சனி, 4 ஜூலை, 2009

Rama Rajyam



Some may remember that few months before I started posting a drama " Rama Rajyam" written by the great V.V. Srinivasa Iyengar . I could not continue it for some reasons or other. Normally those few who visit my blog prefer to be silent vistors only. Comments or feed backs will never be posted on my postings here. But contrary to this, I received many personal mails and few phone calls also to continue it. This surprised me and made me to have a second thought on continuing posting it scene by scene. I decided it will be better if I present it in full so that the whole book may be printed at their end and they can enjoy reading it at one breadth as I did on getting the book from my usual resource, the Triplicane platform. And to read anything in print is definitely better than reading on a monitor. So the book is now available as pdf document at scribd.

Sri Delhi Anbil Srinivasan swami sent me 100+ old books to me which reached me yesterday. One among them is " Kannapura Thayar Kanu" (கண்ணபுரத் தாயார் கனு") which is very enjoyable. I wanted to share that also with you all. That is also at scribd in pdf form.

Rama Rajya was published in 1952 and "Kannapura Thayar Kanu" was published in 1964. Please enjoy.

To download please find the links above the documents below.



kanu

Ramarajya

தாழ்வது ஏன்?

இன்று நண்பர் ஒருவர் வந்திருந்தார். நிறையப் படிப்பவர். படித்தவற்றை, பார்த்தவற்றை, கேட்டவற்றை ஆழமாக அலசுவதும், அவற்றை அடுத்தவர்கள் ரசித்துக் கேட்கும் வகையில் சொல்வதிலும் வெகு சமர்த்தர். எதையும் மிக வித்தியாசமான கோணத்தில் சிந்தித்து எங்களுடன் பகிர்ந்து கொள்வது அவர் வழக்கம்.
பேச்சு பல திசைகளில் சென்று கொண்டிருந்தது. திடீரென்று ஒரு கேள்வி கேட்டார்.
" நமது மதம் சனாதன மதம். இல்லாதவை எதுவும் இல்லை. இந்து மகா சமுத்திரம் என திரு சோ அவர்கள் ஏராளமான தகவல்களை வாரம்தோறும் தருகிறார். எத்தனையோ மகான்கள் அவதரித்து மக்களைப் பண்படுத்தி நல்வழி காட்டி உய்வித்த அற்புத வாழ்க்கை நெறி இது. இன்றும் ஏராளமான அருளாளர்கள் வாழ்ந்து வழிகாட்டுகின்ற ஒரு உன்னத மார்க்கம். ஆனால், இன்று இந்து என்பவனின் நிலை எப்படி இருக்கிறது? எல்லாவற்றிலும் தாழ்ச்சி (ஒரு பெரிய லிஸ்ட் சொன்னார்) ஒரு காலத்தில் மிலேச்சர்கள் என்று சொல்லப் பட்ட மாற்று மதத்தார்கள் குறிப்பாக இஸ்லாமியர்கள் வசதியாகிக் கொண்டே போகிறார்களே ? இதற்கு என்ன காரணம் சொல்லுங்கள் "என்றார்.
எப்போதும் இப்படித்தான். என்ன கேட்பாரோ என எதிர்பார்த்து அவருடைய "பேருரைகளை"க் கேட்பது வழக்கமானது.
கேள்விகள் கேட்பார். ஆனால் என்ன பதில் சொன்னாலும் அதை ஏற்காமல் தான் சிந்திக்கும் கோணங்களிலிருந்து அவரே எதிர்பாராத பதிலும் தருவார்.
அதனால் "நீங்களே சொல்லிவிடுங்கள்" என்றேன்.
"கொஞ்சம் யோசி" என்றார்.
"யோசிப்பதா? நானா? அதற்கெல்லாம் மூளை வேண்டாமா? எனக்கு அது இல்லை என்று நன்கு தெரிந்தும் இப்படிக் கேட்கலாமா" என்று ஜகா வாங்கினேன்.
அவர் ஆரம்பித்தார்.
"திவ்ய தேசங்கள், அபிமான ஸ்தலங்கள், எத்தனையோ சிவ க்ஷேத்திரங்கள் --- எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம் இல்லை வெள்ளம் இல்லையா ? அப்படிக் குவிகின்ற மக்கள் செய்வது என்ன? ஆழ்வார்களும் நாயன்மார்களும் உள்ளம் உருகிப் பாடி வைத்தார்களே அதில் ஒன்றையாவது சொல்லி அங்கிருக்கும் இறைவனைப் போற்றித் துதிக்கிறார்களா? ஆசார்யர்கள் எத்தனை அற்புதமாய் ஸ்தோத்திரங்கள் சொல்லி பெருமாளையும், சிவனையும் போற்றிப் பரவசப் பட்டிருக்கிறார்கள் அதில் ஏதாவது ஒன்றையாவது அவன் முன் சொல்லி அவன் பெருமை பேசி அவனே தஞ்சம் என உளமார சரண் அடைகிறார்களா? கோவிலுக்குப் போகிறார்கள். எதற்கு ? பெருமாளே ! எனக்கு வீடு வாங்க வேண்டும், என் பிள்ளை நல்ல மார்க் வாங்கி நல்ல உத்யோகம் கிடைக்க வேண்டும் இத்யாதி இத்யாதி வேண்டுதல்களுக்குத் தானே பெரும்பாலானோர் செல்வது? இன்னும் ஒருபடி மேலே போய், அவனுடன் பேரம் வேறு பேசுகிறோம் இதைப் பண்ணினால் இத்தனை தேங்காய் உடைக்கிறேன், திருமஞ்சனம் பண்ணுகிறேன், வெள்ளி தங்கத்தால் எதையெதையோ பண்ணுகிறேன் என்று பிரார்த்தனைகள் . ஆக நம்மில் பலர் அவனை நம்முடைய wish fulfiller ஆக இருக்க வேண்டுகிறோமே தவிர அவன் தஞ்சம் என்றால் நம்மைக் காத்து நமக்கு எது நல்லதோ அதை அவன் செய்வான் என்ற நம்பிக்கை -- வேண்டாம் நினைப்பு---- இல்லாமல்தான் கோவிலகளுக்கு சென்று வருகிறோம்.
சரி ! கோவில்களில் கைங்கர்யம் செய்கிறார்களே ! அவர்களாவது அவர்களுக்குப் படியளப்பவனைப் போற்றுகிறார்களா? அர்ச்சனை என்று ஒன்று எல்லாக் கோவில்களிலும் உண்டு. அர்ச்சகர்களில் பலருக்கு அஷ்டோத்தர அர்ச்சனை என்றால் அஷ்ட நாமாவளி அர்ச்சனை (8 நாமங்கள்) என்றாகிப் போனது. அங்கு நடக்கும் லக்ஷார்ச்சனைகள், கோடி அர்ச்சனைகள் எல்லாம் அவர்களுக்கு லக்ஷமும், கோடியும் கிடைப்பதற்காகச் செய்யப் படுபவையே தவிர நாம் நினைப்பது போல் இறைவன் திருநாமங்களை அத்தனை முறை சொல்லி ஆனந்தப் படுவதற்காக அல்ல.
ஆனால், அவர்கள் வழிபாட்டைப் பார். அவர்களது அல்லாவைப் போற்றுதல் மட்டுமே அவர்கள் தொழுகை . இறைவன்மீது அவர்கள் நம்பிக்கை அசைக்க முடியாதது. துன்பம் வந்தபோது நம்மில் பலர் "பெருமாள் மீது நம்பிக்கையே போயிடுத்து. எத்தனை கோவில் போகிறேன். அப்படி இருந்தும் இப்படி சோதிக்கிறாரே !அவருக்குக் கண்ணில்லையா" என்றெல்லாம் புலம்புவதைப் போல் அவர்கள் என்றாவது அவர்கள் நம்புகிற இறைவனைச் சொல்லிப் பார்த்திருக்கிறாயா? அங்கு ஏதாவது பேரம் உண்டோ? இறை அனுபவத்தை உணர்வதற்கு நம் பெரியவர்கள் காட்டி வைத்ததுபோல் அங்கு ஒன்றுமில்லைதான். ஆனாலும் அந்த அசைக்க முடியாத இறை நம்பிக்கை நம்மிடம் உண்டோ?

