சனி, 27 ஆகஸ்ட், 2011

மறுபடியும் ஞாபகப் படுத்துகிறேன்.

சில நாட்களுக்கு முன்னே இங்கு எழுதியதை, யாஹு குழுமங்களில் அறிவித்ததை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்துகிறேன். வரும் செப்டம்பர் 1ம் நாள் இரண்டு அழகியசிங்கர்களும் ஸ்ரீ ஆதி ஸேதுவுக்கு எழுந்தருளி ஸேது ஸ்நாநம் செய்யவிருக்கிறார்கள். ஏற்கனவே இதை அறிந்து திட்டமிட்டு வரப் போகிறவர்களுக்கு அடியேனது ஸ்வாகதம். P1010684போன 2010 ஏப்ரல் 5ம் நாள் இரண்டு அழகியசிங்கர்களுடனும் ஸ்நாநம் செய்யக் கொடுத்துவைத்தவர்கள் அந்தக் காட்சியை இங்கு க்ளிக் செய்து அனுபவிக்கலாம். http://thiruppul.blogspot.com/2010/04/blog-post_07.html

P1010692சென்ற முறை தவறவிட்டவர்கள் இந்த முறை அவஸ்யம் வரவேண்டும் என்ற காரணத்தாலே விடுமுறை நாளாகப் பார்த்து ஸ்ரீமத் அழகியசிங்கர்கள் ஸேது ஸ்நாந நாளைத் தேர்ந்து எடுத்திருக்கிறார்கள். அவஸ்யம் வந்து விடுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு.

   P1010696

 போன வருடம் இப்படிக் கூடியதெல்லாம் ஒரு கூட்டமா! இந்த முறை பாருங்கள் இன்னொரு ஆடி அமாவாசையோ என்று திருப்புல்லாணிக் காரர்கள் ஆச்சரியப்படும் அளவில் வந்து குவியப் போகிறோம் என்று நீங்களெல்லாம் தயாராயிருப்பீர்கள் என்றும் தெரியும். இப்படி போட்டோ, வீடியோவெல்லாம் போட்டு அழைத்து விட்டு ஆச்ரமத்தில் தங்க இடம் கேட்டால் இடம் இல்லை என்று சொல்கிறீர்களே என்று சிலர் பல்லைக் கடிக்கும் ஓசை கேட்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆசாரிய பக்தி முக்கியம்! அவருடன் ஸ்நாநம் செய்யும் பாக்யம் மிக மிக முக்கியம்! அதனால் தங்க இடம் இல்லை என்றால் என்ன! வேறு என்ன சிரமங்கள் எதிர்வந்தாலும் என்ன! என்று நீங்களெல்லாம் வந்து நிறைந்து ஆசார்யர்கள் மனதை மகிழ்விப்பீர்கள்தானே! ரயில், பஸ் இவைகளில் இடமில்லையானாலும், வான் Van  பிடித்தாவது வந்து கூடியிருந்து மனம் குளிர மாட்டீர்களா என்ன! ஸேதுவைக் கண்ணாலே பார்த்தாலே கிடைக்கும் புண்ணியங்களை ஆதி சேஷனும் கூற முடியாதாம். அதில் நாம் தனியாகத் தீர்த்தமாடினால் சகல பாபங்களும் நிவர்த்தியாகும் என்று ஆசார்யர்கள் எல்லாரும் அருளியிருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஸேதுவில் ஆசார்யர்களுடன் ஸ்நாநம் செய்தால் கிடைக்கப் போகும் நன்மைகளை, புண்யங்களை யாரால் சொல்ல முடியும்? தவறவிடுவீர்களா என்ன?  பயணத்துக்கு ரெடியாயாச்சா?

செவ்வாய், 23 ஆகஸ்ட், 2011

Please send in your feedback

A video shot live in the TV is available here. Please watch it and send your feed backs. Your feedback is a must this time as adiyen plan to cover events atThiruppullani -- especially Srimad Azhakiasingars Sethu Snanam live. Except two, Sri Veeraraghavan and Anbil Srinivasan swamy, all other visitors to this site normally prefer to be silent .Adiyen request your comments will help me to decide to proceed further with adiyen's proposal or to drop it. If anybody experience trouble in adding comments here itself, they may mail me at rajamragu@gmail.com Will you please?
thiruppul on livestream.com. Broadcast Live Free

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

கீதா சாரத் தாலாட்டு 1

||ஸ்ரீ:||
திருவாமாத்தூர்
ஸ்ரீ திருவேங்கடநாதர்   இயற்றிய
கீதா சாரத் தாலாட்டு
ஸ்ரீ கண்ணபிரான் துதி

ஐவகைப் பொருளும் நான்கு
        கரணமும் குணங்கள் மூன்றும்
செய்வினை இரண்டும் ஒன்றி
        யாவரும் திகைப்ப நின்ற
பொய்யிருள் அகல ஞாநப்
        பொருட்கதிர் விரித்த புத்தேள்
கைவளர் ஆழிச் செங்கண்
        கண்ணனைக் கருத்துள் வைப்பாம்.

