வெள்ளி, 2 செப்டம்பர், 2016

अभीतिस्तवः

அபீதி ஸ்தவம்


சுலோகம் 17

विषादबहुलादहं  विषयवर्गतो  दुर्जयात्
           
बिभेमि वृजिनोत्तरः त्वदनुभूतिविच्छेतः
मया नियतनाथवानयामिति त्वमर्थापयन्
           
दयाधन ! जगत्पते ! दयितरङ्ग ! संरक्ष माम्   

விஷாத³³ஹுளாத்³ அஹம் விஷயவர்க³தோ து³ர்ஜயாத்
          பி³பேமி வ்ருஜிநோத்தர: த்வத³நுபூதிவிச்சே²த: |
மயா நியத நாத²வாந் அயம் இதி த்வம் அர்த்தா²பயந்
           ³யாதந !    ஜக³த்பதே ! த³யிதரங்க³ ! ஸம்ரக்ஷ மாம் ||  

வ்ருஜினோத்தர -- அதிக பாபமுடைய (நான்), விஷாத பஹுளாந் -- துக்கமே அதிகமாயுள்ளதும், துர்ஜயாத் -- ஜயிக்க முடியாததுமான, விஷயவர்கத -- (சிற்றின்ப) விஷயங்களின் கூட்டத்தின் வலிமையினால், த்வதனுபூதி  விச்சேத -- உம்மை அநுபவிப்பதற்குத் தடை ஏற்பட்டு விடுமோ என்று, பிபேமி -- பயப்படுகிறேன்தயாதந -- தயைச் செல்வம் நிறைந்தவரே, ஜகத்பதே -- லோகத்திற்கு ஸ்வாமியே, தயிதரங்க -- ரங்கத்தில் ப்ரீதியை உடையவரே, மயா -- என்னால், அயம் -- இவன், நியத நாதவாந் -- கைவிடாத நாதனை உடையவன், இதி -- என்று, த்வம் -- நீர், அர்த்தாபயந் -- சொல்லிக்கொண்டு, மாம் -- என்னை, ஸம்ரக்ஷ: -- நன்றாக ரக்ஷித்தருள வேணும்.

ஸ்ரீ அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

செய்வினையோ மிகப்பெரிதாம் தடையின்றி தொடர்கின்றேன்!
சகமிதிலே உறும்சுகங்கள் துயர்தனையே தருவனவாய்
செயிப்பதற்கும் அரியவையாய் திறமுளதை நானறிவேன்!
திருவரங்கைக் காதலுற்று தனியிடமாய்க் கொண்டவனே!
தயையென்னும் நிதியுடையாய் தரணிதனின் தனித்தலைவா!
நின்னுடைய அநுபவத்தில் தடையுறவே அஞ்சுகிறேன்!
நயந்துன்னை அடியேனே நாதனென வரித்ததனை
நற்பொருளாய்க் கொண்டென்னை நீதானே காத்தருளே! 17.


அன்பில் ஸ்ரீ .வி. கோபாலாசாரியார்

        இந்த சரீரத்தின் முடிவில் மோக்ஷம் கிடைப்பது நிச்சயமாயிருந்தாலும், இங்கிருந்த நாள் உன் திருவடிகளில் பக்தி விச்சேதமின்றி இருக்க வேணும். பக்தியாவது இடைவிடாமல் ப்ரீதியுடன் உன் திவ்யமங்கள விக்ரஹத்தை தியானிப்பது. 'அப்படி அனுபவிக்கும் பேரின்பம் கிடைக்குமானால் வைகுண்டவாஸத்திலும் ஆசையில்லை' என்றல்லவோ எங்கள் துணிபு. ஆனால் அந்த பக்திக்கு விஷயங்கள் என்னும் ரூபரஸாதிகள் விரோதிகள். எங்கள் தியானத்திற்கு விஷயமான (ஆலம்பநமான) உம் திவ்யமங்கள விக்ரஹத்துக்கு ஆபத்து வந்தால் அதுவும் தியானத்திற்கு விரோதி. ஆகையால் விஷயங்களை அடியோடு விலக்க வேண்டும். இந்த விஷயமான உம் விக்ரஹத்தோடு நித்யயோகம் வேணும். உம்மை தியானிப்பதில் விச்சேதம் வந்தால் அதுவே எங்களுக்கு பயம். "உண்ணிலாவிய ஐவரால் குமைதீற்றி என்னை உன் பாதபங்கயம் நண்ணிலாவகையே". அநாதிகாலமெல்லாம் விஷய ப்ரவணமாய் பகவதனுபவ விரோதியாகையாலும், "என்னுடைய சரீரே வர்த்தமானமாய் அத ஏவ அவர்ஜநீயமுமாய் ம்ருத்யு ஸத்ருஶயமுமாய் பயங்கரமுமாயிருந்த பஞ்சேந்திரியங்களாலும் விஷயங்களிலே என்னை ஆகர்ஷிப்பித்து" என்று பிள்ளான் பணித்தார்.