பெருமாள் தன்னை பரிபூரணமாக நம்பி தஞ்சம் அடைந்தவர்களைத் தானே அபயம் கொடுத்து உய்விப்பார்?
அந்த நம்பிக்கை இல்லாதவர்கள் நலியத் தானே வேண்டும்?
ஆக அந்த முழு இறை நம்பிக்கை அவர்களை உயர்த்திக் கொண்டிருக்கிறது. நாம் தாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று தனது கேள்விக்கு அவரே ஒரு பதிலும் அளித்தார்.
"என்ன மறுபேச்சில்லாமல் இருக்கிறாயே!நான் சொன்னதை ஏற்கிறாயா மறுக்கிறாயா சொல்" என்று ஆரம்பித்தார்.
"ஆரம்பத்திலேயே சொன்னேனே! இதற்கெல்லாம் தனி மூளை வேண்டுமென்று. இந்த வாதம் சரியா தவறா எனத் தீர்மானிக்க அடியேனால் இயலுமோ? ஆனாலும் கற்றறிந்தவர்களிடம் இதைக் கேட்டுச் சொல்கிறேன்" என்று முடித்து அந்த வாதத்தை இங்கு வைத்திருக்கிறேன். நண்பர் கருத்துக்கள் சரிதானா? கீழே இருக்கும் commentல் உங்கள் கருத்தைத் தெரிவிப்பீர்களா?



கற்றாரைக் கற்றாரே





யதிகளின் சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் ஓரிரு தினங்களில் துவங்கப் போகிறது. சென்ற ஆண்டு திருப்புல்லாணியில் ஸங்கல்பம் மேற்கொண்ட போது அனுபவித்தவைகளை அடியேன் ஆயுள் முழுவதும் நினைந்து இன்புறப் போகிறேன். ஸ்ரீமத் ஆண்டவனிடம் எங்களூர் பெரியவர் ஸ்ரீ நாராயணமூர்த்தி பட்டாச்சார்யாரை அறிமுகம் செய்து வைக்கும் பாக்யம் கிடைத்தது. ஒருவரைப் பார்த்த மாத்திரத்திலேயே அவரை கணிக்க வல்ல ஆசார்ய ஸார்வ பௌமன் அவரது மேதமையை , வைகாநஸத்தில் அவருக்கு இருந்த தேர்ச்சி யை அறிந்து மகிழ்ந்தார். அந்த இரண்டு மாதங்களிலே இங்கு வந்த பலருக்கு நினைவிருக்கும். ஆசார்யன் தினமும் காலையிலும் மாலையிலும் திருவீதி ப்ரதக்ஷிணம் வரும்போது பட்டாச்சார்யாரது அகத்தின் அருகில் சற்று நின்று அவரைக் குளிரக் கடாக்ஷித்தாகும்.
அவர்பால் கொண்ட அபிமாநத்தால், அவருக்கு திருக்குடந்தை ஆண்ட வன் திருநக்ஷத்திரத்தின் போது அவருக்கு விருது வழங்கி கௌரவித்தார். அதன் பின்னும் வேளுகுடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமியிடமும் இவரைப் பரிந்துரைத்து கிஞ்சித்காரம் ட்ரஸ்ட் மூலமாகவும் இவரை கௌரவிக்கச் செய்து திருப்புல் லாணிக்கே ஒரு பெரிய பெருமையைச் செய்து எங்களை மகிழ்வித்துள்ளார். எங்களிடையே இப்படி ஒரு மேதை இருக்கிறார் என்பது நாங்கள் அறியாதது. எங்களுக்கு ஏதாவது தெரிந்தால்தானே அடுத்தவருக்கு உள்ள தகுதிகள் பற்றி மதிப்பிட முடியும்? அதனால் தானே அன்றே சொன்னான் " கற்றாரைக் கற்றாரே காமுறுவர்" என்று .

வெள்ளி, 3 ஜூலை, 2009

ஏக சந்த: க்ராஹி

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். மன்னிக்க வேண்டுகிறேன். மீண்டும் மீண்டும் மதுரகவியா என்று நினைக்க வேண்டாம். சமீபத்திலே அடியேனை மிகவும் லயிக்க வைப்பவை, படிக்கும் போதெல்லாம் இப்படி ஒரு அற்புதக் கவி தமிழக மக்களிடையே நன்கு அறிமுகமாக வில்லையே என்ற ஆதங்கம் மிகுதியாகிறது.

ஏகசந்தக்ராஹி என்றால் எதையும் ஒரு முறை ஒரே ஒரு முறை படித்தாலும், கேட் டாலும் பசுமரத்தாணி போல் நினைவில் கொள்பவர் என்பது எல்லாரும் அறிந்தது தான். அப்படி ஒரு அசாத்தியத் திறமை காரணமாகவே கூரத்தாழ்வாரால் அவர் ஒருமுறை கேட்ட போதாயன வ்ருத்தியை நினைவில் கொண்டு பாஷ்யகாரருக்கு உதவ முடிந்தது என்பது சரித்திரம். இப்போது எத்தனை பேர் அப்படி இருக்கி றார்களோ தெரியாது. சில வருடங்களுக்கு முன் இருந்த அஷ்டாவதானிகள் கூட இப் போது காணோம். ஆனால் நம் மதுரகவி அப்படி ஒரு ஏகசந்தக்ராஹியாக இருந்து அதற்கும் ஒருபடி மேலே போய் ஒரு முறை கேட்டவற்றை உடனே தன் வழியில் கவிதைகளாகப் பொழிந்துள்ளார். அதிலும் நோய்வாய்ப்பட்டு தனது இறுதி நாட்களில் இருந்த சமயத்தில்கூட  ஸ்வாமி தேசிகன் அருளிய கோதாஸ்துதியை தமிழாக்கவேண் டிய அன்பரின் விருப்பத்தை ஏற்று மூலத்தை  ஒருமுறை படிக்கச் சொல்லி அதைத் தமிழில் பாடிக் கொடுத்து பிரமிப்பை ஏற்படுத்தியவர்.

  டெல்லி அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி அனுப்பி இன்று காலை எனக்கு வந்த 100க்கும் மேற்பட்ட புத்தகங்களில் அந்த கோதாஸ்துதியும் ஒன்று. இந்நிகழ்ச்சியின் போது உடனிருந்த ஒருவர் கூறுவதை இங்கு படங்களாகக் கொடுத்துள்ளேன். படத்தின்மீது க்ளிக் பண்ணி படித்துப் பாருங்கள்.