ஆக்கியோன் பெயரும்,
முதனூற் பெயரும், நூற்பெயரும்
மாதையர்கோன் வேதநவில்
       வாய்வேங் கடநாதன்
காதையுறப் பார்த்தனுக்குக்
        கண்ணனருள் – கீதைக்
கருத்துயர்தா  லாட்டாகக்
          கட்டுரைத்தான் யாரும்
கருத்துயர்தீர்ந் தெய்தக் கதி

நூல்
சீராரும் பரமார்த்த
      தெரிசநத்
தை அருள்செய்யப்
பேராரும் தேசிகராய்ப்
      பெருமானே வந்தவரோ.                               .1.

திருத்தேரில் சாரதியாய்ச்
        சேர்ந்திருந்தும் கீதையினால்
அருச்சுதற்கு மெய்ஞ்ஞானம்
        அனைத்தும்உரை  செய்தவரோ.                 .2.

செஞ்சமரில் பந்துசநம்
       சேதமுறும்  என்றிரங்கி
அஞ்சினவன் பயம்தீர்த்தே
       அமர்செய்யச் சொன்னவரோ                        .3.

சுற்றம்அறில் சோகம்எனச்
          சொல்லினைசற்று அறிந்தவன்போல்
கற்றுணர்ந்த பேர்அதனால்
       கலங்கார்காண் என்றவரோ.                         .4.

கலங்காரோ இறப்புவரில்
       கற்றுணர்ந்த பேரேனும்
மலங்காமல் நான்இருக்கும்
       வகைஉரையும் எனவினவ                         .5.

நீயும்நா னும்புவிமேல்
        நிருபர்களும் மெய்யுணர்வால்
ஆயுங்கால் பிறந்திறப்பது
        ஆர்க்கும்இலை என்றவரோ                    .6.

ஈங்குஎவர்க்கும் பிறந்திறப்பது
        இல்லைஎன்றீர் இவ்வுலகில்
நீங்குபவம்  யார்க்குஇதனை
        நிச்சயமாய்ச் சொல்லுமென                     .7.

இத்தரையில் பிறந்திறப்பது
        எடுத்தஉடற்கு அடுத்தபொறி
நித்தியமா கியஆந்மா                                  
         நின்சொரூபம் என்றவரோ                    .8.

அங்கம்உயர்  இந்தியம்நான்
          அன்றிவேறு எனைக்காணேன்
இங்குயான் வேறுண்டேல்
            எனக்குஅறியப்  புகலும்என             .9.

மெய்உயிர்இந்   தியங்கள்அல்லால்
         வேறுஅறியேன் என்றவனைப்
பைய!அவை யால்அறியப்
           படானும்நீ என்றவரோ                     .10.

தேகம்வேறு  ஆகில்அதைச்
          சேர்ந்ததுஇவண்  ஏதுஎனவே
சோகமே  வினைகருமத்
     தொடர்ச்சியினால்  என்றவரோ              .11.

தேகம்எடா முன்கருமச்
          செயல்வரும்ஆறு ஏதுஎனவே
ஏகமாம் மரமும்வித்தும்
         எனும்முறைபோல் என்றவரோ         .12.


இப்படித் தொடர்கிறது இந்தத் தாலாட்டு. மொத்தம் 103 கண்ணிகளால் அமைந்திருக்கும் இது சங்கிலிபோல் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய் அமைந்திருப்பதால் முழுமையாக ஒரு சிறு மின் நூலாக இங்கு நாளை இடுவேன்.


 நேற்று ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமியின் டெலி உபந்யாஸத்தை இங்கு கேட்கலாம்.

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

சென்னையில் அடியேன்.

நீண்ட நாட்களுக்குப் பின்   அடியேன் அம்மாவைப் பார்ப்பதற்காக சென்னை  வந்திருக்கிறேன்.  இன்று ஒரு மிக நல்ல நாளாக அமைந்தது. நமக்கெல்லாம் தினம் ஒரு Ebook விருந்து படைக்கின்ற ஸ்ரீமதி ஜெயஸ்ரீமுரளிதரன் தாயாரைச் சந்தித்து ஆசிகள் பெறுவதற்காக நங்கநல்லூர் போயிருந்தேன். அங்கு அவர்கள் குடும்பத்தார் அனைவருடைய அன்பு மழையில் நனைந்து,  அப்படியே அங்கு ஸ்ரீ ஹரி ஸ்வாமியின் திருமாளிகைக்கும் செல்லும் பாக்யம் கிடைத்தது. திருமாளிகை என்று சொல்வது தவறு அதை ஒரு திருக்கோவிலாகவே அவர் வைத்திருக்கிறார். அங்கு கண்டவை அடியேன் வர்ணிப்புக்கு அப்பாற்பட்டவை. ஸ்ரீவைணவர்கள் அவஸ்யம் ஒரு முறையாவது அவரது அனுமதி பெற்று அங்கு சென்று ஸேவித்து வரவேண்டியதொரு புனிதமான திருத்தலம் அது.

