வெள்ளி, 18 மே, 2012

வைத்தமாநிதி 30

கண்ணன் வருகையும் ராஸ லீலையும்

வார்கொள் மென்முலை மடந்தையர்,
தடங்கடல் வண்ணனைத் தான் நயந்து ஆர்வத்தால்
அவர் புலம்பிய புலம்பலை அறிந்து,
அணி மேருவின் மீது உலவும் குன்றுசூழ் சுடர் ஞாயிறும்
அன்றியும் பல சுடர்களும்போல் மின்னு நீள்முடி,
ஆரம், பல்கலன், உடை எம்பெருமான்,
திருச்செய்ய கமலக்கண்ணும், செவ்வாயும்,
செவ்வடியும், செய்ய கையும், திருச்செய்ய கமல உந்தியும்,
செய்ய கமல மார்பும், நீலமேனியும், செய்ய உடையும் திகழ,
தேன்துழாய்த்தாரானும், மின்னு நூலும், குண்டலமும்,
மார்பில் திருமறுவும், நீண்ட புருவங்களும்,
பாங்கு தோன்றும் பட்டும்,
மைவண்ண நறுங்குஞ்சிக் குழல் பின்தாழ,
மகரம்சேர் குழை இருபாடு இலங்கி ஆட,
பல்நெடும்சூழ் சுடர் ஞாயிற்றோடு பால்மதி ஏந்தி
ஓர் கோலநிலவில், நெடுங்குன்றம் வருவது ஒப்பு,
மன்னிய சீர்மதனன் வந்து முன் நிறக,
இளமங்கையரும் வந்து சுற்றும் தொழுது
இடைஇடை தன் செய் கோலத் தூது செய்
கண்கள் கொண்டு ஒன்று பேசி,
தூமொழி இசைகள் கொண்டு ஒன்று நோக்கி,
பேதுரு முகம் செய்து நொந்து அது மொழிந்து,
முதுமணற் குன்று ஏறி, குழலால் இசை பாடி,
குரவை கோத்து கூத்து உவந்து ஆடி
உள்ளம் குழைந்து, எழுந்து, ஆடி
பெருமையும் நாணும் தவிர்த்து பிதற்றி,
உலோகர் சிரிக்க நின்று ஆடி, தொல்புகழ் பாடி,
கும்பிடு நட்டம் இட்டு ஆடி, பண்கள் தலைகொள்ளப்பாடி,
எழுந்தும் பறந்தும் துள்ளி
ஓர் இரவு ஏழ் ஊழியாய் நீண்டதால்
வாய்த்த மறையோர் வணங்க இமையவர் ஏத்த
கருங்கண் தோகை மயிற்பீலி அணிந்து
கட்டி நன்கு உடுத்த பீதக ஆடை,
அருங்கல உருவின் ஆயர் பெருமான்
அவனொருவன் குழல் ஊதினபோது,
வான் இளம்படியர் வந்து வந்து ஈண்டி மனம் உருகி
மலர்க்கண்கள் பனிப்பத்தேன் அளவு செறி கூந்தல்,
அவிழச் சென்னி வேர்ப்பச் செவிசேர்த்து நிற்க,
ஏதம்இல் தண்ணுமை எக்கம் மத்தளி யாழ் குழல்
முழவமோடு இசை திசை கெழுமி,
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள், கெந்தருவர் மாதவர்,
சாரணர் இயக்கச் சித்தரும் மயங்கினர்
மின்அனைய நுண்ணிடையார்,
மேனகையோடு திலோத்தமை அரம்பை உருப்பசியர்
அவர் வெள்கி மயங்கி வானகம்படியில் வாய்திறப்பு இன்றி,
ஆடல் பாடல் இவை மாறினர்.
நன்நரம்பு உடைய தும்புருவோடு நாரதனும்
தம்தம் வீணை மறந்து,
கின்னர மிதுனங்களும் தம்தம் கின்னரம் தொடுகிலோம் என்ன
அத்தீம்குழற் ஊதக் கேட்டவர்கள் இடர் உற்றனர்.
அம்பரம் திரியும் காந்தப்பர் எல்லாம்
அமுதகீத வலையால் சுருக்குண்டு
நம்பரம் அன்று என்று நாணி மயங்கி, நைந்து,
சோர்ந்து, கைம்மறித்து நிற்ப!
குழல்ஓசை அமரலோகத்து அளவும் சென்று இசைப்ப,
அவியுணா மறந்து வானவர் எல்லாம்
ஆயர்பாடி நிறையப் புகுந்து,
ஈண்டிச் செவி உணாவின் சுவைகொண்டு மகிழ்ந்துவிடாது நிற்ப
பறவையின் கணங்கள் கூடுதுறந்து
வந்து சூழ்ந்து படுகாடு கிடப்பக்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்
கவிழ்ந்து இரங்கிச் செவி ஆட்டகில்லாவே;
திரண்டு எழு தழை முகில் வண்ணன்,
செங்கமல மலர்சூழ் வண்டினம் போலே
சுருண்டு இருண்ட குழல்தாழ்ந்த முகத்தான்,
ஊதுகின்ற வேய்ங்குழல் ஓசைவழியே
மருண்டு மான் கணங்கள் மேய்கை மறந்து,
மேய்ந்த புல்லும் கடைவாய் வழிசோர,
இரண்டு பாடும் துலுங்காப் புடைபெயரா
எழுது சித்திரங்கள் போல் நிற்ப,
மரங்கள் நின்று மதுதாரைகள் பாயும், மலர்கள் வீழும்,
வளர்க்கொம்புகள் தாழும், இரங்கும் கூம்பும்
திருமால் நின்ற நின்ற பக்கம் நோக்கி அவை செய்யும் குணமே.
திருஆர் பண்ணில் மலிகீதமொடு பாடி அவர் ஆடலொடு கூடி,
பொறிஆர் மஞ்ஞை பூம்பொழில் தொறும்
நடம் ஆடநின்று நன்று இசைபாடியும் ஆடியும்
பலபல ஊழிகள் ஆயிடும்.
இது ஒரு கங்குல் ஆயிரம் ஊழிகளே. 

