சனி, 25 ஜூன், 2011

எச்சரிக்கை!

இன்று திருப்புல்லாணிக்கு வந்திருக்கிறேன். எப்படா இவன் வருவான் என்று காத்திருந்தாற் போல நண்பர் (இவரைப் பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். எப்போது எப்படி இவரிடம் மாட்டிக் கொள்வேன் என்பது இன்று வரை அடியேனுக்குத் தெரியாத ஒன்று) காலங்கார்த்தாலேயே வந்து விட்டார். வந்ததும் வராததுமாக கேள்விகளை வீச ஆரம்பித்தார். இந்த ப்ளாகை மற்றவர்கள் படிக்க வேண்டும் என்று நினைக்கிறாயா? சேட்லூர் ஸ்வாமியின் நூல்கள் கிடைக்க வில்லை அதை நீ எழுதுவது சந்தோஷம்தான். ஆனால் அதை அப்படியே தருவது சரிதானா? க்ரந்தம் எத்தனை பேரால் படிக்க முடியும்? அதிலும் நீயே எழுதியதைப் போல, விண்டோஸ் 7 இருந்தால், அதிலும் அந்த ஃபாண்ட் இருந்தால் மட்டுமே படிக்க முடியும் என்றால், ஒத்தை விரலை வைத்துக் கொண்டு மாங்கு மாங்கென்று டைப் அடித்து வலையில் இடுவதில் என்ன பயன்? இல்லை உனக்கு க்ரந்தம் அடிக்கத் தெரிகிறது என்று உலகுக்கு தம்பட்டம் அடிப்பதுதான் உன் நோக்கமா? என்று திணற அடித்து விட்டார். குழம்பிப் போனேன். சற்று நேரம் கழித்து கோயமுத்தூர் ஸ்வாமியும் க்ரந்தம் படிப்பவர்களே அனேகமாக இல்லை என்று கருத்துச் சொன்னார்.  யோசித்துப் பார்த்த பின் யதார்த்தம் புரிந்தது. எனவே இனி தொடரப் போகும் சேட்லூர் ஸ்வாமி வ்யாக்யானங்களில் க்ரந்தம் இருக்காது. அன்பர் வினோத் துணையுடன் க்ரந்த வாசகங்கள் தமிழில் இருக்கும். இன்று முதல் "திருமந்திரச் சுருக்கு" ஆரம்பமாகிறது. அதை  சதம் அடிக்கப் போகும் நமது  ஸ்ரீரங்கம் ஸ்ரீதரன் ஸ்வாமி அடியேனுக்குப் புரிகிற மாதிரி எளிமையாய் வழங்குவார் என்ற நம்பிக்கை உண்டு.


||ஸ்ரீ:||
சீரார்  தூப்புல் திருவேங்கடமுடையான் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமந் நிகமாந்த மஹா தேசிகனருளிச் செய்த
திருமந்திரச்சுருக்கு

நாவலர் மறைநாலொன்று நலந்திகழ் மறையொன்றோராத்
தாவலைப் பலைக்கு மோகத் தழுந்திநின்றல மருகின்றீர்
தூவலம்புரியாமொன்றிற் றுலக்கமா மணிவண்ண மொன்றால்
காவலென்றகரத் தகவாய் கருத்துறக் காண்மினீரே.                      …1.
ஸ்ரீ:
ஸ்ரீமதே ஸ்ரீநிவாஸ ராமாநுஜ மஹா தேசிகாய நம:
திருவஹீந்திரபுரம் சேட்லூர் வித்வான் பகவத் விஷயம்
ஸ்ரீ உப. வே. பண்டித பூஷணம்
நரஸிம்மாசார்ய ஸ்வாமியின்
வ்யாக்யானம்.
ஸ்ரீமத் ரஹஸ்ய பதவி முதலாக ஸ்ரீமத் ரஹஸ்ய த்ரய ஸாரம் வரையிலான க்ரந்தங்களினால்  அந்தந்த அதிகாரிகளுக்குத் தக்கபடி ஸங்க்ரஹ விஸ்தார ரூபங்களாகத் தாமருளிச் செய்த அர்த்த விசேஷங்களை யெல்லாம் ஸுகமாக அனுஸந்தானத்துக்கு யோக்யமாம்படி தமிழ் ப்ரபந்த ரூபமாக அருளிச் செய்யக்கோலி முதலில் திருமந்த்ரார்த்த்த்தை ஸங்க்ரஹிக்க உபக்ரமித்து அதில் அகரார்த்தத்தை அருளிச் செய்கிறார். --- நாவலர்  இத்யாதியால்