 

002001

 004

003

005

Learn Tamil Easily

There is a genuine complaint from some of those following my blog postings through Yahoo groups. They are unable to read Tamil and hence unable to understand the messages. I am writing for my blog only and mostly I reproduce or copy some old Srivaishnava Tamil books -- old they are many of them printed before 1950 . So just because there is some difficulty in understanding Tamil, I can not deviate from posting in Tamil only. I do not myself author anything. So I have no choice When an old book is copied it has to be copied as it is. But the contents of these treasure books must reach all and hence those not knowing Tamil must also be enabled. Thanks to Sri Srinivasan Swami of Delhi, who sent me more than 100 old books, I find a small booklet to learn Tamil easily through Devanagari script. I have uploaded the book to my online storage. Interested may download the same and learn Tamil.

Learn Tamil

திருப்பாதுகமாலை

மிக நீண்ட நாட்கள் கழித்து திரு கேசவ ஐயங்காரின் திருப்பாதுகமாலை 16வது பன்மணிப் பத்ததியை இங்கே கொடுத்துள்ளேன் ( This is a translation of "Sri Padhuka Sahasram " in Tamil by Sri Kesava Iyengar. 16th paththathi is here. The earlier 1 to 15 paththathis were already posted here)

16. பன்மணிப் பத்ததி


531. வதன வாகு வூருதாள்
உதய மாகு வருணமால்
விதநி தான நிறமணி
பொதி மராடி தொழுவனே

532. விளர்ப சப்ப ரக்கிருள்
வளர்ம ணக்க ணத்தரி
தளிரு கணுக டருவரி
மிளிர்தி பாது! நீயுடன்.
533. ஆன்ற கண்ட நவதலம்
போன்ற வொன்ப தரதனம்
நான்ற பாது! மால்பதத்
தூன்று தோன்று பூவென.

534. உருகி வறியர் குறைகளுக்
கரியி னடிம லர்கலந்
துரிய முறுவ லுறுதிபா
தரத னார வவிர்தலில்.

535. கலவ னிறையு மணியொளி
நிலைம ராடி! நினதுமுன்
தலையி லலைத னறையறச்
சலனி னிலவு சரணமோ?

536. நீல மொத்து னித்திலச்
சீல மின்ன லேலுமே
மால டிக்க டித்திதி!
மாலை நீல மாமலர்.

537. ஒலிம ராடி! யொளிருமுன்
குலிக நீல குருகுவாள்
பொலியு மீசன் முடிநதிச்
சலச நீல குமுதமாம்.

538. வெண்மை கருமை செம்மைவில்
நண்ணு பாது! நாறுமண்
பண்ணு லீலை மாலடி
நண்ணு முக்கு ணத்ததோ?

539. விரித மால நீலநின்
தரள வாளி லரியெழிற்
பரவை யருகு பகவர்செல்
கரையொ ளிர்தி மரவடி!

540. கால மூவி லாநஞ்
சால பாது! வச்சிர
நீல மாமி ராப்பகற்
கேலு நின்க ணேசிறை.

541. பாது னீல நாலிவில்
சோதி பாத நோக்கு நீ
வீத ராகர் நோக்கிடுஞ்
சாத மைச்ச லாகையோ?

542. முத்து நீல மொத்துமின்
பத்தி ரைகி ருட்டினை
நத்த மாய னடிநிலாய்!
நித்த மேறு விசயநீ.
543. பன்னி றம்ப டர்நடை
துன்னு சாம முன்னொளி
முன்னு மீர டித்திரு
வின்ப னோம்பி ருக்குநீ.

544. வந்து தாழ்ந்த விந்திரற்
கெந்தை பாதி ங்கிநீ
தந்த சிந்து வாரமென்
றுந்து வாள்து ளங்குவாய்.

545. மரக தத்து மாமணி
அரி செறிந்த பாதுகாய்
வர சுகங்கள் வருநல
வரதன் சாலி மருதநீ.

546. மீத ரத்த நீலமுத்
தரத வச்செஞ் சாந்துசே
றாதி தாட்கி டும்பணிப்
பாது நீசைரந்திரி.

547. ஆகு பல்லு னாதவம்
வாகை மால்ம னைக்குமாம்
போகி சால மோகுவேள்
ஒகை நல்கு தோகையே?

548. பால ரக்கு மானிறக்
கோல வில்ப லோரலிற்
போல திட்டி கொட்டிலாய்
மால்ப தங்கள் காணவே.

549. நச்சி ருப்பை தூர்வையாம்
பச்சை யார நின்கதிர்
துச்சர் கோது கொய்யுனக்
குச்ச மாலை போலதே.

550. அப்பன் பாது னாதொளித்
துப்பு முத்து வச்சிரம்
துப்ப ருள்ள முச்சுடர்
செப்ப மல்கு செவ்வியோ?

551. தெரியடி நிலை! யிந் திரநீலம்
மருவுன தணிமா மணிமாழை
வரியணி நிறையரி யடிநளினம்
வருநறு மகரந்த வாரியென.

552. தனிமையி னளிபா தளியங்கற்
கினிதுன தரளங் கிளர்பவள
மினிலவ னறவில மேகிடவம்
மனைமகி ழிதழிளி யறிவிப்பாய்.


553. நடையரி வேடுவ னடவியிடை
இடுகவி நிருதர் சிரமணியும்
படிவரி வழுதம் மறிவடகத்
தடிநிலை! யுனைமுன் வனைகுவனோ?

554. அடிநிலை! யரிவின் னகைகவருன்
திடநவ மணியொளி விரவியுடன்
தொடுமெழி னடலைக் குறவனனி
முடியணி பருகத் தொடையலென.

555. தரவுமை யுடனொரு தனுவரனுக்
குரிதமை யுனதோ டுவமையென
அரியொடு சுடரணி மணியொளியில்
திருவடி நிலை! நீ யிலகுதியே?

556. மேவழ லொருமூன் றெரிநீங்கத்
தேவுன மணிவச் சிரநீலம்
பாவெரு மணமா மலர்நீலக்
காவென வடியார் நாடுவரே.
557. அரிவடி வழகுன தருநீலம்
தருமவ னடிவில் மணியுனதாம்
விரவிரு வளரொளி யிருமைமிகு
மொருமைய தணிபா துனதெனவே.

558. மோகுன தரிமுத் தொடுபதும
ராகநி ழல்பொழி மால்கழலில்
ஒகையி லணைமுடி யோருமறைத்
தோகையர் தலையணை யோகமுறும்.

559. தெளியுன தொளிநீ ரரிநீலம்
மிளிரொரு பெருமா மணியுனதக்
குளிநல விமல வெமுனையுமிழ்
வெளிமணி நிலையடி நிலை! நிகரும்.

560. திடநின தணிநித் திலநீலம்
அடிநிலை! பெருகுன் னருணிறைவில்
லடியவ ரறவே ரடிகழற்றி
விடுமிட ரிருவல் வினைத்தொடரோ?

561. சுடர்கரு ளரிபா துகை! மணிநின்
படருடு பதிமுத் தொடுபரவும்
படியது பகரும் பசுபதிமின்
முடியணி பிறையொடு கூடிருளே.

562. பருவம ருத்துத ரித்துமணி
வரிபல நிலவும் வளநீர்முத்
தருமையி லணையரி பதவுதயந்
தருமடி நிலை யோர் சலதரநீ

563. முத்தொடு மரகத மோதிடுமுன்
னுத்திற வொளிநீ ருளவாக்கும்
எத்தறு வாயிலு மேபடிதற்
கொத்தப கீரதி கூடுகடல்.



