சனி, 21 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்

काणाद भंजनः

கணாதரென்னுமொருவராலே சொல்லப்பட்டது காணாதம், அதை பஞ்ஜநம் பண்ணினவர். அம்மதமாவது; பரமாணுக்கள் உபாதாநகாரணம், ஈச்வரன் நிமித்தகாரணம். அவனுமநுமாநஸித்தன். ஆகாசம் ஆத்மாக்கள், இதுகள் விபுக்கள் முன்னில்லாத த்ரவ்யமே உண்டாகிறது. மோட்சமென்பது பாஷாண கல்பம் என்று சொல்லுகை. அதை நிரவஸித்தபடி. அஸத்திரவ்யமுண்டாகாது. அப்படி சுருதி சொல்லவில்லை. ஈச்வரஸத்தைக்கு அநுமாநம் ப்ரமாண மாகாது; இதுகளெல்லாம் வேதம் முதலான ப்ரமாணவிருத்தமாகையால் உபயோமமற்றவை யென்று நிராகரித்தவரென்றபடி. இவ்வர்த்தத்தை "असद्दृष्टि '' என்று அருளிச் செய்தாரிறே.

अचिच्चैतन्यवादघ्नः

ப்ருதிவீ முதலான அசித்துக்களுக்கு ஒன்றோடொன்று சேர்க்கையினாலே அவைத்துக்கு கிண்வாதிகளுடைய மதசக்திபோல் சைதந்யமுண்டாகிறது. கிண்வமென்பது பாக்கு- வெற்றிலை சுண்ணாம்பு இம்மூன்றின் சேர்க்கை, இவை தனித்தனியே மதகரமல்லாதபோனாலும் சேர்க்கையால் அவை களுக்கு மதகரத்வமுண்டாகிறதென்பர்கள். ஜகத்துஸ்வபாவமாக விசித்திர மாயிருக்கும். இச்சரீரநாசந்தான் மோட்சம். அல்லது ஸ்திரீ ஸம்போகமே மோட்சம் என்று சொல்லுவர் சார்வாகர் அதை நிரஸித்தவர். எங்கனே யென்னில்:-- ப்ரக்ருதி முதலான ஸமுதாயத்தில் சைதந்யம் பிறக்கு மாகில் அவயவங்கள் தோறும் சைதந்யம் பரவவேணும். ஜகத்து சந்தரகம்போல் (அதாவது மயிற்தோகை போல், விசித்திரமென்றாலும் அது ஸ்வபாவமன்று. ரஸம் முதலானதுகளை சந்தரகத்திற் தடவுவதால் அப்படி விசித்திரமாகத் தோற்றுகிறது. சரீர நாசமே மோட்சமென்றால் அது அற்பமாயும் நிலை நில்லாததாயும் துக்கத்தை முதலிலும் நடுவிலும் முடிவிலுமுடைய தாகையாலும் நிகரில்லாத ஆனந்தமாகிற மோட்சமாகாது. இப்படிகளால் சார்வாக மதத்தைக் கண்டித்தவரென்றதாயிற்று.

क्षणिकाणुमतार्दनः

ஒன்றோடொன்று கூடினவும் கணப்பொழுதிருப்பவனுமான அணுக்களே ஜகத்து என்று சொல்லுகிற வைபாஷிகனென்ன, ஸௌத்ராந்திகனென்ன இவர்களுடைய மதத்தைக் கண்டித்தவர். அஃதெப்படியெனில், க்ஷணிகமாகில் ஒன்றோடொன்று கூடமாட்டாது. ஒரு வஸ்துவைக் கண்ணாற்பார்ப்பது என்று நினைப்பதற்குள்ளவே பார்ப்பவனும் கண் முதலியவைகளும் நாசமடைகிற படியால் காண்பதே ஸத்யமென்கிறது கூடாமையால் வைபாஷிக மதம் சரியன்று. இப்படி, அணுக்கூட்டமும் க்ஷணிகமாதலால் அறியக்கூடியதென்கிற அனுமாநம் சொல்லுகிற ஸௌத்ராந்திகனும் பரிஹாஸத்துக்குள்ளாகிறான். இப்படிகளால் கண்டித்தவரென்றதாயிற்று.

