புதன், 1 மார்ச், 2017

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

இராம நாடகம்
பாதுகா பட்டாபிஷேகம்


பதினோராங் களம்

காலம்:                   முன்னிரவு
இடம்:                    கங்கைக்கரை
பாத்திரங்கள்:        சுமந்திரர், இராமர், சீதை, இலக்ஷ்மணர், நகரமாந்தர்

               {நகரமாந்தர் கங்கைக்கரையை அடுத்த பசும்புற்றரையில் இங்குமங்குமாய்ப் படுத்து நித்திரை செய்கின்றனர். இரதம் நிற்கிறது. இரதத்தருகில் சுமந்திரர் நிற்கிறார். இராமர் அவருக்கு எதிராக நிற்கிறார். இராமருக்குப் பின்னாக, சீதையும் இலக்ஷ்மணரும் நிற்கின்றனர்.}

இராமர்:-- (சுமந்திரரை நோக்கி), சுமந்திரரே! நம்மைத் தொடர்ந்து வந்த நகர மாந்தர் அனைவரும் படுத்து உறங்கி விட்டனர். நீர் அயோத்திக்குத் திரும்பிப் போவதற்கு இதுவே ஏற்ற சமயம். அவர்கள் விழித்து நான் காடு செல்வதறிந்தால் என்னைப் பின் தொடருவார்கள். பிறகு அவர்களை அயோத்திக்குப் போகச் செய்வது கஷ்டமாகும். நீர் இப்பொழுது இரதத்தைத் திருப்பிக் கொண்டு அயோத்தி போய்விட்டால் அவர்கள் கண்விழித்து எழுந்தபோது இரதம் திரும்பிச் சென்ற சுவட்டைப் பார்த்து, நான் அயோத்திக்குப் போய்விட்டதாக எண்ணித் தாமும் அயோத்திக்குச் சென்று விடுவார்கள். ஆதலால் நீர் எனக்கு இந்த ஒரு உபகாரம் செய்ய வேண்டும்.

சுமந்திரர்:-- இளவரசரே! என்ன கொடிய கட்டளை இடுகிறீர்கள்! தங்கள் பிரிவை ஆற்றாது வருந்தும் சக்கர வர்த்தியின் முன்னம் சென்று 'தங்கள் திருக்குமாரரைக் காட்டில் விட்டு வந்து விட்டேன்' என்ற கர்ண கடூரமான சொற்களைச் சொல்வேனானால், நான் தங்களைக் காட்டுக்கனுப்பிய கைகேயியிலும் கொடியவனாவேனே! என் வரவை எதிர்பார்த்துத் தயங்கியிருக்கும் அரசர் ஆவி நான் சென்று கொடிய உண்மையைக் கூறியவுடன் பிரிந்து போய்விடுமே! அந்தோ! தங்களை விட்டு நான் அயோத்திக்குச் செல்வேனாகில் அரசர்க்கு மந்திரியாகேன். அவர் உயிருண்ணச் செல்லும் எமனாவேன். ஐயோ! இராமச்சந்திர மூர்த்தி! அடியேனுக்கு இந்தக் கொடிய கட்டளை இடவேண்டாம். நானும் தங்களோடு காட்டிற்கு வருவதற்கு உத்தரவு கொடுங்கள். ஆவி அயர்ந்திருக்கும் அரசரையும், அழுதரற்றும் அந்தப்புர மாதரையும், கன்மனக் கைகேயியையும் உடையதாய், கோல் நோக்கி வாழும் குடிகளை இழந்து அலங்கோலம் அடைந்திருக்கும் அயோத்தி மாநகருக்கு நான் செல்லேன், செல்லேன்! சக்கரவர்த்தியின் உயிரைக் காக்க என்னால் ஏலாதேனும் அவர் உயிரைப் போக்க நான் ஆளாகேன். தங்களோடு நானும் வனத்திற்கு வருகிறேன். தயை கூர்ந்து என்னைத் தடுக்காதிருங்கள்.

இராமர்:-- சுமந்திரரே! எல்லாம் அறிந்த நீர் இவ்வாறு கூறினால் சிறுவனாகிய நான் உமக்கு என்ன சொல்ல மாட்டுவேன்? சக்கரவர்த்தி மீதும் என்மீதும் உமக்குள்ள அபிமானம் எப்படிப் பட்டதென்பதை நான் அறியாத வனல்லன். அறிந்தும் உம்மை அயோத்திக்கு அனுப்புவது எதனாலென்றால் கூறுகின்றேன் கேளும். நீர் அயோத்திக்குப் போகாவிட்டால் நகர மாந்தரும் போகார். அவர்கள் போகாவிட்டால் நகரம் பாழடையும். அதைக் காணக் காண அரசர்க்குத் துயரம் மிகும். மேலும் குடிகளில்லா நகரத்தை பரதன் எப்படி ஆள்வான்? பரதன் அரசாளாவிட்டால் எனது பிரிவாகிய துயரத்துக்குட்பட்டும் அரசர் தாம் கொடுத்த வரத்தை நிறைவேற்றியவராகார். பழிக்கே ஆளாவார். நீர் அயோத்திக்குச் செல்வீரானால் இவைகளொன்றும் சம்பவியா. ஆவி சோர்ந்திருக்கும் அரசரும் பரதனைக் காணுவதாலும், பிரஜைகள் அரண்மனைப் பெரியோர் முதலியவர்களது தேறுதலுரையாலும் நாளடைவில் துக்கம் நீங்கிவிடுவார். ஆதலால், என் சொல்லைத் தட்டாது, நீர் அவசியம் அயோத்திக்குத் திரும்பிச் செல்ல வேண்டுகிறேன்.

சுமந்திரர்:-- (தலை குனிந்து கண்ணீர் வடித்து) என் துர்ப்பாக்கியம் அதுவானால் யான் யாது செய்வேன்! தர்ம சொரூபி! தங்கள் தந்தையார்க்கு இருப்பு நெஞ்சினனாகிய யான் சொல்ல வேண்டிய செய்தி ஏதேனு முளதோ?

இராமர்:-- (சுமந்திரர் ஆகத்தைத் தடவிக் கண்ணீரைக் கையால் துடைத்து) மதிவல்ல மந்திரத் தலைவ!

               முன்புநின் றிசைநிறீஇ முடிவுமுற்றிய
               பின்புநின் றுறுதியைப் பயக்கும் பேரறம்
               இன்பம்வந் துறுமெனின் இனிய தாயிடைத்
               துன்பம்வந் துறுமெனிற் றுறக்க லாகுமோ?

தர்ம நெறியானது முன்னதாக இப்பிறப்பிலேயே புகழைக் கொடுக்கும். இறந்த பிறகோ இவ்வுலகத்தில் அப்புகழை நிலை நிறுத்துவதோடு, உடலைப் பிரிந்த ஆன்மாவை அழியாத சொர்க்க பதவியில் சேர்க்கும். அப்படிப்பட்ட அற நெறியை அனுசரிப்பதால் இன்பம் வந்துறுமாயின் நன்று. அவ்வாறின்றி துன்பம் வந்தடையுமானால், அதற்காக அந்த தர்ம நெறியை விட்டு விடுவது சரியாகுமா? இன்பம் வந்தாலும், துன்பம் வந்தாலும் அறநெறி கடைப் பிடித்து ஒழுகுவதே வீரத் தன்மையாகும்.

               நிறப்பெரும் படைக்கல நிறத்தி னேருற
               மறப்பயன் விளைக்குறும் வன்மை யன்றரோ
               இறப்பினுந் திருவெலா மிழப்ப வெய்தினும்
               துறப்பில ரறமெனல் சூர ராவதே.

யுத்த களத்தில் நின்று அனேக உயிர்களை வெய்ய படைக்கருவிகளால் துன்பப் படுத்திக் கொல்லும் கொடிய செயலைச் செய்வது வீரத் தன்மையாகாது. அந்தப் போர்வீரர் வீரராகார். தமது உயிருக்கே இறுதி உறுமாயினும், தம் செல்வமனைத்தும் சென்றொழிவதாயிருந்தாலும், தர்மம் தவறாது நடப்பவரே வீரராவார். ஆதலால்,நான் பலருடைய துன்பத்தை நோக்காது தர்மத்தைக் காப்பாற்ற வனஞ் செல்வது பற்றி நீர் வருந்துதல் ஒழியக் கடவீர்.

