வியாழன், 18 ஆகஸ்ட், 2011

Guru Paramparai upanyasam on 15-8-2011

Sri natteri swamy's tele-upanyasam on 15-8-2011 can be listened to and downloaded from

Get this widget | Track details | eSnips Social DNA


It may also be downloaded from mediafire at
http://www.mediafire.com/file/bep5a1ds2978tcm/guru%20paramparai%2015-8-211.mp3

புதன், 17 ஆகஸ்ட், 2011

தேரழுந்தூர் திசைமுகனே யனையவர்கள்

தேரழுந்தூரில் வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களைப் பற்றிக் குறிப்பிடும்போது , திருமங்கையாழ்வார்
"செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்
     திசைமுகனே யனையவர்கள் செம்மை மிக்க
அந்தணர் தமாகுதியின் புகையார் செல்வத்
     தணியழுந்தூர் நின்றுகந்த வமரர் கோவே."
என்றருளிச் செய்வதற்கு, "இந்த அந்தணர்கள் உபயவேதாந்த ஸேவையாலும், அர்த்த க்ரஹணத்தாலும் உபய வேதாந்த ஞான விசிஷ்டர்களாக விளங்கிக்கொண்டு ஔபாஸந அக்னி ஹோத்ராதிகளையும், அநுஸ்யூதமாய் அனுஷ்டித்து வந்தார்களென்றும், அந்த ஞானாநுஷ்டானங்களால் திருவுள்ளமுகந்து தேவாதி தேவனாகிய ஆமருவிப் பெருமாள், இவ்விதம் ஞானாநுஷ்டானங்களால் அலங்கரிக்கப் பெற்ற அழுந்தூரில் நித்யவாஸம் செய்கிறானென்று அருளிச் செய்கிறார்" ,(ஸ்ரீ என்.ஆர். க்ருஷ்ணஸ்வாமி அய்யங்கார், ஸ்வாமி தேசிகன் 7வது நூற்றாண்டு மலரில் எழுதியதிலிருந்து)  என்று வ்யாக்யானங்களைப் படிக்கும்போது என்னதான் முயன்றாலும், அந்த அக்ரஹாரம் ஆழ்வார் நாளிலே எப்படி இருந்திருக்கும் என்று நம்மால் பூரணமாகக் கற்பனை செய்து பார்க்க இயலாது. அதிலும் இப்போது 60 வயதைக் கடந்த அடியேன் போன்றவர்களுக்குத் தெரிந்த அக்ரஹாரங்கள், இன்றைய தலைமுறைக்குத் தெரியப் போவதேயில்லை. அதனால் அக்ரஹாரம் என்றால் அதில் வாழ்ந்தவர்கள் எப்படி இருந்திருப்பார்கள் என்பதெல்லாம் அவர்களுக்கு விளங்கவே போவதில்லை. ஆழ்வார் கண்ட திசைமுனை -- ப்ரம்மனை -- ஒத்த தமிழிலும், சமஸ்க்ருதத்திலும் வல்லவர்களாய்த் திகழ்ந்த அந்தணர்கள் , ---- செம்மை மிக்கவாம்  ஆசார சீலர்களாம் , ஸ்ரீவைஷ்ணவர்களாம் --- இப்படி இருந்திருப்பார்கள் என்று காட்ட, பல பக்கங்களில் எழுதிப் புரியவைக்க முடியாததை மிக எளிதாகப் புரிய வைக்க, இதோ ஒரு பழைய படம். அதில் இதைப் படிப்பவர்களின் குடும்பத்துப் பெரியவர்கள் கூட யாராவது இருக்கலாம்.

Photo courtesy:--
Sri Rajagopalan swamy, the illustrious son of Pudukkottai swamy Sri A. Srinivasa Ragavachariar, author of many scholarly books.

terazundur mama photo

இந்தப் படத்தை நன்றாகப் பார்க்க,

http://www.flickr.com/photos/thiruthiru/6053632968/in/photostream

Saatthumurai on 16-8-211 morning at Sri Ahobila Matam, Thiruppullani

Enjoy a few minutes of Satthumurai at Sri Ahobila Matam, Thiruppullani on the Araadhana dhinam of 44th Azhakiasingar Srimad Mukkur Azhakiasingar. Please also listen to the AtharvaNa vedam recitation by adhikaris from Patna for a few seconds which is very rare . 

