றுவந்தார்கள்‌?

விடை.- இவர்களுள்‌ பாண்டவர்கள்‌ கெளரவர்களைவிட அதிசீக்கிரத்தில்‌ வித்தை கற்றுக்கொண்டார்கள்‌. பாண்டவர்களுள்‌ அர்ஜுனன்‌ ஒருவனே மிகுந்த கருத்தோடு இவ்வில்வித்தையைக்‌ கற்றுக்கொண்டான்‌.

வினா 103.- துரோணருக்கு யாரிடத்தில்‌ அதிகப்‌ பிரீதி? இது வரக்‌ காரணமென்ன?

விடை.- துரோணருக்கு அர்ஜுனனிடத்தில்‌ அதிகப்‌ பிரீதி. இவர்‌ பாண்டவ கெளரவர்களை ஏகாந்தத்தில்‌ அழைத்து, 'என்‌ மனதில்‌ ஒரு குறை இருக்கிறது; அதை நீங்கள்‌, தனுர்வித்தையில்‌ தேர்ச்சியடைந்த பின்னர்‌, பூர்த்தி செய்ய வேண்டும்‌' என்று அவர்களிடம்‌ சொல்ல, அர்ஜுனன்‌ ஒருவனே பூர்த்தி செய்வதாக உறுதி வாக்களித்தான்‌. மற்றையவர்‌ யாவரும்‌ மெளனமாயிருந்தனர்‌. இது பற்றி துரோணருக்கு அர்ஜுனனிடம்‌ பிரீதி உண்டாயிற்று.

வினா 104.- இவர்கள்‌ வில்வித்தை பயிலுங்கால்‌ யார்‌ யார்‌ இவரிடம்‌ வில்வித்தை கற்க வந்தது?

விடை.- ஸூர்ய புத்திரன்‌ என்று அப்பொழுது வழங்கி வந்த கர்ணன்‌, விருஷ்ணி, அந்தகாள்‌ முதலிய ராஜவம்‌சத்தவர்‌, ஏகலவ்யன்‌ என்ற வேட அரசன்‌ குமாரன்‌, ஆகிய இவர்களே.

வினா 105.- துரோணருக்கு அர்ஜுனனிடம்‌ பிரீதி. அதிகரிக்கக்‌ காரணம்‌ என்ன?

விடை.- ஒருநாள்‌ தமது பிள்ளையாகிய அசுவத்தாமனுக்கு புதிய ஆயுதங்கள்‌ கற்றுக் கொடுக்க வெண்ணித்‌, துரோணர்‌ மற்றையவர்களை வெளியிலனுப்புவதற்காக ஒவ்வொருவர்‌ கையிலும்‌ வாய்‌ குறுகிய கமண்டலுவைக்‌ கொடுத்துத்‌ தண்ணீர்‌ கொண்டு வரும்படி ஏவ, யாவரும்‌ அதைக்‌ கொண்டுவரப்‌ போயினர்‌. அப்பொழுது தனது பிள்ளைக்கு உபதேசிக்கத்‌ தொடங்கினர்‌. உடனே அர்ஜுனன்‌ அதிசீக்கிரத்தில்‌, நதிக்கும்‌ போகாது, வருணாஸ்திர மகிமையால்‌ தனது கமண்டலுவை நிறைத்துவந்து அசுவத் தாமனுக்குச்‌ சொல்லிக்‌ கொடுக்கப்பட்ட வித்தையைத்‌ தானுங்‌ கற்றான்‌. மேலும்‌ அரண்மனைப்‌ பரிசாரகனுக்கு இருட்டில்‌ அர்ஜுனனுக்கு சோறிடவேண்டாமென்று துரோணர்‌ கட்டளையிட்டார்‌. அதன்படி ஒரு நாள்‌ அர்ஜுனன்‌ சாப்பிடுகையில்‌ விளக்கணைய பரிசாரகன்‌ அவனுக்குச்‌ சோறிடவில்லை. இப்படிச்‌ செய்த போதிலும்‌ கையானது வாய்க்குச் சரியாய்ப்‌ பழக்கத்தினாற்‌ போவதை கண்ணுற்ற அர்ஜுனன்‌ வில்வித்தை யில்‌ அதிகத்‌ தேர்ச்சியடைய இரவிலும்‌ அதைப்‌ பழகத்‌ தொடங்கினான்‌. இதைக்கண்ட துரோணருக்கு அர்ஜுனனிடம்‌ யிருந்த பிரீதி அதிகரித்தது.


வினா 106.- இப்பிரீதியால்‌ துரோணர்‌ என்ன உபகாரம்‌ அர்ஜுனனுக்குச்‌ செய்தார்‌?

விடை... ஏகலவ்யன்‌ அர்ஜுனனைவிட தேர்ச்சி அடைவானோ என்ற ஸந்தேகத்தால்‌ துரோணர்‌ அவனை சிஷ்யனாக ஒப்புக்கொள்ளவில்லை. அவனோ துரோணரைப்‌ போல ஒரு பிம்பத்தை செய்துவைத்துக்கொண்டு தனது குரு பக்தி விசேஷத்தால்‌ அர்ஜுனனுக்கு துரோணர்‌ இரஹஸ்யமாய்ச்‌ சொல்லிக்கொடுத்த வித்தைகள்‌ எல்லா வற்றையும்‌ தெரிந்து கொண்டான்‌.

வினா 107.- ஏகலவ்யன்‌ அர்ஜுனனைவிட அதிகத்தேர்ச்சி யடையாதபடி எப்படி துரோணர்‌ தடுத்தார்‌?

விடை... துரோணரது அனுமதியின்பேரில்‌ பாண்டவ கெளரவர்கள்‌ காட்டுக்கு வேட்டைக்காகப்‌ புறப்பட்டார்கள்‌. அங்கு ஏகலவ்யனது சிலம்பக்‌ கூடத்தருகில்‌ போகுங்கால்‌ அவனைக்‌ கண்டு அவர்கள்‌ பின்‌ வந்த நாய்‌ குலைக்க, ஏகலவ்யன்‌ ஏழு பாணத்தால்‌ நாயின்வாயைக்‌ காயப்‌ படுத்தினான்‌. இந்த வித்தை அர்ஜுனனுக்கு மாத்திரம்‌ தான்‌ துரோணர்‌ சொல்லி இருந்தார்‌. இதைக்கண்டு அர்ஜுனன்‌ திகைத்து நீ யார்‌ என்று கேட்க, வேடன்‌ நான்‌ துரோணர்‌ சிஷ்யன்‌" என்றான்‌. இதை அர்ஜுனன்‌ துரோணரிடம்‌ சொல்ல அவரும்‌, இவன்‌ கூடவே ஏகலவ்யனிடம்‌ வந்து "எனக்குக்‌ குருதக்ஷிணையாக உனது வலதுகை கட்டைவிரலைக்‌ கொடு” என, ஏகலவ்யன்‌ உடனே யோசியாது கொடுத்துவிட்டான்‌. இதனால்‌ இவனுக்கு வில்லிழுக்க முடியாமலே போக, அர்ஜுனனை மிஞ்ச இடமில்லாமல்‌ போய்விட்டது.

வினா 108.- தமது சிஷ்யர்களை துரோணர்‌ எவ்வாறு பரீக்ஷித்தார்‌?

விடை. - ஒரு மரத்தின்பேரில்‌ ஒரு பட்சி உட்கார்ந்திருக்கக்கண்டு அதை வரிசையாய்‌ ஒவ்வொருவரையும்‌ குறி வைக்கச்‌ சொல்லி தன்‌ உத்தரவின்பேரில்‌ அம்பெய்யும்படி கட்டளையிட்டார்‌. ஒவ்வொருவனும்‌ குறிபார்த்தவுடன்‌, 'உன்‌ கண்ணுக்கு என்ன தெரிகிறது என்று துரோணர்‌ கேட்க, ஒவ்வொருவனும்‌ சுற்றுமுற்றுமுள்ள ஸகல வஸ்துக்களும்‌ என்கண்ணில்‌ படுகின்றன என அவர்களை அப்புறம்‌ போகச்‌ செய்தார்‌. கடைசியில்‌ அர்ஜுனனைக்கேட்க அவன்‌ “எனக்கு பட்சி மாத்திரம்தான்‌ தெரிகிறது, வேறொன்றும்‌ தெரியவில்லை" என, “அம்பு எய்‌” என்று துரோணர்‌ கட்டளையிட்டார்‌. உடனே பட்சி அர்ஜுனன்‌ அம்புபட்டுக்‌ கீழே விழுந்தது. இதனால்‌ துரோணர்‌ அர்ஜுனனது திறமையை யாவரும்‌ அறியும்படி வெளியிட்டார்‌.

வினா 109.- இதன்பின்பு என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- துரோணர்‌ தமது சிஷ்யரோடு கங்கைக்கு நீராடச்‌ சென்றார்‌. அங்கு அவரை ஒரு முதலை பிடித்துக்கொண்டது. தம்மைக்‌ காக்குந்திறமை தமக்கு இருந்தும்‌ சிஷ்யரைக்‌ கூவி யழைத்து முதலையைக்கொன்று தன்னை விடுவிக்கும்படி உத்தரவு செய்தார்‌. சிஷ்யர்கள்‌ யாவரும்‌ ஒன்றும்‌ செய்யத்தோன்றாது திகைத்து நின்றனர்‌. உடனே அர்ஜுனன்‌ ஐந்து பாணங்களைப்‌ பிரயோகித்து முதலையைக்‌ கொன்று ஆசிரியரை விடுவித்தான்‌. அப்பொழுது துரோணர்‌ ஸந்தோஷத்தால்‌ அர்ஜுனனுக்குப்‌ பிரம்ம சிரோஸ்திரத்தை உபதேசித்து அதன்பிரயோகத்தையும்‌ கற்றுக்கொடுத்தார்‌.