               நீர் அரண்மனையை அடைந்ததும் முன்னதாகக் குலகுரு வசிஷ்ட முனிவரைக் கண்டு அவருக்கு என் வந்தனை கூறி அவரோடு என் தந்தையைச் சென்று காணும். வசிஷ்ட முனிவர் மூலமாகவே எனது கருத்துக்களை எந்தைக்குச் சொல்லும். பரதன் கேகய நாட்டிலிருந்து வந்ததும் அவனுக்கு என் ஆசீர்வாதங்களைக் கூறிப் பட்டந் தரித்துக் கொள்ளச் சொல்லும். அரச நீதி வழுவாது குடிகளைப் பக்ஷமாய்ப் பாதுகாத்து வரும்படியும், தந்தையின் துயரத்தை ஆற்றி அவர்க்கு வந்தனை வழிபாடுகள் செய்வதில் என்னைப் பிரிந்துறையும் துக்கத்தை ஒழிக்கும்படியும் அவனுக்குச் சொல்லும். அரசர், பரதனது தாயால்தானே என்னை வனத்துக் கனுப்ப நேர்ந்ததென்று எண்ணி அவனை வெறுத்தாலும் வெறுப்பார். அச்சமயம் அவர்க்கு நியாயங்களை எடுத்துக் காட்டி, அவனை வெறுக்காதிருக்கச் செய்வதோடு, என்னைப் போலவே அவனையும் அன்பாய்ப் போற்ற வேண்டுமென்று நான் கேட்டுக் கொண்டதாக அவர்க்குக் கூறும். அரசர்க்குள்ள சோகத்தை மாற்றும். நான் பதினான்கு வருஷங்கள் முடிந்தவுடன் அவர் பாத சேவைக்கு வந்துவிடுவேன் என்று சொல்லும். என் அன்னையர் மூவருக்கும் என்னுடைய வந்தனை வழிபாடுகளைச் செலுத்தி என் பிரிவால் வருந்தாதிருக்கும்படி கூறும். இவ்வளவே நான் உமக்குக் கூற விரும்பியது. (சீதை, இலக்ஷ்மணர் இருவரையும் நோக்கி,) சீதா! இலக்ஷ்மணா! சுமந்திரர் அயோத்தி செல்லுகிறார். அவரிடம் சொல்லி யனுப்பவேண்டிய செய்திகள் எவையேனும் இருந்தால் சொல்லியனுப்புங்கள்.

சீதை:-- (சுமந்திரரை நோக்கி) அமைச்சரே! அரசர்க்கும், என் அத்தையர்க்கும் என்னுடைய நமஸ்காரத்தைத் தெரிவியுங்கள். நான் வளர்த்துவந்த நாகணவாய்ப் பறவைகளையும் கிளிகளையும் பத்திரமாய்ப் பாதுகாத்து வரும்படி என் தங்கைமாருக்குக் கூறுங்கள்.

சுமந்திரர்:- (முகத்தைக் கையால் மறைத்துக்கொண்டு பொருமி அழுது விம்மி) ஆ! கொடுமை! கொடுமை!

இராமர்:-- (சுமந்திரரை நோக்கி) சுமந்திரரே! என்ன இது! பேதையர்போல் நீர் இப்படி வருந்தலாமா? வேண்டாம். கண்ணீரைத் துடையும்.

சுமந்திரர்:-- (கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, இலக்ஷ்மணரை நோக்கி) இளையவரே! நீர் அரசர்க்குச் சொல்ல வேண்டுவது ஏதேனும் உண்டோ?

இலக்ஷ்மணர்:-- யார்க்குச் செய்தி சொல்லி அனுப்புவது? அரசர்க்கா?

      உரைசெய்தெங் கோமகற் குறுதி யாக்கிய
      தரைசெழு செல்வத்தைத் தவிர மற்றொரு
     விரைசெறி குழலிமாட் டளித்த மெய்யனை
     அரைசனென் றின்னமொன் றறையற் பாலரோ?

ஆளும் உரிமையுள்ள என் அண்ணற்கு அரசை ஆளத் தருவதாக அம்பலமறிய உரைத்துவிட்டுப் பின், அவ்வரசை ஒரு ஸ்திரீக்குக் கொடுத்தானே, உரைத்த உரைதவறா உத்தமன்! அவனையா அரசனென்று சொல்கிறீர்!

இராமர்:-- இலக்ஷ்மணா! துஷ்ட வார்த்தைகள் வேண்டாம்.

இலக்ஷ்மணர்:-- (சுமந்திரரை நோக்கி) சுமந்திரரே! நீர் கூறும் அரசர்க்கு நான் சொல்லி அனுப்பும் செய்தியைக் கேளும்.
               கானகம் பற்றிநற் புதல்வன் காயுணப்
               போனகம் பற்றிய பொய்யின் மன்னர்க்கிங்
               கூனகம் பற்றிய வுயிர்கொ டின்னும்போய்
               வானகம் பற்றிலா வலிமை கூறுவீர்.

தன் அருமந்த மைந்தன் ஆரணியஞ் சென்று காய்கனி அருந்தியிருக்க, தான் உயிர் துறவாமல் அரண்மனை யிலிருந்து, அறுசுவை உணவுண்ணும் தந்தையின் மனவலிமையே வலிமை என்று சொல்லும்.

               பரதன் கேகய நாட்டிலிருந்து வந்தால் அவனுக்குச் சொல்லவேண்டிய செய்தியையும் கேளும். அநியாயமாய் அரசை அடைந்த அந்த பரதனுக்கு நான் உடன்பிறந்தவன் அல்லேன். இராமச்சந்திரரோடு நான் பிறந்திருந்தால் அவர் ஆரணியஞ் செல்வதற்கு நான் உடன் பட்டிரேன். ஆதலால் அவருடனும் பிறக்கவில்லை. ஒருக்கால் சத்துருக்கன் எனக்கு உடன்பிறந்தவனாவான் என்று எண்ணலாம். அவன் பாதகனாகிய பரதனுடனேயே இருப்பதால் அவனுடனும் நான் பிறந்தவன் அல்லன் என்று சொல்லும். வேறு என்னுடன் பிறந்தவர் யார் என்றால் நானே. நான் இவ்வாறு தன்னந் தனியனா யிருந்தாலும் அவனிலும் வலியனே யென்பதைத் தெரிவியும். இதுவே நான் கூற விரும்பியது. வேறொன்றுமில்லை.

இராமர்:-- (சுமந்திரரைப் பார்த்து) சுமந்திரரே! இலக்ஷ்மணன் சிறுபிள்ளைத் தனமாகக் கூறிய மொழிகளை மறந்து விடும். நேரமாகிறது. நீர் தேரை நடத்திக்கொண்டு சீக்கிரம் அயோத்தி போய்ச்சேரும்.

சுமந்திரர்:-- இராமச்சந்திர மூர்த்தி! எவ்வாறு நான் தங்களைப் பிரிந்து செல்வேன்? எமதூதன் போலச் சென்று அரசர் முகத்தை எங்ஙனம் பார்ப்பேன்? பார்த்து, 'இராமரை வனத்தில் விட்டு வந்தேன்' என்ற கொடிய மொழிகளை எப்படி வாய்வந்து கூறுவேன்? கைகேயி அரசர் வருந்தத்தக்க சொற்களைக் கூறினாளேயொழிய வேறொன்றுமில்லை. நானோ அவர் உயிரைப் போக்கத்தக்க மொழிகளைக் கூறப் போகின்றேன். நான் கைகேயியினும் கொடியவனாகின்றேனே! ! (பெருமூச்சு விடுகிறார்)

இராமர்:-- சுமந்திரரே! நான் உமக்கு இன்னும் என்ன சொல்கிறது? நகர மாந்தர் கண் விழிப்பதற்கு முன் நீர் சீக்கிரம் செல்லும்.

(சுமந்திரர் தேரை நடத்திக்கொண்டு அயோத்திக்குப் போகிறார்)

......தொடரும்...

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகங்கள் 24 , 25

சுலோகம் 24

ஆர்த்ராபராதிநி ஜநேப்யபிரக்ஷணார்த்தம்
ரங்கேச்வரஸ்ய ரமயா விநிவேத்யமானே |
பார்ச்வே பரத்ர பவதீ யதி தஸ்ய நஸ்யாத்
ப்ராயேண தேவி வதனம் பரிவர்த்திதம் ஸ்யாத் ||

சாலத் தவறிழைத்தோர் சார்ந்துசர ணென்றுரைப்ப
மாலுக் கருகு வலப்புறமாய்க் -- கோலப்பொன்
மாற்றுகெனக் கோதாய்நீ வாமபா கத்திலையே
லேற்றமிவர்க் கென்று மிலை. .24.

