சனி, 7 நவம்பர், 2009

நேதனாதிப சீரக யாதவா!

  திருவருட்சதகமாலை ---நேற்றைய  தொடர்ச்சி

பாந்த ளெனுங்கொடி வேந்தவை யார்ந்திடு
    பாண்டவ ரின்கொடியைப்
பூந்துகில் வாங்கிட வாங்குட னோங்கிடு
    பூந்துகி லீந்தவனூர்
சேந்தனொ டார்ந்துமை காந்தனு நான்மறை
    தேர்ந்த வயன்சுரர்கள்
வேந்தனு மீங்குறு மாந்தரு  மேய்ந்திடு
    வேங்கட மாமலையே!
                                [ சந்தவிருத்தம் 97 ]
நேத னாதிப சீரக யாதவா!
கீத மோகன வாடவ மாதவா!
வாத மாவட வானக மோதகீ
வாத யாகர சீபதி நாதனே!
[மாலைமாற்று, மஹாவித்வான் ஸ்ரீ அனந்தகிருஷ்ணையங்கார்
                திவ்யதேசப் பாமாலை
]

மரகத விகசித வொளிதவ என்ற சந்தம்

    அரதன மணிநிறை சினகர மதினொளி
யவிர்தரு மரகத சிலையென வுறைதரு – மாதி செக சோதி
    அரயனய னிமையவர் முனிவரர் திரளொடும்
அனுதின முறையிட அருள்புரி திருவுறை – யாகன் பட நாகன்
    வளையொடு மனலுமிழ் திகிரிகை யிடவல
மருவிட வருளன வரதமு நிலவிய – மாயன் அச காயன்
    தளையவிழ் துளவொடு பரிமள மலரணி
தருமது கரநிரை தழுவிய மலர்புரை—தாளன் கதிர் வாளன்
    ததியெது வெதுவென அகலிட முறைபவர்
சமரச நிலையொடு வழிபட வருள்பிர – தாபன் பத்ம நாபன்
    மதிமுக வனிதையர் மயிலென வனமென
மடநடை பயில்தர மருவினர் பணிமணி – வண்ணன் என தெண்ணன்
    கதியென முறையிடு கரிமுகம் விரைவொடு
கரவடு மொருமுத லெனவரு மறைபகர் – கத்தன் பரி சுத்தன்
    கணபண மணியுர கரும்வெரு விடவரு
கருடன திருபுய மலைமிசை யுறையதி – காரன் அவ தாரன்
    மணமரு வியதரு வுறைபவர் புகழொடு
மறையென வருதமிழ் மறைகளை யுதவிய – மாயன் றிரு நேயன்
    குணமணி நவமணி சுரமணி யழகிய
குலமணி செபமணி மரகத  மணியருள் – கண்டோன் புவி யுண்டோன்
    திருமக ணிலமகள் அலர்மக ளெனுமிவர்
திரண்முலை நெருடிய அழகிய புயமுறு – தேசன் பவ நாசன்
    உருவென அருவென ஒருவகை யிலதென
உயர்வற வுயர்நல முடையவ னெனமறை – யோதும் எந்தப் போதும்.
[ அனுமந்தன்பட்டி மதுரகவி ஸ்ரீநிவாஸ ஐயங்கார், திருமலைச்சிந்து]

    உலகில் மானிடப் பிறவியை யெடுத்து மூவிரண்டறிவுடைய சேதனருக்கு அன்னையாய் அத்தனாய் நின்று இன்றியமையா வின்பத்தையும் இதத்தையும் சிந்தித்து நடத்தி வருகின்றவன் திருவின் கேள்வனாகிய திருநாராயணன். அவனே அகாரவாச்யன். அவனே உயர்வறவுயர் நலம் உடையவன். அவன்தான் அயர்வரும மரர்கட்கதிபதி. அவ்வெம் பெருமானால் இடப்பட்டுள்ள கட்டளையைச் சற்றேனும் பொருட்படுத்தாமல் உல்லங்கனஞ் செய்வதின் காரணத்தினாலேயே ஜீவராசிகள் மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து வருந்துவதல்லாமல், கரை காண அரியதொரு துக்கத் தாலும் துடிக்க நேரிடுகின்றது.
    இவ்வாறு இடுக்கணுற்று அல்லலால் திரிகின்ற சேதன வர்க்கத்துக்கு அவசியம் தேடிக் கொள்ளவேண்டுவது அப்பரந்தாமனது திருவடிப் பேறேயாகும். திருமகளோ டொருகாலும் பிரியாநாதனும், எண் பெருக்கு அந்நலத்து ஒண்பொருள் ஈறிலவண் புகழ்த் திருநாரணனும் ஆகிய அத்திருமாலின் திண்கழலே சேதுவெனச் சேர்தலே சிற்றுயிர்க்குற்ற நற்றுணை. உள்ளம், உரை, செயல் என்ற இம்மூன்றும் ஒன்றிச் செய்யும் வழிபாடே நற்பயனளிக்கும். திருமாலே பரனென்றுணர்ந்து அவ்வெம் பெருமான் பாதாம்புயத்தைப் பற்றுவதே கற்றதனாலாய நற்பயன். அத்திருவடிப்பேறே பரமபோகமானதும் போக்கியமானதுமல்லாமல் வேறொருதுணையில்லை யென்பது அனைவரும் நன்றாக அறிந்தவையே யாகும்.

