திருப்பாதுகமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திருப்பாதுகமாலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 2 நவம்பர், 2009

மங்களம் –திருப்பாதுகமாலை சுபமங்களம்

परभ्रह्मापदत्नाणपदब्रह्म्पयॊनिधॆ:।
  कॆशवॊक्तिकलॊथुङ्गराकाचन्द्रमहॊदय:॥

TP Mangalam

ஞாயிறு, 1 நவம்பர், 2009

திருப்பாதுகமாலை

 

திருப்பாதுகமாலை

இறைமையே தொண்ட வாவித் தொண்டினல் லிறைமை சால
  நிறையுமா ணடிநி லைப்பா நிகழுமா யிரந லப்பண்
ணிறைவனா ரிதய மன்னு மிரதமேந் தினிய சந்தஞ்
செறியவோர் தொண்டி தென்றே கேசவன் தமிழ்செய் தானே

சோதித்திரு வேதத்தலை யோதித்தரு நாதன்
   பாதத்திரு வீதென்றடி பாடித்தரு மாதி
   போதக்கவி கொள்ளுந்திரு வுள்ளந்தெரி வள்ளல்
   கீதத்திரு பாதாவனி நாதாமுத மீதாம்.

சொற்கற் பகமுற் கவிபோற் றுமறை 
விற்கற் பகதற் பரனங் கிரிமாண்
பொற்கற் பகவற் புதபா துகையெம்
நற்கற் பகமிக் கவிநல் கியதே.

வடவாரிய மறைமங்கல நடைநாடிறை நிறைதென்
னிடவாரிய மறைதேறிய திடநாவிறை யறைதென்
வடவாரிய னடிமாமண வணமாயிரு மறைமா
முடியாரிய னடியாயிர மொழியாயிர மிதுவாம்.

நகர்காட்டு துறையெந்தை மறைகாட்டு மதியம்
பகர்காட்டு மலர்மாது பதிகாட்டு மணிபா
துகைகாட்டு கவியேறு துறைகாட்டு நலமா
தகைகாட்டு மெழி லூட்டு தமிழ்காட்டு மிது நூல்.

உம்பர் நிரம்பிய கோட்டி யரங்க
மிம்ப ரிதண்ண னிரம்பிய நூலென்
றன்ப ருளக்களி கூர்ந்தரு ளாடு
மன்புக ழொட்டொளி  வட்டிது வென்றே.

கண்டிது நாதன ரங்கனு வக்க
மண்டில ரேகையு மத்தியு மொத்தே
பண்டரு சித்திர வண்புகழ் மாறன்
தெண்டிது கேசவ னொண்டமிழ் நூற்றான்

விண்ணப்பம்

இறைச்சீர் பிறங்கெண் ணிறைச்சீ ரரங்கா!
  மறைச்சீர் வழங்குன் மனச்சீரி னிந்நூல்
  முறைச்சீரி னின்னேர் முகச்சீர் விரிப்பா
  னறச்சீரி லிட்டுன் னடிச்சீர் பிடித்தேன்.

எனக்காக வென்றொன் றிரக்காத நின்கண்
  மனக்காத லொன்றுன் மதிக்கா லருள்வாய்
  உனக்காக வென்றா லுனக்கென்று தானுன்
  கனக்காத லூன்றுன் கழற்காவல் கொள்வன்.

முற்பெருங் கவிஞர் சுத்த முத்தமிழ்த் துறைக டாங்கி
  நற்பெருங் கதிகண் மேவு நடைநலம் பொலியக் கண்டு
  கற்பவர் திறத்துக் காத்துச் சொற்றிறம் பாது கற்ற
  நற்பினன் னடையி லாய வாயிர முனது நன்றே.

கோனடத் தென்றி ளங்கோ வேண்டவன் றண்டர் கோனைக்
  கானடத் தென்று நாதன் காவலா யுலகுக் கெல்லாந்
  தானடத் தரசின் வண்ணந் தானிதென் றருண்மி குத்தே
  கானிடைத் தந்த வள்ளற் பாது! நின் தலைமை காண்பாம்.

குலமென நலந்து றந்து குடிகெடுங் குரிசி லீட்டத்
  தலைமுளை களைந்து முன்னந் தலையுன துலகி லோங்க
  நிலையென வவன டிக்கீழ் நிறுத்தியே நிலைத்த நின்னை
அலைதுயி லகில நாத னடிமுடி சூட்டி னானே.

முனிவர னிவந்தி ளங்கோ முடியிறைக் குவந்து சூட்ட
வனைமுறை மணங்க மழ்ந்த நலனிறை கலசந் தன்னைத்
தனிமுடி யுனக்குச் சூட்டுந் தகுதன துளத்து நாதத்
தினிதுரை துலங்கு தாளன் திருவலஞ் செய்து வந்தான்.

என்று தெட் டிறைமை சான்ற மெய்யனிவ் வைய முய்ய
நன்றுதொட் டன்பி னற்பா லகிலநல் லரசு பூக்க
ஒன்றுதொட் டுலகி னாட்சிக் குறுதியென் றருளி யாண்ட
வன்றுதொட் டென்று மாட்சி யடிநிலாய்! நின்ற துன்கண்.

தாதையோர் முன்னு மாகத் தானுமுன் பின்னு மாக
நாதனே யாதி நீதி நானிலத் தரசு நாறப்
பாதுகா! முடிநி னக்குப் பருணிதர் பரவச் சூட்டி
ஓதுமா மனுகு லத்தோர்க் குனதிறை பூரித் தானே.

சிறுமனஞ் சிதற வில்லித் தீமனங் குமைக்க மூட்டிப்
பொறைமிசைப் பிரசை வாட்டி யுண்ணவே குழுமியெண்ணிக்
கறைமிசைத் தரைப றிக்குங் கரவரிங் கிறைவ ராகும் 
மறலறச் சகத லத்துப் பாதுகாய்! நடைகொள் வாயே.

ஆதியா யருளா யாளு மாழியான் பாத மல்லா
லாதுமோர் பற்றிலாத பாவனைப் புனித வண்ணப்
பாதுகாய்! வாழ்தி யாளா யாள்திநீ யரசாய்ப் பாரிற்
பேதியா நீதி நின்ற நின்னிறை மாட்சி வாழ்க

ஆண்டவன் தொண்டி தென்றே யருமையிற் புரியா யாவும்
  மாண்டவர் முடிமீ திட்ட மகுடமா மாளு மாந்தர்க்
  காண்டவ னென்று மாந்தர் கடைப்படப் புரியும் பூசை
  தீண்டவர் பொருளுக் கெல்லாந் தீங்கினை விளைக்கு மாதோ.

அளவிலிவ் வுலக மாக்கி யளவுதான் கடந்து தன்ன
லுளநலத் தோங்கி நின்ற வுத்தமன் பதந யத்தே
அளிநலத் துயிர ளித்தோன் வயின்வரை யறுத்த நீதித்
தெளிவினிற் றரும வண்ணம் பாதுகாய்! தெரிக்கின் றாயே

உலகினிற் பகைவர் பல்லா ருயிர்களுக் குள்ளா ரேனுந்
தலைவரப் பகைவர் கட்குத் தகைமுனி யழுக்கா றென்பார்
மலியவர் வலியை மாந்தர் மனமல மறுக்கும் பாவால்!
நலியநின் பொலிவு பூக்கும் நன்றிநீ யொன்று செய்வாய்.

பொல்லரை நல்ல ராக்கும் புனிதநின் னிறைம னத்துச்
செல்லொரு செங்கோற் செவ்வி செறியநற் றுறவி லோச்சும்
நல்லற வள்ள னீதா னல்லர சாட்சி கொள்ளச்
சொல்லொரு வேலை தானுங் காத்ததுன் சொல்லின் வேலை.

நன்றுடன் செடுமி டத்துக் கலியுமே கண்டு கொண்மி
னென்றுட னுலகி லாட்சி கிதநலந் திகழச் செய்யும்
நன்றது புரிய நின்று நல்லறம் நிறுவு நின்கண்
நின்றது கால வட்டம் நிகழுமா றுணர்வர் நல்லார்.

காலமே லோடு மோடுங் காலத்தோ டோடக் கற்குங்
கோலமே நாடி யோடிக் கோமிசைக் கோக்களாவீர்
காலமோ டோடாக் காலக் காலமே யோட மாள்வீர்
வாலர்பா லீத றைந்தே வாடுவா ரரசு கொள்ள.

காலமோ டாது போகுங் காலமே தென்று முண்டோ
காலமோ டோடா ராரோ காட்டவோர் காலு மாட்டார்
வாலினோர் நீட்ட மேதாங் காட்டியே வைய மாட்டுங்
காலமீ தென்று தானோ டாதுபோ னின்ற தின்றே.

அரசுதான் கால மாக்கு மரசினைக் கால மாக்கா
  வரசினைக் கால மாக்கி லரசொழி கால மஃதே
  பரசுமிவ் வரசி னுண்மை பாதுகாய்! காணு மெய்யர்
  துரிசரைத் துதித்து வையத் துயரர சுயர வெண்ணார்.

பூதியர் கோலி லாடிப் புலைவளக் கானி லோடி
  யூதிய மலைக ளேறி யுயர்பதக் கிளைக டாவிப் 
  பேதுறு சலம னத்தர் பெறுமிறைப் பொறையி னாட்சி
  மாதிர மந்தி கையின் மாலையாய் முடியு மந்தோ!

