வியாழன், 3 ஜனவரி, 2008

திருவருட்சதகமாலை

திருவருட்சதகமாலை

அசேஷ விக்நசமநம் அநீகேச்வர மாச்ரயே
ஸ்ரீமத: கருணாம் போதே: சிக்ஷாஸ்ரோத இவோத்திதம். 5.

துன்றுதடை யாவுமுட னன்றவை துடைக்கும்
வன்றரும மங்கையுறை மார்பனரு ளாழி
வென்றியுறு வீறுதரு மேரணிய றக்கோல்
ஒன்றிருடி கேசனநி கேசனைய டுத்தேன். 5.

[தடைகள் யாவையும் உடனே துடைப்பவரும், ஸ்ரீநிவாஸனுடைய கருணை நிரம்பிய தடாகத்திலிருந்து சிக்ஷணம் செய்கிறது என்கிற வாய்க்காலாகக் கிளம்பினவருமான விஷ்வக்ஸேனர் என்னும் ஸேனை முதலியாரை ஆச்ரயிக்கிறேன்]

ஸமஸ்த ஜநநீம்வந்தே சைதந்யஸ்தந்யதாயி நீம்
ப்ரேயஸீம் ஸ்ரீநிவாஸஸ்ய கருணாமிவ ரூபிணீம். 6.

துன்னுமுடி மின்னுமறை யுன்னுதிரு மன்னன்
பொன்னருளி னன்னருரு வென்னவுயி ரெல்லாம்
மன்னுமக வன்னவுணர் வம்மமினி தூட்டும்
அன்னைதிரு வன்னவள டிச்சரண டைந்தேன். 6.

[உணர்வு என்கிற திருமுலைப்பாலை அளிப்பவளும், கருணையே வடிவெடுத்தது போன்றவளும், உலகமனைத்துக்கும் அன்னையும், ஸ்ரீநிவாஸனுக்கும் ஸ்ரேயஸ்ஸை நல்குபவளுமான பிராட்டியைச் சரணம் அடைகிறேன்.]

வந்தே வ்ருஷகிரீசஸ்ய மஹிஷீம் விச்வதாரிணீம்
தத்க்ருபா ப்ரதிகாதா நாம் க்ஷமயா வாரணம்யயா. 7.

அன்னவன ருட்குறுத டக்குகள டக்கத்
துன்னுகமை கொண்டுதனி முன்னுதவு நன்மைத்
தன்னிலை யிலோங்கிமகி தாங்கியெனு நாமம்
மன்னுவிடை யத்திரியன் பத்தினிது தித்தேன். 7.

[அகில புவனங்களையும் தாங்குகிறவளும், வேங்கடாத்ரிநாதனுக்குப் பத்தினியாயும், கமையெனும் பொறுமைக் குணத்தால் வேங்கடநாதனுடைய கிருபைக்கு விக்நங்களனைத்தையும் தடுப்பவளுமான க்ஷமை எனப் பெயரிய பூமிப்பிராட்டியைத் துதிக்கிறேன்.]

நிசாமயதுமாம் நீளாயத்போக படலைர்த்ருவம்
பாவிதம் ஸ்ரீநிவாஸஸ்ய பக்ததோ ஷேஷ்வதர்சநம் 8.

ஏகசர ணன்பரக மேதுமது காணா
வாகுதரு மாணிமறை யாணையன் விழிக்கோர்
போகுறும யக்களிபி ணைப்படல டைத்தே
ஈகைமிகு சீலநல நீளையெனை நோக்கும். 8.

[யாருடைய போக மயக்குகளினால் பக்தர்களின் குற்றங்களைப் பார்க்க வொட்டாமல் ஸ்ரீநிவாஸனுடைய கண் மறைந்ததுபோல அவர் அக்குற்றங்களை அறவே நோக்காதது போல இருப்பாரோ அந்த நீளையென்னும் பிராட்டி அடியேனைத் தனது நீண்ட கண்களால் நோக்கி யருள வேண்டும்]

கமப்யநவதிம் வந்தே கருணா வர்ணாலயம்
வ்ருஷசைல தடஸ்தாநாம் ஸ்வயம் வ்யக்தி முபாகதம் 9.

செடித்தொட ரறுத்தெழு விழுத்தவர் வழுத்தும்
விடைக்கிரி தடைத்தம ரடைக்கல மலர்க்கே
கொடைப்பெரு நடைப்புக ழுடைத்தனை விளக்கும்
படித்திக ழளப்பரு மருட்கடல் பணிந்தேன். 9.