வியாழன், 17 மே, 2012

வைத்தமாநிதி 29

 

(நேற்றைய தொடர்ச்சி)

கோபியரின் விரகதாபம்

நீடுநின்ற நிறைபுகழ் ஆய்ச்சியர்,
அல்லல் விளைத்த அருமருந்தை, ஆயர்பாடிக்கு அணிவிளக்கை,
வேட்கை உற்று மிகவிரும்பிச் சொல்லும்;
காமவேள் மன்னும் சிலைவாய் மலர்வாளி கோத்து எய்ய,
மழறு தேன்மொழியார் நின் அருள் சூடுவார் மனம் வாடிச் சொல்லும்;
மண்ணை இருந்து துழாவி வாமனன் மண் இது என்னும்;
விண்ணைத்தொழுது அவன் மேவு வைகுந்தம் என்று கைகாட்டும்;
நையும் கண்ணீர் மல்க நின்று நாரணன் என்னும்;
எறியும் தண்காற்றைத் தழுவி என்னுடைக் கோவிந்தன் என்னும்;
ஒன்றிய திங்களைக் காட்டி ஒளிமணி வண்ணனே என்னும்;
நின்ற குன்றத்தின் நோக்கி நெடுமாலே வா என்று கூவும்;
கோமளவான் கன்றைப் புல்கி கோவிந்தன் மேய்த்தன என்னும்;
போம் இளநாகத்தின் பின்போய் அவன் கிடக்கை ஈது என்னும்;
கரும் பெரும் மேகங்கள் கண்டு கண்ணன் என்று ஏறப்பறக்கும்; அயர்க்கும்;
உள் ஊரும் சிந்தை நோய் எனக்கே தந்து,
என் ஒளிவளையும் மாநிறமும் கொண்டார் இங்கே என்னும்;
சுற்றும் பற்றிநோக்கி அகலவே நீள்நோக்கு கொள்ளும், வியர்க்கும்;
மழைக்கண் துளும்ப வெவ்வுயிர் கொள்ளும்; மெய் சோரும்;
அழல்வாய் மெழுகுபோல் நீராயஉருகும் என் ஆவி என்னும்;
பெயர்த்தும் கண்ணா என்று பேசும்;
பெருமானே என்று கூவும்;
ஏசுஅறும் ஊரவர்கவ்வை, தோழீ!
என்செய்யும்இனி நம்மை என்னும்;
“கடியன் கொடியன் நெடியமால் ஆகிலும்
கொடிய என் நெஞ்சம் அவன் என்றே கிடக்கும்
தோழிமீர் அகப்பட்டேன் வாசுதேவன் வலையுளே” என்னும்;
ஆயன் வேயினுக்கு அழிகின்றது உள்ளமும்,
அஞ்சேல் என்பார் இலையே என்னும்;
அன்னை என்செய்யில் என்?
ஊர் என்சொல்லில் என்?
தூமுறுவல் தொண்டைவாய்ப் பிரானை
எந்நாள்கொலோ யாம் உறுகின்றது என்னும்;
பார் எல்லாம் உண்ட பாம்பு அணையான் வாரானால்
ஆர் எல்லே! வல்வினையேன் ஆவிகாப்பார் இனியே என்னும்;
காயும் கடுசிலை என் காகுத்தன் வாரானால்
மாயும் வகை அறியேன்
வல்வினையேன் பெண் பிறந்தே என்னும்;
இலைத்தடத்த குழல் ஊதி,
விமலன், எனக்கு உருக்காட்டான் என்னும்;
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்;
பண்ணின் இன்மொழி யாழ்நரம்பில் பெற்ற பாலை ஆகி
இங்கே புகுந்து என் கண்ணும் நெஞ்சும் வாயும்  இடம் கொண்டான்;
ஆயன் கைஆம்பல் வந்து என்ஆவி அளவும்
அணைந்து நிற்கும் என்னும்;
”உன் கைதவம் மண்ணும் விண்ணும் அறியும்;
வேண்டித் தேவர் இரக்க வந்து மனப்பரிப்போடு