ஊதியஞ் சுருங்க நீதி யுலகினிற் சுருங்கு மென்று
  பூதியர் பறையு மேதம் புவியினிற் சிதைத்து நீதா
  னேதுவொன் றின்றி நாதன் சேவடிக் கடிமை செய்தே
  பாதகக் கடுக ளைந்து பாதுகாய்! பார்ப ரித்தாய்

பதமதிற் பிறந்த வாற்றாற் பாதுகப் பேர்ப டைத்துக்
கதியதென் றுணர்ந்த தன்கண் தனையறத் துறந்து தொண்டின்
வதியெனச் சதிந டந்தே வழுவிலா வாழ்வு மன்னும்
பதியறன் வலியு றுத்தும் பாதுகா! பொலிக நின்சீர்.

நாயகன் பாது காயுன் னாயிர நாம மோதுந்
தூயவர் விரித்த முன்னூற் றுணிபொருள் தொடுத்து மெய்ய
வாயவர் வழங்கி வையம் வாழவே வாழு நன்மைக்
காயவர் கனவு நானுங் கண்டுளங் களித்திட்டேனே.

இருமையும் வழுவா திங்கே யிருந்துவாழ் நாள்க ளெல்லாந் 
தருமமுந் துறவு மன்புந் தழையுமா றிறைவ னற்றாள்
விரிநெறிப் பலவாய் மல்கு மிருநிலத் தொழுகி யொன்றும்
பெருநலத் தினிது வாழ்வாம் பெருமனச் செல்வ ராயே.

சனி, 31 அக்டோபர், 2009

நிறைவுபெறும் பாதுகையாயிரம்

இன்றுடன் ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் 32 பத்ததிகளும் நிறைவு பெறுகின்றன.

ஆனாலும் “திருப்பாதுகமாலை” நூல் இன்னும் நிறைவு பெறவில்லை ! வளரும்.

32. பேற்றுப்பத்ததி

971.  சான்றுய ராரிட மாமறை சால
         ஊன்றய னந்தன னாதிய ரோதத்
         தோன்றய னப்பய னொன்றவ திச்சீர்
         சான்றவி ராகவன் பாதுகை சார்வன்.                 1

972.   கோதெனக் கண்ணுறா தும்பர்சீர் மாதவன்
          தாதுகக் கேளியம் போருகத் தாளதே
         ஆதரத்  தேந்துபூம் பாதுகா தேவி! யெப்
         போதுநின் பக்கமே போற்றிநா னிற்பனே.             2

973.  ஆமெனக் கன்னைநீ தானரங் கத்துறை
          மாமணிச் செல்வமா மாநிதிச் செம்மலோ
          யாமலீந் தின்புறப் புல்லரில் வாயில்செல்
          தோமெனக் கேதுசொல் தூமனப் பாதுகாய்!.         3

974.   பூவளப் பாது!நீ புல்லுமா லங்கிரிக்
          கூவுளத் துய்யவர் கூருமெய்த் தொய்யலில்
          தேவுமா வீடுதான் பேணுமவ் வேணவா
          மேவிடா மாமனச் செல்வர்சீர் மல்குவர்             4

975.   தாயெனக் காயநின் தண்ணளிக் கண்ணலத்
          தாயபின் தோன்றலுக் காயபுன் கண்மிகுந்
          தாயொணா வன்னெடென் னோயெலாம் மாயவே
          பாயருள் மாலையென் பாலருள் பெய்தியால்        5

976.  ஆயுநின் மூரியெண் ணாரியர் வாழறத்
         தூயகை கேயிசே யோம்புதொன் னோன்புநன் 
         றேயவை யாமிநிச் செந்தவச் சிந்தையில்
         தாயுனைப் பாது!கண் டார்பவந் தாண்டுவார்          6
977.   துன்றலிற் றோன்றுநீ தாங்குமால் பூங்கழல்
         ஓன்றியே யென்றினுக் கொன்றுகை செய்யுமா
         நன்றிதொன் றென்றுசெய் நன்றியின் வென்றிகள்
         கின்றதென  சிந்தையைச் சீதரன் பாதுகாய்!.              7

978.   ஆக்குமவ் வேறுபூ ணங்கமா ரங்கமாற்
          கார்க்குமா காவணத் தாவணங் காக்குமே
          பூக்குநீ பூணெனக் காக்குமப் பூவடி
          யார்க்குமே யாம்பொதுப் பான்மையாம் பாதுகாய்!      8

979.   செந்தவப் பாதுனிற் சிந்தைவை குந்தமர்
          உந்துமுன் முந்தன்வை குந்தமுஞ் சிந்தியார்
          நந்துமவ் விந்திரத் தந்திரர்க் காயுடன்
          சிந்துமவ் வப்பதஞ் செப்பவும் வேண்டுமே.                 9  

980.   நாதனின் தாதர்தன் னாச்சிமார்க் கோச்சுநாள்
          நீதமாய் பாகிடும் வீதமாற் றாதுமண்
          மாதுநற் றூலவிம் மேனியிற் றாங்கியெப்
          போதுமே தீண்டுபொற் பாதுனைப் போற்றுவள்.        10

981.   பாவனீ நாளுமூ வாநிதிச் சீரெனத்
          தாவியே பூவளந் தானிருந் தாளினை
          மேவியே நோக்குனை நோக்கியச் சேவடிப்
          பூவவாம் பூதர்தம் பூமடிப் பூட்டுவார்                     11       

982.   அண்டர்கோன் பாதமா போலமா மண்டலக்
          கண்டகச் சோதனச் சோதி!நேர் காண்டலில்
          ஒண்டிருப் பாது!நின் தொண்டர்கண் காணவர்
          கண்டகம் பூக்குமெய் கண்டதோ ரற்புதம்.                  12

983.  அங்கமன் கன்மமுங் காட்சியுங் காதலுஞ்
         சிங்குமிவ் வேழையன் சென்னிநீ மன்னலே
         பங்குவின் னுவ்வியில் மங்கலம் பொங்கலைக்
         கங்கைதான் பாயுமா காதையாம் பாதுகாய்!.              13   

984.  காக்குநன் னோன்பினிற் காணவே மாணெடு
         நோக்குபல் லாண்டுகண் பூக்குமா யோகியர்
         நோக்குமா னாடுதா ளுன்னுடன் பாதுகாய்!
         வார்க்குமக் காரமார் கீரமாய் மாந்துமே.                  14

985.  நற்பதம் பாது!நீ நல்குநற் பாளரே
         கற்புநின் கண்ணிலைத் தாடிநின் சேடராய்
         நற்பதின் மூவகைக் கன்மநின் னன்மைசேர்
         தற்பரன் தாளிணைக் கற்பணஞ் செய்வரே             15

986.  முந்தைநால் வேதமா மூர்த்தமும் புங்கவர்
         பந்திதாங் குவ்வியும் பாவுநின் பாணியிற்
         சுந்தரன் பாவலெம் போலியர் சென்னிமீ
         துந்தருள் முந்துசீ ரொன்றுசீர் முந்துமே.                  16

987.  சொன்னபா துன்னையே துஞ்சிலும் விஞ்சியென்
         சென்னிதாங் குன்வணச் சீர்க்கனாக் காணலென்
         அன்னையே! சாலுமீ தவ்வணந் தாபதர்
        மன்னுநல் யோகிலென் னப்பனைக் காண்பரால்.        17   

988.  மெய்தருஞ் சீரிலுன் சீதரச் சோதியா
         மெய்தரும் மாநிதிச் செல்வமே நல்குனக்
         கெய்துகை கூப்புமெய் யென்னிதே பாதுகாய்!
         பொய்தரும் புல்லர்பாற் போயவிழ் வெய்துமோ?         18

989.  நன்னெறிக் கண்ணடக் கையடைத் துன்னிடைத்
         துன்னலத் தண்ணலார் சொன்னலத் தாணிலாய்!
         நன்னருள் பொன்னரங் காட்டுமெய்ப் பாட்டினில்
         மன்னனொத் தாடுமன் மாடுகூத் தாடுவார்.                19

990.  பாதெனா துவ்வமீ திவ்வணத் தந்தநா
         ளோதுசீ தேவிதாட் கொஞ்சுசெம் பஞ்செழிற்
         சோதியென் னப்பனென் கண்முனே தோன்றுமா
         றாதரித் தென்னைநீ நன்னையாட் கொண்டருள்.         20

991.  என்னுளந் தானே யென்னை யெள்குமா றேழை யேன்மா
         மன்னனல் லன்பர் போல நானுமே நடிக்கு மீதுன்
         மன்னுளங் கொண்ட வள்ளன் மையிலிது சாலு மென்றுன்
         னன்னரிற் பரதன் கோட்டி நல்லர்நோக் கருள்செய் பாதூ.  21   

992. எளிமையின் வரைப்பி னின்ற விவ்வுயிர்க் கெனவி ரங்கித்
        தளிமமன் னமலன் பாதூ! தவறென தறக்க ழித்துக்
        கொளவருள் புரிந்து நீ தான் குழையெனப் பொழுத ரங்கன்
        அளிசுரந் தணுகு மந்நல் லழகெனக் குதவு வாயே.        22

993. எடுத்தவஞ் சலியின் வெற்றி யியம்பிறை யரங்க வள்ளல்
        தொடுத்ததன் மறையின் வேள்வி தொடரவ பிரதங் காறும்
        நடத்தரித் தவத்த ரேற்றும் நயத்தெனை நடத்த வீடே
        வடித்துமுன் னடித்தி ரங்கா ளும்மிடத் தூட்டு வானே.    23

994. யாகுமா லடிய ரிந்த யாக்கையைக் கழற்று மக்காற்
        பாங்குதா ழவர்மு டிக்குப் பாது!நீ மகுட மாவாய்
       வீங்குதீக் கருப்பை வீழும் வினையின்வே ரறுக்கு மச்சொல்
       ஓங்குகா விரிம ணற்கண் ணொளிபெறு மளவும் வாழ்வன்.    24   