         விஷாத பஹுளாத் -- துக்கமயமான; பகவான் ஆனந்தமயமாயிருப்பதற்கு எதிராக இவை துக்கப்ர சுரம்.

        
துர்ஜயாத் -- பெருமாளையும் வசப்படுத்தலாம் போலிருக்கிறது. விஷயங்களை ஜயித்து இந்திரியங்களை வசப்படுத்துவது அரிதாயிருக்கிறது.

         வ்ருஜினோத்தர -- நான் உத்தரன் (உயர்ந்தவன்) ஆவது வ்ருஜினத்தாலேயே; 'க்ருபண ஸார்வபௌமன்', 'அபராத சக்ரவர்த்தி' என்றல்லவோ நான் பெருமையடைவது!

         ஜகத்பதே! -- நீர் ஸ்வாமியாய், எல்லாம் உம்முடையதன்றோ? உம் ஸொத்தைக் கள்ளர் கொண்டுபோக விடலாமோ?

வியாழன், 1 செப்டம்பர், 2016

अभीतिस्तव:

அபீதி ஸ்தவம்


சுலோக‌ம் 16
अनुक्षणसमुत्थिते   दुरितवारिधौ  दुस्तरे
          यदि  क्वचन  निष्कृतिर्भवति  साऽपि  दोषाविला |
तदित्थमगतौ  मयि  प्रतिविधानमाधीयतां
          स्वबुद्धिपरिकल्पितं  सपदि  रङ्गधुर्य  त्वया ||   


அநுக்ஷணஸமுத்தி²தே து³ரிதவாரிதௌது³ஸ்தரே
         யதி³ க்வசந நிஷ்க்ருதிர்பவதி ஸா
பி தோ³ஷாவிலா |
ததி³த்த²மக³தௌ மயி ப்ரதிவிதாநமாதீயதாம்
         ஸ்வபு³த்³திபரிகல்பிதம் ஸபதி³ ரங்க³துர்ய த்வயா ||

ரங்கதுர்ய -- ரங்கநாத!, அநுக்ஷண ஸமுத்திதே -- ப்ரதிக்ஷணமும் பெருகுகிறதும், துஸ்தரே -- தாண்டுவதற்கு அரிதானதுமான, துரிதவாரிதௌ -- பாபமாகிற கடல் விஷயத்தில், க்வசந -- (பிராயச்சித்த காண்டங்களில்) எங்காவது, நிஷ்க்ருதி -- பிராயச்சித்த விதி, யதி -- இருந்ததானால், ஸா அபி -- அந்தப் பிராயச்சித்தமும், தோஷாவிலா -- (ப்ரதிக்ஷணமும் பயங்கள் உற்பத்தியாகின்றன என்று முன் சொன்ன காரணத்தாலேயே) அசுத்தமாகவே, பவதி -- ஆகிறது, தத் -- ஆகையால் , இத்தம் -- இப்படி, அகதௌ -- வேறு கதியேயில்லாத, மயி -- என் விஷயத்தில், த்வயா -- உம்மால், ஸ்வபுத்தி பரிகல்பிதம் -- உம் புத்தியாலேயே ஆலோசிக்கப்பட்ட, ப்ரதிவிதாநம் -- ப்ராயச்சித்தம், ஆதீயதாம் -- செய்யப்பட வேண்டும்.

அன்பில் ஸ்ரீனிவாசன் ஸ்வாமி

கணந்தோறும் பெருகிவரும் கடத்தரிய வினைக்கடலைக்
கடப்பதற்கே நெறிவகுத்த கழுவாயைச் செய்தாலும்
அணைபோன்ற குற்றங்கள் அதுதனையும் குலைத்திடுமே!
ஆதலினால் கதியேதும் அற்றவனாய் நிற்கின்றேன்!
கணக்கிலாவென் தீவினைகள் கழிவதற்கே அரங்கா! நின்
கருத்தாலே தக்கதொரு கழிவாயைத் தோற்றுவித்து
எனையதிலே மூட்டுவித்து எவ்விதமாம் தடையுமற
எனையதனைச் செய்வித்து ஏற்றமுறச் செய்வாயே! 16.

அன்பில் .வி. கோபாலாசாரியார்

         ப்ரபத்தியை 'ஒருக்கால் அநுஷ்டித்தவனுக்கு நான் அபயப்ரதானம் செய்கிறேன்' என்றும், 'நீ ஒரு கைமுதலற்றவன்' என்றும் சொல்லுகிறாய். ஆனால் நீ ஸகல பாபங்களுக்கும் பிராயச்சித்தமான பிரபதனமென்னும் ந்யாஸவித்யையை அனுஷ்டித்தா லல்லவோ நான் உன்னை ரக்ஷிக்கலாம் என்றால், இந்த சுலோகத்தால் தான் அவனன்றி ஒன்றும் செய்ய முடியாத அகதி என்கிறார்.

