வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

கீழ் நிரூபிக்கப்பட்ட சாரீரகார்த்த க்ரமப்படியே இந்தத் திருவாய் மொழியாகிற ப்ரபந்தத்தில் இறுதியிலுள்ள ஏழு திருவாய்மொழிகளுடன் கூடிய முதல் இரண்டு திருவாய்மொழிகளிலும் தத்துவாதி நிரூபணம் விசதமாகச் செய்யப்படுகிறது என்றருளிச் செய்யப்பட்டதாயிற்று. வ்யாஸமஹர்ஷி பரப்ரஹ்ம ஸ்வரூபாதிகளை நிரூபிக்க வேண்டும் என்கிற அபிப்ராயத்துடன் ஸூத்திரங்களை வ‌குத்தார். ஆகையினால் அது ஒரு க்ரமமாக நடுவில் விச்சேதாதிகள் இல்லாமல் செய்யப்பட்டது,
ஆழ்வாரோ அப்படி ஒருவித ஸ‌ங்கல்பத்துடன் இப்ரபந்தத்தைச் செய்ய முன் வரவில்லை. ஸமஸ்த‌ கல்யாண குணாத்மகன் என்கிற ப்ரஸ்ஸித்தியையுடைய ப‌க‌வானால் க‌டாக்ஷிக்க‌ப் ப‌ட்ட‌வ‌ராய்  அவனை உள்ளபடியே அனுபவித்து, அவ்வனுபவ ஜநிதமான நிரவதிக ப்ரீதியாலே அவனை அனுபவித்த‌படியே பேசும் பாசுரங்களன்றோ இத்திருவாய்மொழி ! பகவ‌த்ஸ்வரூபாதி தத்துவ நிரூபணத்தின் பேதமிருக்கமுடியாதாகையினால், ஆழ்வாருடைய அனுபவ க்ர‌மமும் அந்த சாரீரகார்த்த க்ரமமும் ஒன்றாய்நின்றது.  பகவான் “ப‌த்துடை அடியவர்க்கு எளியவன்” என்கிற‌ ஆகாரத்தை அனுஸ‌ந்திக்கப் புக்கு, ஒரு குணத்திலிருந்து மற்றொரு குணத்திற்குத் தாண்டி, பகவானுடைய கல்யாண குணங்களைப் பலபடியாக அனுபவித்துப் பேசி, இறுதியில் அவனைக்கிட்டும் ப்ரகாரம் முதலியவற்றை நிரூபித்தாராகையினால் ' பத்துடையடியவர்'  முதல் (1-3) சார்வே த‌வ‌நெறி'க்கு முன் (--1,4) வேய் ம‌ருதோளிணை வ‌ரையில் கீதாசார்ய‌ன் ப்ர‌ஸ‌ங்காத் ஸ்வ‌ஸ்வ‌பாவ‌த்தை கீதையில் அருளிச் செய்தாற்போலே ஆழ்வாரும் ப்ர‌ஸ‌க்தானுப்ர‌ஸ‌க்த‌மாக‌ப் ப‌க‌வானுடைய‌ ப‌ல‌ குண‌ங்க‌ளை அனுப‌வித்த‌ ப்ர‌கார‌ம் ந‌டுவிலுள்ள‌ 91 திருவாய்மொழிக‌ளாய் இருக்கும்.
இங்கு சாரீரகஸூத்ரார்த்த க்ரமம் என்று நிரூபிக்காமல் சாரீரகார்த்த க்ரமம் ' என்று அருளிச் செய்திருப்பதினால் ஆழ்வார் ஸூத்திரங்களைப் பார்த்து அந்த க்ரமத்தைப் பின்பற்றித் தம் ப்ரபந் தத்தில் அவற்றை நிருபித்தருளவில்லை என்பதும், வேதங்கள் பகவானை ஒருவாறு ப்ரத்யக்ஷீகரித்து அவனுடைய ஸ்வரூபாதிகளை ப்ரதிபாதிக்கும் க்ரமம் ப்ரஹ்மஸூத்திரங்களில் எப்படி ஸங்க்ரஹிக்கப் பட்டதோ, ஆழ்வாரும் அப்படியே தாமே எம்பெருமானை ப்ரத்யக்ஷீகரித்த ப்ரகாரத்தை இந்த ப்ரபந்தத்தில் வெளியிட்டபடியினால் அதே க்ரமம் இதிலும் காணப்படுகிறது என்பதும் தெரிவிக்கப் பட்டதாயிற்று. விசதம் என்கிற பதத்தால் இப்படி ப்ரதிபாதிக்கும் விஷயத்தில் ஸூத்திரங்களை விட ஆழ்வாருடைய ப்ரபந்தம் மிகவும் தெளிவாக இருக்கும் என்பதும் காட்டப்படுகிறது. ஸூத்திரங்கள் வேதங்களுக்கு உபப்ரும்ஹண ஸ்தானத்தில் நிற்கும். ஆழ்வாருடைய பிரபந்தமோ வேதங்களைப் போல ஸ்வதந்திர ப்ரமாணமாய்  நிற்கும் என்று அறிய வேண்டும்.  