564. எழுமணி வெயிலில் லெமுனையெனத்
தழையணி தரளக் கிளரதனில்
மழைவண னடிமன் னிலை யொருகால்
தழுவது நதிதனை யேசுதியே!

565. கடிதிரு மலரின் மடிவதியும்
வடுமணி படிவத் தரிநீலம்
அடிநிலை! சுடர்செம் மணியொடுபொன்
னுடையணி திருமா றனைநிகரும்
566. மணிவண னடைகொண் முனமணிபா
தணவவ னடைபா வாடையென
அணியுற வரிபல் பலவேசெம்
மணிநித் திலவொளி பரவுதியே.

567. அரிமலி யசுரர் நலிவிரத
விரைவிலெ ழுன்கரு மணியாரம்
தருமிர வொடுசசி யவர்செருநர்
உரிமையர் விழியா முளரிகட்கே.

568. அடிநிலை! கருமா னடையிலரி
யொடுமணி முத்துன தொளிருமெழில்
திடவிரி யிருகா விரியருகே
யிடுசிதர் பசும்பு லீயலென.

569. சுரநதி யமுனை சோணையொளி
பெருகுன தரள மணிநீலத்
தொருவர நதிநீ தருமரியின்
திருவடி தனினின் மகிமைமிகும்.

570. அரிபத நகசந் திரிகைபரு
கருமையி லிந்திரை மருவுகரத்
திருபுற மணியிற் கெனவிரியப்
புரியளி பாது! ச கோரியென.

571. விரிகுடை யிலரா யிடுபணிவில்
அரியடி! பரவுன தமரர்முடிக்
கிருமணி பலநின் னிகழுநிறம்
தருவிரி சரணக் கவிகையென.
572. மரகத தரளந் தலமலராய்
அரிபத நிலை! மா மணிதளிராய்
அரிகழ லிணையிற் கனியெவையுந்
தருநல நிறைகற் பகலதைநீ.

573. மணிபல மிளிரும் மணிபாதுன்
துணியணி சரணம் முடியணங்
கணனுமை விளையா டறுமுகனே
றணிமயி லிணையே யறிவுறுவன்.

574. பகலிர வந்திக டருவருண
வகைமணி யொளிபா தொருமைதர
நகுதலி லுனைமறை யறையரியவ்
வகடித கடநா வலிதெளிவாம்.
575. அரியடி வரிநீ கடவாதே
தெரிவரி நிறமூன் றினிலுயிர்கள்
புரிவினை யத்திருள் சுத்தமதொத்
த ரிதரு பயனென் றடிநிறுவும்.

576. மணிபத நிலை! மா னவர்விழிகட்
கணியொளி தளிஞ் சனநயநன்
மணியொளி யெனமா மணிகிளருள்
மணிவண னிகரம் மணிமலியும்.

577. குலவொரு கலையங் குலையாநித்
திலநிழ லருகே யெழுனீலம்
கலைநிறை நிலவத் தமமணுகும்
நிலைதனை யரிதா ணிலைஸ நிகரும்.

578. துணியரி தழைவித் துருமமுறி
யிணைதர ளந்துண ரெனவரிதாள்
அணுகவ னுபவன நடையாட
வங்கொரு பூங்கா வணணுகெனநீ.

579. வளைமனை பணி யமரர் முடிமணிமின்
னினவுரு மகர நிகரமெழுந்
துனதர தனநீ ளொளிவெள்ளத்
தினையெதி ரடிநிலை! நீந்திடுமே.

580. அந்தர ளச்செம் மணிநீலச்
சுந்தர பாது! மு குந்தனதாம்
முந்தொரு மூன்றொளி யூன்றுநகத்
தந்தந லந்தரு நந்தகநீ.

வியாழன், 2 ஜூலை, 2009

audio link

Those who can not read Tamil but can understand spoken Tamil, can now click here to listen to an audio (for message posted Nyasatasakam 5 ) . please click on play button and listen. Continuing this way totally depends on your feed back.

ந்யாஸ தசகம் 5




த்வச் சேஷத்வே ஸ்த்திரதியம்
த்வத்ப்ராப்த்யேக ப்ரயோஜநம்
நிஷித்த காம்ய ரஹிதம்
குரு மாம் நித்ய கிங்கரம். (5)


[(பகவானே !) மாம் -- அடைக்கலமான அடியேனை; த்வத் சேஷத்வே -- தேவரீருக்குச் சேஷ பூதமாயிருப்பதிலே ; ஸ்த்திரதியம் -- உறுதியான புத்தியை உடையவனாக ; குரு - செய்தருள வேண்டும்; த்வத் ப்ராப்தி ஏக ப்ரயோஜநம் -- தேவரீரை அடைதலே முக்கிய பலம் என்ற எண்ணம் உடையவனாகவும் குரு -- செய்தருளவேண்டும் ; நிஷித்த காம்ய ரஹிதம் -- சாஸ்த்ரங்களில் விலக்கப் பட்டவைகளான காம்ய கர்மங்களில் ஸம்பந்தம் அற்றவனாகவும், சாஸ்திரங்களில் நிஷித்தங்களான அற்ப பலத் தாசையினாலே சூந்யனாகவும் ; குரு -- செய்தருளுக; நித்ய கிங்கரம் -- எப்போதும் தாஸவ்ருத்தி செய்பவனாகவும் , இவ்வாறு நிலை நின்ற அடிமைக்காரனாகவும் ; குரு -- செய்தருள வேண்டும்.]

மேல் ஐந்து சுலோகங்களாலே உத்தரக்ருத்யத்தை பிரார்த்திக்கிறார். அவற்றில் முதல் மூன்று சுலோகங்களால் இங்கு இருக்கும் நாட்களில் ஒரு குற்றமும் இன்றிப் பண்ணும் உத்தரக்ருத்யம் பிரார்த்திக்கப் பெறுகிறது. இவ்வைந்தாவது சுலோகத்தில் சேஷத்வாநுஸந்தாந பூர்வமாக நித்ய கிங்கரத் தன்மையைப் பிரார்த்திக்கிறார்.

தேவரீருக்கே அடியேன் என்பதிலே திடமான ஞானத்தை உடையவனும், தேவரீரை அடைவது ஒன்றே பயனாகக் கொண்டவனும், விலக்கப் பட்ட கர்மங்களையும், காமிய கர்மங்களையும் விட்டவனும் ஆன அடியேனை நித்ய கிங்கரனாகச் செய்து கொள்ள வேண்டும்.

தேவரீரிடத்தில் சரணாகதி பண்ணி பரம் அற்றிருக்கிற அடியேனுக்குச் சேஷித்வம் ஒருக்காலும் தோற்றாமல் தேவரீருக்கே சேஷம் என்ற நல்ல புத்தியை நிலையாய் இருக்கும்படி செய்தருள வேண்டும். தேவரீரை அடைவதைத் தவிர இதர பயனில் ஆசையற்றவனாகவும் பண்ண வேண்டும். சாஸ்திரங்களில் தள்ளுண்ட கர்மங்களையும், பசுபுத்திராதி அற்ப பலன்களையும் விடும்படிக்கான புத்தியையும் தந்தருள வேண்டும். இப்படி எப்போதும் தேவரீரது கைங்கரியத்தில் ஈடுபட்டவனாகவும் பண்ணி யருளவேண்டும்.

