சனி, 23 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 6

 

23-7-2011 அன்று ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் அருளிய அனுக்ரஹ பாஷணம்.

இன்றைய அனுக்ரஹ பாஷணம் கேட்க

To download to your system

Media fire

http://www.mediafire.com/?cb9nicp5sxvpg1s

அனுக்ரஹ பாஷணம் அனைத்தையும் தரவிறக்கிக் கேட்க

skydrive

https://skydrive.live.com/?cid=4809c9eb88545e42&sc=documents&id=4809C9EB88545E42!922

வெள்ளி, 22 ஜூலை, 2011

ஆடி வெள்ளியில் ஆனந்தக் காட்சிகள்

திருப்புல்லாணியில்  இருந்தோருக்கு இன்று ஒரு ஆனந்தமான நாள். காலையிலே தாயாரும் பெருமாளும் குளிரக் குளிரத் திருமஞ்சனம் கண்டருளி இரவிலே பார்த்தவர்கள் எல்லாரும் பரவசம் அடையும் வண்ணம் ஊஞ்சலில் எழுந்தருளி மகிழ்வித்தனர்.

DSC02972

DSC02976

 

உள்ளே இருந்து ரஸி (க்ஷி)க்கின்ற தாயார்

DSC02977

அங்கு முடிந்து மடத்திற்கு வந்தால் அங்கும்  டோலை!  கண்கொள்ளாக் காட்சி!. அனுபவித்து அனுபவித்து அழகியசிங்கர்  செய்கின்ற கைங்கர்யங்கள், உபசாரங்கள் எல்லாம் அதைக் கண்டவர்களை மெய்மறக்க வைத்தன.

DSC02979

 

DSC02981

DSC02990

 

DSC02989

 

DSC02991

 

DSC02992

DSC02993

 

ஒரு அமெச்சூர்தனமான வீடியோ !

 

இன்று தனது அனுக்ரஹ பாஷணத்தில் 46ம் பட்டம் அழகியசிங்கர் இங்கு சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் மேற்கொள்வதற்கு ரசமான ஒரு விஷயம் சாதித்தார். அன்று தன்னை நாடி வந்து பூஜித்த இராமனை, அவன் சயனம் கொண்டிருக்கும் இங்கு வந்து அவனை ஆனந்தப்பட வைக்கவே ஸ்ரீ லக்ஷ்மி ந்ருஸிம்ஹன் அழகியசிங்கர்களை இங்கு சங்கல்பம் மேற்கொள்ள வைத்திருக்கிறான் என்றார். இன்று ந்ருஸிம்ஹன் எழுந்தருளியிருந்த அழகு அதை உறுதிப் படுத்தியது.

அப்புறம், இன்று உள்ளூர் கேபிள் டி.வி. சானல்காரர்களின் ப்ரார்த்தனையை ஏற்று அவர்களுக்காக அனுக்ரஹ பாஷணம் அருளியபடியால், பெரும்பாலும் பொதுவாகவே அனுக்ரஹபாஷணம் அமைந்தது. சொல்ல நினைத்திருந்த தர்ம சாஸ்திர விஷயங்களை நாளை அருள்வதாக சாதித்தாயிற்று. ஆனாலும் இறுதியில், அடியேன் மூலமாக சிலர் கேட்டிருந்த ஐயங்களுக்கு அழகிய சிங்கர் அளித்த பதில் எல்லாருக்கும் பயனளிக்கும்.

சொல்ல மறந்ந்து விட்டேனே! தினமும் மாலையில் சின்ன அழகியசிங்கர் திருவீதி ப்ரதக்ஷிணமாக வந்து கோவிலில் இப்படி ஏகாந்தமாக எல்லா ஸந்நிதிகளிலும் ஸேவித்து மகிழ்ந்து கொண்டிருக்கிறார்.