         பிரபத்தி என்னும் பிராயச்சித்தத்தை அனுஷ்டிப்பதில் எவ்வளவோ தோஷங்கள் வரக்கூடும். உலகத்தில் ஒரு பாபத்துக்காக ஒரு பிராயச்சித்தத்தை ஆரம்பித்தால், இடையில் நேரும் தோஷங்களுக்காக வேறு பிராயச்சித்தங்கள்! இப்படி பிராயச்சித்தங்களின் தொடர்ச்சி  எல்லையில்லாமல் போய்க்கொண்டேயிருக்கும். ஸமுத்ரம் ஓய்ந்தவன்றுதான் எங்கள் பாபங்களும் ஓய்வது. ஆகையால் நான் செய்யப்போகும் ப்ரபத்தி என்னும் உபாயத்தையும் உம்முடைய சுபமான ஸங்கல்பத்தால் நிர்தோஷமாயும், பூரணமாகவும் செய்து, நீர் காரயிதாவாய் (செய்விப்பவராய்) என்முகமாய் நடத்தி வைக்க வேணும். நாங்கள் செய்வது கிலமாயும் அபூர்ணமாயுமிருக்கும். (खिल) கிலமில்லாமல் பூரணமாகச் செய்வதில் நீர்தான் நிபுணர். निदानं तत्रापि स्वयमखिलनिर्माणनिपुण:  (நிதானம் தத்ராபி ஸ்வயமகில நிர்மாண நிபுண:) ப்ரபத்தி முதலிய உபாயங்களில் எங்களுக்கு அந்வயம் உம்மால்தான் ஏற்படவேண்டும். ஆகையால் அவ்வுபாயத்தைக் குறைவற நீரே செய்து வைக்கவேண்டும்.

         ரங்கதுர்ய -- ரங்கத்தின் ரக்ஷணபாரத்தை வஹிப்பவர் நீரல்லவா? அந்த ரக்ஷணப் பொறுப்பை நீர் ஏற்றுக்கொண்டு எங்கள் பயத்தைத் தீர்க்க வேண்டும் என்று தானே இப்போது செய்யும் பிரபதனம்.

புதன், 31 ஆகஸ்ட், 2016

अभीतिस्तवम्

அபீதி ஸ்தவம்

சுலோக‌ம் 15
सकृत्प्रपदनस्पृशामभयदाननित्यव्रति
            न च द्विरभिभाषसे त्वमिति विश्रुत: स्वोक्तित: |
यथोक्तकरणं विदुस्तव तु यातुधानादय:
           
 कथं वितथमस्तु तत् कृपणसार्वभौमे मयि ||  (15)
ஸக்ரு̆த்ப்ரபதநஸ்ப்ரு̆ஶாமபயதாநநித்யவ்ரதி
        
த்விரபிபாஷஸே த்வமிதி விஶ்ருத: ஸ்வோக்தித: |
யதோக்தகரணம் விதுஸ்தவ து யாதுதாநாத:
        
 கதம் விததமஸ்து தத் க்ரு̆பணஸார்வபௌமே மயி ||  (15)
तथावितथमस्तु என்று பாட‌பேத‌ம்

ஸ‌க்ருத் ப்ர‌ப‌தா ஸ்ப்ருஶாம் -- ஒரு த‌ர‌ம் ப்ர‌ப‌த்தி என்னும் உபாய‌த்தைத் தொட்ட‌வ‌ர்க்கும், த்வ‌ம் -- நீர், அப‌ய‌தாந‌ நித்ய‌ வ்ர‌தீ -- அப‌ய‌ம‌ளிப்ப‌தை நித்ய‌ வ்ர‌த‌மாக‌ உடைய‌வ‌ர் (என்று நீர் உத்கோஷித்திருக்கிறீர்), த்வி -- இர‌ண்டாம் த‌ட‌வை, க‌ ச‌ அபிபாஷஸே -- பேச‌மாட்டீர், இதி -- என்று, ஸ்வோக்தித‌ -- உம்முடைய‌ உறுதியான‌ பேச்சாலேயே, விச்ருத‌ -- (நீர்) ப்ர‌ஸித்த‌ர், யாது தாநாத‌ய‌ -- ராக்ஷ‌ஸ‌ர் முத‌லிய‌வ‌ரும், த‌வ‌ -- உம்முடைய‌, ய‌தோக்த‌ க‌ர‌ண‌ம் -- சொன்ன‌வ‌ண்ண‌ம் செய்வ‌தை, விது -- அனுப‌வித்துள‌ர், தத் -- அந்த‌ குண‌ம், க்ருப‌ண‌ ஸார்வ‌பௌமே -- கார்ப்ப‌ண்ய‌ பூர்த்தியுள்ள‌ அகிஞ்ச‌ந‌ரில் முத‌ன்மையான‌, ம‌யி -- என் விஷ‌ய‌த்தில், க‌த‌ம் -- எப்ப‌டி, விதத‌ம் அஸ்து -- பொய்யாக‌ ஆக‌லாம். ?