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

On this Independence Day at Thiruppullani Sri Ahobila Matam

நாடு விடுதலை அடைந்த நன்னாளை நாம் எத்தனையோ விதங்களில் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், நெய்வேலி ஸ்ரீஅஹோபில மட நித்யாராதன கமிட்டிக்காரர்கள் இந்தத் திருநாளை ஸ்ரீஅஹோபில மடம் மாலோலன், மற்றும் அவனுடன் மகிழ்ந்து உறைகின்ற கண்ணன், மற்றும் ஆழ்வார் ஆசார்யர்களோடு கொண்டாடுவதை கடந்த இருபது ஆண்டுகளாக வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறார்களாம்.எவ்வளவு உயர்ந்த நோக்கம்! அந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹன் உளம் குளிர்ந்தால் நாடும் நகரும் செழிக்கும், அதனால் ஸர்வே ஜனோ சுகினோ பவந்து என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம். அந்த வழக்கப்படி இன்று 15/8/2011 அன்று திருப்புல்லாணியிலும் மிக மிக விசேஷமாக அவர்கள் திரளாக வந்திருந்து கொண்டாடி கூடியிருந்த அனைவரையும் ஆனந்தப்பட --- இல்லை இல்லை கைங்கர்யபரர்கள் அனைவரும் ஆத்மார்த்தமாக ஸ்ரீமடம் ஆராதன மூர்த்திகளுக்கு செய்த கைங்கர்யங்களைக் கண்டு உளம் நெகிழ ---- வைத்தனர். நெய்வேலிக்காரர்கள் உபயமாக இன்று நடந்தது பெரிய திருமஞ்சனம். இந்த ஆண்டு அவர்களுடன் டோம்பிவிலி ப்ருஹஸ்பதி ஸ்ரீ சந்தானம் வாத்தியாரும் உபயதாரராக சேர்ந்து கொண்டார். பெரிய திருமஞ்சனம் என்றால் மாலோலன் முதல் ஆராதன மூர்த்திகள் ஒருவர் விடாமல் அனைவருக்கும் மிக விசேஷமான திருமஞ்சனம். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்த திருமஞ்சனம். திருமேனி தளர்வையும் பொருட்படுத்தாமல் கூடவே இருந்து பெரிய அழகியசிங்கரும், சின்ன அழகியசிங்கரும் நடத்தி வைத்த திருமஞ்சனம். பார்த்தவர்கள் எல்லாரும் மெய்மறந்த திருமஞ்சனம். கண்டு களித்தோரெல்லாம் நெய்வேலிக்காரர்களை  மனம் நிறைந்து வாழ்த்த வைத்த திருமஞ்சனம்.
”வாழி நரசிங்க மால்கழல்கள் மாலடியார்
வாழி அகோபிலத்து மாதவர்தாள் – வாழி
அழகிய சிங்கர் அணிமரபு வாழி
பழகிய மெய்ச்சீர் பயின்று”
என்று பரவிப் பரவசப்பட வைத்த திருமஞ்சனம்.
சரி!சரி! திருமஞ்சன வீடியோ எங்கே? அதைக்காட்டாமல் என்ன வசனம்? என்கிறீர்களா?
தீர்த்தக்கரைப் பாவி என்று சொல்வார்களே! இன்று அடியேன் நிலையும் அதேதான்! மேலே வர்ணித்ததெல்லாம் பார்த்தவர்கள் சொல்லி மகிழ்ந்தது. அடியேனுக்கு அந்த பாக்யம் இன்று கிட்டவில்லை. வேறு ஒரு காரியத்தில் தவிர்க்க முடியாமல் ஈடுபட வேண்டியிருந்ததால் இங்கேயே இருந்தும் மடத்தின் பக்கம் திருமஞ்சனங்கள் முடியும்வரை போகவே முடியவில்லை. அதனால் அதைப் பதிவு செய்யும் நல்வாய்ப்பும் அடியேனுக்குக் கிடைக்கவில்லை. அதுமட்டுமில்லை. கடந்த 5 ஆண்டு காலமாக யாரை ஸேவிக்க வேண்டுமென்று மனம் நிறைந்த ஆசையுடன் இருந்தேனோ, யாரால் இன்று இந்திய மொழிகள் பலவற்றில் கம்ப்யூட்டர்களில் மிக எளிதாக எழுத முடிகிறதோ,  யார் நம் ஸ்ரீவைஷ்ணவ ஸம்ப்ரதாயங்களிலும் நிகரற்ற தேர்ச்சி பெற்று, கணிணி தொழில்நுட்பங்களிலும் அகில உலக அளவில் பேசப்படுகிறாரோ, அந்த ஸ்ரீ சோகத்தூர் ராமானுஜம் ஸ்வாமியை, அவராகவே அடியேனைப் பார்க்க விரும்பிய நேரத்திலும், அடியேனுடைய கமிட்மெண்ட் பார்க்க விடாமல் செய்தது அடியேனுடைய மிகப் பெரிய துர்பாக்யம்.
ஆக மடத்தில் திருமஞ்சனங்கள் முடிந்து தீர்த்த கோஷ்டி ஆகி ததீயாராதனம் நடந்தபோது மணி மாலை 4-30. மாலோலனை விட்டு மனம் அகலாமல் இருந்த நிலையில் யாருக்கும் பசிக்கவுமில்லை. இன்று வந்திருந்த சுமார் 250 பேர்களுக்கும் மேற்பட்டவர்கள் அனைவரும் நிதானமாக இருந்து ததீயாராதனத்தில் அந்வயித்து பலமந்த்ராக்ஷதை பெற்றுச் சென்றது மற்றும் ஒரு சிறப்பு.