த்வயத்தில் உத்தரகண்டத்தில் நான்காம் வேற்றுமையில் இஷ்டத்தையும், நமஸ்ஸில் அநிஷ்ட நிவ்ருத்தியையும் பிரார்த்திக்கிற முறையில் இங்கும் முதலில் இஷ்டப் பிரார்த்தனையையும், பிறகு அநிஷ்ட நிவ்ருத்தி பிரார்த்தனையையும் செய்து மேல் உத்தராவதி, மேல்எல்லை, இல்லாத நித்திய கைங்கர்ய ரூபமான பல பிரார்த்தனையையும் செய்ததாயிற்று.

நிஷித்த காம்யரஹிதம் -- பகவத் பக்தி, ஜ்ஞானம் இவற்றின் வளர்ச்சி, கைங்கர்யத்துக்கு உபயோகமானவை, ஸ்ரீவைஷ்ணவர்களின் ஸம்ருத்தி -- இவற்றைப் பகவானிடத்தில் பரமை காந்தியாகிய ப்ரபந்நன் யாசிக்கலாம் என்று பிரமாணம் இருப்பதால் இவை அநிஷித்த காம்யங் களாகும். இவைகட்குப் புறம்பான பசுபுத்திராதிகளை வேண்டுதல் நிஷித்தமாம். இது அடியேனுக்கு இல்லாமல் இருக்கும்படி கிருபை பண்ணவேண்டும். அன்றிக்கே நிஷித்தங்களும், காம்யங்களும் இல்லாதபடி செய்தருள வேண்டும். அதாவது -- சாஸ்திரங்களில் செய்யக் கூடா தன என்று விலக்கப் பெற்ற கார்யங்களைச் செய்வது முதலிய அபராதங்களைச் செய்யாதிருக் கும்படி கிருபை பண்ண வேண்டும். செய்யாவிட்டால் தோஷத்தைக் கொடுக்காதனவும், ஐஹிகம், ஆமுஷ்மிகம் என்று இருவகையான பயனையளிப்பனவுமான காம்ய கர்மங்களைச் செய்யாதவனாகவும் செய்தருள வேண்டும்.


தேவி பூஷண ஹேத்யதி
ஜுஷ்டஸ்ய பகவம் ஸ்தவ:
நித்யம் நிரபராதேஷு
கைங்கர்யேஷு நியுங்க்ஷ்வ மாம். (6)

(தொடரும்)

இந்தப் பாசுரத்துக்கு ப.ரெ. திருமலை ஐயங்கார் ஸ்வாமி அளித்துள்ள விளக்கம் விரிவுரையாய்
அமைந்துள்ளது. அதை முழுவதும் இட்டு முடிக்க 7 நாட்கள் ஆகலாம்.

From the next posting, I shall try to add an audio file which may help those who know to speak and understand Tamil but not able to read and write. (similar to podcast)

Sri Anbil Srinivasan Swamy has started his own blog totally devoted to Tamil kavithai. Those intersted may visit his blog http://anbilkavi.blogspot.com and your feed back through comments link at the bottom of the post will greatly encourage him.

புதன், 1 ஜூலை, 2009

Easily capture your screen


You are surfing on the net. Some web pages attract you. You want to save the whole page or a region. Or you want to annotate or do some art work in that page. Print Screen provided by default with windows key board is useful for capturing the page. But for most of us it is not very friendly. So many of us download and install softwares either free or paid versions for this purpose. Now here comes another utility. You need not download or install anything. Aviary comes to your help. Whenever you want to take a screen shot of a web page, just go the address bar add aviary.com/ before the web site url and hit enter. Within seconds the captured page will open in aviary editor where you can make your changes and save it. For example if you want to save this page add aviary.com/ before http://thiruppul.blogspot.com (aviary.com/http://thiruppul.blogspot.com) and hit enter. And you can have some more utilities at www.aviary.com .You have to create an account. It is a freeware.

செவ்வாய், 30 ஜூன், 2009

டெல்லி அன்பில் ஸ்வாமி

டெல்லி அன்பில் ஸ்வாமி தனது இளமையில் சில சித்திர பத்ததிகளும் செய்து பார்த்திருக்கிறார். மாதிரிக்கு இரண்டு எனக்கு அனுப்பியிருந்தார். அவைகளை இங்கு அளித்துள்ளேன்.

அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன் (புதுதில்லி) பள்ளி, கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் “பத்மம்” என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள் -- 2

---

ஸ்ரீ வைணவ ஆசாரியர் ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிய ஸ்ரீ பாதுகா ஸஹஸ்ரத்தில் ‘சித்ரபத்ததி’யில் உள்ள ஸ்லோகங்கள் ஒவ்வொன்றும் ஒரு சித்திரத்தை அடிப்படையாகக் கொண்டது. அதைக் கண்டு வியந்த அடியேனின் இளம் உள்ளத் துடிப்பின் விளைவாக பின்வரும் கவிதைகள் எழுந்தன:

மண்ணுள்ளே பிறந்தாய் மறையாத புகழுற்றாய்

பண்ணுள்ளே பிணைந்தாய் குறையாத சுகமுற்றாய்

கண்ணுள்ளே புகுந்தாய் கற்றோத நிகரற்றோய்

எண்ணுள்ளே புரந்தாய் ஏற்றாத சகமற்றோய்

நடந்தாய் தாளற நங்கையின் கைபிடித்து

மடந்தாள் தானுற லங்கையின் கையொடித்து

கிடந்தாய் யாதுற காவிரியில் கைமடித்து

இடர்தான் யானறவே விழையின் கைநெடித்து

(மேலுள்ள இரு கவிதைகளில் இரு அடிகளுக்கு நடுவே “/\” என்ற கோடுகளைப் போட்டால் அதே அடிகள் வருவதைக் காணலாம்.) { ரகு : இது சற்று எளிதாகப் புரிந்துகொள்ள அடியேன் வரைந்து காட்டியுள்ளேன். படத்தை க்ளிக் செய்து பார்க்கலாம். }

பின் வரும் கவிதையில் ஒவ்வொரு அடியிலும் இரண்டாவது சீரின் இறுதி எழுத்தை மையமாக வைத்து அதைச் சுற்றி எட்டு வட்டங்களை வரைந்து எட்டு திசைகளிலும் வரிசையாக சீர்களிலுள்ள எழுத்துக்களை வெளிப்புறத்திலிருந்து உட்புறமாக எழுதினால் எண் வரிசை சக்கரம் ஒன்று அமையும். )

கமலத்து வதிந்து காத்தருள் புரிந்து

அமரரும் துதித்து ஆழ்கடல் படுத்து

அமுதனின் மனத்து அமர்ந்த அழகிது

எமதுளம் இசைத்து எழுமுனைப் பணிந்து

{ரகு -- இது எளிதுதானே. ஒன்றுக்குள் ஒன்றாய் எட்டு வட்டங்கள். அந்த எட்டையும் எட்டாகப் பிரித்து உள்வட்டத்தில் "து" எழுதி, எட்டில் முதலாவதில் வெளியிலிருந்து க ம ல த் து வ ந் என எழுதி, இரண்டாவதில் கா த் த ரு ள் பு ரி ந் என எழுதி பூர்த்தி செய்யலாம்}

---- (தொடரும்)