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்

निरस्तसांख्यः

                  ஸாங்கியமதத்தை நிராகரித்தவர். ஸாங்க்யமென்பது கபிலமதம். அஃதெப்படியென்னில் , பிரகிருதியென்றும் புருஷனென்றும் இரண்டு தத்வ மேயுளது. பிரகிருதியாவது அறிவில்லாததாய், பிறர்க்கே உபயோகமுள்ளதாய், அறியக்கூடியதாயிருக்கும். புருஷன் பிரகிருதிக்கு நியமனம் பண்ணுமவன், அனுபவிக்குமவன், பார்த்துக்கொண்டு இருக்குமவன், எப்பொழுதும் மாறுத லில்லாதவன், ஞானத்தையே ஸ்வரூபமாகவுடையவன். இப்படிக்கொத்த பிரகிருதிக்கும், புருஷனுக்கும் கூட்டுறவினால் ஒன்றுக்கொன்று பிரம முண்டாகிறது. அதனால் ஸ்ருஷ்டி முதலானதுகள் உண்டாகிறது. இப்படியவன் மதம். அதில் கண்டனமென்னென்னால் புருஷன் ஞானமாத்திர ஸ்வரூப னாகில் போக்தாவாகக் கூடாது. அசேதநையான பிரகிருதிக்கு மோக்ஷ ஸாதன அனுஷ்டானம் கூடாது. நிர்குணனான புருஷனுக்கும், அசேதநையான பிரகிருதிக்கும் ஒன்றுக்கொன்று ப்ரமமுண்டாகக் கூடாது. ஆகையால் இம்மதம் கண்டிக்கப்பட்டது. இதன் விரிவுகளை ஸர்வார்த்தஸித்தி ஸங்கல்ப ஸூர்யோதயம் முதலானதுகளில் பரக்கக் கண்டுகொள்வது

प्रत्युक्तयोगः 

योगः யோகாசார மதமென்றபடி. அதில் பிரகிருதியே உபாதாந காரணம். ஈச்வரன் நிமித்த காரணன். இவ்வீச்வரத்வம் ப்ரதிபிம்பதுல்யம் என்று சொல்லப்படுகின்றது. அதைக் கண்டித்தவர். எங்கனேயென்னில், நானே  பஹுவாக ஆகிறேன் என்று ஈச்வரன் சொன்னமையினால் பிரகிருதி உபாதான காரணமாகாது. மூன்று காரணமுமீச்வரனே. இம்மதத்தைச் சொன்ன ஹிரண்யகர்ப்ப னும் கர்மவச்யனாகையாலே ப்ரமிக்கக்கூடும். அவன் சொன்ன புராணம்போல யோக ஸ்மிருதியும் ப்ரமமூலம். இது முதலானதுகளாலே கண்டித்தவர் என்றபடி.

புதன், 18 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ரம்

श्रुतविद्यः

ஶ்ருதவித்ய: இருபது வயதுக்குள்ளே அப்புள்ளாரிடத்திலே நாநாவிதமான வித்யைகளையும் அப்யஸித்தவர்.

श्रावयिताः

ஶ்ராவயிதா: முப்பதுமுறை ஸ்ரீபாஷ்யம் முதலான கிரந்தங் களை ஸச்சிஷ்யர்களுக்கு உபதேசித்தவர். இவ்விஷயங் களை 'ஸங்கல்ப ஸூர்யோதயத்தில்'  विंशत्यब्दे (விம்ஶத் யப்₃தே₃) என்று தாமேயருளிச் செய்தாரிறே.

श्रुतवालः


ஶ்ருதவால: "ஶ்ருத" என்று ச்ருதப்ரகாசிகா கிரந்தத்தைச் சொன்னபடி. அதை ஸங்கடகாலத்தில் காவேரி மணலில் கோபநம் பண்ணி பாலநம் பண்ணினவர். "ச்ருப்ரகாசிகா பூமௌ யேநாதௌ பரிரக்ஷிதா" என்று நைனாராசாரியர் அருளிச் செய்தார். 

श्रुतप्रदः 

ஶ்ருதப்ரத: "ஶ்ருத" என்று ச்ருதப்ரகாசிகா, ச்ருதப்ரதீபிகா முதலான கிரந்தங்களைச் சொல்லி அதுகளை ஸச்சிஷ்யர் களுக்கு அருளிச் செய்தவர்.

श्रितः

ஶ்ரித: ரஹஸ்யம் முதலான வர்த்தங்களுக்காக ஸச்சிஷ்யர் களால் ஆச்ரயிக்கப்பட்டவர்.

पाण्डित्यदाता

பாண்டித்யதாதா --  பாண்டித்தியமாவது ஆசார்ய பகவத் பக்திகளாலேயே அடையக்கூடியதாய் பரப்ரம்ம விஷயக மான ஞானவிசேஷம். அதை ஆச்ரிதர்களுக்கு உண்டாக்கு மவர்.

कृतकृत्यः 

க்ருதக்ருத்ய: செய்யவேண்டிய கார்யத்தைச் செய்து முடித்தவர். அதாவது முன்சொன்ன பாண்டித்யம் முதலான துகளை அக்காலத்திலுள்ளவர்களுக்கு மாத்திரமன்றிக்கே பின்னானார்க்குமுதவும்படி ஸ்ரீரஹஸ்யத்ரயஸாரம்முதலான அனேகம் கிரந்தங்களை அருளிச் செய்தவரென்றபடி. 

कृती

க்ருதீ -- அதனால் வேறு செய்யவேண்டிய காரியமில்லாமை யால் செய்து முடித்தவர், அல்லது உபகாரம் செய்யும் ஸ்வபாவமுடையவர் என்றபடி. 
सुधी
ஸுதீ: சோபகையான புத்தியையுடையவர். அதாவது ப்ருஹஸ்பதி முதலானவர்களாலேயும் கலக்கவொண்ணாத தும், பரபக்ஷங்களை நிரஸிக்குமதான புத்திவிசேஷமுடைய வர் என்றபடி.

