வெள்ளி, 26 பிப்ரவரி, 2010

10 Words WIKI

WIKI விகி சேவைகள் குறித்து எல்லாம் விவரமாக எழுத வேண்டிய தேவைகள் கிடையாது. இண்டர்நெட்டில் உலவத் தெரிந்தவர்களுக்கு விகி பற்றி நன்றாகவே தெரியும். இப்போது விகி "பத்து வார்த்தைகளில் விகி" என்று ஒரு புதிய பகுதியை ஆரம்பித்துள்ளது. அது அடியேனைப் போன்ற ADDகளுக்கானதாம். (ADD என்றால் விகி அகராதியில் Attention Deficit Disorder) எந்த வார்த்தைக்கும் பத்தே வார்த்தைகளில் விளக்கம் அளிப்பது இதன் தனிச் சிறப்பு. 9 வார்த்தையோ, அல்லது 11 வார்த்தையோ கிடையாது. பத்தே வார்த்தை. பல சொற்களுக்கு அங்கதச் சுவையுடன் அர்த்தமும் உண்டு. Ten Word WIKI ஒரு மிகச் சுவையான தளம். அறிமுகப் படுத்திய நண்பர் கௌஷிக்குக்கு நன்றி.
     மாதிரிக்கு இங்கு சில

Aeroplane: Flying machines, statistically safest way to travel. They still crash.
Stonehenge: Stones left in a field by some people years ago
Bill Clinton: Part president, part pimp. Known for leaving DNA on dresses.
Internet: A series of tubes filled with porn and kitten pictures.
iPhone: Basically a phone but people think it is much better?
iPad: Giant $500 iPod Touch. No Flash, no porn, no use..
Accountant: Charge you the amount of tax they've avoided you paying.
adobe: Software development company famous for adding bugs to Macromedia Flash
Bill Gates : Opportunistic antichrist turned philanthropist responsible for retardation of computer evolution. 
Spammer: Compassionate person trying to sell viagra or give away money.
Microsoft: Rich nerds crash your computer with their buggy operating system.
Million: Amount of money  you will never get without Crime, inflation.
Military: National armed forces. They keep the peace by making war.
Organised crime: Available in russian, italian, japanese, irish, english, american, chinese, etc.  


வியாழன், 25 பிப்ரவரி, 2010

முதல்வருக்கு நன்றி!

நேற்று தினமணியில் திரு வைத்தியநாத அய்யரைப் பற்றிய செய்தி படித்தவுடன் முதல்வர் திரு. கருணாநிதி மிக வேகமாகச் செயல்பட்டு வருந்திய உள்ளங்களையெல்லாம் வாயாற வாழ்த்தும்படி நடவடிக்கை எடுத்துள்ளார். இன்றைய தினமணி செய்தியைப் படியுங்கள்!

முதல்வருக்கு நன்றி! 
புதுப்பிக்கப்பட்டது 
                        மதுரை வைத்தியநாத அய்யர் சிலை







