வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி

சுலோக‌ம் 14

 

சுலோகம் 14

த்வத்புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே:
த்யக்த்வா புஜாந்தரகதாமபி வைஜயந்தீம்|
பத்யுஸ்தவேஶ்வரி மித:ப்ரதிகாதலோலா:
பர்ஹாதபத்ர ருசிமாரசயந்தி ப்ருங்கா:|| .14.

வண்டினமான் மார்பின் வனமாலை கைவிட்டு
மண்டிநீ சூடியருண் மாலைமுடி -- யண்டி
யடையச் சுழலுதனி னன்புடையோர் பீலிக்
குழைநிழலி லாள்தல்குறிக் கும். .14.

பதவுரை

ஈஶ்வரி -- ஈச்வரியே! ப்ருங்கா -- வண்டுகள்; புஜாந்தரகதாமபி வைஜயந்தீம் -- திருமார்பில் இருக்கும் வஹஜயந்தி என்னும் வனமாலையை; த்யக்த்வா -- விட்டுவிட்டு; மித:ப்ரதிகாதலோலா -- ஒன்னுக்கொன்று மேல்விழுந்து பக்ஷங்களையடித்துக்கொண்டு சஞ்சலமாய் சுற்றிக்கொண்டு; தவ பத்யு: -- உன் பதியினுடைய; த்வத்புக்த மால்யஸுரபீக்ருத சாருமௌளே -- உன்னால் சூடப்பட்ட மாலையின் வாசனை ஏறிய திருமுடிக்கு; பர்ஹாதபத்ர ருசிம் -- மயில்தோகையால் அமைந்த குடை போன்ற சோபையை; ஆரசயந்தி -- உண்டு பண்ணுகின்றன.

அம்மா ஈச்வரியே! ஆண்டாளே! வண்டுகள் உன் நாயகன் திருமார்பிலுள்ள வைஜயந்தி வனமாலையை விட்டுவிட்டு, நீ சூடிய மாலையால் பரிமளமாய்ச் செய்யப்பட்ட உன் நாயகன் திருமிடிக்கு மேல் தாங்கள் ஒன்றின் மேலொன்று இறக்கைகளை அடித்துக்கொண்டு ஒன்றையொன்று மோதிக்கொண்டு சுற்றிச் சுழன்றுகொண்டு மயில்தோகை போன்ற குடையின் ஆகாரமான சோபையைச் செய்கின்றன.

அவதாரிகை

அநந்தரென்னும் சேஷர் குடைக்கைங்கர்யம் என்னதே என்று முன்வருவார். மற்றொருவரும் அப்பணியைச் செய்ய இடம் கொடார். தம் திருமேனியைக் குடையாக ரசனை செய்துகொள்ளுவார் என்று முன் சுலோகத்தில் ஸூசிப்பிக்கப் பட்டது. ஆண்டாள் திருக்கல்யாணத்தில் யார் குடை பிடிக்கிறார்? அல்லது யார் குடையாகிறார்? நாகரா அல்லது வேறு யார்? அநந்தர் குடையாகவில்லை. ஆண்டாள் பூந்தோட்டத்து ஸ்நேகமுள்ள வண்டுகளே ஆசைப்பட்டுக் குடையாகின்றன. குடையே சுற்றும் விசிறியுமாகிறது. இந்த வண்டுக் கூட்டத்தாலமைந்த குடை, பாடும் குடையுமாயிற்று. சுற்றிச் சுழன்றுகொண்டு கல்யாணப் பாட்டுப் பாடுகின்றன. தங்களுக்கும் பூந்தோட்ட ப்ரியஸகியும், ஈச்வரியுமான கோதையின் வதுவையில் மங்கள வாத்யகோஷம் செய்கின்றன. பல்லாயிரம் சேஷர்களாக வண்டுகள் கூடி தங்களையே மயில்தோகைக்குடைபோல மாப்பிள்ளை திருமுடிக்குமேல் சித்ரவர்ணக் குடையாக ரசனை செய்துகொண்டு சுற்றிச் சுழன்று பறந்துகொண்டு ஆனந்த பரவசமாய் நர்த்தனமும்கானமும் செய்கின்றன. மங்களகான கைங்கர்யத்தை இந்த வண்டுகள் மகிழ்ந்து தாமாகவே செய்வதை 16ம் சுலோகத்தில் ஸாதிக்கப் போகிறார்.