இனிவரும் 13 திருநாமங்களால் பரமத நிரஸனம் சொல்லப்படவிருக்கிறது.


செவ்வாய், 17 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ர சதம் தேவதா பாரமார்த்ய வித் (22)

இந்த 22வது திருநாமமான தேவதாபாரமார்த்யவித் என்பதற்கு தமிழிலும் சம்ஸ்க்ருதத்திலும் மிக நீளமான வ்யாக்யானம் அமைந்திருக்கிறது. வ்யாக்யானம் மீண்டும் மீண்டும் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் சற்று கடினமாக உள்ளது.

22. தேவதாபாரமார்த்ய வித்

 ( देवतापारमार्थ्यवित्) देवता – தேவதையினுடைய, पारमार्थ्य   = உண்மையை, वित् == அறிந்தவர். பரதேவதை    ஸ்ரீமந்நாராயணனென்கிற உண்மையையறிந்தவ ரென்றபடி. ஸ்ரீமந்நாராயணன் தான் பரதேவதையென்று சொல்வது கூடுமோ,  சிவனன்றோ பரதேவதையென்று ஓதப்படுகிறது. எங்ஙனே யென்னில்; காரணவாக்கியங்களில் ஜகத்காரணமாகச் சொல்லப்பட்ட "ஸத் ப்ரம்மம்' இது முதலான சப்தங்கள் ஸாமாந்ய சப்தங்களாகையால் ஒரு விசேஷத்தில் பர்யவஸாநம் பண்ணவேணும், இப்படியானால் ஜகத்காரண மான வஸ்து த்ரிமூர்த்திகளிலொருவராயிருக்கவேணுமேயொழிய வேறு  ஒருவருக்குங் கூடாதாகையால் ஜகத்காரணமாகச் சொல்லுகிற 'ஸத், ப்ரம்மம்” இதுமுதலான ஸாமாந்யசப்தங்கள் த்ரிமூர்த்திகளிலொருவரையே விசேஷித்துச் சொல்லுகின்றனவென்று சொல்லவேண்டுமாகையால் த்ரிமூர்த்திகளில் எவரென்று விசாரித்தால் த்ரிமூர்த்திகளிலொருவனான சிவனையே ஜகத்காரணமாகச் சொல்லுகிற அச்சப்தங்கள் கூறுகின்றன வென்று சொல்லவேணும்; எப்படியெனில் ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஜகத்காரணமென்றும், எல்லாவற்றிற்கும் மேலானவரென்றும், மோட்சத்தைக் கொடுப்பவனென்றும் சிவனையே விசேஷித்துச் சொல்லுகிறது, ஆகையால் ஜகத்காரணமான வஸ்துவைச்சொல்லுகிற அச்சப்தங்கள் சிவனையே சொல்லுகிறது. ஆனதினால் பரதேவதை சிவனென்றதாயிற்று. அவ்வுபநிஷத் தில் சிவனுக்கு ஜகத்காரணத்வம் முதலியவைகள் சொல்லி யிருக்கிறதோ வென்னில்; அவ்வுபநிஷத்தில் புருஷ ஸூக்தத்தில் சொல்வதுபோல் ஸகல குண விசிஷ்டனான பரமபுருஷனைச்சொல்லி, பின்பு அவனுக்கு மேலான வொரு வஸ்துவுண்டென்றும், அது தான் மோட்சத்தைக் கொடுக்குமென்றுஞ் சொல்லி, அவ்வஸ்து யாரென்றால் “सर्वगतश्शिवः” என்று விசேஷித்து சிவனையே சொல்லுகிறபடியால் அவ்வுபநிஷத்தில் ஜகத்காரணமென்றும் பாமபுருஷ னுக்கும் மேலானவரென்றும் மோட்சத்தைக் கொடுப்பவனென்றும் சிவனையே சொல்லுகிறதென்று விளங்குகிறது. பின்னும் சாந்தோக்கியோப நிஷத்து. தைத்தரீயோபநிஷத்து முதலிய உபநிஷத்துக்களிலும் சிவனை பரமபுருஷனுக்கு மேலானவரென்று ஓதப்படுகிறது. எங்கனேயெனில்; சாந்தோக்கியத்தில் தஹாவித்யையில் ஹ்ருதயத்துக்குள்ளிருப்பவனான பரமபுருஷனை ஆகாசசப்தத்தினால் சொல்லி, அப்பரமபுருஷனுக்குள்ளிருப் பவன் முமுக்ஷுக்களினால் உபாஸ்யனென்று