அழுக்கு மானிட சாதியில் பிறந்ததும்,
வீங்கு இருள்வாய் பூண்டு அன்று அன்னை புலம்பப்போய்,
அங்குஓர் ஆய்க்குலம் புக்கதும்,
காண்டல் இன்றி வளர்ந்து கஞ்சனை வஞ்சம் செய்ததும்,
வஞ்சப் பெண்ணைச் சாவ பால் உண்டதும்,
ஊர்ச்சகடம் இறச் சாடியதும்,
உயிரினாற் குறையில்லா உலகுஏழ் தன் உள்ளடக்கித்
தயிர் வெண்ணெய் உண்டதுவும் நிரை மேய்த்ததுவும்
நோவ ஆய்ச்சி உரலோடு ஆர்க்க இரங்கிற்றும்,
உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும் மற்றும் கேய தீம்குழல் ஊதிற்றும்,
குன்றம் ஒன்று ஏந்தியதும்,
குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும்,
இகள்கொள் புள்ளை பிளந்ததும்,
இமில் ஏறுகள் செற்றதும், உயர்கொள் சோலைக்குருந்து ஒசித்ததும்,
உட்பட மற்றும் பிறவும் பலமாயங்கள் செய்ததும்,
சாற்றி மாயக்கோலப்பிரான் தன் செய்கை நினைந்து,
மனம் குழைந்து புலம்பி அலற்றி இருநிலம் கைதொழா இருக்கும்;
இட்டகால் இட்டகையளாய் இருக்கும்;
கைகூப்பும்; எழுந்து உலாய் மயங்கும்;
கட்டமே காதல் என்று மூர்ச்சிக்கும்;
கடல் வண்ணா, கடியைக் காண் என்னும்;
எண்ணம் புகுந்து தித்திக்கும் அமுதே என்றும்;
எங்ஙனே தரிக்கேன் உன்னைவிட்டு என்னும்;
வட்டவாய்நேமி வலங்கையா வந்திடாய் என்றே மயங்கும்;
சிந்திக்கும் திசைக்கும்; தேறும் வந்திருக்கும்;
தாமரைக்கண் என்றே தளரும்;
மாமாயனே என்னும், அழும் தொழும்;
ஆவிஅனல் வெவ்வுயிர்க்கும்; அஞ்சன வண்ணனே என்னும்;
எழுந்து மேல்நோக்கி இமைப்பிலள் இருக்கும்;
எங்ஙனே நோக்குகேன் என்னும்;
பண்புஉடை வண்டாடு தும்பிகாள் பண் மிழற்றேல்மின்;
புண்புரை வேல்கொடு குத்தல் ஒக்கும் நும் இன்குரல்;
குயில் பைதல்காள்,
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்;
கண்ணனே என் தீர்த்தனே என்னும்;
மாமாயனே மையல்செய்து என்னை மனம் கவர்ந்தானே என்னும்;
என்னுடைய ஆவியே திருமகள்சேர் மார்வனே,
நான்மறைகள் தேடி ஓடும் செல்வனே என்னும்;
தோழி நாம் இதற்கு என்செய்தும்;
நந்தன் மைந்தனும் வந்திலன்; துணை இல்லை;
கரிய நாழிகை ஊழின் பெரியன கழியும் ஆறு அறியேனே;
நங்கையும் ஓர் பெண்பெற்று நல்கினீர்
பெருமான் அரையிற் பீதகவண்ண ஆடை கொண்டு
புண்ணிற் புளிப்பெய்தாற்போல
கிடப்பேனை வாட்டம் தணிய வீசீரே!
ஏலமலர்க்குழல் தோழியர்காள்!
வனமாலை வஞ்சியாதே தருமாகில் மார்விற்கொணர்ந்து புரட்டீரே!
குழலின் துளைவாய் நீர்கொண்டு குளிரமுகத்துத் தடவீரே!
நங்கைமீர்! புறம் நின்று அழகு பேசாதே,
பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீரே!
அன்பு உடையோரைப் பிரிவுஉறு நோயது நீயும் அறிதி,
குயிலே ! காதலியோடு உடன்வாழ் குயிலே!
என் கருமாணிக்கம் வரக்கூவாய்!
உன்னொடு தோழமை கொள்ளுவன், குயிலே!
பவளவாயன் வரக்கூவாய்!
புண்ணியனை வரக்கூவில் நீ சாலத் தருமம் பெறுதி;
தெய்வத்தண் அம்துழாய்த்தார் ஆயினும், தழை ஆயினும்,
தண்கொம்பு அது ஆயினும், கீழ்வேர் ஆயினும்,
நின்ற மண் ஆயினும், கொண்டு வீசுமினே!
இவ் ஆயன்வாய் ஏங்கு வேய்ங்குழல் என்னோடு ஆடும், இளமையே!
நாணி இனி ஒரு கருமம் இல்லை;
கோவலன் ஆய்ப்பாடிக் காவலன் வரில்
கூடிடு கூடலே!
இளவேய் மலை ஏந்தினன் யானே என்னும்;
இன ஏறுகள் செற்றேனும் யானே என்னும்;
இன ஆன்கன்றுகள் மேய்த்தேனும் யானே என்னும்;
இன ஆநிரை காத்தேனும் யானே என்னும்;
இன ஆயர் தலைவனும் யானே என்னும்;
பொய்யும் பூங்குழல் பேய்முலை உண்ட பிள்ளைத்தோற்றமும்,
பேர்ந்து ஓர் சாடு இறச்செய்ய பாதம் ஒன்றால் செய்த சிறு சேவகமும்,
நெய்உண் வார்த்தையுள் அன்னை கோல்கொள்ள,
நீ உன் தாமரைக் கண்கள் நீர்மல்கவே பையவே நிலையும்,
வந்து என் நெஞ்சை உருக்குங்களே;
அடிச்சியோம் தலைமிசை நீ அணியாய்,
ஆழி அம்கண்ணா! உன் கோலப்பாதம்;
உண்ண வானவர்கோனுக்கு ஆயர் ஒருப்படுத்த அடிசில் உண்டதும்,
வண்ணமால் வரையை எடுத்து மழை காத்ததும்,
எண்ணும்தோறும் என் நெஞ்சு எரிவாய் மெழுகு ஒக்கும்;
அவை கேட்கும்தோறும் என் நெஞ்சம்
நின்று நெக்கு அருவிசோரும் கண்ணீர்;
எங்கும் மறைந்து உறைவாய், உருக்காட்டாதே ஒளிப்பாயோ!
சிறிசெய்து என்னை புறத்திட்டு இன்னம் கெடுப்பாயோ!
ஓலம் இட என்னைப் பண்ணி விட்டிட்டு
ஒன்றும் உருவும் சுவடும் காட்டாயோ!
கொள்ளமாளா இன்பவெள்ளம் கோதுஇல தந்திடும் என் வள்ளலேயோ!
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே;
கோலமேனி காண வாராய்!
எப்பொழுதும் கண்ணநீர் கொண்டு ஆவிதுவர்ந்து துவர்ந்து
இப்பொழுதே வந்திடாய் என்று ஏழையேன் நோக்குவனே;
என் செய்வான் எண்ணினாய்! கண்ணனே ஈது உரையாய்!
அடியேனைப் பண்டேபோல் கருதாது
உன் அடிக்கேக் கூய்ப்பணி கொள்ளே!
நாள் இராவும் நான் இருந்து, ஓலமிட்டால், கள்ளமாயா!
உன்னை என் கண்காண வந்து ஈயாயே!
வாராய் உன் திருப்பாத மலர்க்கீழ்ப் பேராதே
யாம் வந்து அடையும்படி;
தாமரைக் கண்பிறழ ஆணி செம்பொன் மேனி எந்தாய்!
காண வந்து என் கண் முகப்பே
வந்து தோன்றாய்! நின்று அருளாய்!”
என்று, வார்ஆர் வனமுலையார் எண் அருஞ்சீர் பிதற்ற
கண்ணனைக் கூவுமாறே!

