சனி, 31 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்கரஹம் 7

 இந்தப் பதிவை ஜனவரி 23 அன்று பதிவிட்ட பதிவின் தொடர்ச்சியாகக் கருதிப் படிக்க வேண்டுகிறேன்.

बन्धमोक्षनिरूपणम्
பந்தமோக்ஷநிரூபணம்
*
    இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே. இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தில் அதன் ஸமீபத்தில் வைக்கப்பட்ட செம்பரத்தம்பூவின் சிவப்புத் தோன்றுவதுபோல, இந்த ஜீவனுக்கு *உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

*उपाधि –– உபாதி-- ப்ரதிபலனத்திற்கு ஆதாரமாயிருப்பது.

   இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்த சுத்தி பிறக்கிறது. பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய், அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான். பிறகு குருவினுபதேசத்தால் 'தத்த்வமஸி' என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்தஜ்ஞானம் உண்டாகிறது. இந்த வாக்யத்தில் 'தத்' என்கிற பதத்துக்கு ஸச்சிதாநந்த ரூபமாய், ஸர்வவிகாரரஹிதமாய் அத்விதீயமான ப்ரஹ்மம் பொருள். த்வம் என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்திரியம் முதலிய #உபாதிகளோடு கலந்திருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள். இவையிரண்டுக்கும் +அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

#இங்கு உபாதி என்றால் தனக்கு ஸ்வபாவமாகவே இல்லாமல் நடுவில் வந்தவை என்று அர்த்தம்.

+அபேதம் -- பேதமின்மை

  இப்படி குரூபதேசத்தாலே பரோக்ஷரூபமான நிர்விசேஷசிந்மாத்ர ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானம் உண்டாகிறது. பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், 'தத் த்வமஸி' வாக்யத்தால் ஸாக்ஷாத்காரரூபமான முன்சொன்ன ஜ்ஞாநம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தை சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்துவிட்டாலும் சுழலுவது சிலகாலம் அநுவர்த்திக்கிறாப்போல இந்தக் கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்திரம் சிலகாலம் நிற்கிறது. இந்த நிலைமைதான் ஜீவன்முக்த்யவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு *ப்ராரப்தகர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்து விடுகிறது. இந்த நிலை +விதேஹமுக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம். அதாவது அவித்யாரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்மஸ்வரூபாவிர் பாவம். இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.
இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும், ஜீவ ப்ரஹ்மங்கள் அபின்னமென்றும் ஒப்புக் கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.

பரோக்ஷரூபமான – கண் முதலிய இந்திரியங்களால் நாம் ஒரு விஷயத்தை அறியும்போது உண்டாகும் ஞானத்திற்கு ப்ரத்யக்ஷம் அல்லதுஅபரோக்ஷ ஞானம் என்று பெயர்.அநுமானம் அல்லது சாஸ்திரத்தினால் உண்டாவதற்கு பரோக்ஷஞானம் என்று பெயர்.

நிர்விசேஷ – ஒருவித குணமும் தர்மமுமற்றது.

சிந்மாத்ர –தானாகவே ப்ரகாசிக்கின்ற ஞான ஸ்வரூபமானது.

ப்ரஹ்மாத்மைக்யம் --ப்ரஹ்மமும் ஆத்மாவும் ஒன்றே என்பது.

ப்ராரப்தகர்மம் -- பலத்தைக்கொடுக்க ஆரம்பித்த புண்ய பாபகர்மம்.

அகண்டாநந்த -- பூர்ண ஆனந்த ரூபமான

ஆவிர்பாவம் --மறைந்து இருந்த வஸ்துவினுடைய தோற்றம்.

அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.

புதன், 28 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 தொடர்ச்சி

 இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் சிலர் அடியேனை மன்னிக்க வேண்டும். இதில் ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 என்ற தலைப்பில் ஜனவரி 7ம் தேதி இட்ட பதிவு பாதியில் நிற்கிறது. கவனக்குறைவாக அடுத்த பகுதிக்குச் சென்றிருக்கிறேன்.  அதனால் இந்தப் பகுதியை த்வைத சம்ப்ரதாய ஸித்தாந்தத்தின் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டுகிறேன். விடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு குமரன் அவர்களுக்கு நன்றி. 

த்வைத ஸித்தாந்த ப்ரகரணம் (தொடர்ச்சி)


            மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த- ஜீவர் என்று இருவகைப்பட்டிருப் பார்கள். த்ருண - ஜீவர் ப்ரஹ்மத்தின் 'ஆத்மா' என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள் இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹநாசாநந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள். த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள். இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதையுடையவர்கள். இவர்கள் ஸதாசாரம், பகவத் பக்தி முதலான நல்ல குணங்களை யுடையவராயிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.

