சேட்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சேட்லூர் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 3 மே, 2014

ராமாநுஜ தயாபாத்ரம் 3

(சேட்லூர் ஸ்வாமியின் வியாக்யானம் --- ஸ்ரீரங்கம் ஸ்ரீ ஸாமம் பார்த்தசாரதி அய்யங்காரின் ஷஷ்டியப்தபூர்த்தியின்போது வெளியிடப்பட்டதிலிருந்து)

5. ராமா என்பது பெரிய பிராட்டியைக் குறிக்கிறது. “இன்னமுதத் திருமகள்” (குருபரம்பராஸாரம்). அபராதிகளான நம்போன்றவர்களிடத்தில் பகவானுக்கு ஏற்பட்டிருக்கும் கோபத்தைத் தணித்து நம்மை அங்கீகரிக்கும்படி செய்பவள். இப்படி புருஷகாரபூதையான இவளை ईश्वरीं सर्वभूतानां “ஈஶ்வரீம் ஸர்வபூதாநாம்” என்று அழைத்தால் அது பாதகமாகாது. காரணம் இவளை அணு என்றும், ஜீவகோடிகளில் ஒருத்தியென்றும், எம்பெருமானுடைய ஸங்கல்பத்தினால் மற்றவர்களுக்கு ஶேஷியாக இருப்பவள் என்றும், ஸ்வாபாவிகமான ஶேஷித்வம் இவளுக்குக் கிடையாது என்றும், பகவானைக் காட்டும் அடையாளம் உபலக்ஷணம் மாத்திரமேயன்றி இவளுக்கு பகவானைப் போல் உபாயதசையிலும் அந்வயம் கிடையாது, இவள் எல்லா இடத்திலும் வ்யாபித்திருப்பவள் என்று சொல்லப்பட்டதானது தர்மபூத ஜ்ஞானத்தின் வழியாக நித்யமுக்தர்களைப் போல, இவள் ஜீவகோடியிலும் ஈஶ்வரகோடியிலும் சேராத தனிப்பட்ட தத்வம், ஈஶ்வர கோடியில் சேர்ந்தவளாயினும் பகவானையும் தன்னையும் ஒழிந்த மற்ற எல்லா வஸ்துக்களுக்கும் சேஷியாயிருந்தபோதிலும், ஜகத் ஸ்ருஷ்ட்யாதி வ்யாபாரங்களில் இவளுக்கு அந்வயம் கிடையாது, பகவத் ஸங்கல்பத்தினால் பெற்ற ப்ரபாவ விஶேஷத்தையுடையவள் என்று பிராட்டியின் பெருமையை மற்றவர்கள் வரையறுத்தார்கள். இப்படி மற்றவர்களால் கூறப்பட்ட கருத்துக்களை எல்லாம் நன்கு ஆராய்ந்து பரிசீலித்து உண்மைக்கு முரண்பாடாக இருக்கக்கூடிய கருத்துக்களையெல்லாம் நிராகரித்தருளினார் ஸ்வாமி.

பகவான் ஈஶ்வரன் என்றால் பிராட்டி ஈஶ்வரி, பகவான் “பதி”, இவள் “பத்னீ” என்கிற பேதத்தைத் தவிர மற்ற எல்லாவிதத்திலும் பகவானுக்கு ஸமமான ப்ரபாவத்தை உடையவள் தாயார். இப்படியிருந்த போதிலும் புருஷகாரத்வம் முதலியவைகளை பிராட்டி விஷயமாகவும், தண்டதரத்வாதிகளை எம்பெருமான் விஷயமாகவும் பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எம்பெருமானுடைய ஸ்வரூப ரூபாதிகள் எப்படி ஸ்வதஸித்தங்களோ அதைப்போலவே பிராட்டியினுடைய ஸ்வரூபரூபாதிகளும் ஸ்வதஸித்தங்கள், ஸ்வபாவத்தினாலேயே ஏற்பட்டவைகள். அநுபவிக்கும் தசையிலும் உபாயதசையிலும் கூடயிருந்து மோக்ஷயிஷ்யாமி என்று ஸங்கல்பம் செய்யக்கூடியவள் ஜகத்ஸ்ருஷ்ட்யாதி ஸங்கல்பங்களிலும் அந்வயிக்கிறாள். பத்னியும் எஜமானனும் சேர்ந்து இருவர் இருந்தபோதிலும் யஜமானன் ஒருவன் என்ற கணக்கில் பரதத்வ விஷயத்தில் ஒன்று என்கிற வ்யவஹாரம் இருப்பதை ஸ்ரீஸ்துதி, ஸ்ரீரஹஸ்யரக்ஷை போன்றவற்றில் தெளிவாக அநுக்ரஹித்தருளியுள்ளார். மேலும் மோக்ஷம் பெறுவதற்கு ஸாதனமான எல்லோராலும் அங்கீகரிக்கப்பட்ட ஜஞாநத்தைக் கொடுப்பவள் இவள் என்பதை  चैतन्य स्तन्यदायिनीं சைதந்ய ஸ்தந்யதாயினீம் (தயாஶதகம் 6) 


