வெள்ளி, 15 ஜனவரி, 2010

Paduka Sahasram intro

Paduka Rajya Philosopher’s state civita Dei

That a good state is civitas dei  is readily accepted. It is, however, the distortion of its purport, the perversion of its essence, and the prostitution of its purpose for the most unworthy of the selfish ends of individuals and cliques that is repudiated. All civitas is dei. Deus – the great God, is one, and “One only without a second”. That God is neither tribal, nor local nor sectarian. He is one and universal. There is no “private” ownership in God. “Private” ownership is itself ungodly. God (Deus) is one and universal. The unity and universality of God can not be over emphasised. If Deus is one and universal there can be no civitas dei which is either tribal or local or sectarian. The civitas, if it is to be dei, must be as universal as the Deus whose civitas it is. To speak of a tribal or a local or a sectarian civitas dei  is a self-contradiction. Civitas Dei   is a “state” of all-inclusion and no-inclusion. It is the function of that state to sustain the all-inclusion and maintain the no-inclusion; for that sustenance and maintenance is the function of Deus. All-exclusion and no-inclusion is civitas diaboli. To the extent to which a civitas is inclusive it is dei and therefore divine. To the extent to which it is exclusive it is diaboli, and therefore diabolic. Law includes all and all are included in law and in accordance with law. Lawlessness excludes all and excludes them all from law and therefore from each other God wants all and wants them all to be good and useful; for they are all the "offspring of His own body" and therefore cannot be excluded from that body. It is the body of Virat-Purusha. That is the body.politic. and that body-politic is all inclusive and all-sustaining. It is universal. Nothing is a surplusage to God. Everything exists in His will and as His wealth to His greater glory That is the glory of everything in existence. The man who does not see the usefulness of another only sees his own uselessness. It is a useless mind that does not see the usefulness of others "Everything that stands, stands in God, and stands for God. To know that is alone true knowledge; all else is mere dross". So proclaims the great Saint (43). "Every tender soul that blossoms into corporeal form is but the blossom of the Lord's form" is the hallowed articulation of Sathakopa ~ the Paduka-lncarnate 44 Truth is the truth of "all" and God is the God of all. By making truth and God tribal or local, or sectarian, we are only exhibiting our own pettiness and thereby making "truth" and "God" as petty as ourselves. In that pettiness we are degrading "truth" and "God" to our own level of pettiness so as to make them worthy of our petty worship in exclusion. Such a worship is the most degraded form of worship. The good, the virtuous, are great, and their greatness is the greatness of their mind. It is Magnanimity The Lord, in His magnanimity, has been pleased to call the magnanimous by the hollowed name of "Mahatmas' (45). It is for 'Mahatmas' that the Lord says He is thirsting. It is those rnahatmas for whom the Lord and the Lord for whom the mahatmas are mutually thirsting, that the petty man excludes and it is their place that he takes in his exclusive theocracy. The  theoretical form of that theocracy is, in its ultimate analysis, either political pantheism orpolitical acosmism. They are kins, if not twins, and is really very little to choose between them. Let us not, however, trespass into political metaphysics  which is more metaphysical than metaphysics itself. Rajya or Raj (its abbreviated  form)which is the equivalent of "State", is neither regional nor tribal. It is essentially functional. "Rajya" is a Sanskrit word and in Sanskrit it means "The function of the ruler". The great sageParasara has described that function as the function "delighting the people" (46). The ethics of the ruler is the aesthetics of the people. It is the virtuous function of making people happy in virtuous company. It is the one function of synthesising and unifying man into a society in the dharma of complementarity in which the existence and  function of every member needs the existence and function of every other member and in which all live an abundant life in mutual cordiality. All truth- is the truth of, organic unity, all ethics, is the ethics of organic function, and all joy. is the. joy of organic membership.  The State is a single anatomical structure living in the abundance of its moral vitality. It is its life that all people breathe alike and together. Anything to the extent to which it tends to be disruptive of the integrity of that constitution, of that principle of integrating vitality, is repugnant to the constitution, and tends to its emasculation. That vitality which is essentially integral and functionally integrating.the State into a "union"  is impartible and  inalienable. It is intolerant of any division or distribution of that  vitality  in  terms  of regional  disruption which are euphemistically called local or provincial autonomy. The theory that in a single body politic there can be several autonomous sovereign bodies is radically vicious. It is constitutional heresy and nomenclatorial extravagance. It is that heresy and extravagance that has been responsible for the creation of  interpugnacious eruptions territorial and tribal, within the single unit of one body politic. They are the very eruptions of the body politic which are subversive of the integrating vitality of that body. No state, which in its constitutional essence is integral, can be cut into autonomous parts in terms either of tribality or of territoriality. Every good and vital state is an integration and a,union of all .places and tribes within the sovereign jurisdiction of the state in which everyone breathes the single life of the state. The life of the state is the breath of the people. The principle of all good constitution is the one vital principle of goodness, and all goodness is the goodness of integrating vitality. To constitute  is to integrate in  vitality.All ease is the ease of integration~ and all disease is the disease of disintegration and it is as true of the biological body as of the body politic. A state is not a geographical or a tribal entity. It is the integral unity. That unity is  moral  essence - the very essence of dharma. That great polltical philosopher Burke  says:- "Nation is a moral essence not a geographical arrangement or a denomination of the nomenclator".   Mere locality does not constitute a body politic.....The body politic of France existed  in the majesty of its throne; in the dignity of its nobility. in the honourof its gentry, in the sanctity of  its clergy, in  the reverence of  its magistracy, in the weight and consideration due to its landed property in the several bailliages, in. the respect due to its movable substance represented by Corporations of the kingdom. All these particular moleculae united form the great mass of what is truly the body politic in all countries" 47. It is the duty of the ruler to maintain in his moralmight the purity of  that moral: essence. That a polity is moral essence and that the  virtuous are its guards and guides is a vltal constitutional truth. The greatest and noblest of minds Of all countries and  of all ages have proclaimed thy sanctity and the inviolability of that truth.  They have  declared with one voice that earthly rulership inheres in  the virtuous. Whatever be the form of government, the soul of all good  government is selfless service to God and to God's humanity in all love and loyalty to God. The virtuous are the servants of God and in their service they are on the side of God. God is therefore on their side and has committed His world to their care and guidance Arjuna was on the side of God and therefore God was on his side. Asked, if he believed whether God was on his side, that noble soul - Abraham Lincoln, is said to have replied in all the strength of his love of God, that he was not ccncerned with whether God was on his side, but that he was concerned with whether he was on the side of God. That is how selfless nobility concerns itself. All authority is God's and it is God's authority that is being served by the virtuous in their service to God as the guards of the moral essence of State. It is for that service that God has invested the virtuous with His own authority -- an authority to serve Him and His servants, and in that authority, the virtuous have been constituted the authorized servants of God. It is in that investiture and constitution that true servants are marked off from counterfeit servants whose rule of "service" is self-service In that investiture by God the virtuous are constituted the "Paduka" of God. It is the "vision" of that investiture that the Celestial Bard Valmiki saw, and it is the glory of that investiture that he sang. "Verily, it is these Padukas that assure the abiding happiness of the whole universe" is the message of the Poet. Paduka in its service is the one friend, philosopher and guide of God and in its rule is the one friend, philosopher, and guide of man. It is the service of bringing God to man and the rule of taking man to God, and in that service- rule, Paduka brings about the abiding union of human service with Divine essence. It is a union of earth and Heaven, Of Nature and Grace. It is a union of both the realms in one and that one realm the one union, is Paduka's. Paduka is truly the "Philosopher' and the true 'philosopher'. The phllosopher's state of Plato is the echo of the Padlukaraj of Valmiki and of the present author and will find in it its full elucidation. That 'Philosopher" is the later "Peter" and 'Caesar" in one. The later- day conflict between "Peter" and "Caesar" was due to adventitious circumstances. It is in  no way detracts from the essential identity of the serving personality of the "Philosopher". One of the papal titles is "servus servorum" (the servant of servants). It is by that title that Dante in his "vision' has named Boniface VIII.48 .That is the  glory of Dante's vision. The conflict between "secular" and "religious" is as unfounded as it is unreal.. The conflict is a very "secular" one brought about for securing very "secular" ends. Governance is a very sacred act and therefore a very great act of sacrifice. It is in sacrifice that Paduka rules49 . Paduka wills that it should 'serve'. God wills that it should 'rule'. The serving will of Paduka is the ruling will of God. Rule is the sacrifice (yagna) of Paduka - the Philosopher, and in that sacrifice the State becomes consecrated and blessed (yagnasishta). One of the greatest saints of all times, himself a king-philosopher, Kulasekhara Alvar, says- "O Lord! Verily do l, Thy humble servant. thirst for Thee alone, even as all  earthly power and wealth thirst for those alone  who in their  thirst for Thee alone have no thirst for them at all"50  It is for that reason - for the reason of the consecrtion of the state in the  sacrifice of the "philosopher" - that the state covets the "philosopher". Those who covet the state are "robbers" and those whom the state covets are "philosophers". Paduka is the "Philosopher" and the state is therefore Paduka's . Paduka is a union and it is in that union that peace (santi) reigns supreme. It is the reign of the Upanishadic "santi, santi,santi"(peace ,peace, peace). May 'santi' reign supreme in our "union". May Paduka reign supreme in that "Union" in the meridian splendour of its moral might and bring about, in fulfilment of the Poet's Prophecy, peace and happiness to the whole universe.