995. பெறவலரும் பேற்றி னெல்லை தேறரு ளரங்கன் செந்தாள்
        செறிவினின் னிடைநி லைத்த பெருந்திரு விரிந்த பாதுன்
        நறுமைகள் கின்ற வுள்ளம் நாறநற் பரத னோதுன்
        நிறைவுசொல் லாண்டு நூறும் நிறைவனின் னடிய னேனே.  25

996. மேவுமென் தாழ்மு டிக்கு மேலுநன் மோலி பூத்தாய்
        பாவுமென் சிந்த னைக்குப் பாவனைப் பண்பு கொண்டாய்
        கூவுமென் னாவி னுக்குக் கூடுமிக் கவிவி ரிந்தாய்
        யாவுமுன் னருள்ப யந்த பாக்கியம் பாது! கண்டாய்.      26   

997. என்னையான் முன்னை யிந்தப் பிண்டமாம் பண்ட மென்றும்
         பின்னையா னதிப னென்றும் பிணங்கினேன் பரமன் பாதூ!
         என்னையா ளுடைய வள்ள லெம்பிராற் காக்க வன்னா
        னென்னைநிற் காக்க நீகாத் தீன்றநின் மெய்ய னானேன்.     27   

998. மெல்லியர் பால ரோடு மேதினி மகிழ்ந்து போற்றக்
       கல்லினை யணங்கு மந்தக் கரியினை முளையும் வாழ
     ஒல்லையி லுமிழ்ந்த நற்றா ளுடைமைகொண் ணறுமை யெம்மோய்
     நல்லொரு சுகிர்த மன்னென் னவிரநீ நிலைகொண் டாயே.  28

999. தொடவுமத் திரும லர்க்கை துவளுமால் திருவ டிப்பூ
        கடுவலென் னுளத்த மன்னக் கருதிநீ யிடையி லேந்தித்
        தொடுமதன் பகழிக் கூர்மை பொடிபடுத் துனத ருட்கோ
        ணடையினின் படியி லம்மா! நலமிகக் கொண்டு புக்காய்.      29

1000. கலைமக ளரங்க மென்று களிநடம் புரிய ரங்கத்
         தலமிதிற் கணமு னாடல் தவிர்ந்தகா லந்த ரங்க
        மலர்மகி மங்கை மார்க்கெம் மான்மலர்ப் பதம்பி டிக்கும்
        நலமரு ணயத்தெ னக்கும் நல்குவாய் பதநி லாயே!.    30

1001. இவ்வணத் திசைய நீயே யிசையுனா யிரமி தாக
         அவ்வணம் பரவு நின்னை யடியனே னெடிது னார்வச்
         செவ்வையிற் பாடிப் பாதுன் சேவகச் செல்வம் பெற்றேன்
         செவ்விதுன் சிறப்ப விவ்வா றென்னினிப் பெறுவ தம்மா!. 31

1002. அருணிதி யரங்க நாத னணிதிருக் குணங்க ளொக்க
         அருமறை முடியுந் தேறா வளப்பரு நிறைமை சாலுன்
      பெருமையை யளியி லென்புன் மேதையி லளந்த சோர்வொன்
     றருமையி லரங்க வள்ள லடிநிலாய்! பொறுத்த ருள்வாய்.   32

1003. உணர்வினின் தலைமை பாடும் புலவரார் பிறரு மப்பன்
          பணைவணப் பாது காயிப் பனுவனின் பால தென்றே
        குணமிதிற் சிறிது காணக் குணித்தது சுவைக்கும் வள்ளற்
குணமனத் தென்னை யன்னார் வெகுமதிக் குரிமை கொள்வார்           
1004. கோதெனக் குறைம னத்தர் குணத்தையு மறுத்துக் காண்பார்
கோதையும் நிறைம னத்தர் குறையெனக் கூற கில்லார்
ஆதலி லரங்க மன்ன னணிதிரு வடிநி லாயுன்
காதையின் குறைநி றைக்கோ ரான்றநற் சான்று நீயே.            34

1005. இறைநிலைச் சிலையு ராம னிருபதத் தகல கில்லே
னிறையுமென் றுறைய வன்தா ணிலை!யுனோ ரையிலி தென்னால்
நிறைநலப் பெரிய நின்மாண் சரிதநல் லுடன்பி றந்த
செறிகவித் தலைவ னாலோர் சீதைபோற் புரிந்து கந்தாய்      35

1006. மதலையின் வதன மாயன் வளையுரன் தடவு மாறொன்
றிதுவுமென் முடியிற் பாவா லிணையுமுன் பணைநி மிர்ந்த
கதியிலென் வதன வாயிற் கதவநீக் குனது பண்பின்    
உதயமுன் னூலி தென்றே கோதிலா ரோது வாரே.              36

1007. கொண்டனல் வண்ணன் பாதங் கொண்டடெழுங் காத லுண்டேல்
அண்டமுற் றுய்ய வேதங் கண்டநுண் பொருள்வ ழங்கிப்
பண்டொடைச் சுதையி னீத்தம் பருகுமின் பகவர் கட்கு
விண்டுதா ணிலைகொ ளிந்நூல் விளங்குநன் றினிய வாறே.            37   

1008.  பொலிக மாணெதிப் பொருநர் வாசகம்
           பொலிக மாதவன் புனித பாதுகம்
          மலிய வவ்விரு திருவளர் மறைத்
          தலைபு ரந்தமா தவர்கள் பொலிகவே.              38

திருப்பாதுகையாயிரம்

முற்றுப் பெற்றது.

ஸ்ரீபாதுகா சஹஸ்ரத்தின் தமிழாக்கம் தான் முற்றுப் பெற்றுள்ளது. “திருப்பாதுகமாலை” நூல் இன்னும் வளரும்.

வெள்ளி, 30 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை – உருக்கப் பத்ததி

31. உருக்கப்பத்ததி
951.  ஆதுலர் பாலரு ளாதரவில்
           ஏதம றப்பர வித்தையென 
           மூதிறை யேதரு மோருறுதிப்
           பாதுகை யில்லடை யானடைவேன்.             1

952.    அளிநயத் தமுத ரங்க னருளுமென் வருபி றப்பிற்
            களிநயத் தமல மேனிக் கதிர்வளத் தமர்க ளண்ணல்
            தளிரிறைப் பதத்தி லுன்னைத் தகநிலை பொருத்து மிந்த
            அளிநிலப் பரமன் தொண்டி லமர்வனா னடிநி லாயே!.  2

953.    தாலமீ தூழி கோடி யுருட்டுநீள் கால வட்டஞ்
            சாலவே புரட்டு கோடி தாதையர் மறைய னந்த
            மாலெழுங் கோல வண்ணப் பாதுகா யின்று மந்தோ
            கோலெனக் குலவு நின்னைக் கொழுந்தெனத் தேடி யோடேன்.       3   

954.   புகழ்வளர் திருவி ளங்கும் பூரணத் திருவ ரங்கம்
           திகழ்மறை முடியி னீழ னிறைநவ நிதியைப் பாதூ!
           மகிழ்வுற வெளியர் கட்கென் றிரங்கிநீ வழங்கிக் காக்கும்
           புகல்வணம் புறக்க ணித்தென் புகர்மனம் புறம்பு மேயும்.            4

955.   விஞ்சுசஞ் சலம னத்தென் வினையினான் விலகி யுன்னைக்
          கிஞ்சமுந் தஞ்ச மென்னாக் கிறிதனின் மறித லாடக்
          கொஞ்சுவற் சலையு னீரத் துருகிநீ யருகி யென்னைக்
          குஞ்செனப் பரிந்து பாதூ! கொள்ளவே கடமை யன்றோ?.            5

956.  செம்மைமா லடிபிடித்திங் கெனதுபாற் செலுத்து மார்வத்
          தம்மைநீ தகைமையாடுந் தலைமையொன் றில்லை யாயில்
         அம்மவோ திருமு குந்த னாரரு டனையு மீறிப்
         பம்மலா டெனது பாபம் பரந்திறை நிலைகொ ளாதோ?                6

957.  மீறியா னென்னை யானே யிடிக்குநல் குரவி னோலக்
         கூறலீ துணருன் கேள்வி கொண்டிலா விதியென் பாதூ!
         ஊறுதே  னரிய டிப்பூ வுமிழ்மணப் பிரச மாந்தி
         மாறுபித் தேறி நீயும் மறந்தெனை மயங்கி போலும்.                7

958. அண்ணனின் பரமி தென்றே யளித்தரி யடிக்க ணென்னைப்
         பண்ணநீ பின்னு மென்னைப் பற்றவோர் கேடு நாடில்
         தண்ணறப் பரந்து டைத்த தமியரைப் பரிந்து நோக்கும்
         புண்ணியப் பதநி லாயுன் புகழ்த்திரு குனிந்து நாணும்.            8   

959.  நூக்குபல் காவ னாக நுழைவரும் புழையிற் சீறிக்
         காக்குமவ் வச்சை மாக்கட் கடைத்தலை நடத்த லஞ்சி
         ஆக்குபொன் னரங்கச் செல்வம் வழங்கவே காக்கு முன்கண்
         பூக்குமென் மனர தங்கள் புரந்துநீ பொருந்து பாதூ!.                9

960.  வெய்யமுக் கோர மேற வேண்டிநீண் மறலிற் கானல்
          நய்யுமன் பதைக்கி ரங்கி நன்கடி நிலை!ய ரங்கன்
         மெய்யடி பிடித்துக் கையின் மெய்யெனப் பெறும்ப தத்தை
         அய்யுற லறுத்துக் காட்டு மாதரம் பொலிய நின்றாய்.                10

