சனி, 11 நவம்பர், 2006

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

ஸ்ரீமதே ராமானுஜாய நம:ஸ்ரீமதே நிகமாந்த மஹாகுரவே நம:
ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை ********************************
காப்பு - ஆசிரிய விருத்தம்
பொன்னுறையுமணிமார்பனீலவண்ணன் பூங்கமலங்கண்கைமுகப்பாதன்வேதமென்னுமுயர் வேங்கடவெற்பினில்விளங்கு மெம்பெருமான் கண்டாவதாரமானபன்னுபுகழ்வேதாந்தகுருவிலாசம் பைந்தமிழாற்கூறுதற்கே சேனைநாதன்முன்னின்றுசுபந்தருவானவன் சீர்பாத மூப்பதாமிங்குவந்துகாப்பதாமே.

இதுவுமது.

வேங்கடநாதார்யகவிவாதிசிங்கர் வேதாந்தாசார்யரெனவிளங்கிநாளும்பாங்குபெறுதூப்பினகரநந்தசூரி பாலராய்வந்துதித்துப்பாரின்மீதுஓங்கியராமானுஜஸித்தாந்தஞ்செய்து முபநிஷதப்பொருளெல்லாம்வெளியாக்கண்டாரீங்கிவரையாமெல்லாமனத்துளாக்கி யெண்ணுவோம்வந்தநந்தான்பண்ணுவோமே. விருத்தம்

ராமா னுஜதயாபாத்திரரேயாகி ஞானவைராக்கியபூஷணஸம்பன்னர்தாமனார்வைபவப்பிரகாசிதன்னை தமிழினாற்கீர்த்தனையின்வரிசைபாடப்பூமாதுமணவாளனாதியாகப் புகழ்நாதயாமுநரேநடுவாய்நின்றுஹேமாசனாதிகுருபரம்பரைக்கே யென்செய்வோம்வணங்குதலையுஞ்செய்வோமே.
எம்பெருமான்றிருவடியேசொர்ணமாக இதரங்கள்யாவைகளுந்துரும்பாவெண்ணிநம்பினவரெங்கள்குருகருணைவாரி நல்லிராமா நுஜனார்சரணம்போற்றஅம்புவியிலெங்கணுமேபுகழுந்தூப்பி லநந்தசூரியர்குமரர்பூர்ணசந்த்ரவிம்பமாம்வேதாந்ததேசிகன்றன் விலாசந்தான்சரஸ்வதிவிலாசந்தானே.
எந்தமுடைக்குலங்களுக்குத் தந்தைதாயா யிசையுவதிதநயர்நிறைசெல்வமெல்லாந்தந்தருளியெங்கள்குலப்பதியாய்நின்று சரணமாய்வகுளமலர்த்தொடையல்வேய்ந்தஅந்தமுதற்குரவனடிவாழ்த்தியிந்த அற்புதவேதாந்தகுருவிலாசந்தன்னைச்செந்தமிழ்கீர்த்தனையாகச்செய்யவெங்கள் தேசிகரே வாக்கமுதந்தந்தாள்வாரே.
வாழ்வானகீர்த்திமிகும்பூதர்பொய்கை வரர்பேயர்பட்டர்பிரான்பத்திசாரர்சூழ்செய்குலசேகரனார்யோகிவாகர் தொண்டரடிப்பொடிகலியனெதிகணாதன்தாழ்வியாதுமிலாதபராங்குசருந்தேனார் தண்டுளவத்தார்முடியனடியரானஆழ்வாராசிரியர் திருவடியேசென்னி யணிகுவோமனுதினமும்பணிகுவோமே.

மங்களம்- தரு- இராகம்- சுருட்டி- தாளம்- ஆதி

பல்லவி
வேதாந்தாசார்யருக்கு ஜயமங்களம் - எங்கள்வேங்கடநாதார்யருக்குச் சுபமங்களம்

அனுபல்லவி
மேதாவிசுசு சீலருக்கு மெய்ப்புகழ்விசாலருக்குத்தோதாரம்மன்பாலருக்குத் தொண்டரனுகூலருக்கு (வேதா)


சரணங்கள்

கவிவாதிசிங்கருக்குப் புங்கவருக்குமங்களம்கண்டாவதாரருக்குத் தீரருக்குமங்களம்திவியமாலைக்கர்த்தருக்கு தரிசனப்பிரவர்த்தகருக்குக்கவலையில்லாச்சித்தருக்கு கண்ணனடிப்பத்தருக்கு (வேதா)சகலஜநபூசிகர்க்குத் தேசிகர்க்குமங்களம்சர்வதந்த்ரம் வல்லவர்க்கு நல்லவர்க்குமங்களம்பகவாநாமவாசகர்க்குப் பாசவினைரேசகர்க்குப்அகிலபாபமோசகர்க்கு அயக்கிரீவோபாசகர்க்கு (வேதா)தூப்பின கராதியர்க்கு வேதியர்க்குமங்களம்சொற்பேரருளாளருக்கு ஆளருக்கு மங்களம்யாப்பினில்விசித்திரர்க்கு அநந்தசூரிபுத்திரர்க்குக்காப்புவேதவத்திரர்க்கு கமலநயனர்பௌத்திரர்க்கு (வேதா) வெண்பா

சீரார் குடந்தைத் திருக்கண் வளர்கின்றஆரா வமுத னடியிணையை --- நேராகிச்சென்றடைந்த வேதாந்த தேசிகன்றன் வைபவத்தைஇன்றெடுத்துச் சொல்லுவேன் யான்.
..........நாளை தொடரும்..