*******************************************************

43.Thirumalisai  Alvar  Nanmukan Thiruvantadi  54.
44. Peria Thiruvantadi 73.
45. Gita VII 19 and Ramanuja Bhashya ibid
46. Vishnu Purana I 13.93
47. Letters on a Rigicide Peace: Vol V Pp219, 220 (Bohn’s)
48. Inferno XV
49. Paduka 127
50. Perumal Tirumoli 5.9 cf Brahadaranyaka 6.4.23
     Paduka 113, 126, 127, 144, 160 etc.

புதன், 13 ஜனவரி, 2010

வங்கக் கடல் கடைந்தானே! மாதவனே!

30. பாசுரம் கற்பவர் அடையும் பயன்.

முந்திய பாட்டுடன் திருப்பாவை முற்றுப் பெற்றது என்றே சொல்லலாம். பாவனை முதிர்ச்சியால் நோன்பு நோற்றவள்தானே ஆண்டாள்? எனவே இந்தப் பாசுரங்களைக் கற்பவர்களும் தங்கள் மனோபாவத்தின் விளைவாக நோன்பு நோற்றவர்களைப் போல் பயன் பெறுவார்கள் என்று இந்த முப்பதாவது பாசுரம் தெரிவிக்கிறது.

நோன்பு நோற்றவர்களின் அடிப்படைக் கருத்து இறைவனோடு உறவு கொண்டு அவனுக்கே பணி செய்வதுதான்; என்றென்றும் பணி செய்வது; மற்றைக் காமங்களை யெல்லாம் இறைவன் அருளால் ஒரே காமமாக மாற்றிக் கொண்டு ஒரு முகமாய்ப் பணி புரிவது. இந்தப் பாசுரங்களை ஓதி ஓதி இன்புறுவோர் உள்ளங்களிலும் இந்தப் பாவைப் பாட்டின் பரம தாத்பரியம் – உயிர்நிலைக் கொள்கை –ஊறிக் கிடக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே, இந்தப் பிரபந்தம் கற்பவர்கள் எல்லாம் – அவர்கள் எக் குலத்தினராயினும் எந்த நாட்டினராயினும் – எங்கும் எப்போதும் திருவருள் பெற்றவர்களாய் நல்லின்ப வாழ்க்கை வாழ்வார்கள் என்று பலன் சொல்லுகிறது இந்தப் பாசுரம்.

கண்ணனைக் கோபியர்கள் சென்று இறைஞ்சி அவர்கள் விரும்பிய பறை – அதாவது கைங்கரியச் செல்வத்தை –கொண்டார்கள் என்று முதல் மூன்று அடிகளில் தெரிவிக்கிறது இப் பாசுரம். கண்ணனை ‘வங்கக் கடல் கடைந்த மாதவன்’ என்றும், ‘கேசவன்’ என்றும் தெரிவிக்கிறது. தேவர்களுக்குத் தன் திருமேனி நோகப் பாடுபட்டு, காரியசித்தி விளைத்தவன் கண்ணன் என்பது கருத்து. அவர்கள், கடைந்த அமுதத்தை விரும்பினார்கள். கடலில் கிடந்த அமுதமாகிய பெருமாளை விரும்பவில்லை. எனினும் விரும்புவார் விரும்புவனவற்றை யெல்லாம் கொடுக்கும் கற்பகம்போல் விண்ணவர் விரும்பிய அந்தப் பயனையும் அவர்களுக்குக் கொடுத்தான் ஆண்டவன். இந்தக் கோபியரோ ‘நாங்கள் விரும்பும் அமுதம் கண்ணன்தான்’ என்ற மன நிலையுடன் நோன்பு நோற்க விரும்பிய பாக்கியசாலிகள். விண்ணவர்கள் தன்னலத்தை முடித்துக் கொடுத்தவன் இவர்களுடைய கைங்கரிய விருப்பத்தை முடித்துக் கொடுத்ததில் அதிசயம் ஒன்றும் இல்லை என்பதை இப் பாசுரத்தின் முதல் அடியே சுட்டிக் காட்டுகிறது.