   எப்போதும் ஸுக-துக்கங்களைக் கலந்து அனுபவிப்பார்கள் நித்ய ஸம்ஸாரிகள்.  இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்க்கம் போவதும், பாப-கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்திற்கு வருவதுமாக சுற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

     தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யாதமர் என்று நான்கு விதம். இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள். இவர்கள் பகவானிடத்திலும், பகவத் பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்க்குணங்களையுடையவராயிருப்பர்.

   ஜீவாத்மாக்கள் எல்லாரும் ஞான ஆநந்த-ஸ்வரூபர்கள். மிகவும் அணு-பரிமாணமுடைய வர்கள். பகவானுக்குக் கிங்கரர்கள். முக்தி-யோக்ய-ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு-பக்ஷ்யாதி-ஜங்கம-ஜீவர்கள் பக்தி, பகவத் ப்ரியத்வங்களிலும், அதன் மூலமாக மோக்ஷதசையில் வரும் ஆநந்தானுபவத்திலும் மேற்பட்டவர்கள். இவர்களைக் காட்டிலும் மனுஷ்யர் உத்தமர்; இவர்களைவிட ப்ராஹ்மண-னுஷ்யர் உத்தமர்இவர்களைக் காட்டிலும் சக்ரவர்த்திகள் நூறுபங்கு குணாதிகர். சக்ரவர்த்திகளைக் காட்டிலும் மனுஷ்ய-கந்தர்வர் நூறு பங்கு குணாதிகர்கள். இப்படியே மேல் மேல் சதுர்முக-ப்ரஹ்ம-பர்யந்தமான ஜீவர்கள் ஞானாதிகளில் தாரதம்யமுள்ளவர்கள். இந்த தாரதம்யம் இந்த ஸித்தாந்தத்திற்கு முக்யாம்சம்.

மோக்ஷமாவது ஸ்வரூப-ஆநந்த-அனுபவம். இந்த அனுபவம் ஸம்ஸார-தசையில் கர்மத்தா லுண்டான ப்ராக்ருத-தேஹ-ஸம்பந்தத்தால் தடைபட்டு பகவதனுக்ரஹத்தால் மோக்ஷ-தசையில் இந்தத் தடை நீங்கியபிறகு வைகுண்டலோகத்தில் வரும். இதில் ஜீவர்களில் அவரவர்கள் யோக்யதைக்குத் தக்கப்படி சிலருக்கு ஸாலோக்யமும், சிலருக்கு ஸாமீப்யமும், சிலருக்கு ஸாரூப்யமும், சிலருக்கு ஸாயுஜ்யமும் வரும்.

ஸாலோக்யமாவது (सालोक्य) :-- வைகுண்டலோகத்தில் எங்கேயாவது இருந்து யதேஷ்டமான போகத்தை அனுபவிப்பது.

ஸாமீப்யமாவது( सामीप्य) :- பகவத்-ஸமீபத்திலிருந்து யதேஷ்டமானபோகத்தை அனுபவிப்பது.

ஸாரூப்யமாவது (सारूप्य):-பகவானைப்போல் நான்கு கைகள், சங்கு, சக்கரம் முதலியவைகளை யுடையவர்களாய் யதேஷ்டமாய் போகத்தை அனுபவிப்பது.

ஸாயுஜ்யமாவது(सायुज्य.) :-பகவானுடைய சரீரத்தில் ப்ரவேசித்து யதேஷ்ட போகத்தை அனுபவிப்பது. இப்படி முக்தர்கள் எல்லாரும் தாரதம்யமுள்ளவர்களாயிருப்பார்கள்.

இந்த மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவதுபாஸனம் ஸாதனம். இந்த உபாஸனம் மனுஷ்யோத்தம-கணம் முதல் ப்ரஹ்ம-கணம் வரையில் ஏக-குணோபாஸனம், சதுர்-குணோ பாஸனம், அநேக குணோபாஸனம் என்று பஹுவித-தாரதம்யத்தோடு கூடியதாயிருக்கும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம். ஆகமம் என்னும் இவை மூன்றும் வஸ்துக்களை அறிவதற்கு ஸாதனமான ப்ரமாணங்கள். ஸர்வ- வேதங்களுக்கும் பொருள் பரப்ரஹ்மமே என்று இந்த ஸித்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ-ப்ரஹ்மங்களுக்கு ஸ்வரூப-பேதம் ஒப்புக்கொள்ளுகிற படியால் இது த்வைத-ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.

த்வைத-ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.