961.  சலப்பல நிலப்ப கட்டிற் சமையுமைம் புலன்வி ரித்த
         வலைப்பட விழுந்து ழன்று வலிவினை யழுந்து மெம்மைத்
         தலைப்பிடி தகப்பி டித்துன் தகைப்பிடி நயத்துப் பாதூ!
         நலப்பத நிலைத்த நீதா னாடியே விடுவிக் கின்றாய்.                11

962.  நகுதிரு வுரத்த ரங்க நம்பியைக் கால்பிடிக்கத்
         தகுதிரு வுரத்த நீயே தமியனேன் தவறு முற்றும்
         தொகுமவ னிவப்பு மாணக் குணக்கட லிடைக்க லக்கும்
         வகைதொரு முனைத்த டுக்க வல்லரார் பாது காயே!.                12

963.  மறப்பதே தொழிலாய்த் தோன்றி மறவினை வனையும் போகம்
         கறப்பதே நுகரெ னக்குக் கைதொடற் புதிது யாதோ?
         துறப்பதே தொழிலாய்த் தோன்றுன் துணையிலக் கால்தொடற்கண்
         சிறப்பதே புதிதாம் பாதுன் திருவுளம் புரிய தேகாண்         13   

964.  கறைபல நிறைய நாளுங் கரையறப் புலன்க ளோம்பி
         முறையற வளர்ந்த வென்றீ முதுவினை வெறிவி லக்கச்
         செறிமுறை யறத்தின் வண்ணச் செவ்வடி நிலை!ய ரங்கன்
          நறுமணங் கமழ்ப தப்பூ நாற்றநீ யூட்டு வாயே.                    14

965.  உரியநின் பணிதி ருத்துன் னுரிமைநீ யெனது பாணி
         அருமையின் பிடியிற் கொண்ட வடியனே னினியுஞ் சென்று
         பொருளிடைப் புரளு மாக்கட் புடையொரு பொழுது நீட்டல்
         அரியடிச் சுடர்நி லாயுன் னழகினுக் கழிவு கண்டாய்.                15       

966.   கரிலிறக் கழிக்க வோதுங் கருமநான் புரிய வேண்டிற்
          புரியதன் புரையொ ழிக்கப் புரிகழு வாய்க டோறும்
          வருமிழுக் கவைக்குஞ் சாந்தி வரையென விளங்கு பாவால்! 
        ஒருமுதற் கதியெ னக்கா மொண்மைநிற் கொண்ணா வோதான்?16           
967.   குடியுளத் தடைய ரிற்கண் குமைக்குமென் தீம னப்போக்
         கிடரொலிப் படர்பு லன்க ளிழுக்குமென் வாயி லந்தோ!
         கடியவிவ் வுறுக ணாழிக் கரையெனைக் கடத்தற் காகும்
         அடிநிலாய்! சுடர நீளும் பத்தியோ வன்றி நீயோ?.                17

968.  ஓரிகள் வெறுக்குந் தென்ற லொளிர்பசுங் கதிரைத் தேனர்
         பூரியர் புரந்த நின்சொற் புனிதநற் பதத்தை யம்மா
         பேரிறைப் போத மொன்றைப் பேதுறு மனத்த ரெம்மா 
         னேரடி நிலை!யி  தந்த நியதியின் திருக லொன்றோ?.            18

969.  விடவுடற் கடுவெ டிக்கு மெமபட ரிடிகள் கேட்க
         அடிநிலா யுனைய டைந்த வடியனேன் கடவெ னோதான்
         நடையாங் கனத டிக்கந் தரங்கர்நா வழங்குஞ் சேவைக்
         கிடுசட கோபன் தொண்டா! வெனும்பணி விளிம டுப்பன்.            19

970.  மாலையி டும்மண மாலிகை மேலக்
         காலொரு கல்லிழை காதன யத்தென்
         பாலினை மாபதி பாதம லர்த்துஞ்
         சீலமெ னக்கருள் சீரரி பாதூ!
                            20

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை சித்திர பத்ததி தொடர்ச்சி

கவிகாவியநாமாங்கிதவாறாரச்சக்கரபெந்தம்IMG_0001
941. கதிவேங்கை போற்பாயு முகிர்பொங்கு மடியாடு வாய்நா சுடு 
         பதகர்ச்சி தைத்தும்பர் துயர்பொன்று கதியின்ப மாயன் கழல்
         பொதுடங்கு மோகைக்கண் புகழ்பொங்கு மனிரம்பு மோகன் சுப
         பதமாக வாதொப்ப வளர்பொன்னி நடுவிற்கு ழல்பா டுப     31

               சதுரங்கவட்டாரச்சக்கரபெந்தம்
IMG_0002
942. சுகிர்த நற்றவர்கள் வலம்புரி வழங்க வரங் கத்துகு
        ருகருது முரு வரிய புன னிரந்தரந் தடவிடத்
        திகவன் செல்சுக நற்பணி புரிதுரிகர்க ளோர்பதப
        மகிழ்வே யவிழ் விபுதாவிபு மதிநின் மாணிலை திகழ்தி.  32   

           செய்யுட்கோமூத்திரி(நேர்)
                                   1
943.  பூபால கோலந்த ரோராசனத்தே
        யாபால ருந்தேவி காவென்று நாட
        மீபாவ மிங்கேது மில்லாத மாந்தே
        நீபார ளித்தாள றச்சீர்செ ழிக்க                   33

IMG_0005
                                  2
944. ஆய்பாடி  கோவிந்த வாராத னத்தே
        யாபால ருந்தேசி காவென்று பாட
        மாபாலர் மிக்கோது பல்லாண்டு மன்னு
        நீபார வத்தாநி றப்பேர்செ யிக்க.                  34

செய்யுட்கோமூத்திரி(மாறாட்டு)
                      1
945. தாமமவாலழி தாமதமா
       வாமமரோதரிமாபதமா
       நாமமிராமபதாநிதிதா
       பாமணமீதுவிளங்கிதுமா                       35

IMG_0006
                    2
946. பாதுவளர்விதுகாணரிபா 
         நாதிபதாதிமறைமிகுநா
         பாதகமாசதணாமகிழ்வா
         மோதரி தாளிலவாமன தா                  36

IMG_0007
 

செய்யுண்மாலைமாற்று
                    1
947.  தூபாமாலமூவாநா
        கோபாலாதபாவாலே
        மாபாகாரதாவாதா
        தோபாணாரபூவாயா                              37

                    2
948. யாவாபூரணாபாதோ
         தாவாதாரகாபாமா
        லேவாபாதலாபாகோ
        நாவாமூலமாபாதூ                              38

            எண்டளப்பதுமபாதுகசித்திரம்
IMG_0003
949. தாரவாரவரத்தா
          ரயவிரதன்பார்பதாவனீபரர்தன்
         தீரவாரசரத்திர
         ரகுபுரதூபடரிராமபதூ                         39

            யமகாநுப்பிராசவிரவல்
950. தரமா தாமா தருமா பரமா
         திருமா தவனோ திருமா பதமா
         சரணா பரணா சரணா தரணா
         திருவே தரநீ தெருவே திரிவாய்.
          40


வியாழன், 22 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

அருத்தப்பிரமகம்
931. பூதாவாசீநீபூமேவி 
         தாதூதேதாகாராநாமே 
         வாதேயோராதூநீராபூ 
         சீதாராமபாதூகாநீ                                    21

IMG_0004

சருப்பதோபத்திரம்
1 932. மாபாபாதூதூபாபாமா 
        பாபூபூபாபாபூபூபா 
        பாபூரிகாகாரீபூபா 
        தூபாகாவாவாகாபாதூ.                                22

image0001
2
933.
பாதாபாபாபாபாதாபா  
        தாதாதாதாதாதாதாதா 
        பாதாபாதாதாபாதாபா 
        பாதாதாதாதாதாதாபா                                    23

image0002
மும்மெய்
934. கோபிக்குமாகோ  
          பாபிக்குமாகும் 
          மாபக்கமாகக் 
          கோபக்கமாகா                                        24

                        ஓர்மெய்
935. தத்தாததத்தா 
         தித்தாதிதித்தா 
         துத்தாதுதுத்தா 
         தொத்தாததொத்தா.                                  25

ஓருயிரோர்மெய்ப்பல்வகைப்பெருஞ்சித்திரம்
936. யாயாயாயாயாயாயாயா 
          யாயாயாயாயாயாயாயா 
          யாயாயாயாயாயாயாயா 
          யாயாயாயாயாயாயாயா                    26

பின்னடிமடக்கு
937. ரகுபூபதிபாதுகைமா 
          தகுபூகதிபாதுகைமா 
          நகுகானடபாதுகைமா 
          மகமோ தணிபாதுகைமா.                      27

இரண்டாமடியமீற்றிடியுமுற்றுமடக்கு
 
938. ஆதரப்  பண்ணைபூத் தாடரங் காதி
           நாதனா நாதனா நாதனா நாதனா 
           காதிசே யம்மகங் காத்ததார் நீயலாற் 
           பாதுகாய் பாதுகாய் பாதுகாய் பாதுகாய்.         28

ஈருயிரிருமெய்முற்றுமடக்குமாலைமாற்றுயமகநாலெண்
பதினாறிதழ்ப்பதுமப்பல்வகைப்பெருஞ்சித்திரம்