அங்கிருந்து திருவல்லிக்கேணி திரும்புகையில் வழக்கம்போல நடைபாதைக் கடையில் சில நல்ல புத்தகங்கள் கிடைத்தன. அவற்றுள் “கீதா சாரத் தாலாட்டு”  என்பது ஒன்று, 1980ல் வெளியிடப் பட்டிருக்கிறது.  காரைக்குடி அருகில் இருக்கும் கோவிலூர் ஆதீன வெளியீடு. அதன்

முன்னுரை

                              பிரஸ்தானத் திரயங்களில் ஒன்றாகப் போற்றப் பெறும் பகவற் கீதை”  உலகப் புகழ் மிக்கதொரு மெய்ஞ்ஞானக் களஞ்சியமாகும். பகவான் கண்ணனால் அருச்சுனனுக்கு உபதேசிக்கப் பெற்றது “பகவற் கீதை” . உலகில் பகவற் கீதைக்கு அமைந்துள்ள விரிவுரைகளும் மொழிபெயர்ப்புகளும் கணக்கிலாதனவாகும். இத்தகு மாபெரும் சிறப்பு வாய்ந்த பகவற் கீதையின் மேலாம் தத்துவ உண்மைகளை இன்பத் தமிழில் எளிய முறையில் தாலாட்டுப் பிரபந்த வடிவில் ஆக்கியவர், தொண்டைவள நாட்டில் மாதைப் பதியின் மன்னனாக விளங்கிய திருவேங்கடநாதர் என்னும் மறையோர் ஆவர். இவருக்கு அறிவிலும் அழகிலும் சிறந்த இரு புதல்விகள் இருந்தனர். இவர்களுள் ஒருத்திக்கு மகப் பேறு வாய்க்கப் பெறாமையால் மனம்வருந்தி ஏங்கித் தவித்தனள்.அன்பு மகளின் ஏக்கம் காணச் சகியாத திருவேங்கடநாதர், அழகிய கண்ணன் பதுமை ஒன்றைக் கையினில் கொடுத்து “இதனைத் தொட்டிலில் இட்டு அருமை மைந்தனாகவே கருதித் தாலாட்டிச் சீராட்டிப் பாராட்டி மகிழ்ச்சி பெறுக” என ஆசி கூறியதுடன் தாலாட்டும் பொருட்டு பகவற் கீதையின் சாரமான “கீதா சாரத் தாலாட்டு”ப் பிரபந்தத்தையும் இயற்றியருளினர். அம்மாது நல்லாள் தந்தையின்அருள் வாக்கிற்கேற்ப பதுமையைத் தொட்டிலில் இட்டுச் சீராட்டித் தாலாட்டி இன்புற்றுவர சில ஆண்டுகளில் சற்புத்திரப் பேறு வாய்த்து அளவிலா ஆனந்தம் அடைந்தனள் என்பது வரலாறு.இத்தாலாட்டு மெய்யுணர்வு ஊட்டக்கூடிய தத்துவச் செல்வங்கள் நிறைந்தது. படிப்பவர்க்கு எளிய முறையில் இனிய தமிழில் அமைந்துள்ளது. ஒலிகள், உணர்ச்சியைத் தூண்டும் ஆற்றல் உடையவை. மந்திர ஒலிகள், வேத ஒலிகள் போன்ற சிறப்பு ஒலிகள் நன்மை பயக்கும் சக்தி வாய்ந்தவை. பொருள் தெரியாத போதிலும் புனிதமான நல்ல ஒலிகள் கேட்பதாலும் மீண்டும் மீண்டும் சிந்திப்பதாலும் நன்மை பெருகும் என்பர் சான்றோர். கொஞ்சும் மழலைச் செல்வங்களின் பிஞ்சு உள்ளங்களில் இந்தத் தத்துவம் நிறைந்த  தாலாட்டு ஒலிகள் கருப் பொருளாக அமைந்து காலம் வரும்போது தழைத்து ஓங்கும் என்பதில் ஐயமில்லை. தாய்க்குலம் இந்தத் தாலாட்டினைக் கற்றுணர்ந்து மழலைச் செவிகளில் புனிதமான தத்துவ ஒலிகளைப் புகட்டி சேய்க் குலத்தினைச் சிறப்பிக்கச் செய்து நல்வாழ்வு வாழ  வழிகாட்டியாக அமையவேண்டுமென்று விரும்புகிறோம். மநநம் செய்பவர்களின் சௌகர்யம் கருதி மூலம் மட்டிலும் தனியாக வெளியிடப் பெற்றுள்ளது.  ------------- பதிப்பாளர். 

திருவாமாத்தூர் ஸ்ரீ திருவேங்கடநாதர் இயற்றிய “கீதா சாரத் தாலாட்டு” நாளை முதல் ஸ்ரீ கண்ணபிரான் துதியுடன் துவங்கி இங்கு ஒலிக்கும்.