DSC02971

 

அனுக்ரஹ பாஷணம் கேட்க

 
பதிவிறக்கம் செய்து கொள்ள
 
 
அல்லது

 

எங்கள் தாயார் இன்று புதிதாக அணிந்து கொண்ட திருமாங்கல்யம்

இன்று ஆடி வெள்ளி. சமீப காலமாக எங்கள் தாயார் அனேகமாக மாதந்தோறும் ஏதேனும் புதிய ஆபரணங்கள் சாற்றிக் கொண்டு அவள் குழந்தைகளை மகிழ்விப்பதை வழக்கமாக்கிக் கொண்டிருக்கிறாள். அந்த வகையில் இன்று ஒரு புதிய திருமாங்கல்யத்தை உற்சவர்  கல்யாணவல்லித் தாயார் அணிந்து கொள்ளப் போகிறாள். இன்னும் சிறிது நேரத்தில் தன் நாதனுடன் திருமஞ்சனம் கண்டருளி விசேஷ வஸ்திரங்கள் அணிந்து வந்திருப்போரை ஆனந்த வெள்ளத்தில் திளைக்க வைக்கப் போகிறாள். அணிந்து கொள்ளப் போகும் திருமாங்கல்யம் இங்கு காணலாம். உபயதாரர் தாயார் கைங்கர்யத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். தன் பெயரை வெளியிட வேண்டாம் என்று ஏனோ மறுத்து விட்டார். “பத்மாசனித் தாயார் கைங்கர்ய”த்தில் ஆனந்தம் காணும் அவருக்கு இ”ராமனு”ம் எல்லா நலன்களும் அருள வேண்டும்.

DSC02970

 

Thirumangalyam samrppaNam to  our Thiruppullani Thayar on Adi veLLi the 22nd July 2011

 

திருமஞ்சனத்துக்குப் பிறகு சர்வ அலங்காரவல்லியாய் தன்னை விட்டுப் பிரியாத நாதனுடன் இங்கு மீண்டும் வருவாள். மாலையில் உல்லாசமாய் ஊஞ்சல் கண்டருள்வாள். இரவு அந்த அற்புதமான காட்சிகளைக் காணலாம்.

வியாழன், 21 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 4

வாழ்க்கையில் ஒருவன் அறவே ஒதுக்க வேண்டியது என்ன? ஏதோ ஒரு விஷயத்தில் சந்தேகம் வந்தால் யாரிடம் தெளிவு பெறலாம்? ஒரு லிட்டர் பால் கொடுக்கும் பசுவிடம் பால் கறக்க 6 நிமிஷம் என்றால் 15 லிட்டர் கறக்கும் பசுவிடம் பால் கறக்க எவ்வளவு நேரம் ஆகும்?  கேட்டுத் தெளிவு பெற
இன்று சிலருக்கு மீடியாஃபயரில் பிரச்சினைகள் ஏற்பட்டதாக அறிகின்றேன். எனவே அனுக்ரஹபாஷணங்கள் முழுவதும் ஸ்கைட்ரைவிலும் இன்று முதல் இருக்கும்.
https://skydrive.live.com/#!/?cid=4809c9eb88545e42&sc=documents&id=4809C9EB88545E42!922


To Listen online



ஆழ்வார்கள் அருளியதை இப்படியல்லவோ அனுபவிக்க வேண்டும்!

DSC02963

  ஏற்கனவே பல முறை இங்கு அடியேன் எழுதியதை மீண்டும் சொல்வதில் சந்தோஷம்தான். எங்களூர் மிகச் சிறிய க்ராமம்தான். அதிக வசதிகளோ, சென்னை போன்ற நகர்களிலே உள்ள அளவுக்கு சம்ப்ரதாய ஞானம் நிறைந்தவர்களோ அல்லது சத்விஷயங்களை இளைய தலைமுறைக்குச் சொல்லிக் கொடுப்பாரோ இல்லாத சிறு பட்டிக்காடுதான். ஆனாலும் எங்களுக்கு இருக்கின்ற பெரிய பாக்யம் மற்ற பெரிய நகரங்களிலே வாழ்வோருக்கு உண்டா என்றால் இல்லை என்றுதான் அடியேன் சொல்வேன்.

மற்ற ஊர்களில் யதிகள் மற்றும் பெரியவர்களை நாம் தேடிச் சென்று ஸேவிக்க வேண்டும். அதற்கு நமக்கு அவகாசம் வேண்டும். அப்படியே போனாலும் யாரைத் தேடிப் போகிறோமோ அவர்களுக்கு நாம் போகும் நேரம் சௌகர்யப் படவேண்டும். இப்படிப் பல பிரச்சினைகள்.