(இப்படி விரகதாபத்தால் தவித்த பெண்களின் வாட்டம் போக்க கண்ணன் வாராமலிருப்பானோ! அவன் வந்தான்! எப்படி வந்தான்! வந்தவனைக் கண்டதும் பெண்கள் நிலை என்ன! நாளை பார்ப்போம்)

புதன், 16 மே, 2012

வைத்தமாநிதி 28

கங்கையில் புனிதமாய யமுனையாற்றில் வார்மணற் குன்றில்
ராஸக்ரீடை வைபவம்

வேணுகானம்:-- 
நாவலம் பெரிய தீவினில், கொண்டல்ஆர் குழலின் குளிர்வார் பொழில்,
குலமயில் நடம்ஆட, வண்டுதான் இசைபாடும் விருந்தாவனத்தில்,
எல்லிப்பொழுது, குயிலினம் கூவும் சோலைபுக்கு,
கோவலர் குட்டன் கோவிந்தன்;
இடஅணரை இடத்தோளோடு சாய்த்து,
இருகைகூடப், புருவம் நெறிந்து ஏறக் குடவயிறுபட,
வாய்க்கடைகூட, சிறுவிரல்கள் தடவிப்பரிமாறச்,
செங்கண்கோடச் செய்யவாய் கொப்பளிப்பக்,
குறுவெயர்ப் புருவம் குடிலிப்ப, குழல்கொடு ஊதினபோது,
தூவலம் புரிஉடைய திருமால்,
தூயவாயிற் குழல்ஓசை வழியே
கோவலர் சிறுமியர் இளங்கொங்கை குதுகலிப்ப,
தழுவி நின்ற காதல் தன்னால்,
தாமரைக்கண்ணனை, கேசவனை, சேர்வது கருதி,
உடல் உள் அவிழ்ந்து எங்கும் காவலும் கடந்து,
கயிறு மாலை ஆகிவந்து, மடமயில்களொடு மான்பிணைபோலே,
மங்கைமார்கள் மலர்க்கூந்தல் அவிழ, உடை நெகிழ,
ஓர்கையால் துகில்பற்றி, ஒல்கி,
ஓடு அரிக்கண் ஓடநின்றனர்.
சுருட்டார் மென்குழல் கன்னியர்வந்து சுற்றும் தொழநின்று ஆட,
திருஆர் பண்ணில் மலிகீதமொடு பாடி அவர் ஆடலொடு கூடி,
குழல் இருண்டு சுருண்டு ஏறிய
குஞ்சிக் கோவிந்தனுடை கோமளவாயிற் குழல் முழைஞ்சுகளின்
ஊடுகுமிழ்த்துக் கொழித்து இழிந்த அமுதப் புனல்தன்னை உண்டு,
”அமுது என்னும் தேன் என்னும் சொல்லார்
ஏத்தித் தொழுது நிற்க,
நந்தன் மதலையும் தொத்தார் பூங்குழற்கன்னி
ஒருத்தியை கடைக்கணித்து,
கண்ணாலிட்டு கைவிளித்துச் சோலைத் தடம் கொண்டுபுக்கு
முத்தார் கொங்கை புணர்ந்து நைவித்து
எழில்கொண்டு அகன்றபின்,
இராநாழிகை மூவேழு சென்றபின்,
ஏர்மலர்ப்பூங்குழல் ஆயர் மாதர்
வாசுதேவன் வரவு பார்த்தே
கூர்மழைபோல் பனிக்கூதல் எய்திக் கூசி நடுங்கி,
யமுனையாற்றில் வார்மணற் குன்றிற்
புலரநின்றனர் அவனைவிட்டு அகன்று,
உயிர் ஆற்றகில்லா அணியிழை ஆய்ச்சியர்
நல்ல துழாய் அலங்கல் நாரணன் போம் இடம் எல்லாம்
சோதித்துத் தேடி உழிதர்கின்றார்,
அழிலும் தொழிலும் உருக்காட்டான்,
அஞ்சேல் என்னான் அச்சுதனும்.