    அச்செங்கண்மால் திருவுள்ளக் களிப்படைந்தாலன்றி, நமக்கு அவன் கருணையுண்டாகாமை திண்ணம். அவ்வறத்தின் மூர்த்தியினது கருணையை அடைவதற்கு உரிய சன்மார்க்கத்தை நமது மூதாதையர்களும் முற்றத் துறந்த முனிச்சிரேட்டர்களும், சாத்திரங்களினாலும் புராண இதிகாசங்களினாலும் ஐயந்திரிபறக் காட்டியுள்ளனர். ஆயினும், அச்சான்றோர்களினாலே காட்டப்பெற்றுள்ள சிரவணம், மனனம், தியானம் என்கின்ற  மூவகையதான உபாயங்களில், சிரவணமும் மனனமும் சிறந்த உத்தம அதிகாரியாக விருப்பவர்களுக்கே பெரிதும் பயன்படுவதாகும். அவ்வாறன்றிப் பொதுவாக அனைவருக்கும் அவை பயனளிக்க வியலாமையைச் செவ்வனே அறிந்த நமது முன்னோர்கள் தாமே வெகு நாட்களாக ஆய்ந்து அறிந்து, பள்ளத்தில் விழுந்து பரிதபிக்கும் நம்மைக் கரையேற்றக் கருதிக் காருணியம் ததும்பிய கள்ளமில்லாவுள்ளத்தினராய் ஸ்தோத்திரம்  என்ற ஒரு நல்விளக்கை ஏற்றி வைத்தனர். இங்ஙனம் ஏற்றி வைத்த ஞானச்சுடர் விளக்கை வைத்தும் போற்றுவதற்கும் அதிகாரி பேதம் கிடையாது. வைராக்யாதி அனுஷ்டானங்களுக்குந் தேவையில்லை. இத்தோத்திரங்களைப் படிக்கத் தொடங்குகையிலேயே விலக்ஷணமான ஒரு பக்தி விசேஷம் மனத்திலே தோன்றி பரமானந்தத்தை அளிக்கின்றது. இவ்வானந்தமே எம்பெருமானது மனத்தை அதிசுலபமாகக் கரைத்துக் களிப்பினைத் தர வல்லதாகும். இதன் பெருமையை வேதங்களும் இதிஹாஸங்களும் புராணங்களும் உத்கோஷித்து உரைக்கின்றன.

    ஆயின், பல நூல்களை ஆராய்ந்தறியின் ஒவ்வொரு யுகங்களில் ஒவ்வொரு உபாயமே தலை சிறந்து விளங்கி எங்கும் பிரகாசமாயுள்ள கடவுளை யடையச் சாதகமாக விருந்ததெனப் புலனாகின்றது. கடையுகமான இக்கலி யுகத்திலோ ஸ்துதிப்பதே சிறந்ததென்று நூல்களிலே கூறப்படுதல் இங்கே அறிதற்பாலது. அவ்வாறு அறிதற்கண்ணும், நவீனமாய்த் தான்தோன்றியாகச் சிற்சில சொற்களை வரிசைப்படத் தொடுத்து, இது சொற்சுவை பொருட்சுவை கொண்டு மிளிர்வதென வியந்து துதிபுரிவதைக் காட்டினும், அறிவானும், ஆசாரத்தானும், தெளிவானும் மங்காப் பெருமையுற்று விளங்கிய ஆழ்வார்கள் ஆசாரியர்கள் பரமகிருபாதிசயத்தாலே திருவாய் மலர்ந்தருளிப் போந்த அருளிச் செயல் ஸ்தோத்திராதிகளைக் கொண்டு போற்றுவதே அரவிந்த லோசனனது அருட்கும் மனத்திற்கும் பெரியதொரு மிக்க உகப்பை அளிப்பதாகும். ஆகையால், ஞான பக்தி வைராக்யாதிகளினாலே 'குன்றின் மேலிட்ட விளக்கு' எனப்பொலிந்த நம் தொல்லாசிரியர்கள் திருவாக்கிலிருந்து வெளிப்போந்த ஸ்தோத்ர ப்ரவாகத்திலேயே நாம் தலைமண்டிக் கிடப்போமாயின் அரியதொரு பேற்றையடைவது மல்லாமல் இம்மை இன்பத்தினும் எழில் பெற்று வாழலாம்.

    உலகம் வாழவேண்டுமென்ற உத்தம நோக்கத்துடன் சீரார் தூப்புற்றிருவேங்கடநாதன், பிராகிருதம், ஸம்ஸ்கிருதம், தமிழ் முதலிய பாஷைகளில் பாலர் முதல் கற்றுக் கடைத்தேறும் வண்ணம் அநேக கிரந்தங்கள் அருளிச் செய்துள்ளார். இம்மறைமுடித் தேசிகனார் வடசொற்கெல்லை தேர்ந்தவராகலின் வடமொழி வல்லார் சந்தமிகு தமிழ்த்திறனை அறிந்துய்தற் பொருட்டு, இத்துறைகள் தாங்கி நிற்கும் தோத்திரங்களை வடமொழியில் யாத்துள்ளார். அவற்றைத் தமிழ் மக்கள் உணர்ந்து இன்புறுவதற்காக சில தோத்திர நூல்களைச் செய்ய தமிழ் மாலைகளாக முன்னரே இத்திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத்தார் வெளியிட்டுள்ளனர். அவற்றுள் "திருவருள்மாலை" (வெளியீடு 13. 14-11-1942) என்பது ஒன்று. அம் மாலைப் பிரதிகள் செலவாகி விட்டபடியாலும் அன்பர்கள் அம்மாலையை நோக்க அவாவுறுதலானும் அங்குள்ள "முகவுரை" "முன்னுரை" இரண்டும் இங்கு தரப் பெறுகின்றன.    

வெள்ளி, 6 நவம்பர், 2009

வெயில்பொழி குழைக் காதனே!

திருவருட்சதகமாலை
உலகுதனின் மழலையஞ் சொற்குழவி கைதலத்
          துன்பது கொடுத்த தனிலே
         ஒருசிறிது வளருமக் குழவிபா லிக்கவு
        முகந்துடன் கவரு மவர்போல்
அலகிலா மானிடர்க் கூழ்மறையின் வாழ்வருளி
        யவர்கள்சில பொரு ளுதவவே
       அப்பொருள் களைத்தினங் கைக்கொள்வ தவரிடத்
       தன்பினா லல்லவோ காண்

சலசலென வருமருவி முழவதிர முதுமந்தி
       தாளத்தர் போலக் கரம்
      தட்டக் கருங்குயிர் சுரமான தித்திநா
      தங்கூட்டி வண்டு பாட
விலகிவில் லுமிழ்மேனி மயிலாட மலரம்பொன்
       வேங்கைசொரி யுரகா சலா
       மென்கமல பாதமலர் மேன்மங்கை நாதனே
       வெயில்பொழி குழைக் காதனே                                             .1.