கண்ணனைப் பாடிவரும் பெண்களை இப் பாசுரத்தின் இரண்டாவது அடி ‘திங்கள் திருமுகத்துச் சேயிழையார்’ என்று குறிப்பிடுகிறது. குளிர்ந்த அழகிய முகத்தை உடையவர்கள் என்பதால் இவர்களுடைய இயற்கையழகு சோபிக்கும் விதம் குறிக்கப் படுகிறது. அழகனைப் பாடும் அழகியர் அல்லவா? கண்ணனைப் பார்த்துப் பார்த்துக் கண்ணழகு பெற்ற யசோதைபோல் அவனை நினைத்து நினைத்துச் சித்தத்தின் அழகு பெற்றுக் கொண்டவர்கள் இவர்கள். அந்த அகத்தின் அழகு முகத்திலே வீசுகிறது சந்திரிகை போல; இத்தகைய அழகைத் தங்களுக்கு இசைந்த ஆபரணங்களாலும் அதிகரிக்கச் செய்து கொண்டவர்கள் இந்தப் பெண்கள் என்பது தோன்ற இவர்களை, திங்கள் திருமுகத்துச் சேயிழையார் என்கிறது பாசுரம்.

இந்தப் பாசுரத்திலே பிரஸ்தாபிக்கப்படும் ஆபரணங்கள் இவர்கள் விரும்பியவாறே கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் கூட இருந்து பூட்டியவை என்பது குறிப்பு. அதனால் இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மகிழ்ச்சியும் இவர்களது ‘திங்கள் திருமுகத்’திலே ஜொலிக்கக் காணலாம். மேனியழகும் உள்ளத்தின் அழகும் போட்டியிடச் சென்று இவர்கள் கண்ணனை இறைஞ்சுகிறார்கள்; நப்பின்னையை முன்னிட்டு வணங்குகிறார்கள்.

இவர்கள் விரும்பியதைப் பெற்றார்கள் என்பதை ‘அங்கு அப்பறை கொண்ட ஆறு’ என்ற சொற்றொடர் வெளியிடுகிறது. ‘அங்கு’ என்றால், கிருஷ்ண சந்நிதியில் – ஆய்ப்பாடியில் நந்தகோபன் மாளிகையில், சிங்காசனத்தில் யசோதை இளஞ்சிங்கம் கம்பீரமாக இருந்த இருப்பிலே, ஊராருக்காகச் சொன்ன வார்த்தைதான் பறை என்பது. வாய் ‘பறை’ என்று சொல்ல, உள்ளம் ‘உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று பாடிக்கொண்டே இருந்தது. ‘இது இவர்கள் பறை கொண்ட விதம்!’ என்கிறது இப்பாசுரம்.

இப்படிப் பாவைப் பிரபந்தம் பிறந்த கதையைச் சுருங்க உணர்த்திவிட்டு, இன்னார் செய்தது இந்தப் பிரபந்தம் என்பதைத் தெரிவிக்கிறது இப்பாட்டு. கோதை தன்னை இன்னார் மகள் என்று தெரிவித்துக் கொள்கிறாள். ‘என் தந்தை பட்டர்பிரான்’ என்கிறாள். தாமரை மாலை அணிந்திருக்கும் பட்டர்பிரான் என்கிறாள். அழகிய ஸ்ரீவில்லிபுத்தூர்ப் பட்டர்பிரான் என்கிறாள். தன்னைப் ‘பட்டர்பிரான் கோதை’ என்று அறிமுகப் படுத்திக் கொள்கிறாள்.

இந்தப்’பட்டர்பிரான் கோதை’ கோபியர் கண்ணனை அடைந்து பேறுபெற்ற கதையைத்தானா சொல்லுகிறாள்? அந்தத் ‘திருமுகத்துச் சேயிழையார்’ கூட்டத்தில் தானும் ஒருத்தியாகக் கலந்துகொண்டு கைங்கரியப் பிரார்த்தனை செய்த கதையைத்தான் இந்தப் பிரபந்தத்தில் சொல்லுகிறாள். கோபிமாருடைய அவஸ்தையை இவள் அடைந்து பாடும் கதைதான் இது. கோதை தான் அடைந்த பாட்டைப் பாடும் பாட்டு இது.

இந்தப் பிரபந்தத்தைச் ‘சங்கத் தமிழ்மாலை’ என்று குறிப்பிடுகிறது இப்பாசுரம். சங்ககாலம் தொட்டு வளர்ந்து வந்த தமிழிலே செய்த பாமாலை என்று சாதாரணமாகப் பொருள் சொல்லத் தோன்றும். இந்தப் பொருள் தவறன்று எனினும், இங்கே சங்கமாகக் கூடி – அதாவது கூட்டமாயிருந்து – அன்பர்கள் பாடிப் பேறு பெற வேண்டிய பிரபந்தம் இது என்று பொருள் கொள்வதுதான் சிறப்பாகும். கோபியர்கள் திரள் திரளாக அனுபவித்த பக்தி அனுபவத்தைச் சொல்லும் பாசுரங்களை ஓதுவோரும் கூட்டமாகக் கூடி அனுபவிப்பதே முறையாகும். கூடிப் பாடி ஆடிப் பரவசமாய் அனுபவிக்க வேண்டிய பிரபந்தம்.

இப்பிரபந்தத்தின் முப்பது பாட்டில் ஒரு பாட்டையும் நழுவ விடாமல் அனுபவிக்க வேண்டும் என்ற கருத்தைச் சுட்டுக் காட்டுகிறது ‘முப்பதும் தப்பாமே’ என்ற சொற்றொடர்.

‘எங்கும் திருவருள் பெற்று இன்புற’ச் செய்வது இது என்கிறாள். சயாம் முதலான வெளிநாடுகளுக்குச் சென்ற தமிழர்களும் இதை அங்கும் பாடி அனுபவித்தனர் என்பது உண்மைதானே!