[ ப – ரை]  நா – நாக்கில், அலர் – வ்ருத்தியடைகிற, மறை – வேதங்கள், நாலு – நான்கும், ஒன்றும் – ஒன்று சேர்ந்திருக்கையாகிய, நலம் – நன்மையினால், திகழ் – ப்ரகாசிக்கிற, ஒன்று – அத்விதீயமான, மறை—வேதத்தை, ப்ரணவமாகிற வேதத்தை என்றபடி, ஓரா – ஸார்த்தமாக விசாரியாமல், தாவலைப்பு – தாவு – ஸ்தானங்களில், அலைப்பு – அலைதலால், அலைக்கும் – ச்ரமத்தைக் கொடுக்கும், மோகத்து – ஆத்ம ஸ்வரூபத்தைப் பற்றிய அஜ்ஞானத்தில், அழுந்தி நின்று – முழுகினவர்களாக இருந்து, அலமருகின்றீர் – ஆயாஸத்தை அடைகிற சேதனர்காள்! தூ – பரிசுத்தமான, வெண்மை நிறமான என்றாகவுராம், வலம்புரியாம் – வலம்புரி சங்கம் போலிருக்கிற, ஒன்றில் – ஒரு ப்ரணவத்தில், துலக்க – ப்ரகாசம் செய்யப்பட்ட அல்லது ப்ரகாசமாக என்றாகவுமாம், மா – பெரிய , மணி – நீல ரத்னம் போன்ற, வண்ணம் – வர்ணத்தையுடைய, ஒன்றால் – ஒரு வஸ்துவினால், விஷ்ணுவினால் என்றபடி, காவலென்று – ரக்ஷணம் என்று மற்ற வஸ்துக்களுக்கு என்று சேர்த்துக் கொள்ளவும், அகரத்து – அகாரத்தினுடைய, அகவாய் – தாத்பர்யார்த்தத்தை, கருத்துற – உங்கள் மனதில் நன்றாக உறைக்கும்படி, காண்மினீர் –அறியுங்கோள். “துவக்கவண்ண மொன்றால்  என்று பாடாந்தரம், அப்பொழுது துவக்கமாம் – ஜகத்காரணமாகிய, வண்ணமொன்றால் –ஸ்வபாவத்தையுடைய ஒரு வஸ்துவினால் என்றர்த்தம்.
[தா – ம்] நாவலர் இத்யாதி – ஆத்யந்துத்ரயக்ஷரம்ʼ ப்³ரஹ்ம த்ரயீயத்ர ப்ரதிஷ்டிதா| ஸகு³ஹ்யோந்ய: த்ரிவ்ருʼத்வேத³: யஸ்தம்ʼவேத³ ஸ வேதவித்|| என்றும், மஹதோ வேத³ வ்ருக்ஷஸ்ய மூலபூதோ மஹாயம்ʼ என்றும், ஸர்வ வேதங்களின் ஸாராம்ஸங்களின் சேர்க்கையாகவன்றோ ப்ரணவத்தைச் சொல்லுகிறது1 மேலும், யத³ந்தஸ்த² மஸே²ஷேண வாங்மயம்ʼ  வேத³வைதி³கம்ʼ என்றும் இவர்தாமே அருளிச் செய்திருப்பது இங்கனுஸந்தேயம். ஸர்வமஷ்டாக்ஷராந்தஸ்த²ம்ʼ, ப்ரணவேநைவஸர்வவாக் ஸந்த்ரண்ணாபவதி என்றிவை முதலியவைகளில் சொல்லுகிறபடியே ஸர்வசப்தங்களும், அவற்றின் அர்த்தங்களும் இந்த ப்ரணவத்துக்குள் அடங்கியன்றோ இருப்பது. கி³ராமஸ்ம்யேக மக்ஷரம்ʼ என்று பகவான் தானும்  ஸ்ரீகீதையில் அருளிச் செய்தார். ஸ்ரீபாஷ்யகாரரும் அர்தா²பிதாயினஸ்²²ப்³தா³: கி³ர: தாஸா மேக மக்ஷரம்ʼ ப்ரணவோஹ மஸ்மி என்று விவரித்தருளினார். இப்படிப்பட்ட மஹிமையுடன் கூடியதும், வேதம் என்றும் சொல்லப் பட்டதும், இந்த ப்ரணவமே என்று தெரிவிப்பதற்காக மறை ஒன்று என்று அருளிச் செய்யப் பட்டிருக்கிறது. ஓரா – அர்த்த பர்யந்தம் விசாரியாமல். யஸ்தம்ʼவேத³ ஸ வேத³வித் என்கிறபடியே தன்னை அறியவே ஸர்வார்த்தங்களையும் அறிந்து தரவற்றாய் என்று ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரத்தில் அருளிச் செய்யப் பட்டதிறே. தாவலைப்பு இத்யாதி – அநேகஜன்ம ஸாஹஸ் ரீம்ʼ ஸம்ʼஸாரபத³வீம்ʼ வ்ரஜந் ‌‌மோஹஸ்²ரமம்ʼ ப்ரயாதோஸௌ வாஸநா ரேணுகுண்டி²த: என்பதின் அர்த்தம் இத்தால் அருளிச் செய்யப் பட்டதாகிறது. அதாவது அனேகமாயிரம் ஜன்மங்களின் பரம்பரைகளில் ஓடி இளைப்பையும் அஜ்ஞானத்தையும் அடைந்து அந்தக் கர்ம வாஸனையாகிற அழுக்கினால் பூசப்பட்டவனாகிறான் என்று சொல்லி இருப்பது இங்கு அனுஸந்திக்கப் பட்டதாகிறது. இத்தால் ப்ரணவத்தில் சொல்லப் படுகிற ச்ரிய:பதியே ஸர்வரக்ஷகன் என்கிற ஜ்ஞானமில்லாமையினால் தேவதாந்தரங்களை ரக்ஷகராக நினைத்து வ்யர்த்தமான ச்ரமத்தை அடைந்து நிற்கும் சேதனர்காள் என்றதாயிற்று. ஓடியோடிப் பலபிறப்பும் பிறந்து மற்றோர் தெய்வம் பாடியாடிப் பணிந்து பல்படிகால் வழியேறக் கண்டீர் கூடி வானவரேத்த நின்ற திருக்குருகூரதனுள் ஆடுபுட்கொடி ஆதிமூர்த்திக்கு அடிமை புகுவதுமே என்ற பாட்டில் அருளிச் செய்யப்பட்ட அர்த்தமும் இங்கு ஸங்கரஹிக்கப் பட்டதாயிற்று. இத்தால் ப்ரணவார்த்த ஜ்ஞானத்தின் ப்ரயோஜனம் ரக்ஷகாந்தரர்களை ஆச்ரயிப்பதினால் உண்டாகும் அதிகமான ச்ரமத்தின் நிவ்ருத்தி என்று நிஷ்கர்ஷிக்கப் பட்டதாயிற்று. தாவலுப்பு என்று பாடாந்தரமாய், தாவு – தாவனம், ஓடுதல் என்றபடி, அதனால் உண்டான , அலுப்பு – நிர்வேதத்தினால் என்று யோஜிப்பாருமுண்டு. தூவலம்புரி இத்யாதி – இங்கு பரிசுத்தியாவது க்ஷேத்ரஜ்ஞஸ்யேஸ்²வர ஜ்ஞானாத் விஸு²த்³தி: பரமாமதா என்றும், நிஸ்²சிதே பரஸே²ஷத்வே ஸே²ஷம் ஸம்பரிபூர்யதே| நிஸ்²சிதே புனஸ்தஸ்மின்ன ந்யத்ஸர்வமஸத்ஸமம்ʼ|| என்றும், தேநசேத³ விவாத³ஸ்தே மாக³ங்கா³ம்ʼமாகுரூநுக³ம:; என்றும் சொல்லுகிறபடியே இதொன்றே ஸர்வ கர்மங்களுக்கும் பூர்த்தியைக் கொடுக்கக் கூடியதாயும், இதொன்றில்லாவிடில் மற்றெல்லாக் கர்மங்களும் அனுஷ்டிதங்களானாலும் நிஷ்பலமாம்படியான மஹிமை என்றபடி. வலம்புரி இத்யாதி – வலம்புரி சங்கம் போல் ஸந்நிவேசத்தை உடைய ரேகா விசேஷத்தினால் தெரிவிக்கப்படுகிற, அன்றிக்கே தாமஸாஹங்காரமாகையாலே சப்த தந்மாத்திரங்களுக்குக் காரணமா யிருக்கிறது பாஞ்சஜன்யம். அப்படியே ப்ரணவம் எல்லா சப்தங்களுக்கும் காரணமாய் அவைகளுக்குள் நிறைந்திருக்கிறது. இதைத் திருவுள்ளம் பற்றியே ப்ரணவ மஹிமத் பாஞ்சஜன்ய க்ரமேண என்று இவர் தாமும் அருளிச் செய்திருக்கிறார். துலக்க – ஸர்வ சேஷித்வேந ப்ரகாசம் செய்யப் பட்ட. அன்றிக்கே துலங்க என்பது வெல்லொத்தாய் துலக்க என்று கிடக்கிறதாகவுமாம். அப்பொழுது ஸம்சயாதிகள் ஒன்றுமில்லாமல் நிச்சயமாயிருக்கிற. துலங்குதல் – நிர்மலமாயிருத்தல். மாமணி இத்யாதிக்கு – மூலமாகிய ஒற்றையெழுத்தை மூன்று மாத்திரை உள்ளெழ வாங்கி வேலை வண்ணனை மேவுதிராகில் விண்ணகத்தினில் மேவலுமாமே என்று கல்ப ஸூத்ர வ்யாக்யாதாக்களான பெரியாழ்வார் அருளிச் செய்தபடியே ஸர்வ வேதஸார பூதமான ப்ரணவத்தினால் சொல்லப் படுகிற தேவதா விசேஷத்தின் ரூபத்தை நிஷ்கர்ஷித்திருப்பதினால் அந்த ரூப விசேஷத்தையுடைய ச்ரிய:பதியே ப்ரதிபாத்யமாகிறனென்று திருவுள்ளம். துவக்கமாம் இத்யாதி பாடாந்தரத்தில் ஸமஸ்த ஸப்³³மூலத்வா த³காரஸ்ய ஸ்வபாவதம்ʼ ஸமஸ்த வாச்ய மூலத்வாத் ப்³ரஹ்மணோபிஸ்வபா³வத:: ||என்கிற வாமன புராண வசநத்தை அநுஸரித்து ஸர்வ வாசக ஜாத ப்ரக்ருதியான ப்ரணவத்துக்கு ஸர்வ வாச்ய ஜாத ப்ரக்ருதியான ச்ரிய:பதியே பொருளாக வேண்டும் என்கிற ஔசித்யம் ஸுசிப்பிக்கப் பட்டதாகிறது. துவக்கமாம் வண்ணம் என்று அகாரத்தை விலக்ஷித்து, அகாரவாச்யனான விஷ்ணுவினால் காவல் என்று அந்வயிப்பாருமுண்டு. அப்பொழுது அகாரத்துக்கு அர்த்தம் நிரூபிக்குமிடத்தில் அகார வாச்யத்தினால் காவல் என்று சொல்லும்படி வருகிறபடியினால் ஆத்மாச்ரய தோஷம் வருகிறது என்றும், அகாரத்தினால் ரக்ஷணமென்று அகாரத்தின் தாத்பர்யார்த்தத்தை என்றாகிறபடியினால் புனருக்தியும் வரும் என்றும் அறியத் தக்கது. காவல் – இது கவரக்ஷணே (அவ என்கிற தாது ரக்ஷணத்தைச் சொல்லுகிறது) என்கிற தாதுவின் மேல் ஏற்பட்டபதம் என்று திருவுள்ளம். இங்கு அவ என்ற தாதுவின் மேல் ஏற்பட்ட அகாரம் ரக்ஷகன் என்கிற பொருளை மாத்திரம் தெரிவிக்குமே ஒழிய விஷ்ணுவே ஸர்வ ரக்ஷகன் என்கிற அர்த்தத்தைத் தெரிவிக்குமோ என்னில் ? தெரிவிக்கும், எப்படி என்னில் :- ரூடிசக்தியினால் சொல்லப்படுகிற அர்த்தத்தையும் யோகசக்தியினால் சொல்லப்படுகிற அர்த்தத்தையும் ஒன்றாகக் காண்பிப்பது யோகரூடமான பதங்களின் ஸ்வபாவம். பங்கஜம் என்பதற்கு யோக சக்தியினால் சேற்றில் உண்டாகியது என்றர்த்தம். அது பாசி, கோரை முதலிய வஸ்துக்களையும் சொல்லும். அப்படி இருந்த போதிலும் தாமரையையே சொல்லுகிறதென்று ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. அதற்கு ரூடி சக்தியினால் தாமரைப்பூ பொருளானபடியினால் அந்தத் தாமரைப்பூ சேற்றில் முளைக்கிறது என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறதே ஒழிய சேற்றில் முளைக்கும் மற்றைய வஸ்துக்களைச் சொல்லுகிறதில்லை .அதாவது ரூடி சக்தியினால் ஏற்படுகிற தாமரைப்பூ என்கிற பொருளையும், யோக சக்தியினால் ஏற்படுகிற சேற்றில் முளைக்கிறதென்கிற பொருளையும் சேர்ந்த ஒரு வஸ்துவைக் காட்டுகிறது. அதைப்போல அநிஷே தேவுமான் விஷ்ணௌ அகாரோ விஷ்ணு வாசக: என்று சொல்லுகிறபடியே ரூடி சக்தியினால் சொல்லப் படுகிற விஷ்ணுவே யோக சக்தியினால் சொல்லப் படுகிற ரக்ஷகனாயிருப்பவனும் என்றேற்படுகிற படியினால் இவ்வர்த்தம் ஸித்திக்கிறது.
இப்படி அகாரார்த்தத்தை அருளிச் செய்து அதில் ஏறி லோபித்துக் கிடக்கும் சதுர்த்தீ விபக்தியின் அர்த்தத்தை அருளிச் செய்கிறார் – இளக்கமில் என்றாரம்பித்து.         