கண்மலரை யிலகுதன் விழிமலரி லிட்டவிரு
       காலினொரு விற் படையுடைக்
      கரவேட னுக்குகந் தன்றுதன் பதமுதவு
       கறைமிடற் றவனு நாண
மண்மலரை யுன்சரண மலரிடுகு லாலற்கு
        மாமுத்தி வாழ் வருளினாய்
        வந்தடிய ரெப்பொருள் கொடுத்தாடு முன்போல
        மகிழ்வுறுந் தேவ ரெவர்காண்
தண்மலர் நறுந்தொடையல் சொருகமன காடவிச்
          சவரமங் கையர் செங்கையால்
          தகைகெழு கழங்காக வாடல்புரி நீலமணி
         சஞ்ச ரிக்குல மென்னவே
விண்மலர் நறுங்கற்ப தருமேல் விழிந்திழியும்
         வேங் கடாசல நாயகா
        மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
        வெயில்பொழி குழைக் காதனே.                                              .2.

நீதந்த பிரபஞ்ச வனமதனு னெறியலா
          நெறிசென் றுவளர் பாவமா
          நிகழ்தாவ வனல்சுடச் சித்தாகி ராதசர
         நிரைவந் துதைத் துருவியே
நோதந் தலைக்கவும் வேரியங் குழன் மகளிர்
         நோக்கெனும் படு குழிவீழ
        நொந்தங்ங னேகிடக் கின்றதென் மனயானை
        நோய்துடைத் தேறிக் கொளாய்
மாதந்த மும்மதக் கறையடித் தழைசெவியின்
        மத்தமா விட ரகலவே
       மலைமுழைப் பேழ்வா யிடங்கரடு சுடர்நேமி
       வலனேந்து மென் சாமியே
வேதந்த தரளம்வான் மீனைப் பழித்திலகும்
          வேங்கடா சல நாயகா
         மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
         வெயில்பொழி குழைக் காதனே.                                            .3.


வாரியி னிடத்தோல மிட்டுவரு கடவுணதி
         வகைபோல வுன்பால் வரும்
         மனிதர்திரள் கோவிந்த மிட்டெழும் பேரோசை
        மழையொலிய விப்பதன்றிப்
பாரிலறி வற்றசனர் செவியினு நுழைந்துளம்
       பயில்பாவ வனலு மவியப்
      பண்ணுமப் பெயருடைய வுன்மகிமை யெம்மைப்
      படைத்தவனு மோதறி வனோ
கூரிய மருப்புடைக் கவயமடி யாகிய
      குடங்கொண்டு சொரி நறியபாற்
     கொள்ளையும் பிள்ளைமதி யின்கொம் புழப்பணைக்
     கொம்பிறால் விண்டு தூவும்
வேரியு மலைக்கங்கை சேர்பொன்னி யிற்பெருகு
       வேங்கடா சல நாயகா
      மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
      வெயில்பொழி குழைக் காதனே.                                                   .4.

நீமேவு திருமலையி லஞ்சாயன் மயிலாடு
         நிலைகுருடர் காண வறுகால்
        நிரையிம் மெனப்பாடு மிசைசெவிடர் வினவவந்
        நீர்மைகண் டூமை புகழ
மாமேவு கைப்பொருள் பறித்தோடு நெடியவான்
           மந்திபின் பங்கோ டவே
          மண்ணுலகி னீலீலை பண்ணுவாய் சாமியுன்
          மாயையா ரறிய வல்லர்
தீமேவு கண்ணுதற் கடவுளுங் குறுநகைத்
         திசைமுக மறைக் கிழவனுந்
        திகழும்வள ரொளிவச்சிர தரனுமமு தாசனத்
        தேவர் குலமுந் தொழுதுதூம்
மீமேவு கற்பகக் கொழுவிய தடம்பணையின்
         விரிமலர் சுமந்து மெலியும்
       மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
        வெயில்பொழி குழைக் காதனே.                                                      .5.

அனவரத மபசார மேசெயு மிளங்குழவி
         யதனிடத் தாதரவு செய்
         தம்மகவின் மழலைசொல் வினவிமகிழ் தாயர்போ
        லாயிரங் குற்றங் களைத்
தினமுமொழி யாதுபுரி கொடியே னிடத்தினுந்
           திருவருட் பார்வை வைத்துச்
          செப்புசொல் பொருள்வழுவு தழுவுமென் புன்கவி
         செவிக்கொண்டு மகிழ்வெய் துவாய்
தனதுதெளி புனலினைக் கண்டோரு மப்புனற்
            றவழ்கால் படப்பெற் றபேர்
          தாமுமா நந்தகர முத்திபெற வைத்துவிடு
         தண்டுறைக் கோனே ரியாய்
வினதைசுத னெதிர்நின்று தொழவவற் கெந்நாளும்
       விழியினருள் பொழிமே கமே
       மென்கமல பாதவலர் மேன்மங்கை நாதனே
        வெயில்பொழி குழைக் காதனே.                                                        .6.

நாடுதுதி செயுமுன் மலைக்கேக வேணுமென
       நாடியோ ரடி வைக்குமுன்
      நாடுவிட் டோடுமவர் பாதக மனைத்துமுன்
     னன்மலைப் படியே றினோர்
பீடுடைய தெய்வத விமானமே றுவருன்
      பெருங்கோயி றனில் புக்கபேர்
      பிரமனுல கிற்புகுவ ருன்னடி தொழப்பெற்ற
      பேர்முத்தி பெறுவர் கண்டாய்
தாடகா சீவாப காரகன கீர்த்திவித்
       தாரகன காத்திரி தீரா
       சகலசக தாதார தீனசன மந்தார
      தர்மரகு குல விகாரா
ஆடக கிரீடகத் தூரிதிலக லலாட
       வசுரகுல களவி பாடா
      அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
      வனந்தரவி சங்கா சனே.                                                                   .7.

முகரித்த ரங்கத்தை வீசிவரு முனதுபொன்
          முகரியு மகன்ற நெடுவான்
          முகடுதொடு குவடுடைய வடமலையு மக்கிரியின்
          முச்சகமு மற்பு தமுறும்
நிகரிலுன் பொற்கோயி லழகையுங் காணிலோ
           நித்ய சூரியர் விரசையும்
          நிரதிசய பரம்பத மணிமண்ட பத்தையு
          நினைத்துமீ ளப்போ வரோ
மகரகுண் டலகர்ன மகனீய சுரசமய
        வசனகன நீல வர்னா
        வனமாலி காபரண வரவிபீ ஷணசரண
        மஞ்சுமஞ் சீர சரணா
அகிலலோ காதீத பஞ்சபாண் டவதூத
        விகணித மகாவி நோத
       அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
        வனந்தரவி சங்கா சனே.                                                             .8.