சொல்லுகையாலும், தைத்தரீ யத்தில் தஹரவித்யையில் சாந்தோக்கியத்தில் போலவே சொல்லி; முமுக்ஷு களினால் உபாஸ்யனானவன் "महेश्वरः '' என்று சிவனுக்கு அஸாதாரணமான பெயரினால் சிவனை விசேஷிக்கிறதினாலும், ப்ருஹதாரண்யகோபநிஷத் தில் ஆகாசசப்தவாச்சியனான பரமபுருஷனிடத்தில் சயனித்துக் கொண்டிருக்கிறான் சிவன் என்கையாலும், அதர்வசிகையில் சிவன் “ஆகாச மத்யத்தில் த்யாநம் பண்ண வேண்டுமவன் ' என்று சொல்லியிருக்கையாலும் பரமபுருஷனுக்குள்ளிருப்பவனென்று சொல்லியிருக்கையால் அவனுக்கு அந்தர்யாமியாயிருக்குமவன் சிவனென்றே ஆகிறது. மேலும் அதர்வ சிரஸ்ஸில் தேவர்கள் ஸ்வர்க்க லோகம் போய் உருத்திரனைப் பார்த்து நீர் யாரென்று கேட்க, அவரும் நான் தான் முன்னுமிருக்தேன், இப்பவு மிருக்கிறேன், இனிமேலுமிருக்கப் போகிறேன், எனக்கு மேலான தில்லை'' என்று உருத்திரனே தன் ஐச்வரியத்தைக் கூறினான் பின்பு தேவதைகள் உருத்திரனை த்யாநம் பண்ணினார்களென்றும் ஸ்துதி செய்தார்களென்றும் சொல்லி, பின்பு " அவனே உருத்திரன், அவனே ஈசாநன், அவனே மஹேச் வரன், அவனே மஹாதேவன்'' என்று சிவநாமங்களைச் சொல்லி பின்பு ''பஸ்மத்தையெடுத்து உடம்பைத் துடைத்து அங்கங்களைத்தொட வேண்டி யது ' என்று அவனுடைய உபாஸந ப்ரகாரத்தைச் சொல்லியிருக்கையால் பசுபதியே மேலானவரென்றதாயிற்று,  ஆகையால் பரதேவதை நாராயண னென்று சொல்வதெப்படியென்னில் ; ஸ்ரீமந்நாராயணன் தான் எல்லாவற் றிற்கும் மேலானவர், அவர் தான் பர தேவதையென்று சொல்வது கூடும். எப்படியெனில்; காரணவாக்கியங்களில் ஜகத்காரணமாகச் சொல்லப் பட்ட ''ஸத், ப்ரம்மம்' இது முதலான சப்தங்களையும் உபாஸனாவாக்கியங்களில் த்யானம் செய்யவேண்டியதாகச் சொல்லப்படுகிற "சம்பு, ஹிரண்யகர்ப்பன், சிவன்,” இது முதலான சப்தங்களையும், ஸாமாந்நியசப்தங்களாகையால் ஒரு விசேஷத்தில் பர்யவஸாநம் பண்ணவேண்டும், அவ்விசேஷம் எதென்று விசாரித்தால், " ஸ்ருஷ்டிக்கு முன்பு பிரமனில்லை, சிவனில்லை , பூமியில்லை, ஆகாசமில்லை, நாராயணன் ஒருவன் தானிருந்தான்'' என்று சொல்லுகிற சுருதிகளால் பிரமன் சிவன் இவ்விருவருக்கும் காரணமாகச் சொல்லப்படுகிற நாராயணனையே காரணவாக்கியங்களில் சொல்லப்பட்ட அச்சப்தங்கள் விசேஷித்து சொல்லுகின்றனவென்று சொல்லவேண்டுமாகை யால் நாராயணனே பரதேவதை யென்றதாயிற்று. காரணவாக்கியங்களில் ஜகத்காரணமாகச் சொல்லப்பட்ட 'ஸத்'' இது முதலான சப்தங்கள் ச்வேதாச் வதரோபநிஷத்தில் ஜகத்காரணமாகச் சொல்லப்பட்ட சிவனையன்றோ சொல்லுகிறதுகளென்று சொன்னோமேயென்ன. அவ்வுபநிஷத்தில் சிவனுக்கு ஜகத்காரணத்வம் சொன்னாலன்றோ ஸர்வகாரணவாக்கியங் களாலும் சிவனுக்கு காரணத்வம் சொல்லலாம், அவ்வுபநிஷத்தில் நாராயணனுக்கன்றோ ஜகத்காரணத்வம் உபாஸ்யத்வம் முதலியவைகள் சொல்லுகிறது. அவ்வுபநிஷத்தில் முதலில் நாராயணனை