       ஸர்வேஶ்வரன் இவர்களுடைய பூர்வாபராதத்தாலே இட்ட நினைப்பு ஈடுமாறுகைக்கு ப்ரதான காரணம் மூன்றுண்டு. அவை எவையென்னில் அஸ்து மே என்றபேக்ஷித்தால்  அஸ்து தே தயைவ ஸர்வம் ஸம்பத்யஸ்யதே என்கிற திருமுகப்பாசுரமும் (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம்) तेने मैत्री भवतु ते  தேனே மைத்ரீ பவது தே (ஸ்ரீமத் ராமாயணம்)
என்பது ஸபலமாகவில்லையே என்று ஆக்ஷேபம் செய்பவர்களுக்கு

இப்படி तेने मैत्री भवतु ते தேனே மைத்ரீ பவது தே என்றதுவும் ராவணனுக்கு சிசுபாலனான ஜந்மாந்தரத்திலே அந்திம க்ஷணத்திலேயாகிலும் கார்யகரமாயிற்று (அபய ப்ரதாநஸாரம்) என்று ஸமாதானம் அருளிச் செய்து, இவள் ஸத்ய ஸங்கல்பத்தையுடையவள் என்று இவள் பெருமையை நிரூபித்தருளினார். ஆகையினால் இவர் பெரிய பிராட்டியாருடைய தயைக்கு பாத்திரமானார் என்றபடி.

6. ராமா  என்பது பூமிப் பிராட்டியையும் குறிக்கிறது. அவளுடைய பெருமையை “ஸ்ரீபூஸ்துதி”யிலும், “ஸ்ரீரஹஸ்யஶிகாமணி”யிலும் விஶேஷித்து அருளிச் செய்துள்ளபடியால் அவளுடைய தயைக்குப் பாத்திரமானார் என்றபடி.

      ஸ்ரீபூமிப்பிராட்டியை ஜகத்துக்கு ஈஶாநா என்று ஶ்ருதி சொல்லுகையாலே சேதனாசேதன ரூபமான ஜகத்திற்காட்டில் இவளுடைய உத்கர்ஷம் ப்ரஸித்தம். ஸர்வம் ஸஹையான இவளுக்கு ஸர்வேஶ்வரனைக்காட்டிலும், பெரிய பிராட்டியாரைக் காட்டிலும் க்ஷமாதிகுண பூயஸ்தை உண்டாயிருந்தது. இப்படியானால் இவளுக்குத் தங்களைக் காட்டில் ஏற்றத்தை ஸூரிகளே தாங்களே அறிவார்கள் இத்தை ஸ்ரீபூமிப்பிராட்டி ஸ்வாபாவிக ஸார்வஜ்ஞ்யத்தாலே அறிந்திருக்கச் செய்தேயும் ப்ரஜா ஹிதார்த்தமாக மாதா கேட்க, ஸர்வபூத ஸுஹ்ருத்தான பிதா அருளிச் செய்த வார்த்தை என்று ப்ரஸித்தமாக வேண்டுமென்று திருவுள்ளம் பற்றி (ஸ்ரீரஹஸ்யசிகாமணி.) என்று கூறப்பட்டுள்ளது .

                                                                             தொடரும்….. 

வெள்ளி, 28 பிப்ரவரி, 2014

ராமாநுஜ தயாபாத்ர தனியனின் ஏற்றம்

இன்று அடியேன் படித்துக் கொண்டிருக்கும் “ஸ்ரீவேதாந்த தேசிகன் தனியனும் அதன் ஏற்றமும்” (நூல்  கல்யாணபுரம் தேவஸ்தானம் ஸாமவேத வித்வான் ஸ்ரீ உ.வே. பார்த்தஸாரதி ஐயங்கார் ஸ்வாமி – 13-09-2007ல் அவரது ஜன்ம நக்ஷத்ர ஸாந்தி மஹோத்ஸவ மலராக வெளியிட்டது) நூலிலிருந்து ஒரு பகுதி

ராமாநுஜ தயாபாத்ர தனியனின் ஏற்றம்

ஸ்ரீ தேஶிகன் விஷயமான 3 தனியன்களில் முதலான விஷயங்கள் மூன்று என அநுபவிக்கப்பட்டது. அவற்றுள் மூன்றாவதான ராமாநுஜ தயாபாத்ரம் என்னும் தனியனுக்கு இன்னும் ஒரு படி ஏற்றம் உண்டு.

ரஹஸ்யத்ரயங்களில் सदैवं वक्त्ता என்கிற ஏற்றம் பெற்றது த்வயம்.

ஆசார்யர்களுக்குள் மற்றொருவருக்கும் கிடைக்காததாயும் ஸ்ரீதேஶிகன் ஒருவருக்கே கிடைத்ததுமான பெருமை வேதாந்தாசார்யர் என்னும் பிருது. இதைப் பலபடிகளாலும் தாம் நிர்வஹித்தருளிய ப்ரகாரத்தை ஸ்ரீதேஶிகன் தாமே அருளிச் செய்திருக்கிறார். நமது ஸம்ப்ரதாயத்தில் உபய வேதாந்தங்களும் ப்ரமாணங்களாக அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஸம்ஸ்க்ருத வேதாந்தார்த்தங்களை ப்ரதிபாதிக்கிற ப்ரஹ்ம ஸூத்திரங்களின் வ்யாக்யாநமான ஸ்ரீபாஷ்யத்தின் அர்த்த ஸங்க்ரஹமான ஸ்ரீஅதிகரணஸாராவளியில்
तेन देवेन दत्तां वेदान्ताचार्यसंज्ञामवहित बहुवित्सार्थमन्वर्थयामि
என்று அநுஸந்தித்திருக்கிறபடியினால் ஸம்ஸ்க்ருத வேதாந்தங்களில் தாம் நிகரற்றவர் என்பதை வெளியிட்டருளினார்.