வியாழன், 23 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான டிப்பணி

 

கடந்த சில தினங்களாக ஸ்ரீ சேட்லூர் ஸ்வாமியின் ப்ரபந்தானுஸந்தான க்ரம வ்யாக்யானத்தையும், அதன் அனுபந்தமாக ஸ்ரீ வாத்ஸ்யாஹோபிலாசார்யாரது வாழித் திருநாம வ்யாக்யானத்தையும் இங்கு அந்நூலில் கண்டபடியே மணிப்ரவாளமாகவே எழுதிவந்தேன். Windows XP மற்றும் Windows 7 பயன்படுத்துபவர்கள் க்ரந்த லிபிக்கு நான் பயன்படுத்திய EgranTamil font இல்லாமையால் அந்த இடங்களிலெல்லாம் எழுத்துருக்களுக்கு பதிலாக கட்டங்கள் வந்தும், XP காரர்களுக்கு  தேசிகன் ‘ஶ’ (sha) தெரியாததால் கூடுதல் கஷ்டங்களும் ஏற்பட்டிருக்கும். அந்த நாளில் வந்தபடியே எழுத வேண்டுமா அல்லது இன்று க்ரந்தம் தெரியாதவர்களும் அதைப் படித்துப் புரிந்து கொள்ளும் வகையில் எழுத வேண்டுமா என்ற கேள்வி முதலில் என்னுள் எழுந்தது. ஒரு ஆசைக்கு அப்படியே எழுதுவோம் feedback அடிப்படையில் தொடர்வதை முடிவு செய்வோம் எனத் தீர்மானித்து மணிப்ரவாளத்தைத் தொடர்ந்தேன். மும்மூர்த்திகளாய் ஸ்ரீசடகோபன் ஐயங்கார் ஸ்வாமி, ஸ்ரீ முகுந்தன் ஸ்வாமி, ஸ்ரீ ஸுதர்சன ஸ்வாமி (கம்ப்யூட்டர் தோற்று விடும் வேகம்) திருத்தி உதவிட அது நிறைவேறிக் கொண்டிருக்கிறது. ஆச்சரியமாக , வழக்கமாக 20 அல்லது 30 பேரே படித்துக் கொண்டிருந்த இந்த வலைக்கு மணிப்ரவாளம் எழுத ஆரம்பித்த நாள் முதல் இன்றுவரை தினமும் சுமார் 800 பேர் வருவதாக என் statcounter சொல்கிறது. ஆகவே இதைத் தொடரலாம் என்றிருக்கிறேன்.

இதுவரை எழுதியதை சரியாகப் படிக்க முடியாதவர்களுக்காக டிப்பணி முழுவதும் பிடிஎப் ஆகப் படிக்க இங்கு

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் prabanthanusanthana kramam வாழித் திருநாமம் வ்யாக்யானம் PBS1

Natteri swamy's upanyasam on 20-6-2011

Get this widget | Track details | eSnips Social DNA

ப்ரபந்தானுஸந்தான டிப்பணி --5 (இறுதிப் பகுதி)


செங்கமலத்தயன் இத்யாதி  ---.,பார்  திகழ் பாத்திரபதத் திருவோணம் எனும் திருநன்னாளே என்றது  ভুৱনস্য মদ্ধ্যে என்று உபநிஷத்துச் சொல்லுகையால்  இப்பூமி  உள்ளளவும்  ப்ரஸித்தமாய் ப்ரகாஶித்துக் கொண்டிருக்கிற திருவேங்கட முடையானுடைய தீர்த்தோத்ஸவ  தினமான பாத்ரபதத் திருவோணம் என்கிற திருநன்னாளானது  என்றபடி. பாத்ரபதம்  என்று மங்களகரமாகையால் வெறுநன்னாளாகாதே திருநன்னாளாய்த்து. செங்கமலத்தயன் அன்னவரென்று புகழ்ந்து  மகிழ்ந்திடு நாள் என்றது.

