சனி, 31 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்கரஹம் 7

 இந்தப் பதிவை ஜனவரி 23 அன்று பதிவிட்ட பதிவின் தொடர்ச்சியாகக் கருதிப் படிக்க வேண்டுகிறேன்.

बन्धमोक्षनिरूपणम्
பந்தமோக்ஷநிரூபணம்
*
    இப்படி ப்ரஹ்மம் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிப்பதால் ஏற்பட்ட ஜீவாத்மா உண்மையில் நிர்விகாரமான ப்ரஹ்மமே. இப்படி இருந்தபோதிலும், அழுக்கற்ற ஸ்படிகத்தில் அதன் ஸமீபத்தில் வைக்கப்பட்ட செம்பரத்தம்பூவின் சிவப்புத் தோன்றுவதுபோல, இந்த ஜீவனுக்கு *உபாதியான அந்தக்கரணத்தின் விகாரமான ராகம், த்வேஷம் முதலியவை இவனிடத்தில் தோன்றுகின்றன. இந்த ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

*उपाधि –– உபாதி-- ப்ரதிபலனத்திற்கு ஆதாரமாயிருப்பது.

   இப்படி ஜீவனுக்கு வந்த ஸம்ஸாரம் நீங்குவதற்கு வழி என்னவென்றால் யாகம், தானம், ஹோமம் முதலிய வைதிக கர்மங்களைக் கொண்டு இந்த ஜீவாத்மா ஈச்வரனை ஆராதித்தால், அவனுடைய அநுக்ரஹத்தால் சித்த சுத்தி பிறக்கிறது. பிறகு மோக்ஷத்தில் ஆசையுண்டாய், அதற்காக வேதாந்த ச்ரவணத்தில் முயற்சிக்கிறான். பிறகு குருவினுபதேசத்தால் 'தத்த்வமஸி' என்கிற வேதாந்த வாக்யத்தின் அர்த்தஜ்ஞானம் உண்டாகிறது. இந்த வாக்யத்தில் 'தத்' என்கிற பதத்துக்கு ஸச்சிதாநந்த ரூபமாய், ஸர்வவிகாரரஹிதமாய் அத்விதீயமான ப்ரஹ்மம் பொருள். த்வம் என்கிற பதத்துக்கு, முஞ்ஜம் என்று சொல்லப்படும் புல்லின் மேல் புரைகளைக் கழித்து அதன் நடுவிலிருக்கும் குருத்தை வேறாக எடுக்குமாப்போலே, சரீரம், இந்திரியம் முதலிய #உபாதிகளோடு கலந்திருக்கும் ஜீவாத்ம ஸ்வரூபத்தை விசாரத்தினால் அவைகளைக் காட்டிலும் வேறுபட்டதாக விவேகிக்கப்பட்ட சுத்தாத்ம ஸ்வரூபம் பொருள். இவையிரண்டுக்கும் +அபேதம் தத், த்வம் என்கிற வாக்கியத்திற்கு அர்த்தம்.

#இங்கு உபாதி என்றால் தனக்கு ஸ்வபாவமாகவே இல்லாமல் நடுவில் வந்தவை என்று அர்த்தம்.

+அபேதம் -- பேதமின்மை

  இப்படி குரூபதேசத்தாலே பரோக்ஷரூபமான நிர்விசேஷசிந்மாத்ர ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானம் உண்டாகிறது. பின்பு குரு முகத்தாலே கேட்ட அர்த்தத்தை இடைவிடாமல் பாவனை பண்ணுவதால், 'தத் த்வமஸி' வாக்யத்தால் ஸாக்ஷாத்காரரூபமான முன்சொன்ன ஜ்ஞாநம் உண்டாகிறது. அப்போது ஸகல ப்ராந்தியும் கழிந்து ப்ராந்திகளுக்கு மூலமான அவித்யையும் கழிந்து சக்கரத்தை சுற்றிவிட்டு, நாம் கையை எடுத்துவிட்டாலும் சுழலுவது சிலகாலம் அநுவர்த்திக்கிறாப்போல இந்தக் கர்மத்தால் ஆரம்பிக்கப்பட்ட சரீரம் மாத்திரம் சிலகாலம் நிற்கிறது. இந்த நிலைமைதான் ஜீவன்முக்த்யவஸ்தை என்று சொல்லப்படுகிறது. பின்பு *ப்ராரப்தகர்மம் கழிந்ததும் சரீரம் கழிந்து விடுகிறது. இந்த நிலை +விதேஹமுக்தி என்றும் கைவல்யம் என்றும் சொல்லப்படும் பரமமோக்ஷம். அதாவது அவித்யாரூபமான ஆவரணம் நிச்சேஷமாய்க் கழிந்து அகண்டாநந்த ப்ரஹ்மஸ்வரூபாவிர் பாவம். இந்த மோக்ஷத்தைப் பெறுவதற்கு வேறு உலகங்களுக்குப் போகவேண்டா. இருந்த இடத்திலேயே கிடைக்கும்.
இந்த ஸித்தாந்தத்தில் ப்ரஹ்மம் தவிர வேறொன்றும் ஸத்யமானது இல்லை என்றும், ஜீவ ப்ரஹ்மங்கள் அபின்னமென்றும் ஒப்புக் கொள்ளுகிறபடியால் இதற்கு அத்வைத ஸித்தாந்தம் என்ற பெயர் உண்டாயிற்று.

பரோக்ஷரூபமான – கண் முதலிய இந்திரியங்களால் நாம் ஒரு விஷயத்தை அறியும்போது உண்டாகும் ஞானத்திற்கு ப்ரத்யக்ஷம் அல்லதுஅபரோக்ஷ ஞானம் என்று பெயர்.அநுமானம் அல்லது சாஸ்திரத்தினால் உண்டாவதற்கு பரோக்ஷஞானம் என்று பெயர்.