आचार्यप्रियचिकीर्षया प्रेरित: तत्प्रसादसन्धुक्षित तत्प्रबन्धानुसन्धान जनित ज्ञान भक्ति परिवाहरूपे स्तोत्रे

    என்கிறபடியே த்ராவிட வேதங்களின் அநுஸந்தாந பரிவாஹமான ஸ்ரீஸ்தோத்ர ரத்நத்திற்கு வ்யாக்னமிட்டருளி அதன் இறுதியில்
स्वकमिति हरिदत्तं यामुन स्तोत्र वृत्तया व्यवृणुत निगमान्ताचार्यकं वेङ्कटेश: 

என்றருளிச் செய்திருப்பதினாலே திரமிட வேதங்களில் தாம் நிலவர் என்பதை ஸ்தாபித்தருளினார். ஸ்ரீபாஷ்யத்திற்கு விஸ்தாரமான வ்யாக்யாநமான ஸ்ரீதத்வடீகையை यतिपतिभुवो भाष्यस्यासौ यथाश्रुतचिन्तित प्रवचनविधावष्टाविंशे जयध्वजपट्टिका  என்றும் , ஸ்ரீசதுஶ்லோகீ பாஷ்யத்தில் व्यासन शमन व्यक्त्तोस्तेया जयध्वजपट्टिका என்றும் அருளிச் செய்திருப்பதினாலும் உபய வேதாந்தங்களில் பாண்டித்யத்தை உடையவர் என்பது தெரிவிக்கப் பட்டதாகிறது. இப்படி உபய வேதாந்தங்களிலும் ஆசார்யனாய் விளங்கின போதிலும்

1. செய்ய தமிழ்மாலைகள் நாம் தெளிய ஓதித் தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே. 2. பாணன் ஓதியதோர் இருநான்கு இரண்டுமான ஒரு பத்தும் பற்றாக உண்ர்த்துரைத்தோம் 3. சந்தமிகு தமிழ்மறையோன் என்றிவை முதலாக அநுஸந்தித்திருப்பதினாலே ஒரு விஶேஷம் பெற்றதாயிருக்கும் த்ராவிட வேதங்கள். ஸம்ஸ்க்ருத வேதாந்தங்களின் வ்யாக்யாநங்களான ஸ்ரீபாஷ்யம், ஸ்ரீகீதாபாஷ்யம், முதலிய க்ரந்தங்களும் பகவானுடைய மஹிமையையே ப்ரதிபாதித்தபோதிலும், பகவத் குணாதிகளை நேரில் அவ்யவஹிதமாக ஒன்றும் விடாமல் ப்ரதிபாதிக்கிற த்ரமிட வேதங்களின் வ்யாக்யாநங்களுக்குப்போலே அவற்றுக்கு பகவத் விஷயம் என்னும் திருநாமம் கிடைக்கவில்லை. எம்பெருமானாலேயே மயர்வற மதிநலம் அருளப்பெற்று, அந்த ஜ்ஞாநத்தினாலேயே அவனை உள்ளபடியே அநுபவித்து, அநுபவித்தபடியே பேசுகிற பேச்சுக்களான திருவாய்மொழியின் முதல் வ்யாக்யாநமாக எம்பெருமானாருடைய நியமனத்தினால்  பிள்ளான் பணித்தருளிய திரு ஆறாயிரப் படிக்கே அப்பெருமை. அதற்கு வ்யாக்யாநமான எழுபத்தி நாலாயிரப்படியின் காலக்ஷேப காலத்தில் அவதரித்த இத்தனியன் மற்றத்தனியன்களை விட ஓர் ஏற்றம் பெற்றிருக்கும்.

அன்றிக்கே, ஸ்ரீரங்கத்தில் தடைபட்டு நின்ற திருவத்யயனோத்ஸவத்தை ப்ரதிவாதிகளை நிரஸித்து அந்த மஹோத்ஸவத்தை நடத்தி வைத்த ஸமயத்தில் லக்ஷ்மீநாத ஸமாரம்பாம் என்னும் தனியனுக்கு முன்பு அநுஸந்திக்கும்படி ஸ்ரீரங்கநாதனால் நியமிக்கப்பட்ட பெருமை வாய்ந்திருக்கும் இத்தனியன் என்றபடியாகவுமாம்.