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி
ஒருமுறையே சரணமென உன்னிடமே உற்றவர்க்கு
அபயந்தனை அளிக்கின்ற அருஞ்செயலை விரதமென
நிரந்தரமாய்க் கொண்டுளதாய் நீதானே வெளியிட்டாய்!
நீயேதான் இருமுறைகள் நானுரையேன் என்றுரைத்துப்
பெரும்புகழைப் பெற்றுள்ளாய்! பகர்வதையே செய்பவனாய்
புவியிலுனை அரக்கர்களும் முதலானோர் அறிந்துள்ளார்!
ஒருபுகலும் அற்றவரின் ஒப்பற்ற தலைவனென
உறுமெனக்கு உன்விரதம் வீணாக ஆகிடுமோ? 15.
அன்பில் ஏ. வி. கோபாலாசாரியார்
                  பெருமாளைத்த‌விர‌ த‌ன‌க்கு வேறு க‌தியில்லை என்று கூறிவிட்டு, இதில் த‌ன்னிலும் க்ருப‌ண‌னில்லை என்கிறார். த‌ன‌க்கு வேறு க‌தியில்லாதது போல‌வே பெருமாளுடைய‌ த‌யைக்கும் த‌ன்னைத்த‌விர‌ வேறு க‌தியில்லை. அதாவ‌து த‌யையைக் காட்ட‌ தானே உத்த‌மமான‌ பாத்ர‌ம். முலைக் க‌டுப்பாலே க‌ன்றுக்குப் பாலைக் கொடுத்த‌ல்ல‌து ப‌சு நிற்க‌வொண்ணாதாற் போலே ர‌க்ஷ்ய‌னை ர‌க்ஷித்த‌ல்ல‌து த‌ரிக்க‌முடியாது பெருமாளுடைய‌ த‌யையினால்.உம் அப‌ய‌ப்பிர‌தான‌ வ்ர‌த‌ம் நித்ய‌ம். ஒரு த‌ட‌வை உபாய‌ ஸ்ப‌ர்ச‌ம் ஒருவ‌னுக்கு ஏற்ப‌ட்டால் அவ‌னைக் காப்பாற்றும் வ‌ரையில் நீர் க‌ட‌னாளியாய் ஸ‌ஜ்வ‌ரராய் இருக்கிறீர். ம‌னோர‌தத்தைப் பூர்த்தி செய்த‌ பிற‌கே விஜ்வ‌ரராய் ப்ர‌மோதத்தை (ஆன‌ந்தத்தை) அடைகிறீர்.
         ஸேதுக்க‌ரையில் வ‌ந்து सकृदेव प्रपन्नाय  (ஸ‌க்ருதேவ‌ ப்ர‌ப‌ந்நாய‌) "ஒருக்காலே ச‌ர‌ணாக‌ அடைகின்றார்க்கும்" என்று த‌ன் விர‌தத்தை உத்கோஷித்தார். அதையே இங்கு ஸ‌க்ருத் -- ப்ர‌ப‌த‌ந‌ -- ஸ்ப்ருஶாம் என்று அநுவ‌திக்கிறார்.   सर्वभूतेभ्य: अभयं ददामि, एतत् मम व्रतम् (ஸ‌ர்வ‌பூதேப்ய‌, அப‌ய‌ம் ததாமி, ஏதத் மம வ்ர‌த‌ம்) என்ற‌தையும் இங்கு அநுஸ‌ரிக்கிறார். ததாமி என்ப‌தில் "ல‌ட்" (நிக‌ழ்கால‌த்தைக் குறிப்பது) ஸார்வ‌காலிக‌ம். ஆகையால் மூன்று கால‌ங்க‌ளையும் சொல்லுகிற‌து.இந்த‌ விர‌தத்தை ஸ்வ‌பாவிக‌மாக‌ உடைய‌வ‌ர்.  रामो द्विनाभिभाशते  (ராம: த்வி:ந‌ அபிபாஷ‌தே) என்று உம‌து வார்த்தை. உம்முடைய‌து வெறும் பேச்ச‌ல்ல‌, ராக்ஷ‌ஸ‌ர்க‌ளுக்கும் அவ‌ர்க‌ளுக்குத் த‌லைவ‌னான‌ விபீஷ‌ண‌னுக்கும் மெய்ய‌ரானீர். "அவ‌ர் ஸார்வ‌போம‌ன்" என்றால் நானும் அப்ப‌டியே. அடியேன் க்ருப‌ண‌ ஸார்வ‌பௌம‌ன். நீர் "ய‌தோக்த‌காரீ" என்று ப்ர‌ஸித்த‌ர‌ல்ல‌வா? "ய‌தோக்த‌கார‌ண‌ம்" என்று ந‌ம்பெருமாள் திருநாம‌த்தையும் நினைப்பூட்டுகிறார். என்னை ர‌க்ஷியாவிட்டால் திருநாமமே பொய்யாய்விடும். "தாஸேஷு ஸ‌த்ய‌ன்" "அடிய‌வ‌ர்க்கு மெய்ய‌ன்" என்னும் திருநாம‌த்தைத் த‌ரிக்க‌ச் செய்யும் என்று தேவ‌நாய‌க‌ன் துதி.