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவார்

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனை
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றுஇறைஞ்சி
அங்குஅப் பறைகொண்ட ஆற்றை அணிபுதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்குஇப் பரிசுஉரைப்பார் ஈர்இரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
  எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர் எம்பாவாய்.

விளக்கம்

இப் பிரபந்தம் கற்பவர் பிராட்டியாலும் எம்பெருமானாலும் எங்கும் எப்போதும் அருள் செய்யப்பெற்று மகிழ்ந்து இருப்பர் என்று இப்பாசுரம் பயனைத் தெரிவிக்கிறது. இதைப் ‘பலச்ருதி’ என்பர். ஆண்டாள் செய்தது இப்பிரபந்தம் என்பதைத் தெரிவிப்பதால் இதைத் திருநாமப் பாட்டு என்றும் கூறுவர்.

முப்பது மலர்களால் ஒரு பாமாலை

முதலாவது பாட்டு ‘விருப்பம் உள்ளவர்கள் எல்லாம் வந்து சேருங்கள்!’ என்று கூவியழைக்கிறது. ‘சேரவாரும் செகத்தீரே!’ என்ற முறையில் வரம்பு இன்றி அனைவரும் கிருஷ்ண பக்திச் செல்வத்தைப் பொதுவாக அனுபவிக்கலாம் என்பது உட்பொருள்.

இரண்டாவது பாசுரத்தில் நோன்பிற்கு உறுப்பான நியமங்கள் பிரஸ்தாபிக்கப்படுகின்றன. நியமம் இல்லாமல் எந்தப் பெரிய காரியத்தைத்தான் சாதிக்கமுடியும்?

நாம் வாழ, நாடு வாழவேணும் என்ற குறிப்பைப் புலப்படுத்துகிறது மூன்றாம் பாசுரம். நாடு செழிக்க மழை பெய்யவேணும் என்கிறது நாலாம் பாசுரம். நமது நாகரிகம் ஆற்றங்கரை நாகரிகம்தானே? வானம் பார்த்து வாழ்வு நடத்துகிறோம் – சரீர வாழ்வும்தான்., ஆன்ம வாழ்வும்தான். பக்தி வாழ்விலே கிடைக்கும் சக்தி, இயற்கைச் சக்திகளையும் ஏவிக் கூவிப் பணி கொள்ளும் பேராற்றல் வாய்ந்தது என்பது உட்பொருள்.

எந்தப் பெருங் காரியத்திற்கும் இடையூறு வருமே என்றால், இடையூற்றுக்கு இடையூறாக உதவுகிறது பகவந் நாம சங்கீர்த்தனம் என்ற கருத்தை வெளியிடுகிறது ஐந்தாம் பாட்டு.

ஆறாம் பாசுரம் முதல் பதினைந்தாம் பாசுரம் வரை ஒருவரை ஒருவர் எழுப்பிக்கொண்டு எல்லாரும் திரண்டு நந்தகோபன் மாளிகையை நோக்கிப் போவதைக் காண்கிறோம். இப்பாசுரங்களில், பக்தியால் ஒன்றுபட்டவர்கள் பல்வேறு மனநிலைகளும் குணாதிசயங்களும் உடையவராக நம் கண்முன் வருகிறார்கள்.

பதினாறாம் பாசுரத்தில் கோயில் காப்பானையும் தோரண வாசல் காப்பானையும் உணர்த்துகிறார்கள். அனுமதி பெற்று உள்ளே போகிறார்கள். பதினேழாம் பாசுரத்தில் நந்தகோப தம்பதியையும் சகோதரர்களான கிருஷ்ண பலராமர்களையும் துயில் உணர்த்துகிறார்கள். அடுத்த பாசுரத்தில் நப்பின்னையை முன்னிட்டுக் காரியசித்தி பெற வேணுமென்று இப்பிராட்டியைத் துயில் உணர்த்துகிறார்கள்.

பத்தொன்பதாம் பாட்டிலும் இதற்கு அடுத்த பாட்டிலும் ‘நான் முன்னே! நான் முன்னே!’ என்று போட்டியிட்டு இவர்களுக்கு அருள் புரிய முற்படும் நப்பின்னைப் பிராட்டியும் கண்ணபிரானும் துயில் உணர்த்தப் பெறுகின்றார். இருபத்தொன்றாம் பாசுரமும் இருபத்திரண்டாம் பாசுரமும் இவர்கள் கண்ணனின் குணங்களுக்குத் தோற்று வந்ததையும், அபிமான துரபிமானங்கள் குலைந்து கடாட்சமே குறிக்கோளாகக் கொண்டு வந்ததையும் குறிப்பிடுகின்றன. இருபத்து மூன்றாம் பாட்டில் வீர சிங்காசனத்தில் வீற்றிருந்து வந்த காரியத்தைக் கண்ணன் ஆராயவேணும் என்கிறார்கள். பிறகு யாசித்து வந்ததாகச் சொல்லி அப்பால் நோன்பின் உபகரணங்களை அபேட்சிக்கிறார்கள். இருபத்தேழில் சம்மானம் வேண்டுகிறார்கள். கடைசியாக உறவு சொல்லி, உள்ளத்தைத் திறந்து காட்டுகிறார்கள். முடிவில் வருகிறது பலச்ருதி.

கோதை பிறந்தஊர் கோவிந்தன் வாழும்ஊர்
சோதி மணிமாடம் தோன்றும்ஊர் – நீதியால்
நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதும்ஊர்
வில்லிபுத்தூர் வேதக்கோன் ஊர்.

பாதங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும்
வேதம் அனைத்துக்கும் வித்தாகும் --- கோதைதமிழ்
ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை
வையம் சுமப்பதும் வம்பு.

திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே
திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே
பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே
பெரும்பூ தூர்மாமுனிக்குப் பின்னானாள் வாழியே
ஒருநூற்று நாற்பத்து மூன்றுஉரைத்தாள் வாழியே
உயர்அரங்கற் கேகண்ணி உகந்தளித்தாள் வாழியே
மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே
  வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே.

ஆண்டாள் திருவடிகளே சரணம்.

IMG

இந்த முப்பது நாள்களும் இங்கே படித்தது திரு பி. ஸ்ரீ. அவர்கள் எழுதிய திருப்பாவை விளக்கம் என்னும் நூல். அன்பர்கள் அனைவருக்கும் ஸ்ரீ ஆண்டாள் திருவருள் நல்க வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன். எல்லார்க்கும் அடியேனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள். 