பதவுரை

தேவி -- கோதாதேவியே!; ஆர்த்ராபராதிநி -- பச்சையான அபராதத்தைச் செய்து ஈரங்காயாத; ஜநே -- ஜனத்தை; அபிரக்ஷணார்த்தம் -- நன்றாய் உஜ்ஜீவிப்பதற்காக; ரமயா -- லக்ஷ்மீதேவியால்; ரங்கேச்வரஸ்ய – ரங்கநாதனுக்கு; விநிவேத்யமாந்யே -- சிபாரிசு செய்யும்போது; தஸ்ய – அவருடைய; பரத்ர பார்ச்வ – மற்றோர் பக்கத்தில்; பவதீ -- நீர்; யதி ந ஸ்யாத் -- இல்லாமற்போனால்; வதனம் -- அவருடைய திருமுகம்; ப்ராயேண – அனேகமாக (மிகவும்); பரிவர்த்திதம் ஸ்யாத் -- திரும்பியேயிருக்கும்.

பிழைப்பதையே ஸ்வபாவமாகவுடைய நாங்கள் குற்றங்கள் இன்னமுலராமல் ஈரமாய்ப் புதியதாயிருக்கையிலேயே, உன்னைப் புருஷகாரமாகப் பணிந்ததும், எங்களை ரங்கேச்வரனுக்குச் சிபாரிசு செய்யும்போது, அவருக்கு மற்றொரு பக்கத்தில் நீ இல்லாமல் போனால், அவர் முகம் (அந்தப் பக்கத்தில்) திரும்பியே இருக்கும்.

அவதாரிகை

(1) மனு முதலியவர்கள் சக்தர்கள். பக்தியோக நிஷ்டர்கள். வேதநியமங்களையெல்லாம் அனுஷ்டித்து உபாஸனத்தை சமதமதிருணபூர்வணராய் அனுஷ்டித்தார்கள். மாந்யரான அவர்களுக்கு இச்சேர்த்தி உபாஸ்யம். அசக்தர்களான பேதை ஜனங்களுக்கு இச்சேர்த்தி ப்ரபத்தவ்யம். பெரியபிராட்டியாரே புருஷகாரமாவதற்காக அத்தாயைச் சரணம் புகுந்ததும், அன்று செய்த புதுக்குற்றங்களையும் கவனியாது பெருமாளுக்குச் சிபாரிசு செய்கிறாள். ‘மாதர் மைதிலி' என்ற ச்லோகத்தில் 'ஆர்த்ராபாரதா:’ என்று ராக்ஷஸிகளைப் பட்டர் வர்ணித்தது நெஞ்சிலோடுகிறது.

(2) தேவிமாரிருவரோடும் ஒன்றாகக் கூடினார் என்றார் முன் ச்லோகத்தில். ஒருவனுமொருத்தியும் ஒன்றுகூடி ஒற்றிருக்கலாம்.. பார்யாத்வயமெப்படி ஸர்வகாலமும் ஒன்றுகூடி ஒன்றாயிருப்பது. அனேக ஸபத்நிகள் வெவ்வேறு திக்குகளில் க்ருஹபதியை இழுத்து ஹிம்ஸிப்பதுபோல' என்றாரே சுகர். பெருமாள் இரண்டு பத்நிகளிடமும் ப்ரியமாக இருக்கட்டும். பத்நிகளொருவருக்கு ஒருவர் கலஹப்படாரோ? பத்நியால் பெரியபிராட்டியாருக்குச் சிறந்த பக்கபலமேற்படுகிறதென்று அழகாக வர்ணிக்கிறார். அற்புதமான ரஸங்களுள்ளதைக் காட்டுவோம்.

ஆர்த்ராபராதிநி அபி -- நெஞ்சில் ஈரமில்லை. ஈரச்சொற்களான ஆழ்வார்கள் தேன்மொழிகளை ரஸிப்பதில்லை. நெஞ்சு சுஷ்கசுஷ்கம். மனோவாக் காயங்களால் புதிதுபுதிதாய்க் குற்றங்களைச் செய்தவண்ணமாயுள்ளோம். அபராதம் செய்த கை ஈரமுலறுவதன் முன்னமே அம்மா காப்பாற்றென்கிறோம். அப்படிக்கொத்த நம்மையும்.

ஜநே -- அசோகவனத்து ராக்ஷஸிகளைப்போன்ற ஜனமாயினும்

அபிரக்ஷணாரத்த்ம் -- நன்றாக அபிமுகமாக்கி ஸர்வோத்கிருஷ்டமான ரக்ஷணத்தைச் செய்யவேண்டுமென்று. ஆபிமுக்யத்தை அளித்து ஸ்வஜனமாக்கிக் கொள்ளவேண்டும் என்று. ‘ஸ்வஜநயஸி' (ஸ்வஜனமாக்குகிறாய்) என்ற பட்டரது அனுபவத்தை நினைக்கிறார். அபராதி ஜனத்தை விரோதி ஜனத்தை ஸ்வஜனமாக்க என்பது கருத்து. இப்படி விரோதி ஜனத்தினிடமும் அபிமுகமாகி ரக்ஷிக்க ப்ரார்த்திப்பதில், தனக்கே பதியின் ஆபிமுக்யத்தை இழக்கக்கூடிய அபாயம் வருவதாயிருக்கிறதென்று இந்த ச்லோகத்தில் அழகாகக் காட்டப்படுகிறது. என் பக்கத்திலிருந்து திருமுகத்தைத் திருப்பி மறுபுறத்தில் அபிமுகமானாலும் ஆகட்டும். எப்படியாவது குழந்தை விஷயத்தில் அபிமுகரானால் போதும். ஸபத்நியிடம் அபிமுகமாகத் திரும்பினாலும் திரும்பட்டும். நான் குழந்தையைக் காப்பாற்றச் சிபாரிசு செய்தே தீருவேன்.

ரங்கேச்வரஸ்ய –ப்ரணவப்ரதிபாத்யமான ஸர்வேச்வரன். ஈச்வரனென்றால் ஸம்ஸாரதந்த்ரத்தை வஹிப்பதில் தண்டதத்வநியமத்தைக் காட்டுகிறது. பத்நீ வல்லபைதான். ஆயினும் ஸாம்யநிலையை விடலாமோ? வைஷம்யத்தையும் பக்ஷபாதத்தையும் ஈச்வரன் பெண்டாட்டி பேச்சிற்காகக் கைப்பற்றலாமோ? இந்த க்ஷணத்திலேயே செய்த ஈரமான (புது) அபராதத்தோடே என்னெதிரிலிருக்கிற விரோதிஜனத்தை ஈச்வரனான நான் தண்டிக்கவேண்டாவோ?

ரமயா -- ஈச்வரனாலென்ன? பத்நியின் போகமயக்குகளில் மயங்குபவன்தான். ரமையின் வால்லப்யத்தை மறுக்க முடியுமோ? இவள் முகத்தைப் பார்த்துக்கொண்டு அங்குள்ள இங்கிதபராதீனனாய் ஜகத் ஸ்ருஷ்டி, மோக்ஷம் முதலியதைச் செய்பவனாயிற்றே!

விநிவேத்யமாநே -- பலமாகச் சிபாரிசு செய்யப்படும் பொழுது. ‘வி' என்பது விசேஷமாக, அனேகமாக, வற்புறுத்தி என்பதைச் சொல்லுகிறது. அபராதம் பச்சை, கொடிய விரோதிஜனம், இவனை அங்கீகரிப்பது கஷ்டமென்று சிபாரிசு மிக்க பலமாகச் செய்யப் படுகிறது. ‘நிவேதயத மாம்' என்று விபீஷணாழ்வார் போலன்று. ‘விநிவேதனம்' வேணும்.