     ஆனால் இங்கோ, எல்லாப் பாபங்களுக்கும் ப்ராயச்சித்தமாக, சக்கரவர்த்தித் திருமகன் திருவடிபட்ட ஸ்ரீ ஸேதுவை அனைத்து பூர்வாச்சார்யர்களும் ஏற்றுக் கொண்டதாலே, யதிகள், மகான்கள், மஹாமஹோபாத்தியாயர்கள், பல கலை வல்லவர்கள் என யாராவது ஒருவர் தினமும் இங்கு வராமலிருப்பதில்லை. ஊரோ உள்ளங்கை அளவு. அதனால் யார் வந்தாலும் உடன் தெரிந்து விடும். எனவே அவர்களை ஸேவிப்பது அடியோங்களுக்கு மிக எளிதாகக் கிடைத்த பாக்யம். அதிலும் யதிகள் வரும்போது இன்னும் விசேஷமாக பல நிகழ்வுகள் அடியோங்களுக்குக் கிடைக்கும். 2008ல் ஸ்ரீமத் ஆண்டவன் இங்கு முதன்முறையாக சாதுர்மாஸ்ய ஸங்கல்பம் அனுஷ்டித்த போதும் சரி, இப்போது ஸ்ரீ அஹோபில மட அழகியசிங்கர்கள் இங்கு ஸங்கல்பத்தை அனுஷ்டித்து வருகின்ற இப்போதும் சரி, தினமும் நாங்கள் பார்த்து அனுபவித்து வியந்து மகிழ்கின்ற, ஆச்சார்யனிடம் பக்தி எப்படி இருக்க வேண்டும் என்று தங்கள் நடத்தையால் அடியோங்களுக்குப் புரிய வைக்கின்ற பலரைச் சந்திக்கின்ற நல்வாய்ப்புகளும் இங்கு அனேகம்.

ஆச்சார்யர்கள் எங்களைத் தேடிவந்து அனுக்ரஹிப்பதின் நோக்கம், இவர்களுக்கு வேறு மார்க்கமில்லை, நம்மை இவர்கள் அவர்களது அஞ்ஞானத்தாலே தேடிவந்து தாங்கள் சேர்த்து வைத்திருக்கும் பாவ மூட்டைகளைத் தொலைக்கப் போவதில்லை, எனவே நாமே சென்று அவர்களைக் கடைத்தேற்றுவோம் என்ற அளப்பரிய கருணையால் இருக்கலாம் என அடியேனுக்குத் தோன்றும்.

அப்படி இப்போது ஸ்ரீமத் அழகியசிங்கர் எழுந்தருளியிருக்கும்போது நேற்று இங்கு வந்தவர் திரு நம்பிராஜன் ஸ்வாமியும் அவரது தர்ம பத்தினி ஸ்ரீமதி ரமாவும். காலையில் மாலோலன் முன் மனமுருகிப் பாடிக் கொண்டிருந்தார். ஞானசூன்யமான அடியேனே நெக்குருகிப் போனேன். கண்டிப்பாய் மாலோலன் மிக மிக மகிழ்ந்திருப்பான். ஆஹா! விடலாமோ இவரை! மாமாவிடம் அனுமதி பெற்று அடியேனுக்கும் சில பாடல்களைப் பதிவு செய்து தர வேண்டும் என்று வேண்டினேன். ஏற்றுக் கொண்டாலும், மாலோலனுடனும், கோவிலில் பெருமாள், தாயார், இராமனுடனும் அவர்களுக்கு நேரம் சரியாக இருந்தது. இரவு ஊருக்குக் கிளம்பும் அவசரத்தில் இருந்தவர்களை வேண்டிக் கொள்ள அந்த அவசரத்திலும் ஒரு அரை மணி அவகாசம் ஒதுக்கி ரமா மாமி தேன்மாரியாய் இசை மழை பொழிந்தார். ஆழ்வார்கள் பாடலையே ப்ரதானமாகப் பாடினார். அதிலும் அடையாளப் பத்தை முழுமையாகப் பாடி உருக வைத்தார். [மாமி சொன்னது – இராமன் சந்நிதியில் அடையாளப் பத்து ஸேவிக்க ஆசை. ஆனால் அங்கு வேறு சிரமங்கள் இருந்ததால் ஏக்கமாகவே வந்தேன். அதனால் இங்கு அதை முழுமையாய்ப் பாடினேன். ] [உலகத்தார் எல்லாரும் கேட்கவேண்டும் என்பதற்காகவே இராமன் விட்டுக் கொடுத்தான் போல. ] கேட்கக் கேட்க ஸ்வாமி தேசிகன் ஸாதித்த “தாளம் வழங்கித் தமிழ் மறை இன்னிசை” என்பதன் அர்த்தம் புரிய ஆரம்பித்தது. ஸ்ரீராமபாரதியின் சில பாடல்களை எப்போதாவது இணையத்தில் கேட்டு சந்தோஷப் பட்டிருக்கிறேன். ஆனால் இப்படித் தொடர்ந்து கேட்கும் வாய்ப்பு இன்று கிட்டியது. அவர்கள் போட்டோதான் மேலே இருக்கிறது.