সতত  সঙ্কুলশ্রীমত্ ব্রহ্ম কল্পৈ: মহাত্মভি: என்றும், திசைமுகனனையோர்  நாங்கை நன்னடுவுள் என்றும், செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர் திசை முகனை யனையவர்கள் செம்மை மிக்க அந்தணர் தம் என்றும், வாழ்தொல் புகழார் குடந்தை என்றும் சொல்லுகிறபடியே மஹாத்மாக்கள் செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவரான செம்மை மிக்க அந்தணராகையால் அவர்களே திசை முகன் அனையோர்கள் என்றும், தொல் புகழர்கள் என்றும் சொல்லுகையாலே அப்படிக் கொத்த செங்கமலத்தயன் அன்னவர்களான பெரியோர்கள் கால த்ரயத்திலும் ஸ்தோத்திரம் பண்ணி ஸந்தோஷிக்கும்படியான  நாளாய்த்து என்றபடி.

জাতস্সন: সন্তারযিষ্যতি என்றும் কলৌ খলু ভৱিষ্যন্তি নারাযণ পরাযণা: என்றும் பொலிக பொலிக என்றும் சொல்லக் கடவதிறே. சீர்கொள் இராமானுசவெனும் மந்திரம் பதிகளில் வாழ்ந்திடு நாள் என்றது எம்பெருமானும் பிராட்டியும் கேட்டு மகிழும்படி சீர்மைபெற்ற ராமானுஜ தயாபாத்ரம் எனும் அநாத்ய வித்யாபிஶாசோச்சாடனக்ஷம மந்திரமானது அழகிய மணவாளன் நியமனப்படிக்கு கோயில் முதலான திவ்ய தேஶங்களில் அனுஸந்திக்கப் பட்டு ஜயஶீலமாம்படியான நாளாய்த்து என்றபடி. செங்கயல் வாளைகள் சேர் வயல் சூழ்ந்த அரங்கர் சிறந்திடு நாள் என்றது திருவரங்கத் திருப்பதியில் ஆழ்வார்கள் அர்ச்சனா ஸ்தாபனத்தையும் திருவத்ய யனோத்ஸவத்தையும் பரவாதிகளால் தடுக்கப் பட்டிருந்த ஸ்ரீரங்கநாதனுடைய நித்யாராதனத்தையும் என்றும் அவ்யாஹதமாய் நடப்பிவிக்கும்படி நம் தேஶிகன் ப்ரதிமத நிரஸனம் பண்ணினாராகையால் நிலம் பொருந்தின திருவரங்கத்தம்மானான அழகிய மணவாளனும் மறைப் பெருந்தீ வளர்த்திருப்பார் வருவிருந்தை அளித்திருப்பார் சிறப்புடைய மறையவர்களோடே சிறந்து வாழும்படியான நாளாய்த்து என்றபடி. சிந்துர வெற்பிடைச் சென்று திகழ்ந்து சிரீபதி வாழ்ந்திடு நாள் என்றது ப்ரபத்தியே உபாயம் என்று திருக்கச்சி நம்பிக்கு அருளிச் செய்த திருவுள்ளத்தை திருமந்திராதி வேதாந்த ஶாஸ்திர வ்யாக்யான முகத்தாலே உலகத்தார் அறியும்படி நம் தேஶிகன் ப்ரகாஸிப்பிக்கையால் ‘ அன்றே அடைக்கலம் கொண்ட நம் அத்திகிரித் திருமால்’ என்னும்படிக்கு அப்த பூர்த்தி உத்ஸவத்தில் விஶேஷ கடாக்ஷம் செய்தருளினவராய் ஸிந்துராசல மத்யத்தில் ப்ரவேஶித்து ப்ரகாஶித்துக் கொண்டிருக்கிற ஶ்ரிய:பதியான பேரருளாளர் ஸித்த ஸங்கல்பராய் வாழ்ந்திடும்படியான நாளாய்த்து என்றபடி. தெங்கொடு மாங்கனி தேன்சுனை வேங்கடத்தீசர் பிறந்திடு நாள் என்றது தேங்காய் மாங்கனி தேன்கள் சூழ்ந்த சுனைகள் பொருந்தின திருவேங்கடத்திற்கு ஈசரான திருமலையப்பன் திருவவதரித்த நாளாய்த்து என்றபடி. நம் தேஶிகன் திருமணியாழ்வாரின் அவதாரம் என்னப்பட்டபோதிலும் அதை வ்யாஜமாகக் கொண்டு திருவேங்கடமுடையானே அவதரித்தபடியினால் ஸாக்ஷாத் அவதாரம் என்னத் தட்டில்லை. சீர் மதி ஆகம மௌலி தந்தேஶிகர்  பிறந்து வளர்ந்திடு நாள் என்றது அவ்யாஹதமாய் ஸதஸத் விபஜனம் பண்ணும்படி சீர்மை பெற்ற மதி விஶேஷத்தையுடைய வேதாந்த தேஶிகர் திருவவதரித்து அபிவ்ருத்தராகும் படியான நாளாய்த்து என்றபடி. ‘கூர் மதியீர் எள்ளத்தனை யுகவாதிகழா தென்னெழில் மதியே’ என்னக் கடவதிறே. பங்கய மாமலர் மங்கை குணங்களைத் தெளிய வெளியிடு நாள் என்றது பத்மாஸனையான பெரிய பிராட்டியாருடைய விபுத்வ உபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குணங்களையும் அஜ்ஞர்கள்கூட அறியும்படி ப்ரகாஶிப்பிக்குமதான நாளாய்த்து என்றபடி. ‘ஒன்று மூன்றெழுத்தாய் ஒன்றும் ஒன்றில் ஒன்றுடைய முன்னே ஒன்றிய இரண்டை உள்ளி உளரென உய்மினீரே’ என்னக் கடவதிறே.

