சனி, 20 ஜூன், 2009

ந்யாஸதசகம் 2 (தொடர்ச்சி)

இரண்டாம் பாசுரத்தின் தொடர்ச்சி
இவ்வித்யைக்கு பரிகரமாவது “ஆநுகூல்ய ஸங்கல்பமும், ப்ராதிகூல்ய வர்ஜனமும், கார்ப்பண்யமும், மஹாவிச்வாஸமும், கோப்த்ருத்வ வரணமும். இவ்விடத்தில் 'ஆநுகூல்ய ஸங்கல்ப: ப்ராதிகூல்ய வர்ஜநம், ரக்ஷிஷ்யதீதி மஹாவிச்வாஸோ கோப்த்ருத்வ வரணம் ததா. ஆத்மநிக்ஷேப கார்ப்பண்யே ஷட்விதா சரணாகதி' இத்யாதிகளிற் சொல்லுகிற ஷாட்வத்யமும் அஷ்டாங்க யோகம் என்னுமாப்போலே அங்காங்கி ஸமுச்சயத்தாலே ஆக க் கடவது என்னும் இடமும், இவற்றில் இன்னதொன்றுமே அங்கி, இதரங்கள் அங்கங்கள் என்னும் இடமும் 'நிக்ஷே பாபர பர்யாயோ ந்யாஸ: பஞ்சாங்கஸம்யுத:, ஸந்யாஸஸ்த்யாக இத்யுக்தச் சரணாகதிரித்யபி' என்கிற ச்லோகத்தாலே ந்யாய நிரபேக்ஷமாக ஸித்தம். இவ்விடத்தில் 'சாச்வதீ மம ஸம்ஸித்திரியம் ப்ரஹ்வீ பவாமி யத், புருஷம் பரமுத்திச்ய நமே ஸித்திரிதோந்யதா, இத்யங்கமுதிதம் ச்ரேஷ்டம் பலேப்ஸா தத்விரோதிநீ' என்று அஹிரிபுத்ந்யோக்தமான பலத்யாக ரூபாங்காந்தரம் மோக்ஷார்த்தமான ஆத்ம நிக்ஷேபத்திலே நியதம். பலஸங்க கர்த்ருத்வாதி த்யாகம் கர்மயோகம் முதலாக நிவ்ருத்தி தர்மங்கள் எல்லாத்திலும் வருகையாலே இவ்வநுஸந்தாநம் முமுக்ஷுவுக்கு ஸாங்க ஸமர்ப்பண தசையிலே கர்த்தவ்யம். இங்கு பரிகரங்களானவற்றில் ஆநுகூல்ய ஸங்கல்பத்துக்கும் ப்ராதிகூல்ய வர்ஜநத்துக்கும் நிபந்தநம் ஸர்வசேஷியான ஸ்ரீய:பதியைப்பற்ற ப்ரவருத்தி நிவ்ருத்திகளாலே அபிமதாநு வர்த்தநம் பண்ண வேண்டும்படி இவனுக்குண்டான பாரார்த்யஜ்ஞாநம். இத்தாலே, 'ஆநுகூல்யேதராப்யாம்து விநிவ்ருத்திரபாயத:' என்கிறபடியாலே அபாய பரிஹாரம் ஸித்தம். கார்ப்பண்யமாவது முன்பு சொன்ன ஆகிஞ்சந்யாதிகளுடைய அநுஸந்தாநமாதல், அதடியாக வந்த கர்வஹாநியாதல், க்ருபாஜநக க்ருபணவ்ருத்தியாதலாய் நின்று சரண்யனுடைய காருண்யோத்தம்பநார்த்தமுமாய் , 'கர்ப்பண்யேநாப்யுபாயாநாம் விநிவ்ருத்தி ரிஹேரிதா' என்கிறபடியே பின்பு மநந்யோபாயதைக்கும் உபயுக்தமாய் இருக்கும். மஹாவிச்வாஸம் 'ரக்ஷிஷ்யதீதி விஷ்வாஸா தபீஷ்டோபாய கல்பநம்' என்கிறபடி அணியிடாத அநுஷ்டாநஸித்யர்த்தமுமாய் பின்பு நிர்பரதைக்கும் உறுப்பாய் இருக்கும். ஸ்வரூபாநுசித புருஷார்த்தங்கள் போலே ஸ்வரூப ப்ராப்தமான அபவர்கமும் புருஷார்த்தமாம்போது அர்த்திக்கக்கொடுக்க வேண்டுகையாலே இங்கு கோப்த்ருத்வ வரணமும் அபேக்ஷிதம். நன்றாயிருப்பதொன்றையும் புருஷன் அர்த்திக்கக் கொடாதபோது புருஷார்த்தங் கொடுத்தான் ஆகானிறே. ஆகையாலேயிறே 'அப்ரார்த்திதோ நகோபாயேத்' என்றும், 'கோப்த்ருத்வ வரணம் நாம ஸ்வாபிப்ராய நிவேதநம்' என்றுஞ் சோல்லுகிறது. இப்படி இவ்வைந்தும் இவ்வித்யாநுஷ்டாந காலத்தில் உபயுக்தங்கள் ஆகையால் இவை இவ்வாத்ம நிக்ஷேபத்துக்கு அவிநாபூத ஸ்வபாவங்கள். இவ்வர்த்தம் பிராட்டியை சரணமாகப் பற்ற வாருங்கோள் என்று ஸாத்விக ப்ரக்ருதியான த்ரிஜடை ராக்ஷஸிகளுக்குச் சொல்லுகிற வாக்கியத்திலும் காணலாம். 'ததலம் க்ரூர வாக்யைர்வ:' என்று ப்ராதிகூல்யவர்ஜநம் சொல்லப்பட்டது. 'ஸாந்த்வமே வாபிதீயதாம்' என்கையாலே மந:பூர்வமாக அல்லது வாக்ப்ரவ்ருத்து யில்லாமையாலே ஆநுகூல்ய !ங்கல்பம் ஆக்ருஷ்டம் ஆயிற்று. 'ராவாத்திபயம் கோரம் ராக்ஷஸாநா முபஸ்திதம்' என்று போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலே அதிகாரமான ஆகிஞ்சந்யமும் அதினுடைய அநுஸந்தாநமுகத்தாலே வந்த கர்வஹாந்யாதி ரூபமாய் அங்கமான கார்ப்பண்யமுஞ் சொல்லிற்றாயிற்று. 'அலமேஷா பரித்ராதும் ராக்ஷஸ்யோமஹதோபயாத்' என்கையாலும் இத்தை விவரித்துக் கொண்டு 'அலமேஷா பரித்ராதும் ராகவாத்ராக்ஷஸீகணம்' என்று திருவடி அநுவதிக்கையாலும் பெருமாள் ஒருத்தனை நிக்ரஹிக்கப் பார்க்கிலும்அவர் சீற்றத்தை ஆற்றி இவள் ரக்ஷிக்கவல்லள் ஆகையாலே ரக்ஷிஸ்யதீதி விச்வாஸம் சொல்லப் பட்டது. 'அபியாசாம வைதேஹீ மேதத்தி மம ரோசதே', பர்த்ஸிதாமபி யாசத்வம் ராக்ஷஸ்ய:கிம்விவக்ஷயா' என்கையாலே கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று. இவ்வைந்துக்கும் அங்கியான ஆத்மநிக்ஷேபம் 'ப்ரணிபாத ப்ரஸந்நாஹி மைதிலீ ஜககாத்மஜா' என்று ப்ரஸாதகரண விசேஷத்தைச் சொல்லுகிற ப்ரணிபாத சப்தத்தாலே விவக்ஷிதம் ஆயிற்று. ஆகையால் 'ந்யாஸ:பஞ்சாங்க ஸம்யுத:' என்கிற சாஸ்த்ரம் இங்கே பூர்ணம். இப்படி உபதேசிக்க ராக்ஷஸிகள் விலக்காதமட்டே பற்றாகப் பிராட்டி தன் வாத்ஸல்யாதிசயத்தாலே 'பவேயம் சரணம் ஹிவ:' என்று அருளிச் செய்தாள். இப்பாசுரம் ஸஹ்ருதயமாய் பலபர்யந்தமானபடியை 'மாதர் மைதிலி ராக்ஷஸீஸ்த்வயிததை வார்த்ராபராதாஸ்த்வயா ரக்ஷந்த்யாபவநாத்ம ஜால்லகுதரா ராமஸ்ய கோஷ்டீ க்ருதா' என்று அபியுக்தர் வெளியிட்டார்கள். இவ்விடத்தில் த்ரிஜடையுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே அவளுக்குப் பிறவித் துவக்காலே நம்மவர்கள் என்று கண்ணோட்டம் பிறக்கும் ராக்ஷஸிகளும் அந்தர்பூதைகள். அப்படியே ஸ்ரீவிபீஷணாழ்வானோடு கூடவந்த நாலு ராக்ஷஸர்களும் அவருடைய உபாயத்திலே அந்தர்பூதர்கள். அங்குற்ற அபயப்ரதாநப்ரகரணத்திலும் இவ்வங்காங்கி வர்க்கம் அடைக்கலம். எங்ஙனை என்னில் :-- ப்ராதிகூல்யத்திலே வ்யவஸ்திதனான ராவணனுக்குங்கூட 'ப்ரதீயதாம் தாசரதாய மைதிலீ' 'ஸீதாஞ்ச ராமாய நிவேத்ய தேவீம்வஸேம ராஜந்நிஹ வீதசோகா:' என்று ஹிதஞ்சொல் லுகையாலே ஆநுகூல்ய ஸங்கல்பந் தோற்றிற்று. இந்த ஹிதவசநம் பித்தோபஹதனுக்குப் பால்கைக்குமாப்போலே அவனுக்கு உத்வேக ஹேதுவாயிற்று. 'தீவாந்து திக்குல பாம்ஸநம்' என்று திக்காரம் பண்ணினபின்பு இனி இவனுக்கு உபதேசிக்கவும் ஆகாது, இவனோடு அநுபந்தித்த விபூதிகளும் ஆகாது, இவன் இருந்த இடத்தில் இருக்கவும் ஆகாது என்று அறுதியிட்டு 'த்யக்த்வா புத்ராம்ச்ச தாராம்ச்ச' பரித்யக்தா மயா லங்கா மித்ராணிச தநாநிச' என்கிற ஸ்வவாக்கியத்தின்படியே அங்கு துவக்கற்றுப் போருகையாலே ப்ராதிகூல்ய வர்ஜநாபிஸந்தி தோற்றிற்று. 'ராவணோ நாம துர்வ்ருத்த:' என்று தொடங்கி ஸர்வஜித்தான ராவணனோட்டை விரோதத்தாலே தாம் போக்கற்று நிற்கிற நிலையைச் சொல்லுகையாலும், பின்பும் 'அநுஜே ராவணஸ்யாஹம் தேந சாஸ்ம்யவமா நித: பவந்தம் ஸர்வபூதாநாம் சரணம் சரணங்கத:' என்கையாலும் கார்ப்பண்யம் சொல்லப் பட்டது. அஞ்சாதே வந்து கிட்டி 'ஸர்வலோக சரண்யாய ராகவாய மஹாத்மநே' என்று சொல்லும்படி பண்ணின மஹாவிச்வாஸம் 'விபூஷணோ மஹாப்ராஜ்ஞ:' என்று காரணமுகத்தாலே சொல்லப்பட்டது. ப்ராஜ்ஞதையை விசேஷிக்கிற மஹச்சப்தத்தாலே விச்வாஸாதிசந்தானே விவக்ஷிதமாகவுமாம். 'ராகவம் சரணம் கத:' என்கையாலே உபாய வரணாந்தர் நீதமான கோப்த்ருத்வ வரணம் சொல்லிற்றாயிற்று. உபாயவரண சப்தத்தாலே வ்யஞ்சிதமாகிற அளவு அன்றிக்கே 'நிவேதயமாம் க்ஷிப்ரம் விபீஷண முபஸ்திதம்' என்கையாலே கடகபுரஸ்ஸரமான ஆத்மநிக்ஷேபம் சொல்லிற்று. இப்ரகரணத்திலே நிவேதந சப்தம் விஜ்ஞாபநமாத்ரபரமானால் நிஷ்ப்ரயோஜநம். இப்படி மற்றும் உள்ள ப்ரபத்தி ப்ரகரணங்களிலும் லௌகீகத்ரவ்ய நிக்ஷேபங்களிலும் ஸங்க்ஷேப விஸ்தர ப்ரக்ரியையாலே இவ்வர்த்தங்கள் காணலாம். தான் ரக்ஷிக்க மாட்டாததொரு வஸ்துவை ரக்ஷிக்கவல்லன் ஒருவன் பக்கலிலே ஸமர்ப்பிக்கும்போதுதான் அவன் திறத்தில் அநுகூலாபிஸந்தியைத் தவிர்ந்து, இவன் ரக்ஷிக்க வல்லன், அபேக்ஷித்தால் ரக்ஷிப்பதுஞ் செய்யும் என்று தேறி , தான் ரக்ஷித்துக் கொள்ளமாட்டாமையை அறிவித்து, நீ ரக்ஷிக்க வேணும் என்று, ரக்ஷ்ய வஸ்துவை அவன் பக்கலிலே ஸமர்ப்பித்து, தான் நிர்பரனாய் பயங்கெட்டு மாரிலே கைவைத்துக் கொண்டு உறங்கக்காணா நின்றோமிறே.' [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம், பரிகரவிபாகாதிகாரம்]