அதிலும் கூடுதல் சந்தோஷம், அவர்கள் இருவரும் இரு வழியில் அடியேன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாயிருப்பது.  நானும் ஆபீஸ் போகிறேன் என்று போய்க்கொண்டிருந்தேனே, அந்த பிஎஸ் என் எல்லில், மாமா ,  Dy. Genereal Manager. ஆண்டவன் ஆச்ரமத்தில் அடியேன் மீது பிரியமுள்ள ஒரு சஹோதரி ஸ்ரீமதி வேதா. ஸ்ரீ நம்பிராஜன் அவருக்கு அண்ணா. ஆக அடியேனுக்கும் சஹோதரர் ஆக ஒரு குடும்பமானோம்.

இந்த ரமா மாமி மாதிரி நிறையப் பேர் ஆழ்வார்கள் அருளிச் செயலை எல்லாரும் அனுபவிக்கும் வகையிலே பாடிப் பரப்ப முன் வரவேண்டும். ஸ்ரீவைணவப் பெண்மணிகள் நிறையப் பேர் கச்சேரிகள் செய்கிறார்கள். தியாகைய்யரையும், புரந்தரதாஸரையும், தீக்ஷிதரையும் பாடப் பலருண்டு. ஆழ்வார்களைப் பாடத்  தாங்கள் மட்டுமே உண்டு என்று அவர்கள் நினைக்க வேண்டும். தனித் தமிழிசைச் சங்கம் கண்டது போல் ப்ரபந்தம் மட்டும் கச்சேரி என்று நிகழ்ச்சிகள் துவங்க வேண்டும்.

உங்களுடன் ஸ்ரீமதி ரமா மாமி பாடியதைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்,

ஸ்ரீ நம்பி ராஜன் மாமா,

க்ஷமித்துக் கொள்ள வேண்டும். நாங்கள் ஒரு பெரிய பாடகர் என்பது இரவு லேட்டாகத் தான் தெரிந்தது. அடுத்த முறை வால்மீகி தெருவில் சந்திக்கும்போது அதை ஈடுகட்டிக் கொள்வேன்.

ரமா மாமியின் தேனிசை கேட்க

http://www.mediafire.com/?1m1yf5qyr5rsqgu

     

பௌத்தனும் ப்ரச்சன்ன பௌத்தனும்

இங்கு வருகை தரும் வெகு சிலரிலுள்ளும் பலர் யாஹூ வைணவ குழுமங்களில் உறுப்பினர்களாக இல்லை  எனவே அக்குழுமங்களில் கிடைக்கின்ற பல அற்புதமான விஷயங்கள் அவர்களைச் சென்று அடைவதில்லை. இன்று வந்திருக்கும் "பௌத்தனும் ப்ரச்சன்ன பௌத்தனும்" என்பது அப்படி ஒன்று. காஞ்சிபுரம் ஸ்ரீ சடகோப தாத்தாசாரியார் ஒப்பிலியப்பன் குழுமத்திற்கு எழுதியது. அதை இங்கே படித்து அனுபவிக்கலாம்.
Sent: Wednesday, July 20, 2011 1:07 AM
Subject: பௌத்தனும் ப்ரச்சன்னபௌத்தனும்
 