இத்தால் நம் தேஶிக ஸ்ரீஸூக்திகளால் தெளிவுடையவராய் ஸ்வரூப ஜ்ஞானம் பெற்று உபாயத்தை அனுஷ்டித்து புருஷார்த்தத்தை அடையும்படியான ஶக்தியில்லாத சேதனர்களையும் கேட்பது மாத்திரத்தினாலே உபாயானுஷ்டான பூர்த்தியை உண்டாக்கி புருஷார்த்தத்தைக் கொடுக்கும் மஹா மந்திரம் রামানুজ দযাপাত্রஎன்றும் அம்மந்திரத்துக்கு விஷயமான நம்தேஶிகனுடைய திவ்ய மங்கள விக்ரஹ தர்ஶனமும் , திவ்ய சரித்திர ஶ்ரவணமும், திவ்ய கல்யாண குண த்யானமும் அம்மந்திரத்தைப் போலே உபாயானுஷ்டானத்தை உண்டாக்கி புருஷார்த்தத்தைக் கொடுக்கும் என்று சொல்லிற்றாய்த்து,                                  

புதன், 22 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் -- டிப்பணி 4


அணி தூப்புல் வரு நிகமாந்தாசிரியன் வாழி என்றது தூப்புல் குலத்துக்கு அலங்காரமாக அவதரித்திருக்கிற நம் தேஶிகன் ஜயஶீலராகக் கடவது என்றபடி. அவன் பாதாரவிந்த மலர் வாழி என்றது ‘சேவடி செவ்வி திருக்காப்பு’ என்னுமாப்போலே நம் தேஶிகன் திருவடித்தாமரைகள் ஜயஶீலங்களாகக் கடவன என்றபடி. இத்தால் கால தத்வம் உள்ளதனையும் இத்திருவடி ஸம்பந்தச் செல்வம் செல்லக் கடவது என்றாய்த்து. ‘அவன் கோதிலாத் தாண் மலரைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தீதிலா நல்லோர் திரள் வாழி’ என்றது আচার্যত্ৱোপযুক্তা என்கிறபடியே ஸமஸ்த ஸஜ்ஜனாஶ்ரயணீயதமமாகையாலே தோஷைகதேஶமும் கலசாத நம் தேஶிகனுடைய மலர் போன்ற திருவடிகளை তচ্চ সস্ম্রত্য সস্ম্রত্য என்கிற ஶ்லோகத்தின்படியே ஸ்தோத்திரம் பண்ணிக்கொண்டிருக்கையாகையால் ন সশযোত্র তত্ ভক্ত পরিচর্যা রতাত্মনা என்கிறபடியே ஒரு தீங்கும் இல்லாதவர்களான সন্তমেন என்று சொல்லப்பட்ட நல்லோர்களான நைனாராசார்யர் முதலான பெரியோர்கள் திருவோலக்கம ஜயஶீலமாகக் கடவது என்றபடி. இவ்வர்த்தத்தையே விஶேஷிப்பித்து வாதூல ஸ்ரீநிவாஸா சார்யரும்

জযতি নিগমচূডা দেশিকেন্দ্রো দযাৰু:

জযতি সুমতি সেৱ্যা সোভনাতস্য সূক্তি:

জযতি শুভগুণ  শীলযন সূরিসঙ্ঘো

জযতি ৱসুমতি য তস্য সন্ত্চারধন্যা

என்று வைபவ ப்ரகாசிகா ஸ்தோத்திரத்தில் அருளிச்செய்தார்.

   ‘வாதாசனவரர்’ இத்யாதி – ‘உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனு நாளே’ என்றது திருவேங்கடமுடையான் தீர்த்தோத்ஸவத்தால் ஶ்ரேஷ்டமான புரட்டாசித் திருவோணம் என்கிற நன்னாளானது என்றபடி. வாதாசனவரரிவர் என வரு மா பாஷியம் வகை பெறு நாள்’ என்றது வேதாந்த ஶாஸ்திரத்திற்கு அத்யந்தோபயோகியான பத ஶிக்ஷையைச் சொல்லும் வ்யாகரண ஶாஸ்திரமான அருமைப் பட்ட மஹாபாஷ்யம், இத்தேஶிகர் வாதாசன ஶ்ரேஷ்டரான பதஞ்ஜலி என்னும்படி வகை பெறும்படியான நாளாய்த்து என்றபடி. வகை  என்று க்ரமத்தைச் சொல்லித்து. இத்தால் நம் தேஶிகன் மஹாபாஷ்யத்தை பதஞ்ஜலி போல் உள்ளபடி உரைப்பர் என்றதாய்த்து. வகுளாபரணப் பெருமாள் தமிழின் வாசிஅறிந்திடு நாள் என்றது இப்படி வேதாந்தோபயோகி ஶாஸ்திரம் வகை பெறவே இவ்வேதாந்த ஶாஸ்திரத்திற்கு இந்த யுகாரம்பத்தில் ப்ரும்ம நந்த்யாதிகளுக்குப் பின்பு ப்ரவர்த்தகரான துழாய் முடிப் பெருமாளைப் போலே வகுளாபரணப் பெருமாளான நம்மாழ்வார் நாத முனிகளுக்கு உபதேஶிக்கையாலே நாலாயிரமும் அவர் ஸூக்தியாய் அந்தமிழான நாலாயிரத்தின் வாசியை உலகத்தார் அனைவரும் அறியும்படியான நாளாய்த்து என்றபடி.