_________________தொடர்கிறது -------------------------------

ந்யாஸதசகம் 2

ந்யஸயாம்யகிஞ்சந: ஸ்ரீமந்

அநுகூலோந்யவர்ஜித:

விச்வாஸ ப்ரார்த்தநா பூர்வம்

ஆத்ம ரக்ஷா பரம் த்வயி. (2)

[ஸ்ரீமந்: ஸ்ரீமந் நாராயணனே! திருமகளோடு வருந்திருமாலே! அகிஞ்சந: தேவரீரைப் பெறுவதற்கு வேறு உபாயங்களை அறிவதற்கும் அநுஷ்டிப்ப தற்கும் சக்தியற்றவனான அடியேன் ; அநுகூல: அநுகூலனாக ஆக க் கடவேன் என்கிற ஸங்கல்பம் உடையவ னாகவும்; அந்யவர்ஜித: அநுகூலனாயிருப்பதற்கு வேறான ப்ராதிகூல்யத்தை விட்ட வனாகவும் இருந்து; விச்வாஸப்ரார்த்தநாபூர்வம்: நீ என்னை ரக்ஷிப்பாய் என்கிற துணிவும், நீ என்னை ரக்ஷிக்கவேண்டும் என்கிற ப்ரார்த்தனையையும் முன்னிட்டு; ஆத்ம ரக்ஷாபரம்": அடியேனைக் காக்கும் பொறுப்பை த்வயி : தேவரீரிடத்தில் ந்யஸ்யாமி – ஸமர்ப்பிக்கின்றேன்]

முதல் சுலோகத்தில் கூறப்பெற்ற ரக்ஷாபர ஸமர்ப்பண ரூபமான அங்கியைஆநுகூல்ய ஸங்கல்பம் முதலான ஐந்து அங்கங்களுடன் அநுஷ்டிக்க வேண்டும் என்று காட்டா நின்று கொண்டு ஸ்ரீய:பதியான பகவானை விளித்து தாம் அநுஷ்டித்த முறையிலே அருளிச் செய்கிறார் இதில்.

திருகமள் கேள்வனே! தேவரீரை அடைவதற்கு உபாயங்களாகிய கர்மஞான பக்திகள் போன்ற எத்தகைய முதலும் இல்லாதவனும், தேவரீருக்கு என்றுமே அநுகூலனும், பிராதி கூல்யத்தை அடியோடு விட்டவனுமாகியஅடியேன் நன்னம்பிக்கையுடனும்,அடியேனைக்

காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டும், அடியேனை ரக்ஷிக்கும் பரத்தைத் தேவரீரிடத்தில் வைத்து விடுகின்றேன்.

ப்ரபத்திக்கு ஐந்து அங்கங்கள் உண்டு. அவையாவன:—

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் (2) ப்ராதிகூல்ய வர்ஜநம்

(3) மஹாவிச்வாஸம் (4)கோப்த்ருத்வ வரணம் (5) கார்ப்பண்யம் என்பன.

(1) ஆநுகூல்ய ஸங்கல்பம் – எம்பெருமான் திருவுள்ளத்திற்கு உகந்தவற்றையே செய் வதாய் உறுதி கொள்ளல்

(2) ப்ராதிகூல்ய வர்ஜநம் – எம்பெருமான் திருவுள்ளத்திற்கு விபரீதமானவற்றைச் செய்யாதிருக்க உறுதி கொள்ளல்; அல்லது அவற்றைப் புரிய எண்ணங் கொள்ளாமை; அல்லது அவற்றைச் செய்யாது விடுதல்.

(3) மஹாவிச்வாஸம் – எம்பெருமான் நம்மைக் காக்க வல்லவன் என்று தேறித் தவறாது நம்மை ரக்ஷிப்பான் என்று திடமாக நம்புதல்.