தெண்டிரையை யெறிகங்கை முதலான புண்யந்தி
           தீரத்தி னாலு மறையும்
          தினமோது நாவுமதி சயவேள்வி நூறும்விதி
          செய்தகை யிணை யாகுநாள்
முண்டகமு முளவிப்ர னாகிவாழ் தலினுனது
        முதியகிரி யிற்கிரு மியாய்
         முளைத்தெழும் புல்லா யிருத்தலே நன்றெளிதின்
          முத்திபெற லாமுண்மை காண்
புண்டரிக லோசனா பவநாச னாவிதுர
        போசனா கருடா சனா
        புருகூத வந்தனா கனசிந்து பந்தனா
         புண்யதே வகி நந்தனா
அண்டக வளர்க்கிரா சதாருசம் பரநாச
        வாநந்த நிலய வாசா
        அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
         வனந்தரவி சங்கா சனே.                                                        .9.

கமலமகண் மார்பினி லடங்க விதி யுந்தியங்
       கஞ்சப் பொருட் டடங்கக்
       கடல்சுற்று மண்ணுலகும் விண்ணுலகு முன்னிணைக்
       காலினு ளடங்க வண்டம்
விமலமா முதரத் தடங்கப் படைத்தநீ
      வீறுதே வகி வயிற்றும்
      மெய்யடியர் நெஞ்சினு மடங்கிநின் றனையுன்
     விநோதத்தை யோத வசமோ
சமரசித தூஷணா ம்ருதுபாஷ ணாருசிர
         தரகௌத் துவபூ ஷணா
        சத்யசா ரித்ரவசு தேவவர புத்ரவதி
        தர்மயது குலப வித்ரா
அமிதகரு ணாகரா லலிதகுண சாகரா
         வகிலதா னவ பீகரா
        அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
        வனந்தரவி சங்கா சனே.                                                       bsp;   .10.

காகா சுரற்குமருள் செய்தகண் மலருமொரு
        கல்லினுக் குதவி புரிதாட்
       கடிமலரு மலகைமுலை பொழிகரள மங்கீ
       கரித்தவாய் மலகு நெடுவான்
மேகாட விச்சிலா வருடந் தவிர்க்கமுரண்
       வெற்பைச் சுமந்த கரமாம்
      மென்மலரு முடையநீ பொல்லாத வெனையாளல்
     விகிதமே யினியாட் கொள்வாய்
நாகாரிவாகனா கனசகன மோகனா
     நானா கவன தாகனா
     நந்தகுல பரிபால சங்கீத லோலவபி
     நவகனக மயது கூலா
ஆகாச சந்நிபா காரவது லிதவீர
     வகிலலோ கோப காரா
    அமரகுல பயநாச ஸ்ரீவேங்க டேசா
     வனந்தரவி சங்கா சனே.                                                     .11.

---- [ பொற்களந்தைப்பதி முத்தமிழ்க்கவி வீரராகவ முதலியார்
                                                        .......திருவேங்கடத்தான் பதிகம்]

........................................................... முன்னுரை தொடரும்............................

                               

வியாழன், 5 நவம்பர், 2009

திருவருட்சதகமாலை

திருவருட்சதகமாலை

ஸ்ரீ;

முகவுரை

எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.
             --- [ பொய்கையார், முதல் திருவந்தாதி 25 ]
துணிந்த சிந்தை துழாயலங்கல் அங்கம்
அணிந்தவன்பேர் உள்ளத்துப் பல்கால் – பணிந்ததுவும்
வேய்பிறங்கு சாரல் விறல்வேங் கடவனையே
வாய்திறங்கள் சொல்லும் வகை.
                 --[ பூதத்தார், இரண்டாந் திருவந்தாதி 33]
தாழ்சடையும் நீள்முடியும் ஒள்மழுவும் சக்கரமும்
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால் – சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமே லெந்தைக்கு
இரண்டுருவு மொன்றா இசைந்து.
                   ---[ பேயாழ்வார், மூன்றாந் திருவந்தாதி 63]
கடைந்து பாற்கடல் கிடந்து காலநேமி யைக்கடிந்து
உடைந்த வாலிதன் தனக்கு உதவவந்து இராமனாய்
மிடைந்த ஏழ்மரங்களும் அடங்க வெய்து வேங்கடம்
அடைந்த மாலபாதமே அடைந்து நாளும் உய்ம்மினோ
                  ---[ திருமழிசையாழ்வார், திருச்சந்த விருத்தம் 81]
குன்றமேந்திக் குளிர்மழைகாத்தவன்
அன்றுஞாலம் அளந்தபிரான் பரன்
சென்றுசேர் திருவேங்கடமாமலை
ஒன்றுமேதொழ நம்வினைஓயுமே.
                     ---[ நம்மாழ்வார், திருவாய்மொழி 3-3-8]
கம்பமதயானைக் கழுத்தகத்தின்மேலிருந்து
இன்பமரும்செல்வமும் இவ்வரசும்யான்வேண்டேன்
எம்பெருமான் எழில்வேங்கடமலைமேல்
தம்பகமாய்நிற்கும் தவமுடையேனாவேனே.
                  --[ குலசேகராழ்வார், பெருமாள் திருமொழி 4-5 ]
மச்சொடுமாளிகையேறி மாதர்கள்தம்மிடம்புக்கு
கச்சொடுபட்டைக்கிழித்துக் காம்புதுகிலவைகீறி
நிச்சலும்தீமைகள்செய்வாய்! நீள்திருவேங்கடத்து எந்தாய்!
பச்சைமனகத்தோடு  பாதிரிப்பூச்சூட்டவாராய்.
                     --[ பெரியாழ்வார், திருமொழி 2-7-3]
தையொரு திங்களும் தரைவிளக்கித்
          தண்மண் டலமிட்டு  மாசிமுன்னாள்
ஐயநுண் மணற்கொண்டு தெருவணிந்து
           அழகினுக் கலங்கரித்து அனங்கதேவா!
உய்யவு மாங்கொலோ வென்றுசொல்லி
             உன்னையும் உம்பியை யுந்தொழுதேன்
வெய்யதோர் தழலுமிழ் சக்கரக்கை
             வேங்கட வற்குஎன்னை விதிக்கிற்றியே.
                    [ஆண்டாள் தையொருதிங்கட்பாமாலை 1-1]
அமல னாதிபிரான் அடியார்க்கு என்னை யாட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரை யார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதிவானவன் நீள்மதிளரங்கத் தம்மான்திருக்
கமல பாதம்வந்து என் கண்ணி னுள்ளன வொக்கின்றதே.
                        [ திருப்பாணாழ்வார்  அமலனாதிபிரான் 1 ]
தெரியேன்பாலகனாய்ப் பலதீமைகள்செய்துவிட்டேன்
பெரியேனாயினபின் பிறர்க்கேயுழைத்துஏழையானேன்
கரிசேர்பூம்பொழில்சூழ் கனமாமலை வேங்கடவா!
அரியே! வந்தடைந்தேன் அடியேனை ஆட்கொண்டருளே.
                         --- [ திருமங்கையாழ்வார், பெரிய திருமொழி 1-9-7]
நோவினையு நோயினையு நோய்செய் வினையினையும்
வீவினையுந் தீர்த்தருளும் வேங்கடமே – மூவினைசெய்
மூவடிவாய்ப் பச்சென்றான் முன்னா ளகலிகைக்குச்
சேவடிவாய்ப் பச்சென்றான் சேர்பு.
             --- [திவ்யகவிபிள்ளைப் பெருமாளையங்கார்,
                                  திருவேங்கடமாலை 14]