ப்ரதிபாதித்து அவருக்கு மேலானவர் ஒருவருண்டென்றும், அவர் சிவனென்றும் விசேஷித்துச்சொல்லியிருக்கிறதென்று சொன்னோமேயென்ன; அவ்வுப நிஷத்தில் ஆரம்பம் முதல் முடியும் வரையில் நாராயணனை ப்ரதிபாதிக்கிற தொழிய வேறொருவரையும்ப்ரதிபாதிக்கவில்லை. எப்படியெனில்; அவ்வுப நிஷத்தில் “நான் அறிகிறேன் பெரியவனான புருஷனை'' என்று துடங்கி பரமபுருஷனென்றும், ஸூர்யகாந்திபோன்ற காந்தியுடையவனென்றும், ப்ரக்ருதி மண்டலத்துக்கு அப்புறத்திலிருக்கிறானென்றும், “ அவனை இந்த ப்ரகாரம் அறிகிறவன் முக்தனாகிறானென்றும், அவனொழிய வேறொரு உபாயம் மோட்சத்துக்குக் கிடையாது என்றுஞ்சொல்லினதை உபபாதித்துக் காட்டுகிறதற்காக  யாதொருவனைக்காட்டிலும் வேறு உயர்ந்த வஸ்து ஒன்று மில்லையோ '' என்று அவனுக்கு உயர்ந்தவனும், ஸமமானவனுமில்லை யாதலால் அவனே ஸர்வேச்வரரென்றும் வேறொருவருக்குமிப்படிப்பட்ட ஸர்வைச்வர்யம் கிடையாதென்றுஞ்சொல்லி "ततोयदुत्तरतरं' என்று சொல்லி யிருக்கிறது. இவ்விடத்தில் பூர்வபக்ஷிகள் “தத:” கீழச்சொன்ன பரம புருஷனைக் காட்டிலும் “उत्तरतरं” உயர்ந்தது. என்று பரமபுருஷனைக் காட்டிலும் மேல்பட்ட வஸ்துவை த்யானம் பண்ணினால் மோட்சமுண்டென் றும் அவ்வஸ்து  सर्वगतश्शिवः என்று முடிவில் சிவனென்று சொல்லுகையால் இச்சுருதி சிவபரமென்று சொல்லுகிறார்கள். அப்படிச் சொல்வது உசித மன்று. ஏனெனில் ; முதலில் புருஷ ஸூக்தத்தில் சொல்லப்பட்ட குணங் களோடு கூடியவனையே இவ்விடத்திலுஞ்சொல்லி அவனை உபாஸித்தால் தான் மோட்சமென்றும் அவனைக்காட்டிலும் மேலான வஸ்து வொன்று மில்லையென்றும் சொல்லியிருக்கிறது. பிறகு  "ततोयदुत्तरतरं''' என்று  அவனைக்காட்டிலும் வேறுவஸ்துவுள்ளதென்று சொல்வது கீழ்ச்சொன்ன திற்கு விருத்தமாகும். ஆகையால் இச்சுருதிக்கு " தத:”  அப்படிப்பட்ட ஸர்வைச்வர்யமுடையவனாகையாலே, उत्तरतरं எல்லாவற்றிற்கும் மேல்பட்ட வன்'' என்று அர்த்தம் சொல்வதே உசிதமாகும். ஆகையால் இந்த சுருதி வாக்கியம் பரமபுருஷனுக்கே ஸர்வேச்ரத்வத்தை நிகமனம் பண்ணுகிறது. இவ்விடத்தில் “ஶிவம் ‘' என்கிறது மங்களங்களான குணங்களோடு கூடியவ னாயும், முதலில் மோட்சத்தைக் கொடுப்பவனாகச் சொல்லப்பட்டவனான நாராயணனையே சொல்லுகிறது. பின்னையும், ஸத்வகுணத்தை ப்ரவர்த் தனம் பண்ணுகிறவனென்றும், சஹஸ்ர சிரஸ்ஸையுடையவனென்றும் புருஷ ஸூக்தத்தில் சொன்ன ப்ரகாரமாக இவ்விடத்திலுஞ் சொல்லியிருக்கை யாலும் அப்புருஷஸுக்தம் நாராயண பரமாகையால் இச்சுருதியும் நாராயணபரந்தான்.  