வினா 110.- இவ்வாறு பாண்டவ கெளரவர்கள்‌ அஸ்திரவித்தை, வில்வித்தை இவைகளில்‌ தேர்ச்சியடைந்த பின்பு துரோணர்‌ என்ன செய்தார்‌? என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை. - இவர்களது ஸாமர்த்தியத்தை யாவரும்‌ அறிவதற்காக பீஷ்மர்‌ முதலிய பெரியோர்களது எண்ணப்படி ஒரு பரீக்ஷை ஏற்படுத்தினார்‌. இதற்காக ஊருக்கு வெளியில்‌ மைதான ஸ்தலத்தில்‌ யாவரும்வந்து கூடினார்கள்‌. அப்பொழுது பாண்டவ கெளரவர்கள்‌ தமது ஸாமர்த்தியத்தை வெளியிட்டார்கள்‌. யாவரும்‌ இதைக்கண்டு வியந்தார்கள்‌. குந்தி காந்தாரி. திருதராஷ்டிரர்‌ இவர்களுக்கு, குழந்தைகள்‌ செய்யும்‌ அற்புத காரியங்களை விதுரர்‌ சொல்லிக்கொண்டு வந்தார்‌.

வினா 111.- இதில்‌ ஏதாவது சண்டை உண்டாயிற்றா?

விடை... முதலில்‌ பீமனுக்கும்‌ துர்யோதனனுக்கும்‌ விளையாட்டாயுண்டான வீர்யம்‌ உண்மையான சண்டையாகவே முடிந்தது. சப்தம்‌ அதிகரித்துப்‌ பரீக்ஷை அபாயகர மாவதைக்‌ கண்ட துரோணர்‌ இவர்களை விலக்கும்படி அசுவத்தாமனுக்கு கட்டளை யிட்டார்‌. உடனே அசுவத்தாமன்‌, பீமனுக்கும்‌ துர்யோதனுக்கும்‌ மத்தியில்‌ சென்று சண்டையை விலக்கினான்‌.

வினா 112.- இதற்குப்பின்‌ யார்‌ யார்‌ தமது திறமையைக்‌ காட்டினார்கள்‌?

விடை.- துரோணருடைய உத்தரவின்படி அர்ஜுனன்‌ தனது திறமையின்‌ விசேஷத்தை காட்டத்‌ தொடங்கினான்‌. உடனே அர்ஜுனனது திறமையை யாவரும்‌ வியந்து ஆரவாரித்தனர்‌. அர்ஜுனன்‌ காட்டிய விசித்திர வித்தை எல்லாவற்றையும்‌ கர்ணனும்‌ காட்டினான்‌.

வினா 113.- உடனே துர்யோதனன்‌ என்ன செய்தான்‌? இதனால்‌ என்ன விளைந்தது?

விடை.- உடனே துர்யோதனன்‌ ஸாரதியின்‌ புத்திரனாகிய கர்ணனை ஸ்நேஹம்‌ செய்துகொண்டான்‌. இப்படியானதும்‌ இவனுக்கு கர்வம்வர அர்ஜுனனைத்‌ தன்னோடு யுத்தம்‌ செய்யும்படி அழைத்தான்‌. அப்பொழுது இருவரும்‌ மிகுந்த ஆவேசத்தோடு சண்டைசெய்யத்‌ தொடங்கினார்கள்‌.

வினா 114.- இத்‌ தருணத்தில்‌ யுத்தம்‌ உண்டாக என்ன தடை ஏற்பட்டது? அது எவ்வாறு நிவர்த்திக்கப்பட்டது?

விடை... இத்‌ தருணத்தில்‌ கிருபாசாரியர்‌ எழுந்து கர்ணனை நோக்கி “நீ உன்‌ குலம்‌, கோத்திரம்‌ உனது வம்சோத்தாரகரான அரசர்களது பெயர்‌ இவைகளை வெளியிட்டால்‌ மாத்திரம்‌ தான்‌, அர்ஜுனன்‌ உன்னோடு எதிர்த்துப்‌ போர்‌ செய்வான்‌. நல்ல க்ஷத்திரியருக்கு தம்மைவிட தாழ்ந்தவரை எதிர்த்தல்‌ கெளரவக்‌ குறைவு" என்று எடுத்துரைத்தார்‌. கர்ணன்‌ ஒன்றும்‌ பதில்‌ சொல்லமாட்டாமல்‌ வெட்கி நின்றான்‌. அத்தருணத்தில்‌ துர்யோதனன்‌ தனது தோழனைக்‌ காப்பாற்றுவதற்காக கிருபரை நோக்கி, "அரச வம்சத்தில்‌ பிறவாதிருந்தபோதிலும்‌ மூன்று திறத்தார்‌ அரசரெனக்‌ கொண்டாடப்படுவார்‌. அவர்கள்‌, நல்ல குடிபிறந்தோர்‌, மஹா வீரர்‌, ளேனாதிபதிகள்‌ ஆகிய இவர்களே. இப்பொழுது இவன்‌ அரசனல்லவே, ஆதலால்‌ இவனை எப்படி எதிர்ப்பது என்று அர்ஜுனன்‌ யோசித்தால்‌, கர்ணனை இப்பொழுதே நான்‌ அங்கதேசாதிபதி யாக்குகிறேன்‌. இனிமேல்‌ போர்‌ நடக்க என்ன தடை" என்று சொல்லி கர்ணனுக்கு வந்த அவமானத்தை நிவர்த்திசெய்ய அவனுக்கு துர்யோதனனிடம்‌ இருந்த பிரீதி அதிகரித்துவிட்டது.

வினா 115.- இவ்வாறு கர்ணன்‌ அங்க தேசாதிபதியாய்‌ யாவரும்‌ வியக்கும்படி பாணவித்தைகளை காட்டினதும்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- அந்த ஸமயத்தில்‌ கர்ணனை எடுத்து வளர்த்த ஸாரதி, அந்த ரங்க ஸ்தலத்திற்கு வர, பார்த்தவர்கள்‌ நகைப்பரே என்று வெட்கமில்லாமல்‌, தன்னை வளர்த்த பிதாவாகிய ஸாரதிக்கு கர்ணன்‌ வந்தனை வழிபாடுகள்‌ செய்து, அவனைத்‌ திருப்தி செய்வித்துத்‌ தனது பெருந்தன்மையை வெளியிட்டான்‌. இதைக்கண்ட பீமன்‌ கர்ணனை ஸாரதி புத்திரன்‌ என்று பரிஹாஸம்‌ செய்ய துர்யோதனன்‌ கோபத்தோடு, க்ஷத்திரியருக்கு அடையாளம்‌ பலமே ஒழிய பிறப்பல்ல வென்று சொல்லிவிட்டு, வீட்டுக்குத்‌ தன்‌ பரிவாரங்களோடு சென்று அர்ஜுனனால்‌ தனக்கு உண்டான பயம்‌ கர்ணனது ஸ்நேஹத்தால்‌ நிவர்த்தியாக, ஸுகமாய்‌ வாழ்ந்தான்‌.

வினா 116.- இவ்வாறு பாண்டவ கெளரவர்கள்‌ கற்றுத்‌ தேர்ந்தபின்‌ துரோணர்‌ என்ன குரு தக்ஷிணை கேட்டார்‌?

விடை... பாஞ்சால தேசத்தரசனாகிய துருபதனை தேர்க்காலோடு கட்டித்‌ தம்முன்‌ கொண்டுவந்து விடவேண்டும்‌ என்று தம்‌ உள்‌எண்ணத்தை வெளியிட்டு குருதக்ஷிணை கேட்டார்‌.

வினா 117.- இவர்கள்‌ எவ்வாறு குரு தக்ஷிணை கொடுத்தார்கள்‌?

விடை.- முதலில்‌ கெளரவர்கள்‌ துருபதராஜன்‌ பட்டணத்தை முற்றுகை போட்டுக்‌ கடைசியில்‌ அவனைப்‌ பிடிக்கமாட்டாது, தோல்வியடைந்து ஓடத்‌ தலைப்பட்டார்கள்‌. இந்நிலையைக்கண்ட பஞ்சபாண்டவர்‌ ஐவரும்‌ உடனே பட்டணத்தைத்‌ தம்‌ ஸேனையால்‌ வளைத்துக்கொண்டு, கொடும்‌ போர்செய்ய கடைசியில்‌ அர்ஜுனன்‌ வெகு தந்திரமாய்‌ துருபதராஜனைப்‌ பிடித்து தேரோடு கட்ட, யாவரும்‌ துரோணரிடம்‌ இவ்வரசனைக்‌ கொண்டுபோய்‌ விட்டனர்‌.

வினா 118.- இப்படி வந்த துருபதனை துரோணர்‌ என்ன செய்தார்‌?

விடை... "இப்பொழுதாவது நான்‌ உனது ஸ்நேஹத்திற்குத்‌ தகுந்தவனாக உனக்குத்‌ தோற்றுகிறதா? நீ பயப்படாதே, உன்னை நான்‌ கொல்லமாட்டேன்‌" என்று சொல்லிக்‌ காட்டி, "நான்‌ அரசனாய்‌ இல்லாதகாலத்தில்‌ நீ எவ்வாறு என்னோடு ஸ்நேஹிக்க முடியும்‌? ஆகையால்‌ உன்‌ ராஜ்யத்தில்‌ பாதி என்னைச்சேர்ந்தது, மற்றப்பாதியை நீ ஆளலாம்‌” என்று சொல்லி அவனை இசையும்படி செய்து பின்பு கட்டவிழ்த்துவிட, அரசன்‌ அன்றுமுதல்‌ பாஞ்சால தேசத்தின்‌ பாதிபாகத்தை ஆண்டு வந்தான்‌.

வினா 119.- இப்படி துரோணர்‌ செய்தபின்பு துருபதன்‌ மனம்‌ எவ்வாறு இருந்தது?
விடை... துரோணரைக்‌ கொல்லத்தக்க ஒரு பிள்ளையையும்‌, தன்னை வெகு தந்திரமாய்‌ பிடித்துத்‌ தேர்க்காலோடு கட்டி வந்த அர்ஜுனனுக்குத்‌ தக்க ஒரு பெண்ணையும்‌ தான்‌ அடைய வேண்டுமென்ற எண்ணம்‌ துருபதனுக்கு. உண்டாக, அன்று முதல்‌ அவன்‌ இதற்கு வேண்டிய யத்தனங்கள்‌ செய்யத்‌ தொடங்கினான்‌.
வினா 120.- இவ்வாறு பாண்டவர்கள்‌ குரு தக்ூஷணை கொடுத்ததும்‌ என்ன நடந்தது?

