சனி, 18 நவம்பர், 2017

நம்மாழ்வார் வைபவம்

6. விசேஷார்த்த நிரூபணம்.

மற்றைய திவ்ய ப்ரபந்தங்களிலும் பகவானுடைய குணங்கள் அனுஸந்திக்கப் பட்டிருந்தபோதிலும், திருவாய்மொழியிலே போலே ஒருக்ரமமாய்ச் சங்கிலித்துவக்குப்போலே அவை நிரூபிக்கப்படவில்லை. பகவானுக்கும் சேதனாசேதனங்களுக்குமுள்ள சரீராத்ம பாவத்தை விஸ்தரமாக உபபாதித்திருப்பதும் (திருவாய் 1-1-7) அர்ச்சிராதி மார்க்கத்தில் முக்தாத்மாவிற்கு நடக்கும் ஸத்கார விசேஷங்களை விவரமாக அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 10-9) பாகவத ப்ரபாவத்தை 2 திருவாய் மொழிகளில் பரக்கப் பேசியிருப்பதும் (திருவாய் 3-7, 8-10) வேதங்களும் பகவானை அறிவது அசக்யம் என்றே அறிந்தன என்று நிரூபித்திருப்பதும் (திருவாய் 9-3-3) பகவதனுபவத்தை இங்கே செய்வதை விட மோக்ஷானுபவம் உயர்ந்ததன்று என்று அனுஸந்தித் திருப்பதும் ஸம்ஸார துக்கத்தைப் போக்கிக்கொள்வதற்கு பகவானுடைய குணானுஸந்தானத்தை விட ஸாதநம் கிடையாது என்று நிஷ்கர்ஷித்திருப்பதும் (பெ.திரு 86) ஆசார்ய ஸார்வ பெளமனுடைய அவதாரத்தை ஸூசிப்பித்திருப்பதும் (திருவிரு 26) மார்க்கண்டேயனுக்கு ருத்திரன் சிரஞ்சீவியாய் இருக்கும்படி வரம் கொடுத்ததும் பகவானுடைய அனுக்ரஹத்தினாலேயே என்று அனுஸந்தித்திருப்பதும் (திருவாய் 4-10-8) பகவானுடைய திருக்கண்களின் சோபைனை தாமரைக் காடுகள் என வர்ணித்திருப்பதும் (திருவாசி 2, திருவாய் 8-9-1) சில விசேஷார்த்த நிரூபணங்களாகும்.

8. இவருடைய திருநாமங்கள்.

மாறன், சடகோபன், வழுதிவளநாடன் என்று தாமே தம்மை வழங்கிக்கொண்டிருக்கிறார். இத்திருநாமங்களுக்கு விசேஷணங்களாக குருகூர் நகரான், குருகூர், வழுதிநாடன் குருகைக் கோன், காரி, திருமாலால் அருளப்பட்ட என்றுஅனுஸந்தித்துக்கொண்டிருக்கிறார். காரி என்றது தகப்பனாரின் திருநாமம். மாறன் என்பது குடிப்பெயர். லோகத்திலுள்ள மற்றவர்களைக் காட்டிலும் மாறான - வேறுபட்ட ஸ்வபாவத்தையுடையவர் என்றுமாம். சடகோபன் என்றது கெட்டவர்களைக் கோபித்துக்கொள்ளுமவர் என்றபடி. நம்மாழ்வார் என்பது இவரை உகந்து பெரியபெருமாள் அனுக்ரஹித்தருளிய திருநாமம். இத்திருநாமத்தாலேயே இவரை வ்யவஹரிப்பது ஸம்ப்ரதாயம்

குலபதி என்று ஸ்ரீஆளவந்தார் அனுஸந்தித்திருக்கிறார். ஸ்ரீதேசிகன் ஸ்ரீத்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி முதலியவற்றில் இவரை “சடரிபு:, சடஜித் சடமதநமுநி:, முநி: முநீந்த்ர யோகீ, சடாரி:, காரிஸூநு:, கேஸர ஸ்ரக் விபூஷ:, சடஜநமதந:, காரேஸ்தநூஜ:, காரேரபத்யம், காரிஜ:, : அகில த்ராமிட ப்ரஹ்ம தரிசி, சடகோப ஸூரி:, வகுளதர மஹர்ஷி, வகுளாபரண:, கூடஸ்த: என்றிவை முதலிய திருநாமங்களால் அனுஸந்திருக்கிறார்.