(2) ஸகிகள் பரிஹாஸப் பேச்சுகளை இந்த வண்டு ஸகிகள் பொய்யாக்குகின்றன. பூந்தோட்டத்தில் கோதை ப்ரியமாய் வளர்த்த வண்டுகள். ராமாவதாரத்தில் பெருமாள் காடு போகையில் மரங்கள், புஷ்பங்கள், அங்குரங்களெல்லாம் வாடின. பக்ஷிகளும் 'வேண்டாம், வேண்டாம்' என்று கதறி மறித்தன. 'எந்த தண்டகாவனத்தில் வ்ருக்ஷங்களும் ம்ருகங்களும் எனக்கு பந்துக்களோ' என்று உத்தரராம சரிதத்தில் ராமன் வார்த்தை. பூந்தோட்டத்தில் மரங்களொடும் மான்களோடும் பந்துவாய்ப் பழகினாள் சகுந்தலை. ஆனால் வண்டுகளோடு அப்படி ஸ்நேகமாய்ப் பழகத்தெரியவில்லை. ஓர் வண்டு படுத்திய பாட்டை அவள் பொறுக்கமாட்டாமல் ராஜா வந்து காக்க வேண்டியதாயிற்று. கோதை ஈச்வரி, வண்டுகளுக்கும் அவள் ஈச்வரி, வண்டுகளுக்கும் அவளிடம் மிகுந்த ஸ்நேஹம்.

ஈஶ்வரி -- ஈச்வரியே! ஆண்டாள் ஈச்வரி என்பதில் என்ன தடை? பிறவியிலேயே ஆண்டாள் விஷ்ணுபத்நியாகையால் ஜகத்திற்கு ஈசானையென்பதில் என்ன சந்தேகம்? 'அஸ்யேசானா' என்னும் ச்ருதி ஸாக்ஷாத்தாகப் பூமிப்பிராட்டியாகிய உன்னைச் சொல்லும். இந்த ச்லோகத்தில்தான் முதலில் ஈச்வரி என்று அழைப்பது.

ப்ருங்கா: -- வண்டுகள். வண்டுகளுக்கும் நீயே ஈச்வரி. ப்ரியமான ஸகி. வண்டுகளுக்குள் தலைமையானது 'ராணி வண்டு' என்பர் ப்ராணி ஸ்வபாவ சாஸ்த்ரக்ஞர். வண்டுகளின் ஈச்வரியான ராணிவண்டு, எல்லா வண்டுகளையும் கூட்டிக்கொண்டு ஈச்வரியான உனக்கு ஆசையுடன் பணிவிடை செய்கிறது. 'குயில் நின்றார் பொழில்சூழ் குருகூர் நம்பி' வால்மீகி கோகிலம் போன்ற நம் குருகூர்க் கோகிலம் கூவின தாம்ரபர்ணீ நதிச் சோலையில் நாமும் கூவி மணம் பெறுவோம் என்று குருகூர்க் குயில்கள் கூவுவதுபோல், அக்குயில்களோடு குயிலாய் மதுரகவியும் மதுரமாய் மதுராக்ஷரமாய் மாறனைக் கூவினார்.

புஜாந்தரகதாம் அபி -- வைஜயந்தியைக்கூட; லோகோத்தரமான வனமாலையையும் வைஜயந்தியின் ரஸபரிமளத்தை ப்ருந்தாவன ப்ருங்கங்களறியும்.

தவ பத்யு: -- உன் பதியின். உன் பதியினுடைய ஈச்வரீ என்று இருக்கிறபடி சேர்த்து அந்வயிப்பதிலும் திருவுள்ளம். 'தவ பத்யு:ஈச்வரி' உன் பதிக்கும் நீ ஈச்வரியானவளே. 'பும் ப்ரதானேச்வரேச்வரீ' என்பதைக் கவனிக்க. சிதசித்துக்களுக்கும் ஈச்வரனுக்கும் ஈச்வரி, அல்லது சிதசித்பரரான தத்வத்ரயத்திற்கும் ஈச்வரீ. விவாஹ அவஸரத்தில் "மூர்த்தாநம் பத்யுராரோஹ" என்று ஆசீர்வாதத்தைப் பணிப்பர். 'உன் பதியின் தலைமேல் ஏறுவாயாக'. கோதை தன் பாரதந்த்ரியத்தையே நினைந்து நாயகன் வற்புறுத்தியும் அவர் அவளைத் தலையிலேற்றிக் கொள்ள இடம் கொடுக்கவில்லை. அவள் சூடிய மாலை அவர் தலையில் ஆரோஹம் செய்தது. ஆசீர்வாதம் ஏதோ ஒரு ப்ரகாரமாய் ஸத்யமாயிற்று.