புருஷஸுக்தமும் சிவனை ப்ரதிபாதிக்கிறதென்ன வொண்ணாது; ஆதர்வணத்தில் வைஷ்ணவ கர்மாவில் புருஷ ஸுக்தத்தை விதித்திருக்கையாலும், இலக்ஷ்மீபதித்வஞ் சொல்லியிருக்கையாலும், கல்ப ஸூத்திரகாரருடைய வாக்கியத்தாலும், "புருஷனான ஹரியினுடைய ஸூக்தம்' என்கிற ஸ்மிருதியாலும் புருஷ ஸூக்தம்  நாராயணபரமென்று ஸித்தமாகிறது. சாந்தோக்கியத்தில் தஹர வித்யையில் ஆகாசசப்தத்தினால் பரமபுருஷனைச்சொல்லி, அவனிடத்திலிருக்கிறதான அபஹதபாப்மத்வம் முதலிய எட்டுகுணங்களையுஞ்சொல்லி இக்குண விசிஷ்டனான பரம புருஷனை தியானஞ்செய்யவேண்டுமென்று சொல்லுகிறதேயொழிய பரம புருஷனைக்காட்டிலும் மேல்பட்டவனொருவனிருக்கிறாளென்றும், அவனை த்யானம்பண்ணவேண்டுமென்றும் சொல்லவில்லை. தைத்தரீயத்தில் தஹர வித்யையிலும் குண விசிஷ்டனான நாராயணனையே உபாஸநம் பண்ண வேண்டும், அவனே பரமைசுவரியத்தோடு கூடினவனென்றும் சொல்லுகிறது. அதர்வசிகையிலும் சம்புவென்று எல்லாவற்றிற்கும் க்ஷேமத்தைச் செய்பவ னான நாராயணனைபே சொல்லுகிறது. அதர்வசிரஸ்ஸிலிலும் நாராய ணனையே சொல்லுகிறது. எப்படியெனில் ; தேவதைகள் ஸ்வர்க்கலோகம் போய் தபஸ்வியான உருத்திரனை “நீ யார்” என்று கேட்க உருத்திரன் தான் பகவானுக்கு விட்டுப்பிரியாதவன் என்கிற புத்தியினாலே தன்னைச் சொல்லுகிற சப்தங்கள் பரமாத்மாவைச்சொல்லுகிறதுகளென்று நிச்சயித்து ,  தனக்குச் சொன்னவைகள் எல்லாம் பரமாத்மாவினிடத்தில் பர்யவஸிக்கு மென்கிற புத்தியினாலே ஸ்ருஷ்டிக்கு முன்பு நான் தானிருந்தேனென்றும், மூன்று காலத்திலும் நான் தானிருக்கிறேனென்றும் சொல்லுகிற வார்த்தை உருத்திர சரீரியான பரமாத்மாவையே சொல்லுகிறது ஈசாநநெனென்றும் மஹாதேவனென்றும், மஹேச்வரனென்றும், உருத்திரனென்றும் சொல்லு கிறதுகளெல்லாம் கார்யனாயும், கர்மவச்யனாயுமிருக்கிற சிவனைச் சொல்லுகிறதில்லை. நாராயணனையே சொல்லுகிறது. இவ்விடத்தில் ''நான்'' என்று சொன்ன சிவவாக்கியங்கள் ': अहंमनुरभं '' என்று சொன்ன வாமதேவர் ப்ரஹ்லாதர் முதலானவர்களைப்போலே விசேஷ்யமான பரமாத்மாவான  நாராயணனையே சொல்லுகின்றன. பஸ்மோத் தூளநம் சொன்னதும் உருத்திரனைச் சரீரமாகவுடைய பரமாத்மோபாஸநவிஷயம். ஆகையால் ஸர்வகாரணவாக்கியங்களும் உபாஸநவாக்கியங்களும் நாராயணாநு வாகத்தையடியொற்றி நாராயண பரங்களாகவே ஆகிறது. இவ்வர்த்தங் களை பரதேவதையின் உண்மையையறிந்தவர்களான பராசர சுகசளநகர் முதலானவர்கள் நன்றாகச் சொன்னார்கள். இலக்ஷ்மீபதியாய், ஞானஸ்வரூபமாய், ஆனந்தஸ்வரூபமாய், ஜகத்காரணமாய், ப்ராப்யமாய் உபாஸ்யனாயிருக்கிற பரமாத்மா ஸ்ரீமந்நாராயணனே. அவனை யொழிந்தமை  அவர தத்வம். சிவனும் அவனுக்கு கார்யபூதனென்றும், கர்ம வச்யனென்றும், அவனுக்கு சரீரபூதனென்றும், அவனையாச்ரயித்த வனென்றும், பகவச் சேஷபூதனென்றும், அவன் கொடுத்த ஞானம் முதலானதுகளைக்கொண்டு அவனுக்கு ஏவல் தேவை செய்கிறானென்றும் சுருதி ஸ்மிருதிகளில் பாவத்தையறிந்தவர்கள் ப்ரதிபாதித்தார்கள். இவ்விடத்தில் தத்வஸாரம் பரதேவதாபாரமார்த்யாதிகாரம், வேதாந்த கௌஸ்துபம் முதலான கிரந்தங்களை யநுஸந்திப்பது .