(4)கோப்த்ருத்வ வரணம் – பக்தியோகம் முதலிய உபாயங்களைஅநுஷ்டிக்கச்சக்தியற்ற தம் விஷயத்தில் அருள் புரிந்து அவ்வுபாயங்களின் ஸ்தாநத்தில் நின்று பலன் கொடுக்கு மாறு அவனை வேண்டுகை.

(5)கார்ப்பண்யம் – பக்தியோகம் முதலிய உபாயங்களில் தமக்கு அதிகாரமின்மையும், எம்பெருமானைத் தவிர வேறு தெய்வத்திடமோ, மோக்ஷத்தைத் தவிர வேறு பலனிலோ பற்றில்லாமையும் அநுஸந்தித்தல்; அல்லது இவ்வநுஸந்தாநத்தால் தமக்கிருந்த கர்வம் ஒழியப் பெறுதல்; அல்லது எம்பெருமானது கருணை தம்மீது வளர்ந்து ஓங்கும்படி தாழ்ந்து நின்று அஞ்ஜலி நமஸ்காரம் முதலியவற்றைச் செய்தல்

இந்தச் சுலோகத்தில் ‘அநுகூல:’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும், ‘அந்யவர்ஜித:’ என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும், விச்வாஸ ப்ரார்த்தநாரூபம்’ என்றதால் மஹா விச் வாஸம், கோப்த்ருத்வ வரணம் என்பனவும், ‘அகிஞ்சந:’ என்றதால் கார்ப்பண்யமும், ‘ஆத்ம ரக்ஷாபரம் ந்யஸ்யாமி’ என்றதால் ஸாங்க பர ஸமர்ப்பணமும் கூறப்பெற்றன.

“அநாதிகாலம் தேவரீருக்கு அநிஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந் தேன். இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்க க் கடவேன்; ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன்;தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதல் இல்லை; தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன்; தேவரீரே உபாயமாக வேண்டும்; அஷ்ட நிவ்ருத்தியிலாதல், இஷ்ட ப்ராப்தியிலாதல் இனிபரம் உண்டோ'” என்பது இஸ் ஸாங்கா நுஷ்டாநத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிச் செய்யும் சுருக்கு.

நின்னருளாங் கதியன்றி மற்றொன் றில்லே
னெடுங்காலம் பிழைசெய்த நிலைக ழிந்தே
னுன்னருளுக் கினிதான நிலையு கந்தே
னுன்சரணே சரணென்னுந் துணிவு பூண்டேன்
மன்னிருளாய் நின்றநிலை யெனக்குத் தீர்த்து
வானவர்தம் வாழ்ச்சிதர வரித்தே னுன்னை
யின்னருளா லினியெனக்கோர் பரமேற் றாம
லென்றிருமா லடைக்கலங்கொ ளென்னை நீயே

(தேசிகமாலை, அமிருதசுவாதினி—31)

[எனக்குத் தலைவனான எம்பெருமானே! தேவரீருடைய கிருபையாகிய கதியைத் தவிர அடியேனுக்கு வேறு கதியில்லை;அநாதிகாலமாக தேவரீர் திருவடிகளில் அபராதம் செய்து வந்த நிலை இப்போது நீங்கிவிட்டது. தேவரீர் கிருபையைப் பெறுவதற்கு ஸாதநமாக தேவரீர் திருவடிகளில் ப்ரபத்தியை அநுஷ்டித்தேன் என் அக்ஞாநத்தை ஒழித்து நித்யஸுரி களின் வாழ்வை அடியேனுக்குத் தருமாறு தேவரீரை வேண்டிக் கொண்டேன். இனிமேல் அடியேனுக்கு ஒரு பொறுப்பும் வைக்காமல் அடியேனைக் காக்கவேண்டிய வஸ்துவாக ஏற்றுக் கொள்வாயாக. இதில் ‘நின்னருளாங் ……….இல்லேன்’ என்றதால் கார்ப்பண்ய மும், ‘நெடுங்காலம் … கழிந்தேன்’ என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும், ‘உன்னருளுக்கு … உகந்தேன்’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்பமும்,’ உன்சரணே … பூண்டேன்’ என்ற தால் ‘மஹாவிச்வாஸமும்’, ‘மன்னிருளாய் … வரித்தேனுன்னை’ என்றதால் ‘கோப்த்ருத்வ வரணமும்’ ‘இன்னருளால் … என்னைநீயே’ என்றதால் ஆத்ம ஸமர்ப் பணமும் கூறப் பெற்றுள்ளன. எனவே, ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை இப்பாசுரம் விளக்குதல் தேற்றம்]

என்ற இவர் பாசுரம் இப்பொருளையே விளக்குதல் காண்க.

உகக்குமவை யுகந்துகவா வனைத்துமொழிந் துறவுகுண
மிகத்துணிவு பெறவுணர்ந்து வியன்காவ லெனவரித்துச்
சகத்திலொரு புகலில்லாத் தவமறியேன் மதிட்கச்சி
நகர்க்கருணை நாதனைநல் லடைக்கலமா யடைந்தேனே.

{தேசிகமாலை, அடைக்கலப்பத்து-5}

[உலகில் வேறோர் உபாயத்தையும் செய்யமுடியாதவனும், மற்றவுபாயத்தைப் பற்றிய அறிவற்றவனுமான அடியேன், பேரருளாளன் உகந்தவற்றைச் செய்வதையே விரும்பி, அவன் உகவாத அனைத்தையும் செய்யாது நீங்கி, பலன் தருவதில் மிக்க உறுதியாகிய மஹாவிச்வாஸத்தை அடைவதற்கு ஸாதகமாக பேரருளாளனுக்கும், ஜீவாத்மாவுக்கும் உள்ள சம்பந்தத்தையும், அவனுடைய குணங்களையும் அநுஸந்தித்து, அவனையே அதிசயிக்கத் தக்க ரக்ஷகனாகவேண்டும் என்று பிரார்த்தித்து, அழகிய மதிள்கள் சூழ்ந்த காஞ்சியின் கருணையே வடிவாக க் கொண்ட ஸ்வாமியான பேரருளாளனை சிறந்த கதியாகப் பற்றினேன். இதில் ‘உகக்குமவையுகந்து’ என்றதால் ஆநுகூல்ய ஸங்கல்ப மும், ‘உகவாவனைத்துமொழித்து’என்றதால் ப்ராதிகூல்ய வர்ஜநமும், ‘மிகத் துணிவு பெறவுணர்ந்து’ என்றதனால் மஹாவிச்வாஸமும் ‘காவலென வரித்து’ என்றதனால் கோப்த்ருத்வ வரணமும் ‘புகலில்லாத் தவமறியேன்’ என்றதால் கார்ப்பண்யமும் ‘அடைக்கலமாயடைந்தேன்’ என்றதால் அங்கியாகிய ஆத்ம ஸமர்ப்பணமும் கூறப்பெற் றுள்ளன. எனவே பேரருளாளன் திருவடிகளில் ஐந்து அங்கங்களுடன் கூடிய ப்ரபத்தியை அநுஷ்டித்தேன் – என்றபடி]

என்ற பாசுரமும் இவண் அநுஸந்தேயம்.

_____ தொடரும் ------------------

புதன், 17 ஜூன், 2009

சரணாகதிமாலை 1

ஸ்ரீ:

ந்யாஸ தசகம்

ஸ்ரீமாந் வேங்கடநாதார்ய:
கவிதார்க்கிக கேஸரீ,
வேதாந்தாசார்ய வர்யோ மே
ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி.
{உத்தம ஞான ஸம்பத்தையுடையவரும், வேதாந்தங்களுக்கு சாஸ்த்ரோக்தமான பொருள் உரைப்பதில் பிரஸித்தி பெற்றவரும், திருவேங்கடநாதன் என்னும் திருநாமத்தை வஹிப்பவரும், கவனம் பண்ணுபவர், ஹேதுவாதம் செய்பவர் இவர்கள் எத்திறமையோராயினும் அவர்களுக்கெல்லாம் சிங்கம் போன்றவருமான நம் தூப்புல் வேதாந்த தேசிகன் அடியேன் மனத்திலே எப்போதும் வீற்றிருக்கக் கடவர்.}

அஹம் மத்ர க்ஷணபரோ
மத்ரக்ஷண பலம் ததா
ந மம ஸ்ரீபதேரேவேத்
யாத்மாநம் நிக்ஷிபேத் புத: (1)