[கருணை யென்னும் குணத்தினால் நிரம்பிய வருணாலயம் என்கிற அளப்பரும் அருட்கடலாயும், திருவேங்கட மாமலையின் தடத்திலிருப்பவர்களுக்கு, ஸ்வயம் வ்யக்தமாய் அணுகியவரும், இன்னார் இப்படிப்பட்டவர் என்று வர்ணிக்கக்கூடாதவருமான ஸ்ரீநிவாஸனைப் பணிகிறேன்.]

அகிஞ்ச நநிதிம் ஸூதிமப வர்கத்ரிவர்கயோ:
அஞ்ஜநாத் ரீச்வரதயாம பிஷ்டௌமி நிரஞ்ஜநாம். 10.

கைம்முதலி வர்க்கொருக ரத்துறுநி திப்போல்
இம்மைநல னோடுதிரு வீடுநனி நல்கும்
அம்மைவரை யெம்மிறைவர் தம்மருளி னன்மைச்
செம்மைதெரி மும்மறையின் மெய்ம்மையிது ரைப்பேன். 10.

[கைம் முதலில்லாத பேதைகளும் வேறு கதியற்றவர்களுமான சரணம் அடைபவர்க்கு நிதி போன்றதும், அபவர்கமென்னும் மோக்ஷ புருஷார்த்தத்தையும், திரிவர்க்கம் என்னும் அறம் பொருள் இன்ப புருஷார்த்தங்களையும் அளிப்பவளும், அஞ்ஜநம் என்கிற மாசு அடியோடு இல்லாதவளுமான அஞ்ஜநமலை யரசனுடைய தயையென்னும் தேவியைப் பல படியாகத் துதிக்க எண்ணுகிறேன்]

செவ்வாய், 1 ஜனவரி, 2008

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவபிரகாசிகைகீர்த்தனைகள்

ஸ்ரீவேதாந்ததேசிகவைபவபிரகாசிகைகீர்த்தனைகள்
[Note: you will notice a few mistakes. But they are not typing errors. I am just reproducing what is in the original. For example line 3 and 4 in "Venba". I did not attempt to correct it as my knowledge on sampradhaya is limited and as I am not a scholor in Tamil also]

திருமேனி வர்ணணை

வெண்பா

வேண்டுவீரன்புபெறுவீரேபவக்கடலைத்
தாண்டுவீர்ஞானத்தனிவிளக்கைத் -- தூண்டுவீர்
தானிவர்னனையுரைக்குஞ்சாந்தவேதாந்தகுரு
மேனிவர்னனையுரைக்கவே.

தரு - இராகம் -- முகாரி -- தாளம் -- சாப்பு.

கண்ணிகள்
கதிர்வீசுமிரவிபோற்கரந்திசேருந்திவ்ய
மங்களவிக்கிரகவேதாந்த தேசிகரே
புதுமலர்ச்சியாகியசெந்தாமரைமலரைப்
போன்றபொன்னடியுள்ள தேசிகரே

களங்கமில்லாமல்மனோகரங்களாகிய
திருக்கனைக்கால்களுமிலங்குந் தேசிகரே
விளங்கிநிற்கிறநல்லமுழந்தாளுடைய
திருவேங்கடநாதார்ய தேசிகரே

திருவரையுமதிற்சாத்தினதிருப்பரி
வட்டச்சேர்த்தியாலும்விளங்கும் தேசிகரே
திருநாபிக்கமலமுந்திருவுத்தரியச்
சேர்வும்சிறந்துவிளங்குமெங்கள் தேசிகரே

மருவுமுந்நூலுந்திருமணிவடத்துடன்
கூடும்மார்பினணிதுலங்குந் தேசிகரே
திருவாழிதிருச்சங்குந்திகழ்புஜங்க
ளுடனேசெழிப்பான நிகமாந்த தேசிகரே

பவித்ரங்களையணிந்தபங்கஜகர
தீர்க்கபாணியுகம்பொருந்தும் தேசிகரே
குவித்தேதிருமந்திரமுங்கொண்டதுவய
முச்சரிக்குந்திருப்பவளவாய்த் தேசிகரே

கிருபைக்குள்ளாய்க்கடாக்ஷிக்கிற
திருக்கண்களென்றேகீர்த்திக்கவேவளருந் தேசிகரே
உருகித்தற்காலங்கண்டுசார்த்தினபனிரண்டு
ஊர்த்துவபுண்டரங்களேற்குந் தேசிகரே