கோபியரின் விரகதாபம் தொடரும்.

செவ்வாய், 15 மே, 2012

வைத்தமாநிதி 27

நல்தோகை மயில்அனைய ஆயர் இளங்கொடி
நப்பின்னை திருமணம்

பேணி நம் இல்லத்துள்ளே இருத்துவான் எண்ணி தந்நை இருக்க;
காம்புஅணை தோள் பின்னையும் வேறு எண்ணி;
”மன்னன் சரிதைக்கே மாலாகி”
கொத்து அலர் பூங்கணை காமதேவனை அடி வணங்கி, அருள் பெற்று,
மாமுத்த நிதி சொரியும் மாமுகில்களைக் கூவி
”விண் நீலமேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்;
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு,
உலங்கு உண்ட விளங்கனிபோல் உள் மெலிய,
நீர்காலத்து எருக்கின் அம்பழ இலைபோல், வீழ்வேனை,
நெஞ்சங்கவர்ந்த செங்கண் கருமுகிலை,
செய்யவாய்ச் செழுங்கற்பகத்தை,
மாசுஅறு நீலச்சுடர்முடி வானவர்கோனை
எங்கு சென்றாகிலும் கண்டு மெய்அமர் காதல் சொல்லுமினே!
கைத்தலத்து உள்ள மாடுஅழிய, தெளிவிசும்பு கடிது ஓடி,
தீவளைத்து, மின் இலகும் ஒளி முகில்காள்!
என் தூது உரைத்தல் செப்புமினே,
ஏசுஅறும் நும்மை அல்லால் மறுநோக்கு இலள்”
என்று நன்னுதலாள் நயந்து உரை செய்,
மேகத்தைவிடு தூதில் விண்ணப்பம் கேட்டு,
ஆயர்கோனும் மகிழ்ந்து,
அம்பொன்ஆர் உலகம் ஏழும் அறிய
கொம்புஅனார்பின்னை கோவை வாயாள் கோலம் கூடுதற்கு,
பெண்நசையின் பின்போய், துப்புஉடை ஆயர்கள்தம் சொல் வழுவாது,
வதுவை வார்த்தையுள், ஒரு
”மறத்தொழில் புரிந்து, இடிகொள் வெம்குரல்,
வளைமருப்பின் கடுஞ்சினத்து, வன்தாள் ஆர்ந்த,
கார்ஆர் திண்பாய், பார் அணங்கு இமில்ஏறு ஏழும்கோடு ஒசிய,
பட அடர்த்து, வலி அழித்து வதுவை ஆண்டு,
மின்னின் அன்ன நுண்மருங்குல் வேய் ஏய்தோள்
ஆயர்பாவை ஆகத்து இளங்கொங்கை விரும்பிச்
செவ்வி தோள்புணர்ந்து, உகந்து இருப்ப,
தந்நையும்,
”ஒரு மகள் தன்னை யுடையேன்,
உலகம் நிறைந்த புகழால் திருமகள்போல் வளர்த்தேன்,
செங்கண்மால்தான் கொண்டு போனான்;
பெருமகளாய்க் குடிவாழ்ந்து பெரும்பிள்ளை பெற்ற அசோதை,
மருமகளைக் கண்டுஉகந்து மணாட்டுப் புறம் செய்யுங்கொல்லோ?
தன் மாமன் நந்தகோபாலன், தழீஇக்கொண்டு
என்மகள்தன்னைச் செம்மாந்திரே என்று சொல்லுங்கொல்லோ?
வெண்ணிறத்தோய் தயிர்தன்னை
வெள்வரைப்பின் முன் எழுந்து,
கண் உறங்காதே இருந்து கடையவும்,
இளைத்து என் மகள் ஏங்கி கடைகயிறே பற்றிவாங்கி,
கைதழும்பு ஏறிடுங்கொல்லோ?”
என்று இறங்கி ஏங்க,
ஒண்ணிறத் தாமரைச் செங்கண் உலகளந்நான்,
மௌவல்குழல் பஞ்சிய மெல்லடி
பொன்செய் பூண் மென்முலை பின்னையை,
பண்அறையாப் பணி கொண்டு,
”நந்தன் பெற்ற ஆன்ஆயன் என்மகளை செய்தனகள் அறிகிலேனே”
என்றபடி ஆண்டான் பங்கயக் கண்ணன்,
செம்பவளத் திரள்வாயன் சிரீதரன்,
மின் செய்பூண் மார்பினன்.