திங்கள், 16 டிசம்பர், 2019

ஸ்ரீதேசிக அஷ்டோத்ர சதம்

{மன்னிக்க வேண்டுகிறேன். என்னுடைய கவனக்குறைவால் தார்க்ஷ்ய தத்தஹர என்ற திருநாமத்துக்கு அடுத்து வரவேண்டிய இரு திருநாமங்கள் விடுபட்டுள்ளன. அதைச் சுட்டிக்காட்டிய அன்பருக்கு நன்றி.}

शुद्धः

प्रयोजनान्तर परत्वादि दोषाभावात् शुद्धः हयग्रीवाराधन योग्यतापादकसत्व शुद्धियोगाद्वा

சுத்த: ப்ரயோஜனாந்தராபேக்ஷை முதலான தோஷமில்லாமையினாலே பரிசுத்தர். ஹயக்ரீவனை உபாஸிக்கும்படியான சுத்தியை உடையவரென்றுமாம்.

प्रसादित हयाननः

विशुद्ध विज्ञान स्वरूपो विज्ञानदानबद्धदीक्षः दयानिधिस्सर्व लोक शरण्ये हयाननः प्रसादितोये नसः प्रसादित हयाननः हयग्रीव प्रसादा देवतत्वज्ञानावाप्तिरित्युक्तं हयग्रीव सुत्तौ, “अकंपनीयान्यवनीति भेदैरलंकृषीरन् हृदयंमदीयं | ङ्काकळङ्कापगमोज्वलानि तत्वानि सम्यंचितवप्रसादान्इति

(ப்ரஸாதித ஹயநந : ) ப்ரஸாதித = சந்தோஷிப்பிக்கப்பட்ட, ஹயாநந: ஹயக்ரீவரை உடையவர். ஹயக்ரீவர் இவருக்கு ப்ரத்யக்ஷமாய் நேரில் வார்த்தை அருளிச் செய்தார் என்கிறது ஸர்வஜனங்களுக்கும் தெரிந்த விஷயமன்றோ! 

இனி நேற்றைய தொடர்ச்சி

भयहर:--  வேதங்களுக்கு கபந்தமீமாம்ஸகரென்று சொல்லப்படுமவர்கள் வழியில் முள்ளிடுவது போல் துரர்த்தம் பண்ணினமையால் அதில் நடக்கக்கூசினவர்கள் போல்வருக்கு மீமாம்ஸா பாதுகைபென்னும் க்ரந்தத்தையருளிச் செய்து பயத்தைப் போக்கினமையால் பயஹர என்றபடி.

 (सुधाशी) அமிருத்தைச்  சாப்பிடுகிறவர், வேதாந்தமாகிற  பாற்கடல் நின்றும் ஸ்ரீவேத வ்யாராலே எடுக்கப்பட்டதும், பாஷ்யகாரராலே கொண்டுவந்து கொடுக்கப் பட்டதுமான ஸ்ரீபாஷ்யமென்னும் அமிருதத்தை எப்பொழுதும் பாநம் பண்ணுவதுபோல் ஆவர்த்தி செய்தவராகையாலே ஸுதாசீயென்ற படி, "यतिप्रवरभार तीरसभरेण  निर्विष्टं  यतिशार्वभौमवचसां" இது முதலானதுகளாலே தாமேயருளிச் செய்தாரிறே.

(दुग्धराशिकृत्)   பால் பெருக்குப்போலுள்ள அதிகரணஸாராவளியென்னும் க்ரந்தத்தை யருளிச் செய்தவரென்றபடி, ஸ்ரீபாஷ்யாமிருதபானம்பண்ணி அது உள்ளடங்காமல் வெளிவந்ததுபோலுள்ளது அதிகரணசாராவளி. இவ்வர்த்தத்தை स्रग्धरादुग्धराशि” என்று தாமேயருளிச்செய்தார்.  

प्रधानप्रतितंत्रज्ञ – ப்ரதானப்ரதிதந்த்ரத்தை அறிந்தவர், ப்ரதிதந்தரமென்பது  குடியாய் அவ்வவ் ஸித்தாந்திகளுக்கே அஸாதாரணமான வர்த்தத்தைச் சொல்லும்,  இங்கு வேதாந்திகளுக்கு அஸாதாரணமான ப்ரதிதந்தாமாவது சேதாசேதங்களுக்கு மீச்வரனுக்கு முண்டான சரீர சரீரி பாவ ஸம்பந்தமும், அப்ராகிருத சுத்தஸத்வமயமான ஸ்தாநவிசேஷ நித்யஸூரி முதலியவைகளின் அப்யுபகமாதிகளும். அதில் ப்ரதாநமாவது ஜகத்துக்கும் ஈச்வரனுக்கும் சரீராத்மபாவம், இத்தாலிது ப்ரதிதந்தரஸாரம் என்றதாயிற்று. இங்கு அசேத இலட்சணமும், அதன் பேதங்களும், சேத இலட்சணமும், அதின் பேதங்களும் ஈச்வர இலட்சணமும், தத்வாந்த பேதங்களும், சரீரசரீரி இலட்சணமும் இது முதலாக வறியவேண்டுமவைகள் பலவுள. அவைகளையெழுதில் பெருகுமாதலால் மூலத்தில் சொல்லப் பட்டவைகளைப் பல ஞானிகள் பக்கல் கேட்டுணர்வது.  


ஸ்ரீதேசிக அஷ்டோத்ர சதம் 11 - 17

அவதாரிகை மேலுள்ள திருநாமங்களால் தயாளுவான ஹயக்ரீவனுடைய அனுக்ரஹத்தினாலுண்டான பல லாப விசேஷங்களைச் சொல்லுகிறார்.

(अधीतसाङ्ग सकल श्रुतिः) அதீத = அத்யநம் பண்ணப்பட்டிருக்கிற, ஸாங்க= அங்கங்களோடு கூடிய, ஸகலஶ்ருதி = ஸர்வ வேதங்களையுமுடையவர். அப்புள்ளாரிடத்தில் அங்கங்களோடு கூடிய ஸகல வேதங்களையும் ஓதினவரென்றபடி. இங்கு கேவலம் அத்யநமாத்ரத்துக்கு பலமுண்டா அர்த்த ஞானபர்யந்தமாக வேணுமா என்கிற பூர்வபக்ஷ ஸமாதானங்களை வேறு கிரந்தங்களிற் கண்டுகொள்வது.