9. பூர்வர்கள் இவரைக் கொண்டாடியிருக்கும் ப்ரகாரம்

ஸ்ரீ மதுரகவியாழ்வார் இவர் விஷயமான திருவழுதிநாடுஎன்றாரம்பிக்கும் தனியனையும், ஸ்ரீமந்நாதமுனிகள் ‘பக்தாம்ருதம்’ ‘மனத்தாலும்’ என்றாரம்பிக்கும் தனியன்களையும், ஸ்ரீஆளவந்தார் ‘மாதா பிதா’ என்கிற தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

எம்பெருமானார்,முந்துற்ற நெஞ்சே’ என்கிற பெரிய திருவந்தாதித் தனியனையும், திருக்குருகைப்பிரான், ‘வான் திகழும் சோலை’ ‘மிக்க இறைநிலையும்’, ‘ஏய்ந்த பெருங்கீர்த்தி’ என்கிற திருவாய்மொழித் தனியன்களையும், கிடாம்பி ஆச்சான், ‘கருவிருத்தக்குழி’ என்கிற திருவிருத்தத் தனியனையும், அருளாளப்பெருமாள் எம்பெருமானார், ‘காசினியோர்’ என்கிற திருவாசிரியத் தனியனையும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

ஸ்ரீமதுரகவியாழ்வார், இவ்வாழ்வார் தம்முடைய அனுபவ பரீவாகமாக வெளியிட்ட பாசுரங்களைப் பட்டோலை கொண்டு, அவற்றை நான்கு ப்ரபந்தங்களாக லோகத்தில் வெளியிட்டருளினது மாத்திரமன்றிக்கே ஆழ்வாரையே ஆசார்யனாகக்கொண்டு, அவருடைய திவ்யார்ச்சையை திருப்ரதிஷ்டை செய்தருளி அதற்கு உத்ஸவாதிகளை நடத்தி, அதற்கு உபரோதம் செய்தவர்களை நிரஸித்து உத்ஸவாதிகளை யதா க்ரமம் நடத்திவைத்தார்.

திருமங்கையாழ்வார் ஸ்ரீரங்கநாதனுடைய நியமனப்படி இவரு டைய ப்ரபந்தமான திருவாய்மொழியை ப்ரதி ஸம்வத்ஸரமும் மார்கழி மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி தொடக்கமாக ஒவ்வொரு நாளும் ஒரு பத்தைத் திருச்செவி சாற்றியருளும்படி ஏற்பாடு செய்தருளினார்.

ஸ்ரீஆளவந்தார் தமது ஸ்தோத்ரத்தில் பற்பல பாட்டுக்களின் கருத்தை வெளியிட்டருளியிருக்கிறார், உதாஹரணமாக

மெய் நின்று கேட்டருளாய் அடியேன் செய்யும் விண்ணப்பமே " என்று திருவிருத்தத்தில் ஆழ்வார் அனுஸந்தித்தருளியதை

न मृषा परमार्थमेव मे श्रृंणु विझापनमेकमग्रतः

तत् सत्यं मधुमथन ! विज्ञापनमिदम्

என்றும், உயர்வற உயர் நலமுடையவன் ’ என்றதை

स्वाभाविकानवधिकातिशयेशितृत्वं

என்றும், "யாருமோர் நிலைமையன் என நினைவரிய எம்பெருமான் யாருமோர் நிலைமையன்என அறிவெளிய எம்பெருமான்" என்றதை

'विधिशिवसनकाद्ये: ध्यानुमत्यन्तदूरं पश्यन्ति केचिदनिशं त्वदनन्यभावाः' என்றும், 'நன்றெழில் நாரணன் ' என்றதை * नारायण ! त्वयि न मृष्यति वैदिकः कः ‘ என்றும், நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்" என்றதையே * न धर्मनिष्ठेस्मि न चात्मवेदी ° என்றும் *

நாளு நின்றடு நம் பழமையங்கொடு வினையுடனே

மாளும் ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி

நாளும் திருவடியடிகள்தம் நலங்கழல் வணங்கி

மாளுமோரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே

என்றனுஸந்தித்தருளியதை * त्वर्देधिमुद्वदिश्य कदापि केनचिन्' என்ருரம்பிக்கும் கலோகத்திலும் விவரணம் செய்தருளிஞர்