இழந்தோமே ஒரு நல் வாய்ப்பை என்று கவலைப்பட்டவனுக்கு மாலையில் ஒரு சந்தோஷம் காத்திருந்தது. இந்த நெய்வேலிக்காரர்கள் வழக்கமாக டோலோத்ஸமும் பண்ணுவார்களாம். சுமார் 7 மணிக்கு ஆரம்பித்த அந்த டோலையும் தொடர்ந்த ஆராதனங்களும் கோஷ்டியும் முடிய 9 மணிக்கு மேலாகி விட்டது.  அப்பப்பா! ஒரு நிமிடம் கூட ஓய்வெடுக்காத கைங்கர்யபரர்கள்! அதைக்காட்டிலும் அசராத மடைப்பள்ளிக்காரர்கள்! இரவு கோஷ்டியில் வந்துகொண்டே……….யிருந்த ப்ரஸாதங்கள்! மலைக்க வைத்தன. 
இப்போதைக்கு டோலையின்போது எடுத்த சில படங்கள் மட்டும் இங்கே! வீடியோ யூட்யூபில் ஏறிக்கொண்டிருக்கிறது. அதை நாளை தருவேன். இப்போதே மணி 12 ஆகி விட்டது. பொறுத்துக் கொள்ளுங்கள். யூட்யூப் அடியேனைப் போல் சோம்பேறியல்ல என்று நிரூபித்து விட்டது. இதை எழுதி முடிப்பதற்குள் அது பதிந்து விட்டது. வீடியோ பதிவின் இறுதியில் உள்ளது. 
ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் வரும் செப்டம்பர் முதல் நாள், 1.9.2011, அதாவது 44ம் பட்டம் முக்கூர் அழகியசிங்கர் திருநக்ஷத்திரத்துக்கு மறுநாள், ஸ்ரீஆதி ஸேதுவில் சமுத்திர ஸ்நானம் செய்வதாகத் திருவுள்ளம் பற்றியிருக்கிறார்கள். அன்று விநாயகர் சதுர்த்தி. அரசு விடுமுறை. ஸ்ரீஅஹோபில மடம் சிஷ்யர்கள் வாய்ப்பை நழுவ விடமாட்டார்கள் இல்லயா! அவசியம் வந்து அழகியசிங்கர்களுடன் சமுத்திர ஸ்நானம் செய்யும் பாக்யசாலிகளாகப் போகிறார்கள்தானே! தங்குவதற்குத் தனி அறைகள் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை! இருக்கிற இடத்தில் சமாளித்துக் கொள்வோம் என்று இப்போதே பயணத்திற்குத் தயாராகிவிடுவார்கள்தானே!