[ அஹம் -- அடியேனும், ஆத்மஸ்வரூபம்; மத்ரக்ஷணபர: அடியேனை ரக்ஷிக்கும் பொறுப்பும், எனது ரக்ஷணத்தின் சுமையும் ; ததா -- அவ்வாறே, அப்படியே : மத்ரக்ஷண பலம் -- அடியேனை ரக்ஷிப்பதால் உண்டாகும் பயனும், எனது ரக்ஷணத்தால் உண்டாகும் பலமும் : ந மம -- அடியேனுடையவை அன்று ; நான் எனக்கு உரியேன் அல்லேன் ; ஸ்ரீபதே: ஏவ -- ஸ்ரீய:பதியான நாராயணன் உடையவையே, ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கே சேஷம், அவனே இவைகட்கெல்லாம் கடவன்; இதி -- என்று, இவ்வாறு ; புத: பண்டிதன் ; ஆத்மாநம் -- தன்னை ; நிக்ஷிபேத் -- ஸமர்ப்பிக்கக் கடவன்]

"அடியேன், அடியேனைக் காக்கும் பரம், அடியேனைக் காப்பதன் பலம், இவையனைத்தும் அடியேனுடையதல்ல, எல்லாம் திருவுக்கும் திருவாகிய திருமாமகள் கேள்வனுடையனவே" என்று தன்னைப் பகவானிடம் ஒப்படைத்து விடவேண்டும்.
இச்சுலோகத்தால் அங்கியினுடைய பிரிவான ஸ்வரூபஸமர்ப்பணம், பலஸமர்ப்பணம் என்கிற இரண்டு தளத்துடன் பரஸமர்ப்பணம் பண்ணக் கடவது என்றும், இம்மூன்று ஸமர்ப்பணத்திலும் பரஸமர்ப்பணமே ப்ரதானம் என்றும் கூறப்பெறுகின்றது.
நான் எனக்கு உரியேன் அல்லேன். ஒன்றை நிருபாதிகமாக என்னது என்னவும் உரிமையில்லை. என்னையும் என்னது என்று பேர்பெற்றவற்றையும் உடைமையையும், நான் ஸ்வதந்த்ரனாய்க் காப்பாற்றிக்கொள்ளத் தகுதியுள்ளவனும் அல்லன். நான் ப்ரதாநபலியும் அல்லேன். என்னுடைய ஆத்மாத்மீயங்களும் ஸர்வஸ்வாதியான அகாரவாச்யனதே. இவற்றினுடைய ரக்ஷணபரமும் ஸர்வரக்ஷகனான அவனதே. ரக்ஷணபலமும் ப்ரதாநபலியான அவனதே. அஹம் -- அடியேனும் அடியேனைச் சேர்ந்தவைகளும், நான், ஆத்மஸ்வரூபம்.
"அடியேனும், அடியேனைச் சேர்ந்தவைகளும் எனக்குச் சேஷம் அல்ல. நான் எனக்கு உரியேன் அல்லேன். ஸர்வசேஷியான ஸ்ரீமந்நாராயணனுக்கே எல்லாம் சேஷம்" என்று அநுசந்திக்கை "ஸ்வரூபஸமர்ப்பணம்" இது இம்மை யிலும் மறுமையிலும் உளதாம். "அடியேனையும் அடியேனுடையனவாகப் பேர்பெற்றவற்றையும் அடியேன் ஸ்வதந்த்ரனாய் ரக்ஷித்துக் கொள்ளச் சக்தி யற்றவன். தகுதியில்லாதவன். இவற்றினுடைய ரக்ஷணபரமும் அந்த ஸ்ரீய:பதி யுனுடையதே" என்று அநுஸந்தித்தல் "பரஸமர்ப்பணம்". இந்தச் சரீர முடிவில் மற்றொரு திவ்ய சரீரத்தை அடைந்து அர்ச்சிராதி மார்க்கத்தினால் பரமபதத்தைச் சேர்ந்து அங்கு ஸ்ரீவைகுண்டநாதனை அநுபவித்து அதன் போக்கு வீடாகக் கைங்கர்யம் அடைதல் பலம். இதுவும் ப்ரதான பலியான ஸ்ரீமந்நாராயணன் உடையதே" என்று அநுஸந்தித்தல் "பலஸமர்ப்பணம்" .
ஸ்ரீபதேரேவ -- என்றதால் இந்த ஸமர்ப்பணத்தில் திருமகளாரோடு கூடிய நாராயணனே உத்தேச்யன் என்று சொல்லப் பெற்றதாயிற்று.
"இனி, 'மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்' (1-3-1) என்று தொடங்கி 'திருவுடையடிகள்' (1-3-8) என்றும் ,'மையகண்ணாள் மலர் மேலுறை வாளுறை மார்பினன்' (4-5-2) என்றும், 'நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பன்'(4-5-8) என்றும், 'கோலத்திருமாமகளோடுன்னைக் கூடாதே'(6-9-3) என்றும் சொல்லிக் கொண்டுபோந்து, 'திருவாணை' (10-10-2) என்றும், 'கோலமலர்ப் பாவைக்கன் பாகிய வென்னன்பே'(10-10-7) என்றும் தலைக்கட்டுகையாலே, ஸ்ரீமானான நாராயணனே பரதத்துவம் என்றும் சொல்லிற்று. இத்தால், நம் ஆசார்யர்கள் ரஹஸ்யத்திற் பதத்வயத்தாலும் அருளிச் செய்துகொண்டு போகும் அர்த்தத்திற்கு அடி இவ்வாழ்வாராயிருக்குமென்றதாயிற்று. ஆச்ரயணவேளையிலே 'மலர்மகள் விரும்பும் நமரும் பெறலடிகள்'(1-3-1) தொடங்கி போகவேளையிலே 'கோல மலர்ப் பாவைக் கன்பாகிய வென்னன்பே' என்று சொல்லுகையாலே, ஆச்ரயண வேளையோடு போகவேளையோடு வாசியற ஒருமிதுநமே உத்தேச்யமென்னுமிடம் சொல்லிற்றாயிற்று ; *** [ஈடு. முதல் ஸ்ரீய:பதி.]
புத: -- அநேக காலம் குருகுல வாஸம் பண்ணி மந்திர மந்திரார்த்தங்களை ஆசார்யன் மூலமாக நன்கு உணர்ந்து , தத்வ, உபாய புருஷார்த்தங்களைப் பற்றிய விவேகம் பெற்றவன்.
"முமுக்ஷுவான அதிகாரிக்கு இவ்வுபாயத்தில் அங்கிஸ்வரூபமாவது -- ஆபரணத்தை உடையவனுக்கு அவன்தானே ரக்ஷித்துக் கொண்டு பூணக்கொடுக்குமாபோலே யதாவஸ்திதமான ஆத்மநிக்ஷேபம். அதாவது -- ப்ரணவத்தில் ப்ரதமாக்ஷரத்தில் ப்ரக்ருதி ப்ரத்யயங்களாலே ஸர்வரக்ஷகனாய், ஸர்வசேஷியாய்த் தோற்றின ஸர்வேச்வரனைப்பற்ற ஆத்மாத்மீய ரக்ஷணவ்யாபாரத்திலும், ஸ்வாதீநமாகவும் ஸ்வார்த்தமாகவும் தனக்கு அந்வயம் இல்லாதபடி பரந்யாஸ ப்ரதாநமான அத்யந்த பாரதந்த்ரிய விசிஷ்டசேஷத்வ அநுஸந்தாநவிசேஷம். 'ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத்' என்று சோசிதமான இவ்வநுஸந்தாந விசேஷத்தை அநுஷ்டிக்கும்படி :-- சேஷியாய், ஸ்வதந்த்ரனான ஈச்வரன் தன் ப்ரயோஜனமாகவே தானே ரக்ஷிக்கும்பணிக்கு ஈடாக அநந்யார்ஹ , அநந்யாதீத சேஷபூதனாய் அத்யந்த பரதந்த்ரனான தான் 'ஆத்மாபி சாயம் நமம' என்கிறபடியே எனக்குரியேனல் லேன், ஒன்றை நிருபாதிகமாக என்னது என்னவும் உரியேன் அல்லேன், 'ஸ்வயம் ம்ருத்பிண்ட பூதஸ்ய பரதந்த்ரஸ்ய தேஹிந: ஸ்வரக்ஷணேப்ய சக்தஸ்ய கோஹேது: பாரக்ஷணே' என்கிறபடியே என்னையும் என்னது என்று பேர் பெற்றவற்றையும் நானே ஸ்வதந்த்ரனாயும், ப்ரதாநபலியாயும் ரக்ஷித்துக் கொள்ள யோக்யனுமல்லேன், 'ஆத்மா ராஜ்யம் தநஞ்சைவ களத்ரம் வாஹா நாநிச, ஏதத் பகவதே ஸர்வ மிதி தத்ப்ரே க்ஷிதம் ஸதா' என்று விவேகிகள் அநுஸந்தித்த க்ரமத்திலே என்னுடைய ஸ்வாத்மாத்மீயங்களும் அவனதே, 'ஆத்மாத்மீய பரந்யாஸோ ஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே' என்கையால் இவற்றினுடைய ரக்ஷணபரமும்'நஹி பாலந ஸாமர்த்ய ம்ருதே ஸர்வேச்வரம் ஹரிம்' என்கிறபடியே ஸர்வரக்ஷகனான அவனதே. 'தேந ஸம்ரக்ஷ்ய மாணஸ்ய பலே ஸ்வாம்ய வியுக்ததா, கேசவார்ப்பண பர்யந்தாஹ்யாத்ம நிக்ஷேப உச்யதே' என்கிறபடியே ரக்ஷணபலமும் ப்ரதாநபலியான அவனதே என்று பாவிக்கை. முமுக்ஷுமாத்ர ஸாமாந்யம் ஸ்வரூபாதி ஸமர்ப்பணம், அகிஞ்சநே பரந்யாஸ ஸ்த்வதிகோங்கிதயா ஸ்தித: அத்ர ரக்ஷா பரந்யாஸஸ் ஸமஸ்ஸர்வபலார்த்திநாம், ஸ்வரூப பல நிக்ஷேப ஸ்த்வதிகோ மோக்ஷ காம்க்ஷிணாம்.