அன்பில் ஸ்வாமி கவிதைகள்

யாஹூ குழுமத்தில் வைணவம் சம்பந்தமான அனைத்துக் குழு உறுப்பினர்களுக்கும் நன்கு அறிமுகமான பெரியவர் டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி. அவரது வைணவ சித்தாந்த நூல்கள் சில ஸ்ரீ Dr. சடகோபன் ஸ்வாமியால் மின்புத்தகங்களாகவும் வந்துள்ளன. ஆனால் பலருக்குத் தெரியாதது அவர் ஒரு பெரிய கவிஞர் என்பது. அவருடைய "தயா சதகம்' ஒரு தேன் சொட்டும் அருமையான தமிழாக்கம். அதை சில ஆண்டுகளுக்கு முன் மின்புத்தகமாக இணையத்தில் வெளியிடும் பாக்யம் அடியேனுக்குக் கிடைத்தது. எனக்காக அவரிடம் உள்ள பழைய புத்தகங்களை அனுப்பும்போது அவரது இளவயதில் அவர் எழுதிய கவிதைகளிலிருந்து சிலவற்றைத் தொலைபேசியில் படித்துப் பரவசப் படுத்தினார். அவற்றுள் ஓரிரண்டை இங்கே மற்றவர்களும் படித்து மகிழ இட்டுள்ளேன். "சரணாகதி" மேன்மை பற்றிப் படித்துக் கொண்டு வருகையில் அவன் பெருமை போற்றும் கவிதைகள் நமக்குக் கிடைத்ததும் பொருத்தம்தானே!

(அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன் (புதுதில்லி) பள்ளி, கல்லூரி மாணவராக இருந்த காலத்தில் “பத்மம்” என்னும் புனைப்பெயரில் எழுதிய கவிதைகள்)
---
கடவுள் வாழ்த்து
---
நிலையிலா உலகில் நீயெனைப் படைத்தாய்!
கலையிலே என்னுளம் கலந்திட வைத்தாய்!
அலையலை யாய்க்கவி ஆயிரம் பாடியுன்
அலகிலாப் புகழ்புவி அனைத்தும் பரப்புவேன்!
-------
தேனுறு கமலத் திருவடி போற்றி!
கானுற நடந்த திருவடி போற்றி!
வானுற உயர்ந்தோன் இணயடி போற்றி!
யானுற அருள்வோன் இணயடி போற்றி!

வையம் ஏத்தும் எழிலடி போற்றி!
தையாள் ஏந்தும் எழிலடி போற்றி!
ஐயன் அழகன் மலரடி போற்றி!
உய்ய உலகெலாம் மலரடி போற்றி!

குணத்துப் பெரியோன் தாளே போற்றி!
மனத்தே இனியான் தாளே போற்றி!
கணத்தும் நீங்கான் தாளே போற்றி!
வணத்துள் வண்ணோன் தாளே போற்றி!


திருவுடை நெஞ்சோன் தாளே போற்றி!
அருளுடைக் கடலோன் அடியே போற்றி!
இருளுடைத் தகற்றும் இணயடி போற்றி!
கருநிறக் கண்ணன் கழலடி போற்றி!
----
உலகெல்லாம் உன்கண்ணுள்!
உய்யவழியும் உன்னொளியில்!
நிலையில்லா உளத்தோரோ
நினதருளிலா மானிடர்கள்!
கலையேஎன் கருத்தெலாமுன்
கருணையேஎன் வேண்டுதலாம்!
அலைபாயா துளமுன்றன்
அடியிணையில் வைப்பேனே!
----
வாடாமலர் தேனார்குழல் மங்கைதனை உடையோனே!
வரையாம்திரு மலையில்திகழ் மாலே!பரம் பொருளோனே!
சேடாதிபன் மேலேயுறை சீரார்கடல் நிறத்தோனே!
சேணாய்முகில் துதித்தேகும் திருவேங்கடப் பெருமானே!
வீடாம்நின தடியேநினை அடியார்மனம் களிப்போனே!
விந்தைபெரும் விந்தையென வியப்பாருனைப் பணிவாரே!
கூடாதெது உள்ளம்தனைக் கூடச்செயும் பெரியோர்க்கே?
கோலம்புரி கோலமுடை எழிலே!எமக் கருள்வாயே!
----
மலராய் கனியாய் மணமாய் தருவாய் பரந்தோனே!
இலனாய் உளனாய் இருளாய் ஒளியாய் இருப்போனே!
நலமாம் பொருளாய் நினைவாய் உளமாய் நிறைந்தோனே!
உலகாய் அணுவாய் உணர்ந்தாய் எமக்கே அருள்வாயே!
----

எழில்தவழ உலகமைத்து எல்லையிலே கவிஞனையும்
கழியெண்ண உளமளித்துக் கனியெனவே கற்பனையும்
பொழிந்திடவே அமைத்தனையுன் பொன்னான அருளுடனே!
அழிந்திடாத படைப்பெலாமுன் அழகினையே பறைசாற்றும்!

(தொடரலாம் ! ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி அனுமதித்தால்)

ந்யாஸதசகம் 4 தொடர்ச்சி


தன்னினைவில் விலக்கின்றித் தன்னை நண்ணார்
நினைவனைத்துத் தான்விளைத்தும் விலக்குநாத
னெந்நினைவை யிப்பவத்தி லின்று மாற்றி
யிணையடிக்கீ ழடைக்கலமென் றெம்மை வைத்து
முன்னினைவால் யாமுயன்ற வினையால் வந்த
முனிவயர்ந்து முத்திதர முன்னே தோன்றி
நன்னினைவா
னாமிசையுங்க கால மின்றோ
நாளையோஓ
வென்றுநகை செய்கின் றானே.
---- (
தேசிகமாலை, அதிகாரச்சுருக்கு 49)

[ஸர்வேச்வரன் ஸங்கல்பித்த விஷயத்தை எவரும் தடை செய்ய இயலாது. அவன், தன்னை அடையாத நாஸ்திகர்களுக்குச் சகலவித ஆசைகளையும் உண்டாக்கி அவர்கள் அந்தப் போகங்களை அடைய முடியாது தானே தடை செய்கின்றான். இத்தகைய எம்பெருமான் நம்மீது அருள்புரிந்து நமக்கு ஸம்ஸாரத்தில் உள்ள நசையைத் தீர்த்தான் ; தன் திருவடிகளின் கீழே நம்மைக் காக்க வேண்டிய வஸ்துவாகக் கொண்டான். முன்பு அகங்கார மமகாரங்களால் நமக்கு ஏற்பட்ட கர்மங்களால் தனக்கு உண்டான கோபம் தீர்ந்தான் ; நமக்கு மோக்ஷத்தை அளிக்க முற்பட்டுப் பல அவதாரங்களையும் செய்து நம்மோடு கலந்து பரிமாறினான். இப்படி யிருந்தும் இந்த அருமையை அறியாத நாம் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது 'இன்றைக்கு நாளைக்கு' என்று காலம் தாழ்த்துவதைக் கண்டு அவன் பரிஹஸிக்கின்றான். என்னே நம் அறியாமை ! 'நான் மோக்ஷம்கொடுப்பதற்கு விரைந்தாலும் சேதநன் ஸம்ஸாரத்தை விட மனங்கொள்ளாது 'இன்று ஆகட்டும், நாளை ஆகட்டும்' என்று காலம் தாழ்க்கின்றான். என்னே இவன் அறியாமை !' என்று பகவான் பரிஹஸிக்கின்றான் என்க] என்றும் ;

