॥
विशिष्टाद्वैत सिद्धान्तप्रकरणम्
॥
விசிஷ்டாத்வைத
ஸித்தாந்த
ப்ரகரணம்.
இனி விசிஷ்டாத்வைத ஸித்தாந்தத்தை நிரூபிக்கிறோம்.
இதற்கு
ப்ரவர்த்தகர்
ஸ்ரீ
பகவத் ராமாநுஜன்.
श्रीमल्लक्ष्मणयोगिनस्तु
भुवनं सत्यं तदीशः श्रियः-
कान्तो
ब्रह्म स एव सोऽखिलतनुः
भिन्नास्ततश्चेतनाः ।
सत्या
संसृतिरीशनिग्रहकृता-
मुक्तिस्तु
भक्त्यादिना
तत्प्राप्तिः
परमे पदे तदनुभूत्यारव्येति
संचक्षते ||
ஸ்ரீமல்
லக்ஷ்மண-யோகிநஸ்து
புவநம் ஸத்யம் ததீச :
ஸ்ரீய:
காந்தோ
ப்ரஹ்ம ஸ ஏவ ஸோகில் -தந
பிந்நாஸ்-தத:
சேதநா
;।
ஸத்யா
ஸம்ஸ்ருதி-ரீச-நிக்ரஹ-க்ருதா
முக்திஸ்து பக்த்யாதிநா
தத்-ப்ராப்தி:
பரமே
பதே ததநு பூத்யாக்யேதி
ஸஞ்சக்ஷதே!
இது இந்த ஸித்தாந்தத்திற்கு ஸங்க்ரஹ சலோகம். இதனர்த்தம்:-
ஸ்ரீ பகவத் ராமாநுஜரோ பின்வருமாறு ஸாதித்தருளுகிறார்:-'புவநம் ஸத்யம்'—ப்ரபஞ்சம் வாஸ்தவமாயுள்ளது. முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளியைப்போல் பொய்யன்று. அது ப்ராந்தியினால் காணப்படுவதே யொழிய ஒரு காரியத்துக்கும் உபயோகப்படுகிறதன்று. கடையில் காணப்படும் வெள்ளி பாத்திரம் முதலியவைகளாக செய்யப்பட்டு, அந்தப் பாத்திரங்கள் ஜலம் முதலியவை கொண்டுவர உபயோகப்படுகிறது. ஆகையால் இது பொய்யன்று. மேலும் ஈச்வரன் ப்ரக்ருதி என்கிற வஸ்துவைக்கொண்டு இந்த ப்ரபஞ்சத்தை தன் ஸங்கல்ப மாத்திரத்தாலே ஸ்ருஷ்டிக்கிறான் என்று ச்ருதி சொல்லுகிறபடியால், ஸ்ருஷ்டிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இந்த ப்ரபஞ்சம் பொய்யாகமாட்டாது. பொய்யான வஸ்துவுக்கு ஸ்ருஷ்டி ஸம்பவியாதன்றோ ? மாயையை உபகரணமாகவுடைய ஈச்வரன் இந்த ப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான். 'மாயையாவது ப்ரக்ருதி,' என்று ச்ருதி சொல்லுகிறது. இங்கு ப்ரபஞ்ச ஸ்ருஷ்டிக்கு மாயை உபகரணமென்றும், அந்த மாயையாவது ப்ரக்ருதி என்றும் கிடைக்கிறது. இங்கு ப்ரபஞ்சத்துக்கு மூலமாகச் சொன்ன ப்ரக்ருதி விசித்ரமான ப்ரபஞ்சரூப கார்யத்தை உண்டாக்குகிறபடியால் மாயை என்று சொல்லப்பட்டதேயொழிய, அவாஸ்தவம் என்கிற அபிப்ராயத்தால் அன்று. மாயை என்கிற சப்தத்துக்கு அவாஸ்தவம் என்கிற அர்த்தமும் கிடையாது.