பார்ச்வே பரத்ர – மற்றோர் பக்கத்தில். எதிர்ப்பக்கத்தில். கோதைப்பிராட்டி பெரியபிராட்டியாருக்கு பலமான பக்கபலமாகிறாளென்பதைக் காட்டவேண்டும். தன் பக்கத்தில் இல்லாமல் எதிர்ப்பக்கத்தில், அப்பக்கத்தில். அப்பாலிருந்தும், உயர்ந்த பக்கபலமாகிறாளென்பது அழகு. ‘பார்ச்வ பலம் -- பக்கபலம் ' என்பர். எதிர்ப்பக்கம் தன் பக்கமாயிற்று. ஸபத்நிகள் ஒரு பக்கமாயிருப்பரோ? கிழக்கும் மேற்குமாயிருப்பர், இருக்கிறார்கள். எழுந்தருளியிருக்கிற பக்கம் வேறாயினும், இருவருக்கும் ஒரே பக்ஷமென்பது அழகு. இரண்டு தாய்களுக்கும் இந்த துஷ்டப்பையல் பெற்ற பிள்ளையாகிறான். அவனை மன்னித்து அவனைச் சேர்த்துக்கொள்ளுவது இருவருக்கும் ஒரே பக்ஷமே. கோதை எதிர்ப்பக்கத்தில் இருப்பதும், பெரியபிராட்டியாரிடம் பெருமாள் ஆபிமுக்யம் தவறக்கூடாதென்பதற்கும், தானிருக்கும் பக்கம் திரும்பாமல், லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டிருக்கவேண்டுமென்றே எதிர்ப்பக்கத்திலிருப்பது. லக்ஷ்மியோடு ஒரே பார்ச்வத்திலிருந்தால் லக்ஷ்மிக்கு பக்கபலமேற்படாது.

பவதீ -- இப்படி அற்புதமான ஸபத்நீஸ்நேஹத்தையுடைய நீ பூஜ்யை என்பதில் என்ன தடை?

யதி தத்ர நஸ்யாத் -- அந்த இடத்தில், அந்த சந்தர்ப்பத்தில். ‘தத்ர' அவ்விடத்தில் என்றும், ‘பரத்ர' மற்றோர் இடத்தில் என்றும், இருக்குமிடத்தில் சப்தமாத்ரத்தால் விரோதம் காட்டுவது ஓரழகு. இருப்பது அப்புறம், கருத்து இப்புறம்.

ப்ராயேண – அனேகமாய்.

தேவி -- விளையாடும் சீலமுடையவளே! ரங்கமெனும் நாடகசாலையில் ஈச்வரன் முன் அவன் ஸ்வாதந்த்ரியத்தைக் குலைத்து, தேவிமாரிருவரும் என்னமாய் நடிக்கிறீர்களம்மா!

வதனம் -- ‘மோக்ஷநிஸ்யாமி' ‘உன் பரத்தை ஏற்போம்' என்று பேசவேண்டிய முகமாயிற்றே! முகத்தைத் திருப்பிக்கொண்டால் அனுக்ரஹப் பேச்சுக்கிடமேது? ப்ரணவரங்கத்தில் 'ஓம்' என்று பேசவேண்டுமே!

பரிவர்த்திதம் ஸ்யாத் -- அப்புறத்தில், பரத்ர, பார்ச்வத்தில் திரும்பியிருக்கும். அப்புறம் காலியாயிருந்தால், ஸபத்நியாகிய நீ இல்லாவிடில், அப்புறமே திரும்பியிருக்கும். குழந்தைக்கு சிபாரிசு செய்து அவனைக் காப்பாற்ற நீ எதிர்ப்பக்கத்தில் இருந்து இப்படி லக்ஷ்மீதேவிக்குப் பக்கபலமாகிறாய். உன் பக்கம் திரும்பினால் லக்ஷ்மியின் கருணைக்குக் குறையாமலோ மேற்பட்டோ உன் கருணை இருக்கிறது. அங்கீகரிக்க ஏன் இத்தனை தாமதமென்று உன் முகஜாடை. பெருமாள் உன் பக்கம் திரும்பினால், லக்ஷ்மி சொன்னதைக் கேட்காவிடில் உன் முகத்தை அப்புறம் திருப்ப நேரும். நீ லக்ஷ்மீதேவியையே பார்த்துக்கொண்டு அவள் கக்ஷியிலிருக்கிறாய். ... 24...

சுலோகம் 25

கோதே குணைரபநயந் ப்ரணதாபராதாந்
ப்ருக்ஷேப ஏவ தவ போகரஸாநுகூல:|
கர்மாநுபத்தபலதா நரதஸ்ய பர்த்து:
ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் || .25.

சக்கரஞ்சேர் கையான் சரண்புகுந்தோர் தங்கள்வினை
யொக்க வணர்ந்திதுவென் றோர்ந்துதவுந் -- துக்கசுக
மீரப் பனிமலர்க்க ணெம்மோ யிரிந்திடுமுன்
பூருச் சிலைவளைந்த போது. .25.

பதவுரை

கோதே -- கோதாய்! போகரஸாநுகூல: -- இன்பரஸத்திற்கு அனுகூலமான; தவ – உன்னுடைய" ப்ருக்ஷேப ஏவ – புருவத்தின் அசைப்பே; குணை: -- மனோஹரமான உன் விலாஸகுணங்களாலே; ப்ரணதாபராதாந் -- வணங்கினவர்களின் அபராதங்களை; அபநயந் -- போக்கிக்கொண்டு; கர்மாநுபத்த பலதாநரதஸ்ய – செய்த கர்மங்களுக்குத் தக்க பலன்களை அளிப்பதிலே ஆஸக்தியுடைய; பர்த்து: -- நாயகனுடைய; ஸ்வாதந்த்ரியதுர்விஷஹமர்மபிதாநிதாநம் -- ஈச்வரஸ்வாதந்த்ரியமென்னும் பொறுக்கக் கூடாத மர்மஸ்தானப் பிளப்பிற்கு முதற்காரணமாகும்.

கோதாய் இன்பரஸத்திற்கு அனுகூலமான உன் புருவ அசைப்பே அதன் குணங்களால் ஆச்ரிதரின் குற்றங்களைப் போக்கி, செய்த வினைகளுக்குத் தக்க பலனைக் கொடுக்கக் கங்கணம் கட்டிக்கொண்டிருக்கும் ஈச்வரனுடைய ஸ்வாதந்த்ரியத்தின் மர்மச் சேதத்திற்கு முதற்காரணமாகும்.

அவதாரிகை

‘இடது பக்கத்திலேயே அவன் முகம் திரும்பி இருந்துவிடும்' என்று முன் ச்லோகத்தில் சாதித்தார். அதனால் கோதை அங்கேயிருப்பதால், அங்கே திரும்புவதில்லையோ? கோதையை அபிமுகமாகப் பார்த்து அவள் அழகிலும் முகவிலாஸங்களிலும் ரஸிப்பதில்லையோ என்கிற சங்கை வரக்கூடும். அந்த சங்கையைப் போக்குகிறார். உங்கள் சேர்த்தியில் வந்து ப்ரணாமம் பண்ணுகிறவர்களுக்கு தம்பதிச்சேர்த்தி அவஸரத்திற்குத் தக்கபடி தம்பதிகள் பலதானம் செய்யவேண்டும். பலதானம் செய்யும்பொழுது தானம் வாங்குகிறவர்களின் குற்றங்களைப் பரிசீலனம் செய்யமாட்டார். சேர்த்தி சந்தோஷத்திற்கேற்றபடி அர்த்திகளுக்கெல்லாம் பலதானம் செய்வர். வதுவைச் சேர்ந்த அவள் அநுபந்திகள் குற்றமுடையாராயினும், வதுவின் குணங்களையும் அவள் அநுபந்திகளென்பதையும் நோக்கி அவர்களுக்கு உயர்ந்த பலன்களைத் தானம் செய்வர்.

கோதே -- கோதாய்! குணை: (தவ) –உன்னுடைய குணங்களால்; ‘செய்த பாபங்களைத் தர்மத்தால் (ஸுக்ருதங்களால், குணங்களால்) போக்கலாம்' என்று வேதமோதுகிறது. உன்னை ஆச்ரயித்தவர்களின் பாபங்களை அவர்கள் தங்கள் குணங்களால் போக்காவிடினும் உன்னுடைய குணங்களால் நீ போக்குகிறாய். பெருமாள் உபேக்ஷிக்கும்படி செய்கிறாய். உன் ஆச்ரிதர் குணங்களானாலென்ன, உன் குணங்களானாலென்ன !

ப்ரணாதாபராதாந் -- வணங்கி ஆச்ரயித்தவர்களின் அபராதங்களை.

அபநயந் -- போக்கிக்கொண்டு; ‘அபநுததி' என்ற ச்ருதிபதத்தில் உபஸர்க்கத்தை அனுஸரிக்கிறார்.