விடை. - தர்மபுத்திரருக்கு யுவராஜ்ய பட்டாபிஷேகம்‌ நடந்தது. இவர்‌ பாண்டுவை விடச்‌ சிறந்தவர்‌ என்று யாவரும்‌ புகழும்படி தர்ம நெறி தவறாது நடந்துவந்தார்‌. இக்காலத்தில்‌ பீமன்‌ பலராமரிடமிருந்து கதாயுத்த வகைகளைத்‌ தெரிந்துகொண்டு மஹா பலவானானான்‌. அர்ஜுனன்‌ துரோணரிடமிருந்து இன்னும்‌ புதிதாகிய அரிய அஸ்திரங்களை யறிந்து கொண்டு மிகச்சிறந்த வில்லாளியானான்‌. அப்பொழுது துரோணரது வேண்டுகோளின்படி அவர்‌ தன்னை எதிர்க்குங்கால்‌ தானும்‌ அவரை கூசாது எதிர்ப்பதாக அர்ஜுனன்‌ ஒப்புக்கொண்டான்‌. நகுலனும்‌ சிறந்த யுத்தவீரனாகப்‌ பிரகாசித்தான்‌. ஸஹாதேவனோ துரோணரிட மிருந்த தர்மசாஸ்திர விஷயங்கள்‌ யாவையும்‌ ஜயம்திரிபறக்‌ கற்றுக்கொண்டு சிறந்த புத்திமானானான்‌. பாண்டவர்கள்‌ தமது தகப்பனால்‌ வெல்லமுடியாத அரசர்களைக்கூட வென்று மஹா தேஜோவான்‌ களாய்‌ விளங்கினர்‌.

