சனி, 11 ஜூலை, 2009

தினம் ஒரு நூல்


என்றாவது ஒரு நாள் ஏதாவது ஒரு பழைய நூலின் ஒரு சில பக்கங்களை ஸ்கான் செய்து அதை பிடிஎப் வடிவில் இணையத்தில் அளிப்பதே அடியேனுக்கு மிகக் கஷ்டமான காரியமாக இருக்கும்போது, ஒரு தனி மனிதராக தினம் ஒரு நூலை யாவது மின் புத்தகமாக வெளியிடுவது என்பதைக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு ஒருவர் செயல்படுகிறார் இதுவரை 748 மின் நூல்களை அப்படி இணையத்தில் ஏற்றியிருக்கிறார் என்பது ஒரு பிரமிப்பூட்டும் செய்தி. அவரிடம் இதுவரை சுமார் ஒரு லக்ஷம் புத்தகங்கள் சேர்ந்துள்ளனவாம். தன் வாழ்நாளுக்குள் அவற்றை மின்நூல்களாக ஆக்கிவிட வேண்டும் என்று தினமும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார். நூலில் உள்ள ஒவ்வொரு பக்கமாக ஸ்கான் செய்ய வேண்டும், அதையெல்லாம் போட்டோஷாப்பில் திருத்த வேண்டும் மீண்டும் பக்கவாரியாக அடுக்க வேண்டும் அதை பிடிஎப் கோப்பாக மாற்றி சேமிக்க வேண்டும் ..... அம்மாடி ! இப்படி சாதனை புரிபவர் பொள்ளாச்சி நசன் என்னும் ஓய்வு பெற்ற ஒரு ஆசிரியர். தினமணி தமிழ்மணி வாசகர்களுக்கு கலாரசிகன் மூலம் அறிமுகமானவர். www.thamizhmanam.net சென்று பாருங்கள். அங்கு 1868ல் பதிப்பிக்கப் பட்ட கல்லாடமும் கிடைக்கும். நேற்றைய அறிஞர் அண்ணாவின் காஞ்சி, இன்றைய தொல். திருமாவளவனின் சேரியும் கிடைக்கும். அவைகளுள் அடியேனுக்குப் பிடித்தமானவை 1994ல் வெளியிடப் பட்டிருக்கும் "சித்திர கவி" யும், சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் ஒரு பிரபவ வருடம் அச்சாகி இருக்கும் காரிநாயனார் கணக்கதிகாரமும்.

There is one Sri Pollachi Nasan who is releasing atleast one Ebook per day on his website at www.thamizhmanam.net. He has a very great collection of books -- books, magazines, monthly, weekly even brochures printed before independance. Tirelessly he scans every page of the books, do some cosmetic work with photoshop, convert them to pdf and release them on his site. So far he has saved 748 books. Eventhough all of them can not be said of great value, his work should be appreciated in as much as he is a retired teacher and does the job single-handedly spending atleast 10 t0 12 hours per day. But his collection contains only Tamil books. From "kallaadam" a Tamil grammer book ( there is a word "kallaadam kaRRanidam sollaadaathe" (do not argue with a man who learnt kallaadam) published in 1868 to present day "ChEri" a variety of books can be found there and those interested can download them also.

வெள்ளி, 10 ஜூலை, 2009

திருப்பாதுகமாலை -- முத்துப் பத்ததி

18. முத்துப்பத்ததி

611. கட்டொடு நித்தநலத்தொடு தன்னில்
நட்டிடு முத்தவை தட்குமி றைக்குந்
தொட்டடி மைமுடி மைமெ யுணர்த்துங்
கிட்டரி பாதுக சித்தியெ னக்காம். 1

612. அத்திற முத்தியின் சித்திக னத்தோங்
கத்தனை நல்வினை மித்திர நத்தும்
உத்தமன் பாதுனைத் தொத்திய சுத்தக்
கொத்தென முத்தணி யொத்துவி ளங்கும். 2

613. ஏலணி யில்லடை யேனல ங்கல்
தாலம ரங்கன்ப தாவனி! நாளும்
சீலநி னித்தில நீரொளி சாலப்
பாலென வாய்நதி பாய்நில மாமே. 3

614. நித்தநி றைத்திரு விண்டுப தத்துப்
புத்தெழி லுன்னல முத்தொளி மின்னிற்
சுத்தமு தற்கலை யுந்துடு நாத
னொத்தரி பாதுல குத்திரு மல்கும். 4