ভাষা গীতি: প্রশস্তা ভগৱতি ৱচনাত্ রাজৱচ্চোপচারাত্ সা চাগস্ত্য প্রসূতাত্ৱিতি পরিজগ্রহে ভূমিকা ভেদ যোগ্যা | যতত্ কৃত্য শ্রুতীনা মুনিগণ ৱিহিতৈ স্সেতিহাসৈ: পুরাণৈ: তত্রাসৌ সত্ৱ সীম্ন: শ௦মথনমুনে স্সহিতা সার্ৱভৌমী: ||
என்றும், ‘இவ்வர்த்தத்தை சித்தரஞ்ஜனத்தோடே ஸர்வரையும் எளிதாகத் தெளிவிக்குமவற்றில் ஆழ்வார்கள் அருளிச்செயல் ப்ரதானம்’ என்றும், விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவுமடிமை எல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்தடைகின்றனர்,வண்டுவரைக் கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய நம் பண்ணமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே என்றும், இவ்வாசார்யன் தாமே அருளிச் செய்தாரிறே. ‘பேதாபேதம் பிரமம் எனா வகை பிரமம் தெளிவித்திடு நாள்’என்றது இப்படி மஹாபாஷ்யம் வகை பெற்று நாலாயிர ப்ரபந்தங்களும் வகை பெறவே ப்ரும்மம் பேதம் என்றும் அபேதம் என்றும் சொல்லாதிருக்கிறபடி ப்ரமத்தைப் போக்குவிக்குமதான நாளாய்த்து என்றபடி. ‘பேச்சொன்றுக்குச் சத தூஷணியைப் பேசிய தேசிய நாள்’ என்றது இப்படிக்கொத்த ஸித்தாந்தத்தில் குமதிகள் தூஷணம் சொல்லுமாகில் ஒரு தூஷண வாக்யத்திற்கு நூறு தூஷணத்தைச் சொல்லி அத்தூஷணம் ஸித்தாந்தத்தில் கலசாதே போகும்படி நம் தேஶிகன் பேசுகையால் தேஜஸ்ஸையுடையதான நாளாய்த்து என்றபடி. அன்றிக்கே ஒன்று  என்ற பேச்சுக்கு  அதாவது அத்வைத மதத்திற்கு, அதாவது அதை நிரஸிப்பதற்காக ஸ்ரீஶத தூஷணியைச் செய்யுமதான நாள் என்னவுமாம். ‘தீதாகிய பல மாயக்கலைகளைச் சிக்கென வென்றிடு நாள்’ என்றது மிண்டுரைக்க விரகு தரும் தருக்கம் கொண்டே வேண்டும் கால் வேண்டுவதே விளம்புமதுகளாகையால் நன்மை பெறாதே தீதாகியதுகளாய் அனேகங்களான மாயா மதாதி சமயக் கலைகளை ஒரு க்ஷணத்தில் ஜயிக்கும்படியான நாள் என்றபடி. இத்தால் குமதிகள் கூடி அஹோராத்திரம் உபந்யஸித்தாலும் நம் தேஶிகன் ஒருத்தரமாய் அருளிச் செய்து அவ்வுபந்யாஸங்களை நிரஸிக்க வல்லார் என்றதாய்த்து. திக்கெட்டும் புகழ் ஸ்ரீபாஷியத்தைத் தெளிய உரைத்திடு நாள்’என்றது ஸரஸ்வதி ஶிரஸா வஹித்தபடியினால் திகந்த வ்யாப்தையான கீர்த்தி பெற்ற ஸ்ரீ பாஷ்யத்தை ஸ்ரீ தத்வ டீகாதிகளால் நம் தேஶிகன் தெளிய அருளிச் செய்யும் நாளாய்த்து என்றபடி. ஓதாதோதும் வேதாந்தாரியன் உதயம் செய்திடு நாள் என்றது செய்ய தமிழ் மாலைகள் தெளிய ஓதி தெளியாத மறை நிலங்கள் தெளிந்தவராகையால் மற்றவர்களால் ஓதப்படாததுகளான வேதபாகங்களையும் ஓதுமவரான வேதாந்த தேஶிகன் திருவவதாரம் செய்திடு நாள் என்றபடி. இத்தால், ধর্ম সস্থাপনার্থায সভৱামি যুগে যুগে என்கிறபடியே நம் தேஶிகனாய் திருவவதரித்து ஸத்துக்கள் நெஞ்சாறல் தீரும்படியாயும், அஸத்துக்கள் நெஞ்சாறல் படும்படியாயும் எம்பெருமானே செய்தருளினான் என்றதாய்த்து.