செவ்வாய், 28 ஜூன், 2022

ஶ்ரீ மஹாபாரத வினா விடை 4

ஶ்ரீ மஹா பாரத வினா விடை
51 முதல் 100 வரை
வினா 49.- சந்தனுவை கங்கை எப்பொழுது எவ்வாறு விவாஹம்‌ செய்துகொண்டாள்‌?
விடை... சந்தனு ஒருநாள்‌ வேட்டைமார்க்கமாக கங்கைக்கரையில்‌ வந்தகாலத்தில்‌, தகப்பன்‌ சொன்னபடி கங்கையைக்‌ கண்டான்‌. உடனே தனக்கு பத்னியாக வேண்டுமென்று வேண்டிக்கொள்ள அவளும்‌ பின்வருமாறு சொன்னாள்‌. “நான்‌ உங்களைக்‌ கணவனாக ஒப்புக்கொள்ளுகிறேன்‌. அனால்‌ நான்‌ செய்யும்‌ சில விஷயம்‌ தங்களுக்குத்‌ தகாதனவாய்த்‌ தோன்றிய போதிலும்‌ என்னைத்‌ தடுக்கக்‌ கூடாது. நீங்கள்‌ சொல்லியபடி யான்‌ நடக்கக்‌ காத்திருக்கிறேன்‌. என்னைச்‌ சிலவிஷயங்களில்‌ தடுப்பீர்களானால்‌, உடனே தங்களைவிட்டுப்‌ போய்விடுவேன்‌"என்றாள்‌. இதற்கு அரசன்‌ இசைந்து அப்பெண்ணை விவாஹம்‌ செய்துகொண்டான்‌.
வினா 50.. அப்படித்‌ தகாதனவாய்த்‌ தோன்றும்படியாக என்ன காரியங்கள்‌ இப்பெண் செய்துகொண்டு வந்தாள்‌?
விடை.- ஸகல விதத்திலும்‌ அரசனுக்கு விதத்திலும்‌ அரசனுக்கு ஹிதத்தையே இவள்‌ செய்துகொண்டு வந்தாள்‌. ஆயினும்‌, அவளிடத்தில்‌ பிறக்கும்‌ பிள்ளைகளை மாத்திரம்‌ உடனே அவள்‌ கங்காநதியில்‌ தூக்கி எறிந்துகொண்டு வந்தாள்‌. இந்தக் கொடிய காரியத்தை மாத்திரம்‌ இப்பெண்‌ தவறாது செய்துவந்தாள்‌.
வினா 51.- எவ்வளவு காலம்‌ இப்படி இவள்‌ செய்து வந்தாள்‌? சந்தனு எவ்வாறு இதைப்‌ பொறுத்து வந்தான்‌?
விடை- ஏழுபிள்ளைகள்‌ வரையில்‌ இவள்‌ இப்படிக்‌ குரூரமாய்க்‌ கங்கையில்‌ எறிந்து விட்டாள்‌. இதுவரையில்‌ "இப்பெண்‌, எங்கே தடுத்துப்‌ பேசினால்‌ கோபித்துக்‌கொண்டு போய்விடுவாளோ, நமக்கு ஸுகம்‌ கெட்டுப்‌ போகுமே" என்று நிரம்பவும் சந்தனு பொறுத்துப்‌ பார்த்தான்‌. அப்பொழுது எட்டாவது பிள்ளை பிறந்தது. முன்போலவே இதையும்‌ கங்கையில்‌ எறியப்‌ போனாள்‌.
வினா 52.- கங்கையில்‌ எறிந்தாளா? எறியவில்லையா? பின்பு இவள்‌ என்ன செய்தாள்‌?
விடை.- இவ்வளவு நாளும்‌ மிகுந்த கஷ்டத்தோடு பொறுத்த இந்த அரசனுக்கு இப்பொழுது ஸகிக்கமுடியாத துக்கமுண்டாய்‌ விட்டது. "நமது வம்சத்திற்கு ஒரு பிள்ளை கூடவா இருக்கக்கூடாது" என்று எண்ணிக்கொண்டு அவளை "கங்கையில் எறியாதே' என்று தடுத்தான்‌. உடனே அவள்‌ அதை நதியில்‌ எறியாது, “ஆனால்‌ எனக்கு நீர்‌ கொடுத்த வாக்குப்படி நான்‌ உம்மை இப்பொழுது விட்டுப் போகவேண்டியது தான்‌. இப்பிள்ளையை நான்‌ வைத்து வளர்த்து கொஞ்ச காலத்திற்கெல்லாம்‌ உம்மிடத்தில்‌ கொண்டுவந்து சேர்க்கிறேன்‌" என்று சொல்லிட்டுக்‌ கங்கைநதிக்குள்‌ மறைந்துவிட்டாள்‌.
வினா 53- கங்கை ஏழு பிள்ளைகளையும்‌ கொல்லுவானேன்‌? எட்டாவது பிள்ளையை மாத்திரம்‌ இப்படி வளர்ப்பானேன்‌?
விடை.- மஹாவிசுவனுக்குச்‌ சாபம்‌ கிடைத்தபின்பு, கங்கை திரும்பிவரும்‌ வழியில்‌, அஷ்டவஸுக்களைக்‌ கண்டாள்‌. அவர்கள்‌ முகம்‌ வாட்டமா யிருப்பது கண்டு, அதற்குக்‌ காரணம்‌ அவர்களுக்கு பூமியில்‌ மனிதராய்ப்‌ பிறக்கும்‌படி வஸிஷ்ட சாபம் வந்திருப்பதாகத்‌ தெரிந்துகொண்டாள்‌. அப்பொழுது வஸுக்கள்‌ கங்கைக்குள்ள லோக ஸம்பந்தத்தையும்‌ தெரிந்துகொண்டு, தாங்கள்‌ எட்டுப்‌ பேர்களும்‌ எட்டுப் பிள்ளைகளாக கங்கைக்கே பிறப்பதாக ஒத்துப்‌ பேசிக்‌ கொண்டார்கள்‌. அவர்களில் ஏழு வஸுக்கள்‌ குற்றங்குறைவாயிருந்ததால்‌ தாங்கள்‌ பிறந்ததும்‌ தங்களைக் கங்கையில்‌ எறிந்து விடும்படி அவளைப்‌ பிரார்த்தித்தார்கள்‌. “எட்டாவது வஸு மாத்திரம்‌ பூலோகத்தில்‌ இருக்கட்டும்‌, அவனே இக்குற்றங்களுக்குக்‌ காரணம்‌. ஆனால்‌ அவன்‌ ஸம்ஸார விருத்தி செய்யமாட்டான்‌. தான்‌ இருக்கவேண்டிய கால‌ம் உலகத்திலிருந்து, எங்களிடம்‌ திரும்பி வருவான்‌" என்றார்கள்‌; அதற்குக்‌ கங்கை இசைந்து முன்சொன்னபடி ஏழுபேரை கங்கையில்‌ எறிந்து, எட்டாவது பிள்ளையை வளர்த்து வந்தாள்‌.
வினா 54.- அஷ்டவஸுக்களுக்கு என்ன காரணத்தால்‌ இச்சாபம்‌ வந்தது?
விடை... அந்த அஷ்டவஸுக்களில்‌ ஒருவன்‌ தனது பெண்சாதியைத்‌ திருப்தி செய்ய, மற்றைய வஸுக்களுடைய ஸஹாயத்தால்‌, வஸிஷ்டரது காமதேனுவைக் கன்றோடு திருடி விட்டான்‌. இதை அறிந்த வஸிஷ்டர்‌ முன்சொன்ன சாபத்தைக் கொடுத்தார்‌.
வினா 55.- சந்தனுவின்‌ பிள்ளையின்‌ பெயர்‌ என்ன?
விடை - அப்பிள்ளைக்குக்‌ காங்கேயன்‌ என்றும்‌,தேவவிருதன்‌ என்றும்‌ பெயர்‌. இவன் தகப்பனைவிட மிகச்‌ சிறந்தவனாய்‌ விளங்கக்கூடியவனாய்‌ இருந்தான்‌.
வினா 56.- சந்தனு பின்பு எவ்வாறு தனது குமாரனை அடைந்தான்‌?
விடை.- தனது திவ்ய இராஜ்யத்தில்‌ மனுநெறி தவறாது செங்கோல்‌ செலுத்தும் ஒருநாள்‌, சந்தனு ஒரு கரடியை வேட்டையாடும்படி நேரிட, அதைத்‌ துரத்திக் கொண்டு கங்கைக்கரை வரைசென்று, அங்கு அதை சங்கரித்தான்‌. அப்பொழுது கங்கையில்‌ மிகவும்‌ ஜலம்‌ குறைந்திருப்பதை நோக்கி "இதென்ன அற்புதம்‌! கங்கையில்‌ கூட இப்படி நீர்‌ குறையும்படி வந்ததே!" என்று ஆச்சரியத்தோடு சுற்றிலும்‌ பார்த்தான்‌. அங்கு திவ்ய தேஜஸ்ஸோடு ஒருபிள்ளை, கங்கைக்குக் குறுக்கே பாண அணை போட்டுக்கொண் டிருப்பதைக்‌ கண்டான்‌. அப்பொழுது கங்கை வெளியில்‌ வந்து பிள்ளையை அரசனிடம்‌ ஒப்புவித்தாள்‌.
வினா 57.- சந்தனு மறுபடியும்‌ விவாஹம்‌ செய்துகொண்டாரா? யாரை? எப்படி?
விடை. - ஒருநாள்‌ வேட்டைக்குப்‌ போகும்போது காட்டில்‌ யோஜனகந்தி அல்லது ஸத்தியவதி என்ற பெயருடைய ஒரு செம்படவக் கன்னிகையைப்‌ பார்த்து மிகுந்த கஷ்டத்தின்பேரில்‌ இவர்‌ அவளை விவாஹம்‌ செய்துகொண்டார்‌.
வினா 58.- இந்த ஸத்தியவதி என்பவள்‌ யார்‌? அழகான கன்னிகை எப்படி செம்படவனுக்குப்‌ பெண்ணானாள்‌?
விடை. - இவள்‌ உபரிசிரவஸு என்ற அரசனுடைய அம்சத்தால்‌ மீனின்‌ வயிற்றில் தங்கும்படி நேரிட்டுப்‌ பிறந்தவள்‌. இவளை ஒரு செம்படவன்‌ மீனின்‌ வயிற்றைப் பிளந்து எடுத்தமையால்‌ இவள்‌ செம்படவர்‌ அகத்தில்‌ அவரது பெண்போல் வளர்ந்தனள்‌.
வினா 59.- இவளுக்குத்‌ துர்நாற்றமல்லவா இருக்க வேண்டும்‌, அப்படி இருக்க இவளுக்கு யோஜனகந்தி என்ற பெயர்‌ எப்படிவந்தது?
விடை.- இவள்‌ சிறு கன்னிகையாய்‌ யமுனாநதியில்‌ ஓடம்‌ ஓட்டிக்‌ கொண்டிருக்கும் போது பராசர மஹாமுனி அங்கு வர அவரது அநுக்ரஹத்தால்‌ இவளுக்கு இந்த நற்கந்தம்‌ வந்தது.
வினா 60.- பராசரர்‌ எதற்காக இந்த வரனைக்‌ கொடுத்தார்‌?
விடை.:-- லோக உபகாரார்த்தம்‌ ஒரு சுப லக்கினத்தில்‌ ஒரு பிள்ளையை உண்டாக்க எண்ணிப்‌ பராசரர்‌ வரும்பொழுது யமுனா நதியைத்‌ தாண்ட இங்கு வந்தார்‌. யமுனா நதி மத்தியில்‌ போகும்பொழுது அவர்‌ உத்தேசித்த லக்கினம்‌ வந்தது கண்டு, இப்பெண்ணைத்‌ தம்‌ அநுக்ரஹத்திற்குப்‌ பாத்திரமாகும்படி கேட்க, அவள்‌ ஒப்புக்கொண்ட தால்‌ அங்கேயே ஒரு திட்டில்‌ வியாஸ பகவான்‌ உண்டானார்‌. இப்படி அந்த ஸமயத்தில்‌ அவருக்கு இசைந்ததற்காக இவ்வரனை இந்தமுனி அவளுக்குக் கொடுத்தார்‌.