                                   முகவுரை  தொடரும்

புதன், 4 நவம்பர், 2009

பாண்டிய நாடு பழம்பெரும் நாடு.

தலைப்பு தப்போன்னு நினைக்காமல் கொஞ்சம் மேலே படித்து விட்டு முடிவெடுக்க வேண்டும்.

அடியேன் பிறந்து வளர்ந்து வேறு எங்கும் செல்ல மனமில்லாமல் வாழ்ந்து வரும் எங்கள் பாண்டிய நாடு சிறப்புகளைக் கொஞ்சம் பார்ப்போம்.

தென்றமிழ் நாட்டினைக் குறித்துக் கல்வியிற் பெரிய கம்ப நாடர்

அத்திருத்தகு நாட்டினை யண்டர்நா
  டொத்திருக்கு மென்றாலுரை யொக்குமோ
  எத்திறத்தினு மேழுலகும் புகழ்
  முத்துமுத்த மிழுந்தந் துமுற்றமோ
               --- (கிட்கிந்தா, ஆறுசெல்படலம் 53)

எனப் புகழ்கிறார்.”பூழியர்கோன் தென்னாடுமுத்துடைத்து”

பாண்டிநாட்டுச் சிறப்பு
நல்லம்பர் நல்ல குடியுடைச் சித்தன்வாழ்
வில்லந் தொறுமூன் றெரியுடைத்து – நல்லரவப்
பாட்டு டைத்துச் சோமன் வழிவந்த பாண்டியநின்
நாட்டுடைத்து நல்ல தமிழ்
(பத்துப்பாட்டு, திருமுருகாற்றுப்படை, நச்சினார்க்கினியருரை)

சந்தனப் பொதியச் செந்தமிழ் முனியுஞ்
சவுந்தர பாண்டிய னெனுந்தமிழ் நாடனும்
சங்கப் புலவருந் தழைத்தினி திருந்த(து)
மங்கலப் பாண்டி வளநா டென்ப.
    (நன்னூல், சங்கர நமச்சிவாயப் புலவர் விருத்தி)
என்ற அறிஞர் பாடலால் நன்கு அறியலாம்.

வழங்குவது உள் வீழ்ந்தக் கண்ணும் பழங்குடி
  பண்பிற் றலைப்பிரிதல் இன்று.
        -- (பொருட்பால், ஒழிபியல், குடிமை 5)
என்னும் திருக்குறளுரையில் ஆசிரியர் பரிமேலழகியார், “ பழங்குடி” என்பதற்குத் “தொன்று தொட்டு வருகின்ற குடியின்கட் பிறந்தார்” என்று உரை கூறித் “தொன்று தொட்டு வருதல் – சேர சோழ பாண்டிய ரென்றாற் போலப் படைப்புக் காலந் தொடங்கி மேம்பட்டு வருதல்” என விளக்கியுள்ளார். இதனாலும், வான்மீகி பகவான் ஸ்ரீராமாயணத்து,சுக்ரீவன் வானர சேனையை நாடவிட்ட தருணத்துப் பாண்டியர் செல்வச் சிறப்பையும் அவரது கபாடபுரத்தையும், எடுத்தோதுதலாலும் பாண்டியரின் பழமை நன்குணரலாம்.

  சரணாகதி தர்மம் விளைந்த பெருநிலமாகவும், கருணாகரப் பெருமாள் ஸர்வ ஜீவர்க்கும் அபயப் பிரதானம் அருளிய திருப்பதியாகவும் தருப்ப சயனனாய்த் திருக்கோயில் கொண்டெழுந் தருளியிருக்கும் திருப்புல்லாணியும், “கோவையின் றமிழ் பாடுவார் தொழுந்தேவதேவன் திருக்கோட்டியூர்” என்று சிறப்பித்தருளப் பெற்றதும், ஸ்ரீவைஷ்ணவ பரமாசாரியராகிய ஸ்ரீபெரும்பூதூர் வள்ளலின் ஆசாரியர்களுள் ஒருவரான திருக்கோட்டியூர் நம்பிக்கும், “அல்வழக் கொன்றுமில்லா அணிகோட்டியர்கோன் அபிமான துங்கன்” என்று கொண்டாடப் பெற்ற செல்வ நம்பிக்கும், அவதாரத் தலமான திருக்கோட்டியூரும், பொன்னும், முத்தும், இட்டுச் செய்த ஆபரணம் போலே சூடிக் கொடுத்த நாச்சியாரும், சீரணிந்த பாண்டியன்றன் நெஞ்சு தன்னில் துயக்கறமால் பரத்துவத்தைத் திறமாய்ச் செப்பி வாரணமேல் மதுரை வலம் வரவே வானின் மால் கருட வாகனனாய்த் தோன்றத் திருப்பல்லாண்டு பாடி வாழ்த்திய பெரியாழ்வாரும், அவதரித்த தலமாயும், வட பெருங்கோயிலுடையான் நித்ய வாஸம் செய்யும் ஸ்ரீவில்லிபுத்தூரும், மாலுகந்தவாசிரியரான நம்மாழ்வார் அவதரிக்குமேற்றம் பெற்ற திருக்குருகூர்ப்புரியும், திருவாத வூரடிகளால் “பத்த ரெல்லாம் பார்மேற் சிவபுரம் போற் கொண்டாடு முத்தரகோச மங்கையூர்'” என்று போற்றிய திருவுத்தரகோச மங்கைத் தலத்தையும், அன்பர்க்கே யவதரிக்கு மாய னிற்க அருமறைகள் தமிழ் செய்தான் தாளே கொண்டு துன்பற்ற மதுர கவியாரைப் பெறும் பேறும் பெற்ற திருக்கோளூர் முதலான ஈரொன்பது திருமால் திருப்பதிகளையும் தன்னுட் கொண்டதும், அபிநவ கவிநாதனாகிய கம்ப நாட்டடிகள் வந்து துதிக்கின்ற நாடாயும் விளங்கி வருவது தென்பாண்டி நன்னாடு.