த்வத்புக்தமால்ய ஸுரபீக்ருத சாரு மௌளே: -- நீ சூடிக்கொடுத்த உன்னால் புக்தமான மாலையால் அதிக பரிமளமுடையதாகச் செய்யப்பட்ட மைவண்ண நறுங்குஞ்சிக் குழலோடுகூடிய அழகிய திருமுடிமேல் (திருமுடிக்கு). உன்னால் புக்தமானாலும் அந்த மாலை நிர்மால்யமாகவில்லை. நீ சூடியும் பெருமாளுக்கு மால்யமாகவே ஆயிற்று. 'புக்த' என்பதற்கு ரக்ஷிக்கப்பட்ட என்றும் பொருள். அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை. பெருமாளுக்கு ப்ரியமான பரிமளத்தை கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி அம்மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய். 'ஸுரபீக்ருத' என்பதற்கு 'முன்பு வாசனையற்றதாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று' என்று பொருள். அனுபவிக்க ஆசையால் நீ சூடவில்லை. பெருமாளுக்கு ப்ரிநமான பரிமளத்தைக் கந்தம் கமழும் உன் கூந்தலிலிருந்து ஏற்றி அம்மாலையை பரிமளப் பெருக்கால் ரக்ஷிக்கவே சூடினாய். 'ஸுரபீக்ருத' என்பதற்கு 'முன்பு வாசனையற்ற தாயிருந்து இப்பொழுதுதான் உயர்ந்த கந்தத்தால் வாஸிதமாயிற்று' என்று பொருள். 'அபூததத்பாவே ச்வி:' ஸர்வகந்தனுடைய குழல் முன்பு அற்புத கந்தமுடையதுதான். ஆயினும் இப்பொழுது ஏறிய புது அதிக வாசனையைக் கவனித்தால், முன்னிருந்த அற்புத வாசனையும் இல்லையென்று சொல்லவேண்டியதாயிற்று. வாசனை மட்டுமல்ல, இம்மாலையால் அழகும் அதிகமாயிற்று.

மித:ப்ரதிகாதலோலா: -- வண்டுகள் ஸ்வபாவத்தால் சஞ்சலம். இப்பொழுது ஒன்றுக்கொன்று போட்டிபோட்டுக்கொண்டு நான் முன்னே நான் முன்னே என்று மேல்விழுந்து கொண்டு ஒன்றின் பக்ஷங்கள் மற்றொன்றின் பக்ஷங்களை நெருக்கிக்கொண்டு ஒன்றோடொன்று அவிச்சின்னமான தொடர்ச்சியாக கனமான சங்கிலிக் கோர்வையாய்ச் சுற்றிச் சுழன்று (ரீங்கார கானம் செய்துகொண்டு) பெருமாள் திருமுடிமேல் இவ் வண்டுமாலை யிருப்பதால் திருமுடிக்குமேலே அதைச் சுற்றிலும் விசித்ரமான மயில்கொடையாயின; மயில்வசிறியுமாயின. 'மதுரமா வண்டு பாட மாமயிலாட ரங்கத்தம்மான்' அல்லவோ மணாளர். அரங்கத்தில் பாடும் வண்டு வேறு, ஆடும் மயில் வேறு'. புதுவை நந்தனத்தோட்ட ஆண்டாள் வதுவையில் வண்டுகள் கூடி மயிலுமாகின. வண்டுகளே ஆடிப்பாடின. 'லோலா:' என்பது சாஞ்சல்யமென்னும் சுழலாட்டத்தையும் சொல்லும், மிக்க ஆசையையும் சொல்லும். அநந்தநாகருக்கு மேல்பட்ட ஆசை. அநந்தர் குடையானார். கருடன் விசிறியுமாவார். வண்டுகள் இருவர் பணியையும் செய்தன. அவர்கள் இருவரும் பாடார். சேஷத்வத்தில் இத்தனை ருசியைப் பார்த்ததும் அநந்தர் கிட்டவராமல் ஒதுங்கி சாக்ஷியாகப் பார்த்து ஆனந்தபரிதராய் ஸ்தப்தராய் இருக்கிறார். இந்தச் சிறு பக்ஷிகளின் கைங்கர்ய ருசியைப் பார்த்து பக்ஷிராஜன் மகிழ்ந்து நிற்கிறார். ஒன்றுக்கொன்று நெருங்கிக் கொள்வதால் வண்டுக்கூட்டங்கள் குடையின் ஒற்றுமையை அடைந்தன. நடுவில் இடைவெளியே இல்லாமல் நெருங்கிக் கோர்த்தன. விஷ்ணுசித்தர் பல்லாண்டு கானத்தைக் கேட்டிருந்த வண்டுகள் பலகோடி நூறாயிரமாகச் சேர்ந்து குடையும் விசிறியுமாகி மாப்பிள்ளையின் முடிக்குமேலே இன்புற்றுப் பல்லாண்டு பாடின. 'பத்ரம் தே' என்று பல்லாண்டு ஆசாஸனம் செய்தார். "பாணிம் க்ருஹ்ணீஷ்வ பாணிநா" என்று பேசும் பாணிக்ரஹண அவஸரத்தில் சீதைப்பிராட்டியின் பாணிக்ரஹண ச்லோகத்தை நினைத்து 'என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைமேல் என் கைவைத்து ' என்று கனாக் கண்டாள். ஸ்வப்னவதுவையில் மூன்று அவதாரங்களைச் சுட்டி அனுபவம்.