        பௌத்தனும் ப்ரச்சன்னபௌத்தனும்
ஸ்ரீஸ்வாமி தேசிகன் அத்வைதிகளுக்கு பச்யதோஹரன்- பார்த்திருக்கும் ஸமயத்தில் திருடுகிறவன் ச்ருதிமுகஸுகதன் - ம்ருதூபக்ரமக்ரம க்ரூர நிஷ்டன் ஆரம்பத்தில் ம்ருதுவாய் ச்ருதியை ஸ்வீகரிப்பதுபோல் காண்பித்து முடிவில்  க்ரூரமாய் நிற்பவன் என ஏனைய பிருதங்களை -விசேஷணங்களை  ப்ரயோகித்துள்ளார், இந்த க்ரமத்தில்  ப்ரயோகித்த  மற்றுமொரு விசேஷணமாகும் ப்ரச்சன்ன பௌத்தன்- பௌத்தன் என்பதை மறைப்பவன் ப்ரச்சன்ன பௌத்தவிஜயே பரிதோ யதத்வம்  என,.காரணத்தை நாம் சிறிது ஆராயலாம்,
 நையாயிக ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர் என பெருமையாக போற்றப்படுபவர் உதயனாசார்யர் ஆவார், ஸ்வாமி தேசிகனுக்கும் அவரிடம் மிகுந்த பஹுமானம் உண்டு, ஆனபடியாலேயே மடப்பள்ளி ஆசானான  ஸ்ரீப்ரணதார்த்திஹராசார்யரை குறிபப்பிடும் ஸமயத்தில் வேதாந்தோதயனர் என்கிறார். உதயனாசார்யர்  குஸுமாஞ்சலி எனும் க்ரந்தத்தில் விலக்ஷணமான  ஈச்வரன் உண்டு என ஸாதிக்கிறார், ஆயினும் பௌத்தர்கள் ஈச்வரன் உண்டு என்பதில்  பாதகமாக ப்ரமாணங்கள் உள்ளன என்கிறார்கள். ஈச்வரன் இருப்பின் மற்றவர்களை போல காணத்தகுந்தவனாவான், காணப்படுவதில்லை ஆதலால் அவன் இல்லை, காணாமல் போனாலும் அவன் உண்டு என கூறினால்  லோகத்தில்  முயல் கொம்பும் உண்டு என ஸ்வீகரிக்கவேணும்,காணப்படாத முயல் கொம்பு இல்லையேல்  காணப்படாத ஈச்வரனும் இல்லை என  வாதித்து  ஈச்வரோ நாஸ்தி ஈச்வரஃ ஜகத்கர்த்வாபாவவான் -ஈச்வரன் இல்லை என்றும்  அவன் ஜகத்தின் காரணமுமல்ல என  வாதித்தார்கள்.
லோகத்தில் கார்யத்தை செய்யும் கர்தாவானவன் ஏதாவது ஒரு பலனை உத்தேசித்தே கார்யத்தை செய்வான்,நையாயிகன் கூறும் ஈச்வரன் அவாப்தஸமஸ்தகாமன்- எல்லா ஆசைகளையும் அடைந்தவன், அவனுக்கு கார்யம் செய்வதால் ப்ரயோஜநம் ஒன்றுமில்லை, கர்த்ருத்வம் உள்ள இடத்தில் எல்லாம்,ப்ரயோஜனத்தில் ஆசை என்பதுமிருக்கும், ஆதலால் ப்ரயோஜனாபிஸந்தி  என்பது வ்யாபகமாகும்,- அதிக இடத்தில் உள்ளது, வ்யாபகமில்லாத இடத்தில்  வ்யாப்யமும் இராது, தீயானது புகையை விட  அதிக இடத்தில் உள்ளது, ஆதலால் அது வ்யாபகம், அது இல்லாத இடத்தில்  புகையிராது, இதையே லோகத்திலும் நெருப்பு இல்லாமல் புகையாது என்பர்கள்.ஆக வ்யாபகமான வஸ்து இராத இடத்தில் வ்யாப்யமான வஸ்துவும் இராது, ஈச்வரனிடத்தில்  வ்யாபகமான ப்ரயோஜனாபிஸந்தி இல்லாததால்  வ்யாப்யமான கர்த்ருத்வமும் இல்லை , ஆக ஈச்வரன் இல்லை, ஈச்வரனிடத்தில் கர்த்ருத்வம் இல்லை, அதடியாக ஈச்வரன் ஜகத் கர்தா என அனுமான ப்ரமாணம் கொண்டு ஈச்வரன் உள்ளதாக ஸாதி்க்கமுடியாது என  பௌத்தர்களின் வாதமாகும்,
இவர்களின் வாதம் சரியில்லை, அனுமான ப்ரமாணம் கொண்டு ஸாதிக்கவேணுமாகில் ஒரு ஆச்ரயம் பக்ஷம் வேணும், பிறகு ஸாத்யம் வேணும், ஹேது வேணும், ஒரு மலையின் ஸமீபத்தில் செல்பவன் அங்கு புகையை கண்டு  காணாததான தீயை அனுமிக்கிறான்,புகையானது  மலையில்  உள்ளதால் மலை தீயுடன் கூடியது, என, இங்கு மலையானது ஆச்ரயம், ஆச்ரயமில்லாமல் ஸாத்யத்தை ஸாதிக்கமுடியாது, ஆச்ரயமில்லையேல்  அங்கு கூறின ஹேது ஆச்ரயாஸித்தி என்கிற தோஷத்துடன் கூடியதாகும்,ஆகாச தாமரை நறுமணத்துடன் கூடியது  என ஸாதிக்கமுடியாது, ஆகாயதாமரை என்கிற ஆச்ரயமே ப்ரஸித்தமல்ல, அதுபோல் ஈச்வரன்  என்கிற  ஆச்ரயம் இல்லாமல் அவனிடத்தில்  கர்த்ருத்வம் இல்லை என ஸாதிக்கமுடியாது, ஆதலால் ஈச்வரனிடத்தில் கர்த்ருத்வம் இல்லை என்பதான ஈச்வரன் கர்த்ருத்வமில்லாதவன் என்கிற அனுமானம் ப்ரமாணமாகாது.
ஈச்வரன்  இல்லை  என்பதான அனுமானமும் சரியில்லை. லோகத்தில்   ப்ரஸித்தமாக உள்ள வஸ்துவையே இல்லை என்றும்  நிஷேதிக்கமுடியும், எந்த வஸ்து நிஷேதிக்கப்படுகிறதோ அது ப்ரதியோகி என்பதால்  ப்ரதியோகி இல்லையேல்  அதின் அபாவமும்- நிஷேதமும் வராது, ஆதலால் ஈச்வரன் இல்லை என்றால்  ஈச்வரன் ப்ரதியோகியாகும், அது  இல்லையேல் அதின் நிஷேதமும் வராதபடியால் ஈச்வரன்  இல்லை என ஸாதிக்கமுடியாது,இங்கு ஒரு கேள்வி எழும் ப்ரதியோகி இல்லையேல்  அதின் அபாவமும்- நிஷேதமும் வராது என்றால் சசச்ருங்கம் நாஸ்தி முயல்  கொம்பு இல்லை என்கிறவிடத்தில் ப்ரதியோகி முயல் கொம்பு ப்ரஸித்தமில்லை,ஆயினும் அதின் நிஷேதம் எப்படி கூறப்படுகிறது என, முயல்  கொம்பு இல்லை என்கிறவிடத்தில் முயலின் கொம்பு இல்லை என்று பொருள் கூறாமல்
 சசே ச்ருங்கம் நாஸ்தி முயலிடத்தில்  கொம்பு இல்லை என்றே பொருள் கூறவேணும்,