செவ்வாய், 12 ஜனவரி, 2010

சிற்றஞ் சிறுகாலே

29. உயிர்நிலைப் பாட்டு

தங்கள் தனிப்பெரு நோக்கத்தைப் ‘பறை பறை’ என்று மறைத்துப் பேசி வந்த ஆய்ச்சியர் இந்தப் பாசுரத்திலே அதன் புதைபொருள் இதுதான் என்று கண்ணனிடம் தெளிவாகச் சொல்லி விடுகிறார்கள். இதில் திருப்பாவையின் பரம தாத்பரியம் தெளிவாக்கப் படுகிறது.

‘சிற்றஞ்சிறுகாலை’ என்று தொடங்குகிறது இந்தப் பாசுரம். ‘சிறு பிள்ளைகளாகிய நாங்கள் காலையில் வரவில்லை. சிறு காலையிலும் வரவில்லை; சிற்றஞ்சிறுகாலை என்று சொல்லத்தக்க அதிகாலை வேளையிலேயே எழுந்து பனியைப் பாராமல், குளிரைப் பாராமல் வந்திருக்கிறோம். இதிலிருந்தே எங்கள் மனநிலையை நீ தெரிந்து கொள்ளலாம்’ என்பது குறிப்பு.

‘மாடு மேய்த்துப் பிழைக்கும் குலத்தில் பிறந்திருக்கிறாய் நீ. எங்களுடைய கைங்கரியத்தைப் பெற்றுக்கொண்டால்தானே உன்னுடைய இந்தப் பிறவி பயன் பெறுவதாகும்?’ என்கிறார்கள்.

பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது!

ராஜாதிராஜனும் தேவாதிதேவனுமாகிய பரம்பொருள் மாடு மேய்க்கும் குலத்தில் பிறந்திருக்கிறான் என்றால், அதன் பயன் தன் எளிமையைப் புலப்படுத்தும் முறையில் தங்களை ஆட்கொள்வதுதான் என்கிறார்கள். இறைவன் பிறப்பிலி --- அதாவது, பிறப்பு இல்லாதவன். அவன் பிறக்கிறான், தாழ்ந்தார்க்கும் முகம் காட்டவே பிறக்கிறான். இந்த நோக்கம் நிறைவேறுவதற்காகத் தங்களைப் பணி கொள்ள வேண்டியது மிகவும் அவசியமானது என்கிறார்கள்.

‘உலகம் கோன் இல்லாத மந்தை அல்ல!’ என்பது பரம ஞானிகள் கண்ட உண்மை. இந்தக் கோனைப் ‘பேராயன்’ என்கிறார் ஆழ்வார்களில் ஒருவர். பேராயன் ‘சிற்றாயர் சிங்க’மாகத் தோன்றியிருக்கிறான் இப்போது. ‘பொன்னாடை புழுதி படியலாகாதே!’ என்று பரமபதத்திலேயே தங்கி விடவில்லையாம். இந்த உலகிலும் மறைகள் ஓதிக் காணாத நிலையில் மாடு மேய்ப்பவர் காணும்படி வந்திருக்கின்றானாம். அப்படியிருக்க, ‘குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது’ என்கிறார்கள். ‘போகாது’ என்றால் போகலாகாது என்று பொருள்படும்.

இப்படி வேண்டிக்கொண்ட ஆய்ச்சியரை நோக்கி, ‘பெண்களே! அது இருக்கட்டும்; நீங்கள் மார்கழி நீராட்டத்திற்கும் நோன்பிற்கும் உபகரணமாய்க் கேட்டவற்றைத் தருகிறேன்; பறை முதலியன தருகிறேன்’ என்கிறான் கண்ணன். அதுகேட்ட ஆய்ச்சியர்கள் தாங்கள் ‘பறை’ என்று சொன்னதன் உட்கருத்து வேறு என்கிறார்கள். ‘பறை பறையல்ல!’ என்கிறார்கள்.

இற்றைப் பறைகொள்வான்
அன்றுகாண் கோவிந்தா!
என்கிறார்கள்.

‘அப்படியானால் நீங்கள் விரும்பும் பறைதான் எது?’ என்று கண்ணன் கேட்கக் கூடுமல்லவா? அதற்குப் பதில் சொல்லுகிறார்கள் ஆய்ச்சியர்கள். ‘உன்னிடம் நாங்கள் யாசிப்பது உன்னைத் தான்!’ என்கிறார்கள். ‘நாங்கள் விரும்புகிற பறை உனக்கு நாங்கள் ஆட்செய்ய வேண்டும் என்பதுதான்’ என்கிறார்கள். உனக்கேநாம் ஆட்செய்வோம் என்று ஐயம்திரிபு இல்லாமல் பேசுகிறார்கள்.

‘உன்தன்னோடு உற்றோமே ஆவோம்!’ என்று அந்த உறவை உறுதிப்படுத்திக் கொள்கிறார்கள்.

உற்றோமே ஆவோம்
  உனக்கேநாம் ஆட்செய்வோம்

என்று தங்கள் இதய ஏட்டிலே எழுதா மறையாக எழுதிக் கொண்டிருந்ததை அப்படியே படித்துக் காட்டுகிறார்கள்.

இந்த இப்பிறவிக்குத் தானா இவர்கள் உறவுகொள்ள விரும்புகிறார்கள், குற்றேவல் புரிய விரும்புகிறார்கள்?

எற்றைக்கும் ஏழ்ஏழ்
பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம்
உனக்கேநாம் ஆட்செய்வோம்

என்று பிரார்த்தனை செய்து கொள்ளுகிறார்கள்.

‘இந்தக் “காமம்” தவிர வேறு காமங்களை இறைவா! நீ மாற்றி அருள வேணும்’ என்று முடிவாகப் பிரார்த்தித்துக் கொள்கிறார்கள். ‘இதுதான் எங்கள் அந்தரங்க விருப்பம்; பறை என்பதும் நோன்பு என்பதும் வியாஜம்தான்!’ என்கிறார்கள்.

இந்த உத்தேசத்தைத் தெளிவுபடுத்திக் காட்டுவதற்குப் பீடிகையாகத்தான்,

பொற்றா மரைஅடியே
போற்றும் பொருள்கேளாய்
என்கிறார்கள்.