திங்கள், 14 மே, 2012

Sri Vishnu sahasranamam in Tamil

It is adiyen's bhagyam that adiyen is known to Srivilliputthur Sri Thirunarayana Iyengar swamy, now residing at T.Nagar, Chennai. He may be very rightly said as U.Ve.Sa. of the present century. Like Sri U.Ve.Sa. Iyer, this swamy also used to travel extensively in search of old Tamil books, village by village and even street by street all over Tamilnadu and Andhra. He has a huge collection of books and very soon he will be bringing out some books titled like, "Naranan Ayiram" "Thirumakal Ayiram" "Mamun Ayiram" etc. Each Ayiram will contain 1000 works of different authors on the subject. All in Tamil.
This swamy presented me the old copy of "Vishnu Sahasranamam in Tamil" authored by Sri Pakshirajan swamy of Thirunelveli and its recent reprint in 2010. He told that this Pakshirajan swamy is an authority in Kamba Ramayanam and used to recite it from the first line to the last line without referring to the book, in Divya Prabhanda santhai style.
I am happy to share the book here. I hope that those interested in Sri Vishnu Sahasranamam in Tamil will enjoy it. As I informed in my last post, daily atleast 15 visitors download "தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம்" already posted by me in this blog.
Those who find it difficult to download the book from here may download from here.
While Firefox displays the download link immediately on the RHS, IE and Chrome, the download link is at the end of the book.  Sri Vishnu Sahasranamam in Tamil

Guru Paramparai Vaibhavam (14-5-2012)

Enjoy Natteri Swamy elaborates the greatness of Srimad Periyandavan and Srimad Chinnandavan in his tele-upanyasam on Guru Paramparai Vaibhavam today the 14-5-2012.

It can be downloaded from MediaFire at


For online listening at Podomatic, please play the link below

Please note
My Statistics inform me that daily atleast 15 people download "தமிழில் விஷ்ணு சஹஸ்ரநாமம்" (Vishnusahsranamam in Tamil) which adiyen posted in this blog earlier. 
Recently adiyen was presented with another book " Thirumal potri thiruvakaval" which is a Vishnu Sahasranamam in Tamil written by Sri Pakshirajan swamy of Thirunelveli in 1961 (2nd publication in 1971 and the latest in 2010 --- printed at RNR Printers, Triplicane, Chennai). For those interested in Vishnusahasranamam in Tamil, adiyen will place the pdf of this book in this blog within a couple of days.