ஈச்வரன் ஸத்யமாக இல்லாவிடினும் பொய்யானஞானத்தில்  விஷயமாகிற ஈச்வரனை ஆச்ரயமாக்கி அவனிடத்தில் கர்த்ருத்வமில்லை என  ஸாதிக்கலாம், ஆதலால் முன்பு கூறின  ஆச்ரயமில்லை என்பதான தோஷமில்லை என்பதும் சரியில்லை,ப்ரமாணம் கொண்டு ஸித்திக்காத வஸ்து ஆச்ரயமாகாது.ஈச்வரன் பொய்யானஞானத்தில்  விஷயமானபடியால்
ப்ரமாணம் கொண்டு ஸித்திக்காத வஸ்துவாகும், அது ஆச்ரயமாகாது,
இங்கு பௌத்தர்கள் கூறுவது, நையாயிகனால் ப்ரமாணமாக கூறப்பட்ட வேதத்தில் குறிப்பிட்ட ஈச்வரனை  ஆச்ரயமாக்கி- பக்ஷமாக்கி  அவனிடத்தில்
கர்த்ருத்வமில்லை என்பதாக  ஸாதிக்கலாம் என. இங்கு உதயனாசார்யர் கூறும் ஸமாதானமாகும்,
 ஆகமாதேஃ ப்ரமாணத்வே பாதநாநிஷேதனம்.
 ஆபாஸத்வே து ஸைவ ஸ்யாத்  ஆச்ரயாஸித்திருத்ததா.
 வேதத்தை ப்ரமாணமாக கொண்டு  அதில்  கூறப்படுவதால்  ஈச்வரன் ஸித்தமானால்  அதில்  கூறப்பட்ட கர்த்ருத்வமும் ஈச்வரனுக்கு ஸித்திக்கும்,
கர்த்ருத்வமும்-கர்த்ருத்வம் இல்லை என்பது இல்லை  எனகூறுவதால் பௌத்தன் ப்ரயோகித்த அனுமானம்  பாதிதமாகும், ஆதலால்  அந்த
அனுமானம்  மூலம் ஈச்வரனிடத்தில் கர்த்ருத்வத்தை நிஷேதிக்கமுடியாது, வேதத்தை ப்ரமாணமாக கொள்ளாவிட்டால்  ஈச்வரன் ஸித்திக்கமாட்டார், ஆச்ரயமும் ஸித்திக்காது, அதடியாக முன்பு கூறின  ஆச்ரயாஸித்தி தோஷத்தை பரிஹரிக்கமுடியாது என,
இந்த க்ரமத்தில் ப்ரச்சந்ந பௌத்தர்களான அத்வைதிகள் வேதத்தை ப்ரமாணமாக கொண்டு  அதில்  கூறப்பட்ட ஈச்வரனைஸ்வீகரித்தால் அதே வேதத்தில்  கூறப்பட்ட ஸகுணத்வத்தையும்- கல்யாணகுணத்தோடு  கூடியதாகும் என்பதையும்  ப்ரமாணமாக  ஸ்வீகரிக்கவேணும். அதை நிஷேதித்து ப்ரஹ்ம நிர்குணம் என்று மட்டும் கூறமுடியாது, கல்யாணகுணத்தோடு  கூடியதாக கூறும் வேதம் ப்ரமாணமில்லை எனில்  ஈச்வரன் உண்டு என்று கூறும்  வேதமும் ப்ரமாணமாகாது,அதடியாக ஈச்வரனும் ஸித்திக்காது,ஸித்திக்காத ப்ரஹ்மத்தை  நிர்குணம் என்று ஸாதித்தால் ஆச்ரயாஸித்தி என்கிற தோஷம் வரும்,பௌத்தர்கள் வேதம் முழுவதும் ப்ரமாணமில்லை  என்கிறார்கள், அத்வைதிகள் ப்ரஹ்மம் ஸகுணம்
என்று கூறும் வேதம் ப்ரமாணமில்லை என்கிறார்கள், சிறிதுவேதபாகத்தை
 ப்ரமாணமாக ஸ்வீகரித்து தாங்கள் பௌத்தர்கள் என்பதை மறைத்துக்கொள்கிறார்கள் ஆதலால் ப்ரச்ச்ந்ந பௌத்தர்களாகிறார்கள்  எனலாம்,
ஆனபடியாலேயே ஸ்வாமிதேசிகன்
பரமதபங்கத்தில்
 வேதங்கள்  மௌலி விளங்க வ்யாசன் உறைத்த நன்னூல்
பாதங்களான  பதினாறில் ஈசன்படி மறைத்து
பேதங்கள் இல்லையென்றோர் ப்ரமப்பிச்சு இயம்புகின்ற
போதம் கழிந்தவனை புத்தர்மாட்டுடன் பூட்டுவமே
 என பரிஹஸித்தார் போலும்.