எப்படிப் பதினாறு பாதங்களில் கூறப்படும் அர்த்த க்ரமம் நிரூபிக்கப்ப்ட்டிருக்கிறது என்பது மேலே விவரிக்கப் படுகிறது. பகவானுடைய ஸ்ருஷ்டி கர்த்ருத்வத்தை நிரூபிப்பதற்கு முன்பு, முதல் நாலு அதிகரணங்களில் (நாலு ஸூத்திரங்களில்) சாரீரக சாஸ்திரம் ஆரம்பணீயம் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
        முதல் ஸூத்திரத்தில் ஸித்தபரமான உபநிஷத்வாக்யங்களுக்கு அர்த்தபோதகத்வம்  உண்டு என்கிற அர்த்தம் உபபாதிக்கப் பட்டது.  யவன் அவன்என்று அவனுடைய ப்ரஸித்தியைக் கூறிக் கொண்டு உயர்வற உயர் நலம் உடையவன் யவன் அவன் மயர்வற மதி நலம் அருளினன் யவன் மயர்வற மதிநலம் அருளினன் அவன் அயர்வறும் அமரர்கள் அதிபதி, யவன் அய‌ர்வறும் அமரர்கள் அதிபதி, அவன் துய‌ர‌று சுட‌ர‌டி தொழுதுஎழு  என்ம‌னனேஎன்று ஸித்தபரங்களான உபநிஷத்து வாக்யங்களுக்கு அர்த்த போதகத்வத்தை வெளியிட்டருளினார்.. ஜன்மாத்யதிகரத்தில் நிரூபிக்கப்பட்ட ஜகத் ஸ்ருஷ்ட்யாதிகளுக்கு உபயுக்தமான ஸர்வஜ்ஞத் வாதி கல்யாண குணங்களையுடையன் என்பது உயர்வற உயர் லமுடையவன் என்னப்பட்டது. உயர்வற உயர்நலம் உடையன் என்பதினால் வெளியாகும் இந்த ஏற்றத்தை சாஸ்திரம் கொண்டே தெளியவேண்டும் என்றேற்படுகிறபடியினால் சாஸ்த்ரயோநித்வாதி கரணார்த்த க்ரமம் கூறப்பட்டது. "மயர்வற மதிநலம் அருளினன்  என்று அவனைப் பற்றிய ஜ்ஞானம் புருஷார்த்தம் இவற்றை அளித்தவன் என்பதினால் ஸமந்வயாதிகரணார்த்த க்ரமம் நிரூபிக்கப்பட்டது.
ஸ்ரஷ்டா - பகவான் ஜகத்தை ஸ்ருஷ்டிப்பவன் என்றதினால் அப்படிச் செய்வதற்கு யோக்யதையில்லாத சேதனா சேதனங்களை விட அவன் வேறுபட்டவன் என்பது ஸூசிதம் என்று ஈக்ஷத்யாதி கரணம், ஆகாசாதிகரணம், ப்ராணாதிகரணம் ஜ்யோதிரதிகரணம் என்கிற அதிகரணங்களில் நிரூபிக்கப்பட்ட அசேதனங்களைவிட வேறுபட்டவன்என்பது  இங்கு பொறி உணர்வு அவையிலன்என்னப்பட்டது. ஆநந்த மயாதிகரணம் முதவியவைகளில் உபபாதிக்கப்பட்ட சேதனங்களை விட வேறுபட்டவன் என்பது, ‘மனனுணர் அளவிலன்என்னப்பட்டது.
இரண்டாவது பாதத்தில் கூறப்பட்ட பகவான் எல்லா வஸ்துக்களையும் தனக்குச் சரீரமாகவுடையவன் என்பது தேஹீ" என்னப் பட்டது. இது இலனது உடையன் இது என நினைவரியவன் நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன் புலனொடு புலனலன்; என்று மூன்றாம் பாட்டில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