தவ ப்ரூக்ஷேப ஏவ – உன் புருவத்தின் அழகிய அசைப்பே. பெருமாளுடைய துர்விஷஹமான நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரணதனுடைய அஞ்ஜலி ஓர் ப்ரத்யஸ்த்ரமாகுமென்பர். அது ப்ரத்யஸ்த்ரமாவதற்கு நிதானம் (மூல காரணம்) மன்மதனுடைய தனுஸின் வடிவான உன்னுடைய புருவத்தின் வளைத்தலே. அந்த வளைத்தல் அஸ்த்ரக்ஷேபம் போன்றது. பெருமாள் நிக்ரஹாஸ்த்ரத்திற்கு ப்ரத்யஸ்த்ரமாக காமன் வில்போன்ற புருவத்திலிருந்து எய்தப்படுவது ஆச்ரிதரின் அஞ்ஜலியென்னும் ப்ரத்யஸ்த்ரம், உன்னுடைய இந்த ப்ரத்யஸ்த்ரம் வலிமை பெற்றது.

போகரஸாநுகூல: -- உன்னுடைய புருவத்தின் அழகிய அசைப்புகளின் விநோதம். போகரஸத்திற்கு அநுகூலம். லீலாரஸம், போகரஸம் என்று இரண்டுவித ரஸங்கள். பரமபதமென்னும் போகவிபூதிக்குப் புதிய ப்ரணதர்கள் சேர்ந்தால், அந்த ரஸம் இன்னும் வ்ருத்தியாகும். புதிதுபுதிதாகக் குழந்தைகள் வீடுவந்து சேரச்சேர அதிசயம் அதிகம். இன்பமதிகம். கர்மத்திற்குத் தக்கபடி தண்டனையளிப்பது லீலாரஸத்திற்கு அநுகூலம். ஒரு வணக்கை வ்யாஜமாகக்கொண்டு முன் செய்த கொடுவினைகளை மன்னித்து வீடு சேர்த்துக்கொள்வது போகரஸத்திற்கு அநுகூலம் என்பதும் இங்கே ரஸம். லீலாரஸத்திற்கு எதிர்த்தட்டு போகரஸம். அவர் தண்டனை பலன்களைக்கொடுத்து லீலாரஸத்தைத் தேடுகிறார். ‘அது வேண்டாம், என் மனதை அநுஸரிப்பது, என் ப்ரூக்ஷேபவிலாஸபோக ரஸத்தை மட்டுமன்று போகவிபூதிரஸத்தையும் பெருக்கும்' என்று நீ ஸூசிப்பிக்கிறாய்.

கர்மாநுபத்தபலதாநரதஸ்ய – எந்த ரதி வேணும். அபராதிகளின் கர்மங்களுக்குத் தக்கபடி தண்டனை பலத்தை அளிப்பதில் ரதி வேணுமா? இந்த உத்தமவதுவின் விலாஸ போகரதி வேணுமா என்ற விகல்பத்தை ஸூசிக்கின்றது 'ரத' என்கிற சப்தம். தம்பதிகள் சேர்த்தியில் வதூவரர்கள் வதுவின் அநுபந்திகளுக்குப் பலதானம் செய்யாரோ? பலதானம் செய்யும் தம்பதிகள் உயர்ந்த பலன்களைத் தானம் செய்வரோ? அல்லது தண்டனைகளை (ப்ரஹாரங்களை)த் தானம் செய்வரோ? ததீயாராதனை தடியாராதனை ஆகலாமோ? கர்மானுபத்தர்கள் எனபது பெருமாள் வாதம். ‘மதனுபத்தர்கள்' என் திறத்தார் என்று கோதை எதிர்வாதம். எந்த அனபந்தம் உயர்த்தி? கர்மானுபந்தமா? உன் அனுபந்தமா? என்று விகல்பம். இங்கே 'அனுபத்த', ‘பலதானம்', ‘ரத' என்கிற பதங்களால் இந்த ரஸங்கள் ஸூசிதமென்பது ரஸிகமனோவேத்யம்.

பர்த்து: -- உன்னுடைய பர்த்தாவினுடைய. உலகத்தின் பர்த்தாவினுடைய உலகத்தை ரக்ஷணத்தால் மரிக்க வேண்டியவனல்லவோ. ஈச்வரனாயினும் பர்த்தாவுமாவான், ரக்ஷகனுமாவான்.

ஸ்வாதந்த்ரிய துர்விஷஹமர்மபிதாநிதாநம் -- ஐச்வர்யம் என்பது ஸ்வாதந்த்ரியம். ஓரிடத்தி லிருந்தும் அதற்கு பங்கம் வ்யாஹதி வரக்கூடாது. ஐச்வர்யம்தானே ஈச்வரனுக்கு உயிர்நிலையானது. அந்த உயிர்நிலையில் அம்பே க்ஷேபம் செய்து சேதித்தால் ஈச்வர தத்வத்திற்கே அழிவு வருமே என்று சங்கை. ‘ஸ்வச்சந்தம் விததாம்யஹம்' என் சந்தப்படிக்கு, என் இஷ்டப்படிக்கு நான் பலன்களை விதிக்கிறேன் என்கிறார் பெருமாள். அது ஈச்வர லக்ஷணமான ஐச்வர்யம். இப்படி 'ஸ்வச்சந்தப்படி' ஸ்வதந்த்ரமாக பலமளிப்பது மேன்மையா? அல்லது உன் சந்தப்படி (பரச்சந்தப்படி) அநுவர்த்திப்பதென்கிற தாக்ஷிண்யம் மேன்மையா? என்று விகல்பம். “நாயகர்களுக்குத் தாக்ஷிண்யம் குலவ்ரதம்" என்பது மாளவிகாக்நிமித்ரத்தில் அக்நிமித்ரர் பேச்சு. கோதையின் சந்தத்தை அநுவர்த்திக்காமற்போனால் நாயகர்களென்னும் பர்த்தாக்களுக்கு உயிர்நிலையான தாக்ஷிண்யம் குலையும். ப்ரணதர்களான அடியாரை பரிக்கவேண்டியது பர்த்தாவென்னும் யஜமானனுடைய கடமை. “சரணாகதரக்ஷணம்" ஓர் உயிர்நிலை. மன்னித்து ரக்ஷிப்பதில் இந்த உயிர்நிலைகள் ரக்ஷிக்கப்படுகின்றன.

திங்கள், 27 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோகங்கள் 22 & 23

சுலோகம் 22

துர்வாதளப்ரதிமயா தவ தேஹகாந்த்யா:
கோரோசனாருசிரயா ச ருசேந்திராயா: |
ஆஸீதநுஜ்ஜித சிகாவனகண்டசோபம்
மாங்கள்யதம் ப்ரணமதாம் மதுவைரிகாத்ரம் || .22.

புட்பந் தனிலுறையும் பொன்னொளிசேர் பூமாது
நிட்களங்கப் பச்சையொளி நீயுமாய் -- நட்பின்
இருபாலும் வைகுதலா லெம்மோய்மான் மஞ்ஞைத்
திருவா ரெருத்துழறுஞ் சேர்ந்து. .22.

பதவுரை

மதுவைரிகாத்ரம் -- வேதத்தைத் திருடிய மதுவென்னும் அஸுரனுக்குச் சத்ருவான மதுஸூதனனுடைய திருமேனியானது; துர்வாதளப்ரதிமயா -- அருகம்புல்லைப்போல் பசுமையான; தவ தேஹகாந்த்யா -- உன் திருமேனியொளியாலும்; கோரோசனாருசிரயா -- கோரோசனையைப்போல் பொன்னிறமான; இந்த்ராயா -- லக்ஷ்மியின்; ருவா ச -- காந்தியாலும்; அநுஜ்ஜிதசிகாவள கண்டசோபம் --மயில் கழுத்தின் சோபையை விடாததாகி; ப்ரணமதாம் -- அடிபணிபவர்க்கு; மாங்கள்யதம் ஆஸீத் -- மங்களத்தை அளிப்பதாயிற்று.

மதுஸூதனனுடைய திருமேனியானது அருகம்புல்லைப் போலப் பசுமையான உன் திருமேனியின் பச்சைக் காந்தியாலும், கோரோசனையைப்போன்ற லக்ஷ்மீதேவியின் பொன்னிறத்தாலும், மயிலின் கழுத்தின் சோபையை விடாமல் வஹித்துக்கொண்டு அடிபணிபவருக்கெல்லாம் மங்களத்தை அளிக்கிறது.