615. சொன்னவ ணத்தணி பாது! மு குந்தன்
தன்னரு ளாளிரு தாளுகிர் முன்னே
மின்னுமு னித்தில மீதெதிர் விம்பப்
பன்னல விந்துவின் பந்திப யந்தே. 5

616. தன்னில ரங்கன தங்கிரி நங்காய்!
துன்னுன துத்தம முத்தொளி தன்னிற்
பொன்னிபொ லிந்தரி பாதமு மிழ்ந்த
தொன்னதி மேனியினொண்மைது லங்கும். 6

617. ஒண்ணல முத்தெழு முன்னொளி முத்தை
வண்ணரி பாதுகை மாமழை வண்ணத்
தண்ணலின் மாமலர்த் தாணக மாமைத்
தண்ணவன் மண்டிலத் தாரைக ளாமே. 7

618. கண்ணுத லுவ்விய யங்கலி லாரப்
பண்ணொளி மின்னலி லாமொரு பாலிற்
கண்ணன லர்ப்பத மன்னலிற் பாதூ!
விண்ணவர் சிந்துவின் சந்தமி மைப்பாய். 8

619. தேறுமு னித்தில நீழலிற் றேவ
யாறென மாவரி பாதுகை! யுன்னைப்
பேறென வேமுடி யேந்துவர் மூர்த்தத்
தேறிடு மிந்துவின் விந்தொளி மேலும். 9

620. தன்முடி சூடணி தண்சுடர் தன்னின்
மன்மகி ழக்கலை மல்கம ராடி!
சின்மய நித்தில மின்மய நின்னை
நின்மல னுவ்வுயி லேந்திநி கழ்வன். 10

621. அத்தனி யப்பன தப்பத நோக்குன்
நித்தில நீளொளி நீதிவ டத்தே
நத்தப வக்கட னீந்திட மாந்தர்
நித்தமு மோர்துணை நீபுணை யாவாய். 11

622. பொங்கரி தாளமர் போகம யத்துச்
செங்கதிர் மாமணிச் சேகர மின்னில்
மங்கல வானல வாரநி லாவில்
நன்கர வாகம ராடி! நி கழ்வாய். 12

623. விஞ்சலி லெல்லிலு மிந்திள முத்தின்
மஞ்சொளி வானவர் மத்தக மீதே
கொஞ்சவ ரஞ்சலி மாமலர் கூம்பி
எஞ்சும ராடி!ம லர்ச்சிய தென்றும். 13

624. கொண்டநி னில்லடைத் தொண்டர்கள் தூய்மை
கொண்டுதி ராசவி மோசன மாதல்
விண்டும ராடி! நீ யிந்துட னொப்பே
பண்டுன தத்தரள த்தொட ருள்வாய். 14

625. நாடரி நன்னடை யாடம ராடீ!
நீடா ளங்கள்கி ளர்ந்தக திர்க்கண்
பீடுமு ளைத்திரு வீறுதெ ளித்துப்
பாடுந லம்பொலி பாலிகை போல்வாய். 15

626. மக்களை யேசிவ மாக்கிடு நீரின்
மிக்கவ ளப்பல முத்தொளி வெள்ளத்
தெக்கலி லாதிப தாவனி! நீமா
தக்கவ ரர்நதி தான்தரு வாயே. 16

627. ஆழியன் மாழையி னாழிம ருங்கில்
நீழன லந்தெளி முத்துநி றத்துச்
சூழலி னித்தில சூதகம் விள்ளும்
வாழொளி யிப்பியைப் பாதுகை! யொப்பாய். 17

628. அத்தகர் பிற்றைம டங்கலிற் பாதூ!
அத்தனி வானிடைத் தாரகை யாக்கக்
கொத்தொடு பல்பல முத்துகள் கத்தன்
வித்தென வுன்கண்வி தைத்தனன் போலும். 18

629. நாயக னோரடி மாயையி றாயா
காயம தோர்கண மாயது பாதுன்
பாயெழு வானதி மொக்குளின் சாயல்
மேயவ ணத்தர ளத்துடு மின்ன. 19

630. ஒத்தரு ளின்னமு தத்திரு வோடே
பத்துரு மால்விளை யாடிட நின்கண்
வைத்தச கத்திதி பாது! வி ளங்கும்
சத்துவ மன்னநி னித்தில வாளில். 20