வினா 61.- இப்படி இவளுக்கு ஒரு பிள்ளை முன்னமேயே பிறந்திருக்குமானால் எப்படி இவளைச்‌ சந்தனு விவாஹம்‌ செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணினார்‌?
விடை... பராசரது அநுக்ரஹத்தால்‌ முன்‌ இருந்ததுபோல இவள்‌ கன்னிகையாய் விட்டபடியால்‌ இவளுக்கு ஒரு தோஷமும்‌ இல்லாமற்‌ போய்‌ ஸாதாரணமான கன்னிகை யாகவே இருந்தாள்‌. ஆகையால்‌ தான்‌ ஸன்மார்க்கரான அரசரும்‌ இவளை விவாஹம்‌ செய்து கொள்ள எண்ணினார்‌.
வினா 62.- இவளை விவாஹம்‌ செய்துகொள்வதற்குமுன்‌ அரசனுக்கு என்ன கஷ்டமுண்டாயிற்று?
விடை.- அரசன்‌ ஸத்தியவதியின்‌ பிதாவை விவாஹ விஷயமாய்க்‌ கேட்க, அவன் "என்‌ பெண்ணின்‌ வயிற்றில்‌ பிறக்கும்‌ பிள்ளைக்கு நீ முடிசூட்டுவாயானால்‌, நான் இந்தப்‌ பெண்ணை உனக்கு விவாஹம்‌ செய்து கொடுக்கிறேன்‌" என்று சொன்னான்‌. அரசனால்‌ இதற்கு எப்படி இசைய முடியும்‌? காங்கேயனுக்கல்லவோ இராஜ்யம் நியாயமாய்க்‌ கொடுக்கவேண்டும்‌? ஆதலால்‌ மிக துக்கத்தோடு அரசன்‌ தனது அரண்மனைக்குப்‌ போகும்படி நேரிட்டது.
வினா 63.- இந்தக்‌கஷ்டம்‌ எப்படி நிவர்த்தியாய்‌ சந்தனு ஸத்தியவதியை கல்யாணம்‌ செய்துகொண்டார்‌?
விடை... இப்படித்‌ தகப்பன்‌ துக்கத்தோடு வந்தான்‌ என்பதைக்‌ கேட்ட காங்கேயன் ஸத்தியவதியின்‌ பிதாவிடம்‌ சென்று “நான்‌ ராஜ்யத்தை விரும்புவதில்லை. ஸத்திய வதிக்குப்‌ பிறக்கும்‌ பிள்ளைக்கே கொடுக்கிறேன்‌” என்று சபதம்‌ செய்தார்‌. அப்பொழுது அந்தச்‌ செம்படவன்‌, “நீ விரும்பாவிட்டால்‌, உனது புத்திரர்கள் விரும்புவார்களே, அப்பொழுது கலஹம்‌ நேருமே, அதனால்‌ எனக்கு என்ன லாபம்‌” என்றான்‌. அப்பொழுது காங்கேயன்‌ மஹா கோரமான பிரதிக்ஞையைச்‌ செய்தான்‌. "நான்‌ இராஜ்யத்தை யும்‌ விரும்புவதில்லை. விவாஹத்தையும்‌ செய்து கொள்ளுவதில்லை. இப்படியே ஆயுள்‌ முழுவதும்‌ பிரம்மசாரியாகவே இருப்பேன்‌” என்றான்‌. இதனால்‌ இவருக்கு பீஷ்மர்‌ என்ற பெயர்‌ வந்தது. இதன்‌ பின்பு ஸத்தியவதியை செம்படவன்‌ அரசனுக்கு விவாஹம்‌ செய்து கொடுத்தான்‌.
வினா 64.- சந்தனுவிற்கு ஸத்தியவதியிடம்‌ எத்தனை புத்திரர்கள்‌ பிறந்தார்கள்‌?  அவர்களின்‌ பெயர்‌ என்ன? அவர்‌ எப்படி வாழ்ந்தார்கள்‌?
விடை.-  இரண்டு பிள்ளைகள்‌ பிறந்தார்கள்‌. அவர்களுக்கு முறையே சித்ராங்கதன்‌ என்றும்‌ விசித்திரவீர்யன்‌ என்றும்‌ பெயர்‌. அவர்களில்‌ முதல்பிள்ளையைச்‌ சித்ராங்கதன்‌ என்ற கந்தர்வன்‌, தன்பெயரை வஹித்த மனிதன்‌ பூலோகத்தில்‌ உயிரோடிருக்கலாமா வென்று அஹங்காரம்‌ கொண்டு ஸம்ஹாரம்‌ செய்தான்‌. ஆதலால்‌ ஒரு பிள்ளை மாத்திரம்‌ உயிரோடிருந்தான்‌.
வினா 65... இவனுக்கு விவாஹம்‌ நடந்ததா? அப்பொழுது நடந்த விசேஷம்‌ என்ன?
விடை...  பீஷ்மர்‌ காசி ராஜன்‌ புத்திரிகளது ஸ்வயம்வரத்தில்‌ சென்று அவனது புத்திரிகளாகிய அம்பிகை, அம்பாலிகை, அம்பை என்பவர்களை, வீரர்கள்‌ மத்தியில்‌ இரதத்தில்‌ ஏற்றிக்கொண்டு விசித்திரவீர்யனுக்குப்‌ பார்யைகளாகச்‌ செய்ய வேண்டுமென்று கொண்டுவர, அப்பொழுது தன்னை எதிர்த்த அரசர்களை வென்றார்‌. வரும்‌ வழியில்‌ அம்பை, தான்‌ வேறொரு ராஜனை மனதில்‌ பர்த்தாவாக வரித்ததாகச்சொல்ல பீஷ்மர்‌ அவளுக்குப்‌ போகும்படி அநுமதிகொடுத்தார்‌. (இவளால்‌ நடந்த கலஹத்தை உத்தியோக பர்வத்தில்‌ சொல்லப்போகிறோம்‌.) அம்பாலிகை, அம்பிகை ஆகிய இவர்களை விசித்திரவீர்யனுக்குப்‌ பீஷ்மர்‌ விவாஹம்‌ செய்வித்தார்‌.
வினா 66.- விசித்திரவீர்யன்‌ எவ்வளவு காலம்‌ ஸுகமாய்‌ வாழ்ந்தான்‌? அவனுக்கு எத்தனை பிள்ளைகள்‌?
விடை.- அவன்‌ விவாஹமாகி ஏழு வருஷகாலம்‌ ஜீவித்திருந்து பின்பு க்ஷய ரோகத்தால்‌ இறந்தான்‌. அவனுக்கு ஒரு பிள்ளை கூட இல்லை.
வினா 67.- அப்பொழுது குல விருத்திக்கு என்ன ஏற்பாடு செய்தார்கள்‌?
விடை...  ஸத்யவதி முதலில்‌ பீஷ்மரை விவாஹம்‌ செய்து கொண்டு குலவிருத்தி செய்யும்படி அனுமதி கொடுத்தும்‌, "என்‌ பிரம்மசரிய விருதத்திற்கு விரோதமாய்‌ ஒன்றும்‌ செய்யமாட்டேன்‌" என்று அவர்‌ மறுத்து விட்டார்‌. பின்பு இம்மாதிரியான ஆபத்துக்காலங்களில்‌ நல்ல சிறந்த மஹான்கள்‌ அநுக்ரஹத்தால்‌ இராஜபத்தினி குழந்தைகளை அடையலாம்‌ என்று பீஷ்மர்‌ நியாயத்தை எடுத்துக்‌ காட்டத்‌ தனது புத்திரனாகிய வியாஸரை ஸத்யவதி தியானித்தாள்‌. மாதாவினது வேண்டுகோளிற்‌ கிசைந்து வியாஸரும்‌ அநுக்கிரஹிப்பதாக ஒப்புக்கொண்டார்‌.
வினா 68.- வியாஸர்‌ அனுக்ரஹத்தால்‌ யார்‌ யாருக்கு எவ்விதமான புத்திரர்கள் உண்டானார்கள்‌? ஏன்‌ அப்படி உண்டானார்கள்‌?
விடை...  முதலில்‌ அம்பிகைக்கு அநுக்ரஹிக்கும்பொழுது அவள்‌ பயத்தால்‌ கண்ணை மூடிக்கொண்டமையால்‌ அவளிடத்தில்‌ அந்தகனாகிய திருதராஷ்டிரன்‌ பிறந்தான்‌. பின்பு அம்பாலிகைக்கு அநுக்ரஹிக்கும்‌ பொழுது அவள்‌ பயத்தால்‌ வெளுத்துப்‌ போனமையால்‌ அவளுக்குப்‌ பாண்டு என்னும்‌ வெளுத்த தேகமுடைய புத்திரன்‌ உண்டானான்‌. 'கடைசியாய்‌ நல்ல புத்திரன்‌ ஒருவனை அம்பிகையிடத்தில்‌ உண்டாக்கவேண்டும்‌' என்று ஸ்த்யவதி வியாஸரைப்‌ பிரார்த்திக்க, அவர்‌ அப்படியே ஒப்புக்‌ கொண்டு வந்தார்‌. அம்பிகை, தான்‌ வராது தனது தாதியை அனுப்ப, அவளிடத்தில்‌ மஹாதர்மாத்மாவாயும்‌, புத்திமானாயும்‌, யமதர்மரது அம்சாவதார மாயும்‌ உள்ள விதுரர்‌ உண்டானார்‌.
வினா 69.- யமதர்ம ராஜா சூத்திர ஸ்திரீ வயிற்றில்‌ அம்சாவதாரம்‌ செய்ய வேண்டிய காரணம்‌ என்ன?
விடை.- யமதர்மனுக்கு இவ்வாறு பிறக்கவேண்டும்‌ என்று மாண்டவ்ய ரிஷி சாபம் நேர்ந்தமையால்‌, இப்படி அவதாரம்‌ செய்யும்படி நேரிட்டது.
வினா 70.- மாண்டவ்ய ரிஷி யமதர்மனைச்‌ சபிப்பானேன்‌?
விடை...  இவரை ஒருகாரணத்தால்‌ அரசன்‌ கழுவேற்ற, அதிலிருந்து பின்பு அரசனே அவரை வெளியி லெடுத்து விட முடியாமல்‌ கழுமரத்தை மேலேயும்‌, கீழேயும்‌ அறுத்து விடச்‌ செய்தான்‌. இவர்‌ தேகத்துள்‌ இந்த இரும்பாணி இருந்தமையால்‌ ஆணிமாண்டவ்யர்‌ என்று பெயர்பெற்ற ரிஷி, தாம்‌ செய்த எந்தப்‌ பாபத்திற்காக இப்படி கழுவேறும் படி வந்ததென்று யமனைப்‌ போய்க்‌ கேட்டார்‌. அதற்கு அவன்‌ “நீர்‌ ஏழு வயதில்‌ தட்டாரப்‌ பூச்சி முதலியவைகளை முட்களால்‌ குத்தி வேடிக்கை பார்த்து வந்தீர்‌. ஆகையால்‌ இந்தக்கஷ்டம்‌ உமக்கு வந்தது" என்றான்‌. "சிறுவர்‌ செய்த பாபம்‌, தாய்‌ தகப்பனுக்கென்று அறியாமல்‌ என்னை வீணாய்‌ கஷ்டப்படுத்தினாயே, ஆதலால்‌ நீ சூத்திரனாய்ப்‌ பிறக்கக்‌ கடவாய்‌" என்று இவர்‌ சாபங்‌ கொடுத்தார்‌?