மற்றும், பூர்வாசார்யர்கள் எல்லோரும் உபய வேதாந்தங்களிலும் நிலவர்களாகிலும் அவர்கள் ஸ்ரீதேஶிகனைப்போலே உபயவேதாந்தாசார்யத்வத்தில் அபிஷிக்தர்களாகவில்லை. ஏனென்றால் ---  ப்ரபந்நஜந கூடஸ்தரான ஆழ்வார் த்ரமிடோபநிஷத் த்ரஷ்டா என்கிற பெருமை பெற்றவர். யோகதசையில் ஸாக்ஷாத்க்ருதமாய் ஸ்ரீமந்நாதமுனிகளுக்கு உபயவேதாந்தங்களையும் உபதேஶித்தருளினாலும் க்ரந்த முகமான உபகாரம் த்ரமிட வேதங்களாலேதான். தமிழ் மறைக்குத் தாளம் வழங்கி இன்னிசை தந்த வள்ளலான ஸ்ரீமந் நாதமுனிகளும் திவ்ய ப்ரபந்தங்கள் விஷயமாய் க்ரந்த முகமாக உபகாரம் செய்தருளவில்லை. பெரிய முதலியாரும் த்ரமிடவேத த்ரஷ்டாவான ஆழ்வார் விஷயமாக ஒரு ஶ்லோகம் அருளிச் செய்திருந்தபோதிலும் திவ்ய ப்ரபந்தங்களின்ப்ரபாவாதிகளைப் பரக்க நிரூபித்தாரில்லை. தர்ஶந ப்ரவர்த்தகரான எம்பெருமானாருடைய திவ்ய ப்ரபந்தாநுஸந்தாந ஊற்றம் நூற்றந்தாதியில்

“மாறன் அடிபணிந்து உய்ந்தவன் பொய்கைப்பிரான் மறையின் குருத்தின் பொருளையும் செந்தமிழ்தன்னையும் கூட்டி – பூதத்திருவடித்தாள்கள் நெஞ்சத்துறைய வைத்தாளும் – கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை காட்டும் தமிழ்த்தலைவன் பொன்னடி போற்றும் – சீரிய நான்மறைச் செம்பொருள் செந்தமிழாலளித்த பாரியலும் புகழ்ப்பாண் பெருமாள் சரணாம் பதுமத்தாரியல் சென்னி – இடம்கொண்ட கீர்த்தி மழிசைக்கிறைவன் இணையடிப் போதடங்கும் இதயத்து – செய்யும் பசும் துளவத் தொழில் மாலையும் செந்தமிழில் பெய்யும் மறைத் தமிழ்மாலையும் பேராத சீர்அரங்கத்து ஐயன் கழல் பணியும் –கொல்லி காவலன் சொல்பதிக்கும் கலைக் கவிபாடும் பெரியவர் பாதங்களே துதிக்கும் – பல்லாண்டென்று காப்பிடும் பான்மையன் தாள் பேராத உள்ளத்து – அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக்கொடுத்தவள் தொல்லருளால் வாழ்கின்ற வள்ளல் – தண்தமிழ் செய்த நீலன் தனக்கு உலகில் இனியானை --- எய்தற்கரிய மறைகளை ஆயிரமின் தமிழால் செய்தற்கு உலகில் வரும் சடகோபனை – மாறன் விளங்கிய சீர்நெறி தரும் செந்தமிழ் ஆரணமே என்று – தென்குருகைப்பிரான் பாட்டென்னும் வேதப் பசும் தமிழ்தன்னை தன் பத்தி என்னும் வீட்டின் கண்வைத்த – திருவாய்மொழியின் மணம் தரும் இன்னிசை மன்னுமிடம்தொறும் நிற்கும் – பண்டரு மாறன் பசும் தமிழ் ஆநந்தம் பாய் மதமாய்”      (இராமாநுஜ நூற்றந்தாதி)

முதலியவைகளில் விஶேஷமாக ப்ரதிபாதிக்கப் பட்டிருந்தபோதிலும், க்ரந்தமுகமாக ஆழ்வார்களைப் பற்றியோ அவர்கள் ப்ரத்யக்ஷீகரித்து வெளியிட்டருளிய த்ராவிட வேதங்களைப் பற்றியோ அவர் ஓரிடத்திலும் நிரூபிக்கவில்லை. எம்பெருமானாரால் உபய வேதாந்த ஸிம்மாஸனத்தில் அபிஷிக்தரான பிள்ளானும் த்ரமிடோபநிஷத்தின் அர்த்த விஶேஷங்களை ஆறாயிரப்படியில் பரக்க நிரூபித்திருந்தாலும் ஆழ்வார்களின் அவதாரப்ரபாவ விஷயமாய் ஒன்றும் நிரூபிக்கவில்லை. ஸ்ரீதேஶிகன் ஒருவரே தான் வேதாந்தாசார்யர் என்னும் தம்முடைய திருநாமத்திற்கேற்ப உபய வேதாந்தங்களின் அர்த்தங்களையும், அவற்றின் உத்கர்ஷத்தையும், ஆழ்வார்கள் த்ரமிட வேத த்ரஷ்டாக்கள் என்பதையும், அவர்களுடைய அவதார ப்ரபாவத்தையும் வெளியிட்டருளியவர். இப்படி உபய வேதாந்தங்களிலும் நிலவரான ஸ்ரீ தேஶிகனாலே
नित्यम् जाता शठारिपु तनो: निष्पतन्ति मुकात्ते|
प्राचीनानां श्रुतिपरिषदां पादुके पूर्वगण्या ||
  (பாதுகாஸஹஸ்ரம்)
என்று கொண்டாடப் பட்டிருக்கும் பெருமையையுடையவைகள் த்ராவிட வேதங்களே. இப்படிப்பட்ட ஏற்றமுடைய த்ரமிட ப்ரபந்தங்களின் தனியன் என்னும் பெருமை பெற்றது.