939. பாதபா பாதபா பாதபா பாதபா 
          பாதபா பாதபா பாதபா பாதபா 
          பாதபா பாதபா பாதபா பாதபா 
          பாதபா பாதபா பாதபா பாதபா                   29
  

image0003 
image0004
கவிநாமாங்கிதவெண்டளப்பதுமபெந்தம்
940. பூவருள் பொலிவே ருருவன னனவரு பங்கய நயவம்பூ 
          பூவய நனடம் புரியர ரரயரி ணை பணிந் திடவின்பூ 
          பூவிட தினிதின் புயவலி லிலிவய மகமண மேவம்பூ 
         பூவமெ ணணிமணி யரங்கக் கரய நலம்கொள் வொருள் வண்பூ.  30

image0005
image0006

சனி, 17 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

வினைக்கூடம்

916. பித்தம யர்த்தடி யேனுட னீங்கு
         மத்தறு வாய்நிகழ் வாயில ரங்கன்
         முத்தொலி பாதுகை யோதும லர்க்கண்
         ணத்தனொ டொத்தப யத்திரு நீயே.         6

வேற்றுமைக்கூடம்
 

917. யவளையன் னடைவனோ வனையவள் ளணிவளோ
         யவளனா னடைநலாள் யவளவற் கனிலுளாள்
         யவளனா துறுபணிக் கெவளனில் யவணிலை
         யவளிறைப் பதநிலை யபயமெற் கருள்வளே.        7

அடிமடக்கு

918. எரியிடு கடுவினை யவிய நலம்
         புரிதவர் கழுவா யிறையவளே
         தெரிதலி னரிமா வடிநிலைநீ
         புரிதவர் கழுவா யிறையவளே.             8

அடிமாலைமாற்று

919. மாரபாதமாரரீ
         ரீரமாதபாரமா
         பூரிபாதுதாரனா
         னாரதாதுபாரிபூ                                9

திரும்பாமெய்யெழுத்து

920. அவநீறுஞ்
         சடகோபர்
         தலைமானே
         ழனயாயே.                                    10

முரசபெந்தம்

921. நாதபாதரபாதமா
         வேதபாரமபாதநா
         நாதபாமதுபாதைவா
         பூதபாதரபாதைகா                        11

TPM_0001                     

சொற்பொருண்மாறாமாலைமாற்று

922. பாதுபா திதி யேதயே
         யீதுயீ நிதி பானுபா
         நாதநா வவ கீதிகீ
         பூதபூ திதி தேனிதே.                  12

சரபெந்தம்

923. இராமனோடுறாகமத்
         திராசனப்ப தாவனீ
         இராமனோடறாநமக்
         கராதனத்திதாவனீ                         13

கருடகதிசக்கரபெந்தம்

924. பாதாவாயேமாதாவாநா
         தாதாவாமாதாதாநாபா
         பாதாநீதான்காலாயேகப்
         பாதாயீரம்வாயோதும்பா                14

 

TPM_0002

TPM_0003

இருசிருங்காடகசக்கரபெந்தம்

925. வானார்காரியமாகுமா
          னானாவுருவாபாதுகா
          கானாடுயவேயாகுநேர்
          தானாவேதவுகாதிவா                      15

TPM_0004

இருசதுக்கசக்கரபெந்தம்

926. பரதன்பணிதிருவா
         தரவிற்பநரவணி
         பரதன்னணியுருபா
         தரவிந்தநலவளே                             16

TPM_0005

நாலாரச்சக்கரவேண்டளப்பதுமபெந்தம்

927. பூதநாவலரோதபூ
          பூதரோதளிமோதபூ
          பூதமோகறுவேதபூ
          பூதவேங்கடநாதபூ                            17

TPM_0006

TPM_0007

பதினாறுதளப்பதுமபெந்தம்

928. வாவாகோவாநாவாமூவா
         தேவாராவாரோவாரீவா
         ரேவாதாவாபூவாகாவா
         னாவாயாவாநாவாயாவா                   18

TPM_0007

சதுரங்கதுரங்கபெந்தம்
                     

                     1   
929. மாதாபாதாபூமாநாதா
       மோதாதாராதாமாவாமா
       நீதாதோகாநாவாகா
       தாதாகாயாவேதாகாமா                           19

                        2
930. மாதாபூவாமாநாயாதா
        பாதாநாகாதாமாதாமோ
        தோதாதாதாகாகாமாமா
        வாதாமாவேராதாநீகா.                           20

TPM_0009

திங்கள், 5 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

30. சித்திரப்பத்ததி

வழியெதுகை

911. தலப்பல நிலைப்பரி தனிப்பரி யரிப்பேர்
           நிலைத்தெதி னலத்திரு நிலத்தலை நிலைத்தான் 
           கலைத்திரு விசித்திர கவித்திர னனைத்தின்
           னிலைப்புகழ் மணிப்பத நிலைப்புக லடைந்தேன்.
     1

வழியெதுகை, வழுப்போலி, பொருட்சித்திரம்.

912. கேட்டிதிவி சித்திரமு னீட்டியுக நீதிப்
         பாட்டிலரி காட்டுபகு பாட்டிலரி பாதூ!
         கூட்டுமணி சித்திரகு ருத்திருபொ றித்துன்
         பாட்டடிந லப்பலப யப்புறுன யப்பாம்.               2

கோமூத்திரி

913. சுரா சுரா திகை தொழு 
         மிரா மசே மபா லிகை
         சரா சரா ளுகை செழு
         முரா ரிசே டபா துகை                                     3

 TPmalai 913

(படம் ஸ்ரீ கேசவ அய்யங்கார் வரைந்தது)

கூடசதுர்த்தம்

914. போதம லர்த்திரு மாமகள் போல
         மாதகை மங்கல நாழிநி ரப்பிப்
        பாதக கோடிது டைத்தெழு வாரிப்
        போதரி மாதிரு பாதுகை வாழி                    4

நிரோட்டியம்

915. கரைந் தகங் கடந் தரத்
         திரைக் கடற் கணே ழையே
        னிரங் கரங் கன்தா ணிலைச்
        சரண் செறிந் தடைந் தனன்                      5

திருப்பாதுகமாலை

28. நன்மொழிப்பத்ததி

821. கலைக்கோடி யொன்றிக் கிளைப்பீடு காக்கும்
         நலத்தோங்கு கேளிர் நயத்தோம்பு வாரால்
         நலத்தாள ரங்கன் வளப்பாவ லோங்கத்
         தலைப்பார தர்தாந் தகத்தாழ்த்து வாரே.           1.

822.  தன்னா டெனினும் பிறநா டெனினுந் தகநிற்கும்
          சென்னா டெதிலுஞ் செய்தொழி லறவோர் துறவாரால்
          அன்னா னடிமா ணிலைதா னமரும் நகர்கானில்
          முன்னார் கடுவைக் களைதன் தொழினின் றொழியாதே.    2.
                         

823 மெல்லிய புல்லும் வலித்தது பிரமாத் திரமாயே

      வல்லற மலையோ டிழிந்தது பகழிக் குறியாயே

      ஒல்லையி னீத்த மிதியடி புரியும் பொறையாட்சி

     வல்லவ ராடற் கெதுவெது வெனவே யமையாதோ? 3

824 கோள்வழி நீள்கோன் முளைபல ரவர்தா முளவாக

      மூள்வினை யொன்றில் வழுநிலை யுறினும் பதநின்றே

    ஆள்வினை யான்றோர் பதமுட வடைவா ரமைவொன்றில்

    தாள்வலி காகுத் தனுமடி நிலையுஞ் சாலுவமம். 4.

825 மன்னடை யேறும் மாதவ ரடிசேர்ந் தொழுகுஞ்சீர்

     நன்னெறி நாடி நாடுய வறநன் நிலைநிற்கும்

    அன்னவர் பாவற் போலர சுபசா ரங்களுடன்

    துன்னுவர் தேசு கோசலர் தொழுநேர் சூரியராய். 5.

826 அரசிய னெறியிற் பிரசையி னசையோ டரசீய

     வரமிசை யிளவற் கவளெதிர் வேண்டத் தரவுமுடன்

    குரிசின னிலைதா ணிலைபெறு முடிநல் லபிடேகம்

   அரிதுணர் தனதுள் கருதொரு தெய்வங் கரிசாலும். 6.

827 ஒக்கத் தாங்கு மொருபத நிலையுந் தவிசுந்தாள்

    பக்கத் தேறா சனமரு கமருந் தகையொன்று

    மிக்கத் தோன்றுந் தவிசினு நிலைக்கே பதமீந்தான்

விக்கிர முடனா டுவரிட மதிபர் வெகுமதியர். 7

828 அடியடி தோறு மடிநிலை யதுவே சஞ்சலமாம்

இடவது தானு மிறையவ னிலைதன் பதமிடையே

உடநிலை பேறு நலனுறு மொருநன் னிறைநிலையில்

படிதக வுறுமத் திருவுறு படியிற் றன்படியே. 8.

829. கதிக்கேது வாயோர் பதத்தே நடக்கும்

திதிக்கேது வாயோர் பதத்தே நிலைக்கும்

பதிப்பாது நோக்கப் பொருட்பான்மை யாரே

மதிப்பார் நிறுத்தொன்று தோன்றற்க ருத்தே. 9.

830 தாழ்த்திலுந் தாள்கொளத் தக்கமேன் மக்கணேர்

வாழ்க்கைகொள் வார்களத் தானிலாழ் வார்களே

தாழ்த்துகா குத்தனத் தாளிலாழ் வார்க்கவன்

வாழ்த்துபூ வாட்சிமா வாழ்ச்சிதான் வாய்த்ததால். 10.

29. கலம்பகப்பத்ததி

831 எப்பொரு ளவ்விதி டப்பட வேறு

செப்பந லப்பெயர் சீர்நிலை மேவி

நற்பத நல்குமெ னோதிடு மவ்வர

றப்பத நன்னிலை யாகவெ னக்கே 1.