வினா 71.- ரிஷியை யாது காரணத்தால்‌ அரசன்‌ கழுவேற்றினான்‌?
விடை...  ஒருநாள்‌ மாண்டவ்ய ரிஷி தமது ஆசிரமத்தில்‌ ஸமாதியிலிருக்கும்பொழுது சில திருடர்கள்‌ ஸேவகரால்‌ துரத்தப்பட்டு ரிஷி யிருக்குமிடம்‌ வந்து ஸாமான்களை எறிந்து விட்டு அங்கேயே ஓரிடத்தில்‌ ஒளிந்தார்கள்‌. ஸேவகர்கள்‌ வந்து ரிஷியை கேள்விகேட்க ரிஷி மெளனமாய்‌ இருந்ததையும்‌, பக்கத்தில்‌ திருட்டுப்போன வஸ்துக்கள்‌ இருப்பதையும்‌ கண்டு, ஆச்ரமத்தை சோதிக்க ஆரம்பிக்க, திருடர்கள்‌ அகப்பட்டார்கள்‌. உடனே ரிஷியை ஒரு திருடனாக வெண்ணி அரசனிடம்‌ அவர்கள்‌ கொண்டுபோய்விட்டு அவன்‌ ஆக்ஞையின்‌ பேரில்‌ எல்லோரையும்‌ கழுவேற்றி விட்டார்கள்‌.
வினா 72.- திருதராஷ்டிரன்‌ முதலியவர்களுக்கு யார்‌ யார்‌ பெண்சாதிகளாய் அமைந்தார்கள்‌?
விடை. - திருதராஷ்டிரனுக்குக்‌ காந்தார தேசத்தரசன்‌ பெண்ணும்‌, சகுனி என்பவனது தங்கையுமாகிய காந்தாரி என்பனவளும்‌, பாண்டு விற்கு குந்திபோஜராஜனது தத்துப்‌ பெண்ணாகிய குந்தியும்‌, மத்திர தேசாதிபதியாகிய சல்லியனது ஸஹோதரியாகிய மாத்ரியும்‌, பெண்சாதிகளாய்‌ அமைந்தார்கள்‌.
வினா 73.- இம்மூன்று பெண்களுள்‌ யாரிடத்தில்‌ என்ன முக்கிய விசேஷம்‌ இருந்தது?
விடை... குந்தி யிடத்தில்‌ ஒரு மந்திர மிருந்தது. அதை எந்த தேவதையை உத்தேசித்து உச்சரித்தாலும்‌ அந்த தேவதை வந்து விடும்‌. அவனது அநுக்ரஹத்தால் அவள்‌ பிள்ளையை அடையும்‌ சக்தி உடையவளாக இருந்தாள்‌.
வினா 74.- இது இவளிடம்‌ இருப்பதற்குக்‌ காரணம்‌ என்ன?
விடை.-  இவள்‌ கன்னிகையாய்‌ தனது தத்துப்‌ பிதா விட்டிலிருக்கும்போது ஒருநாள்‌ தூர்வாஸ மஹரிஷி சாதுர்மாஸ்ய விருதத்திற்கு அங்கே வந்தார்‌. அப்பொழுது குந்தியைச்‌ சிச்ரூஷை செய்யும்படி அரசன்‌ ஏவ, அவள்‌ இந்த மஹா கோபிஷ்டருக்கு பூரண திருப்தி வரும்படி நடந்துகொண்டாள்‌. அந்த ரிஷி ஸந்தோஷத்தால்‌ இந்த மந்திரத்தை குந்திக்கு உபதேசித்தார்‌.
வினா 75.- குந்தி இந்த மந்திரம்‌ கிடைத்ததும்‌ என்ன செய்தாள்‌?
விடை.-  அது சக்தி உடையதா அல்லவா என்று பரீக்ஷை பார்க்க ஸூர்யனை உத்தேசித்து ஜபிக்க, அவர்‌ அநுக்ரஹத்தால்‌ இவளுக்குக்‌ கன்னியாப்‌ பருவத்திலேயே கர்ணன்‌ என்ற ஒரு பிள்ளை பிறந்தது. ஸூர்யன்‌ சொல்‌ லியபடி அந்தப்‌ பிள்ளையை ஒரு பெட்டியில்‌ வைத்து ஆற்றில்‌ விட்டுவிட்டாள்‌. பின்பு ஸூர்யன்‌ அநுக்ரஹித்த‌தால்‌ இவளுக்குக்‌ கன்னியாப்‌ பருவம்‌ வந்துவிட்டது. (இந்தக்‌ கர்ணன்‌ கதையை சாந்தி பர்வத்தில்‌ விஸ்தாரமாய்ச்‌ சொல்லப்போகிறோம்‌.)
வினா 76.- இவளுக்குக்‌ குந்திபோஜன்‌ தத்துப்‌ பிதாவென்று சொல்லி யிருக்கிறதே, இவள்‌ சொந்த பிதா யார்?‌
விடை.- இவள்‌ யயாதி பிள்ளையாகிய யதுவின்‌ வம்சத்தில்‌ பிறந்த சூரராஜன் பெண்ணும்‌, ஜகந்நாதரான கிருஷ்ண பகவான்‌ பிதாவாகிய வஸுதேவரது ஸஹோதரியுமாம்‌.
வினா 77.- குந்திக்கு இம்மந்திரங்களை உபயோகிக்கும்‌ ஸமயம்‌ வந்ததா? எப்படி?
விடை-  வந்தது. கிந்தம ரிஷி சாபத்தால்‌ பாண்டுவுக்குத்‌ தனது பெண்சாதிகளைத்‌ தொட முடியாமல்‌ போய்விட்டது. அப்பொழுது வம்ச விருத்திக்கு இந்த மந்திரத்தைப்‌ பாண்டுவின்‌ வேண்டுகோளின்படி குந்தி உபயோகித்தாள்‌.
வினா 78.- கிந்தம ரிஷி ஏன்‌ பாண்டுவை சபித்தார்‌? எப்பொழுது?
விடை... மூன்று பிள்ளைகளுள்‌ பாண்டுவே இராஜனாகி திக்‌ விஜயம்‌ செய்தபின்பு ஒருநாள்‌ வேட்டைக்குப்‌ போன விடத்தில்‌ ஓர்‌ ஆண்மானும்‌, பெண்மானும்‌ விளையாடுவதைக்‌ கண்டு அவைகளை அம்‌பெய்து கொன்றான்‌. அவை நிஜ மான்கள்‌ அல்ல. ஒரு ரிஷியும்‌ ரிஷி பத்தினியும்‌ அந்த ரூபத்தோடு விளையாடிக்‌ கொண்டிருந்தார்கள்‌. தாம்‌ விளையாடிக்கொண்டிருக்கும்போது தம்மைத்‌ தெரியாது பாண்டு அடித்ததால்‌ “நீயும்‌ உன்‌ மனைவியோடு இப்படி விளையாடினால்‌ உனக்கும்‌ மரணம்‌ வரட்டும்‌” என்று அந்த ரிஷி சபித்தார்‌.
வினா 79.- இந்தச்‌ சாபம்‌ கிடைத்தவுடன்‌ பாண்டு என்ன செய்தான்‌?
விடை.-  உடனே ராஜ்யத்திற்குத்‌ திரும்பி வராமல்‌ வானப்பிரஸ்தாசிரமியாய்‌ பெண்சாதிகளோடு காட்டிலேயே இருந்து விட்டான்‌.
வினா 80.- இவன்‌ குந்தியை மந்திரம்‌ உபயோகிக்கும்படி சொல்லக்‌ காரணமென்ன?
விடை.-  பாண்டு காட்டில்‌ வாஸம்‌ செய்யுங்கால்‌ அங்கு அநேக ரிஷிகள்‌ மேருமலையில்‌ இருக்கும்‌ பிரம்மஸபைக்குப்‌ போகும்‌ வழியில்‌ வந்து தங்கினார்கள்‌. அவர்களோடு கூடப்‌ பாண்டுவும்‌ போக யத்தனிக்கையில்‌, பிள்ளையில்லாதவர்கள்‌ அங்கு வரக்கூடாதெனச்‌ சொல்லி அவர்கள்‌ பாண்டுவைத்‌ தடுத்து விட்டுப்‌ போயினர்‌. உடனே பாண்டுவிற்குப்‌ பிள்ளை வேண்டுமென்று ஆசைவர, குந்தியோடு ஆலோசித்து அவளை மந்திரத்தை உபயோகிக்கும்படி செய்தான்‌.
வினா 81- குந்தியின்‌ மந்திரபலத்தால்‌ எவ்வெப்பிள்ளைகளைப்‌ பாண்டு
அடைந்தான்‌?
விடை.-  குந்தியின்‌ மந்திர பலத்தால்‌ அவளிடத்தில்‌ தர்மபுத்திரர்‌, பீமன்‌, அர்ஜுனன்‌ என்பவர்கள்‌ முறையே தர்மராஜன்‌, வாயு, இந்திரன்‌ என்பவர்களுடைய அநுக்ரஹத்தால்‌ உண்டானார்கள்‌. பின்பு குந்தி பாண்டுவின்‌ வேண்டுகோளின்படி மாத்ரிக்கு இதை யுபதேசித்து அவளிடத்தில்‌ நகுல ஸஹாதேவர்‌ என்ற இரட்டைப்‌ பிள்ளைகள்‌ அசுவனி தேவதைகள்‌ அநுக்ரஹத்தால்‌ உண்டாகும்படி செய்தாள்‌.
வினா 82.- திருதராஷ்டிரனுக்கு எத்தனை குழந்தைகள்‌?
விடை...  துர்யோதனன்‌ முதலிய 100-பிள்ளைகளும்‌, துச்சலை என்னும்‌ கடைசிப்‌ பெண்ணும்‌ ஆகிய 101-குழந்தைகள்‌ திருதராஷ்டிரனுக்கு உண்டானார்கள்‌.
வினா 83.- இவ்வாறு அநேக குழந்தைகள்‌ காந்தாரிக்குப்‌ பிறக்கக்‌ காரணமென்ன? விடை.- வியாஸர்‌ ஒருநாள்‌ மிகப்பசியோடு அரண்மனைக்கு வர அவருக்குத்‌ தாமதிக்காமல்‌ காந்தாரி உணவளித்தாள்‌. உடனே வியாஸர்‌ 'உனக்கு 100- குழந்தைகள்‌ உண்டாகட்டும்‌ என்று அநுக்ரஹித்தார்‌. இதனால்‌ இவள்‌ இவ்வளவு குழந்தைகளை அடைந்தாள்‌.
வினா 84.- இவளுக்குக்‌ குழந்தைகள்‌ பிறந்த விதம்‌ எப்படி? 100-குழந்தைகள்‌ உண்டாக வேண்டி யிருக்க 101-குழந்தைகள்‌ உண்டாவானேன்‌?
விடை. -  கொஞ்ச காலத்திற்கெல்லாம்‌ காந்தாரி கர்ப்பம்‌ தரித்தாள்‌. ஆனால்‌ இரண்டு வருஷம்‌ வரையில்‌ குழந்தை ஒன்றும்‌ வெளி வரவில்லை. இதற்குள்‌ காட்டில்‌ தேவானுக்ரஹத்தால்‌ குந்திக்கு ஒரு குழந்தை பிறந்ததெனக் கேள்விப்பட்டதும்‌, பொறாமையால்‌ ஒருவருக்கும்‌ தெரியாமல்‌ தனது வயிற்றை இடித்துக்கொள்ள, உடனே அவளது கர்ப்பம்‌ ஒரு பெரிய மாம்ஸபிண்டமாய்‌ வெளியில்‌ வந்து விழுந்தது. இதை வியாஸர்‌ 100 பிரிவாகப்‌ பிரித்து 100 பாத்திரத்திலிட்டு மந்திரித்து வைத்துக்‌ கொண்டு வருகையில்‌, காந்தாரிக்கு 101-வது ஒரு பெண்‌ உண்டானால்‌ நலமாயிருக்கும்‌ என்ற எண்ணம்வர வியாஸர்‌ இதை உணர்ந்து 101-வது ஒரு சிறு துண்டு மீதி வரும்படி பிரித்து 101-பாத்திரங்களி லிட்டார்‌. காலத்திற்கெல்லாம்‌ இவைகள்‌ 100-பிள்ளைகளும்‌, ஒரு பெண்ணுமாக மாறின.