புதன், 20 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 3

வேதத்தில் எது உசத்தி? ப்ராமணன் அனுஷ்டிக்க வேண்டியது என்ன? ஜாதகர்மம் எப்போது செய்ய வேண்டும்? "அக்னிஹோத்ரம்" "ஔபாஸனம்" பரிபாஷையாயும் சொல்வதுண்டு. அவற்றுக்கு அர்த்தம் என்ன? இவற்றுக்கெல்லாம் ஸ்ரீமத் அழகியசிங்கர் ஸ்ரீ ரங்கநாத யதீந்த்ர மஹா தேசிகன் மிக விரிவாக அனுக்ரஹித்ததைக் கேட்டு மகிழ


  http://www.mediafire.com/?8v47e8k4ie4wss1

அழகியசிங்கர் அருளமுது

நிறைய புகார்கள். அழகியசிங்கர் அனுக்ரஹிப்பது என்ன என்றே புரியவில்லை. ஸ்பீக்கர்களை எவ்வளவு உச்சஸ்தாயியில் வைத்தாலும் ப்ரயோஜனமில்லை என்று தொலைபேசியிலும், ஈமெயிலிலும் என்று வருத்தங்கள். ஆகா! திருதிருவென முழிக்கலாச்சே என கையைப் பிசைகின்ற நேரத்தில் மும்பை வீரராகவன் ஸ்வாமி நல்வழி காட்டினார். அவரது வழிகாட்டல்கள் உதவியுடன் மீண்டும் இரண்டு அனுக்ரஹபாஷணங்களையும் மீடியாஃபையரில் ஏற்றியிருக்கிறேன். கேட்டு உங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பது அவசியம்.