     அமிசசந்தேசம் என்னும் அரிய அழகிய தம் நூலில் திருவேங்கடநாதன் எனும் கவிவாதி சிங்கத் தேவன் பின்வருமாறு கூறுகிறார்.

தவத்தினால் விளங்கும் திருவாலவாயுடையரான பரமசிவனிடத் தினின்றும் தெய்வப் படைகளை யடைந்த பாண்டிய தேசத் தரசர்களுடைய பிரபாவத்தினால் தாங்கள் சிறையிலிருந்ததை நினைத்து பயமடைந்த மேகங்கள் காலத்தில் வருஷிப்பதால் நிறைந்த பயிர்களையுடையதும், குபேர பட்டணத்தைக் காட்டிலும் அதிகமான செல்வச் சிறப்புடையதும், யாகம், தானம், தவம் முதலிய புண்ணியங்களுக்கிருப்பிடமான பட்டணங்களினாலும், கிராமங்களாலும் அலங்கரிக்கப் பெற்றது பாண்டிய தேசம். பவழக்காடுகளுடன் கூடிய அந்நாட்டு எல்லையிலுள்ள ஆழி காட்டுத் தீயினாற் சூழ்ந்த காடு போலவும், ஸந்த்யா ராகத்தோடு கூடிய ஆகாசம் போலவும், சிந்தூரத்துடன் கூடிய யானை போலவும், பீதாம்பரத்தினால் ஸேவிக்கப்பட்ட நாராயணன் போலவும், மின்னலோடு கூடிய மேகம் போலவும், ஒரு சரீரத்துடன் கூடிய ஆண் பெண் உருவமான மிதுநம் போலவும் தோன்றும். பாண்டிய தேசத்துப் பெண்கள் முத்துக்களின் சூர்ணங்களினால் விளங்குகிற திலகத்தையுடையவர்களாகக் காணப் பெறுவர்.”

படித்தாயிற்றா? படிக்கும்போதே ஒரு நியாயமான சந்தேகம் வந்திருக்க வேண்டுமே? இந்த நடை இவனுக்கு வராததாயிற்றே, இம் மாதிரி கோர்வையாக நல்ல தமிழில் எழுத இவனுக்குத் தெரியாதே, யாராவது எழுதியதை நகல் எடுப்பதுதானே இவன் வழக்கம், இது யார் எழுதியதாக இருக்கும் என்றெல்லாம் சிந்தனை ஓடியிருக்குமே! இவன் என்றாவது சற்று ஸ்வாரஸ்யமாக எழுதிவிட மாட்டானா என்று விடாமல் வலைக்குள் வரும் சிலரில் ஓரிருவராவது “ஆஹா! இது பந்தல்குடியாரின் நடையல்லவா!” என சரியாக யூகித்திருப்பீர்களே! ஆம்! அவர் ஒரு நூலுக்கு எழுதிய முன்னுரையின் ஒரு பகுதிதான் இதுவரை படித்தது. அது என்ன நூல்? அதற்கு முன்….

    இந்தப் பாண்டிய நாட்டின் சிறப்பைப் பலபடி எடுத்துரைத்த ப.ரெ. திருமலை ஐயங்கார் ஸ்வாமி விரிவுக்கஞ்சியோ என்னவோ சொல்ல மறந்தவைகளில் ஐப்பசி மூலத்துக்கு ஏற்றம் தந்தவர் அவதரித்ததால் இந்தப் பாண்டிய நாடு அடைந்த சிறப்பு, உன்னதத் துறவி விவேகாநந்தரை உலகெலாம் அறிய வைத்த மேன்மை, தமிழ்ச் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த பெருமை என்பவற்றோடு, எந்த நூலுக்கு முன்னுரை எழுதினாரோ, அந்த நூலின் ஆசிரியர், எவர் இந்த நூல் என்றில்லாமல் வைணவ சம்ப்ரதாய வடமொழி நூல்களிலே அனேகமாக ஒன்று விடாமல் தமிழ்ப் படுத்தி, திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கம் சிறந்தோங்கிடப் பணிபல செய்தாரோ அவர் பிறந்த மண்ணும் இந்தப் பாண்டிய நாட்டின் பகுதியாம் சேது நாட்டு சக்கரம் வாழும் நல்லூர் (இன்று அது சக்கரவாளநல்லூர்) என்பதையும் சொல்ல மறந்தாரே !

சரி! என்ன நூல்! யார் எழுதியது!

மதியருண் மகிழ்ம ணங்கொண் மங்கலச் சங்க நாதம்
   பதியெனும் பரமர் தூப்புற் புனிதனா மொருவ னூதும்
   கதியினீ ருதவு நீரின் கதகநற் சதக முன்னூல்
   ததியர்செந் தமிழி சைக்கண் கேசவன் தெரியத் தந்தான்.”

“வேய்ங்குழ லோசை யென்கோ விடைமணிக் குரலி தென்கோ
    தீங்கவி யிரத மென்கோ திப்பியர்க் கமுத மென்கோ
    வேங்கட விமல னூட்டும் யாழ்நரம் பின்ப மென்கோ
    ஓங்களி யமல னீந்த வொலியருட் சதக நூலே.