ஸ்வநிஷ்ட:’ என்று மூன்றாம் பாதத்திலும், நிரவதிமஹிமா  என்று நான்காம் பாதத்திலும் உபபாதிக்கப்பட்ட க்ரமத்தை அந்நலனுடை ஒருவனைஎன்கிற பாட்டில் காணலாம்.

செவ்வாய், 8 ஆகஸ்ட், 2017

ந‌ம்மாழ்வார் வைப‌வ‌ம்‌‌

आदौ शारीरकार्थक्रममिह विशदं विंशतिर्वक्ति साग्रा
संक्षेपोऽसौ विभागं प्रतयति च ऋचां चारुपाठोपपन्नम् |
सम्यग्गीतानुबद्धं सकलमनुगतं सामशाखासहस्रं
संलक्ष्यं सामिधेयै: यजुरपि दशकै: भात्यथर्वा रसैश्च ||


ஆதௌ ஶாரீரகார்தக்ரமமிஹ விஶதம் விம்ஶதிர்வக்தி ஸாக்ரா
       
ஸங்க்ஷேபோsஸௌ விபாம் ப்ரதயதி ரு̆சாம் சாருபாடோபபந்நம் |
ஸம்யக்கீதாநுபத்ம் ஸகலமநுகதம் ஸாமஶாகாஸஹஸ்ரம்
       