மற்றைப்படி, ‘ஒரு பிரயோஜனம் கொண்டுபோக வந்தோம் அல்லோம்’ என்று சொல்லுகிறார்கள். ‘எல்லா உறவும் நீயே! நீ உகந்தபடியே பணி செய்து கொண்டிருப்போம்’ என்று திருப்பாவையின் தனிப்பெருங் கொள்கையை முடிவாக வெளியிடுகிறார்கள் இப்பாசுரத்திலே.

உற்றோமே ஆவோம்; உனக்கே நாம் ஆட்செய்வோம்

சிற்றஞ் சிறுகாலை வந்துஉன்னைச் சேவித்துஉன்
பொற்றா மரைஅடியே போற்றும் பொருள்கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்திற் பிறந்துநீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமற் போகாது
இற்றைப் பறைகொள்வான் அன்றுகாண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் உன்தன்னோடு
உற்றோமே ஆவோம் உனக்கேநாம் ஆட்செய்வோம்
மற்றைநம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்

விளக்கம்.

‘பறை, பறை’ என்று சொல்லிக்கொண்டு வந்தவர்கள், அந்தப் பறை வியாஜம்தான் என்பதைத் தெளிவாக முடிவுகட்டிப் பேசுகிறார்கள் இப்போது. ‘பறை’ என்று நோன்பு நோற்பதைக் குறிப்பிட்டார்கள். நோன்பிற்கு வேண்டிய பறை முதலியவற்றைக் கண்ணன் தரவேண்டும் என்றார்கள். இப்போது கண்ணன் அன்பே தாங்கள் கருதிய பொருள் என்று உறுதி கூறுகிறார்கள்.அன்பிலே மலரும் பணிதான் தங்களுடைய வேண்டுகோளின் உயிர்நிலை என்கிறார்கள்.

திருப்பாவையின் தனிப்பெரு நோக்கம் இந்த உயிர்நிலைப் பாட்டில் வெளியிடப் படுகிறது.

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க இயலாது


28. நீயே எங்கள் உபாயம்.
          நோன்பிற்கு உரிய உபகரணங்களையும், நோன்பு முடிந்தபின் சம்மானமாக ஆடை ஆபரணங்களையும், பால்-சோறு உண்ணக் கூடி இருப்பதையும் முந்திய இரண்டு பாடல்களிலும் பிரஸ்தாபித்தார்கள் ஆய்ச்சியர்கள். அது கேட்ட கண்ணன், ‘பெண்களே, உங்கள் நிலைமை அறிந்து தருவதே பொருத்தமாகும். என்னிடம் நீங்கள் வேண்டியவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக நீங்கள் மேற்கொண்ட உபாயம் அல்லது சாதனம் ஏதாவது உண்டா?’ என்று ஒரு கேள்வி போடுகிறான். அதற்குப் பதில் சொல்லுகிறது இந்தப் பாட்டு.


          ‘கண்ணா, உன் கண்ணால் எப்போதும் நீயே எங்கள் நிலைமையைப் பார்த்துக்கொள்ளலாமே’ என்கிறார்கள் ஆய்ச்சியர்கள். “கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்” என்பதை ‘நாங்கள் சொல்லியா நீ தெரிந்துகொள்ள வேணும்?’ என்கிறார்கள்.


          ‘அறிவொன்றும் இல்லாதவர்கள் நாங்கள்!’ என்றும் தங்கள் அறியாமையை அறிவித்துக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் ஞானத்தைச் சாதனமாகத் தேடிக்கொள்ளவில்லை என்பது தெளிவு. ‘பசுக்களின் பின்னே போய்த் திரிந்து வயிறு வளர்த்துக்கொண்டிருக்கும் எங்களிடம் நற்கருமமும் இல்லை, விவேக வைராக்கியங்களும் இல்லை’ என்கிறார்கள்.


          பிறகு, ‘உன்தன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம் உடையோம்’ என்கிறார்கள். ஆய்க்குலத்தில் கண்ணன் தோன்றுவதற்குத் தக்க புண்ணியம் உடையவர்கள் தாங்கள் என்றும் சொல்லுகிறார்கள். இப்படிப் பிறந்திருக்கும் கண்ணனை, குறைவுஒன்றும் இல்லாத கோவிந்தா! என்று அழைக்கிறார்கள். இதனால் இவர்கள் இறைவனுடைய குணபூர்த்தியில் ஈடுபடுகிறார்கள் என்பது தெளிவு.


          இப்படிக் கண்ணனுடைய குணங்களில் ஈடுபடுகிறவர்கள் அவனுடைய உறவையும் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். உறவு என்றால், ஆய்க் குலத்தில் கண்ணன் பிறந்திருக்கும் அந்தச் சரீர உறவு அல்ல; ஆத்ம சம்பந்தத்தையே, ஆன்ம உறவையே வற்புறுத்துகிறார்கள்.


          தாங்கள் பிழைகள் செய்திருக்கக் கூடும், அதற்காக அவன் கோபித்துக் கொள்ளவேண்டாம் என்ற கருத்தை உள்ளிட்டு, சீறிஅரு ளாதே என்றும் விண்ணப்பித்துக் கொள்கிறார்கள்.


          கடைசியாகத் தங்கள் நோக்கத்தைக் குறிப்பிடும்போது ‘பறை’ என்றுதான் இப்போதும் மறைமுகமாகவே பேசுகிறார்கள். தங்கள் உள்ளத்தைக் கண்ணன் உய்த்துணர்ந்து கொள்ளும்படி,
இறைவா!நீ தாராய்
    பறையேலோர் எம்பாவாய்
என்றுதான் கூறி முடிக்கிறார்கள்.
          அறிவொன்றும் இல்லாத இவர்கள் குருகுல வாசம் செய்து ஒரு வகை ஞானத்தையும் அடையவில்லையாம். நிழலுக்காகவும் பள்ளியில் ஒதுங்கியதில்லை. கறவைகளின் பின்னேதான் இவர்கள் குருகுல வாசம்! மேய்ச்சல் காடுதான் இவர்கள் பாடசாலை! இப்படியெல்லாம் வாழ்க்கை நடத்தும் எங்களுக்குச் சாதனம் என்ற சம்பத்து ஏது? அந்தச் சம்பத்தைக்கொண்டு நாங்கள் உன் அருளைப் பெற்றுக் கொள்ளவும் விரும்பவில்லை என்கிறார்கள்.