மதுரை, பிப். 24: அரிசன மக்களின் மேம்பாட்டுக்காக தன்னை அர்ப்பணித்தவரும், சுதந்திரப் போராட்டத் தலைவர்களில் ஒருவருமான அ.வைத்தியநாத அய்யர் சிலை வளாகம் பராமரிப்பின்றி இருப்பது குறித்து தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியிடப்பட்டது.
  இதையடுத்து, உடனடியாக சிலை வளாகத்தைப் புதுப்பிக்க தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார். அதன்படி சிலை வளாகம் புதுப்பிக்கப்பட்டது.
  தினமணி செய்தி அடிப்படையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு தியாகிகளும், பொதுமக்களும் நன்றி தெரிவித்துள்ளனர்.
  அரிசன மக்களின் முன்னேற்றத்துக்கும், அவர்கள் ஆலயத்துக்குள் சென்று வழிபடவும் அயராது போராடியவர் தியாகி வைத்தியநாத அய்யர்.
  மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அரிசன மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேசம் செய்த அவரது 55-வது நினைவு நாளை முன்னிட்டு, அவரது சிலைக்கு யாரும் மரியாதை செலுத்தவில்லை. மேலும், சிலை வளாகம் பராமரிக்கப்படாமல் இருப்பது குறித்தும் தினமணியில் புதன்கிழமை செய்தி வெளியானது.
  அதிகாலையில் செய்தி வெளியான சில நிமிடங்களில், முதல்வர் இல்ல தொலைபேசி சுறுசுறுப்பானது. தீண்டாமைக்கும், சாதிக் கொடுமைக்கும் எதிராகப் போராடிய ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகியின் சிலைக்கு நேர்ந்த அவலநிலையை நினைத்து மனம் வருந்திய முதல்வர், தவறு ஏன், எப்படி நேர்ந்தது என்று அதிகாலையிலேயே தட்டிக்கேட்க முற்பட்டார் என விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதையடுத்து மதுரை மாநகராட்சி மேயர் தேன்மொழியை முதல்வர் கருணாநிதி தொலைபேசியில் தொடர்புகொண்டு, வைத்தியநாத அய்யர் சிலை வளாகத்தை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
  மேலும், மத்திய அமைச்சர் மு.க.அழகிரியிடமும், வைத்திநாத அய்யர் சிலை பராமரிப்பு குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அவரும் சிலையை உடனடியாக சீரமைத்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என மேயர் தேன்மொழியை அறிவுறுத்தினார்.
  இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், மாநகராட்சி மேயர் தேன்மொழி, துணை மேயர் மன்னன், மாநகராட்சி ஆணையர் செபாஸ்டின் ஆகியோர் வைத்தியநாத அய்யர் சிலை அமைந்துள்ள மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள மாநகராட்சி பூங்காவுக்கு விரைந்துவந்தனர்.
  அங்கு சிலை வளாகத்தில் குவிக்கப்பட்ட காய்கறி மூட்டைகளை அகற்ற நடவடிக்கை எடுத்தனர். பின்னர் சிலையை மறைத்திருந்த மரக் கிளைகளும் வெட்டப்பட்டன. சிலை பீடத்தில் புது வர்ணங்கள் பூசப்பட்டன. இதனால் சிலை வளாகம் புதுப்பொலிவு பெற்றது.
  அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வைத்தியநாத அய்யர் சிலை பராமரிப்பு இன்றி உள்ளதாக தினமணியில் வந்த செய்தியை அடுத்து, சிலை வளாகத்தை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலை வளாகத்தில் டைல்ஸ் கற்கள் பதிக்கப்பட உள்ளன. சிலைக்கு மாலை அணிவிக்க ஏதுவாக ஏணி அமைக்கப்படும். மாநகராட்சி சார்பில் ஊழியர் நியமிக்கப்பட்டு, சிலை வளாகம் தொடர்ந்து பராமரிக்கப்படும். மேலும், சிலை அருகே வைத்தியநாத அய்யர் வரலாறு, அவரது தியாகம், ஆலயப் பிரவேசம் உள்ளிட்ட விவரங்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் தகவல் பலகையாக அமைக்கப்படும் என்றார்.
  முதல்வரின் பார்வையிலிருந்து எந்தவொரு செய்தியும் தப்பாது என்பதை நிரூபிக்கும் விதமாக அமைந்த இந்த சம்பவம், மக்கள் மத்தியிலும் குறிப்பாக சுதந்திரப் போராட்டத் தியாகிகள் மத்தியிலும் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
  வைத்தியநாத அய்யருடன் பணிபுரிந்த ஆண்டியப்பன் உள்ளிட்ட ஏராளமான முதிய சுதந்திரப் போராட்டத் தியாகிகள், புதுப்பொலிவு பெறும் சிலையை ஆனந்தக் கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்து கூறியது நெஞ்சை உருக்கியது.
  முதல்வரின் நேரடித் தலையீடு இல்லாமல் இது நடந்திருக்காது என்று அவர்கள்  தங்களுக்குள் பேசிக்கொண்டனர்

தியாகத்தின் சம்பளம் இதுதானா? தினமணி குமுறல்



 மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகேயுள்ள பூங்காவில் பராமரிப்பின்றி 
குப்பைகளுக்கு இடையே உள்ள வைத்தியநாதய்யர் சிலை