பர்ஹாதபத்ர ருவிம் ஆரசயந்தி -- மயில்தோகையாகும் சேஷத்வ ருசியைச் செய்கின்றன. குடையின் சோபையை அடைகின்றன. குடைபோல சோபிக்கின்றன. 'ருசி' என்பதற்கு ஸாத்ருச்யம், சோபை, காந்தி, ஆசை முதலிய பொருள்கள் உண்டு. எல்லாம் இங்கே கவியின் ருசியிலுள்ளன. 'ஆ' என்பதால் குடையின் நீட்டமும் அகலமும், நெடுமையும், ஆசையின் நீட்டமும் ஸூசிக்கப் படுகின்றன. 'உஷ்ணம் தெரியாமல் காப்பத' விசிறிக்கும் பொது. ஸ்வாரஸ்யாதிக்யத்திற்காக குடையென்னும் ரூடிப்பொருளை ஒரு யோஜனையில் விட்டுவிட்டு யோகப்பொருளில் ருசியைக்கொண்டு வ்யஜனமென்றும் பொருள் கொள்ளலாம். சிரஸுக்கு மேலே விசிறி சுற்றவிட்டு சூட்டைப் போக்குவதைக் கண்டுளோம். ஆரண்யகரான ஈச்வரருக்கும் பூந்தோட்டக் கோதைக்கும் திருமண உத்சவத்தில் தங்கள் ஈச்வரிக்கும் ப்ரிய ஸகிக்கும் மணாளனுக்கும் வண்டுகள் தாமே இப்பணிகளை ருசியுடன் செய்கின்றன. எல்லா ப்ராணிகளுக்கும் ஈச்வரரும் ஈச்வரியும் பொதுதானே! தித்திரிபக்ஷிகள் ஆனந்தமாய்ப் பாடுகையில் ஆனந்தமயப் பெருமாளையும் பக்ஷியாகவே பாடின. புச்சப்ரஹ்ம வாதத்தில் இந்த ரஸமில்லை. பாடும் பக்ஷிகள் பெருமாளைப் பக்ஷியன்றென்று பாடுமோ? 'ரஸோ வை ஸ:' என்னும் ரஸப்ரகரணத்தில் ரஸத்தை விடுவரோ? (14)

திங்கள், 6 பிப்ரவரி, 2017

கோதா ஸ்துதி

கோதா ஸ்துதி
ஸ்ரீ அன்பில் கோபாலாசாரியார்
1937ல்
ஸ்ரீவேதாந்த‌ தேசிக‌ ஸ்ரீஸூக்தி ச‌ம்ர‌க்ஷ‌ணீ
இத‌ழில் எழுதிய‌து.
சுலோக‌த்தின்
த‌மிழாக்க‌ம்
"ஸ்ரீ ஆண்டாள் மாலை"
சென்னை திருவ‌ல்லிக்கேணித் த‌மிழ்ச்ச‌ங்க‌ம்
வெளியீடு 11 (27-7-1941)




கோதா ஸ்துதி

சுலோகம் 13
நாகேஶயஸ் ஸுதநு பக்ஷிரத: கதம் தே
         ஜாத: ஸ்வயம்வரபதி: புருஷ: புராண: |
ஏவம்விதாஸ்ஸமுசிதம் ப்ரணயம் பவத்யா:
         ஸந்தர்ஶயந்தி பரிஹாஸகிரஸ் ஸகீனாம் ||   .13.

பணியிற் படுத்தான் பறவைதனை யூர்ந்தான்
அணியிற் றிகழ்கிழவ னன்பன் -- மணியிற்பூஞ்
சேடுலவுங் கோதையெனச் சேடியர்கண் மெல்ல நகைத்
தாடுமொழிக் குள்ளமகிழ் வாய்.             .12.