ஸம்லக்ஷ்யம் ஸாமிதேயை: யஜுரபி ஶகை: பாத்யதர்வா ரஸைஶ்ச ||

இத்திருவாய்மொழியில் நுனியுட‌ன்கூடிய‌ முத‌ல் இருப‌து பாசுர‌ங் க‌ளும், அதாவ‌து ப‌த்தாம் ப‌த்தில் “சார்வே த‌வ‌நெறி” என்றார‌ம் பிக்கும் திருவாய்மொழி தொட‌க்க‌மாக‌ ஏழு திருவாய்மொழி க‌ளும் முத‌ல் இருப‌து பாசுர‌ங்க‌ளும் சாரீர‌கார்த்த‌ க்ர‌ம‌த்தைத் தெளிவாகக் கூறுகின்ற‌ன‌. அதாவ‌து நான்கு அத்யாய‌ங்க‌ளாய்ப் ப‌தினாறு பாத‌ங்க‌ளாய்ப் பிரிக்க‌ப்ப‌ட்டிருக்கும் சாரீர‌க‌ சாஸ்திர‌த் தில் தத்துவ‌ ஹித‌ புருஷார்த்த‌ங்க‌ள் எந்த‌ க்ர‌ம‌த்தில் நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வோ, அதே க்ர‌ம‌த்தில் இங்கும் இந்த‌ தொண்ணூறு பாசுர‌ங்க‌ளும் ப்ர‌திபாதியா நிற்கும் என்ற‌ப‌டி.
ஆதெள‌. சாரீரகார்த்த க்ரமம் இஹ‌ விசதம் விம்சதி: வக்தி ஸாக்ரா
தத்துவ ஹித புருஷார்த்தம் எனப்படுகிற பரப்ரஹ்ம ஸ்வரூபாதி கள், அதை அடைவதற்கு உபாயம் அந்த ப்ரஹ்மத்தை அனுபவிப்பதாகிற பலன், இவ்வனைத்தையும் வ்யாஸ மஹர்ஷி 345 ஸூத்திரங்களில் நிரூபித்திருக்கிறார். வேதங்களுக்கு அடுத்த படியான ப்ரமாண‌மாக இஸ்ஸூத்திரங்கள் கருதப்படுகின்றன, ஹிந்து மதத்தைப் பரவச் செய்ய முன்வந்தவர்க‌ள் இந்த ஸூத்திரங்களுக்கு விஸ்தரமான வ்யாக்யானம் செய்திருக்கிறார் கள். நம்முடைய மதமாகிய விசிஷ்டாத்வைத ஸித்தாந்த ப்ரவர்த்தகராகிய எம்பெருமானாரும் ஸ்ரீபாஷ்யம் என்னும் க்ரந்தத்தில் இவற்றின் அர்த்தத்தை விவரித்துள்ளார். அதன் அவதாரிகா வாக்யத்திலிருந்து இந்த ஸூத்திரங்களுக்கு போதாயனர் மிகவும் பெரியதான வ்ருத்தி க்ரந்தம் என்னும் ஒரு வ்யாக்யானம் செய்திருப்பதாயும், (டங்க த்ரமிட குஹதேவ ப்ரப்ருதிகளான)  பூர்வாசார்யர்கள் சுருக்கமாக வ்யாக்யானமிட் டிருப்பதாயும், அவற்றைத் தழுவி ஸூத்திரங்களின் அக்ஷரங் களுக்கு அர்த்தம் தாம் எழுதியதாயும் எற்படுகிறது.
இந்த ஸ்ரீபாஷ்யத்தில் ஸூத்திரங்கள் பல அதிகரணங்களாக‌வும், பதினாறு பாதங்களாகவும் நாலு அத்யாயங்களாகவும் பிரிக்கப் பட்டிருக்கின்றன, அதிகரணங்கள் 158. ஒவ்வொரு பாதத்திலும் முறையே உள்ள அதிகரணங்கள் 11, 6, 10, 8-10, 8, 7, 8-6, 8, 28, 15- 11, 11, 5, 6 எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது. (அதிகர‌ண‌ ஸாராவளி - 16). இந்தப் பதினாறுபாதங்களுள் ஒவ்வொன்றிலும் ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கும் அம்சத்தை ஸ்ங்க்ரஹித்து ஒரு சுலோகம் ஆசார்ய ஸார்வ பெளமனால் ஸ்ரீஅதிகரண ஸாராவளி யில் அருளிச்செய்யப்பட்டிருக்கிறது. அது பின்வ‌ருமாறு:-
स्रष्टा देही स्वनिष्ठे निरवधिमहिमापास्तवाधः श्रिताप्तः
खात्मादेरिन्द्रियादेरुचितजननकृत् संसृतौ तन्त्रवाही ।

निर्दोषत्वादिरम्यो बहुभजनपदं खार्हकर्मप्रसाद्यः
पापच्छिद्रह्मनाडीगतिकृदतिवहन् साम्यदइचात्र वेद्यः ।