மண்டலந்தனிற்புகழ் கொண்டகண்டாவதாரர்
மவுலிமூடத்துலங்குந் தேசிகரே
தொண்டர்கள்மனத்தன்பு கொண்டிடுஞ்சர்வ
தந்திரசுவதந்தராரியரெங்கள் தேசிகரே

கட்டளைக்கலித்துறை

வடத்தேறுகண்டுயில்கொண்டான்மடுவின்மணியாவின்
படத்தேறுதாண்மிதித்தாடியுங்கோவியர்பாரமுலைக்
குடத்தேறுமார்பர்தங்கண்டாவதாரரைக்கூப்புகையர்
கடத்தேறுவார்கள்கவிவாதிசிங்கரைக்கண்டவரே

தரு - இராகம் -- பரசு -- தாளம் -- ஏகம்

பல்லவி
வெகுவிதமகிமைகள் கொண்டார் -- கவிவாதிசிங்கரே
விருதாங்கித ராவரே.

அனுபல்லவி

இகபரந்தருஞ் சேஷகிரிவேங்க
டேசன்ஸ்ரீநிவாஸனேதந்த (வெகு)

சரணங்கள்

காஞ்சிதமான காஞ்சிமாநக
ராஞ்சனனமுமிவர்க்கே -- விசு
வாமித்திரகுல மாமத்திக்கொரு
சோமசற்குணநாமத்தற்புதர் (வெகு)

ஆக்ஷிபுண்டரீகாட்சராகிய
தீக்ஷிதர்திருப்பேரர் -- எங்கள்
அநந்தாசாரியர்மனந்தனில்மகிழ்
தினந்தோறுஞ்சுனந்தனரிவர் (வெகு)

நன்னலயதி மன்னர்தமையே
யுன்னுவதுசீவனராம் -- நம்ப
ராங்குசர்பதந் தாங்குமனதி
லோங்குபர காலாங்கிரிகொண்டார் (வெகு)

உற்றொருநாவில் வித்தையாவுங்கொள்
புத்திமானிவர்தாமே -- வெகு
உறுதியுள்ளாரென்றறி வீர்கலைக
ணெறிகளறிந்துபொறுமையுள்ளவர் (வெகு)

ஓங்குலகினி லீங்குசொன்னமோட்
டாங்கிளிஞ்சிலாயெண்ணினார் -- வெகு
யோக்கியர்வை ராக்கியத்திற்சி
லாக்கியசுகராக்குமிவரே. (வெகு)

வெண்பா

தரமாங்கண்டாவுருவந்தாங்குவேதாந்தகுரு
வரமாங்கவரடிமையாமெனவே -- மீமாஞ்சை
நல்லவரும்பொருளைநாடினவராகியபே
ரெல்லவருங்கைதொழுவாரே.




For the attention of BSNL and MTNL subscribers

அகலக்கற்றை இணைப்பு --- கட்டணம் எகிறுகிறதா?

It is for those who are using BSNL/MTNL Broadband connections. Please log on to this link to have some idea on your upload and downloads and install the Firefox addon

http://udukkai.blogspot.com/2007/12/bsnl-mtnl-bandwidth-monitoring.html

This will help you to plan your durfing and subsequent payments to BSNL/MTNL

திங்கள், 31 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

பராசரமுகாந் வந்தே பகீரதநயே ஸ்திதாந்
கமலாகாந்த காருண்யக ங்காப்லாவித மத்விதாந்

உயர்த்தரு ளரிப்பத துனிப்புன னனைந்தே
அயர்த்திடு மெமைப்பர னடித்திரு வுணர்த்தும்
சயத்திரு பகீரத நயத்துறு தவத்தோர்
முயற்றிரு பராசரர் முதல்வர்வ ழிபட்டேன்.

[பகீரதன் கடுந்தவம் புரிந்து கங்கையை அவனிக்குக் கொண்டு வந்ததுபோல் கமலாகாந்தனுடைய கருணை என்கிற குளிர்ந்த பரிசுத்தமான கங்கா ப்ரவாஹத்தைக் கொணர்ந்து நம் போன்றவரை அதில் அவகாஹிக்கும்படி செய்வித்த மாசில் மனத்தெளி முனிவரான பராசரர் முதலிய மஹர்ஷிகளை வழிபடுகிறேன்.]