मम
योनिर्महद्ब्रह्म तस्मिन्
गर्भ दधाम्यहम् ।
संभवः
सर्वभूतानां ततो भवति भारत
॥
மமயோநிர்
மஹத் ப்ரஹ்ம
தஸ்மிந்
கர்ப்பம் ததாம் யஹம்|
ஸம்பவஸ்ஸர்வ
பூதாநாம்
ததோ
பவதி பாரத||
(பகவத் கீதை அத்.14. ச்லோகம் 3)
ஜகத்துக்கு
மூலகாரணமான என்னுடையதான
ப்ரக்ருதி என்கிற வஸ்துவில்
ஜீவஸமுதாயத்தை நான் சேர்க்கிறேன்.
இந்தக்
காரணத்தால்
ஸர்வபூதங்களும் உண்டாகின்றன
என்று இந்த ச்லோகத்தின்
அர்த்தம்.
இதில்
அசேதனமான ப்ரக்ருதியோடு
சேதனவஸ்துவை பகவான் சேர்ப்பதால்
இந்த ப்ரபஞ்சம் உண்டாகிறது
என்று சொல்லியிருப்பதால்
இந்த ப்ரபஞ்சம் ப்ரஹ்மத்தின்
அஜ்ஞானத்தால் கல்பிதமாகிறது
என்று சொல்லுவதற்குக் கொஞ்சமும்
இடமில்லை.
'ததீச:--காந்த:'--ஶ்ரீய:பதியான
ஸ்ரீமந்நாராயணன் அந்த
ப்ரபஞ்சத்துக்கு ஈச்வரன்.
“ப்ரஹ்ம
ஸ ஏவ” அவன்தான் பரப்ரஹ்மம்.
தைத்திரீயோபநிஷத்தில்
ப்ருகுவல்லியில்,
'எது
ஜகத்காரணமோ அது ப்ரஹ்மம்'
என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
நாராயணோபநிஷத்து
முதலான சில உபநிஷத்துக்களில்
நாராயணன் ஜகத்காரணம்'
என்று
சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகையால்
நாராயணன் தான் ப்ரஹ்மம் என்று
கிடைக்கிறது.
நிர்குணப்ரஹ்மம்
என்று வேறொன்று கிடையாது.
உபநிஷத்தில்
ப்ரஹ்மம் என்று எதனால்
சொல்லப்படுகிறது?
என்று
ஒரு கேள்வியைக் கேட்டு,
இதனிடத்தில்
பெரியதான குணங்கள் இருக்கிறபடியால்,
இது
ப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறது
என்று பதில் சொல்லப்பட்டிருக்கிறது.
ஆகையால், ப்ரஹ்மசப்தம் பெரியதான குணங்களையுள்ள வஸ்துவைச் சொல்லுகிறது என்று கிடைக்கிறபடியால், குணமில்லாத வஸ்துவை இது சொல்லமாட்டாது. ஆகையால், ஸகல கல்யாண குணங்களையும் உடையவனான ஸ்ரீமந்நாராயணனைத்தான் இந்த ப்ரஹ்ம சப்தம் சொல்லுகிறது. அவன் தான் ப்ரஹ்ம சப்தத்துக்குப் பொருள்.
ஸ:அகிலதநு:--அந்த
ஈச்வரன் சேதனர்கள்,
அசேதன
வஸ்துக்கள் இவை எல்லா வற்றையும்
சரீரமாக உடையவன்.
ஒரு
சேதனனுக்கு நியதாதேயமுமாய்
(नियताधेय)
நியத
சேஷமுமான த்ரவ்யம் அந்த
சேதனனுக்கு சரீரம் என்று
சொல்லப்படுகிறது.
நியதாதேயமாகையாவது—அந்த
சேதனனுடைய ஸ்வரூபத்தை
எப்பொழுதும் ஆச்ரயித்திருக்கை,
அதாவது,
அவன்
ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால்
நிலைபெற்று அழியாமலிருக்கை.