பதவுரை

         ஸுதநு -- அழகிய மேனியமைந்தவளே!; நாகேஶய: -- பாம்பணையிற் பள்ளி கொண்டவனும்; பக்ஷிரத: -- பக்ஷியின் மேல் சவாரி செய்கிறவனுமான; புராண: புருஷ: -- கிழவர்; கதம் -- எப்படி; தே -- உனக்கு (உனக்கிஷ்டமான); ஸ்வயம்வரபதி -- ஸ்வேச்சையால் வரிக்கப்பட்ட பதியாக; ஜாத: -- ஆனார். ஸகீநாம் -- (உன்னுடைய தோழிமாருடைய; ஏவம்விதா -- இப்படிக்கொத்த; பரிஹாஸகிர: -- பரிஹாஸப் பேச்சுக்கள்; பவத்யா: -- உன்னுடைய; ப்ரணயம் -- நாயகன் விஷயமான ராகத்தை,(விருப்பத்தை); ஸமுச்சித: -- தகுதியுள்ளதாக; ஸந்தர்ஶயந்தி -- நன்றாய் விளக்குகின்றன.
         அழகிற் சிறந்தவளே! பாம்பின்மேல் படுப்பவரும், பக்ஷியின் மேலேறிப் பறப்பவரும், தனக்கு மேல்பட்ட மூத்தோரில்லாத கிழவருமானவர் எப்படி நீ ஆசைப்பட்டு வரித்தவரானார்? என்றிம்மாதிரியான தோழிகளின் பரிஹாஸமொழிகள் (உண்மையில்) உன்னுடைய பதிவிஷய ப்ரணயம் மிகவும் உசிதம் என்று நன்கு காட்டுகின்றன.