டோலையில் எடுத்த சில படங்கள் இங்கே! கண்ணனை கண்ணாரக் கண்டு  அவன் அணிந்து நம்மை மகிழ்விக்கின்ற அந்த ஆபரணங்களை, குறிப்பாக அந்த ஜடை அலங்காரத்தைக் கண்டு களியுங்கள்.

 

இப்போது
“மாற்றுயர்ந்த செழும்பொன்னால் கால்கள் நாட்டி
வலிமிகுந்த வச்சிரத்தால் விட்டம் போட்டுத்
தோற்றமுறு மாணிக்கத் தொடர்கள் பூட்டித்
துங்கமுது நீலமணிப் பலகை தூக்கி
ஏற்றுதிரு மாமணிமண் டபத்தின் னூசல்
எழிலுடனா டியபடியே யிங்கு மன்பர்
ஆற்றலுறக் கடைக்கணித்தே யாடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.

செங்கமலத் தோள்புரிந்த மாயங் கண்டு
சிறுவரோடு கன்றினமாய்ச் சென்றே யன்பர்
தங்கள்மனம் களித்திடவு மலரோன் கொண்ட
தருக்கன்று தாழ்ந்திடவுந் தாள்செய் திம்பர்ப்
பொங்கிவளந் தழைத்திடச்செய் யமுனை யாற்றிற்
போராவி னடித்ததகை தீரக் கொண்ட
அங்கைநவ நீதமுனீ ராடி ரூசல்
அலங்கார மாயவரே யாடி ரூசல்.

அண்டமெனுங் கூடத்தை நாள்கோள் தம்மால்
அலங்கரித்து மேருவினைத் தூண்க ளாக
விண்டலமார் துருவநிலை விட்ட மாக
விரவுதுரு வச்சுழல்சங் கிலிக ளாகக்
கண்டலஞ்சேர் வதிர்க்கடவுள் பலகை யாகக்
காலமெனுங் கடவுளுளக் கனிவொ டாட்டப்
பண்டைமறைப் பரம்பொருளே யாடி ரூசல்
பரிதினுட் பரஞ்சுடரே யாடி ரூசல்.”

என்று அன்று திரு ஹரிஹர அய்யர் பாடியதற்கேற்ப அந்த மாயக் கண்ணன் டோலையிலே வீற்றிருக்கும் அழகைப் பாருங்கள்.


 
 

ஞாயிறு, 14 ஆகஸ்ட், 2011

ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யர்களுக்கு ஒரு நன்னாள்.