ஞாயிறு, 19 ஜூன், 2011

ப்ரபந்தானுஸந்தான க்ரமம் டிப்பணி 3


இது  அடியேன் குறிப்பு:--  தற்போது  நாம்  குறிஞ்சி என்றே எழுதுகிறோம். ஆனால்  நூலில்  குரிஞ்சி  என்றே  உள்ளதால்  அப்படியே இட்டிருக்கிறேன். அதேபோல ஶுத்தாந்த  ஸித்தாந்தி  என்பதும்.  க்ரந்தாக்ஷரங்களுக்கு  தமிழ் லிபி  அடியேன்  கைங்கர்யம்.  க்ரந்தம்  படிக்க  முடியாதவர்களுக்கு  உதவி  என்று  நினைக்கக் கூடாது. அடியேன்  செய்யும்  பிழைகளைச்  சுட்டிக் காட்டித்  திருத்துவதற்காக  என நினைத்து    பிழைகள்  தென்படும்போது  அடியில்  இருக்கும்  comment என்பதை க்ளிக்  செய்து  தெரிவித்து    உதவ வேணும்.

          தஞ்சப் பரகதியைத் தந்தருள்வோன்  வாழியே  என்றது  ப்ரபன்னர்களுக்குத் தஞ்சமான  ஸ்ரீ பரம பத ஸோபானத்தை அருளிச் செய்யுமவர் என்றபடி. ’கலியனுரை’ என்கிற இடத்தில் திருமொழியில் குடி கொண்ட நெஞ்சினர்  என்று சொல்லி  இங்கு தஞ்சப்பரகதியை  ந்யாஸ வித்தையாக்கி  அத்தை ஸ்தாபித்தருளுமவர்  என்னவுமாம்.
সঞ্জীৱনায সর্ৱেষা০  যেন ন্যাস: প্রকাসিত:প্রপদন কলাজন্মজলধি: (ஸஞ்ஜீவநாய ஸர்வேஷாம்  யேந ந்யாஸ: ப்ரகாஸித:ப்ரபந கலாஜன்மஜலதி:) என்னக் கடவ திறே. செந்தமிழ் செய் தூப்புல்  திருவேங்கடவன்  என்றது ஆழ்வார்களுடைய திவ்ய ஸூக்திகளைக் காட்டிலும்  ஸ்பஷ்டமாக ரஹஸ்ய த்ரயார்த்தங்களையும் , ஸ்ரீ பாஷ்ய கீதா பாஷ்யாதிகளின்  அர்த்தங்களையும்  எளிதாகத் தெரிவிக்கும்  திருமந்திரச் சுருக்கு  முதலிய க்ரந்தங்களை அருளிச்செய்தவரான , அன்றிக்கே பூர்வாசார்ய திவ்ய ஸூக்திகளிலும் எளிதாகத் தெளிவிப்பிக்குமதான  செந்தமிழ் ஶப்தத்தால் உபலக்ஷித  ரஹஸ்யாதி க்ரந்தங்களைச் செய்தருளின  தூப்புல்  குலமுடைய  ஸ்ரீ வேங்கட நாதன்  என்கிற நம்  தேஶிகன் ஜயஶீலராகக் கடவது என்றபடி. வாக்யங்கள் தோறும்   வாழி ஶப்தத்தைக்    கூட்டுகிறது , இத்தூப்புல் குலத்துக்கு,
অন্যেন্দ্রকভুৱনমন্যদনিন্দ্রক০ ৱা কর্তু০ ক্ষমে কৱিরভূদযমন্ৱৱাযে (அந்யேந்த்ரகம் புவநமந்யதனிந்த்ரகம் வா கர்தும் க்ஷமே கவிரபூயமந்வவாயே) என்றிறே ஏற்றம் இருப்பது  

      நாநிலமும் தான் வாழ  என்றது  (மருதம்,முல்லை, குரிஞ்சி,பாலை எனப்படும்) சதுர்வித ப்ரதேஶஸ்தர்களும்  வாழும்படியாக  என்றபடி.  நான்மறைகள் தாம்  வாழ  என்றது பகவத் பாகவதாதிஷ்டிதங்களான  திவ்ய தேஶங்கள் தோறும்  நாலாயிர ப்ரபந்தங்கள் வாழும்படியாக என்றபடி. ஞானியர்கள் சென்னி அணி சேர்    தூப்புல் வேதாந்த தேஸிகனே  என்றது கோதற்ற ஸ்வரூபோபாய புருஷார்த்த  ஜ்ஞானமுடைய ஶுத்தாந்த ஸித்தாந்திகள் திருமுடிக்கு அலங்காரமாகச்  சேர்ந்திருக்கிற  தூப்புல்  குலமுடைய ஸ்ரீமத் வேதாந்த தேஶிகனே என்றபடி. இன்னமொரு  நூற்றாண்டிரும்  என்றது அத்விதீயமான நூறு அஸங்க்யாதமாய் இன்னம் கால தத்வம் உள்ளதனையும் உள்ள அனேகம் வர்ஷங்களிலும் பாங்காக  எழுந்தருளியிருக்க வேண்டும் என்றபடி. இத்தால் நம் தேஶிகன்  திருவவதார ப்ரயோஜனம் திவ்ய தம்பதிகளினுடைய விபுத்வ உபாயத்வாதி ஸமஸ்த கல்யாண குண ப்ரகாஶக திருமந்திரார்த்தமான உபய வேதாந்தங்களுடைய ஸ்தாபனம் என்றும், இது நித்யமாகச் செல்லுகைக்காக அத்தலைக்கு மங்களா ஶாஸனமாய்ப் பல்லாண்டு பாட வேணுமென்றும் சொல்லிற்றாய்த்து.  ஸர்வதேஶ இத்யாதியாய் இவ்வளவும் மங்களா ஶாஸன மாகையினால்  இத்தை  வாழித்திருநாமம்  என்று  நைனாராசார்யர்  நியமித்தருளினார்.