832 மின்னிடை மன்னடி யின்னிலை நங்காய்!

முன்னகை முத்தொளிர் புன்னகை பூத்தோ

ரின்னளி மஞ்சுரை விஞ்சவ ரங்கன்

தன்னொட வன்மனை தானுழை வாயே. 2.

833 நன்மொழி நாயரி பாவலொ லிக்கும்

நன்மையு னைத்தொழு மன்பர்கள் பீழைக்

கன்மமொ ழித்திடு வன்மைபு துக்கும்

மன்மறை முந்தொரு மந்திர மாமே. 3.

834 பீடிரு மாலடி நீடு பரப்பு

மோடலி னீமணி யோடுவ ளர்ந்தே

நீடிய வவ்வெயில் செவ்விய பாவால்!

கூடிய வூழொளி கோடி கொழிப்பாய். 4.

835 ஆதவ புட்கொடி யாதி மராடீ!

காத நிலாவுக லாபந லச்சீர்

மோதுமு னைத்தொழ முன்னுறு மீசன்

மீதணி பொங்கர வங்கள் பதுங்கும். 5.

836 சந்திர தாரையி னாப்பண் மராடீ!

உந்திரு பக்கமு மொக்கம ணிக்கல்

சிந்தொளி யத்திரு சித்திர வண்ணத்

தெந்திரு கண்கவ ரெந்திர வண்ணம். 6

837 மன்னரி யங்கிரி மாணல ணைக்க

மின்வியர் முத்துக ளங்க மிலங்க
  நன்மைய மெய்ம்மயிர் பாது! சிலிர்ப்ப
  இன்னயர் வுன்னணி யம்மணி யேங்கும்.   7. 
 

838. மாட்டிட வுங்களை மாயவன் வந்தான்
வாட்டுமு னேகவி ராக்கத ரென்றே
நீட்டரு ணின்கர மீதரி பாதூ!
ஒட்டொலி யோட்டொளி யோச்சுதி போலும்.                        8

839. மாமணி யாவய மாவரி பாதூ!
ஆமொளி வாய்வட மாயிடு கல்லைத்
தோமறு கூவிர நோக்கரி பாதத்
தாமரை மாவரி யந்திர மாவாய்.                                9

840. பத்திர வுத்திவ ணத்திரி பச்சை
ஒத்துமு கத்தணி செம்மணி யொண்மை
நத்தரி பாதுனை நோக்குவ னாதன்
அத்திரு கொஞ்சொரு கிஞ்சுக மென்றே.                   10

841. மேலரி மாமணி சேரணி யோரத்
தேலொளி பாதுனி லேலும ரங்க
மாலிரு பக்கவ ரிக்கனி மன்னப்
பாலலை யார்தன தாலிலை மேனி.                        11

842. நீரடி யாடிம ராடி! நி தானப்
பாமலி சாலம ளக்கர ளாவி
ஆமறி சூழலி லாயர ரக்கர்
தாமெயி ராமனு டுக்குறி தாரை                              12

843. நாடர சாண்டிடு நான்றும ராடீ!
நீடணி மாமணி நீமநி ரப்ப
நாடணி பாதம மாதவ நாடும்
ஓடதி யென்றுறு கோதுழி தோறும்.                         13

844. நாயக னத்தமு மத்தமு நாகம்
போயிட வையக மூளிரு ளோவ
வாயுறு செம்மணி யம்மணி வாளில்
ஆயொளி யீனிறை சந்திதி கழ்ந்தாய்.                      14

845. இன்னரு ளுந்திறை யேறிவ ழங்கும்
சொன்னிலை செல்லடி தோறுமி யம்பும்
மன்னவ னோக்கும றைக்கலை யென்றே
உன்னுவர் பாதுனை மும்மறை யான்றோர்.               15

846. முத்தெளி கேசர வச்சிரெ யிற்றப்
பத்தக லாதந லத்தரி மாற்றில்
அத்திற லாளரி யாளுதற் கொத்த
புத்துரு நீதிரு பூத்தனை பாதூ!                              16

847. காலடி செவ்விய சீரொலி மாதர்
நாலிவெ யிற்புவ னம்புரி யன்பே
சாலுனை மூதுவர் சாற்றுவர் பாதூ!
மாலடி யாலம ராளமெ னத்தான்.                           17

848. சாரொலி கல்லணி வண்ணவ குப்பில்
ஆரம ணிக்கதி ரார்தலிற் பாதூ!
சேரரி பொற்பத பற்பளி வேத
நேரதி தேவதை நீயென வோர்வன்.                      18

849. மாதவ னவ்வா மாகம றைந்த
போதிட மூள்பிர தோடமு நாட
மாதரு னாதமு றாதற மோனப்
பாதநி லைத்தவம் பாது! பு ரிந்தாய்.                      19

850. ஓடுநர் நீரவை டூரிய வோடை
ஆடம ருத்துட னாடரி நீழல்
கூடரி பாது! கு ளிர்நில மென்ன
நாடவர் நீநெடு வாடற ணிப்பாய்.                         20

851. தேசபி டேசன நீகொள நீமம்
கோசல ராதியன் கூசற வோச்சி
வாசமந் தோதரி வாணுத லிந்து
காசம ழுங்கம ராடி!க லித்தான்.                           21

852. மாயவன் தேவியர் மாடந டக்கச்
சேயரி நீலக லத்துநி லத்துத்
தோயரி தாணிலை தோன்றுதி நேயச்
சாயையெ னத்தகு சாயைய வற்கே.                       22

853. ஒன்றிய சந்திர நீலவொ ளிச்சீர்
நன்றுப தாவனி! நாதன டிப்பூ
மன்றிரு பூமிம டந்தையர் வண்ண
மென்றுபொ துத்திரு மூர்த்தமெ ளிர்வாய்.                23

854. அத்தளிர் மாமணி யங்குலி மாமை
ஒத்தொளி முத்துந கத்தெளிர் பாதூ!
பத்தமு தத்துணர் பத்திப டிந்த
அத்தன டிக்கிள ரக்கிள ரொத்தி.                           24

855. மஞ்சன மாடரி பாதரி சந்தம்
விஞ்சும ணத்திரு மேணிக மழ்ந்தே
மஞ்சணி மலையொ டஞ்சன வண்ணன்
கொஞ்சடி கூடொரு கூடனு கர்வாய்                       25

856. மன்னிலை! நின்னொலி மின்னுரு மாந்தப்
பின்னமு றைப்புல னீதிபொ றாதே
உன்னல வாயிர லோசன மன்னுங்
கன்னமு மாவுரு பன்னக மாகும்.                             26

857. வாற்கர மாயிர மார்த்தந டைக்கண்
ணேற்கரி மாபத மேவரி பாதுன்
பாற்கிளர் புத்தரு ளெட்டுரு வாதி
பாற்கர மூர்த்தியெ னப்பொலி வாயே.                     27

858. காட்டிலு மன்பத நாட்டிலு மொக்கப்
பூட்டிய பாதருள் பூண்டொரு கற்குக்
கூட்டற வில்லெழி லுட்டிய வுன்னை
ஆட்டுவ ரய்யர்ம ணாட்டிகள் சீரே.                          28

859. நற்கதி நாரண னாரண நாறப்
புற்கல மித்திர மண்டில மொத்த
நற்கதி ராயிர நாமணி பாதூ!
சொற்கதிர் நாதநி னொத்தலு திப்பன்.                     29       
860. மின்மணி மீதொளி மீளிவி ளங்கச்
சின்மய நாதமி டித்தும ராடீ!
புன்மையர் செய்மறை மிச்சையு ரைக்கொய்
தன்மெயி னாரணன் தாண்மெயு ணர்த்தி    .               30

861. பேரளி வள்ளனீ பெய்திரு வுள்ள
நீரணி பாதுக! நின்பா மேந்தும்
தாரணி யப்பொறை கண்டளி தானைச்
சாரணி நின்னகை சாத்தினை போலும்.                      31 

862. சீர்மலி வின்மணி சித்திர பானு
பாமலி நின்மல பாவக மின்னீ
கோமலி சந்திர கோமள மெங்கள்
தோமறு முச்சுடர் தூமணி பாதூ!                                32

863. வித்துரு மத்திரு வொத்தொரு முத்திற்
பத்துடை யார்பர வத்தகு தாரை
நத்தளி சந்திர சுந்தர பாதூ!
தொத்தழ னீக்கொரு சந்தியை யொப்பாய்.                   33

864. பாவனி லங்கள ரங்கனொ துங்கப்
பூவிள வப்பன தப்பத நோவா
மேவலி னீவிரி மும்மணி நீமம்
தூவலி யுற்பல மாமலர் தூவும்.                                34

865. மாணில மண்ணலொ டாடம ராடீ!
பூணொளி யோடுநீ பூவொலி பூக்கக்
காணரி தேவியர் கட்கொரு காமன்
தோணிது லக்கிய வாகுது லங்கும்.                            35  

866. பதியு முத்து நகமினிற் பதும ராக மதனினீள்
பதியி ரேகை நிறைவினிற் படயு லாவ னிலவலிற்
கதிய ரங்க னிறைபதக் கலவ னின்று குலவுசீர்
மதியி னின்னை யடிநிலாய்! மகிவ ணங்கி மகிழுமே.         36

867. உலகு வந்த மணிமுடி யுனபி டேக மாடிநீ
இலகு முன்ன லரதனத் திரகு மன்னர் மாபதி
வலமு வந்து வரமணி யொளிவ ளைந்த மண்டிலம்
தலைந கர்க்கு நிறையழ லகழி யாய தடிநிலாய்.!                    37       
868. தளிரு மணிக டவழுமா தபன நிகழு மாதனத்
தொளிரு மமல னடிநிலா யுமிழு முனது மாமணி
யொளிகள் பாத னரிகளை முறிய நலியு முரணொளி
முளைக ளனைய முளைநலம் மலிய வவனி பொலியுமே.                38