(1) பகவானே சேதனா சேதனங்களின் ஸ்ருஷ்டி கர்த்தா (2) இவைகளைச் சரீரமாக உடையவன், (3) த‌ன‌க்கு வேறு ஆதாரம் இல்லாதவன், (4) எல்லையில்லாத மஹிமையையுடையவன், (5)இதற்கு ஒருவிதமான விரோதமும் சொல்லும் ப்ரமாண‌ங்கள் இல்லாதவன் (8) தன்னை அடைந்தவர்களுக்குத் தான் ஆப்தன், (7) ஆகாசம் ஜீவாத்மா இவைகளை அததற்குத் தக்கபடி ஸ்ருஷ்டி செய்பவன், (3) அப்படியே இந்திரியங்களை ஸ்ருஷ்டி செய்பவன், (9) ஸம்ஸாரத்தை நடத்துகிறவன், (10) தான் ஒருவித தோஷத்தினாலும் தொட‌ப்ப‌டாதவனாகையினால் போக்யமானவன், (11) அனேக விதமான பக்தியோகங்களுக்கு விஷயமாயிருப்பவன், {12} பக்தர் களினால் அவரவர்களுக்குத் தகுந்ததான வர்ணாச்ரம தர்மங் களினால் ப்ரீதியுடையவனாகச் செய்யப்படக் கூடியவன், (13} ஸர்வ பாபங்களையும் போக்கடிப்பவன், {14) ப்ரஹ்ம நாடி வழியாக நிர்யாண‌த்தைச் செய்துவைப்பவன், (15) ப‌ல‌வித‌ங்க‌ளான‌ ஸத்காரங்கள் செய்யப்படும் அர்ச்சிராதி மார்க்கத்தினால் மோக்ஷ‌த் திற்கு அழைத்துக் கொண்டு போகுமவன், (16) தன்னுடைய ஸாம்ய‌த்தைக் கொடுப்பவன், என்கிற அம்சங்கள் முறையே ப்ரதிபாதிக்கப் பட்டிருக்கின்றன. இதைத்தான் சாரீரகார்த்த க்ரமம் என்கிறது. சரீரத்தையுடையவன் சாரீரன், சேதனாசேதனங்களைத் தன‌க்கு சரீரமாகவுடையவன் ப‌கவனாகையினால் அவன் சாரீரன் என்னப்படுகிறான். அவனைப் பற்றிய சாஸ்திரம் சாரீரகம் என்றும், இந்த அர்த்தத்தை நிரூபிக்கும் க்ரமம் சாரீர‌கார்த்த‌ க்ரமம் என்றும் கூறப்படுகிறது.






ஞாயிறு, 6 ஆகஸ்ட், 2017

நம்மாழ்வார் வைபவம்

पाञ्चालीगात्रशोभाहृतहृदयवधूवर्गपुंमावनित्या

पत्यौ पद्मासहाये प्रणयिनि भजत: प्रयसीपारतन्त्र्यम् |

भक्ति: शृङ्गारवृत्त्या परिणमति मुनेर्भावबन्धप्रथिम्ना

योगात् प्रागुत्तरावस्थितिरिह विरहो देशिकास्तत्र दूता: ||

பாஞ்சாலீகா₃த்ரஶோபா₄ஹ்ரு̆தஹ்ரு̆த₃யவதூ₄வர்க₃பும்மாவநித்யா

பத்யௌ பத்₃மாஸஹாயே ப்ரணயிநி ப₄ஜத: ப்ரயஸீபாரதந்த்ர்யம் |

ப₄க்தி: ஶ்ரு̆ங்கா₃ரவ்ரு̆த்த்யா பரிணமதி முநேர்பா₄வப₃ந்த₄ப்ரதி₂ம்நா

யோகா₃த் ப்ராகு₃த்தராவஸ்தி₂திரிஹ விரஹோ தே₃ஶிகாஸ்தத்ர தூ₃தா: ||


பாஞ்சாலியின் அவ‌ய‌த்தின் அழ‌கைக் க‌ண்டு, அத்தால் அப‌ஹ‌ரிக்க‌ப்ப‌ட்ட‌ ம‌ன‌த்தையுடைய‌ ஸ்திரீக‌ள் அந்த‌ அழ‌கைத் தாங்க‌ள் புருஷ‌ர்க‌ளாயிருந்து அனுப‌விக்க‌ வேண்டும் என்கிற‌ ஆசையின் மிகுதியினால் த‌ங்க‌ளைப் புருஷ‌ர்க‌ளாக‌வே பாவித்துக்கொண்டாற் போலே ச்ரிய‌:ப‌தியான‌ ப‌க‌வான் இட‌த்தில் ஸ்திரீக‌ளைப் போல‌வே பார‌த‌ந்த்ர்ய‌த்தை வ‌ஹித்த‌ ஆழ்வாருக்கு உண்டான‌ ப‌க்தியான‌து ச்ருங்கார‌மாக‌ப் ப‌ரிண‌மியா நின்ற‌து. இப்ப‌டி உண்டான‌ ஆசை பாஹ்ய‌ ஸ‌ம்ச்லேஷ‌ம் கிடைக்க‌வேண்டும் என்று வ்ருத்தி அடைந்து அது கைகூடாமையாலே விர‌ஹ‌த‌சை உண்டாயிற்று. இத்த‌சையில் எம்பெருமானைக் கிட்டுமாறு செய்வ‌த‌ற்கு ஆசார்ய‌ர்க‌ள் தூத‌ர்க‌ளாய் ப்ரார்த்திக்க‌ப் ப‌டுகிறார்க‌ள். இதுதான் திருவாய்மொழியில் ப்ர‌திபாதிக்க‌ப்ப‌ட்டிருக்கும் தூத‌ப்ரேஷ‌ணாதிக‌ளுக்கு உட்பொருள் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்று. “பாஞ்சாலியிட‌த்தில் உண்டான‌ காத‌லை நிரூபித்த‌ ம‌ஹ‌ரிஷியின் வ‌ர்ண‌ன‌ம் மிக‌வும் க்ராம்ய‌மாயிரா நின்ற‌து. ஆசார்ய‌னோ அதை மிக‌வும் அழ‌காய் இங்கு ஸ‌ங்க்ர‌ஹித்திருப்ப‌தைப் பாரும்” என்று அஸ்ம‌த் ஸ்வாமி ஓர் உருவிலே ஈடுப‌டும்ப‌டியாய் இருந்தது.