மதுரை,பிப்.​ 23: அரிசன மக்களுக்கும்,​​ தேச விடுதலைக்கும் தன்னை அர்ப்பணித்த ​ வைத்தியநாதய்யர் நினைவு நாளை முன்னிட்டு ​(பிப்.23) அவரது சிலைக்கு மாலை அணிவிக்க யாரும் முன்வராதது 
தியாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எதிர்ப்புகளை கண்டு அஞ்சாமல் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அரிசன மக்களை அழைத்துக் கொண்டு துணிவுடன் ஆலயப்பிரவேசம் செய்த அந்த தியாக சீலரை காங்கிரஸார் உள்ளிட்ட பலரும் மறந்து போனது மக்களை வேதனையடையச் செய்துள்ளது.
தஞ்சை மாவட்டம் விஷ்ணாம்பேட்டையில் அருணாசலம் அய்யர்-லட்சுமி அம்மாள் மகனாகப் பிறந்த வைத்தியநாதய்யர் மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியிலும்,​​ மதுரைக் கல்லூரி மற்றும் சென்னை மாநிலக் கல்லூரியில் படித்தார்.​ பின்னர் வழக்கறிஞர் ஆனார்.
புகழ்பெற்ற வழக்கறிஞரான அவர் செல்வம் ஈட்ட வாய்ப்பு கிடைத்தபோதும் அதைவிடுத்து நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் தன்னையும் தனது குடும்பத்தையும் ஈடுபடுத்திக் கொண்டார்.
வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாக் கிரகத்தின்போது ராஜாஜி கைதான பின் அங்கு நடந்த கூட்டத்தில் வைத்தியநாதய்யர் தடையை மீறிப் பேசினார்.​ அப்போது "புளியமர விளாரால்' அய்யரை தாக்கிய ஆங்கிலேயப் போலீஸார் அவரை சுமார் அரைகிலோ மீட்டர் தூரம் தரையில் இழுத்துச் சென்று சித்திரவதை செய்தனர்.​ உடலெங்கும் காயத்துடன் சிறையிலும் அடைத்தனர்.
கள்ளுக்கடை மறியல்,​​ சட்டமறுப்பு இயக்கம் என ஒவ்வோர் விடுதலைப் போராட்டத்திலும் ஆங்கிலேயப் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு சிறைச்சாலைக்கு அனுப்பப்பட்டவர் ஆவார்.
விடுதலைப் போராட்டத்துக்கான செலவுக்காக தனது மனைவியின் நகைகளையும்,​​ வீட்டுப் பொருள்களையும் அடகுவைத்தும்,​​ விற்றும் பணம் அளித்தவர்.​ நீதிமன்ற அபராதத்துக்காக ஆங்கிலேய அரசு அவரது கார் மற்றும் சட்டப்புத்தகங்களை ஜப்தி செய்துள்ளது.
தனிநபர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் தனது மனைவி அகிலாண்டம்மாளை ஈடுபடச் செய்தார்.​ இதனால் அகிலாண்டம்மாள் பல மாதம் வேலூர் சிறையில் கடும்தண்டனையும் அனுபவித்தார்.​ தனது இளையமகன் சங்கரனையும் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவைத்தார்.​ சங்கரனும் பலமாதம் சிறையில் வாடினார்.
வைத்தியநாதய்யர் அலிப்புரம் சிறையில் இருந்தபோது அவரது மூத்த மகன் இறந்தார்.​ இதனால் அவரால் மகன் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியவில்லை.​ மகளின் திருமணத்தைக்கூட சிறை தண்டனை பரோல் காலத்திலேயே நடத்தமுடிந்தது.​ அந்த அளவுக்கு சுதந்திரத்துக்காக சிறையில் பல ஆண்டுகள் கொடுமை அனுபவித்த "தியாகதீபம்' வைத்தியநாதய்யர்.​ அரிசனசேவக சங்கத்தின் தலைவராக திகழ்ந்த அவரது வீட்டில் எப்போதும் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் தங்கியிருந்தனர்.​ அவர் தாழ்த்தப்பட்ட மக்களை ஆலயத்துக்குள் அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தார்.