         ஸ்ப்ருஶாம் -- ப்ர‌ப‌த்தியில் ஸ‌ம்ப‌ந்த‌ப்ப‌டும் க்ஷ‌ண‌த்திலேயே அப‌ய‌தான‌ம் ஸ‌ங்க‌ல்பிக்க‌ப் ப‌டுகிற‌து. உபாய‌ ஸ்வ‌ரூப‌ம் க்ஷ‌ண‌ஸ்ப‌ர்ச‌மாயுள்ள‌து. செய்யும் ப்ர‌ப‌த‌நத்தில் தொட்டுக்கொள்ளும் அநுப‌ந்திக‌ளும் ர‌க்ஷிக்க‌ப் ப‌டுகிறார்க‌ள். விபீஷ‌ணாழ்வானோடு கூட‌ வ‌ந்த‌ நாலு ராக்ஷ‌ஸ‌ர்க‌ளும் ர‌க்ஷிக்க‌ப் ப‌ட்டார்க‌ள். அத‌ற்கு இவ‌ர் செய்த‌ ப்ர‌ப‌த்தியில் அவ‌ர்க‌ளுக்கும் ஸ்ப‌ர்ச‌ம் ஏற்ப‌ட்ட‌தே கார‌ண‌ம். (15)

இராம நாடகம் பாதுகா பட்டாபிஷேகம்

ஆறாங் களம்

இடம்: கோசலை யரண்மனை
காலம்: காலை
பாத்திரங்கள்: இராமர், தோழிகள், கோசலை.

[ அக்கினி குண்டம் நிருமிக்கப்பட்டிருக்கின்றது. அதன் ஒருபக்கமாக பூரண கும்பங்களும், சிறு சிறு தங்க வட்டில்களில், அக்ஷதை, தயிர், நெய், பாயசம், பொரி, அவிசு (உப்புப் போடாத வெண்பொங்கல்), மோதகம் முதலியவைகள் வைக்கப்பட்டிருக்கின்றன. கோசலை விரதானுஷ்டானத்தோடு சூரிய பூசை செய்து அக்கினிக்கு முன் ஒரு பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறாள். இராமர் வருகிறார். கோசலை அவரைக்கண்டு முகமலர்ந்து எழுந்து எதிராகச் செல்கிறாள். இராமர் நமஸ்காரம் செய்கிறார்.]

கோசலை:-- (தனக்குள்ளாக) இதென்ன நமது குமாரன் சிரம் செம்பொன் முடி புனையப் பெறவில்லை.! குஞ்சி,மஞ்சனப் புனித நீரால் நனையப் பெறவில்லை! அவனுக்கிருபுறத்திலும் இராஜசின்னமாகக் கவரி வீசப்படவில்லை. வெண்கொற்றக் குடையையும் காணேன். ஏதோ விசேஷம் தெரியவில்லை. எல்லாவற்றையும் பொறுமையாய் விசாரிப்போம். இப்பொழுது வணங்கிய என் செல்வனை வாயார வாழ்த்துகின்றேன். (இராமரை உச்சிமோந்து கண்குளிர நோக்கி) மைந்த! நீ அஷ்ட ஐஸ்வர்ய சம்பன்னனாய், ஆயுராரோக்கிய திடகாத்திரனாய் நீடூழி காலம் வாழ்ந்து, நெறி திறம்பாது செங்கோல் செலுத்திப் புகழும் புண்ணியமும் பெறக்கடவை. உனது தந்தை சூரிய சந்திரர் திசை மாறினாலும் சொன்ன சொல் தவறாத தர்மிஷ்டர். உனக்குப் பட்டாபிஷேகம் செய்வதாக அவர் கூறியபோதே, உனக்குப் பட்டாபிஷேக மாய்விட்டதாக நான் நிச்சயித்து விட்டேன். இனி என் மனக்குறைகள் அனைத்தும் மாறிவிட்டன. கண்மணீ! அபிஷேக காலம் நெருங்கிவிட்டதே! நீ மஞ்சன நீர் ஆடவேண்டாமா? மற்றும் சடங்குகள் பல செய்ய வேண்டாமா? உனக்கு இன்று முழுவதும் ஒழியா வேலையாயிருக்குமே! ஏது இவ்வளவு தூரம் ஒழிவாக என்னை நாடி வந்தாய்? என்னுடைய ஆசீர்வாதத்தைப் பெறவேண்டி வந்தனையா? வேறு விசேஷம் ஏதேனும் உண்டா? உன் பவளவாய் திறந்து சொல்லடா என் செல்வமே!

இராமர்:-- அம்மணீ! தங்களுடைய ஆசீர்வாதத்தை நான் பெறுவதற்கு மட்டுமல்ல இங்கு வந்தது. தங்களுடைய காதற்குமரன் பரதன், சீக்கிரம் கேகய நாட்டிலிருந்து வருவான், அவனையும் தாங்கள் ஆசீர்வதிக்கவேண்டும். சிறுவனாதலால், உங்களுடையவும், மற்றும் அரண்மனைப் பெரியோர்களுடையவும் ஆசீர்வாதத்தாலேயே அவன் இவ்விராச்சிய பாரத்தைச் சுமக்கத் தகுதியுள்ளவனாவான்.