மேலும், ரஸங்களுக்குள் உத்க்ருஷ்டமான ஶாந்தி ரஸத்தை ப்ரதாநமாக ப்ரதிபாதிக்கிறபடியினாலும் ஸம்ஸ்க்ருத வேதங்கள்போல் த்ரைவர்ணிகர்களுக்கு மட்டுமன்றிக்கே ஸர்வாதிகாரங்களாய் நிற்கிறபடியினாலும் பெருமை பெற்ற த்ரமிட வேதங்களுக்குத் தனியன் என்கிற உத்கர்ஷம் பெற்றிருக்கும்.

அன்றிக்கே, ஶரணாகதியையும், அதன் அங்கங்களையும், அதற்கு இன்றியமையாததான பகவானுடைய கருணையையும் அர்ச்சாவதாரத்தையும் விஶேஷித்து ப்ரதிபாதிக்கிறது என்கிற பெருமையையும் பெற்ற “திராவிடவேதங்களின் தனியன்” என்கிற பெருமையும் வாய்ந்தது.

பின்பும் नाथे न: என்கிற ஶ்லோகத்தில் பாகவதர்களின் ப்ரஸாதமே நமக்கு உத்தேசமென்றும், आचार्यादिह देवतां समधिकामन्यां न मन्यामहे| என்கிற ஶ்லோகத்தின்படியே ஆசார்யனுடைய கடாக்ஷத்தையே நாடவேண்டும் என்பதையும் இது காட்டுகிறது. 

(இது சேட்லூர் ஸ்வாமி மணிப்பிரவாளத்தில் எழுதியதின் தமிழாக்கம் என்று நூலில் சொல்லப் பட்டுள்ளது)

திங்கள், 27 ஜூன், 2011

திருமந்திரச் சுருக்கு 2

இப்படி அகாரார்த்தத்தை அருளிச் செய்து அதில் ஏறி லோபித்துக் கிடக்கும் சதுர்த்தீ விபக்தியின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் – இளக்கமில் என்றாரம்பித்து.