அவதாரிகை

மாலைமாற்றி விவாஹம் நடந்து, கோதையும் பெரியபிராட்டியாரோடு விஷ்ணுபத்நியானாள். பிராட்டிமாரிருவரும் உபயநாச்சிமாராய் இருபக்கமுமிருக்கிறார்கள். அவர்கள் காந்திகள் பெருமாள் கரிய திருமேனியில் பரவுகின்றன. கோதையின் நிறம் அருகம்புல்லைப் போன்றது. பெரியபிராட்டியார் நிறம் பொன்நிறம், கோரோசனையைப் போன்றது. இருபக்கமும் இருவித காந்திகளும் பெருமாள் நீலத்திருமேனியில் இடைவிடாமல் பரவுகின்றன. நீலகண்டமென்னும் மயிலின் கழுத்தைப்போல பெருமாள் திருமேனி முழுவதும் ஆகின்றது. விவாஹத்தில் தம்பதிகளைப் பார்வதீபரமேச்வர மிதுனத்திற்கு ஒப்பிடுவார். அவர்களுடம்புமொன்றாயுளது. காடோவகூடமாகில் பிரிவுக்கே ப்ரஸக்தியில்லாமல் இருக்கும். உபய நாச்சிமார் திருமேனிக்காந்திகளும் பெருமாள் திருமேனியும் ஒன்றாகச் சேர்ந்து பிரியாச் சேர்த்தியாகின்றன. நீலகண்டரை மூன்றாவது அடியிலும், கௌரியை இரண்டாமடியிலும் ஒருவாறு ஸூசிக்கிறார். 'மஹேச்வரம் பர்வதராஜ புத்ரீ' என்று பாஞ்சாலீஸ்வயம்வரத்தில் த்ரௌபதீ அர்ஜுனனை மாலையிட்டதை வ்யாஸர் வர்ணித்தார். 'அநுஜ்ஜித' என்று நீங்காச் சேர்த்தியை ஸூசிக்கிறார். நீலகண்டருக்குக் க.ழுத்து மட்டும் நீலம்; மயிலுக்குக் கழுத்து இப்படி விசித்ர வர்ணமாயிருக்கும். பெருமாள் திருமேனி முழுதும் தேவிமார் காந்திகளால் மயில் கழுத்துக்கொப்பாகிறது. சிவசப்தம் மங்களத்தைச் சொல்லும். நீலகண்டசோபையை உடைய திருமேனி மங்களமாகிறது என்று ஓர்வித வேடிக்கை. ஈச்வரர் இத்தம்பதிகளுக்குப் பௌத்திரர். அவர் புத்ரர்களான அருகம்புல்லை விரும்பும் பிள்ளையாரும், மயில்வாஹனரான கார்த்திகேயரும் ப்ரபௌத்திரர்கள். 'சதுர்முகர் ஈச்வரர் முதலியவராகிய புத்திரபௌத்திரர்களோடு கூடிய ஸீதாஸமேதரான ராமனென்னும் க்ருஹமேதிக்கு நமஸ்காரம்' என்று ரகுவீரமங்களகத்யம் ஸாதித்ததை இங்கும் நினைக்கவேணும். 'சிவனொடு பிரமன் வண்திருமடந்தை சேர் திருவாக மெவ்வாவியீரும்'

தூர்வாதளப்ரதிமயா -- அருகம்புல்லைப் போலொத்த பசுமையான. இது மங்களத்ரவ்யம். விக்நேச்வரப்ரியம், விஷ்வக்ஸேநாராதன ஸூசகம்.

தவ தேஹகாந்த்யா -- உன் திருமேனி காந்தியால்;

கோரோசனாருசிரயா -- கோரோசனை வர்ணமான

இந்திராயா:ருசாச -- லக்ஷ்மீதேவியின் காந்தியாலும்; கோதையும் ஓர் பக்கத்தில் பத்நியாகக்கூட நிற்பதில் லக்ஷ்மீதேவியின் ருசியையும் ஸூசிக்கிறார். இந்த ஸந்தோஷத்திற்கு இத்தனை காலமாய்க் கோடித்துக் கொண்டிருந்ததால் விவாஹ க்ஷணத்திலேயே தன்னோடு ஜோடியாக மற்றோர் பக்கத்தில் நிறுத்தி வைத்து சந்தோஷித்தான். ரோசனா, ருசோரா, ருசா என்று மூன்றுதரம் ருசியைக் காட்டும் சப்தங்கள். ருசிம் -- ராதி, ருசியைக் கொடுக்கிறது, ருசிரம்.

ஆஸீத் -- ஆயிற்று.

அநுஜ்ஜித சிகாவளகண்டசோபம் -- 'சிகாவள' என்பது மயில், நீலகண்டம். அதன் கழுத்தின் சோபையை விடாமல்.

மாங்கள்யதம் -- திருமேனியே மங்களத்தையளிக்கிறது. பெருமாள் திருமேனியே ஆச்ரிதருக்கு மாங்கல்யத்தைக் கொடுக்கும். பார்வதீச்வரர்கள் மாங்கல்யத்தை, தாம்பத்யத்தை, மங்களத்தைக் கொடுப்பதென்பதும் பெருமாள் அவர்களுக்குள்ளிருந்து கொடுப்பதால்தான். பெருமாள் திருமேனியுடன் உபயநாச்சிமார் திருமேனிக்காந்திகள் பிரியாமல் சேர்ந்ததும், அவர்கள் திருமேனிகள் கூடிய சுபாச்ரயம் ஸகல மங்களங்களையும் அளிக்க யோக்யமாயிற்று. இத்தம்பதிகள் பிரியாமல் சேர்ந்தே ஸகல ச்ரேயஸ்ஸுகளையும் அளிப்பவர். 'மாங்கல்யம் தந்துநாநேந' என்ற ச்லோகத்தையும் ஸூசிக்கிறார். மாங்கல்யத்தைக் கொடுக்கும் நூலென்று பொருளையும் ஸூசிக்கிறார்.

மதுவைரிகாத்ரம் -- இதனால் சில அழகிய பொருள்களின் வ்யஞ்ஜனம். (1) வேதங்களாகிய கண்களையிழந்த ப்ரஹ்மாவுக்கு வேதங்களைத் திருப்பிக் கொணர்ந்து அவருக்கு ஞானப்ரதானம் பண்ணி மயர்வை நீக்கிய அவதாரம். புத்ரனுக்கும் லோகத்திற்கும் வேதமளித்த அவதாரம். இதனால் ப்ரஹ்மாவின் நினைப்பையும் இங்கே சேர்த்து பௌத்திர ப்ரபௌத்திரர்களோடு (பேரர், கொள்ளுப்பேரரோடு) புத்திரரையும் சேர்த்துத் தம்பதிகளை க்ருஹமேதிகளாக அநுஸந்திப்பது. 'புத்திரரைப் பெற்று' என்று ஆஸீர்வதிப்பர். ப்ரபௌத்திரர் பர்யந்தம் இங்கே காட்சி.

(2) சரணாகதி ச்லோகமடங்கிய கீதை பாடினதும் மதுசூதனன் திருவாக்கு. கண்ணில்லாத புத்திரர்களான நமக்கு கீதோபநிஷத்தை அருளிய திருமேனி. வெகுகாலமாக நஷ்டமான யோகத்தைத் திருப்பிக்கொண்டுவந்து உபதேசித்தது. கீதாசார்யன் திருமேனி சரணாகதியை உபதேசித்தது போதுமோ? அநுஷ்டானமில்லையாயின் அப்ரமாணமென்பரே! பிராட்டிமார் சேர்த்தியில் காடோபகூடமான தசையில் விசிஷ்டத்திலன்றோ பரத்தை சமர்ப்பிக்கவேணும்! கோதையாகிய பக்கபலமும் சேரவே பெருமாள் தப்பியோட வழியில்லை. பெரியபிராட்டியாருக்கு ப்ரஜாரக்ஷணத்தில் பார்ச்வபலம் (பக்கபலம்) சேர்ந்துவிட்டதும் அவனுடைய ருசிக்கு ஸந்தோஷத்திற்கு அளவில்லை.