ஆகிலும் வேத‌ங்க‌ள் போலே ஸ‌ம்ஸ்க்ருதத்தில் இல்லாமையினால் பாஷையினால் தாழ்ச்சி ஏற்ப‌டாதோ? கான‌ப்ர‌தான‌மாயிருப்ப‌தினால் நிஷேதிக்க‌ப்ப‌ட்ட‌தாயிற்றே? வேத‌ங்க‌ளைப் போல‌த் தத்வார்த்த‌ங்க‌ளைத் தெரிவிக்கும் ஏற்ற‌ம் இத‌ற்கு உண்டோ? என்கிற‌ ச‌ங்கைக‌ளைப் ப‌ரிஹ‌ரித்த‌ருளுகிறார்.

भाषागीति: प्रशस्ता भगवति वचनात् राजवच्चोपचारात्
सा जगस्त्यप्रसूतात्विह परिजगृहे भूमिकाभेदयोग्या |
यत्तत्कृत्यं श्रुतीनां मुनिगणविहितै: सेतिहासै: पुराणै:
तत्रासौ सत्त्वसीम्न: शठमथनमुने: संहिता सार्वभौमी ||

பா₄ஷாகீ₃தி: ப்ரஶஸ்தா ப₄க₃வதி வசநாத் ராஜவச்சோபசாராத்
ஸா ஜக₃ஸ்த்யப்ரஸூதாத்விஹ பரிஜக்₃ரு̆ஹே பூ₄மிகாபே₄த₃யோக்₃யா |
யத்தத்க்ரு̆த்யம் ஶ்ருதீநாம் முநிக₃ணவிஹிதை: ஸேதிஹாஸை: புராணை:
தத்ராஸௌ ஸத்த்வஸீம்ந: ஶட₂மத₂நமுநே: ஸம்ஹிதா ஸார்வபௌ₄மீ ||

பாஷா கீதி: ப்ரசஸ்தா

பாஷையும் ப்ரசஸ்தம், கீதியும் ப்ரசஸ்தம், பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பாஷா ப்ரசஸ்தா

ஸம்ஸ்க்ருதம் எப்படி ருத்திரனுடைய உடுக்கின் சப்தத்திலிருந்து உண்டாகி, பாணிணியினால் வ்யாகரணம் செய்யப்பட்ட ஏற்றம் பெற்றபடியினால் ஸுஷ்டுவான பாஷை என்கிற பிரஸித்தி பெற்றதோ, அதைப்போலவே, தமிழ் பாஷையும் அதே ருத்திரனுடைய உடுக்கிஃ சப்தத்தில் இருந்து உண்டாகி அகஸ்த்ய மஹர்ஷியினால் இலக்கணம் இயக்கம் பட்டிருப்பதினால் ஸுஷ்டு பாஷையாயிருக்கும்.