இளக்கமின் மயக்கந்தன்னா லெனக்குநானுரியே னென்னுங்
களக்கருத்தொன்றே கொண்டு கடுநரகடைந்து நின்றீர்!
விளக்கு மிவ்வெழுத்தை நாலாம் வேற்றுமை யேற்றிவாங்கித்
துளக்கமி லடிமைபூண்டுத் தூயராய் வாழ்மினீரே                         .2.
[ப –ரை] இளக்கம் – இளகிப் போதல், அதாவது சிதிலமாகிப் போதல், இல் – இல்லாத தான, மயக்கம் தன்னால் – அஜ்ஞானத்தினால், நான், எனக்கு, உரியேன் – சேஷபூதன், என்னும், களக்கருத்து – அபஹார ரூபமான அனுஸந்தானம், ஒன்றே கொண்டு –ஒன்றையே ஸ்திரமாக அங்கீகரித்து, கடு –க்ரூரமான, நரகு –நரகத்தை, அடைந்து , நின்றீர் – நிற்கிறவர்களே! இவ்வெழுத்தை – இந்த அகாரத்தை, விளக்கும் – ப்ரகாசம் செய்கிற, அதாவது அஸாதுவாக்காமல் சப்தத்தினாலும், அர்த்தத்தினாலும் அதை ஸாதுவாக்குகிற, நாலாம் வேற்றுமை ஏற்றி – அந்த அக்ஷரத்தின் மேல் வைத்து, வாங்கி – எடுத்து விட்டு, அதாவது, உச்சரிக்கும்போது அதை நீக்கிவிட்டு என்றபடி, துளக்கம் – சலிப்பு, இல் – இல்லாத, பிறகு ஒரு நாளும் சலியாத என்றபடி, அடிமை – தாஸ்யத்தை, பூண்டு – அங்கீகரித்து, தூயராய் – பரிசுத்தராய், வாழ்மினீரே – வாழுங்கோள்.        (2)
[தா – ம்]  இளக்கமில் மயக்கம் என்றது அநாதியான ஸம்ஸாரத்தில் ஒரு பொழுதாவது இதுவரையில் பகவானுக்கு நாம் சேஷபூதம் என்கிற ஜ்ஞாநம் உண்டாகவில்லை. இப்படி அநாதி வாஸனையால் ஏற்பட்ட த்ருடதரமான அஜ்ஞானம் என்றபடி. அதாவது ஜீவபரமாத்ம ஸ்வரூபங்களை அறியாமை. நாதி³வாஸநாரூட மித்²யாஜ்ஞான நிப³ந்த²நா:| ஆத்மாத்மீய பதா³ர்த²ஸ்தா²யா ஸ்வாதந்த்ர்யஸ்வதாமதி: ||( अनादिवासनारूढ मिथ्याज्ञान निबन्थना: आत्मात्मीय पदार्थस्थाया स्वातन्त्र्यस्वतामति:) என்றன்றோ சொல்லப் பட்டது. களக்கருத்து -- யோந்யதா² ஸந்த்ரமாத்மான மந்யதா² ப்ரதிபத்³யதே‌| கிந்தே நக்ருʼதம்ʼ பாபம்ʼ சோரேணாத்மாபஹாரிணா‌ம்||( योन्यथा सन्त्रमात्मान मन्यथा प्रतिपद्यते‌ किंतेन नकृतं पापं चोरेणात्मापहारिणा‌म्) என்றும், ஜிதகௌஸ்துப சௌர்யஸ்ய ஸம்ʼராஜ ஸ்ஸர்வபாப்மநாம்|  ஆத்மாபஹாரசௌர்யஸ்ய நிஷ்க்ருʼதி:||( जितकौस्तुभ चौर्यस्य संराज स्सर्वपाप्मनां  आत्मापहारचौर्यस्य निष्कृति:) என்றும் சொல்லுகிறபடியே கௌஸ்துப சௌர்யத்தைக் காட்டிலும் கொடியதாயிறே ஆத்மாபஹார சௌர்யம் இருப்பது. ஸ்ரீமத் கீதா பாஷ்யத்தில் தைர்த³த்தான ப்ரதா³யைப்யோ யோபுங்க்தே ஸ்தேனஏவஸ:( तैर्दत्तान प्रदायैभ्यो योभुङ्क्ते स्तेनएवस:) என்கிற ச்லோக வ்யாக்யானத்தில்  சௌர்யம்ʼஹி நாம ன்யதீ³யே தத் ப்ரயோஜனாயைவ பரிகஸ²ப்தே வஸ்துனி ஸ்வகீயதா பு³த்³திம்ʼ க்ருʼத்வா தேன ஸ்வாத்மபோஷணம் | அதஏவ தஸ்ய ந பரமபுருஷார்த்தா² நர்ஹதாமாத்ரம்ʼ அபி து நிரயகா³மித்வம்ʼ ச பவிஷ்யதீத்யபிப்ராய:( चौर्यंहि नाम कन्यदीये तत् प्रयोजनायैव परिकशप्ते वस्तुनि स्वकीयता बुद्धिं कृत्वा तेन स्वात्मपोषणं अतनएव तस्य न परमपुरुषार्था नर्हतामात्रं अपि तु निरयगामित्वं च भविष्यती त्यभिप्राय:) என்றருளிச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது அயலானுடையதாய் அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே ஏற்பட்ட வஸ்துவில் தன்னுடையது என்கிற புத்தியைச் செய்து அதைக் கொண்டு தன்னை ரக்ஷித்துக் கொள்ளுதல், ஆதலால் இவனுக்கு மோக்ஷத்தையடைய யோக்யதை இல்லாமை மாத்திரமல்ல, பின்னை எதென்னில், நரகத்தை அடைவதும் உண்டாகப் போகிறதென்று தாத்பர்யம் என்றர்த்தம். இதற்கு ஸ்ரீமத் தாத்பர்ய சந்திரிகையில்  தேனஸ்வாத்ம போஷணமிதி சௌர்யஸ்ய ப²லம்| அன்யதீ³யே ஸ்வகீயதா பு³த்³தி கரணமித்யேவ லக்ஷணம்|......... பு³த்³திம்ʼ க்ருʼத்வா இ த்யனேன சௌர்யஸ்ய நாதிக வ்யாபாரோ  (நகாதிக வ்யாபாரோ) அவஸ்²யாபேக்ஷித: இதிஸூசிதம்ʼ ..........