         அவதாரிகை

         (1) ஆண்டாள் பிறப்பையும், அவள் பிறப்பு முதலிய ஸம்பந்தலேசங்களாலும் வரும் லோகோத்தரமான ஏற்றங்களையும் ஸாதித்தார். ஆண்டாள் கல்யாணம் ப்ரஸ்துதம். வதூவின் பிறப்பின் சிறப்பை ஸாதித்தார். வரனின் சிறப்பைப்பற்றி என்ன பேசுவது? பிறவாதவனுக்குப் பிறப்பேது? இந்த வரனுக்கு ஜாதகமென்ன? ஜாதனானாலல்லவோ ஜாதகமிருக்கும்!
         (2) கல்யாண விஷயத்தில் 'சீலம், வயசு, வ்ருத்தம்' முதலியதெல்லாம் துல்யமாக அநுரூபமாக இருக்கிறது. ஆகையால் ராகவனும் ஸீதைக்குத் தக்கவர், ஸீதையும் ராகவனுக்கேற்றவள் என்பரே! இங்கே சேர்க்கை ஔசித்யங்கள் எப்படி?
         (3) கல்யாண ஸந்தர்ப்பத்தில் தோழிமார் மாப்பிள்ளையப் பற்றிப் பரிஹாஸங்கள் பேச வேண்டுமே! கோதை நர்த பரிஹாஸோக்திகளில் மிகக் கெட்டிக்காரியான நர்மதையல்லவோ! அவளுக்கு இன்பமான பரிஹாஸ வசனங்களைப் பேசவேண்டுமே! அந்தத் தாயார் கல்யாண விஷயத்தில் மேல்பார்வைக்கேனும் பழிப்புகள் போன்ற நர்ம ஹாஸங்களை நாம் பேசக்கூடாது. அடியோடு ஏசல் இல்லாமையும் கல்யாணத்திற்கு ஒவ்வாது. தோழிகள் மூலமாகத் துளியே பேசுவோம். பாதி ச்லோகத்தோடு பேசி நிறுத்துவோம். அரைகுறையாகவே பேசுவோம்.
         (4) பரிஹாஸம் பேசிப் பழிப்பது துதியாகுமோ? துதியல்லவோ இங்கே ப்ரஸ்துதம்! இந்த க்ரந்தம் கோதை நிந்தை க்ரந்தமல்லவே! அல்ல. துதிதான். நிந்நையே துதியாகும். இது வ்யாஜஸ்துதி அணி.
         (5) ரங்கத்தில் ஹாஸ்யம் ப்ரதானமே. அரங்கர் கல்யாணத்தில் ஹாஸ்யம் வேணுமே!
         நாகேஶய: -- பாம்பின் மேற்படுப்பவர். ஸஹசயன மனோரதம்தானே முதன்மையானது? 'பாம்போடு ஒரு கூரையில் வசிப்பதே துன்ப'மென்பர். படங்களை விரித்திருக்கும் ஆயிரம் தலை பாம்பின்மேல் என்றும் சயனிப்பவராயிற்றே! நாகேசயன் என்று அலுக்ஸமாஸத்தினால் இப்படுக்கைதான் நித்யம், இதற்கு லோபமேயில்லை என்று வேடிக்கை. பத்னியோடு சேர்க்கைபோல படுக்கைக்கும் நித்ய யோகம். பாம்பின் விரித்த படங்களே படுக்கைக்குமேல் அஸமானகிரி. இந்த விதானத்திற்கு ஸமானமில்லையாம். அஸமானமாம். பாம்பின் சிரோரத்னங்களே படுக்கையறை தீபங்கள். இது என்ன படுக்கை ஜோடிப்பு? பெருமாள் நித்ராளுவானாலும், இப்பாம்புக்குத் தூக்கமேயில்லை. பாம்பு தூங்கினாலும், அக்காலத்திலாவது பயமற்றிருக்கலாம். நீர் ஜாக்ரதையாயிருந்தாலும், தூங்கினாலும், நான் தூங்காமல் கண்ணைக் கொட்டாமல் விழித்திருந்து காவல் ஊழியம் செய்வேன் என்று வ்ரதம் அனுஷ்டிக்கும் படுக்கை. கல்யாணத்தில் பரதேசம் போவதற்குக் குடை பிடித்துக்கொள்ள வேணுமே! நான்தான் குடை என்று பாம்பே குடையாக முன்வருமே! வேறு குடைக்கு இடம்கொடாமல் சீறுமே! பரதேசம் போம பாதுகை வேணுமே! அதற்கும் நானே என்று முன்வருமே! நிவாஸமும் தானாகுமே! ரஹஸ்யம் தெரியாதோ? இப்பாம்புதானே உன் வேங்கடவர் வசிக்கும் வேங்கடம்! மனைப் பலகையில் உட்கார வேண்டுமே மாப்பிள்ளை! வேறு ஆசனத்திற்கு இடம் கொடாதே! பூம் பட்டு வேண்டுமே! அதுவும் தானே என்று முன்வருமே! அம்மா! இந்த ரஹஸ்யமெல்லாம் உன் தாதைகளான ஆழ்வார்களுக்குத் தெரியுமே! "சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம் நின்றால் மரவடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கு மணையாம் திருமாற்கரவு" என்று அவர்கள் பாடுகிறார்களே! அவர்கள் எப்படி இந்த வரனுக்கு வாழ்க்கைப்பட சம்மதித்தார்கள்? "பையரவினணைப் பள்ளியானொடு கைவைத்தின் வருமே" என்றாரே விஷ்ணுசித்தரும்!