869. உலக முமிழு மழகனார்க் குரிய வரிய சுயவரக்
கலைக ளிலகு சுருதிவல் லவிக டளிம களநல
நிலைமை யறையு நிறையொலி யினிய சரண திரணநீ
குலவு னொளியி னிலவுமங் கலிய சரடு தொடுதியே.                    39

870. உரிய வருண நிரைபல யினிய வொலிநல
வரிகொ ளரியி லிலகநீ வரியி லமரர் முடிமிசை
அருளு மரியி னிறைமையே வலகு சாகை யெனவுனைப்
பரிவி லனக மணிபதா வனி! ப ணிந்து புனைவரே.                    40

871. நிலையி லமரு மியலடி நிலை!பொ றுத்தி  யகிலமும்
மலியு மிரத முதிர்பலன் மனந லத்தி லருளுநீ
பொலியு மமல நிலையெனப் பொறை ய ரங்க னிறைபதக்
கலவ லகல லளவளா வளவு சால நிலவுவாங்.                        41       
872. அளியி னீல வரியினீ யழக னார்ப தாவனீ!
களியி லேக ரளிமலர் கமழ லோங்கு புங்கமாய்த்
தளிர ரங்க மணவரன் தகைவி ழைந்த தேவிமார்க்
குளவ னங்க னொலிதருங் குணந யத்தி லங்குவாய்.                    42

873. அகல வாயி ரங்கர மரங்க நாத னடிநிலாய்!
தகவி னீட்டி யோங்குபூங் கனகை நீர்த்த டத்துநின்
னகைத னிற்கொ டுங்கலி நடுந டுங்கி நாடிடா
வகையொலித்தவாகினீ வழங்குவண்ண மெண்ணுவன்.                    43

874. தாள மோடு செம்மணி தளிர மங்க லாதனத்
துரிமை யேற்ற வீற்றிருந் தெளிர்ப தாவ னீயுனைப்
பரத னாட வந்தனை பரவு னாத வம்மகிக்
காம வன்தொ டப்பொரி யரிவி ரிந்த சிகையதாம்.                    44

875. வளைய ரங்க னடைகளே வனைய மீளி மண்டபத்
தளியி லங்கு மரவடி மணிமி னீடு சிறகினீ
கிளரு மீகை வணமிகக் கிறிசெ றிந்த கதிநயத்
தொளிரு மண்ண லுவணனே றுருவ மென்ன நிலவுவாய்.                45

876. அமல னோங்கி யுலகளந் தருணி வந்த திருவடிக்
கமல மண்ண லடிநிலாய்! பணையு னீயு மிணையவே
நிமல வான முனதுநித் திலசு மத்தி னணவிலே
அமைய வொன்று மறுபத வருமை யொன்றி லமருமே.                46  

877. அகம லர்ந்து சகமெலா மமல நன்றி புரிநடைப்
பகவ னுந்து பதமலர்ப் பணிம லர்ந்த பதநிலாய்!
தகவ ணங்கு னிளவிரல் தளிர ணங்கு விரிகுடை
நெகிழு முத்து முகநல னிரையு மிழ்ந்து நிறைதியே.                    47

878. கமலை யுரிய னிருபதங் கதியி னின்க ணிலையுற
நிமல னகில நடையிலே நிகழ வேகி மறிதர
அமையு மகில திதிபர மதனை நின்க ணிறுவியே
அமர வினிய வறிதுயி லயர்வ னாத னடிநிலாய்.!                    48

879. உறவு துன்னு முனதளித் துயமு யற்சி யறுசுயக்
கறைமு யற்சி யவையறக் கனக மன்னு பதநிலாய்!
அறுதி யென்று மறையிடித் தறையு மந்த வுறுதியே
செறிமு யற்சி புரிவர்நின் னிழல மர்ந்து நிலைநலார்.                    49

880. கமலை யிரத நறுமலர்க் கரம லர்ந்த வருடலிற்
சுமையு மிருது பதமலர்ச் சவிய னந்தன் மதலைதான்
அமையு முனது வலிமையி லடிநி லாயி டரிபடத்
தமர வரிய நெடியகற் கசந டங்க ளிசைவனே.                        50

881. தேறுகல் வீறு நீம மேறுபல் வருண மான்ற
வாறுநீ சிலம்பு நாத வாகுமா மறையின் மூலம்
நாறுமா மகிழ்நன் பாவால்! நாடுமால் மேவு மார்வங்
கூறுநான் காய நாதக் கூறுமாத் திரையு ணர்த்தும்.                    51

882. ஒலிநிலைக் குணமு யர்த்தோ ருயர்சதா கதிந யத்தே
நிலவலிற் றனதொ ளிக்கண் ணிறைதலிற் புவன முற்றும்
நிலைகொணின் னிலையி னூன்றி நிகழ்தலி லழகன் பாதூ!
குலவுமைம் பூத மன்னுங் குணவன மாலை யொப்பாய்.                52

883. மீளமன் னகரி ராமன் மிளிரவன் சரணங் கூடி
ஆளுமப் பரந்து டைத்துன் னளிநடைப் புதுமை பூக்குங்
கேளியிற் பாது! விஞ்சுன் சிஞ்சிதத் துலகு வாழ்த்துங்
காள லொலியின் கோலா கலமெழுஞ் சவிப யந்தாய்.                    53      
884. வளர்ந்துல களந்த வள்ளல் வரியிரு சரணம் பற்றிக்
கிளர்ந்தொளி பரந்த சாமக் கிளைகளா யிரங்கண் மீதே
மிளிர்ந்தெழு பாது! நின்கண் பிரமனல் வினையி னன்னீர்
குளிர்ந்தது புரிந்த மொக்குள் குலவுமுன் தரள மொத்தே.           54

                                                                                 
885. சோதிசேர் சாதி யேமஞ் சுடரெழி லசோக மாழை
போதமா தவன தாடற் கூடலர் திரும லர்த்தாள்
மாதிரந் தோறு நாறு மலர்வர ராக நாதன்
பாதுகாய்! பூக்கு முன்கண் பரிமள வசந்த நோக்கே.                    55

886. பரனடிப் பதும நாறல் பரகதிக் குறுதி தேறல்
எரிதுவர் முத்தி லங்க லெழுநிறை  யிராக மன்னல்
உரனலர் மனன மூற லுறுநிலை யரங்கன் பாதூ!
விரிதலிற் புனிதர் சித்த விருத்திநீ நிறுத்தி யொத்தி                    56

887. உறைநவ மணியி னெல்லிற் கூறுதொல் வேறு பாட்டில்
நிறைநவ வரிக்க ணெல்லை நிறுவிநீ யிறைவன் பாதூ!
துறைநவ நயத்த மாயன் தொடுகழல் தொழுதற் கொத்த
அறைநவ நாபர் கண்ட மண்டலங் கொண்ட பண்பே.                    57

888.  தேறுசொல் லார வில்லோர் வீறணி குணத்துப் பாதூ!
         கூறுபன் மணியி னீமக் கோவையின் சோதி  மல்க
         ஏறியத் தறுக ணானைச் சிகரமீ தமர நின்சீர்
         ஏறுமக் கும்ப மின்னீ டிடுமுடு மாலை வண்ணம்.                 58.   

889. புரியுமுன் தருமம் பாதூ முன்னுபூந் தவிச மர்ந்தாங்
கரியமுத் தணிகு ணங்கொள் ளக்கரத் தக்க மாலை
விரவநீ யருகி னாதன் விரிபத மலரின் விம்பம்
தெரியநின் மனத்து முன்னற் றிதிநல நிலைத்தி போலும்.                59

890. பெற்றதன் னொற்றை யெச்சப் பற்றினிற் பேணி வையம்
முற்றுமன் னொக்க நோக்கி முகந்தரு முகுந்த னொக்க
நிற்றலிற் கதியி னின்கண் ணிறுத்தவ னிலைபெ றுத்தல்
நற்றுயில் புரிய நின்கை யடை த்தல்கை முதியம் பாதூ!                60

891. இடியரு ளரங்க நாத னிணையடி வழங்க நின்னோ
டடிநிலை! கடிதி னின்னை யஙகுபுத் தேளி ரீட்டங்
கடிமலர் பொழிந்து நின்சீர்க் கதிநலம் பரவி யாங்கே
குடியிறை யிடுமு ழக்கி லுலகுக ளெதிரொ லிக்கும்.                    61

892. முனிவரர் நியமமேறு முறையகம் நிறைய மேவி
இனிதடி தோறுமேலு மெண்ணுபண் பண் ணடையின் வண்ணப்
புனிதநின் னொலியி லத்தன் புனைபதத் திரண! நீயே
தொனிமறை யனைய நாதன் துணையடி துலக்கு வாயே.                62

893. திதிதிறை கலைக டோறு மினிநயத் தமுத ரோம்பச்
சதிரணி யமல நீழற் சந்திர முழுமை சால
முதுநல நிலவிற் பாதூ! முழுமதி யுதய மேறிப்
பொதுளக விருள கற்றும் பூரணை  யொருத்தி நீயே.                    63

894. மென்னடைப் பந்தி நாடும் பீடுசொன் னடைதொ டுக்கும்
உன்னதத் திழுக்கு நீக்கும் முடலையிற் சுடலை யாடி
சென்னியின் மிளிருஞ் சேறும் பிறையொடு ககுத்த ருய்யும்
நன்னரிற் கங்கை யொத்தோர் பாதூ! நீ தோன்ற லுற்றாய்.                64