ஒன்றே புகலென் றுணர்ந்தவர் காட்டத் திருவருளா
லன்றே யடைக்கலங் கொண்டநம் மத்தி கிரித்திருமா
லின்றே யிசையி னிணையடி சேர்ப்ப ரினிப்பிறவோம்
நன்றே வருவதெல் லாநமக் குப்பர மொன்றிலதே.
(தேசிகமாலை அமிருதரஞ்சனி 18)

[ ஐம்பொருளையும் சரீராத்மபாவம் முதலிய ஸம்பந்தத்தையும் அறிந்த ஆசார்யர்கள் 'ஸ்ரீமந்நாராயணன் ஒருவனே உபாயம்' என்று உபதேசிக்க, அல்லது, எம்பெருமானே உபாயம் என்று அறிந்த ஆசார்யர்கள் அவன் திருவடிகளில் நம்மை ஸமர்ப்பிக்க, பிரதி உபகாரத்தை எதிர்பாராத, சிறந்த அவனுடைய கிருபையினால், அப்பொழுதே ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொண்ட நம்முடைய அத்திகிரி நாதனான பேரருளாளர், இப்பொழுதே முத்தியைப் பெற நாம் ஸம்மதித்தால் தம்முடைய இரண்டு திருவடிகளில் சேர்த்துக் கொள்வார். இனி மறுபடியும் இக்கர்ம பூமியில் பிறக்க மாட்டோம். இனி இச்சரீரம் அழியும் அளவும் வரும் இன்பங்களும் துன்பங்களும் ஆகிய எல்லாம் நமக்கு அநுகூலங்களே. இனி நாம் உஜ்ஜீவிப்பதற்காகச் செய்ய வேண்டிய பொறுப்பு ஒன்றும் இல்லை.] என்றும் இந்ந்யாஸதசகவாசிரியர் தாமே கூறி யருளியுள்ளார்.

இப்பாசுரத்துக்கு நம் ஸ்வாமியே வியாக்கியானம் இட்டுள்ளார். அதிற்சில பங்க்திகள் தருவாம் இங்கு.

'நம்மத்திகிரித் திருமால்' என்றது --- 'வேகவத்யுத்தரேதீரே புண்யகோட்யாம் ஹரிஸ்ஸ்வயம், வரதஸ் ஸர்வபூதாநாமத்யாபி பரித்ருச்யதே', 'நிகரில் புகழாயுலகு மூன்றுடையாயென்னை யாள்வானே' இத்யாதிகளிற்படியே ஆச்ரித ஸம்ரக்ஷணோப யுக்த ஸௌசீல்யஸ் ஸ்வாமித்வ விசிஷ்டனாய், நண்ணினவர்களுக்கு விண்ணுலகந்தர விரைந்து ரக்ஷாபேக்ஷாப்ரதீக்ஷனாய் மண்ணுலகில் வந்து பலப்ரதா நோந்முகனாய் நிற்கிற பெருமாள் என்றபடி.

'இன்றே யிசையிலிணையடி சேர்ப்பர்' என்றது -- 'க்வாஹ மத்யந்துர்புத்தி:க்வ சாத்ம ஹிதவீக்ஷணம், யத்தி தம் மம தேவேச ததாஜ்ஞாபய மாதவ, த்வாம் ப்ரபந்நோஸ்மி தாஸஸ்நே நாந்யா க்வாபி கதிர் மம, அத்யைவ கிங்கரீ க்ருத்ய நிதேஹி த்வத்பதாம் புஜே.' இத்யாதிகள்படியே பரமபுருஷார்த்தைக நமஸ்காரமளவில் அப்போதே கொடுவுலகு காட்டாதே கொழுஞ்சோதி யுயரத்துக் கூட்டரிய திருவடி கூட்டி அருள்வர் என்றபடி.
(ஸ்ரீமத்ரஹஸ்யரத்நாவளீ ஹ்ருதயம்)

இச்சுலோகத்தில் த்வய மந்திரத்தின் கிரமத்தை அநுஸரித்துச் சரணாகதி செய்ததின் பின் பலனைப் பிரார்த்திக்கிறார்.

திங்கள், 29 ஜூன், 2009

எழுத்துரு விடுபட்ட ஒரு தகவல்


எழுத்துரு பற்றிய எனது முந்தைய பதிவில் ஒரு விஷயம் சொல்ல விட்டுப் போயிற்று. Firefox உபயோகிப்பவர்கள் allow pages to choose their own fonts என்பதில் உள்ள டிக் குறியை எடுத்து விடுங்கள்.

Internet Explorerல் fonts அருகில் உள்ள accesibilityல் க்ளிக் செய்து விரியும் விண்டோவில் ignore website font என்பதை டிக் பண்ணி ok கொடுத்து வெளியேறுங்கள்.

ந்யாஸதசகம் 4


ஸ்ரீமந் அபீஷ்டவரத
த்வாம் அஸ்மி சரணம் கத:
ஏதத் தேஹாவஸாநே மாம்
த்வத்பாதம் ப்ராப்ய ஸ்வயம். (4)

[ஸ்ரீமந் -- திருமாமகளுடன் கூடிய ஸ்ரீமந்நாராயணனே ! இறையும் அகலகில்லாத பெரியபிராட்டியார் உறை மார்ப ! அபீஷ்டவரத ! -- ஆச்ரிதர்களுக்கு இஷ்டமான பலன்களை அளித்துக் காக்கின்றதனால் வரதன் என்று அஸாதாரமான திருநாமத்தையுடைய பேரருளாளரே ! த்வம் -- தேவரீரை சரணம் -- உபாயமாக கத;அஸ்மி -- (அடியேன்) அடைந்தவனாக இருக்கின்றேன், ஆகின்றேன் ; ஏதத் தேஹா வஸாநே -- சரீரத்தின் இறுதிக் காலத்திலே; த்வத் பாதம் -- தேவரீருடைய திருவடிகளை, வைகுந்தநாதனான தேவரீர் திருவடிகளை ; ஸ்வயம் -- தேவரீரே; ப்ராப்ய -- (வேறோர் உதவியின்றி) அடைவிக்க வேண்டும் ]

பெருந்தேவிநாதனே ! கருதவரந்தருந் தெய்வப் பெருமாளே ! தேவரீரை அடைக்கலமாக அடைந்திருக்கிறேன். இச்சரீரம் விழும்பொழுது அடியேனுக்குத் தேவரீர் திருவடிகளைத் தேவரீரே சேர்ப்பிக்க வேண்டும்.

வேண்டுவார் வேண்டுவன நல்கி அளிக்கும் திருநாரணனே ! அடியேன் தேவரீரையே சரணமாகப் பற்றினேன். தேவரீர் வேறொரு உதவியை எதிர்பாராமல் இந்தச் சரீரத்தின் முடிவிலே தேவரீர் திருவடிகளை அடைவிக்க வேண்டும்.

ஸ்ரீய: பதியான நாராயணனே உபாயமாகவும் உபேயமாகவும் இருக்கின்றான் என்பது இதனால் அறிவிக்கப் பெற்றதாயிற்று.