         பக்ஷிரத: -- படுக்கையிருக்கட்டும். ஊரெல்லாம் கூடவந்து வாத்ய கோஷங்களோடு ரதத்தில் ஊர்வலம் மெள்ள மெள்ள விடியும்வரையில் வரவேண்டுமென்று ஒரு பெண் ஆசைப்படமாட்டாளோ? ஆகாயத்தில் பறக்கும் பக்ஷியல்லவோ இந்த மாப்பிள்ளைக்கு வாஹனம்! ரதம்! ஒருத்தர் கூடவர முடியுமோ? நீதான் அந்தப் பக்ஷியின் முதுகிலேறிப் பறப்பாயோ! சிறு பெண்ணுக்கு ஆகாயத்தில் பறக்க பயமிராதோ? பயமிருந்தால் ஸுகமிருக்குமோ? ஸந்தோஷமிருக்குமோ? ஊர்வலம் மெள்ள மெள்ள ஊர்ந்தல்லவோ வரவேண்டும்? மெள்ள அடியடியாக ஊர்வது ஊர்வலத்திற்கு அழகு. பக்ஷி பூமியில் நடக்குமோ? வேறு வாஹனம் இவருக்கு ஆகாதே! 'பெருமாளும் நல்ல பெருமாள், திருநாளும் நல்ல திருநாள், ஆயினும் இப்பெருமாளைப் பருந்து தூக்கிப் போவதே' என்று காளமேகக்கவி பாடினார். 'பறவையேறு பரம்புருடா' என்றார் உன் தந்தை.
         ஸுதநு -- அழகிற் சிறந்தவளே! இதைப் 'பாம்பணையோன்' என்பதற்கும் 'பக்ஷிரதர்' என்பதற்கும் தடுவில் வைத்தது ரஸம். இரண்டும் உன் அழகிய மேனிக்கு மிகவும் அநுசிதம். உன் ஆத்மா ஒத்துக்கொண்டாலும், உன் காத்திரமொவ்வாதே! நாகமும் பக்ஷியும் ஸஹஜசத்ருக்களல்லவோ!நடுவே ஈச்வரதத்துவம் நின்று விரோதமே மனதிலுதிக்காமல் தடுக்கிறது என்று வேடிக்கை. 'பையுடை நாகப்பகைக் கொடியோனுக்குப் பல்லாண்டு கூறுதுமே' உன் பூந்தோட்ட புஷ்பமய சய்யை உனக்கேற்றது. 'தஸ்யா:புஷ்பமயீ சய்யா' என்றார் காளிதாஸர் சகுந்தலை விஷயத்தில். 'குத்துவிளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில்மேல் மெத்தென்ன பஞ்சசயனத்தின் மேலேறி' என்றல்லவோ படுக்கை மனோரதம் ஸஹஜம்!
         கதம் ஜாத: ஸ்வயம்வரபதி: -- எப்படி அவர் உனக்கு வரனானார்? இவரையா நீ ஸ்வயம்வர பதியாக வரித்தாய்?எப்படி இவரைப் பதியாக்க ஸ்வயம்வரம் கோடித்தாய்? உனக்குத் தெரியாமல் உன் தாதை இதை கடிப்பிக்கவில்லையே! இவர் பிறப்பு எப்படி? யார் அறிவார்? கதம் ஜாத: -- என்ன ஜாதி? என்ன குலம்? ஜனன காலம் எது? ஒன்றும் தெரியாதே! இவர் ப்ரவரமென்ன? "நமேவது: ஸுரகணா: ப்ரபவம் ந மஹர்ஷய:' (என் பிறப்பை தேவருமறியார், மஹர்ஷிகளுமறியார்) என்கிறார் கீதையில். எந்த ருஷி ப்ரவரம் இவருக்குச் சொல்லக்கூடும்? ப்ரவரம் சொல்லாமல் கல்யாணமுண்டோ?
         புருஷ: புராண: -- வயதுதான் ஏற்குமோ? இவரிலும் கிழவருண்டோ?
         பவத்யா: ஸகீநாம் -- உன் தோழிகளுடைய. அம்மா இந்த ஏசல் பேச்சு என்னதல்ல. உன் தோழிகளின் பேச்சின் அநுவாத மாத்திரம்.
         ஏவம் விதா: -- இப்படிக்கொத்த. இரண்டொன்றே மாதிரிக்காக எடுத்தேன். எத்தனையோ பேசினர்ரஃ.
         பரிஹாஸகிர: -- பரிஹாஸப் பேச்சுகள். பவத்யா: -- உன்னுடைய. ப்ரணயம் -- பர்த்ரு விஷமான ராகம்.
         ஸமுச்சிதம் -- மிகவும் உசிதமானது. ஆநுரூப்யமுடையது என்று. இது ஸந்தர்ஶயந்தி என்னும் கிரியைக்கு விசேஷணம். 'அடியோடு அநுசிதம்' என்று பரிஹாஸம் பண்ணினது 'இதுதான் அத்யந்தம் உசிதம்' என்று ஸமர்த்திப்பதாகிறது. அவர்கள் பரிஹாஸப் பேச்சே அவர்கள் பரிஹாஆத்திற்கு விரோதம். அதுவே அத்யந்தம் ஔசித்யத்தை நிரூபிக்கிறது. நீ இந்த வரனை வரித்தது மிகவும் உசிதமென்று முடிவான நோக்கு.