          இவர்கள் பசுபாலனம் செய்கிறார்கள் அல்லவா? அதைத் தர்மமாகச் செய்யவில்லை. ‘வயிற்றுப் பிழைப்பை முன்னிட்டுத்தான் செய்கிறோம்’ என்று ஒப்புக் கொள்கிறார்கள். காட்டிலே முனிவர்களும் இருப்பார்கள். வேடர்களும் இருப்பார்கள். ‘நாங்கள் முனிவர்களுடன் பழகுவதில்லை; வேடர்களுடன்தான் பழகுகிறோம்’ என்பதையும் தைரியமாக ஒப்புக் கொள்கிறார்கள்.


          ‘கானம் சேர்ந்து உண்போம்’ என்று கூறுவதால், குளித்து உண்பதும் இல்லை என்ற குறிப்பையும் புலப்படுத்துகிறார்கள் எனலாம். ‘உண்போம்’ என்று கூறும் தோரணையிலிருந்து, அதிதி பூஜை என்ற முறையில் விருந்தினர்களை உபசரித்து அத்தகைய அற வழியில் நின்றவர்களும் இல்லை இவர்கள் எனலாம்.


          சுருங்கச் சொன்னால், தங்களிடம் கர்மம் ஞானம் பக்தி ஆகியவற்றுள் ஒரு சாதனமும் இல்லை என்று துணிந்து சொல்லுகிறார்கள். எனினும் கண்ணனைப் பெற்றெடுத்த குலத்திற் பிறந்து இவனுடன் ஆன்ம உறவு பெற்ற புண்ணியம் தங்கள் உடைமைதான் என்பதை மறுக்கத் துணியவில்லை. ஸாக்ஷாத் புண்ணியம் கண்ணன்தானே! வெண்ணெயும் பாலும் அன்பும் ஊட்டி அல்லவா இப்’புண்ணிய’த்தை வளர்த்து வருகிறார்கள்?


          இந்தப் ‘புண்ணிய’த்திற்கும் தங்களுக்கும் உள்ள ஆன்ம உறவைக் குறிப்பிடும்போது, உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது என்று அழுத்தம் திருத்தமாகச் சொல்லுகிறார்கள். இந்த உறவை இறைவனாகிய கண்ணனாலும் ஒழிக்க முடியாது என்கிறார்கள்.

உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது!

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாம்உடையோம்
குறைவுஒன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்குஇங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னைச்
சிறுபேர் அழைத்தனவும் சீறிஅரு ளாதே
இறைவாநீ தாராய் பறையேலோர் எம்பாவாய்

விளக்கம்
          இவர்கள் பிரார்த்தித்ததைக் கொடுப்பதற்கு இவர்கள் செய்த உபாயம்தான் என்ன? இப்படி ஒரு கேள்வியைக் கண்ணன் கேட்க, அதற்குப் பதிலாக வருகிறது இந்தப் பாசுரம். உபாயம் ஒன்றுமே நாங்கள் மேற்கொள்ளவில்லை என்றுதான் பதில் சொல்லுகிறார்கள்.


          பசுபாலனம் செய்கிறார்கள் என்பது உண்மைதான்; ஆனால் அது தருமம் என்று அப்படிச் செய்யவில்லையாம். கறவைகளை மேய்த்தால் வயிற்றுக்குச் சோறு கிடைக்கும் என்றுதான் அப்படிச் செய்கிறார்களாம். இப்படிப் பட்டவர்களுக்குக் கர்மானுஷ்டானம் முதலான நியமங்கள் எப்படிச் சித்திக்கும்?

             ‘அறிவொன்றும் இல்லாத இவர்களுக்குக் கிருஷ்ண பக்தி செய்யவேண்டுமென்ற ஒரே அறிவு இருக்கத்தான் செய்கிறது! ‘எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே!’ என்று சொன்ன தாயுமானவரும் தமக்கு ஒரே அறிவு இருந்தால் போதும் என்றுதானே சொல்லுகிறார்?

திங்கள், 11 ஜனவரி, 2010

கூடாரை வெல்லும் கோவிந்தன்


27. சர்க்கரைப் பொங்கல் பாட்டு.
          விரதத்திற்கு உரிய சங்கு பறை முதலியவற்றையும் பல்லாண்டு இசைப்பாரையும் அருளவேண்டும் என்று கேட்ட ஆய்ச்சியரை நோக்கிக் கண்ணன், 'பெண்களே! இவ்வளவுதானா உங்கள் தேவை? தருகிறேன்' என்று சொன்னதாகக் கருதலாம். அதற்குப் பெண்கள் பதில் சொல்வதுபோல், விட்ட இடத்திலிருந்து தொடர்ந்து மேலும் தங்களுக்கு வேண்டியவற்றைக் குறிப்பிடுகிறார்கள்.


          'எம்பெருமானே! மார்கழி நீராட்டத்தை ஒட்டி நோன்பு நோற்கத் தேவையான சாதனங்களை ஏற்கனவே குறிப்பிட்டோம். நோன்பு நோற்று முடிந்த பின் நாங்கள்  உன்னிடத்தில் பெறவேண்டிய சம்மானங்களும் உண்டு. அவற்றையும் நாங்கள் பெற்று மகிழும்படி அருள் புரிய வேணும்' என்கிறார்கள் இந்தப் பாசுரத்திலே.


          சம்மானத்தை வேண்டிக் கொள்ளும்போது, 'கூடாரை வெல்லும் சீர்க் கோவிந்தா!' என்று கூப்பிடுகிறார்கள் கண்ணபிரானை. அடிபணியாதவர்களை – பகைவர்களை – வெல்லும் சிறப்பை உடையவன் கண்ணன் என்பது பொருள். கூடாதவர்களை (பகைவர்களை) வெல்லுகிறவன், கூடும் அவர்களுக்கு – அன்பர்களுக்கு – தோற்று நிற்கிறான் என்பது குறிப்பு.


          தங்களுடைய அன்பையே, ஆசையையே, பேசி வந்தவர்கள் கண்ணனுக்குத் தங்கள் மீதுள்ள ஆசை தங்கள் ஆசையைக் காட்டிலும் எவ்வளவோ பெரிது என்று கண்டுபிடித்தார்கள் அல்லவா? அப்படியே இப்போதும் ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். 'கண்ணனுடைய கலியாண குணங்களுக்கு நாங்கள் தோற்றோம், தோற்றோம்!' என்று இதுவரை நம்பியிருந்தார்கள்; சொல்லிவந்தார்கள். இப்போது 'கண்ணன் தோல்வி' என்ற ஒரு புதுமையைக் கண்டுபிடிக்கிறார்கள். அன்பர்கள் விஷயத்தில்  கண்ணனுக்குத் தோல்வியே வெற்றி! – என்கிறார்கள். சிறுமியர்களாகிய தங்களுடைய மழலைச் சொற்களுக்குத் தோற்றுப் பறை முதலியவற்றையும் இவர்கள் வேண்டினபடியே தந்தருள இசைந்துவிட்டானல்லவா?