பலார்த்தியாய் உபாயாநுஷ்டாநம் பண்ணுகிற ஜீவன் பலியாயிருக்க ஈச்வரன் இங்கு ப்ரதாநபலியானபடி எங்ஙனே என்னில் :-
அசித்தின் பரிமாணங்கள் போல சித்துக்குத்தான் கொடுத்த புருஷார்த்தங்களும் ஸர்வசேஷியான தனக்கு உகப்பாய் இருக்கையாலே ஈச்வரன் ப்ரதாநபலி ஆகிறான். அசேதநமான குழமணனை அழித்துப்பண்ணியும், ஆபரணம் பூட்டியும் அழகு கண்டு உகக்கிறதோடு சேதநமான கிளியைப் பஞ்சரத்தில் வைத்துப் பால் கொடுத்தும், வேண்டினபடி பறக்கவிட்டும் அதில் உகப்பு கண்டு உகக்கிறதோடு வாசியில்லையிறே நிரபேக்ஷரான ரஸிகர்க்கு. ஆனபின்பு இங்கு ஸ்வநிர்ப்பரத்வ பர்யந்த ரக்ஷகை கார்த்ய பாவநம், த்யக்த ரக்ஷாபல ஸ்வாம்யம் ரக்ஷ்யஸ்யாத்ம ஸமர்ப்பணம். ஸ்தோத்ரத்தில் 'வபுராதிஷு யோபி கோபிவா குணதோ ஸா நி யதா ததா வித: ததயந்தவ பாதபத்மயோரஹ மத்யைவ மயா ஸமர்ப்பித:' என்கிறதுக்குத் தாத்பர்யம் என் என்னில் :-- முத்ரையிட்டு இருக்கிற ராஜாவின் கிழிச்சீரை ஒரு ஹேதுவாலே தன் கையிலே இருந்தால் ராஜாகைக் கொள்ளும் என்று உள்ளிருக்கிற மாணிக்கத்தின் ஸ்வரூப ஸ்வபாவங்களை விசதமாக அறியாதே கிழிச்சீரையோடே மீளக் கொடுக்குமாபோலே தேஹாத்யதிரிக்தாத்மாவின் ஸ்வரூப ஸ்வபாவ ஸ்திதிகளை விசதமாக விவேகிக்க அறியாதாரும் உள்ள அறிவைக் கொண்டு ஆத்ம ஸமர்ப்பணம் பண்ணினால் அவ்வளவாலும் அநாதிகாலம் பண்ணின ஆத்மாபஹார சௌர்யத்தால் உண்டான பகவந் நிக்ரஹம் சமிக்கும் என்கிற சாஸ்த்ரார்த்தத்திலே திருவுள்ளம். இதுக்குமேல் 'மம நாத யதஸ்தி' என்கிற ச்லோகத்தில் இஸ்ஸமர்ப்பணத்தைப் பற்ற அநுஸந்தேயம் பண்ணிற்றும் ஸ்வரூபாதிவிவேகம் அன்றிக்கே ஸமர்ப்பிக்கப் புக்காலும் தன்னுடைய த்ரவ்யத்தை ராஜாவுக்கு உபஹாரமாகக் கொடுப்பாரைப் போலே, என்னது என்கிற அபிமாநத்தோடே ஸமர்ப்பிக்கில் ஆத்மாபஹார சௌர்யம் அடியற்றதாகாது என்கைக்காக அத்தனை அல்லது சாஸ்த்ர சோசிதமாய்த் தாம் அநுஷ்டித்த ஸமர்ப்பணத்தை அஜ்ஞக்ருத்யம் ஆக்கினபடி அன்று. ஆக இரண்டு ச்லோகத்தாலும் யதாவஸ்தித ஸ்வரூபாதி விவேகம் இல்லையே ஆகிலும் 'ந மம' என்று ஸ்வஸம்பந்தம் அறுக்கையே 'அஹமபி தவைவாஸ்மி ஹி பர:' என்னும்படி பரஸமர்ப்பண ப்ரதாநமான சாஸ்த்ரார்த்தத்தில் ஸாரம் என்றது ஆயிற்று. இப்படி சேஷத்வ அநுஸந்தாந விசிஷ்டமான ஸ்வரக்ஷாபர ஸமர்ப்பணம் த்வயத்தில் உபாயபரமான பூர்வகண்டத்தில் மஹாவிச்வாஸ பூர்வக கோப்ருத்வ வரணகர்பமான சரண சப்த உபலிஷ்ட க்ரியாபதத்திலே சேர்த்து அநிஸந்திக்க ப்ராப்தம். இப்படி இவை ஆறும் இம் மத்த்ரத்திலே விமர்ச தசையில் தனித்தனியே அநுஸந்தித்தாலும், வாக்யார்த்த ப்ரதிபத்தி தசையில் அல்லாத வாக்யார்த்தங்கள் போலே ஸாங்கமான ப்ரதாநம் ஏகபுத்யாரூடமாம். ஆகையால் யதாசாஸ்த்ரம் ஸாங்கப்ரதாந அநுஷ்டாநம் ஸக்ருத்கர்த்தவ்யம் ஆயிற்று.அநேக வ்யாபார ஸாத்யமான தாநுஷ்கனுடைய லக்ஷ்ய வேதார்த்தமான பாணமோக்ஷம் க்ஷண க்ருதயம் ஆகிறாப்போலே இவ் ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் இருக்கும்படி என்று ச்ருதி ஸித்தம். இப் பரஸமர்ப்பணமே ப்ரபத்தி மந்த்ரங்களில் ப்ரதாநமாக அநுஸந்தேயம் என்னும் இடத்தை 'அநநைவ து மந்த்ரேண ஸ்வாத்மாநம் மயி நிக்ஷிபேத், மயி நிக்ஷிப்த கர்த்தவ்ய: க்ருத க்ருத்யோ பவிஷ்யதி' என்று ஸாத்யகி தந்த்ரத்திலே பரஸ்வீகாரம் பண்ணுகிற சரண்யன் தானே தெளிய அருளிச் செய்தான். இதில் ஸாங்காநுஷ்டாநமாய் அற்றது - கர்த்ருத்வ த்யாக, மமதா தியாக, பலத்யாக, பலோபயத்வத்யாக பூர்வகமான ஆநுகூல்ய ஸங்கல்பாத்ய அர்த்தாநு ஸந்தாநத்தோடே குருபரம்பரா உபஸத்தி பூர்வகத்வயவசந முகத்தாலே ஸ்வரூப பலந்யாஸ கர்பமான ஆத்ம ரக்ஷாபர ஸமர்ப்பணம் பண்ணுகை. இக்கர்த்ருத்வ த்யாகத்துக்கு நிபந்தநம் தன் கர்த்ருத்வமும் அவன் அடியாக வந்தது என்று தனக்கு யாவதாத் மானபாவியான பகவதேவ பாரதந்த்ரத்தை அறிகை. மமதா த்யாகத்துக்கும் பலத்யாகத்துக்கும் நிபந்தநம் ஆத்மாத்மீயங்களுடைய ஸ்வரூபாநுபந்தி பவதேக சேஷத்வ ஜ்ஞாநம். பலோபாயத்வ த்யாகத்துக்கு நிபந்தநம் சரண்ய ப்ரஸாதமான இவனுடைய அநுஷ்டாநம் ப்ரதாந பலத்துக்கு வ்யவ ஹிதகாரணம் ஆகையும், அசேதநமாகையாலே பல ப்ரதாந ஸங்கல்ப ஆச்ரயம் அல்லாமையும், ஈச்வரன் பலோபாயம் ஆகிறது ஸஹஜ ஸௌ ஹார்த்தத்தாலே கரணகளேபர ப்ரதாநந் தொடங்கி த்வயோச்சாரண பர்யந்தமாக ஸர்வத்துக்கும் ஆதி காரணம் ஆன தானே ப்ரஸாத பூர்வக ஸங்கல்ப விசேஷ விசிஷ்டனாய்க் கொண்ட வ்யவஹித காரணம் ஆகையாலும், உபயாந்த சூந்யனுக்கு அவ்வோ உபாயஸ்தாநத்திலே நிவேசிக்கையாலும். இங்ஙன் இருக்கைக்கு அடி தர்மிக்ராஹகம் ஆன சாஸ்த்ரத்தாலே அவகதமான வஸ்துஸ்வபாவம் ஆகையால் இவ்வர்த்தம் யுக்திகளால் சலிப்பிக்க ஒண்ணாது. இஸ்ஸாங்காநுஷ்டாநத்துக்கு நடாதூர் அம்மாள் அருளிச் செய்யுஞ் சுருக்கு: -- அநாதிகாலம் தேவரீருக்கு அநுஷ்டாசரணம் பண்ணுகையாலே ஸம்ஸரித்துப் போந்தேன், இன்று முதல் அநுகூலனாய் வர்த்திக்கக் கடவேன், ப்ரதிகூலாசரணம் பண்ணக் கடவேனல்லேன், தேவரீரைப் பெறுகைக்கு என் கையில் ஒரு கைம்முதல் இல்லை, தேவரீரையே உபாயமாக அறுதியிட்டேன், தேவரீரே உபாயமாகவேணும், அநிஷ்டநிவ்ருத்தியிலாதல் இஷ்டப்ராப்தி யிலாதல் எனக்கு இனி பரம் உண்டோ? -- என்று. இவ்விடத்தில் ஆநுகூல்ய ஸங்கல்பாதிகள் உபாய பரிகரமாய் ஸக்ருத்தாய் இருக்கும். மேல் இவன் கோலின அநுகூல வ்ருத்யாதிகளோடு போருகிற இடமும் உபாய பலமாய் யாவதாத்ம பாவியாய் இருக்கும்.. இவற்றில் பிராதிகூல்யவர்ஜநமும் அம்மாள் அருளிச் செய்தபடியே ஆநுகூல்ய ஸங்கல்பம் போலே ஸங்கல்ப ரூபம் ஆனாலும் ஸக்ருத் கர்த்தவ்யம் என்னும் இடம் 'அபாயேப்யோ நிவ்ருத்தோஸ்மி' என்கிறபடியே அபிஸந்தி விராமம் ஆதல் ப்ராதிகூல்ய ஸ்வரூப நிவ்ருத்தியாதல் ஆனாலும் அதில் ப்ரதமக்ஷணம் அங்கமாய் மேலுள்ளது பலமாகக் கடவது. இப்படி விச்வாஸத்திலும் பார்ப்பது.