18-7-2011 அன்று அருளிய முதல் அனுக்ரஹ பாஷணம்
http://www.mediafire.com/?9jv3h7ipb8clvb1


19-7-2011 அனுக்ரஹ பாஷணம்
http://www.mediafire.com/?bp1pfx28227f77p

 

செவ்வாய், 19 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது 2

நிறைய பேர்களுக்கு ஈஸ்னிப்ஸிலிருந்து டவுண்லோடு செய்வதில் சிரமங்கள் ஏற்படுவதாக அறிகின்றேன். எனவே இன்றைய அழகியசிங்கரின் அருளமுதை இந்த லிங்கிலிருந்து டவுண்லோடு செய்துகொள்ளலாம்.
http://www.mediafire.com/?2e2blve8aja4hlc
இன்று பெரிய அழகியசிங்கர் தனது வீல் சேரில் திருப்புல்லாணி ரத வீதிகளில் சென்று வந்தார். அடியேன் சின்ன அழகியசிங்கருடன் இருந்தபோது ஆண்டவன் ஆச்ரமத்தையும் சுற்றிப் பார்த்தாராம். முதன்முறையாக ஆச்ரமத்துக்குள் அவர் எழுந்தருளும்போது அடியேன் இருக்க முடியாமல் போனது அடியேனுக்கு மன வேதனை.
இங்கு மாலையில் எடுத்த சில படங்கள். படங்களுடன் இருக்கும் கேள்விகள் அழகியசிங்கர் கேட்டவை.
This evening Periya azhakiasingar was in a very happy mood that he prefered to go through the car streets in his wheel chair. He even went round our Ashramam when adiyen was with 46th Jeeyar. Here are some photos for you to enjoy.

DSC02949.jpg

DSC02950.jpg

DSC02951.jpg
DSC02952.jpg

DSC02954.jpg

உன் பேர் என்ன?
DSC02955.jpg

DSC02956.jpg


 இந்தக் குளத்திலே ஜலம் ஆழம் எவ்வளவு இருக்கும்? முழுக்க நிரம்புமா?
DSC02957.jpg

கடையில் வ்யாபாரம் நன்றாக நடக்கிறதா?

DSC02961.jpg

கேள்விகள் எல்லாம் அழகியசிங்கர் கேட்டவை.




திங்கள், 18 ஜூலை, 2011

அழகியசிங்கர் அருளமுது.

ஸ்ரீ அஹோபில மடம் சிஷ்யர்களுக்கு ஒரு இனிப்பான சேதி.  திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய ஸங்கல்ப காலத்தில் எழுந்தருளியிருக்கும் நாட்களில், எப்போதெல்லாம் சௌகர்யப் படுகிறதோ அப்போதெல்லாம்  அனுக்ரஹ பாஷணம் அருள்வதாக 46ம் பட்டம் ஸ்ரீமத் அழகியசிங்கர் அடியோங்களின் ப்ரார்த்தனையை ஏற்றுக் கொண்டு இன்று முதல் தொடங்கியுள்ளார். அனுக்ரஹ பாஷணங்களை உலகத்துடன் பகிர்ந்து கொள்ளும் பாக்யம் அடியேனுக்குக் கிட்டியுள்ளது. மைக் இல்லாததால் ஆடியோ சற்றுக் குறைவாக இருக்கிறது. தொடரப் போகும் அருளமுதுகளைத் தெளிவாகக் கேட்டு மகிழும் வகையில் ஏற்பாடுகளைச் செய்து கொள்வேன். வீடியோவில் தெளிவாக க் கேட்க முடியவில்லையென்றால் எம்பி 3 ஆடியோவாகவும் கேட்கலாம்.

Sri Ahobila Mutt sishyas world wide,
HH Srimad 46th Azhakiasingar has accepted our prayer to bless sishyas with his anugraha bhasahanams when ever time permits during Azhasingars camping at Thiruppullani for Chathurmasya sankalpams. And he has started from today. A video is below. If  the audio is low in the video, the other link having the audio alone may be tried. From tomorrow, adiyen will present with better quality of video and audio.






MP3 audio may be downloaded from here.


Get this widget | Track details | eSnips Social DNA


Natteri swamy's tele-upanyasam on 18-7-2011

Enjoy our Tharkika simham Swamy Vedanta Desikan in the words and voice of Sri Natteri swamy.

Get this widget | Track details | eSnips Social DNA

Those experiencing trouble with Esnips may download the file from this link
http://www.mediafire.com/?36iubg9leliku