            நம் வாழ்வில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளுக்கும் பெருமாள் ஒரு காரணம் வைத்திருக்கிறார். சிறுமதி படைத்த நமக்கு அவை உடனே விளங்குவதில்லை. பின்னால்தான் உணர்கிறோம். ஓரிரு நாட்களுக்கு முன் சென்னை செல்வதாக ஸ்ரீமத் அழகியசிங்கர்களிடம் விஞ்ஞாபித்து திருப்புல்லாணியிலிருந்து கிளம்பி, மதுரை சென்று மாமனார் அகத்திலே இரு நாட்கள் இருந்துவிட்டு, அங்கிருந்து கிளம்புகிற நேரத்திலே, அடியேனுடைய 40 வருட பி எஸ் என்எல் “ஸேவை” (?) யில் அடியேன் சண்டை போடாத, அடியேனால் மிக மதிக்கப்பட்ட ஒரே ஒரு உயர் அதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சென்னை செல்லும் முடிவை மாற்றிக் கொண்டு திருப்புல்லாணி திரும்புகையில் அதன் உண்மையான காரணத்தை அடியேனால் சரியாக உணரமுடியவில்லை. இன்று, காயத்ரி ஜபத்தன்று, ஸ்ரீ அஹோபில மடத்தில், பெரிய அழகியசிங்கரே திருவாராதனங்களைப் பண்ணியதைப் பார்க்கும் பாக்யம் கிடைத்த பிறகுதான், ஆஹா! இந்த சந்தோஷத்தை உலகெங்கும் உள்ள ஸ்ரீ மடம் சிஷ்யர்களுடன் பகிர்ந்து கொள்ளும் ஒரு பேறுக்காகத் தான், அந்த அதிகாரியை வ்யாஜ்யமாக வைத்து, பெருமாள் அடியேனைத் திருப்புல்லாணி வர வைத்திருக்கிறார் என்று புரிந்தது. தன்னை நம்பி வரும் சாமானியர்களுக்கே வேண்டியதைச் செய்து அருள் பாலிக்கும் எங்கள் பத்மாசனித் தாயார்,  சிஷ்ய வர்க்கங்களை அன்புடன் பரிபாலிக்கும் அழகியசிங்கர் மீது தன் கருணை மழையைப் பொழிந்து அவரது திருமேனி நாளும் திடமடையச் செய்து வருவதில் வியப்பொன்றுமில்லைதான். ஏற்கனவே 2008ல் முதன்முதலாக ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு சாதுர்மாஸ்யத்துக்கு எழுந்தருளியபோதும், பட்டிக்காடே, அங்கு வைத்ய வசதிகள் கிடையாதே என்ற ஆதங்கத்தில் வரவேண்டாம் என்று அன்பின் மிகுதியால் மன்றாடியவர்களும் பிரமிக்கும் வகையில் ஸ்ரீமத் ஆண்டவனின் திருமேனி ஸௌக்யங்களுக்கு அனுக்ரஹித்தவள் அவள். இன்றும் அதே அற்புதங்களைச் செய்து, எல்லாரையும் ஆனந்த வெள்ளத்தில் மூழ்க வைத்திருக்கிறாள். உலகெங்கும் இருக்கும் சிஷ்யர்கள் ஒருமுகமாக அவளைப் ப்ரார்த்தித்தால், ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் இங்கிருந்து உத்தானமாகி யாத்ரை கிளம்புவதற்குள், பெரிய அழகியசிங்கர் ஸ்ரீ அஹோபில மடத்திலிருந்து நடந்தே வந்து தன்னை மங்களாசாஸனம் செய்யவும் வைப்பாள். ப்ரார்த்திப்போம்.
பெரிய அழகியசிங்கர் திருவாராதனம் செய்யும் இந்த வீடியோ காட்சிகளைக் கண்டு மகிழ்வதற்கு முன், அடியேனை க்ஷமித்துக் கொண்டு தொடரவேணும். அவசரத்தில், காமிரா லென்ஸில் இருந்த தூசியைக் கவனிக்காததால் வீடியோ அனைவரும் விரும்பும் வகையில் தெளிவாக இல்லை. ஆனால், அடியேன் நோக்கம், ஒரு பட்டிக்காட்டில் இருக்கிறாரே, திருமேனி எப்படி இருக்கிறதோ, என்ன சிரமப்படுகிறாரோ என்று தினமும் கவலைப் படும் சிஷ்யர்களுக்கு சற்று நிம்மதி அளிப்பதுதான். எனவே, வீடியோவின் தரம் பற்றி மிகவும் கவலைப்பட மாட்டார்கள் என்ற நம்பிக்கை உண்டு. 
To enjoy the video visit
http://youtu.be/nfneX9Pxxdc