  ஆமாம்! ஸ்ரீ ஆர். கேசவ ஐயங்கார் தமிழ்ப் படுத்திய தயா சதகமாம் “ திருவருட்சதகமாலை”(27-1-1952ல் வெளியிடப் பட்டது) இங்கே இனி தொடரப் போவதற்கான கட்டியம்தான் இதுவரை படித்ததெல்லாம். ஏற்கனவே இங்கு ஒரு சில பாடல்களைப் பதிவு செய்திருந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். அடியேனுடைய கவனக் குறைவால் எங்கோ வைத்துவிட்டுத் தேடிக் கொண்டிருந்த அந்த நூல் நேற்று கையில் கிடைத்தது. மீண்டும் ஆரம்பிக்கும் போது படிக்குந் தோறும் பரவசமூட்டும் பந்தல்குடியாரின் முகவுரையுடனே நாளை முதல் துவங்குவேன். திருவருட்சதகமாலை உண்மையிலேயே “பெருக்கென வரப்பெறு கருப்பிர தவெள்ளம்”    

'பகவத் விஷயம்'

1937ல் திருவல்லிக்கேணி ஆ. ரங்கநாத முதலியார் என்பவர் இந்தக் காலத்து மஞ்சரி, ரீடர்ஸ் டைஜஸ்ட் போல, வைணவ தத்துவங்களையெல்லாம் ஒவ்வொன்றையும் வெவ்வேறு அறிஞர் பெருமக்களை வைத்து எழுதவைத்து, தொகுத்து  'ஸ்ரீவைஷ்ணவம்' என்ற பெயரில் நூலாக வெளியிட்டிருக்கிறார். அதிலிருந்து ஸ்ரீ. கேசவ அய்யங்கார் எழுதியுள்ள 'விசிஷ்டாத்வைதமும் மதாந்தரங்களும்' என்னும் ஆராய்ச்சிக் கட்டுரை 'ஸ்ரீ ஹயக்ரீவ ஸேவக' இதழில் வரும் மாதம் முதல் வெளியாகிறது. அதே நூலில் படித்து ரஸித்த இன்னொரு கட்டுரை 'பகவத் விஷயம்' இங்கே மின் நூலாக

bhagavathvishayam

திங்கள், 2 நவம்பர், 2009

மங்களம் –திருப்பாதுகமாலை சுபமங்களம்

परभ्रह्मापदत्नाणपदब्रह्म्पयॊनिधॆ:।
  कॆशवॊक्तिकलॊथुङ्गराकाचन्द्रमहॊदय:॥

TP Mangalam

ஞாயிறு, 1 நவம்பர், 2009

திருப்பாதுகமாலை

 

திருப்பாதுகமாலை

இறைமையே தொண்ட வாவித் தொண்டினல் லிறைமை சால
  நிறையுமா ணடிநி லைப்பா நிகழுமா யிரந லப்பண்
ணிறைவனா ரிதய மன்னு மிரதமேந் தினிய சந்தஞ்
செறியவோர் தொண்டி தென்றே கேசவன் தமிழ்செய் தானே

சோதித்திரு வேதத்தலை யோதித்தரு நாதன்
   பாதத்திரு வீதென்றடி பாடித்தரு மாதி
   போதக்கவி கொள்ளுந்திரு வுள்ளந்தெரி வள்ளல்
   கீதத்திரு பாதாவனி நாதாமுத மீதாம்.

சொற்கற் பகமுற் கவிபோற் றுமறை 
விற்கற் பகதற் பரனங் கிரிமாண்
பொற்கற் பகவற் புதபா துகையெம்
நற்கற் பகமிக் கவிநல் கியதே.

வடவாரிய மறைமங்கல நடைநாடிறை நிறைதென்
னிடவாரிய மறைதேறிய திடநாவிறை யறைதென்
வடவாரிய னடிமாமண வணமாயிரு மறைமா
முடியாரிய னடியாயிர மொழியாயிர மிதுவாம்.

நகர்காட்டு துறையெந்தை மறைகாட்டு மதியம்
பகர்காட்டு மலர்மாது பதிகாட்டு மணிபா
துகைகாட்டு கவியேறு துறைகாட்டு நலமா
தகைகாட்டு மெழி லூட்டு தமிழ்காட்டு மிது நூல்.

உம்பர் நிரம்பிய கோட்டி யரங்க
மிம்ப ரிதண்ண னிரம்பிய நூலென்
றன்ப ருளக்களி கூர்ந்தரு ளாடு
மன்புக ழொட்டொளி  வட்டிது வென்றே.

கண்டிது நாதன ரங்கனு வக்க
மண்டில ரேகையு மத்தியு மொத்தே
பண்டரு சித்திர வண்புகழ் மாறன்
தெண்டிது கேசவ னொண்டமிழ் நூற்றான்

விண்ணப்பம்

இறைச்சீர் பிறங்கெண் ணிறைச்சீ ரரங்கா!
  மறைச்சீர் வழங்குன் மனச்சீரி னிந்நூல்
  முறைச்சீரி னின்னேர் முகச்சீர் விரிப்பா
  னறச்சீரி லிட்டுன் னடிச்சீர் பிடித்தேன்.

எனக்காக வென்றொன் றிரக்காத நின்கண்
  மனக்காத லொன்றுன் மதிக்கா லருள்வாய்
  உனக்காக வென்றா லுனக்கென்று தானுன்
  கனக்காத லூன்றுன் கழற்காவல் கொள்வன்.

முற்பெருங் கவிஞர் சுத்த முத்தமிழ்த் துறைக டாங்கி
  நற்பெருங் கதிகண் மேவு நடைநலம் பொலியக் கண்டு
  கற்பவர் திறத்துக் காத்துச் சொற்றிறம் பாது கற்ற
  நற்பினன் னடையி லாய வாயிர முனது நன்றே.

கோனடத் தென்றி ளங்கோ வேண்டவன் றண்டர் கோனைக்
  கானடத் தென்று நாதன் காவலா யுலகுக் கெல்லாந்
  தானடத் தரசின் வண்ணந் தானிதென் றருண்மி குத்தே
  கானிடைத் தந்த வள்ளற் பாது! நின் தலைமை காண்பாம்.

குலமென நலந்து றந்து குடிகெடுங் குரிசி லீட்டத்
  தலைமுளை களைந்து முன்னந் தலையுன துலகி லோங்க
  நிலையென வவன டிக்கீழ் நிறுத்தியே நிலைத்த நின்னை
அலைதுயி லகில நாத னடிமுடி சூட்டி னானே.

முனிவர னிவந்தி ளங்கோ முடியிறைக் குவந்து சூட்ட
வனைமுறை மணங்க மழ்ந்த நலனிறை கலசந் தன்னைத்
தனிமுடி யுனக்குச் சூட்டுந் தகுதன துளத்து நாதத்
தினிதுரை துலங்கு தாளன் திருவலஞ் செய்து வந்தான்.