1934 -ல் மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு அரிசன மக்களை தம்மோடு அழைத்துச் சென்ற அவர் நாகநாதசுவாமி கோயிலில் தரிசனம் செய்யவைத்தார்.​ இதுபோல பல கோயில்களுக்கும் அரிசன மக்களை அழைத்துச் சென்றார்.​ 1939 ஜூலை 8 -ம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அவர் தன்னுடன் 5 அரிசனங்களையும்,​​ நாடார் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரையும் அழைத்துச் சென்று ஆலயப்பிரவேசம் செய்தார்.
ஆலயப்பிரவேசம் செய்தால் வைத்தியநாதய்யரைக் கொன்றுவிடுவதாகக் கூட சிலர் மிரட்டியுள்ளனர்.​ ஆனால் எதற்கும் அஞ்சாமல் அவர் அரிசன மக்களுடன் தனது ஆதரவாளர் புடைசூழ ஆலயப் பிரவேசம் செய்தார்.
இதற்காக அவர் பிராமணர்களால் சாதி விலக்கம் செய்யப்பட்டார்.​ ஆனாலும் அவர் சோர்ந்துவிடவில்லை.​ அரிசன மக்களின் உரிமைக்காக அவர் தீவிரமாகப் போராடினார்.
முன்னதாக ஆலயப் பிரவேசத்தை ஆதரித்து நடந்த மதுரைக் கூட்டத்தில் பெரியார் பங்கேற்றபோது அவரது மேடையில் தீவைத்தனர்.​ அப்போது மேடைக்கே ஓடிவந்து பெரியாரை தனது காரில் அழைத்துச் சென்று காப்பாற்றியவர் வைத்தியநாதய்யர்.
நாட்டுக்கும் அரிசன மக்களுக்கும் தனது வாழ்வை அர்ப்பணித்த வைத்தியநாதய்யர் மேலூர் சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்து மக்கள் நலப்பணிகளைச் செய்துள்ளார்.
தியாகச் சீலரான வைத்தியநாதய்யர் 1955 பிப்ரவரி 23 -ல் உயிரிழந்தார்.​ அவருக்கு மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே உள்ள பார்க்கில் 26.8.1975-ல் சிலை அமைக்கப்பட்டது.​ அப்போதைய மதுரை மேயர் முத்து தலைமையில் மாநில மேலவை துணைத் தலைவர் ம.பொ.சிவஞானம் சிலையைத் திறந்துவைத்தார்.
அச்சிலையை தற்போது போதிய பராமரிப்பு இன்றி உள்ளது.​ அங்குள்ள காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் தங்களது காய்கறிகளை சேர்த்துவைக்கும் இடமாக வைத்தியநாதய்யர் சிலை கீழ்ப்பகுதியைப் பயன்படுத்திவருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை ​(பிப்.23) வைத்தியநாதய்யரின் நினைவு நாளாகும்.​ ஆனால் அவரது சிலைக்கு அரசு சார்பிலோ,​​ காங்கிரஸார் சார்பிலோ யாரும் சிறிய மாலை அணிவிக்கக்கூட முன்வரவில்லை.
அதைவிடக் கொடுமை தியாகிகள் பலர் இதுகுறித்து ஆதங்கம் தெரிவித்தார்களே தவிர அவர்களும்கூட வைத்தியநாதய்யர் சிலையை சுத்தம் செய்யவோ,​​ மாலை அணிவிக்கவோ வரவில்லை.
தமிழகத்தில் அரிசன மக்களுக்காக பாடுபடுவதாக ஒவ்வோர் கட்சியினரும் கூறுகின்றனர்.​ இன்றும் அரிசன மக்களுக்கு முழுமையான உரிமைகள் கிடைக்கவில்லை என்றும் பலரும் கூக்குரலிடுகிறார்கள்.
ஆனால்,​​ நாட்டுக்காக தன்னை மட்டுமல்லாது,​​ தனது குடும்பத்தையே அர்ப்பணித்த வைத்தியநாதய்யர்,​​ பலத்த எதிர்ப்புக்கிடையே உயிருக்கும் அஞ்சாமல் அரிசன ஆலயப்பிரவேசம் மேற்கொண்டாரே!​ அவரது தியாகத்தை நினைவூட்டக்கூட யாரும் முன்வரவில்லையே!
அவரது சிலையை நாம் படமெடுத்தபோது,​​ அங்கிருந்த வியாபாரிகள் பலரும் இவர் யார்?​ எதற்காக இங்கு சிலை வைத்துள்ளனர்?​ எனப் பல கேள்விகளை எழுப்பினர்.
சுதந்திரப் போராட்டத் தியாகிகளை மதிப்பதாகக் கூறும் தமிழக அரசும்,​​ அரிசன மக்களுக்காக பாடுபடுவதாகக் கூறிவரும் முற்போக்காளர்களும் இந்த தியாகச் செம்மல் வைத்தியநாதய்யரை மறந்திருப்பது எந்தவகையில் நியாயம்?