(3) நாம் ஜ்ஞானவிரோதிகள், அஜ்ஞானக் களஞ்சியங்கள். மதுவென்னும் அஸுரனைச் சீறியதுபோல, நம்மையும் சீறுவது உசிதம். இது 'வைரி' என்பதால் ஸூசிக்கப் படுகிறது. பிராட்டிமார் இருபக்கமும் இருக்கவே அவர்கள் காருண்யப்ரபை படியவே அச்சீற்றம் பரந்துபோகிறது.

(4) இம்மூவர் சேர்த்தியில் வணங்கி ஆதிராஜ்யத்தை அநுபவித்தார்களென்று அடுத்த 23ம் சுலோகத்திலும், ஆத்மபரம் ஸமர்ப்பிப்பதற்காகப் புருஷகாரத்தை 24லிலும், பெருமாள் ஸ்வாதந்த்ரியத்தைக் குறைத்து அநந்தாபராதங்களைப் போக்குவதை 25லிலும், 'ப்ரபத்ய' என்று ப்ரபத்தியை 26லிலும் பேசிப்போவதையும் கவனிக்க.

(5) ப்ரஹ்மருத்திராதிகளைத் தம் புத்திர பௌத்திரர்களாகத் தம் திருமேனியிலே சேர்த்துக்கொண்டிருப்பதாக, விசிஷ்டமாகப் பெருமாளை அனுபவிப்பார் மயர்வற மதிநலமருளப் பெற்றவர். 'புரமொரு மூன்றெறித்தமரர்க்கு மறிவியந்தரனயனென வுலகழித்தமைத்தனனே' என்று துடக்கத்திலும், கடைப்பத்தில் 'சடையானைப்பாகத்து வைத்தான் தன்பாதம் பணிந்தேனே' என்றும் பாடி, கடைத்திருவாய்மொழியிலும் 'முனியே நான்முகனே முக்கண்ணப்பா' என்று பாடியுள்ளது. 'உலகுக்கோர் தனியப்பனை' என்பதை 'ஸமஸ்த ஜகதாம் பிது:' என்று பாடி அதே பாசுரத்தில் 'பிரமனப்பனை யுருத்திரனப்பனை முனிவர்க்குரியவப்பனை யமரரப்பனை' என்று முன்னுள்ளதை இங்கே அனுஸரிக்கிறார். எல்லோர்க்கும் அப்பன் என்றதால் 'தமியனேன் பெரியவப்பனே' என்றபடி எனக்கும் பிதாவென்று கருத்து.. என் தகப்பன் விவாஹம், என் தாய் விவாஹம். என் தந்தை விவாஹத்தில் நான் மங்களம் பாடுகிறேன். இதென்ன பாக்யம்! என்ன ஆச்சர்யம்! 'ஸர்வான் தேவாந் நமஸ்யந்தி ராமஸ்யார்த்தே யசஸ்விந:' என்றபடி இந்தத் தம்பதிகளின் சேர்த்தியின் மங்களத்திற்காக எல்லாத் தேவரையும் நினைக்கலாம். கால் கட்டலாம், பிராட்டி அலங்கரிக்கும் திருமேனியில் புத்ரபௌத்ராதிகளான அவர்கட்கும் பாகமுண்டு.

(6) 'மதுவைரி' என்றதால் மறையை அனுக்ரஹித்த உபகாரத்தைக் காட்டுகிறது. விஷ்வக்ஸேநரான ஆழ்வார் மூலமாகவும் இப்பொழுது பத்நியாகச் சேர்ந்த கோதை மூலமாகவும் தமிழ்மறைகளை அநுக்ரஹிக்கும் உபகாரமும் இங்கே ஸூசிக்கப்படுகிறது. ஸம்ஸ்க்ருத வேதங்களைக் கொணர்ந்தது, வேதம் தமிழ் செய்த, தெளியாத மறைநிலங்கள் தெளியச்செய்த இத்தமிழ்மறைகளால் ஸபலமாயிற்று.

சுலோகம் 23

அர்ச்யம் ஸமர்ச்ய நியமைர் நிகமப்ரஸூனை:
நாதம் த்வயா கமலயா ச ஸமேயிவாம்ஸம் |
மாதச்சிரம் நிரவிசந் நிஜமாதிராஜ்யம்
மாந்யா மநுப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே || .23.

அன்ன வயல்சூ ழயோத்தி நகராளு
மன்னரிக்கு வாகுமுதன் மாந்தாதா -- பொன்னை
யரிந்தமனைக் கோதையுனை யன்பாகப் பூசை
புரிந்தன்றோ பெற்றார் புகழ். .23.

பதவுரை

மாத: -- தாயே!; மாந்யா -- பூஜ்யர்களான; தே -- அந்த; மஹீக்ஷித: -- அரசர்களான; மநுப்ரப்ருதயோபி -- மநு முதலியவரும்; த்வயா -- உன்னோடும்; கமலயாச -- தாமரையாளோடும்; ஸமேயிவாம்ஸம் -- (ஸமேதரான) கூடிய; தாநம் -- நாதனை; அர்ச்யம் -- அர்ச்சிக்க யோக்யரை; நியமை: -- நியம நிஷ்டைகளோடு; நிகமப்ரஸூனை: -- மறைகளான புஷ்பங்களைக் கொண்டு; ஸமர்ச்ய -- நன்றாக அர்ச்சித்து; சேர்த்தியில் சேர்த்து அர்ச்சித்து; நிஜம் -- தங்கள் ஸ்வந்தமான; ஆதிராஜ்யம் -- உலகுக்கு ஆதிபத்யத்தை; சிரம் -- நீடூழி காலம்; நிரசிஶந் -- அநுபவித்தார்கள்.

அம்மா! பூஜ்யர்களான அந்த மஹாமஹிமையையுடைய மநுமாந்தாதா முதலியவர்களும் உன்னோடும் தாமரையாளோடும் கூடிய அர்ச்சிக்க யோக்யமான நாதனை நியமங்களில் நிஷ்டராய், வேதமந்த்ர புஷ்பங்களால் நன்றாகச் சேர்த்து அர்ச்சித்துத் தங்கள் ஆதிராஜ்யத்தை நீடூழிகாலம் அநுபவித்தார்கள்.

அவதாரிகை

தமிழ்மறை பாடிய கோதையோடும் லக்ஷ்மீதந்த்ரம் பாடிய லக்ஷ்மீயோடும் கூடிய (வேதங்களை மீட்டு உபதேசித்து கீதை பாடிய) மதுஸூதனன் திருமேனியைப் பாதம் பணிபவருக்கு மங்களங்கள் கிடைக்குமென்றார். இச்சேர்த்தியைப் பூஜித்து மநு முதலிய ரவிகுலத்தரசர் தங்கள் ராஜ்யத்தை இவர்களுக்கு சேஷமாக அநுபவித்தார்கள். மதுஸூதனன் அக்குல கூடஸ்தரான விஸ்வானென்னும் ஸூர்யனுக்கு மோக்ஷோபாயத்தை உபதேசித்து, இப்படி உபதேச பரம்பரை வந்ததையும் 'மநு முதலியவர்கள் அர்ச்சித்தார்கள்' என்பதால் காட்டுகிறார். ஸூர்யகுல பரம்பரை, நம் குரு பரம்பரை, இச்சேர்த்தியின் சிஷ்ய பரம்பரை. திவ்ய மிதுனச் சேர்த்தியை மங்களகாமர்கள் ஆத்மஜ்ஞானரான ஆசார்யராக அர்ச்சிப்பது உசிதம். மநு முதலியவரும் அப்பரம்பரையில் சேர்ந்தவர்கள். மநுகுலமஹீபாலர் உபயநாச்சிமாரோடு கூடிய இப்பெருமாளை அர்ச்சித்தவர். மைதிலீரமண காத்ரத்தால் பெருமாளும் பிராட்டியும் தாமாகிய இச்சேர்த்தியை அர்ச்சித்து ராஜ்யமாண்டார்கள். ஈச்வரமிதுனத்திற்கும் அர்ச்யமும் மங்களமளிப்பதுமான சேர்த்தி இது. 'அங்கம்சேரும் பூமகள் மண்மகளாய்மகள்.'

அர்ச்யம் -- முன் ச்லோகத்தில் சொன்ன விசிஷ்டம் அர்ச்சிக்கத் தக்கது. அச்சேர்த்தியில் செய்யும் அர்ச்சனை பலத்தையளிக்கும். சேர்த்தியை முன் ச்லோகத்தில் ஸேவித்ததும் உடனே அர்ச்சனை செய்வது உசிதம். அர்ச்சனை செய்வதை உடனே பேசுகிறார். முதலில் பேசுகிறார்.