         ஸந்தர்ஶயந்தி -- நன்றாக உள்ளங்கை நெல்லிக்கனிபோல விளக்குகின்றன. அவர்கள் பரிஹாஸமாக எண்ணிப் பேசியதே உயர்ந்த ஸ்துதியாகி, இச்சேர்த்தியின் முழு ஆநுரூப்யத்தை மிகவும் அழகாக, தெளிவாகக் காட்டுகிறது. உசிதத்திலும் 'தர்ஶயந்தி' என்பதிலும் ஸம் என்பதைச் சேர்த்தார். அநுசிதமா? இல்லவேயில்லை. அத்யந்தமுசிதம். அவர்கள் பரிஹாஸம்போல் பேசியது நிந்தையா? இல்லவேயில்லை. நீ இந்த வரனையே வரிப்பது மிக உசிதம் என்று அழகாக, ஹேதுபூர்வமாய் நன்றாய் நிரூபிக்கிறேன். அவர்கள் ஏசலும் உண்மையில் துதியே. எப்படித் துதியாகும்? பெருமாளுக்கும் தேவிமாருக்கும் எப்படி எப்படி ஸுதமோ, எப்படியெப்படி உசிதமோ, (யதோசிதம்) அப்படிக்கெல்லாம் பணி செய்யும் சேஷனல்லவோ அநந்தனென்னும் நாகன். சேஷிகளுக்கு அமிர்தமயமானவன், பணிபதி உனக்கு சயனம் ஆசனம் என்று ஆளவந்தார் பெரியபிராட்டியார் துதியை ஆரம்பித்தார். நாகேசனாயிருப்பதிலும் ஆசைப்படும்படி ரஞ்ஜிப்பிக்கும் ஸுகஸாமக்ரீ வேறுண்டோ? ஸுகந்தம் கமழ்வதில் இந்நாகத்திற்கு நிகருண்டோ? மென்மையிலும் இதற்கு ஸமமுண்டோ? என்ன ஸுகசீதனம்? பூமியைத் தாங்கும் அநந்தனைத்தவிர எந்தப் படுக்கை ப்ரஹ்மத்தையும் ஈச்வரிகளையும் தாங்கமுடியும்? பாரம் தாங்க மாட்டாமல் மளமளவென்று முறியும் கட்டிலில் படுப்பரோ? "ப்ரக்ருஷ்ட விஜ்ஞான பலைகதாம" என்று ஆளவந்தார் இந்நாகப் படுக்கையின் மேன்மையைப் புகழ்ந்தார். அசேதனப் படுக்கை தம்பதிகள் ஸுகத்துக்குத் தக்கபடி அறிந்து தன்னை சரிப்படுத்திக்கொள்ள வல்லதோ? ஆனால் ஆசேதனமான ஆசனம் அல்லது கட்டிலில் ஓர் குணமுண்டு. மேல்பாரம் அதிகமாயிருந்தால் அதனால் வலியுண்டாகி வருந்தாது; பெருமூச்சு விடாது.; வலியினால் கத்தாது. இரும்புக் கட்டிலானால், பாரத்தால் வருந்தாது. அது பலமாய் கெட்டியாய் இருக்கும். இந்த பலரென்னும் குணமும் இப்பாம்பினிடம் ப்ரக்ருஷ்டமாயுள்ளது. ஞானமும் ப்ரக்ருஷ்டமாயுள்ளது. பலம் அநந்தமாயிருப்பதால் சைதன்யம் இருந்தாலும் நோவே உண்டாகாது. லகுவாய்த் தூக்கும்படி அநந்த பலமிருக்கிறது. சேஷிகளுக்குற்ற சேஷர்களில் இவர் முதல்வர். பக்ஷிரதராயிருப்பவர் வேதாத்மா. அண்டத்தைத் தூக்கிக்கொண்டு பறக்கக்கூடியவர். அநந்தநாகர் தூக்கிக்கொண்டு ஆகாயத்தில் பறக்க மாட்டார். இவர் அநாயாஸமாக திவ்யதம்பதிகளையும் தூக்கிக் கொண்டு பறப்பார். பெரிய ஆகாயக் கப்பல் போலிருப்பார். ஆகாயரதத்திலும் ஆசைப்படக்கூடிய ரதமுண்டோ? வேதங்கள் அநந்தம். வேதாத்மாவான இவரும் அநந்தரே. அவர் பெரிய புஷ்பக விமானம். பரம மங்களமானவர். பெருமாள் 'புராணம்' என்பதால் எத்தனை மூதோராயினும் என்றைக்கும் நவமானவர். அப்பொழுதுக்கப்பொழுது ஆராவமுதமாயிருப்பவர். புராபி நவ: -- பிரதிக்ஷணமும் அபூர்வமாயிருப்பவர். பிறப்பருக்கு இறப்புமுண்டு. பிறவாத இவர் அமரர்களதிபதி. பெரிய பெருமாளாக இவருக்கு ஸ்வேச்சையினால் ஆவிர்பாவமுண்டு. இவருடைய ஜந்மம் திவ்யம். தன்னிச்சையாலே ஜந்மம். திவ்ய ஜந்மங்கள் இவருக்குமுண்டு. ஜந்மம் பலபல. 'ஸகிகள்' என்பவர் ஸமானமான க்யா(ख्या)நமுடையவர். ஒரேவிதமான சித்தவ்ருத்தியுடையவர். ஸமான சித்தவ்ருத்தியை உடைமைதான் ஸகித்வத்திற்கு லக்ஷணமென்று ஸங்கல்ப ஸூர்யோதயத்தில் ஸாதிக்கப் பட்டது. வேதபாஷ்யங்களில் அப்படியே 'ஸகி' பதத்திற்குப் பொருளுரைக்கப் பட்டிருக்கிறது. "என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே" என்று இந்த ஸகிகளைப் பற்றிப் பேசவேண்டியதில்லை. மேலுக்கு ஏசல் போலிருந்தாலும் இந்த ஸகிகள் பேச்சு உண்மையில் துதியானது என்று அறிந்தே பேசினார்களென்று 'ஸகி' பதத்தால் வ்யஞ்ஜநம். பார்வதீபதி அகேசயர். இவர் நாகேசயர். அவர் புங்கவரதர்;புங்கத்வஜர். இவர் விபுங்க வரதர், விபுங்கத்வஜர். ஓர் கவி கூறும் இந்த வேற்றுமைகளும் கவி திருவுள்ளத்திலுள்ளன. 13.