631. ஆவத நித்தில பாதுக! நின்கண்
பாதமி டத்திரு மாதவ வேந்தன்
நூதன நீரெழு கைரவ மோம்பும்
போதவி ழல்லியின் பொய்கைபு கல்வாய். 21

632. மின்கலை மாமறை மேனிலை வண்ணம்
நன்கிடு நற்சுதை நாறுமு னாரத்
தென்கதிர் தங்குப தாவனி! திங்க
ணின்கறை மாலடி யார்கறை நீக்கும். 22

633. ஆளரி தாளுகி ரோடுற வாடுன்
னாளனி முத்துக ணித்தமும் பாது!
வாளெழு மண்டில வாரமு தாயன்
பாளரின் மூவழற் பாதையொ ழிக்கும். 23

634. தன்னிறை தாங்கவ னித்தனி யேந்தல்
மன்னொளி முத்தணி பாதுனை யேந்தும்
முன்னவ னொத்தொரு பின்னலு யர்த்த
பின்னவ னுச்சியிற் பிச்சநி ழற்றும் 24

635. ஒத்தன ரங்கன தொண்பத ரேகைத்
தொத்தலர் கற்பக மாமல ரொப்பே
அத்தர ளத்திர ணத்தெழில் பாதூ!
நித்தமு நின்னொளி நீத்தநி றக்கும். 25

636. பொங்கமு தக்கதி ரண்ணலு கிர்க்கள்
நன்குக நித்தமு நித்தில நன்றில்
எங்கெவர் பால்தெளி பாலொளி வெள்ள
மங்கள நின்னியல் மல்கும ராடீ! 26

637. ஏறிட மாநெடி யோனடி யேனுள்
ஊறிடு கோதுக ணூறிம ராடீ!
வீறணி நித்தில நின்னொளி வீசித்
தேறுப ளிங்கென மேனிலை செய்தாய். 27

638. மாலணி யாரப மேனியி ராவும்
பாலொளி முத்தினீ யாகுநி லாவும்
சாலவு மெம்முணர் வாம்பல்கள் விள்ள
ஏலும தம்மணி பாதுகை! மேலும். 28

639. நேரரி தாளுகிர் சேரொளி பாதுன்
னாரந லத்திரள் சாரவி றைஞ்சிக்
கோருப தச்சுரர் கோக்கண்மு டிக்கண்
வாரெழி னீர்முடி யாட்டிய ருள்வாய். 29

640. சக்கரி தாளுகிர் வாளமு தங்கொள்
ளக்கதிர் நற்கதி நாலிக ளன்ன
இக்கர ளப்பவ நீக்கும ராடீ!
மக்களு யிர்க்குளி கங்களு மிழ்வாய். 30


641. பத்திந டப்பர தாதியர் நாடும்
நித்தில நீரலர் போதுதெ ளிக்கும்
உத்தம னுன்னொடு வந்தரு ளாடற்
கொத்தவ ரங்கம ராடி! கொ ழிப்பாய். 31
642. தோமறு விண்ணல முத்தொளி துன்னும்
வாமனன் பாதுனை வந்துவ ணங்கும்
ஆமர னுவ்வியி லாரியர் சார்த்தத்
தூமதி தாரகை தூவிய தாமே. 32

643. மாவெடு மன்னிறை மால்விளை யாடத்
தூவணி முத்தொளி தூவிமு னண்ணல்
லாவிய லம்புய மூலக மென்னச்
சேவடி மாணிலை! சேணடு வாயே. 33

644. இந்திரை யோடுபி றந்தவ னென்றவ்
விந்துவி னற்கலை விண்டும ராடீ!
உந்திட வாணில வூனமி லாதே
வந்துனை முத்தில டுத்தது போலும். 34

645. உன்னணி நித்தில சுப்பிர மொத்த
நன்னர தொன்றிட நல்லவ ருன்னை
முன்னலொ ழுக்கவ ணக்கமு டிக்கண்
பொன்னரி பாதொரு போதணி வாரே. 35

646. தேறரி யங்குலி யேமவ லங்கல்
வீறில ரும்பிநி ரம்புநி னாரம்
ஏறடி யம்புல ரேகைவ ளைக்கண்
நாறிடு மாறரி பாது! தெ ரிப்பாய். 36