ஸமர்ச்யம் -- நன்றாயர்ச்சித்து. 'ஸம்' என்பதற்கு 'ஒன்று சேர்த்து' என்றும் பொருள். ஒன்று சேர்த்து அர்ச்சிப்பதே சீர். தம்பதி பூஜை.

நியமை: -- பக்தியோகத்திற்குச் சக்தர்களாதலால் ஸகல வைதிக நியமங்களோடுகூட பக்தியை அனுஷ்டிக்கிறார்கள்., தயை, க்ஷமை, சாந்தி முதலிய ஆத்மகுண நியமங்களான புஷ்பங்களாலும்.

நிகமப்ரஸூனை: -- வேதமந்த்ர புஷ்பங்களால். நிகம கல்ப வ்ருக்ஷத்தின் மந்த்ரங்களான புஷ்பங்களால். வேதங்களிலிருந்து பிறந்த (வேதங்கள் சொல்லும்)எல்லா நியமங்களோடும் என்றும் கொள்ளலாம். லகுவான சரணாகதியைக் காட்டிலும் வேற்றுமை. 'நிகமம்' என்னும் கடைவீதி புஷ்பங்களிலும் வைஜாத்யம். நிகமமென்னும் வேதபுஷ்பங்களோடு மற்ற உயர்ந்த புஷ்பங்களும் சேரட்டும்.

நாதம் -- திருநாமத்தில் ஏகதேசத்தைச் சொன்னாலும் முழுப் பெயராகும். 'ரங்கநாதன்' என்பதை 'நாதன்' என்கிறார். தேவிமாருக்கு நாதனென்பதையும் காட்டவேணும். 'யாரை அர்ச்சித்து சுபத்தை, மங்களத்தை மானவர்கள் அடையக்கூடும்' என்று தர்ம்புத்திரர் பீஷ்மரைக் கேட்டதற்கு 'புண்டரீகாக்ஷனை ஸ்தவங்களால் பக்தியோடு ஸதாகாலமும் அர்ச்சிப்பதிலும்மிக்க தர்மமில்லை. மங்களங்களுக்கெல்லாம் மங்களமும், தைவதங்களுக்கெல்லாம் தைவதமுமான எல்லா உலகத் தாதையான ஜகந்நாதனை ஸஹஸ்ரநாமார்ச்சனை செய்வது நலம்' என்று உபதேசித்தார். அந்த ஜகந்நாதனை 'நாதன்' என்கிறார். அவர் மங்களமங்களர், தேவதேவனென்றார் முன் ச்லோகத்தில். அர்ச்யம்' என்று பீஷ்மர் உபதேசித்த ஸஹஸ்ரநாமார்ச்சனையை இங்கே முதலிலேயே பேசுகிறார். 'ஸ்ரீச: ஸ்ரீத: ஸ்ரீநிவாஸ:' என்று அக்கிழவரும், 'தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்குமுணர்வு' என்ற உறுதியையே கொண்டவர். 'ஸ்ரீசன் -- ஸ்ரீயை அளிப்பவன்', ஸ்ரீத: என்பதற்கு 'மாங்கள்யத:' என்பது பொருள். இத்தனையும் ஸ்வாமி நெஞ்சிலோடுகிறது. ரஸிகர் மனதின் ஸம்வாதமே ப்ரமாணம். 'மானவர்கள்' என்றார் தர்மர். மானவர்க்கும் தாதையான மநு முதலியவர் இப்படி அர்ச்சித்து மங்களமடைந்ததை இங்கே பேசுகிறார். 'மனோர்ஜாதா: மானவா' நாதம் -- ரங்கநாதனை , ஜகந்நாதனை, உங்கள் ப்ராணநாதனை.

த்வயா கமலயா ச -- உங்களிருவரோடு. 'உங்களிருவராலும் நாதன் ஜகந்நாதனாகிறான்' என்னும் ஓர் அந்வயம் சேர்க்கவேணும். 'ச்ரத்தயா தேவோ தேவத்வமச்னுதே', 'ஹ்ரீஶ்ச தே லக்ஷ்மீஶ்ச பத்ந்யௌ'. வேதம் ஓதிய க்ரமத்தை அனுஸரித்து பூமியாகிய கோதையை முன்னே வைத்தார். 'கமலயா' என்று 'தாமரையாள் கேள்வன் ஒருவனையே' என்னும் ஆழ்வார் ஸம்ப்ரதாயத்தைக் காட்டுகிறார்.

ஸமேதிவாம்ஸம் -- 'ஸம்' என்பது ஏகீகாரம் செய்யும் (ஒன்றாக்கும்) பொருளுடையது. தேவிமாரோடு கூடி ஒன்றேயாகி. விசிஷ்டம் ஒன்றே. இந்த ப்ரயோகம் வைதிகமானது. மந்த்ர புஷ்பங்களைக்கொண்டு அர்ச்சிக்கும் சேர்த்தியைச் சாந்தஸ ப்ரயோகத்தாலேயே பேசுவதும் அழகு. ப்ரகரணத்திற்கேற்றது. பாலகாண்டம் முடிவில் விவாஹமானதும், ஸீதை கூடிய ராமனை 'தயா ஸமேயிவாந்' என்று ருஷி வர்ணித்ததை இங்கே 'த்வயா ஸமேயிவாந்' என்று பேசுகிறார். இன்னுமொரு ரஸம் உண்டு. 'கதா ஸீமேஷ்யாமி பரதேந த்வயா ச' என்று லக்ஷ்மணனைப் பார்த்துப் பேசினவிடத்திற்போல பிரியாமல் கூடவேயிருக்கும் லக்ஷ்மியும் கோதையோடுகூடச் சேருங்கால் ஓர் புதுச் சேர்த்தி போலாகின்றாள் என்பது ரஸம். கோதை கல்யாணம் லக்ஷ்மீ கல்யாணமுமாகின்றது.

மாத: -- எல்லா ப்ராணிகளுக்கும் அவ்ய்யமான பிதா. ; நாம் மாறி மாறிப் பலபிறப்பும் பிறந்தாலும் அவன் மாறாத பிதா'. அப்பிதாவுக்குப் பத்நியான நீ எல்லோருக்கும் தாய் என்பதில் என்ன தடை?

சிரம் -- தீர்க்க காலம். உங்கள் சேர்த்தியை அர்ச்சித்துக் கொண்டேயிருந்தால் இம்மண்ணுலகும் பொன்னுலகே. அயோத்திமாநகரும் திருவிண்ணகரான அயோத்தியே.

நிரசிஶந் -- ஸம்பூர்ணமாய் அநுபவித்தார்கள்.

நிஜம் ஆதிராஜ்யம் -- அவர்கள் ராஜ்யம் ஸர்வாதிகமான அகண்ட பூமண்டலாதி ராஜ்யம். அது அவர்களுக்கு ஸொந்தமாயினும், "ஸகலம் தத்தி தவைவ மாதவ", 'உன் சேஷித்வ விபவத்திற்கு வெளிப்பட்டதைக் கண்ணெடுத்தும் பாரேன்' என்றபடி உங்களுக்கு சேஷமாக அனுபவித்து இன்புற்றார்கள்.

மாந்யா மநு ப்ரப்ருதயோபி மஹீக்ஷிதஸ்தே -- பூஜ்யர்களான மனு, இக்ஷ்வாகு முதலியவர்கள் பூஜித்தார்கள். மநு ப்ரப்ருதிபிரமாந்யை:' வைவஸ்வதோ மநுர்நாம மாநநீயோ மநீஷிணாம்! ஆஸீத் மஹீக்ஷிதாமாத்ய:' ப்ரணவஶ்சந்தஸாமிவ' என்ற காளிதாஸ ச்லோகங்கள் இங்கே ஸ்வாமி நெஞ்சிலோடுவது திண்ணம். அதே பதங்களை அமைத்துள்ளது. செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில் என்னுமதும் காளிதாஸர் த்ருஷ்டாந்தப் பணிப்புக்குச் சேரும். ரங்கம் ப்ரணவம். 'மனு சொன்னதெல்லாம் ஔஷதம்' என்றது வேதம். மனு ஆசிரியர் இச்சேர்த்தியைத் தாம் அர்ச்சித்து அவ்வாசாரத்தில் நம்மை நிலைநாட்டுகிறார். 'ஆசாரே ஸ்தாபயதி ஸ்வயம் ஆசரதே' .23.