(श्मृतिवित्) ஶ்ம்ருதி: ஸ்ம்ருதிகளை, वित् = அறிந்தவர்,

மநுஸ்ம்ருதிமுதலான பதினெட்டு ஸ்ம்ருதிகளுடையவும் உண்மையான பொருளை நன்றாகவறிந்தவர், அதாவது :- ஸ்ரீமந்நாராயணனே ஜகத் காரணம், அவனையே உபாஸிக்க வேண்டியது, அவனே உபாயமும் பலமும், பக்தி முதலியவைகள் வ்யாஜமாத்திரங்கள், வர்ணாச்ரம தர்மங்கள் பக்தி முதலியவைகளுக்கு ஸஹகாரிகள் என்கிறதை நன்றாகவறிந்தவரென்றபடி.
(अग्रणीः) ஸ்ம்ருதிகளினுடைய அர்த்தங்களை தான் அறிந்தது மாத்திரமன்றிக்கே அதுகளை அநுஷ்டானபர்யந்தமாக்கினவர்களில் முதன்மையானவர். ச்ரேஷ்டரென்றபடி. अग्रंनयतिति अग्रणीः என்கிற வ்யுத்பத்தியாலே சிஷ்யர்களை உத்தமமான ஸ்ம்ருதியில் சொன்னமார்க்கத்தில் நயிப்பிக்கிற வரென்றுமாம்.

(इतिहास पुराणज्ञ) இதிஹாஸ புராணங்களையறிந்தவர். இதிஹாஸமாவது = ஸ்ரீராமாயண மஹாபாரதம் முதலியவைகள் புராணமாவது = மாத்ஸயம் முதலி யவைகள் இதுகளையறிந்தவர். அறிகையாவது:- அவைகள் ஸ்ரீமந் நாராயணனையே ப்ரதிபாதிக்கிறதுகளென்றும், ராஜஸ புராணங்களில் ப்ரஹ்மாவையும், தாமஸங்களில் சிவனையும் ஸங்கீர்ணங்களில் ஸரஸ்வதி யையும் ப்ரதானமாக சொல்லியிருந்தாலும் ஸாத்விகானுகுணமாக அவைகள் ஸர்வ சப்தவாச்யத்வாதிகளாலும் அந்தர்யாமிபர்யந் தத்வாதி களாலும் ஸ்ரீமந்நாராயணனையே ப்ரதிபாதிக்கிறதுகள் என்று உணர்ந்த வரென்கை,

(सुकविः) இதிஹாஸ புராணத்தையறிந்தவர் மாத்திரமேயன்று, சோபநமான கவநம்பண்ணுமவர். கவிதைக்கு சோபநத்வமாவது ஸலக்ஷணமாகவும், ஆசுவாகவும், ரஸ்யமாகவும், அஸத்காவ்யம் போலன்றிக்கே பகவத்பர மாகவும் பண்ணுகை. இதர விஷயங்களைப்போலே பகவத் விஷயங்களை யும் விட்டு ஆசார்ய விஷயமாக கவிபாடுகையாலே மதுரகவியென்று பெயர் பெற்ற ஆழ்வாரைப்போலே இவரும் பகவத்பாதுகா விஷயமாக ஆயிரம் சுலோகம் பண்ணினமையால் ஸுகவியென்றபடி, இவருடைய கவிதா சாதுர்யங்கள் யாதவாப்யுதயகாவ்யத்திலும் காணலாம். ஸங்கல்ப ஸூர்யோதய நாடகத்திலும் "गौधवेदर्भ पांञाल” என்று தாமேயருளிச் செய்தாரிறே.

(तर्क तत्त्ववित्) तर्क = தர்க்க சாஸ்திரத்தினுடைய, तत्त्व = உண்மையை, वित् = அறிந்தவர், தர்க்க சாஸ்திரம் எவ்விஷயத்திலேயுபயோகமுள்ளதென்று அதினுடைய தத்வத்தையறிந்தவரென்றபடி, அதாவது வேதசாஸ்திரங்களின் உண்மைப்பொருளை ஸத்தர்க்கங்களாலேயுணர வேண்டுமதுவே. தர்க்க பாண்டித்யத்தாலே நினைத்ததெல் லாம் ஸாதிக்கலாமிறே.

(भाष्यकारः) பகவத்வ்யாஸ சிஷ்யரான ஜைமுனியாலே பண்ணப்பட்ட தர்ம மீமாம்ஸா ஸூத்ரத்துக்கு ப்ரதி பக்ஷத்தை நிரஸித்துக் கொண்டு ஸேச்வர மீமாம்ஸை யென்றும் ஓர் பாஷ்யத்தைப் பண்ணினதாலே பாஷ்யகார ரென்று ப்ரஸித்தி பெற்றவர்.