647. மாவலி கொள்ளவ ளர்ந்தமு குந்தன்
பூவடி வார்மக ரந்தமு மிழ்ந்த
பாவன யாறது பாவலு னார
மேவலி லாயது பாலென மேனி. 37

648. மாலடி சாலர விந்துட னிந்து
மேலுமு றழ்வற நீடுனை நாடும்
போலொளிர் முத்துடு கோடிம ராடீ!
சாலமு ரண்கலி மூலம றுக்கும். 38

649. நச்சுடை யப்பணி யுச்சிய ரங்கத்
தச்சுத னன்னட மாடம ராடீ!
அச்சுதை யாறெழு னித்தில வாளில்
முச்சக நோவறு முன்னையு ணர்வன். 39

650. வந்தொரு காலுனை வந்தனை செய்வோர்
உந்தவ நந்தலி லுத்தமன் பாதூ!
சந்தத முந்தன கச்சவி யாழ்ந்தும்
தந்திடு நித்தமு முத்தொளி நன்றே. 40

651. யாவுல காளரி தாள்கள் சுமந்துன்
தாவல்கள் தாணிலை தந்தத ளர்வில்
மேவுவி யர்ப்புதிர் புற்புத மேனித்
தாவள முத்துக ளாயுள வாறோ? 41

652. நீடரி தாணக விந்துபு ரந்த
ஆடக பாதுன தாதவ மேறச்
சேடுறு முத்தினி லாவிலெ னாக்கை
வீடலி வின்னுயிர் வீங்கழ னீங்கும். 42

653. பழ நலந் தழைய நின்தாள் பரவுமுத் தமர்ப ரப்பில்
இழையவென் றென்று தானும் விழையுமுன் னொளிபயின்ற
பழுதறுந் தவள யோகப் பரிவினிற் பாது கந்தே
வழுவினின் கண்ணி லைப்பண் புறுதிநீ தருதி போலும். 43

654. உத்தமன் திருவ டிப்போ தொன்றியே நின்ற நின்கண்
முத்தியற் சித்தி பெற்ற முழுநலத் துலகமுற்றும்
அத்துணைக் கரத்தி லேத மொழித்தொளி செழித்த பாதூ!
முத்தியென் றோது மந்த முதுமறைச் செல்வ நீயே. 44

655. அணிபதா வனி!ய ரங்கனடிமலர்ப் பிடியில் வாழும்
மணியுனைச் சரண டைந்தார் கடுவினை கடியு முன்னைப்
பணிவிறன் களப மேற்றச் சதமகன் மலியு னாலித்
துணியதன் தணிமு கத்துப் பொலிதிருச் சூழி யாமே. 45

656. நன்குபநற் கங்க நீத்தம் நகுதிரைத் தரள நீமம்
பொங்குமுன் பாங்கு தாங்கிப் பணிந்தபுத் தேளி ருச்சி
துங்கநன் னரைநி ரம்பத் துய்யபா துனது வாளில்
மங்கிநோய் நரைகள் மாயும் மாயமீ தென்ன வம்மே!. 46

657. நளிர்மதி புனையு மொத்த னடர்சடை மருங்கின் மற்றோர்
குளிர்வர நதியு லாவிற் றென்னமுத் தொளிகள் பாதூ!
தளிர்தலிற் கங்கை யென்றே கரிமுகன் வளைது ழாவல்
வளர்வெறு துதிக்கை வாரி வளமுடி நனைப்ப னம்மா. 47

658. நித்திலத் தருள ரங்கன் திருவடி நிலை! நீ மேலும்
நித்தமுந் தருமொ ளித்தண் ணிறையளி யமுத வெள்ளத்
தொத்தொரு நான்று தோயு முயர்திரு வுற்றோர்க் கன்றே
தொத்தறத் தொலையு மிந்தத் தொல்வினைக் கொடிய தாபம். 48

659. மலர்மகள் சரணச் செம்பஞ் சணியரி நின்மே னின்றான்
மலைமகள் சரண ரத்த மணவர னின்கீழ் நின்றான்
சிலதிகள் தேவி யில்லத் திவ்வணப் பிதற்ற னோக்கி
நலவலத் தவள வாளிற் பாது நீ நகைக்கின் றாயே. 49

660. மேவலின் மேலுமோர் நித்திலச் சோதியிற்
காவிரித் தீவிதா மாநரைத் தீவெனப்
பாவுமக் கோவலன் பாதுமூ வாதநற்
றூவளச் சீரெனக் கீந்தருள் பூக்குமே. 50

வியாழன், 9 ஜூலை, 2009

Cell phone towers can predict floods


Telecom service subscribers haven't really ever cared about those ugly cell phone towers. After all, what do they do besides connecting people? However, researchers at the Tel Aviv University in Israel have found it useful enough to generate some critical weather data.