என்று தெட் டிறைமை சான்ற மெய்யனிவ் வைய முய்ய
நன்றுதொட் டன்பி னற்பா லகிலநல் லரசு பூக்க
ஒன்றுதொட் டுலகி னாட்சிக் குறுதியென் றருளி யாண்ட
வன்றுதொட் டென்று மாட்சி யடிநிலாய்! நின்ற துன்கண்.

தாதையோர் முன்னு மாகத் தானுமுன் பின்னு மாக
நாதனே யாதி நீதி நானிலத் தரசு நாறப்
பாதுகா! முடிநி னக்குப் பருணிதர் பரவச் சூட்டி
ஓதுமா மனுகு லத்தோர்க் குனதிறை பூரித் தானே.

சிறுமனஞ் சிதற வில்லித் தீமனங் குமைக்க மூட்டிப்
பொறைமிசைப் பிரசை வாட்டி யுண்ணவே குழுமியெண்ணிக்
கறைமிசைத் தரைப றிக்குங் கரவரிங் கிறைவ ராகும் 
மறலறச் சகத லத்துப் பாதுகாய்! நடைகொள் வாயே.

ஆதியா யருளா யாளு மாழியான் பாத மல்லா
லாதுமோர் பற்றிலாத பாவனைப் புனித வண்ணப்
பாதுகாய்! வாழ்தி யாளா யாள்திநீ யரசாய்ப் பாரிற்
பேதியா நீதி நின்ற நின்னிறை மாட்சி வாழ்க

ஆண்டவன் தொண்டி தென்றே யருமையிற் புரியா யாவும்
  மாண்டவர் முடிமீ திட்ட மகுடமா மாளு மாந்தர்க்
  காண்டவ னென்று மாந்தர் கடைப்படப் புரியும் பூசை
  தீண்டவர் பொருளுக் கெல்லாந் தீங்கினை விளைக்கு மாதோ.

அளவிலிவ் வுலக மாக்கி யளவுதான் கடந்து தன்ன
லுளநலத் தோங்கி நின்ற வுத்தமன் பதந யத்தே
அளிநலத் துயிர ளித்தோன் வயின்வரை யறுத்த நீதித்
தெளிவினிற் றரும வண்ணம் பாதுகாய்! தெரிக்கின் றாயே

உலகினிற் பகைவர் பல்லா ருயிர்களுக் குள்ளா ரேனுந்
தலைவரப் பகைவர் கட்குத் தகைமுனி யழுக்கா றென்பார்
மலியவர் வலியை மாந்தர் மனமல மறுக்கும் பாவால்!
நலியநின் பொலிவு பூக்கும் நன்றிநீ யொன்று செய்வாய்.

பொல்லரை நல்ல ராக்கும் புனிதநின் னிறைம னத்துச்
செல்லொரு செங்கோற் செவ்வி செறியநற் றுறவி லோச்சும்
நல்லற வள்ள னீதா னல்லர சாட்சி கொள்ளச்
சொல்லொரு வேலை தானுங் காத்ததுன் சொல்லின் வேலை.

நன்றுடன் செடுமி டத்துக் கலியுமே கண்டு கொண்மி
னென்றுட னுலகி லாட்சி கிதநலந் திகழச் செய்யும்
நன்றது புரிய நின்று நல்லறம் நிறுவு நின்கண்
நின்றது கால வட்டம் நிகழுமா றுணர்வர் நல்லார்.

காலமே லோடு மோடுங் காலத்தோ டோடக் கற்குங்
கோலமே நாடி யோடிக் கோமிசைக் கோக்களாவீர்
காலமோ டோடாக் காலக் காலமே யோட மாள்வீர்
வாலர்பா லீத றைந்தே வாடுவா ரரசு கொள்ள.

காலமோ டாது போகுங் காலமே தென்று முண்டோ
காலமோ டோடா ராரோ காட்டவோர் காலு மாட்டார்
வாலினோர் நீட்ட மேதாங் காட்டியே வைய மாட்டுங்
காலமீ தென்று தானோ டாதுபோ னின்ற தின்றே.

அரசுதான் கால மாக்கு மரசினைக் கால மாக்கா
  வரசினைக் கால மாக்கி லரசொழி கால மஃதே
  பரசுமிவ் வரசி னுண்மை பாதுகாய்! காணு மெய்யர்
  துரிசரைத் துதித்து வையத் துயரர சுயர வெண்ணார்.

பூதியர் கோலி லாடிப் புலைவளக் கானி லோடி
  யூதிய மலைக ளேறி யுயர்பதக் கிளைக டாவிப் 
  பேதுறு சலம னத்தர் பெறுமிறைப் பொறையி னாட்சி
  மாதிர மந்தி கையின் மாலையாய் முடியு மந்தோ!

ஊதியஞ் சுருங்க நீதி யுலகினிற் சுருங்கு மென்று
  பூதியர் பறையு மேதம் புவியினிற் சிதைத்து நீதா
  னேதுவொன் றின்றி நாதன் சேவடிக் கடிமை செய்தே
  பாதகக் கடுக ளைந்து பாதுகாய்! பார்ப ரித்தாய்

பதமதிற் பிறந்த வாற்றாற் பாதுகப் பேர்ப டைத்துக்
கதியதென் றுணர்ந்த தன்கண் தனையறத் துறந்து தொண்டின்
வதியெனச் சதிந டந்தே வழுவிலா வாழ்வு மன்னும்
பதியறன் வலியு றுத்தும் பாதுகா! பொலிக நின்சீர்.

நாயகன் பாது காயுன் னாயிர நாம மோதுந்
தூயவர் விரித்த முன்னூற் றுணிபொருள் தொடுத்து மெய்ய
வாயவர் வழங்கி வையம் வாழவே வாழு நன்மைக்
காயவர் கனவு நானுங் கண்டுளங் களித்திட்டேனே.

இருமையும் வழுவா திங்கே யிருந்துவாழ் நாள்க ளெல்லாந் 
தருமமுந் துறவு மன்புந் தழையுமா றிறைவ னற்றாள்
விரிநெறிப் பலவாய் மல்கு மிருநிலத் தொழுகி யொன்றும்
பெருநலத் தினிது வாழ்வாம் பெருமனச் செல்வ ராயே.