ப்ரவ்ருத்தி ரநுகூலேஷு நிவ்ருத்திச்சாந்யத: பலம்
ப்ராப்த ஸுக்ருதாச் சஸ்யாத் ஸங்கல்பேச ப்ரபத்தித:
ஆகையால் இருந்த நாளில் நிரபராத கைங்கர்யத்தையும், ப்ராரப்த சரீராநந்தரம் மோக்ஷத்தையுஞ் சேர பலமாகக் கோலி ப்ரபத்தி பண்ணுவார்கள் நிபுணர்.
அறவே பரமென் றடைக்கலம் வைத்தன ரன்றுநம்மைப்
பெறவே கருதிப் பெருந்தக உற்ற பிரானடிக்கீ
ழுறவே யிவனுயிர் காக்கின்ற வோருயி ருண்மையைநீ
மறவே லெனநம் மறைமுடி சூடிய மன்னவரே.
[வேதாந்தமாகிய ஸாம்ராஜ்யத்தில் முடிசூடி நிற்கின்ற அரசர்களாகிய நம் ஆசார்யர்கள் தன் ஸம்பந்தம் பொருந்திய சேதநனுடைய ஸ்வரூபத்தைக் காப்பவனும், உலகுக் கெல்லாம் ஒரே அந்தர்யாமியாய் இருப்பவனுமான எம்பெருமானுடைய ஸ்வபாவத்தை நீ மறவாதே என்று சிக்ஷித்து, அநாதியாக நம்மை அடைவதற்கே ஊற்றம் உடையவனாய் இருந்து , அளவற்ற கிருபையை வைத்தவனாகிய எம்பெருமானுடைய திருவடியின் கீழ் சேதநனுடைய பொறுப்பு அற்றுப்போக வேண்டும் என்று நினைத்து ரக்ஷிக்கப்பட வேண்டிய வஸ்துவாக ஸமர்ப்பித்தனர்] {ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், ஸாங்க ப்ரபதநாதிகாரம்.} என்றதன் சுருக்கமே இம் முதல் சுலோகம்.
மேலும் இந்தச் சுலோகத்தின் பொருளை
"எனக்குரிய னெனதுபர மென்பே றென்னா
திவையனைத்து மிறையில்லா விறைக்க டைத்தோம்"
----(தேசிகமாலை, அமிருதரஞ்சனி 8)
{நானே எனக்கு ஸ்வாமி. என்னை ரக்ஷிக்குங் கடமையும் என்னுடையதே. அதன் பலனும் என்னுடையதே." என்று நினையாமல் ஸ்வரூபம் பரம் பலன் எல்லாவற்றையும் தனக்கு ஒரு நாயகன் இல்லாத பகவானிடம் ஸமர்ப்பித்தோம் என்று இவர்தாமே அருளிச் செய்துள்ளதும் காண்க}

செவ்வாய், 16 ஜூன், 2009

பசும்பொன்தேவர்


மதுரை ஆடிவீதி திருவள்ளுவர் கழகத்தில் தேவர் ஆற்றிய திருக்குறள் சொற்பொழிவின் இரண்டாம் பகுதி.

" .... அறிஞர் பெருமக்களே! இந்தத் திருவள்ளுவர் கழகத்தில், குறிப்பாக உங்கள்முன் உரையாற்றுவதை அடியேன் பெறற்கரிய பெருமையாக க் கருதுகின்றேன். திருவள்ளுவப் பெருந்தகை அருளிய 1330 அருங்குறளும் ஒரு பெரிய அரிய அறிவுக் கடலாகும். திருக்குறளுக்குப் பல விரிவுரைகள் வந்துள்ளன. இன்னும் பல வந்துகொண்டே உள்ளன. வேறு எந்தக் காவியத்துக்கும் இத்தனை உரைகள் வந்ததில்லை. இரண்டு வரிப் பாவிலே பல புதுமைகளைப் புகுத்தி உரையாசிரியர்களையும், ஏனையோரையும் திக்கு முக்காடச் செய்கிற பெருமை திருக்குறளுக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டில் ஒரு குறள் பற்றிய கருத்து அடிக்கடி பேசப்பட்டு வருகிறது.

"தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை"
என்ற அக்குறள் வாழ்க்கைத்துணை நலம் என்ற அதிகாரத்தில் 55வது குறளாக வருகிறது.
பிற தெய்வம் தொழாது தன்னுடைய கணவனை மட்டும் தொழுது நின்று துயில் எழுகின்ற பெண் பெய்யென்று சொன்னால் மழை பெய்யும் என்று இதற்குப் பொருள் கொள்கின்றனர்.
இந்த அரிய குறளின் அடிப்படைக் கருத்தைப் புரிந்து கொள்ளாமல் பல்வேறு பொருள் செய்கின்றார்கள். இதனுடைய பொருள் என்ன? அறத்துப் பாலில் தெய்வம் என்ற சொல் அடிக்கடி வருகிறது.
"தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தார் ஓம்பல் தலை"
இந்தக் குறளிலும் தெய்வம் என்ற சொல் வருகிறது. ஐம்புலத்தாறு என்று ஒரு சிலரும், ஐம்புலத்தார் என்று வ.உ.சியும் இச் சொல்லைப் பிரிக்கின்றனர். வல்லின றகரமும் இடையின ரகரமும் பொருள் கூறும்போது இங்கு இவ்வாறு போட்டி போடுகின்றன. ஐம்புலத்தாரைப் பேணுதல் எனச் சிதம்பரனாரும் வலியுறுத்தி ஐம்புலத்தாறைப் பேணுதல் பொருந்தாது என்று பொருள் கூறியுள்ளார். இந்த வாதத்திற்குள் அடியேன் இப்போது புக விரும்பவில்லை. இதனை எழுதிய பண்டிதர்களும் தவறு செய்திருக்கக் கூடும் என்று கருத இடம் இருக்கின்றது. இதனை இப்போது விட்டுவிடுவோம். இந்தக் குறளில் ஐந்து பேரைக் காட்டிய வள்ளுவப் பெருந்தகை தெய்வம் என்ற சொல்லுக்கு தேவர் என்ற பொருளுடன்தான் எழுதியிருக்கக் கூடும் என்று அடியேன் துணிவுடன் கூறுகின்றேன்.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
என்ற குறள் ஐம்பதாவது குறளாக 'இல்வாழ்க்கை' என்ற அதிகாரத்தில் வருகிறது. இந்தக் குறளிலும் தெய்வம் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. தெய்வத்துள் என்று சொன்னபடியால் இச்சொல் பன்மையைக் குறிக்கும். ஒருமையைக் குறிக்காது. இந்திரன் முதலிய தேவர்கள் என்று பொருள் கொள்ளுமாறு இச்சொல் இங்கு அமைக்கப் பட்டுள்ளது. இல்வாழ்க்கை என்ற அதிகாரத்தில் அமைக்கப்பட்ட இக்குறள் மனிதர்களாகிய நாம் எவ்வாறு வாழ வேண்டும் என்பதையும், அவ்வாறு வாழும்போது நாம் அடையக்கூடிய மறுமைப் பயன்களையும் நன்கு விளக்குகிறது. எனவே தெய்வம் என்ற சொல்லுக்கு தேவர் என்று பொருள் செய்வதை எவரும் மறுக்க இயலாது.
திருக்குறளில் உள்ள முதல் அதிகாரத்தில் கடவுள் வாழ்த்து வருகின்றது. பகவன், வாலறிவன், அறவாழி அந்தணன், இருவினையும் சேரா இறைவன், தனக்குவமை இல்லாதான் போன்ற சொற்களைச் சர்வ வல்லமையுள்ள இறைவனைக் காட்டுவதற்கு வள்ளுவப் பெருந்தகை பெரிதும் பயன்படுத்தியுள்ளார் எனத் துணிந்து கூறலாம். எனவே தெய்வம் என்பதற்கு தேவர் எனப் பொருள் கொள்வதைப் புலவர்களாகிய நீங்கள் மறுக்க மாட்டீர்கள் என அடியேன் நம்புகிறேன். ஆகவே தெய்வம் என்ற சொல்லைக் கடவுள் வாழ்த்து என்ற அதிகாரத்தில் தெய்வம் என்று வள்ளுவப் பெருந்தகை உபயோகப் படுத்தவில்லை. கடவுள் என்பவர் இறைவன். அவர் சர்வ வல்லமை உடையவர். அவருக்கு ஈடாக வேறு எவரையும் சொல்ல முடியாது என்ற கருத்தில்தான் வள்ளுவர் பயன்படுத்தி இருக்க வேண்டும் என்பதை முதலிலேயே குறிப்பிட்டேன். ஆன்மீக க் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டால்தான் திருக்குறளுக்குச் சரியான பொருந்தும் உரை காண முடியும். இல்லையெனில் தவறான உரையே சொல்ல வேண்டி இருக்கும்.
தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
என்ற குறளில் உள்ள தெய்வம் தொழாள் என்ற சொல்லுக்கு கடவுளைத் தொழ மாட்டாள் என்று பொருள் காண்பது பெருங் குற்றமாகும். இதனை அறிஞர் பெருமக்கள் குறிப்பாகத் தமிழர்கள் ஒருபோதும் ஓப்புக் கொள்ளமாட்டார்கள். தமிழகத்தில் பிறந்த எந்தப் பெண்ணும் எல்லாம் வல்ல இறைவனைத் தொழ மாட்டாள் என்று பொருள் வருமாறு உரை செய்வது பெரும் பிழையாகும். இது தவறாகும். சிந்தித்துச் சீர் தூக்கிப் பார்க்கையில் அத்தகைய பொருள் பெரும் பிழையாகும். தெய்வம் என்பது தேவர் என்ற பொருளில் வந்தது என்று கூறி என் உரையை முடிக்கின்றேன்.

படித்து விட்டீர்களா? சரி ! உங்களில் சிலருக்காவது நான் ஏன் இதை இங்கு பதிந்தேன் என ஐயம் ஏற்பட்டிருக்கும். -- வேண்டும். ஆஹா! எங்கள் மண்ணில் பிறந்த வீரத்திருமகன் இலக்கிய உலகிலும் தன் தடம் பதித்துச் சென்றிருக்கிறார் எனக் காட்டவா? பலரறியாத அவரது தமிழார்வத்தைத் தெரியப் படுத்த வேண்டும் என்பது எனது ஆசைதான். ஆனால் அதையும் மீறினது ஒன்று உண்டு. அரசியல்வாதி என்றாலே முரண்பாடுகளும் அவருடன் ஒட்டி வரும் என்பதை வெளிப்படுத்த இதைப் பயன்படுத்திக் கொண்டேன். அது என்ன முரண்பாடு எனப் புருவம் நெளிப்போர் தயவு செய்து சிரமம் பாராமல் என்னுடைய முந்தைய பதிவை மீண்டும் ஒரு முறை ஊன்றிப் படிக்க வேண்டுகிறேன். அப்படிப் படித்தாலேயே அது எளிதில் விளங்கிவிடும். அது மட்டுமல்ல ஒரு ஆராய்ச்சி எப்படி அமையக் கூடாது முன்னோர்கள் கருத்து எப்படி அணுகப் படக்கூடாது என்பதற்கும் தேவர் பெருமகனாரின் திருக்குறள் உரை ஒரு நல்ல வழிகாட்டியாக இருப்பதையும் எளிதில் உணரலாம்.

மந்த புத்திக்காரனான அடியேனுக்கே முதல் வாசிப்பிலேயே புலனான அந்த முரண்பாடு உங்களுக்கு -- தமிழிலும், சம்ப்ரதாயத்திலும் அறிஞர்களாக இருக்கும் உங்களுக்கு--- கண்டிப்பாகத் தென்பட்டிருக்கும். இருந்தாலும், அறியாதவனாகிய என் கருத்துக்கள் சரிதானா என்பதை நீங்கள் சான்றளிக்க இங்கு அதைச் சுட்டிக் காட்டுகிறேன்.

தேவர் எடுத்தாண்ட இரண்டு குறள்களிலும் "தெய்வம்" உண்டு. ஆனால், முதல் குறளிலே தெய்வம் என்பதை சர்வ வல்லமையுள்ள கடவுள் என்று கொண்டு அப்படிப்பட்ட தெய்வத்தால் ஆகாத செயலே கிடையாத நிலையில் 'தெய்வத்தால் ஆகாது' என எழுதியது தவறு என வாதிட்டு, அது 'தெய்வத்தால் ஆகும்' என்றுதான் இருக்க வேண்டும் என முழங்கியவர், அடுத்த எடுத்துக் காட்டிலே தெய்வம் தொழாள் என்பதில் வரும் தெய்வம் கடவுளைக் குறிக்காது அது தேவர்களைத்தான் குறிக்கும் என உரைப்பது ஒரு முரண்பாடுதானே ? ஆகாது ஆகும் இரண்டும் நேர் நேர் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்? "தெய்வத்துள்" என்பதைப் பன்மையைக் குறிக்கும் எனக் கொண்டு ஆராய்ந்தால் எப்படி உண்மைப் பொருள் தோன்றும்?

அவர் உரை நிகழ்த்திய இடம் மதுரை. நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் பொறுக்காத புலவர் பெருமக்கள் வாழ்ந்த, வாழ்கின்ற ஊர். நிச்சயம் அங்கு கூடியிருந்தோர் அதை கைதட்டி ரசித்திருக்க மாட்டார்கள். தன் அபிமான தலைவர் உரையை மட்டுமே பதிவு செய்திருக்கும் திரு கோவிந்தராஜன் அவையினரின் உணர்வுகளையும், (reactions) சிறிதாவது எழுதி இருந்திருக்கலாம் -- எழுதியிருந்திருக்க வேண்டும். இப்போது அவரைக் கேட்போமென்றால் அவரோ பேச முடியாத நிலையில். எதிர்காலத்தில் இந்த உரையை யாராவது படித்து, "ஆஹா! பாருங்கள் !நம் தலைவர் சொல்லிவிட்டார் ! இனி இப்படித் தான் பொருள் கொள்ள வேண்டும்" என ஓட்டுவங்கி அரசியல்வாதிகள் கிளம்பாமல் இருக்க வேண்டும்.