கீதி: ப்ரசஸ்த:

ஸாமாந்ய கானத்தையும் அதை அப்யஸிக்கிறவர்களையுமிறே சாஸ்திரங்கள் நிஷேதிக்கின்றன. ஸாம வேதம் முழுமையும் கான ப்ரதானமாயிற்றே. பகவத் விஷயமா கானம் ஆசாஸ்த்ரீயமன்று. மாத்ஸ்ய புராணத்தில் பகவத்விஷய கானம் பாடியவரைத் தண்டித்த அரசன் யமலோகம் கொட்னுபோகப்பட்ட வ்ருத்தாந்தம் சொல்லப் பட்டிருக்கிறது. அப்படியே வராக புராணத்தில் கைசீகாதசி மாஹாத்ம்யத்தில் நம்பாடுவான் விருத்தாந்தத்தில் பகவத்கானத்தின் பெருமை சொல்லப் பட்டிருக்கின்றது. எப்பொழுதும் வீணாகானம் செய்துகொண்டிருக்கும் நாரத மஹர்ஷி பாகவதோத்தமர் என்று கொண்டாடப் படுகிறாரல்லவோ! ஆகையினால் பகவத்கானம் நிஷித்தமன்று, ப்ரசஸ்தமே என்றபடி.

பாஷாகீதி: ப்ரசஸ்தா

த்ராமிட ப்ரஹ்மோபநிஷத்திலும், ப்ருஹத் ப்ரஹ்ம ஸம்ஹிதையிலும், பராசர ஸம்ஹிதையிலும், பவிஷ்யத் புராணம் முதலியவைகளிலும் திவ்யப்ரபந்த பாராயணம் பகவத் ஸந்நிதியில் செய்யப்படவேண்டும் என்பதோடு அதற்கு இடம் காலம் எல்லாம் விஸ்தாரமாக நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் பாஷா கீதியும் ப்ரசஸ்தம்.

பகவதி வசநாத்

பகவானிடத்தில் பாஷாகீதி செய்வது ப்ரமாணங்களில் விதிக்கப்பட்டது என்றபடி.

ராஜவச்சோபசாராத்

இது லௌகிக யுக்தி. ராஜாக்களைப் பலர் பல பாஷைகளாலே ஸ்தோத்ரம் செய்கிறாப் போலே ராஜாதிராஜனான பகவானைப் பல பாஷைகளில் ஸ்தோத்ரம் செய்வது உசிதமே என்றபடி.

ஸாச அகஸ்த்ய ப்ரஸூதாது

தமிழ்ப்பாஷையும் அகஸ்த்ய மஹர்ஷியினால் இயற்றப்பட்ட பேரகத்தியம் என்கிற இலக்கணத்தையுடையதாகையாலும்,

ஆனாலும் மஹர்ஷியினால் வ்யாகரணம் செய்யப்படாத மற்ற பாஷைகள் அபப்ரம்சங்க ளாகையினால் அவைகளைக்கொண்டு பகவானை ஸ்தோத்ரிப்பது உசிதமன்று என்பது கருத்து.

இஹ‌ ப‌ரிஜ‌க்ருஹே பூமிகாபேத‌யோக்யா

இந்த‌க் கார‌ண‌ங்க‌ளைக் கொண்டு ந‌ம் பூர்வ‌ர்க‌ள் இந்த‌ ப்ர‌ப‌ன்ன‌ வேஷ‌த்திற்கு இவைக‌ள் மிக‌வும் உசித‌ம் என்று இவ‌ற்றை அங்கீக‌ரித்திருக்கிறார்க‌ள் என்று ஆசார்ய‌ர்க‌ளின் அப்யுப‌க‌மும் காட்ட‌ப்ப‌ட்ட‌து.

ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம் இத்யாதி

உத்த‌ரார்த்தத்தில் முனிக‌ண‌ங்க‌ளினால் வ‌குக்க‌ப்ப‌ட்ட‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ளுட‌ன் சேர்ந்த‌ வேத‌ங்க‌ள் எந்தெந்த‌ கார்ய‌ங்க‌ளைச் செய்வ‌த‌ற்காக‌ ஏற்ப‌ட்ட‌வைக‌ளோ, அவ‌ற்றை எல்லாம் ஆழ்வாருடைய‌ ஸார்வ‌பௌமியான‌ ச்ருதியாகிற‌ உப‌நிஷ‌த்துச் செய்யாநிற்கும் என்று ஆழ்வாரின் ப்ர‌ப‌ந்தத்தின் வைல‌க்ஷ‌ண்ய‌ம் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாயிற்று. அங்கு ச்ருதிக‌ளின் க‌ருத்தை அறிய‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளான‌ இதிஹாஸ‌ புராண‌ங்க‌ள் தேவையாயிருந்த‌ன‌. இங்கு ஆழ்வார் ஸ்ரீஸூக்தியோ அப்ப‌டிப்ப‌ட்ட‌ உபப்ரும்ஹ‌ண‌ங்க‌ளை எதிர்பாராம‌லே அவ்வ‌ர்த்த‌ங்க‌ளை ச‌ந்தேக‌ம‌ற‌ நிரூபிக்கின்ற‌ன‌ என்கிற‌ விசேஷ‌மும் சொல்ல‌ப்ப‌ட்ட‌தாகிற‌து.

இங்கு ச்ருதிக‌ளும் சேர்த்துக் கூற‌ப்ப‌ட்டிருப்ப‌தினாலும், “ஸார்வ‌பௌமீ ஸ‌ம்ஹிதா” என்று ஆழ்வாருடைய‌ ப்ர‌ப‌ந்தத்தூ நிர்தேசித்தருளியிருப்ப‌தினாலும் திருவாய்மொழி ஒரு உபப்ரும்ஹ‌ண‌ம‌ன்று, வேத‌ங்க‌ளைப் போல‌வே துல்ய‌மான‌ ப்ர‌மாண‌ம் என்ற‌தாயிற்று.

இந்த‌ ஏற்ற‌த்தையே வேதாந்தாசார்ய‌ரான‌ ஸ்வாமியும், “மாசில் ம‌ன‌ம் தெளி முனிவ‌ர் வ‌குத்ததெல்லாம் ந‌ம் மாலுக‌ந்த‌ ஆசிரிய‌ர் வார்த்தைக்கொவ்வா” என்று உத்கோஷித்துள்ளார்.

ஆகிலும் வேத‌ங்க‌ள் ருக், ய‌ஜுஸ், ஸாம‌, அத‌ர்வ‌ என்று நாலு பாக‌ங்க‌ளாக‌ப் பிரிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அவ‌ற்றின் அர்த்த‌ங்க‌ள் ப்ர‌ஹ்ம‌ ஸூத்திர‌ங்க‌ளில் 4 அத்யாய‌ம் 16 பாத‌ங்க‌ளில் விஸ்தார‌மாக‌ நிரூபிக்க‌ப் ப‌ட்டிருக்கின்ற‌ன‌வே? அந்த‌ ஏற்ற‌ம் இப்பிர‌ப‌ந்தத்திற்கு எங்ங‌னே உண்டாகும் ? என்கிற‌ ஆக்ஷேப‌த்திற்கு ஸ‌மாதான‌ம் அருளிச் செய்துகொண்டு, கீழ் சுலோக‌த்தில் “ய‌த்தத் க்ருத்ய‌ம் ச்ருதீநாம்” இத்யாதியாக‌ அருளிச் செய்ததை, அதாவ‌து இதிஐஆஸ‌ புராணாதிக‌ளுட‌ன் கூடிய‌ ச்ருதிக‌ள் எந்த‌க் கார்ய‌த்தைச் செய்கின்ற‌ன‌வோ – எந்தெந்த‌ அர்த்த‌ங்க‌ளை ப்ர‌திபாதிக்கின்ற‌ன‌வோ – அவைக‌ளெல்லாம் திருவாய்மொழியிலும் இருக்கின்ற‌ன‌ என்ப‌தையும் உபபாதித்த‌ருளுகிறார் – “ஆதௌ சாரீர‌கார்த்த‌ க்ர‌மம்” என்றார‌ம்பித்து.