வினா 85.- இவர்கள்‌ உண்டாகும்‌ காலத்தில்‌ என்ன குறிகள்‌ காணப்பட்டன? இவர்களில்‌ முக்கியமானவர்கள்‌ பெயர்களைக்‌ கூறுக? இவர்களுக்குக்‌ கெளரவர்‌ எனப்‌ பெயர்வரக்‌ காரணமென்ன?
விடை.-  முதற்பிள்ளை உண்டாகுங்கால்‌ அநேக அபசகுனங்கள்‌ உண்டாயின. இவைகளைக்‌ கண்டதும்‌ விதுரர்‌ முதலிய மஹான்கள்‌ இம்முதல்பிள்ளையை ஸமுத்திரத்தில்‌ எறிந்து விட்டால்‌, பரதவம்சத்திற்கு க்ஷேமமுண்டாகுமெனப்‌ புத்திகூற, திருதராஷ்டிரனுக்கு இப்படிச்‌ செய்ய மனம்‌ வரவில்லை. இதுபோலவே, இந்த 101-பிள்ளைகள்‌ உண்டாகும்‌ பொழுதும்‌ அபசகுனங்கள்‌ உண்டாயின. இவர்களில்‌ முக்கியமானவர்களின்‌ பெயர்கள்‌: துர்யோதனன்‌ முதல்பிள்ளை, துச்சாஸனன்‌ இரண்டாவது பிள்ளை, விகர்ணன்‌, துச்சலை (கடைசிப்பெண்‌), ஆகிய இவர்களே. பரதவம்சத்தில்‌ குரு என்ற ஒரு அரசனிருந்தான்‌. இவர்கள்‌ அவன்‌ வம்சத்திற்‌ பிறந்தவராகையால்‌ இவர்களுக்கு கெளரவர்‌ எனக்‌ காரண விடுகுறிப்‌ பெயர்‌ கிடைத்தது.
வினா 86.- திருதராஷ்டிரனுக்கு வேறு பிள்ளைகளுண்டா?
விடை.- இவனுக்கு ஒரு வைசியப்‌ பெண்ணிடத்தில்‌ பிறந்த யுயுத்ஸு என்றொரு பிள்ளை உண்டு.
வினா 87.- பாண்டவர்கள்‌ பிறக்குங்கால்‌ என்ன விசேஷங்கள்‌ நடந்தன?
விடை...  தர்மபுத்திரர்‌ பிறந்ததும்‌ உலகமே ஸந்தோஷிப்பது போல்‌ நற்சகுனங்கள்‌ காணப்பட்டன. அசரீரிவாணி தர்மபுத்திரரது நற்குண விசேஷங்களைப்‌ புகழ்ந்து கூறியது. பீமன்‌ பிறந்ததும்‌ அசரீரிவாணி அவனது பலத்தைப்‌ புகழ்ந்து பேசியது. இவன்‌ பிறந்தவுடன்‌ காட்டில்‌ ஒரு வேங்கை உறும, தன்மடியில்‌ இருக்கும்‌ குழந்தையை மறந்தவளாய்‌, குந்தி அதிக பயத்தோடு எழுந்திருந்தாள்‌. குழந்தை பீமன்‌ கற்பாறையில்‌ விழுந்தான்‌. அவன்‌ விழுந்ததும்‌ கற்பாறை பொடிப்‌ பொடியாக சிதறிப்போக, இந்த சப்தத்தைக்‌ கேட்டு வந்த வேங்கை பயந்தோடி விட்டது. உடனே பீமனது பலம்‌ எத்தன்மையது என்று பாண்டுவிற்கு விளங்கியது. அர்ஜுனன்‌ பிறந்ததும்‌ ஆகாசத்திலிருந்து புஷ்பமாரி சொரிந்தன. தேவதுந்துபி ஆர்த்தன. அசரீரிவாணி அர்ஜுனனது பிரதாபத்தைப்‌ புகழ்ந்து கூறியது. நகுலஸஹாதேவர்கள்‌ பிறந்தபொழுதும்‌ இதுபோன்ற அசரீரிவாணி உண்டாயிற்று.
வினா 88.- இப்பஞ்ச பாண்டவர்கள்‌ உண்டானபிறகு பாண்டுவின் கதி என்ன வாயிற்று?
விடை.-  வஸந்தகாலம்‌ வர, குந்தி குழந்தைகளைக்‌ கூட்டிக்‌ கொண்டு வெளியே போயிருந்த காலத்தில்‌, பாண்டுவும்‌, மாத்ரியும்‌ உல்லாஸமாய்‌ விளையாடி வந்தார்கள்‌. மாத்ரி பாண்டுவிற்குக்‌ கிந்தமரிஷியின்‌ சாபத்தைப்பற்றி ஞாபகப்‌ படுத்தியும்‌, பாண்டு அதிக ஸந்தோஷமாய்‌ இருந்தபடியால்‌ ஒன்றுந்தோன்றாது தனது மனைவியோடு ஸுகமாய்‌ விளையாடி வந்தான்‌. கொஞ்ச நாழிகைக்‌ கெல்லாம்‌ ரிஷியின்‌ சாபப்படி பாண்டு மரணமடைந்தான்‌.
வினா 89.- பின்பு பாண்டுவின்‌ பெண்சாதிகள்‌ என்ன செய்தார்கள்‌? பின்‌ என்ன நடந்தது?
விடை.- குந்தி தான்‌ உடன்கட்டை ஏறுவதற்கு வேண்டிய ஆதாரங்களை எடுத்துக் காட்ட, மாத்ரியும்‌ தான்‌ அவ்வாறு செய்வதற்குத்‌ தகுந்த ஆதாரங்களை எடுத்துக்‌ காட்டினாள்‌. கடைசியில்‌ மாத்ரிசொல்வதே நியாயமென்று தோன்ற குந்தி அவளுக்கு உடன்கட்டை ஏற அனுமதி கொடுத்தாள்‌. உடனே மாத்ரி பாண்டுவின் தேகத்தோடு ஸஹகமனஞ்செய்து இறந்தாள்‌. உடனே குந்தியையும்‌ அவளது பிள்ளைகளாகிய பாண்டவர்களையும்‌ அங்கு வஸித்துக்கொண்டிருந்த ரிஷிகள் தேற்றி ஹஸ்தினாபுரம்‌ என்ற திருதராஷ்டிரன்‌ ராஜ்யமாளும்‌ பட்டணத்திற்குக் கொண்டுபோய்‌ விட்டார்கள்‌. அங்கு பாண்டுவிற்கும்‌ மாத்ரிக்கும்‌ அபரக்‌ கிரியைகள் கிரமப்படி நடந்தேறின.
வினா 90.- பாண்டுவின்‌ மரணத்தால்‌ துக்கக்கடலில்‌ ஆழ்ந்திருக்கும்‌ ஸத்யவதியை வியாஸர்‌ எவ்வாறு தேற்றினார்‌? பின்‌ என்ன நடந்தது?
விடை... “ஸுககாலம்‌ யாவும்‌ முடிந்துவிட்டன. இனிமேல்‌ உங்களுக்குப்‌ பாண்டவ கெளரவரது சண்டையால்‌ துக்கம்‌ அதிகரிக்குமே ஒழிய, ஸுகத்திற்கு இடமில்லை" என்று வியாஸர்‌ ஸத்யவதிக்கு எடுத்துரைத்தார்‌. உடனே இவள்‌ இதைத்‌ தனது மருமகள்‌ இருவருக்கும்‌ உரைக்க, மூவரும்‌ வனம்சென்று, துறவுபூண்டு, கடவுளைத்‌ த்யானித்து, தமது தேகங்களை நழுவவிட்டு, ஸ்வர்க்கமடைக்தனர்‌.
வினா 91- கெளரவ பாண்டவர்கள்‌ சிறுவர்களாய்‌ இருக்கும்‌ பொழுது எவ்வாறிருந்தனர்‌? இதனால்‌ என்ன பிரமாதம்‌ விளைந்தது?
விடை. -  குழந்தைகள்‌ அனேக அற்புத விளையாட்டுக்களை விளையாடிவந்தன. இவர்களில்‌ பீமன்‌ ஒருவன்‌ மாத்திரம்‌ கெளரவர்‌ 100-பெயர்களை தனது பல விசேஷத்தால்‌ ஸதா தோல்வி யடையும்படி செய்து வந்தான்‌. மேலும்‌ இவன்‌ வேகமாய்‌ நடந்து வந்தால்‌ கெளரவரில்‌ சிலர்‌ கீழே விழுந்துவிடுவார்கள்‌. இவைகளால்‌ துர்யோதனாதியருக்கு பீமனிடம்‌ பொறாமை உண்டாக, அவனை எப்படியாவது ஒழிக்க வேண்டுமெனத்‌ தீர்மானித்தார்கள்‌. இதற்காகவே துர்யோதனாதியர்‌ கங்கையில்‌ பிரமாண கோடி என்ற ஆழமான மடுவின்‌ கரையில்‌ ஜலக்ரீடா மண்டபம்‌ ஒன்று கட்டி, அதில்‌ விதம்‌ விதமான போஜன விஷயங்களைத்‌ தயார்‌ செய்யச்சொல்லி, பாண்டவர்களை அங்குவந்து ஆனந்திக்க அழைத்தனர்‌. யாவரும்‌ அங்கு சென்று ஆனந்தமாய்‌ விளையாடிக்‌ கடைசியில்‌ சாப்பிட உட்கார்ந்தார்கள்‌. உடனே துர்யோதனனே பீமஸேனன்‌ பக்கத்தில்‌ உட்கார்ந்து கொண்டு, அவனுக்காகத்‌ தயார்‌ செய்திருந்த நஞ்சிட்ட சோற்றை திருப்திகரமாக பீமன்‌ உண்ணும்படி செய்தான்‌. எழுந்தவுடன்‌ யாவரும்‌ ஜலக்ரீடைசெய்து கொஞ்ச நாழிகைக்கெல்லாம்‌ களைப்பாய்‌ வந்து லதாக்ரஹங்களில்‌ படுத்தார்கள்‌. பீமன்‌ விஷத்தின்‌ வேகத்தால்‌ மெய்மறந்து தூங்கத்தொடங்கினான்‌. யாவரும்‌ தூங்குகையில்‌ துர்யோதனன்‌ முதலியோர்‌ பீமனைக்‌ கொடிகளால்‌ கட்டிப்‌ பிரமாணகோடியில்‌ தள்ளி விட்டார்கள்‌.
வினா 92.- பீமன்‌ கதி என்ன ஆயிற்று? என்ன விசேஷங்கள்‌ ஸம்பவித்தன?
விடை...  பீமன்‌ விழுந்ததும்‌ அங்கிருந்த பாதாள லோகத்திற்குப்போகும்‌ சுரங்கத்தின்‌ வழியாய்‌ நாகலோகத்திற்குப்‌ போய்ச்சேர்ந்தான்‌. அங்குள்ள பாம்புகள்‌ இவனைக்கடிக்க பாம்பின்‌ விஷத்தால்‌ உணவின்‌ விஷவேகம்‌ குறைந்தது. பீமனுக்கு மயக்கம்‌ தெளிந்தது. தன்னை சுற்றிக்‌ கட்டியிருந்த கொடிகளை அறுத்துக்‌ கொண்டு பாம்புகளை அடிக்க ஆரம்பித்தான்‌. இந்த ஆச்சரியத்தை பீமனிடம்‌ இருந்து தப்பிவந்த பாம்புகள்‌ வாஸுகியாகிய ஸர்ப்பராஜனிடம்‌ சொல்ல, அவன்‌ வந்து பார்த்து, ஸர்ப்பங்களது அபிப்பிராயப்படி பீமனுக்கு 10,000 யானை பலம்‌ வரும்படியான அமிருத ரஸம்‌ கொடுக்க, பீமன்‌ 8-கலசம்‌ குடித்துத்‌ திருப்தியடைந்து ஒரு படுக்கையில்‌ படுத்தான்‌.