          கூடாரை (எதிரிகளை) சக்தியாலே வெல்லும் பெருமான் சௌந்தர்யத்தாலே – ரூப சௌந்தர்யத்தாலும் குண சௌந்தர்யத்தாலும் – கூடும் அன்பர்களை வெல்லுகிறான் என்பது உண்மைதான். எனினும், அம்புக்குத் தோற்காத பெருமாள் அன்பிற்குத் தோற்கிறானாம். இந்தத் 'தோல்வி'யைப் புலப்படுத்தி இறைவனது சீலத்தையும் எளிமையையும் வெளியிடுவது 'கோவிந்தன்' என்னும் பெயர்.


          இவர்கள் சம்மானம் கேட்கிறார்கள். இப்போது யாசகம் கேட்பது போல் கேட்கவில்லை. தோற்றவனிடம் வென்றவன் கப்பம் கேட்பது போலச் சம்மானம் கேட்கிறார்கள். 'யாம் பெறு சம்மானம்' என்று கம்பீரமாய்க் கூறுவதைக் கேளுங்கள்.


          'நாடு புகழும்படி நாங்கள் சம்மானம் பெறவேண்டும்' என்கிறார்கள். அணிமணிகள் துறந்து, கண் மை துறக்கக் கூந்தல் மலர் மறக்க, நோன்பு நோற்றார்கள் அல்லவா? 'நோன்பு முடிந்தபின் அணிமணிகளை யெல்லாம் நாங்கள் பெற்றுக் கொள்வோம்' என்கிறார்கள். 'அனைவரும் கொண்டாடும்படி நீ எங்களுக்கு அவற்றையெல்லாம் சம்மானிக்க வேணும்' என்கிறார்கள்.


          நகைகளின் பெயர்களை இவர்கள் 'பட்டியல்' செய்து பேசுவதே எவ்வளவு அழகாய் இருக்கிறது!
          சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
          பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்
என்ற ஓசையின்பத்திலேயே இவர்களுடைய மகிழ்ச்சி இனிது புலனாகிறது.
          இந்த நகைகளையும் வேறு நகைகளையும் கண்ணன் சம்மானித்தால் போதாது என்கிறார்கள். தலைவனும் இஷ்ட தெய்வமுமாகிய அவன் தன் கையால் தங்களுக்கு அணிய, தாங்கள் அணிந்து மகிழ வேணும் என்று ஆசைப்படுகிறார்கள். அப்படியே ஆடை உடுப்போம் என்கிறார்கள்.


          சம்மானங்களில் எல்லாவற்றுக்கும் மேலாகச் சர்க்கரைப் பொங்கலை எவ்வளவு ரசமாய்க் குறிப்பிடுகிறார்கள் பாருங்கள்! 'அதன் பின்னே பால் சோறு மூட நெய் பெய்து முழங்கை வழிவார' வழங்கவேணும் என்கிறார்கள். 'நெய்யுண்ணோம், பாலுண்ணோம்' என்று விரதம் கிடந்தவர்கள் இப்போது ஆசை தீரச் சர்க்கரைப் பொங்கல் சாப்பிட வேணும் என்கிறார்கள்.


          கூடியிருந்து சாப்பிட வேணும் என்கிறார்கள். கண்ணனும் தாங்களுமாகக் கூடியிருந்து சாப்பிட வேணுமாம். பசிதீரச் சாப்பிடவேணும் என்று சொல்லவில்லை; ஆசைதீரச் சாப்பிட வேணும் என்று சொல்லுகிறார்கள். ஆம்; கண்ணனைப் பிரிந்து இருந்ததால் அதிகரித்திருந்த ஆசைதீர உண்ணவேணுமாம்.


          உண்பதுகூட முக்கியமில்லை. எல்லாரும் கூடிக் களிப்பதுதான் இந்த விருந்தில் முக்கியமான அம்சம் என்பதை வற்புறுத்தி, 'கூடியிருந்து குளிர்ந்து' என்கிறார்கள்.


          'முழங்கை வழிவார' என்று சொல்லிப் பிறகு உண்பதைச் சொல்லாமல் 'கூடியிருந்து குளிர்ந்து' என்று முடிக்கிறார்கள். கண்ணனைக் கண்குளிரக் கண்டதுமே பசி தீர்ந்ததால் உண்ண வேண்டிய தேவைகூட இல்லை!

உண்ணவும் மறந்தனரோ!

கூடாரை வெல்லும்சீர்க் கோவிந்தா! உன்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறு சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றுஅனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய்பெய்து முழங்கை வழிவார
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

விளக்கம்
          'நீங்கள் நோன்பிற்கு வேண்டியதைக் கேட்கிறீர்கள்;தருவோம்; நோற்ற பின்பு பெறும் பேறு யாது?' என்று கண்ணன் கேட்கிறானாம். அந்தக் கேள்விக்கு இவர்கள் சொல்லும் பதில் இந்தப் பாசுரம்.

             நெய்யுண்ணாமலும், மலரிட்டு முடித்துக் கொள்ளாமலும், அணிகளால் அலங்காரம் செய்து கொள்ளாமலும், கண்ணுக்கு மைதீட்டிக் கொள்ளாமலும் இருந்து நோன்பு நோற்றார்கள். விடியும் முன்பே எழுந்திருந்து பனி தலையில் வீழத் தெருவெல்லாம் நடந்து ஒருவரையொருவர் எழுப்பினார்கள். கண்ணனையும் துயில் எழுப்பினார்கள். பனி நீராடி விரதம் கொண்டாடத் துணிந்தார்கள். அத்தகைய வருத்தங்கள் எல்லாம் தீரத் தாங்கள் பெறும் சம்மானம் கண்ணனும் நப்பின்னைப் பிராட்டியும் அலங்கரிக்க, ஆடை ஆபரணங்களால் அலங்காரம் செய்து கொள்வதும், அவர்கள் உண்பிக்க உடன் இருந்து உண்பதுமே ஆகும் என்கிறார்கள். 'கூட இருந்து குளிர்ந்து' என்பதுதான் சம்மானத்தின் முக்கிய அம்சம்.