ஏதத் தேஹா வஸாநே -- என்பதனால் ஆர்த்தனாய் இப்பொழுதே மோக்ஷம் தந்து அருள வேண்டும் என்று கோரிப் பிரபத்தி பண்ணினாலும் உடனே சரீரத்தின் முடிவைச் செய்து மோக்ஷத்தைக் கொடுப்பன் என்று ஏற்படும். பிரபத்தி இருவகைப் படும். அவையாவன :-- (1)த்ருப்த ப்ரபத்தி (2) ஆர்த்தப் ப்ரபத்தி. இச்சரீரம் உள்ள வரையில் கர்ம பலன்களை அனுபவித்து, இறுதியில் மோக்ஷத்தைப் பெற விரும்பிச் செய்யும் சரணாகதி த்ருப்த ப்ரபத்தி. இச்சரீரம் உள்ளவரையிலும் கூடப் பொறுக்காது இந்த க்ஷணமே மோக்ஷம் பெறவேண்டும் என்று விரும்பிச் செய்யும் சரணாகதி ஆர்த்தப்ரபத்தி.

புகலுலகி லில்லாது பொன்னருள்கண் டுற்றவர்க்கு
மகலகிலா வன்பர்க்கு மன்றேதன் னருள்கொடுத்துப்
பகலதனாற் பழங்கங்குல் விடிவிக்கும் பங்கயத்தா
னகலகிலே னென்றுறையு மத்திகிரி யருண்முகிலே.
(தேசிகமாலை, அருத்தபஞ்சகம் 8.)

[திருமகள் க்ஷணகாலமும் பிரியமாட்டேன் என்று நித்யவாஸம் செய்யப் பெற்றவனும், திருவத்திமாமலையில் நின்று கருணையாகிய நீரைப் பொழியும் மேகம் போன்றவனுமான பேரருளாளன், உலகத்தில் வேறு உபாயம் அநுட்டிக்க முடியாமல், பெரிய பிராட்டியின் திருவருளைப் புருஷகாரப் பிரபத்தியாகப் பெற்று, தன்னைச் சரணம் அடைந்தவருக்கும், தனது அநுபவத்தை விட்டு ஒரு கணப்பொழுதும் பிரிந்து இருக்கமுடியாத காதல் உள்ள பாகவதர்கட்கும் அவர்கள் பிரார்த்தித்த காலத்திலே தன் பரமகிருபையை வைத்து மோக்ஷாநுபவம் ஆகிய பகலால் அநாதியான ஸம்ஸாரம் ஆகிய காளராத்திரியை நீக்கி பொழுது விடியச் செய்வான்] என்று இவ்வேதாந்தவாரியனே விளம்புதல் காண்க.

நம்மாழ்வார்

சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்
மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்.
(திருவாய்மொழி 9-10-5)

[ஈடு - அஞ்சாம் பாட்டு . இப்படி பக்தியோகத்தால் ஆச்ரயிக்க க்ஷமரமன்றிக்கே தன் திருவடிகளையே உபாயமாகப் பற்றினார் திறத்து அவன் செய்தருளும்படியை அருளிச் செய்கிறார்.]

(சரணமாகும் தனதாளடைந்தார்க்கெல்லாம்) ஜந்ம்வ்ருத்தஜ்ஞாநங்களால் குறைய நின்றேராயாகிலும், தன் திருவடிகளையே உஉபாயமாகப் பற்றினார்க்கெல்லாம் ரக்ஷகனாம். கீழ் மூன்று பாட்டாலும் சொன்ன ப்தி யோகம் அதிக்ருதாதிகாரம், இதில் சொல்லுகிற ப்ரபத்தி ஸர்வாதிகாரம் என்கிறது; "ஸமோஹம் ஸர்வபூதேஷு" என்னக்கடவதிறே. பகவத் விஷயந்தான் ஸ்பர்ச வேதியாயிருக்குமிறே; கைசிகத்தில் பகவத் ஸம்பந்தம் உடையான் ஒரு சண்டாளனோட்டை ஸம்பாஷணம் ப்ராஹ்மணனுடைய ஆசாரவைகல்யத்துக்குப் பரிஹாரமாய்த்து; அவ்விடத்திலெல்லாம் சொல்லுகிற அர்த்தம் இதுவே யாய்த்து.

(மரணமானால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்) -- இவன் தன் பக்கலிலே பரந்யாஸம் பண்ணின அன்று தொடங்கி இவனையொழியத் தனக்குச் செல்லாமை யுண்டாயிருக்கச் செய்தேயும் , இவனுடைய ருசியை அநுவர்த்தித்து, சரீரவிச்லேஷத்தளவும்அவரைப்ரதீக்ஷனாய் நின்று, பிள்ளையதுண்டானால் பரமபதத்தைக் கொடுக்கும் உபகாரகன். தன் திருவடிகளைப் பற்றினவன்றே தானிருக்கிற விடத்திலே இவனைக் கொடுபோய்ச் சேரவைத்துக் கொள்ளவேண்டியிருக்கச் செய்தேயும், நடுவு இவனிருக்கும் நாலு நாளும் அவனுக்கு ஒரு பகல் ஆயிரம் ஊழியாயிருக்கையாலே, "மரணமானால்" என்கிறது. "மரணமானால்" என்கிறது -- தனக்கு அசக்தியில்லை, இவனுக்குக் கர்த்தவ்யமில்லை, இவன் ருசியைக் கடாக்ஷித்து நிற்கிற வித்தனை. இப்பாட்டில் "மரணமானால்" என்றத்தைக் கொண்டிறே கீழ்ச்சொன்ன நிரூபரணமெல்லாம் என்றிறே அருளிச் செய்தார்.

இன்னும் வரும்

எழுத்துரு



















நண்பர் ஒருவர் வந்திருந்தார். என்னுடைய கணிணியில் தமிழ் அழகாக, படிப்பதற்கு சுகமாக இருப்பதாகவும் ஆனால் அவருடையதிலோ மொச்சைக் கொட்டை போல் பெரிதாய் அழகில்லாமல் இருப்பதாகவும், சற்று நீளமான தமிழ் அஞ்சல்களைப் படிப்பது அலுப்பூட்டுகிறது என்றும் குறைப் பட்டுக் கொண்டார். அவர் எப்போதும் வ்ண்டோஸுடன் வரும் லதா எழுத்துருவையே உபயோகப் படுத்துவது தெரியவந்தது. Arial unicode MSக்கு மாற்றிக் கொடுத்தேன். இதுவரை லதாவையே உபயோகப் படுத்துபவர்களும் ஏரியலுக்கு மாறிப் பாருங்களேன். MSoffice 2003 or 2007 உங்களிடம் இருந்தால் அதனுடனேயே Arial unicode MS font இருக்கும். Tools -- internet options போய் திறக்கும் விண்டோவில் fonts க்ளிக் செய்து latin bases fontsல் Arial unicode Ms என மாற்றிக் கொள்ளுங்கள். Firefox உபயோகிப்பவர்கள் tools-options-content-fonts-advanced வழியாக இதைப் பண்ணிக் கொள்ளலாம். Arial unicode MS போல இன்னொரு அழகான எழுத்துரு e-TamilOT. ஒருவேளை இவை உங்கள் கணிணியில் இல்லையென்றால் http://tinyurl.com/mtwqre சென்று இறக்கி c:/windows/fonts folderல் நிறுவிக் கொண்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.

சிலருக்கு இந்த ஸ்க்ரீன் ஷாட்கள் உதவியாக இருக்கலாம்.