வினா 93.- இங்கு பாண்டவர்கள்‌ குந்தி இவர்களது ஸ்திதி என்னமாயிற்று?
விடை.-  பீமன்‌ முன்னமே ஊருக்குப்‌ போயிருப்பான்‌ என்று சொன்ன துர்யோதனனது சொல்லை நம்பிப்‌ பாண்டவர்‌ முதலியோர்‌ ஹஸ்தினாபுரஞ்செல்ல அங்கு பீமனைக்‌ காணாது கவலை யுற்றனர்‌. இதை யறிந்ததும்‌ குந்திக்கு அடங்காத்‌ துயரமுண்டாக, பீமனைத்தேட ஏற்பாடுகள்‌ செய்துவிட்டு விதுரரை யழைப்பித்து அவரோடு அவள்‌ ஆலோசனை செய்து பார்த்தாள்‌. இது துர்யோதனனது செயலாகவே இருக்கவேண்டு மென்றும்‌, பீமனை அவர்கள்‌ கொன்றிருப்பார்கள்‌ என்றும்‌ குந்தி சொல்ல, விதுரர்‌ மற்றப்‌ பிள்ளைகளது க்ஷேமத்திற்காக குந்தியை பொறுமையோ டிருக்கச்செய்து, மஹரிஷிகளது ஆசீர்வாத பலத்தால்‌ பீமன்‌ திரும்பிவராமல்‌ போக மாட்டான்‌ என்று தேறுதல்‌ சொல்லிப்போனார்‌.
வினா 94.- பீமன்‌ எவ்வாறு திரும்பி வந்தான்‌? பின்‌ நடந்தது என்ன?
விடை.-  எட்டுநாள்‌ முடிந்து பீமன்‌ எழுந்ததும்‌ அவனுக்கு 10,000 யானை பலம்‌ உண்டாக, மங்களஸ்நாநம்‌ செய்து பரிசுத்தனானான்‌. நாகர்கள்‌ உடனே பீமனைத்‌ தூக்கி வந்து பிரமாணகோடியின்‌ கரையில்‌ விட்டுப்போயினர்‌. உடனே பீமன்‌ தனது தாய்‌, ஸஹோதரர்‌ இவர்களிடம்‌ சென்று, தனக்கு வந்த ஆபத்துக்களையும்‌ அவைகளால்‌ தான்‌ அடைந்த நன்மைகளையும்‌ பற்றிச்‌ சொன்னான்‌. தர்மபுத்திரர்‌ பீமனை ஒன்றுஞ்‌ சொல்லாதிருக்கும்படி அடக்கிவிட்டார்‌. விதுரர்‌, யுயுத்ஸு இவர்கள்‌ அன்று முதல்‌ அடிக்கடி பாண்டவர்களுக்கு நல்ல புத்தி சொல்லிக் கொண்டு வந்தனர்‌. இதன்‌ பின்பு துர்யோதனாதியர்‌ பீமனை அனேகந்தடவை விஷம்‌ வைத்துக்கொல்ல யத்தனித்தும்‌ பயன்படாமல்‌ போயிற்று. விதுரர்‌, யுயுத்ஸு இவர்கள்‌ புத்தி சொன்னபடி ஒன்றும்‌ வெளியிட்டுச்‌ சொல்லாது பாண்டவர்கள்‌ எல்லாவற்றையும்‌ பொறுத்து வந்தனர்‌.
வினா 95.- பாண்டவர்கள்‌, கெளரவர்கள்‌ இவ்வாறு வளர்ந்து வருகையில்‌ முதலில்‌ யாரிடத்தில்‌ வில்‌ வித்தை பயின்றனர்‌?
விடை.- கெளதம ரிஷியின்‌ புத்திரராயும்‌, ஸதா வில்‌ வித்தையிலேயே கவனமுடையவராயு முள்ள சாரத்வதர்‌ புத்திரராகிய கிருபாசாரியரிடம்‌ இவர்கள்‌ முதலில்‌ வில்‌ வித்தை பயின்றனர்‌.
வினா 96.- இவ்வாசிரியருக்கு கிருபர்‌ என்று பெயர்‌ வரக்காரணமென்ன? இவர் யாரிடம்‌ வில்வித்தை கற்றனர்‌?
விடை - இவரது தகப்பனாரான சாரத்வதர்‌ வில்லுங்கையுமாய்த்‌ தமக்கு தனுர்‌ வேதத்தில்‌ தேர்ச்சி வரவேண்டுமென்று தபஸுு செய்யுங்கால்‌, அவர்‌ தபஸைக்‌ கலைக்க இந்திரனது உத்தரவால்‌ ஒரு தேவதாஸி அங்கு வந்தாள்‌. அவளைக்‌ கண்டு மயங்கி அவளிடம்‌ ஒரு பிள்ளையையும்‌, ஒரு பெண்ணையும்‌ பெற்றவுடன்‌, தம்‌ தபஸு பங்கமானது தமக்கு ஞாபகம்‌ வந்துவிட்டது. உடனே வெட்கத்தாலும்‌, கோபத்தாலும்‌ அவ்விடம்‌ விட்டு சாரத்வதர்‌ இக்குழந்தைகளைக்‌ கவனியாது வேறோரிடம்‌ சென்றனர்‌. சற்று நாழிகைக்கெல்லாம்‌ அங்கு சந்தனு மஹாராஜனது ஸேவகன்‌ வந்து, தனிமையாய்‌ வில்லின்‌ அருகே கிடக்கும்‌ இவ்விரு குழந்தை களையுங் கண்டு இவைகள்மேல்‌ கிருபை கூர்ந்து எடுத்துக்கொண்டு, தனது இராஜன்‌ ஆளும்‌ ஹஸ்தினாபுரி சென்று அரசனிடம்‌ காட்ட, அவர்‌ இக்குழந்தை களுக்கு முறையே கிருபன்‌, கிருபி எனப்பெயரிட்டு ஜாக்கிரதையாய்‌ வளர்த்து வரும்படி கட்டளை யிட்டார்‌. இவ்வாறு குழந்தைகள்‌ வளர்ந்து வருவதை கெளதம ரிஷி ஞானதிருஷ்டியால்‌ அறிந்துவந்து இக்குழந்தைகளது பிறப்பை ஸேவகன்‌ முதலியவர்களுக்குத்‌ தெரிவித்துத்‌ தாமே கிருபருக்கு வில்வித்தை கற்றுக்‌ கொடுத்தனர்‌. இதைக்கண்டு பீஷ்மர்‌ பாண்டவ கெளரவர்களுக்கு கிருபரையே தனுர்வேத ஆசிரியராக முதலில்‌ நியமித்தார்‌.
வினா 97.- இதன்பின்பு யாரிடம்‌ இவர்கள்‌ தனுர்வேதம்‌ பயின்றனர்‌?
விடை.- கிருபியினது கணவரும்‌, பாரத்வாஜரது துரோண கும்பத்தில்‌ உண்டான வருமான துரோணாசாரியரிடம்‌ இவர்கள்‌ வில்வித்தை பயின்றனர்‌.
வினா 98.- துரோணர்‌ ஹஸ்தினாபுரம்‌ வரக்‌ காரணமென்ன? இவ்வூருக்கு வந்தவுடன்‌ துரோணர்‌ எவ்வாறிருந்தார்‌?
விடை...  தமது பால்ய ஸ்நேஹிதனான துருபதனிட மிருந்து அவன்‌ ஸபையார்‌ முன்னிலையில்‌ இவர்‌ மிகுந்த அவமானத்தை அடைய, அதை ஸஹிக்காமல்‌ அப்பொழுதே அச்சபையில்‌ நான்‌ சிறந்த சிஷ்யர்களுக்கு எனது வில்வித்தையைக்‌ கற்றுக்கொடுத்து, ஏ மஹா கர்வங்கொண்ட அரசனே! அவர்கள்‌ உன்னைத்‌ தேரோடு தேராய்க்கட்டி என்முன்‌ கொண்டுவரும்படி செய்கிறேன்‌ கொடிய சபதத்தைச்செய்து, சிஷ்யர்களை அடைதற்‌ பொருட்டு தனது மைத்துனர்‌ இருக்கும்‌ ஹஸ்தினாபுரம்‌ வந்து அங்கு கிருபரோடு இடை இடையே பாண்டவ கெளரவர்களுக்கு வில்வித்தை யை சொல்லிக்கொடுத்து வந்தனர்‌. துரோணர்‌ தமது ஸாமர்த்தியம்‌ யாவையும்‌ கொஞ்சநாள்வரையில்‌ ஒருவருக்கும்‌ தெரியாமலிருக்கும்‌படி மறைத்துவந்தார்‌.
வினா 99.- இவர்‌ துருபதனிடம்‌ போகக்‌ காரணம்‌ என்ன? அவன்‌ எவ்வாறு இவரை அவமானித்தான்‌?
விடை. -  துரோணர்‌ சிறுவரா யிருக்கும்கால்‌, அக்னி விச்வ ரிஷியிடம்‌ வில்வித்தைகள்‌ கற்றுக்கொண்டிருக்கையில்‌, இவரோடு துருபதனும்‌ வில்வித்தை கற்கவந்தான்‌. அவர்கள்‌ இருவருக்கும்‌ ஸ்நேஹம்‌ உண்டாக அதில்‌ துருபதன்‌ 'எனக்கு பாஞ்சால தேசாதிபத்யம்‌ கிடைத்தால்‌ இராஜ்யம் முதலியவைகள்‌ எல்லாவற்றையும்‌ நீங்களும்‌ என்னோடு ஸுகமாய்‌ அனுபவிக்கலாம்‌ என்று அடிக்கடி வாக்களிப்பது வழக்கம்‌. கொஞ்ச காலத்திற்கெல்லாம்‌ துருபதனுக்கு இராஜ்யம்வர துரோணருடைய ஞாபகமே அவனுக்கில்லாமல்‌ போய்விட்டது. இதன்‌ இதன்‌ இடையில்‌ துரோணர்‌ கிருபியை மணந்து அசுவத்தாமன்‌ என்ற ஒரு குழந்தையை யடைந்து, இக்குழந்தைக்குப்‌ பாலில்லாது வருந்துங்கால்‌, துருபதனது வார்த்தை இவருக்கு ஞாபகம்‌ வந்தது. உடனே துருபதன்‌ ஸபைக்குச்‌ சென்று தனக்கும்‌ அரசனுக்கும்‌ உள்ள பால்ய ஸ்நேஹத்தை எடுத்துச்‌ சொல்லி ஒரு பசு வேண்டுமென யாசித்தார்‌. அரசன்‌ மிகுந்த கர்வத்தோடு “என்‌ நிலை என்ன உமது நிலை என்ன ? நமக்கு ஸ்நேஹம்‌ எப்படி இருந்திருக்கக்‌ கூடும்‌? என்று சொல்லி ஸபை நடுவில்‌ துரோணரை அவமதித்தான்‌.
வினா 100.- இந்த துரோணர்‌ வேறு யாரிடம்‌ வில்வித்தை கற்றார்‌?
விடை - தனது ராஜ்யம்‌ யாவையும்‌ காசியபருக்குத்‌ தானம்‌ செய்து திருப்தியடைந்திருந்த பரசுராமரிடம்‌ மிகுதியாய்‌ இருந்த தனுர்‌ வித்தையை அவரது அநுக்ரஹத்தால்‌ துரோணர்‌ பூர்ணமாய்த்‌ தெரிந்து கொண்டார்‌.