ஏவம்ʼ ச ஸதி ... யோன்யதா² ஸந்தம்ʼ இத்யாத்³யுக்தாத்ம சௌர்யமபி லக்ஷிதம்ʼ வதி|  ³வதீ³யே தத்³³தாதிஸ²யா தானேச்ச²யைவ பரிகல்பிதே ப்ரத்யகா³த்மனி ஸ்வாதிஸ²யாவஹ ஸ்வதந்த்ரத்வாபிமான ரூபத்வா த்தஸ்ய(तेनस्वात्म पोषणमिति चौर्यस्य फलं अन्यदीये स्वकीयता बुद्धि करणमित्येव लक्षणं ......... बुद्धिं कृत्वा इ त्यनेन चौर्यस्य नाधिक व्यापारो  (नकाधिक व्यापारो) अवश्यापेक्षित: इतिसूचितं ..........एवं च सति ... योन्यथा सन्तं इत्याद्युक्तात्म चौर्यमपि लक्षितं भवति  भगवदीये तद्गतातिशया धानेच्छयैव परिकल्पिते प्रत्यगात्मनि स्वातिशयावह स्वतन्त्रत्वाभिमान रूपत्वात्तस्य) என்றருளிச் செய்யப் பட்டிருக்கிறது. அதாவது, அதைக்கொண்டு தன்னை ரக்ஷித்துக் கொள்வது என்பது சௌர்யத்தின் ப்ரயோஜனம், அயலாருடைய வஸ்துவில் தன்னுடையதென்கிற புத்தியைச் செய்வதே (சௌர்யத்துக்கு ) லக்ஷணம் ………….. ‘புத்தியைச் செய்து’ என்பதினால் சௌர்யத்துக்கு அதிகமான (தேஹத்தினால்) செய்யக் கூடிய வ்யாபாரம் வேண்டியதில்லை.  …………..இப்படியாகில் ‘யோந்யதா2ஸந்தம்’ இத்யாதிகளில் சோல்லப்பட்ட ஆத்ம சௌர்யமும் குறிக்கப் பட்டதாகிறது. பகவானுடையதாயும் அவனுக்கு உண்டாகிற அதிசயத்தைச் செய்யவேண்டுமென்கிற எண்ணத்தினாலே ஏற்படுத்தப் பட்டதாயுமிருக்கிற இந்த ஜீவாத்மாவினிடத்தில் தனக்கு அதிசயத்தைச் செய்கிறது ஸ்வதந்திரம் என்கிற அபிமானமாகையால் ‘ என்றர்த்தம். “ஈஸ்வரோஹ மஹம்போகீ³ (ईस्वरोह महंभोगी)என்று ஆஸுர ஸ்வபாவமுடையவர்களின் லக்ஷணமாக அன்றோ சொல்லப்படுகிறது. கடுநரகு என்பதினால் ஸர்வேச்வரனுடையதாயும், ஸர்வோத்க்ருஷ்டமாயும் இருப்பதற்குத் தகுந்தபடி சிக்ஷையும் க்ரூரமாயிருக்கும் என்றபடி. க்ஷிபாம்யஜஸ்ர மஸுபா நாஸுரிஷேவ யோநிஷு(क्षिपाम्यजस्र मसुभा नासुरिषेव योनिषु  என்றல்லவோ இவர்கள் திறத்தில் பகவத் ஸங்கல்பம் இருக்கும்படி. இப்பொழுது பூலோகத்தில் இருக்கும் சேதனர்களைக் குறித்து ‘அடைந்து நின்றீர்’ என்றருளிச் செய்திருப்பது உசிதமோ என்னில்? ஆத்மா பகாரிகளுக்கு நரகம் ஸித்தம் என்கிற அபிப்ராயத்தினால் இந்த ஆத்மாபகாரம் ஸ்வரூபத்தில் தட்டினவாறே நரகம் நிச்சயம் வரக்கூடியதென்பதைக் காட்டுவதற்காக இப்படி அருளிச் செய்யப்பட்டது. ‘நின்றீர்’ என்பதினால் பார்த்த பார்த்த இடமெங்கும் இவர்களேயாய் நிறைந்திருக்கை விவக்ஷிதம். விளக்கும் இத்யாதி -- நகேவலா ப்ரக்ருʼதி: ப்ரயோக்தவ்யா (नकेवला प्रकृति: प्रयोक्तव्या) (வேற்றுமையில்லாமல் ப்ரக்ருதியை மட்டும் ப்ரயோகிக்கக் கூடாது) என்று சொல்லியிருப்பதினால் இது இந்த சப்தத்தை ஸாதுவாக்கிக் கொண்டு நிற்கிறது. மேலும் இவ்விடத்தில் அகாரம் முதல் வேற்றுமை உடையதாய் ஜீவ பரமாத்மாக்களுக்கு ஐக்யத்தைச் சொல்லுகிறதென்றால் மேல் சரணாகதியைச் சொல்லுகிற நம: என்கிற பதத்திற்கும் , ஆதார ஆதேயபாவம், கார்ய காரண பாவம் முதலியவற்றைச் சொல்லுகிற நாராயண சப்தத்துடனும் பொருந்தாது. மேலும், ஜுஹுயாத் ப்ரணவே நாக்³னா வச்யுதாக்²யே ஸநாதனே’ (जुहुयात् प्रणवे नाग्ना वच्युताख्ये सनातने) ஓமித்யாத்தானம்ʼ யுஞ்ஜீத’(ओमित्यात्तानं युंजीत) என்று ஆத்ம ஸமர்ப்பணத்துக்குக் கரண மந்திரமாக ப்ரணவத்தை உதாஹரித்திருப்பதினால் அப்பொழுது ப்ரணவம் அந்த