நியதநியாயம்யகையாவது-
சேதனனுடைய
ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டிருக்கை.
நியதசேஷத்வமாவது- அந்த சேதனன் ப்ரயோஜனத்துக்காகவேயிருக்கை.
நம்முடைய சரீரம் இந்த ஜீவாத்ம ஸ்வரூபத்தின் ஸம்பந்தம் இருக்கும்வரையில் இருந்து, அது தப்பிப்போனபோது அழிந்து போகிறது. ஆகையால் இந்த சரீரத்துக்கு சேதனஸ்வரூபம் ஆதாரமாய், அதனை ஆச்ரயித்திருக்கிறபடியால் இந்த சரீரம் ஆதேயமாய் இருக்கிறது. விழித்திருக்கும்போது அவனுடைய ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு கீழே விழாமல் இருக்கிறது. அவனுடைய புண்ய பாபங்களாகிற கர்மத்தின் பலங்களான ஸுக துக்கங்களின் அநுபவமாகிற, அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே இந்த சரீரம் உண்டாயிருக்கிறது. ஆகையால் இது அவனுக்கு சரீரமாகிறது. இப்படியே சேதனாசேதன வஸ்துக்களெல்லாம், ஈச்வரனுடைய ஸ்வரூபத்தின் ஸம்பந்தத்தால் நிலைபெற்று அழியாமல், அவன் ஸங்கல்பத்தால் தாங்கப்பட்டு லீலா ரஸம் போகரஸம் ஆகிய அவனுடைய ப்ரயோஜனத்துக்காகவே யிருக்கிறபடியால், இவையெல்லாம் ஈச்வரனுக்கு சரீரமாகிறது. இந்த அம்சம் பலச்ருதிகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
பிந்நா.......சேதனா:'-இந்த ஜீவாத்மாக்களெல்லாம் ஈச்வரனைக்காட்டில் ஸ்வத: வேறுபட்டவர்கள்.
' ஸத்யா. க்ருதா' இஜ்ஜீவாத்மாவுக்கு கர்மத்தால் நேர்ந்த ப்ரக்ருதி ஸம்பந்தம் ஸம்ஸாரம். அந்த ஸம்பந்தம் ஈச்வரனுடைய நிக்ரஹ ஸங்கல்பத்தால் உண்டாகிறபடியால் வாஸ்தவமாயுள்ளது. அந்த ப்ரக்ருதி ஸம்பந்தத்தால் உண்டாகும் ஆசை, த்வேஷம், ஸுகம், துக்கம், இவை முதலானவைகளும், அவற்றின் அனுபவங்களும், வாஸ்தவமாயுள்ளபடியால் அது ப்ராந்தியன்று.
“முக்திஸ்து ..… ததநுபூத்யாக்யா" -- ஈச்வரன் விஷயத்தில் இந்த சேதனன் பண்ணும் பக்தி, ப்ரபத்தி இவையிரண்டில் ஒன்றால் பரமபதம் என்கிற ஒரு லோகத்தில் அந்த ஈச்வரனைக் கிட்டி அவனை அனுபவிப்பது மோக்ஷம்.
ச்வேதாச்வதரோபநிஷத்தில் ஈச்வரனைத் தொடங்கி 'ப்ரக்ருதிக்கும் ஜீவாத்மாவுக்கும் பதி' என்றும் 'ஸம்ஸாரத்தினின்றும் மோக்ஷத்துக்கும் ஸம்ஸார பந்தத்துக்கும் ஹேதுவானவன்' என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. இங்கு, ஈச்வரன் ஜீவாத்மாவுடைய ஸம்ஸார பந்தத்துக்கும் ஸம்ஸாரத்தினின்றும் விடப் படுவதற்கும் காரணபூதன் என்று சொல்லுகிற படியால், ஈச்வரன் ஜீவாத்மாவுக்கு ஸம்ஸார ஸம்பந்தத்தையும் மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கிடைக்கிறது.