கோசலை:-- குழந்தாய்! நீ கூறுவதென்ன, விந்தையாயிருக்கிறதே! உனக்குப் பட்டாபிஷேகமானால் இராச்சிய பாரத்தைச் சுமக்க வேண்டியது நீதானே! பரதன் உனக்குத் துணையாயிருந்து உதவி புரிவான். அவனுக்கு என்ன சுமை வரப்போகிறது?

இராமர்:-- அம்மணீ! என் தம்பி பரதனுக்கே இன்று பட்டாபிஷேகமாகப் போகிறது, எனக்கல்ல.

கோசலை: -- என்ன? பரதனுக்குப் பட்டாபிஷேகமா?

இராமர்:-- ஆம்

கோசலை:-- யார் உரைத்தது?

இராமர்:-- தந்தை இட்ட கட்டளையம்மா. பரதனுக்குப் பட்டமாவதில் தங்களுக்கு ஏதும் அதிருப்தியுண்டோ?

கோசலை:-- இராமா!

முறைமை யன்றென்ப தொன்றுண்டு மும்மையின்
நிறைகு ணத்தவ னின்னினு நல்லனே

பரதன் உன்னிலும் மும்மடங்கு நற்குணம் நிறைந்தவன்; என் மனத்துக்கினியவன். தமயனாகிய உன்னிடத்து மிகவும் பயபக்தி பூண்டவன். அவனுக்குப் பட்டமாவதைக் குறித்து எனக்கு யாதொரு ஆக்ஷேபமுமில்லை. ஆனால் அவன் அரசர்க்கு மூத்த குமாரனாய்ப் பிறக்கவில்லை. குலத்தில் மூத்தவர்க்கே முடி சூடுவது நம் சூரியகுல மரபு, ஆதலால் அந்த வரன்முறை வழுவுமே என்று மட்டும் எண்ணுகிறேன். இருந்தாலும்,

ஒன்று கேளிது மன்னவ னேவிய
தன்றெ னாமை மகனே யுனக்கறன்
நன்று நும்பிக்கு நானில நீகொடுத்
தொன்றி வாழுதி யூழி பலவிருந்து.

நான் ஒரு சூழ்ச்சி சொல்லுகிறேன் கேள். அரசரே தமது மூத்த குமாரரைத் தள்ளிவிட்டு இளையனாகிய பரதனுக்குப் பட்டாபிஷேகஞ் செய்தார் என்று வேண்டாம். அரசரிடமிருந்து நீயே முறைப்படி இராச்சியத்தைப் பெற்றுக்கொண்டது போலப் பெற்றுக்கொண்டு, பிறகு பரதனுக்கு நீ பட்டாபிஷேகஞ் செய்து, இருவரும் நெடுநாள் ஒருமித்து வாழ்ந்திருங்கள். இதனால் அபவாதத்திற்கு மிடமில்லாமல் போகும்.

இராமர்:-- அம்மணீ! தாங்கள் கூறுவது மெத்தவும் உத்தமமான நெறியே. ஆயினும் நான் அதை நிறைவேற்ற ஏலாதவனாயிருக்கின்றேன். ஏனெனில் தந்தையார் எனக்கிட்ட கட்டளை வேறொன்றுண்டு; அதை நிறைவேற்ற வேண்டும்.

கோசலை:-- அதென்ன கட்டளையடா கண்மணீ!

இராமர்:-- அன்னாய்!

ஈண்டு நைத்தய ணியென்னை யென்பையேல்
ஆண்டொ ரேழினோ டேழகன் கானிடை
மாண்ட மாதவ ரோடுடன் வைகிப்பின்
மீண்டு நீவரல் வேண்டுமென் றுரைத்தனன்

அந்தக் கட்டளை என்ன என்பீர்களேல், சொல்லுகின்றேன் கேளுங்கள். விசுவாமித்திரரோடு முன்னம் வனம் சென்று பெரும்பேறு பெற்றேனாதலால், அத்தகைய ரிஷீஸ்வரர்கள் கூட்டுறவால் நான் இன்னம் அதிகப் பேறு பெற வேண்டு மென்பது தந்தையாரது விருப்பம். ஆதலால் நான் ஈரேழு வருஷம் வனவாசஞ்செய்து, அங்குள்ள முனிசிரேஷ்டர் களுடைய ஆசீர்வாதத்தையும் பெற்று அனுக்கிரகத்தையும் பெற்றுத் திரும்பி வரவேண்டுமென்று அவர் கட்டளை யிட்டிருக்கிறார். அங்ஙனமே நான் வனஞ் செல்வதற்குத் தங்களிடம் உத்தரவு பெற்றுக்கொள்ள வந்தேன். அடியேனை ஆசீர்வதித்து அனுப்புங்கள்.