The researchers at the university say that cell phone towers could be used as a reliable method to predict the intensity of the next big flood. They've developed a model which analyses cell phone signals, adding a critical component to weather forecasting.
Cell phone towers emit radio waves that are diminished by moisture in the air, a factor that can be used to improve model warnings on flood levels.

"By monitoring the specific and fluctuating atmospheric moisture around cell phone towers throughout America, we can cheaply, effectively, and reliably provide a more accurate 'critical moisture distribution' level for fine-tuning model predictions of big floods," says Prof. Pinhas Alpert, a geophysicist and head of the Porter School for Environmental Education at Tel Aviv University.

Furthermore, TAU researchers measured the rainfall distributions and were able to accurately estimate the size of impending floods before they struck.
This was demonstrated in post-analysis of two case studies of floods in the Judean Desert in Israel, where cell phone towers and flash floods are abundant.

Using real data measurements collected from the towers, researchers demonstrated how microwave links in a cellular network correlated with surface station humidity measurements. The data provided by cell phone towers is the missing link weather forecasters need to improve the accuracy of flood forecasting.

These findings were published in the April edition of Atmospheric Chemistry and Physics. A link to the study can be found here.

courtesy : www.techtree.com

புதன், 8 ஜூலை, 2009

திருப்பாதுகமாலை

17. செம்மணிப்பத்தி

581. தளிரணி யரங்காமல் தாள தேயிலங்

கொளுநல மாமலர்க் கோயி லாளெனக்

களிமிகு பதுமரா கங்க ளோங்குசீர்

வளரரு ளவன்பதா வனிவ ணங்குவன். 1

582. மதிமொழி கடந்தமன் னரங்க மாதவன்

பதுமமென் பூங்கழல் பவனி பூக்குமப்

பதமணி பாது முன் பதும ராகமின்

மதுவிரி மஞ்சரி வதிப ரப்புவாய். 2

583. அழகன தங்கிரி யடிக்கி ளர்ந்தநின்

தழையொளி மாமணி தான்வி டுஞ்சுடர்

தழலொரு போதவன் தங்கு வானெனும்

பழமொழி யுண்மையைப் பாது ணர்த்துமே. 3

584. பணியணை யரங்கமால் பாது னாதுசெம்

மணியொளி பிறங்கவன் குறங்கு மாட்டிடும்

கணமது கைடவர் கறையு றைந்துதாட்

குணநளி புலர்ந்தசெங் குங்கு மம்படும். 4

585. படரொளி பரந்தநின் பதும ராகநீர்

அடிநிலை! யுனைச்சர ணடைந்த நல்லவர்

கடுவினை வெறிச்சிரங் கடிந்த தன்னவே

வருபொழி குருதியின் வாரி யோர்வரே.. 5

586. பணை நகை பூக்குமான் மதனெரிக்கொழுந்

திணையென மாமணிக் கிளரி ராகமே

றணிதிரு வரங்கனா ரடிநி லாயுனை

மணிநகர் மான்விழி மாதர் நோக்குவர். 6

587. விரிநெடு தோடவாய் வீய மூள்தமம்

நெரிதர நாறுபூ நேய மேத்திடத்

தெரிநல மாமணிக் கேழ்தெ ளித்தலில்

அரிமணி யுதிக்குமுற் சந்தி பாது! நீ. 7