ஸமர்ப்பணத்தை ப்ரகாசிக்க வேண்டியது அவச்யமாகையினால் அதில் மகாரம் ஸமர்ப்பிக்கப்பட வேண்டிய ஜீவாத்மாவைச் சொல்லுகிறபடியினாலும், யாருக்கு ஸமர்ப்பிக்கப்படுகிறதென்னில், அதற்கு உத்தேச்யனைத் தெரிவிக்க வேண்டியது மிகுதியாயிருப்பதினாலும், அந்த அகாரமே அந்த உத்தேச்யனைக் காட்ட வேண்டியதாகையாலும், ‘அக்³னயே இத³ம்ʼஇந்த்³ராய இத³ம்ʼ (अग्नये इदं इन्द्राय इदं) இத்யாதி வேறு மந்திரங்கள் எல்லாவற்றிலும் ஸமர்ப்பணத்துக்கு உத்தேச்யனை சதுர்த்தி விபக்தியுடைய பதத்தினால் காட்டியிருக்கிறபடியினாலும் இங்கும் அப்படியே சதுர்த்தி விபக்தியே இருக்கவேண்டும் என்கிற ந்யாயங்களை அனுஸரித்து அகாரத்தை சப்தஸ்வரூபத்திலும் அர்த்தத்திலும் விரோதமில்லாமல் தெரிவிக்கிறபடியினால் ‘விளக்கு மிவ்வெழுத்தை நாலாம் வேற்றுமை’ என்றருளிச் செய்யப்பட்டது. ‘ஏற்றி வாங்கி’  ஸுபாம் ஸுலுக் (सुपां सुलुक्) (வேதத்தில் பதங்களில் இருக்கும் வேற்றுமை உருபுகளுக்கு சில இடத்தில் லோபம் வரும்) என்று சொல்லியிருப்பதை அனுஸரித்து இங்கு நான்காம் வேற்றுமை உருபு லோபித்துக் கிடக்கிறது என்று திருவுள்ளம். அப்படி வேற்றுமை லோபித்திருந்தாலும் அதன் மூலமாக வ்யாகரணத்தின்படி அர்த்தத்தைச் சொல்லிக் கொள்வது ஸுலபம் என்று தெரிவிக்கப் பட்டதாகிறது. இப்படியே ஸ்ரீபாஷ்யத்திலும் அக்ஷேபத: ப்ராப்தாதா³பியாநி கஸ்யைவ க்³ராஹ்யத்வாத் (अक्षेपत: प्राप्तादाभियाति कस्यैव ग्राह्यत्वात्)   என்று அங்கு உசிதமான லுப்த ஷஷ்டியின் அர்த்தத்தைச் சொல்லிக் கொள்வது உசிதம் என்று அருளிச் செய்யப்பட்டிருப்பது அனுஸந்தேயம். ‘துளக்கமில்’ இத்யாதி – இப்பொழுது உண்டாகிய தாஸ்யம் மோக்ஷபர்யந்தமாய், மோக்ஷத்திலும் அனுவர்த்திக்கக் கடவதாய் மறுபடியும் ஸம்ஸார ப்ரஸங்கமில்லாமையாலே யாவதாத்மபாவியாய் இருப்பதொன்றென்று திருவுள்ளம். அன்றிக்கே குயுக்திகளால் சலிப்பிக்க ஒண்ணாதபடி அடிமையைப் பூண்டென்று திருவுள்ளமாகவுமாம். பூண்டு என்பதினால் இதுவே ஜீவாத்மாவுக்கு நிலை நின்ற ஆபரணம் என்பது திருவுள்ளம். பூர்வமேவ மஹாபா³: ஸௌமித்ரிர் மித்ரந்த³ன:| அக்³ரஜஸ்யானு யாத்ரார்தே² த்³ருமசீரைரலங்க்ருʼத:|| (पूर्वमेव महाभाग: सौमित्रि र्मित्रनन्दन: अग्रजस्यानु यात्रार्थे द्रुमचीरैरलंकृत:) -- மரஉரியுடுத்து அணிகலங்கள் அணியாமல் நிற்கும் தசையிலன்றோ அலங்க்ருʼத: (अलंकृत:)என்றது கைங்கர்ய ஸாம்ராஜ்யத்துக்கு முடிசூட்டினாற்போல் இருந்தமையை நினைத்து, தூயராய் – பரிசுத்தர்களாய் நஹிஜ்ஞாநேந ஸத்³ருʼ²ம்பவித்ரமி ஹவிஷ்யதே (नहिज्ञानेन सदृशंपवित्रमि हविष्यते) என்று ஆத்மஸ்வரூபஜ்ஞானம் மிகவும் பரிசுத்திகரம் என்று ஸ்ரீகீதாசார்யனும் அருளிச் செய்தான். வாழ்மினீரே  இந்த ஜ்ஞானம் உண்டானவாறே இதற்கு உசிதமான புருஷார்த்தத்தில் ருசியும், அதற்கு அனுகுணமான உபாயனுஷ்டானமும் தன்னடையே வருமாகையினால் இந்த ஜ்ஞானமே இவனுக்கு வாழ்வு என்று திருவுள்ளம். இப்படிக்கில்லாவிடில் அஸந்நே (असन्नेव) என்னும்படி நிற்கிறானிறே. ‘அன்று நான் பிறந்திலேன் பிறந்தபின் மறந்திலேன்’ என்கிறபடியே இந்த ஜ்ஞானம் பிறப்பதற்கு முன் தசையில் அஸத்கல்பனாய் பிறகு இவன் வாழ்ந்தானாக இருக்குமிறே. ‘ஆன்விடை ஏழடர்த்தார்க்கு  ஆளாரல்லாதார் மானிடரல்லரென்று  என் மனத்து வைத்தேனே’  என்றிறே ஸர்வேச்வரன் பக்கல் ஸர்வார்த்த க்ரஹணம் பண்ணின ஆழ்வார்  அருளிச் செய்தது. இவற்றையெல்லாம் திருவுள்ளம் பற்றி இங்கு இப்படி அருளிச் செய்யப் பட்டது.