புதன், 24 பிப்ரவரி, 2010

A Tamizhar readies power plant in a Box !

Just now read a report on One Sri Sridhar which many who follow this blog may already be knowing in person.Please go through the following report and congratulate for this most needy hourly invention. Our happiness increases to know that Sri Sridhar is a product of our Madras university.

WASHINGTON: The world of energy and entrepreneurship is crackling with electric anticipation this week after an India-born scientist-CEO provided a sneak peek over the weekend at a clean and efficient model of power generation-in-a-box that could eliminate the traditional grid and challenge monopolies.

Supporters are claiming K.R.Sridhar’s ''Bloom box,'' scheduled for a big-splash unveiling in Silivon Valley on Wednesday, could be the Holy Grail of the world’s energy quest; and even skeptics agree that it is a unique ''power-plant-in-a-box.'' What acres of power grid can generate, Sridhar’s Bloom Box can crank out in a fraction of the footprint -- in a squeaky clean manner too.

It is already being done -- on the campuses of Google and eBay among others. FedEx, Wal-Mart and Staples are among a score of Fortune 100 companies that have signed up as clients. Former Secretary of State Colin Powell, among those who endorse the technology, is on the Board of Directors of Sridhar’s Bloom Energy, an eight-year old stealth start-up that raised more than $ 400 million from Silicon Valley’s venture capitalists at a time the region’s economy was in a tail-spin.

At its heart, Sridhar’s Bloom Box claims to be a game-changing fuel cell device that consists of a stack of ceramic disks coated with secret green and black "inks." The disks are separated by cheap metal plates. Stacking the ceramic disks into a bread loaf-sized unit, says Sridhar, can produce one kilowatt of electricity, enough to power an American home – or four Indian homes.

The unit can be scaled up, installed anywhere, and be connected to an electrical grid just like you would connect your PC to the Internet. Hydrocarbons such as natural gas or biofuel (stored separately) are pumped into the Bloom Box to produce clean, scaled-up, and reliable electricity. The company says the unit does not vibrate, emits no sound, and has no smell, although Sridhar admits to some initial, but minor, glitches at some installations.

A hoax it is not, although some are suggesting there is a lot of hype around the launch -- somewhat like with that of the Segway transporter that was much bally-hooed but did not live up to its billing. As with Segway, the big catch right now is cost. Large-sized Bloom Boxes of the kind installed at some Silicon Valley campuses costs around $ 700,000 to $ 800,000. Sridhar estimates that a Bloom Box for the residential market could be out within a decade for as little as $3,000 to produce electricity 24/7/365. "In five to ten years, we would like to be in every home," Sridhar told CBS' "60 Minutes" on Sunday night.

But Silicon Valley, whose major venture capitalist Kleiner Perkins’ bankrolled Bloom Energy, is endorsing the technology. EBay said it has already saved $100,000 in electricity costs since its 5 boxes were installed nine months ago. It even claims that the Bloom boxes generate more power than the 3,000 solar panels at its headquarters. Google has a 400 kilowatt installation from Bloom at its Mountain View headquarters. California’s governor Arnold Schwarzenegger will be at the launch, which is to take place on the eBay campus.

The man at the center of all the excitement is Dr K.R. Sridhar, 49, who, prior to founding Bloom Energy, was a professor of Aerospace and Mechanical Engineering as well as Director of the Space Technologies Laboratory (STL) at the University of Arizona. He is also, literally, a rocket scientist, having served as an advisor to NASA in the areas of nanotechnology and planetary missions. Sridhar initially developed the idea behind the Bloom Box while working with NASA, as a means of producing oxygen for astronauts landing on Mars.

Dr. Sridhar received his Bachelors Degree in Mechanical Engineering from the University of Madras, India, and moved to in the 1980s to the U.S, where he earned an M.S. in Nuclear Engineering and Ph.D. in Mechanical Engineering from the University of Illinois, Urbana-Champaign, home to such start ups as Netscape. On Sunday, CBS’ 60 Minutes homed in on Sridhar’s breakthrough technology, bringing huge attention to Bloom Energy’s bare-bones website that ran a cryptic visual saying ''Be the Solution'' -- and a clock counting down to Wednesday’s launch.