கோசலை:-- ஆ, மகனே! (மூர்ச்சித்துக் கீழே விழுகிறாள்; திரும்பவும் எழுகிறாள்; கையைக் கையோடு நெரிக்கிறாள். வயிற்றைப் பிசைந்து கொள்ளுகிறாள். இராமரைப் பார்த்து) கண்மணீ! என்ன கால வித்தியாசமடா இது! உன்னைப் பிரிந்து நான் எங்ஙனமடா உயிர் வாழ்வேன்? என் ஐயா, பெற்ற வயிறு பற்றி எரிகிறதடா! யார் செய்த கொடுமை இது? என் மனம் நடுங்குகின்றதே! என் உயிர் ஒடுங்குகின்றதே! யாருக்காக நான் இனி உயிர் வாழ்வது? ஐயோ, மாதவஞ் செய்யவோ உன்னை மாதவம் செய்து பெற்றேன்! வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்ததுபோலப் பட்டாபிஷேகமாகுந் தருணத்தில் இந்த உற்பாதமுண்டாக வேண்டுமா? குழந்தாய்! தந்தையா உன்னை வனஞ் செல்லுமாறு கட்டளையிட்டார்! ஆ!

வஞ்ச மோமக னேயுனை மாநிலம்
தஞ்ச மாகநீ தாங்கென்ற வாசகம்
நஞ்ச மோவினி நானுயிர் வாழ்வெனோ
அஞ்சு மஞ்சுமென் னாருயி ரஞ்சுரால்
.

மகனே! நேற்று உன்னை அழைத்து "நாளைய தினம் உனக்கு முடிசூட்டப் போகின்றேன். இனி இவ்வுலகத்தைத் தாங்க வேண்டியது உன் பொறுப்பு" என்று கூறினாரே உன் தந்தை, அவ்வாறு கூறியது வஞ்சகமா? குழந்தாய், நீ கூறிய மொழிகள் நஞ்சுபோல் என்னை வருத்துகின்றனவே. இனி நான் எவ்வாறு உயிர் வாழ்வேன்? என் நெஞ்சம் அஞ்சி நடுங்குகின்றதே! அரசர் தரும நெறி வெகு நன்றாயிருக்கிறது! என்றைக்கடா குழந்தாய், நீ காட்டுக்குப் போகின்றனை? ஏ, தெய்வங்களே! எனக்கு நீதியில்லையா? தருமமில்லையா? என் ஆருயிர்ச் செல்வன் ஆரணியஞ் செல்வது உஙகளுக்கும் சம்மதம்தானோ? அடா, என் அருமைப் புதல்வா! 'அன் பிழைத்த மனத்தரசர்க்கு நீ என் பிழைத்தனை'? கூறடா. அவர் உன்னை வெறுக்கத் தக்கதாக நீ ஏதேனும் பிழை செய்திருப்பையோ?

இராமர்:-- அப்படி என் மனமறிய நான் ஒரு குற்றமும் செய்ததில்லையம்மா.

கோசலை:-- ஆனால், உன்மீது மிகவும் பிரியம் வைத்திருந்த அவர், திடீரென்று உன்னை வெறுக்க நேரிட்ட காரணம் என்ன? 

(தொடரும்)

செவ்வாய், 30 ஆகஸ்ட், 2016

अभीति स्तवम्

அபீதி ஸ்தவம்

சுலோக‌ம் 14

             
भवन्ति मुखभेदतो भयनिदानमेव प्रभो !
           
शुभाशुभ विकल्पिता जगति देशकालादय: |
इति प्रथितसाध्वसे मयि दयिष्यसे त्वम् न चेत्
           
क इत्थमनुकम्पिता त्वदनुकम्पनीयश्च क: ||

வந்தி முகபேதோ யநிதாந‌மேவ ப்ரபோ !
        
ஶுபாஶுப விகல்பிதா ஜகதி தேஶகாலாத: |
இதி ப்ரதிதஸாத்வஸே மயி யிஷ்யஸே த்வம் சேத்
        
இத்தமநுகம்பிதா த்வதநுகம்பநீயஶ்ச : ||

ப்ர‌புவே -- என் ப்ர‌புவே!, ஶுபாஶுப‌ விக‌ல்பிதா -- சுப‌ம் அசுப‌ம் என்று பிரித்துப் பேச‌ப்ப‌டும், தேஶ‌காலாத‌ய‌ -- தேச‌ம் கால‌ம் முத‌லிய‌வை, முக‌பேதத‌ -- ஓரொரு ப‌ர்யாய‌மாக‌, ப‌ய‌நிதாந‌மேவ‌ -- ப‌ய‌த்திற்கே கார‌ண‌மாக‌, ப‌வ‌ந்தி -- ஆகின்ற‌ன‌, இதி -- என்று (இப்ப‌டி), ப்ர‌தித‌ஸாத்வ‌ஸே -- மிக‌வும் ப‌ர‌ந்த‌ ப‌ய‌த்தையுடைய‌, ம‌யி -- என்னிட‌ம், த்வ‌ம் -- நீர், ந‌ த‌யிஷ்ய‌ஸே சேத் -- த‌ய‌வு செய்யாது போனால், இத்த‌ம் -- இப்ப‌டி, க‌: அனுக‌ம்பிதா -- வேறு யார் த‌யை செய்வாருள‌ர்?, த்வ‌துக‌ம்ப‌நீய‌: ச‌ --  உம் த‌யைக்குத் த‌க்க‌ பாத்ர‌ம், க‌: -- (என்னிலும்) யாருள‌ர்?