895. துய்யதிருப் பளிகுருவ மிளிரப் பாதூ!
               சுருதிவளப் பரிமளமேன் மேலு நாறச்
        செய்யபொருண் மெய்யுறுதி தெரிக்க நீதி
              செறியதிருச் செல்லுமடி தோறுஞ் செவ்வி
        பெய்யருணீர்த் துறைபெருக வுருப்ப நீக்குஞ்
             சீதநயத் தளித்துலகு நடத்து முன்னைக்
        கையிலகு திருக்கொடுக்கு மிடுக்கில் வையம்
            பையவிளை யாடுநடைக் காளை நாடும்.                        65

896. பிறங்குதிரு வடிநிலைகா ளரங்க நாதன்
            திருவளர்தன் னடையினிலம் வளையு லாவுந்
       திறங்கொளநும் மணியொலியி லிருப தங்க
           ளிடுமியலி னிணையினடைத் தொடர்புக் கொத்த
       நிறங்கொளநா வருங்கிளவி நடக்க வோதும்
           நீதியிலோர் துளக்கமற நிலங்க டோறுங்
      கறங்கலிலின் மறையினிசை முறையொ லிக்க
           வமையுமிடங் கணியிணையிற் செறிவீர் நீரே.                66

897. துன்னுதனை யேத்திமனத் துன்னு நல்லோர்க்
                குற்றபக லெல்லியற வுதித்துப் பாதூ!
          மன்னுயிர்க ளுய்யமணிக் கதிரு ணர்த்தி
                யுத்தமுறு தோடவிடர்த் தொத்த றுத்துப்
           பன்னுகலைப் புலவர்நிரை பரவும் பண்பிற்
               பரமனலப் பதமலர்தாள் விரியும் வண்ணச்
           சொன்னமயக் கரத்தினிறம் பரப்பித் தோன்றுங்
               கோதறுமுற் சந்தியென வோங்கு வாயே.                        67

898. தெருளுமணி நோக்குறமென் னடைந யத்துச்
              செம்மணியின் செழுமையுமி ழிதழ்க னிந்து
        தெருவரிய நுழையிடையின் மின்னல் மன்னித்
             திகழுமணி வலயநலஞ் சிலம்ப நீர்மை
        விரியொளிமுத் தருமைநறு முறுவல் பூத்துச்
            சேரரியின் மாமையிலோர் சாமை பூக்கத்
        தெரிவனுனை யடிநிலை! யா னயன்ப டைக்கு
             மிளம்பிடியர் படிச்சந்தப் பாவை யென்றே.                        68

899. கண்படமன் னவன்குடிக ளரசொன் றின்றிக்
                கலங்கிநிற மழுங்கிநிலை குலைந்து வாடும்
        பண்டொருநான் றணிமணியா சனத்த மர்ந்து
              பரமனணி பாதுனிறை பாடி லங்கும்
        பண்பினிற நெறிநுதலுன் பாரிப் பொன்றிற்
              படரொளியுன் னலமணிக ணிறங்க ணாட்டும்
        நண்பினிலைக் குணமறையவ் வரைய றுக்கும்
              நலமிசைநன் னூலின்விழுக் காடு சாலும்.                            69

900. மேவருணற் குருக்களுனைத் திருமாற் கிட்டோ
             ரேற்றலுரை சாற்றியடி யேற்க வென்றே
        கூவவுனைப் பூவடியி லேந்தி யண்ணல்
           கூடிநடை யாடுதிருக் கண்டு தொண்டர்
       பாவனிலை யுய்வணமுன் பால தென்றே
           பாவனநீ புரிந்தசரண் தமக்கு மாகத்
      தூவுளமன் னுனதுரிமை யுறுதிப் பாட்டிற்
          புரிந்தபெருந் தவத்தாவர் தாமே யாவார்.                            70

901. ஆற்றுகறைக் கருமவயச் சரும யாக்கை
             கழன்றகலுங் காலமுற வடியோங் கட்குப்
        போற்றுமறை முடியரங்க னடிப்பூ மன்னும்
             புனிதமணி பாதுன துன் மணியி னாதங்
        காற்றுவிரி தேனலருந் துளவ நாற்றங்
            கலந்துகுளிர் முதிரிரத முமிழ்ந்து வாட்டம்
       மாற்றுதெரு ளாரமுதஞ் சுருதி யார
            வார்த்தருளு நயத்திலெம தார்த்தி நீக்கும்.                        71

902. கண்ணுதனின் பணியின்முடி நண்ணித் தாழ்த்தக்
               கண்ணிதவ ழிந்துமணிக் கதிர்கள் மேவத்
        தண்ணிலவுன் சந்திரமா மணிகள் விந்து
           தளிர்ந்தவலர் மலிந்தநளிர் வளத்துப் பாதூ!
       எண்ணரிய பவவுரும மருகாந் தாரங்
           கிடந்துழலு மெளியருனை யடைய நின்னோர்
      தண்ணளியின் துளிகளவை தெளித்து நீயே
           தணித்தருள்வா யவர்கணெடு வாட்ட மன்றே.                     72

903. கொண்டவருவச் சிரத்தரிமின் னீலக்காரி
           குலவுகுளிர் முத்தெளிநீர்த் தாரை நல்கக்
      கொண்டநடைச் சபலையெழில் பொழிய வண்ணக்
           கொண்டலென விண்டுபதத் தொலிக்கு முன்னைக்
      கண்டுகளி கொண்டவளி நீல கண்டன்
           கனத்தொருசந் திரகநுதி யுயர்த்த வாறே
     பண்டருதன் கனருசியே பரவப் பாதூ!
            பரிந்துநெடுந் தாண்டவநன் றாடு வானே                        73

904. உலகநல மனவரதங் கருது முள்ளத்
             துலகளந்த பரமனடி புரந்த பாதூ!
       மலியுனளி மலர்த்தரியி னிருதா ளேந்தி
           மலர்மகளோ டரங்கநகர் முற்றுஞ் சுற்றித்
      தலமெழுமங்கலநிகழும் விழவு தோறுந்
          தடையறவொவ் வொருவரக வாயி னாடி
      நலமவர்பால் வினவுநயம் விளங்கு நின்சீர்
           நவமணியி னிறையொலிநீ புரிகின் றாயே.                    74

905. உளங்குளிரக் குடைந்துவிளை யாடல் பூக்கு
             முவகைவிரி பக்கவணி யொக்க மன்னக்
        கிளர்மதன வளத்தனுநாண் குணத்துக் கொத்த
           கிழமையொலி நயநிகழ வரியி னீலம்
       ஒளிர்புகலி லொருபுகலென் றரியின் செந்தாள்
          உமிழ்மதுவொன் றுயர்மதனி னுகரு நீயே
      அளிநலமன் னருளினிலை வண்ணத் தண்ண
             லடிநிலை! யொன் றுற்றவெமக் கபய மாவாய்.              75

906. கனகமுதிர் கதிரடையச் சடையின் செவ்வி
             கனத்தெளிர்மா மணிக்கிளர்தன் பொற்பின் கற்கள்
        கனலுமுடி மின்னிலைமீ தவனி பாயுங்
             ககனநதி தரளவொளி புரளக் கோணிற்
       பனியலையுங் கலைப்பிறைநீர் தலைப்பெ யத்தான்
             பவனெனுமுப் புரமெரித்த பகவ னத்தன் 
       குனிமுடியிற் கொள்ளவுனை வள்ள லன்னான்
         குணநெடியன் பாவலவை யாவி லோங்கும்.                     76

907. ஊங்கமுத ரொழுங்கிலிரு மருங்கு மொக்க
            வுணர்களுடன் பணியவவர் முடியிற் பாது!
        தாங்கவவர்க் கிட்டபரி வட்டப் பாங்கிற்
             றனுகழலத் தரளவெயிற் சட்டை நாற
      வாங்கொருதன் சேடநிலைக் கெல்லை சாலப்
           பாலலையன் துயில்பள்ளி பயின்ற சேடன்
      ஓங்கியிரு பதத்திரண விசித்தி ரங்கொள்
           ளோருருவ மெனவடியே னோர்வ னம்மா.                    77

908. சென்னியுறை பிறையணியி னொழுகு சீதஞ்
             செறியமரர் சிரமலரின் மதுக்க லந்து
       துன்னுபதத் திரணவணத் தயன்தொ டங்கிப்
              புல்லிறுதி யாகுலகு வகைவ ரம்பில்
       மன்னியத னுதயநிலை பெறுத்த னீக்கல்
           மதிபுகுதல் முனிதலரு ணோக்க லாக்கும்
      முன்னலரி புரியுநிறை முன்ன லண்ண
          லோதுமணி பாதநிலை போற்று வாமே.                     78

909. விஞ்சருளத் திருமகளார் சிஞ்சி தச்சீர்
            விரவியெழு விரைவினயம் பயந்து வீசுன்
        மஞ்சொலியுஞ் சந்தவிரைத் திருத்து ழாயின்
             மணமுமுட னுகரவொரு நான்று நின்னோ
        டஞ்சலெனக் கஞ்சமலர்க் காடு பூத்த
            கண்ணெடிய தண்ணளியின் வண்ணத் தண்ணல்
       கொஞ்சளியிற் றொல்லடியேன் முன்னந் தோன்றச்
           சோதிமணி பாதுக! நீ யுதவு வாயே.                        79

910. தாங்கம ராடி! நீ யாடரி நின்னைத்
        தாங்குவன் பூவிடை நீநடை யாட 
        ஓங்கரி தக்கய கூர்மலி யாள
        ஓங்கலு யர்ந்தெழு போதியு ருக்கண்.                        80