588. அடிநிலை! யாதியெம் மமுத ரங்கமால்

அடிமலர் விரிப்பெனப் பரப்புன் மாமணிச்

சுடரவை யெம்மிடர்ச் சோக நீரினைச்

சுடுமுட னூழிவாய்ச் சோதி யென்னவே. 8

589. தெரியிளங் கதிரவன் தேநி றந்தரும்

விரிவளச் செம்மணி வெயில்வி ளங்கலில்

இருமணிப் பாதுனே ரினிய மாலியில்

திருமலர்ப் பதநெடி திராக மேறுமே. 9

590. திருவுட னகிலமும் நிலைபெ றுத்திடும்

அருணிறை மாதவன் கீர்த்தி யாழியில்

பரவளி பாது! நின் பதும ராகமே

தருமொரு துகிரெனத் தானொ ராதவம். 10

591. நரவரி நறுங்கழ னள்ளொ ளிர்வரி

யுருவுடை நேமியின் சுடர்கி ளர்ந்தெனத்

தருமணி யரங்கன்செந் தாது பாது நின்

விரிகதி பாடல மணிவி ளங்குமே. 11

592. படரரி பதத்தெழு பகலொ ளித்திரள்

சுடர்தலி னாளுமுன் சோண மாமணி

அடிநிலை! யரங்கநா யகன டித்தலத்

தொடுவரி மாமல ரொடுங்க லற்றதே. 12

593. தனதரு ணோக்குமின் னயன மன்னுவோர்க்

கனுதின நவநவ நன்மை நல்கவே

இனிதமர் பதுமரா கத்தி மைத்தலில்

தனிநல மங்கலத் தேவு பாது! நீ. 13

594. அளிமன மகிழ்கொள் வரங்க நாயகன்

துளிரிள வடிக்குனைப் பாது ணர்த்திமுன்

வளமலி விடியலம் புயவ ரும்பெனக்

கிளர்துவர் மணியொளி தெளித்தி லங்குவாய். 14

595. உயர்த்தரு மறைப்பொரு ளுணர்ந்த மாதவர்

உயத்தம தகச்சவி யுயிர விப்பொருள்

இயைத்தரு மறையுட னிடப்பெ ருஞ்சுடர்

மயத்தெழு முனதுசெம் மணிக்கள் பாதுகாய்!. 15

596. பரஞ்சுடர் பதாவனி! பவனி போகமுன்

பரிந்துன துவர்மணி பயண மங்கலம்

புரிந்தென சுடரிலா வுதிக ளுந்துபால்

சுரநதவ னகச்சவி சொரிந்த போலுமே. 16

597. திருமக ணாயகன் சேம மல்குதாள்

திருமலர் மின்னகம் பாதுன் செம்மணி

பரவொளி படிந்தசெம் பஞ்சி லந்திவான்

தெரியிளம் பசுங்கதிர்ச் சீரி மைக்குமே. 17

598. அடிநிலை! சுடர்மிகுன் சோதி மாமணி

கடிதலெ னுளத்தமஞ் சால வேலுமால்

கடிதினி னொளிரிரா கத்தி லிரசமும்

மடிதலி தென்னவுன் னீதி மாயமே!. 18

599. பொதுளனி பதுமமா கரம்பு ரந்தமால்

பதமல ரொழுகுதீம் பிரச மாந்தியே

சதிரிளஞ் சோணமா மணியி ராகநேர்

கதிர்தரு சோதிநீ கண்ணன் பாதுகாய்!. 19

600. விரிதிரை யிரியநீள் திரித ருங்கலி

அரியம ரரங்கமொன் றணுகி டாதுநின்

விரியொளி யரத்தமா மணியெ ரிக்கிடங்

கரிபத நிலை! வளைந் ததற்க மைக்குமே. 20

601. அரியளி கேளிமல் கில்ல மாடுகால்

தருநறு மஞ்சுசெஞ் சாந்த ரக்கென

அரிபத நிலையுன்செம் மணிக்க ரத்தவன்

இருபத மலரினுக் கிராக மூட்டுவாய். 21

602. வளையரி மாநகர் வலம்வ ரப்புரர்

தெளிமலர் பாது! நின் தேறு செம்மணி

ஒளிதனி லுந்துசெவ் வந்தி வானிடைத்

தளிருடு மொய்யெழில் தந்தி லங்குமே. 22

603. மரவடி! யுனதுமா ணிக்க மிக்கமின்

குருமுடி கவித்தபூங் கங்கை பொங்கலை

விரியணி சடையன்சே கரத்து ருத்திரை

யிருபத வரக்கிளஞ் சேறு தேறுமே. 23

604. கேசவன் பதமலர்ச் செம்மை பொம்மமேல்

வீசடி நிலை! யுன்மா ணிக்க நீள்கதிர்

ஆசினி யிளங்கிளர் மணியி னாயிரத்

தேசுறு மடியவர் பிறப்பி ராவற. 24

605. பதநிலை! விஞ்சநீ கிஞ்சு கச்சவி

பதியொளி ருன்மணிப் பணிந்த பண்பினிற்

கதிரொளி கிளர்ந்தசெங் களம மஞ்சரிக்

கதிரெதிர் செஞ்சடைக் காந்தி யேந்துவன். 25

606. பரிவள நீரிடைப் பதம லர்த்தடை

வரிநடை யாடலுக் காட நீயெதிர்

மருவினை யுனதுசெம் மணிப தாவனி!