ஆனாலும் ஒன்றை இன்றைய இளைய தலைமுறை நினைவில் கொள்ள வேண்டும் (ஆமாம் ! உன் வலைக்குள் வரும் மூணே முக்கால் பேர்களில் இரண்டே அரைக்கால் பேர்களுக்கு மூன்று கால்கள் ! இதை எந்த இளைய தலைமுறை படிக்கப் போகிறார்கள் ? அவர்கள் நினைவில் கொள்ள என்று கூடவே இருக்கும் ம.சா. சிரிக்க ஆரம்பித்தாயிற்று) அரசியலிலே நாட்டு விடுதலை இயக்கங்களிலே முழுமையாக அர்ப்பணித்த நிலையிலும் அன்னைத் தமிழுக்கு அவர்கள் பங்கினைச் செய்யத் தவறவில்லை என்பதே அது. இந்த வரியை எழுதும்போது நேற்று அன்பு மருகர் அ.ராஜகோபாலனின் கவிதைத் தொகுப்பில் படித்த இந்த வரிகள் நெஞ்சிலாடுகின்றன.



நாமேதும் செய்ததுண்டா?

செந்தமிழின் சிறப்பைப் பற்றிச்
சிந்தனைப் பட்டி மன்றம்.
சந்தமிகு கம்பன் பாட்டைச்
சான்றாகக் காட்டிச் சென்றார்.
சிந்தையை அள்ளு கின்ற
சிலம்பினைப் பற்றிச் சொன்னார்.
எந்தமிழின் குறளைப் போல
எம்மொழியில் நூலுண் டென்றார்?

வந்தவர்கள் சாலை யோரம்
வாய்பிளந்து கேட்டு நின்றார்.
எந்தப்பிற மொழியும் என்றும்
இனைதமிழ்க் காகா தென்ற
அந்தவுரை முடிந்த போது
ஆறாண்டு நிறைந்தி டாத
எந்தமயன் மகன் கேட்டான்
இவரென்ன செய்தா ரென்று.

அன்றவர்தம் திறமை கொண்டு
அரியபல நூல்கள் யாத்து
நின்றுலகில் தமிழை என்றும்
நிலைத்திருக்கச் செய்தா ரன்றோ?
தின்றுவெறும் பொழுது போக்கித்
தெருவோரம் மேடை போட்டு
நின்றுபழம் பெருமை பேசும்
நாமேதும் செய்த துண்டா?


மதுரைத் தென்றல் வீதியுலா 19 நவம்பர் 2001.

திங்கள், 15 ஜூன், 2009

அடியேன்மீது மிகுந்த பிரியம் கொண்டவர்களில் டெல்லி ஸ்ரீநிவாஸன் ஸ்வாமியும் ஒருவர். அடிக்கடி தன்னிடமிருக்கும் பல நல்ல பழைய தமிழ் நூல்களை எனக்கு அனுப்பி வைப்பார். சமீபத்தில் அவரிடமிருந்து எனக்கு வந்தவைகளுள் "திருமால் அந்தாதி" யும் ஒன்று. சொற்சுவை, பொருட்சுவை பிரமாதமாகச் சொல்லும் வகையில் இல்லாவிட்டாலும்கூட , அது வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற சைவர் எழுதியது என்ற அளவிலே தனிச் சிறப்பு பெறுகிறது. திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத் தலைவர் ப.ரெ.திருமலை அய்யங்கார் இவரைப் பற்றி தான் பதிப்பித்த பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஸ்வாமி தேசிகன் குறித்தும் நிறைய எழுதியுள்ளாராம். சைவராகப் பிறந்தாலும் சமரச மனப்பான்மையுடன், நெற்றியில் திருநீறு, இரு புஜங்களிலும் இருகலைத் திருமண் இவற்றோடேயே காணப்படுவாராம். அவர் இயற்றிய "திருமால் அந்தாதி" புத்தக வடிவில் இங்கு காணலாம்.
Please take note. Since the pdf is converted to flash file on a trial basis, you can view it only upto 1400 hours of 19.6.2009. Please enjoy the effect of reading a book relaxing on your easy chair by simply movinf your mouse on any corner of the page which will curl as the mouse hovers there.



ஞாயிறு, 14 ஜூன், 2009

வளர வேண்டும் போய் வாழ்த்துங்கள்.

ओतो ओतो मोहनकेतो!
क्व नु खलु यातोऽसि?
आहूतोऽसि, नासि, कुतोऽसि?
आखुं गृह्णासि... आऽऽऽ आखुं गृह्णासि १

कोष्णं क्षीरं तवोपनीतम्
आगच्छागच्छ
आगन्तुं ते नेच्छति चित्तं
वाञ्छसि किं ब्रूहि... आऽऽऽ वाञ्छसि किं ब्रूहि २

गेहे गेहे दधिनवनीते
खादसि चौर्येण
पायं पायं पयसः पूरं
पूरितमुदरं ते... आऽऽऽ पूरितमुदरं ते ३





அடியேனின் வழக்கம்போல் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு அபூர்வமான நல்முத்து கண்ணில் பட்டது. அடியேன் எழுதுபவைகளை(?) தொடர்ந்து படிப்பவர்களில் பெரும்பாலோர் ஸமஸ்க்ருதத்தின் மீது அபார பற்று உடையவர்கள் என்பதும், பலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த மொழியைப் பாதுகாத்துப் பரப்புகின்ற முயற்சிகளுக்கெல்லாம் புரவலர்களாக பேருதவி செய்பவர்கள் என்பதும் அடியேனுக்குத் தெரியும். ஆகவே அடியேனது இந்த வேண்டுகோளை இங்கு இடுகிறேன். ஸமஸ்க்ருதத்திலேயே ஒருவர் Blog ஒன்றை நடத்துவதை இன்று கண்டேன். எழுத்துக் கூட்டி வாசித்தும், பக்கத்தில் பாடசாலை வாத்தியாரை வைத்துக் கொண்டு கொஞ்சம் புரிந்து கொண்டதில், அது நல்ல முயற்சியாகத் தெரிந்தது. நிச்சயமாக அவர் வலையை வாசிப்பவர் கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள் என்று அவருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் மொழியின்மீது அவர் கொண்ட பற்றே அவருக்கு இதை அரம்பித்து நடத்துதற்கான காரணமாக இருக்க வேண்டும். கர்னாடகத்தில் பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் ஒரு ஸமஸ்க்ருத தினசரிப் பத்திரிகை 40 வருடங்களாக வந்து கொண்டிருக்கிறதல்லவா? அதைப் போல இந்த மனிதரின் முயற்சியும் வெற்றியடைந்து பல நல்ல விஷயங்களை அவர் தொடர்ந்து தரவேண்டும். அதற்கு நம் ஆதரவை நாம் அளிக்க வேண்டும். ஒரு வலைஞ னுக்கு வாசகர்கள் தரும் ஆதரவுதான் டானிக். ஒரு நாளில் எத்துனை பேர் வந்து படிக்கிறார்கள், அதிலும் எத்தனை பேர் (டெல்லி அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி போல்) உடனுக்குடன் ஆமோதித்தோ மறுத்தோ கருத்துரைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வலைப்பூ எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் கூடும் இல்லையா? அந்த வலைப்பூவுக்குச் செல்ல

http://yaajushi.blogspot.com/

இதைப் படித்துக் கொண்டே இருக்கும்போது கமகமவென வாசனை அடியேன் கவனத்தைத் திருப்பியது. (என்னோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் ஒரு சாப்பாட்டு ராமன் என்பது நன்றாகவே தெரியும். அது தெரியாத வாத்தியார் நல்ல விஷயம் சொல்லிக் கொண்டிருக்கும்போது இப்படி அடுப்பங்கரை கவனமா என்று கோபித்துக் கொண்டு போய்விட்டார்) எங்கேயிருந்து இந்த வாசனை என்று தேடி கடைசியில் நான் எட்டிப் பார்த்தது கமலாவின் அடுப்பங்கரை. அந்த வாசனையை நீங்களும் அனுபவிக்க
http://adupankarai.kamalascorner.com/

போய் எட்டிப் பார்க்கலாம்.