பாட‌ பேத‌ங்க‌ள்

(1) प्रचुरसाध्वसे  (2) इत्थमनुकम्पते

அன்பில் ஸ்ரீனிவாச‌ன் ஸ்வாமி

நல்லவையே தருமென்றும் தீயவையே தருமென்றும்
தேசத்தையும் காலத்தையும் திறம்படவே பிரித்தாலும்
எல்லாமே வெவ்வேறு வழிகளிலே தீமையையே
அளிக்கும்படி அமைந்தனவாய் அச்சத்தையே தருமென்றே
எல்லையிலா பயம்கொண்ட என்மீதே அரங்கா! நீ
இரக்கம்தான் கொள்ளாயேல் இவ்வாறு அருள்புரியும்
நல்லானும் வேறுளனோ? நிலவுலகில் நின்னுடைய
நல்லருளைப் பெறும்தகுதி நிறைந்தவனும் வேறுளனோ? 14.

அன்பில் ஸ்ரீ ஏ.வி. கோபாலாசாரியார்

         20-வ‌து சுலோக‌த்தில் த‌ன் ச‌ர‌ணாக‌திக்குப் ப‌ல‌த்தைக் குறிப்பிட்டு ப்ரார்த்திக்கிறார். அத‌ற்கு முன் பெருமாளுக்கு த‌யை உண்டாகி வ‌ள‌ரும்ப‌டி த‌ம் ப‌ய‌த்தையும் கோயில் முத‌லிய‌ திவ்ய‌ தேச‌ங்க‌ளில் திவ்ய‌ம‌ங்க‌ள‌ விக்ர‌ஹ‌ங்க‌ளை ஸ‌தா ஸேவித்துக் கொண்டிருப்ப‌தே த‌ன‌க்கு ஸுக‌த்தைத் த‌ரும் என்ப‌தையும், அதை அளிக்க‌ பெருமாளைத்த‌விர‌ வேறு க‌தி இல்லை என்ப‌தையும் சொல்லி வ‌ருகையில் இதில் ஆள‌வ‌ந்தாருடைய‌ ஸ்தோத்ர‌ ர‌த்ன‌த்தின் ப‌த‌ங்க‌ளையே அமைத்துப் பிரார்த்திக்கிறார். பெரியோர்க‌ள் பாசுர‌த்தை அநுஸ‌ரித்துப் பிரார்த்தித்தால், பெருமாள் திருவுள்ள‌ம் சீக்கிர‌ம் உகக்க‌லாம் என்று ஆசை. ஆள‌வ‌ந்தார், यदि मे न दयिष्यसे ततो दवनीयस्तव नाथ दुर्लभ: (ய‌தி மே ந‌ த‌யிஷ்ய‌ஸே ததோ த‌ய‌நீய‌: த‌வ‌ நாத‌ துர்ல‌ப‌:)  என் விஷ‌ய‌த்தில் நீர் த‌யை செய்யாவிடில், உம‌க்கு த‌யை செய்ய‌த் த‌க்க‌வ‌னே கிடைக்க‌ மாட்டான். உம்மலால் நான் நாத‌சூன்ய‌ன். என்ன‌லால் நீர் த‌யாபாத்ர‌ சூன்ய‌ர், தைவ‌த்தால் எற்ப‌ட்டிருக்கும் இந்த‌ ஸ‌ம்ப‌ந்தத்தை நீர் காப்பாற்ற‌ வேணும். मा स्म जीहप: (மா ஸ்ம‌ ஜீஹ‌ப‌:) ந‌ழுவ‌ விட‌க்கூடாது என்றார். இவ‌ரும் ப‌தினெட்டாவ‌து சுலோக‌த்தில் மாஸ்ம‌ த‌ஜ்ஜீஹ‌ப‌த் என்று அதையே கூறுகிறார்.

          உல‌க‌த்தில் தேச‌ம் கால‌ம் முத‌லிய‌வ‌ற்றில் சில‌வ‌ற்றை சுப‌மென்றும், சில‌வ‌ற்றை அசுப‌மென்றும் பிரிப்ப‌து வீணே. எல்லாம் ப‌ய‌த்தையும் துக்க‌த்தையும் த‌ருவ‌தால், உண்மையில் எல்லாம் அசுப‌மே. ஸ்வ‌ர்க்க‌ம் சென்றால்தேவ‌ர்க‌ள் இவ‌னை "ப‌சு" என்று எண்ணுகிறார்க‌ள். அங்கு ஏற‌விட்ட‌ க‌ர்மம் விசைய‌ற்ற‌வ‌ள‌விலே கீழே விழுந்து விடுவோம் என்ற‌ ப‌ய‌முமுண்டு.  (14)