தரைமிசை வரையறை தவிர்த்த லர்த்துமே. 26

607. பதநிலை! நினதுமா ணிக்க ராகமே

றிதமதி நிலைமனர்க் கிராக நல்கிடுங்

கதிருட னெடுத்தலிற் கடுங்க ரில்கடாம்

விதிமுடி பதங்கமாய் வீங்கி நீறுமே. 27

608. மறைமகிழ் மணமடி நிலை!க மழ்தலில்

இறையிணை யடிமல ரினித வீழ்த்தலில்

செறியக விருளறக் செகுத்த லில்லொளி

நிறையுன துவர்மணிச் செம்மை யேலுமே. 28

609. கீதநா வரர்கண் மங்கை யிதழிற்செம் பஞ்சு வாயிற்

போதாமா மதத்தி ராகம் புனைசெவி தனில லங்கல்

கோதிலா வணக்க வுச்சி வகிரினேர் திலக மோதும்

பாதுகா தேவி! யுன்சீர்ப் பதுமரா கப்ப யப்பாம். 29

610. நெடுமா லடிநற் பிடிமா மணிகள்

தொடர்பா துகை! யுன் தொகையா மணிமின்

விடுமா படலத் தெரியூ ழியெழுந்

திடுசெஞ் சுடரா யிரமின் மினியாம். 30

செவ்வாய், 7 ஜூலை, 2009

நப்பின்னை


அடியேன் மீது மிகப் பிரியம் கொண்டவர்களில் ஒருவரான டெல்லி அன்பில் ஸ்ரீநிவாஸன் ஸ்வாமி சில தினங்களுக்கு முன் அனுப்பிவைத்த 100க்கும் அதிகமான புத்தகங்களில் மதுரகவி ஸ்ரீநிவாஸ அய்யங்கார் எழுதிய "நப்பின்னைப் பிராட்டியார் திருமணம் " என்னும் அருமையான நூலும் ஒன்று.
நப்பின்னையைப் பற்றி அவள் கண்ணனை மணந்த வரலாறு பற்றி அய்யங்கார் மதுரமாக எழுதியதற்கு "கம்பன்" ஒரு அற்புதமான முன்னுரை வழங்கி, பாடல்களுக்கு எளிமையான அர்த்தங் களும் அளித்துள்ளார். அவசியம் எல்லாரும் படிக்க வேண்டிய நூல் ஸ்க்ரைப்டுவில் மின் புத்தகமாக . பல நேரங்களில் மூல நூலைக் காட்டிலும் முன்னுரைகளே ஸ்வாரஸ்யமாக அமைவதுண்டு. இந்த முன்னுரை அதற்கு ஒரு உதாரணம்.

Nappinnai pirattiyar thirumanam

வாய்விட்டுச் சிரிக்கலாம்

இணையத்தில் நல்ல தமிழ் எழுதி நம்மை மகிழ்விப்பவர்கள் பலர். அவர்களுள் சமீப காலமாக நான் படித்து ரசிப்பவர்கள் சிலருள் திரு சௌந்தரும், திரு அனந்தும் குறிப்பிட வேண்டியவர்கள். அவர்கள் எழுதியவற்றில் மாதிரிக்கு இரண்டு இங்கே

நாராயணனும் பழஞ்சோறும்

ஏன் பத்து?

ஞாயிறு, 5 ஜூலை, 2009

I am sorry

When I started posting "Saranagathi Maalai" a lucid Tamil vyagyanam for "Nyasa tasakam", considering the importance of the subject and due to my desire that it should reach many, I opted for automatic notification to andavan and oppiliappan groups at Yahoo. But now I learn that such notifications and display of the blog entries directly in yahoo groups mail box are annoying a few and causing some inconvenience. My occasional deviation to some other topics may be the reason. Hence hereafter no notification will be sent to yahoo groups. Members really interested may visit my blogs directly. Inconveniences caused are regretted.