तानहं
द्विषतः क्रूरान् संसारेषु
नराधमान् ।
क्षिपाम्यजस्रमशुभानासुररीष्वेव
योनिषु ॥
"தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாங் ! க்ஷிபாம்யஜஸ்ரமசுபாநாஸுரீஷ்வேவ யோநிஷ'" (ப. கீ. 16-19. )
இந்தச்லோகத்தில் என்னிடத்தில் த்வேஷம் முதலான துஷ்கர்மங்களைச் செய்யுமவர்களை ஸம்ஸாரத்தில் தள்ளுகிறேன். அதிலும், அஸுர ஜன்மத்தில் தள்ளுகிறேன் என்று பகவான்தானே சொல்லியிருக்கிறபடியாலும்,
तेषामहं
समुद्धर्तामृत्यु संसारसागरात्
।
भवामि
न चिरात् पार्थ मय्यावेशित
चेतसाम् ॥
"தேஷாமஹம்
ஸமுத்தர்த்தாம்ருத்யு-ஸம்ஸார-ஸாகராத்|
பவாமி
நசிராத் பார்த்தமய்யாவேசிதசேதஸாம்]]
". (ப.கீ.அத்-12,
ச்லோ-7,)
இந்தச்லோகத்தில், "என்னிடத்தில் மிகவும் பக்தி பண்ணுபவர்களை ஸம்ஸாரமாகிற ஸாகரத்தினின்றும் எடுத்து விடுகிறேன் மோக்ஷத்தை அடையும்படி செய்கிறேன்” என்று பகவானே சொல்லியிருக்கிறபடியாலும், பாபகர்மங்களைச் செய்பவர்களுக்கு அதற்குப் பலனாக ஜந்ம பரம்பரையாகிற ஸம்ஸாரத்தையும், பகவத்பக்தி பண்ணுபவர்களுக்கு மோக்ஷத்தையும் உண்டாக்குகிறான் என்று கீழ்ச்சொன்ன ச்ருதியின் அர்த்தம் வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது. இதனால்,பகவானுடைய நிக்ரஹத்தால் (தண்டனையால்) ஸம்ஸாரம் என்றும், அநுக்ரஹத்தால் மோக்ஷம் என்றும் கிடைக்கிறது. ஆகையால் பகவானுடைய நிக்ரஹத்தால் ஏற்படும் ஸம்ஸாரம் ஸத்யம் என்று ஸ்பஷ்டமாகிறது.
தைத்திரீயோபநிஷத்தில் ஆநந்தவல்லியில், பகவானுடைய உபாஸனத்தைச் செய்யுமவன் பரம வ்யோமத்தில் (ஸ்ரீவைகுண்டத்தில்) ப்ரஹ்மத்தோடுகூட ப்ரஹ்மத்தின் குணங்களையும் அநுபவிக்கிறான் என்று சொல்லியிருக்கிற படியால் ஸ்ரீவைகுண்டத்தில் பகவானையும், அவனுடைய கல்யாண குணங்களையும் அநுபவிப்பது மோக்ஷம் என்று கிடைக்கிறது. ஆகையால் ஜீவனும் ப்ரஹ்மமும் வேறு என்கிற ப்ரமம் ஸம்ஸாரமென்றும், ஜீவனுக்கும் ப்ரஹ்மத்துக்கும் ஐக்ய ஜ்ஞானத்தால் உண்டாகும் அந்த ப்ரமநிவ்ருத்தி முக்தி என்னும் பக்ஷம், ச்ருதி ஸம்மதமன்று என்று ஸ்ரீ பகவத் ராமாநுஜரின் அபிப்ராயம்.
जगत्सत्यत्व
निरूपणम् (ஜகத்
ஸத்யத்வ நிரூபணம்)
தொடரும்.