நிர்விசேஷ – ஒருவித குணமும் தர்மமுமற்றது.

சிந்மாத்ர –தானாகவே ப்ரகாசிக்கின்ற ஞான ஸ்வரூபமானது.

ப்ரஹ்மாத்மைக்யம் --ப்ரஹ்மமும் ஆத்மாவும் ஒன்றே என்பது.

ப்ராரப்தகர்மம் -- பலத்தைக்கொடுக்க ஆரம்பித்த புண்ய பாபகர்மம்.

அகண்டாநந்த -- பூர்ண ஆனந்த ரூபமான

ஆவிர்பாவம் --மறைந்து இருந்த வஸ்துவினுடைய தோற்றம்.

அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.

புதன், 28 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 தொடர்ச்சி

 இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்து வரும் சிலர் அடியேனை மன்னிக்க வேண்டும். இதில் ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 3 என்ற தலைப்பில் ஜனவரி 7ம் தேதி இட்ட பதிவு பாதியில் நிற்கிறது. கவனக்குறைவாக அடுத்த பகுதிக்குச் சென்றிருக்கிறேன்.  அதனால் இந்தப் பகுதியை த்வைத சம்ப்ரதாய ஸித்தாந்தத்தின் தொடர்ச்சியாகப் படிக்க வேண்டுகிறேன். விடுபட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிய திரு குமரன் அவர்களுக்கு நன்றி. 

த்வைத ஸித்தாந்த ப்ரகரணம் (தொடர்ச்சி)


            மனுஷ்யோத்தமர்கள் த்ருண-ஜீவர், தத்வ்யதிரிக்த- ஜீவர் என்று இருவகைப்பட்டிருப் பார்கள். த்ருண - ஜீவர் ப்ரஹ்மத்தின் 'ஆத்மா' என்கிற ஒரு குணத்தை உபாஸிக்கிறவர்கள் இவர்கள் அபரோக்ஷ-ஞானம் பிறந்த பிறகு தேஹநாசாநந்தரம் இங்கேயே முக்தியை அடைகிறார்கள். த்ருண-ஜீவரைக் காட்டிலும் வேறுபட்ட மனுஷ்யோத்தமர் ப்ரஹ்மத்தின் ஸத், சித், ஆநந்தம், ஆத்மா என்கிற நான்கு குணங்களை உபாஸிப்பார்கள். இந்த முக்தி-யோக்யர்கள் மோக்ஷ-ஸாதன அநுஷ்டானத்தால் மோக்ஷத்தை அடைய யோக்யதையுடையவர்கள். இவர்கள் ஸதாசாரம், பகவத் பக்தி முதலான நல்ல குணங்களை யுடையவராயிருப்பார்கள். இவர்களில் சிலருக்கு சில காலத்தில் துர்குணம் உண்டாவது அஸுராவேசத்தாலே.

   எப்போதும் ஸுக-துக்கங்களைக் கலந்து அனுபவிப்பார்கள் நித்ய ஸம்ஸாரிகள்.  இவர்கள் புண்ய-கர்மங்களால் ஸ்வர்க்கம் போவதும், பாப-கர்மங்களால் நரகம் போவதும், பூலோகத்திற்கு வருவதுமாக சுற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

     தமோயோக்யர் தைத்யர், அஸுரர், பிசாசர், மனுஷ்யாதமர் என்று நான்கு விதம். இவர்கள் முடிவில் நித்யமான நரகத்திலேயே விழுந்துவிடுவார்கள். இவர்கள் பகவானிடத்திலும், பகவத் பக்தர்களிடத்திலும் த்வேஷம், துராசாரம் முதலான துர்க்குணங்களையுடையவராயிருப்பர்.

   ஜீவாத்மாக்கள் எல்லாரும் ஞான ஆநந்த-ஸ்வரூபர்கள். மிகவும் அணு-பரிமாணமுடைய வர்கள். பகவானுக்குக் கிங்கரர்கள். முக்தி-யோக்ய-ஜீவர்களில் ஸ்தாவர ஜீவர்களைக் காட்டிலும் பசு-பக்ஷ்யாதி-ஜங்கம-ஜீவர்கள் பக்தி, பகவத் ப்ரியத்வங்களிலும், அதன் மூலமாக மோக்ஷதசையில் வரும் ஆநந்தானுபவத்திலும் மேற்பட்டவர்கள். இவர்களைக் காட்டிலும் மனுஷ்யர் உத்தமர்; இவர்களைவிட ப்ராஹ்மண-னுஷ்யர் உத்தமர்இவர்களைக் காட்டிலும் சக்ரவர்த்திகள் நூறுபங்கு குணாதிகர். சக்ரவர்த்திகளைக் காட்டிலும் மனுஷ்ய-கந்தர்வர் நூறு பங்கு குணாதிகர்கள். இப்படியே மேல் மேல் சதுர்முக-ப்ரஹ்ம-பர்யந்தமான ஜீவர்கள் ஞானாதிகளில் தாரதம்யமுள்ளவர்கள். இந்த தாரதம்யம் இந்த ஸித்தாந்தத்திற்கு முக்யாம்சம்.

மோக்ஷமாவது ஸ்வரூப-ஆநந்த-அனுபவம். இந்த அனுபவம் ஸம்ஸார-தசையில் கர்மத்தா லுண்டான ப்ராக்ருத-தேஹ-ஸம்பந்தத்தால் தடைபட்டு பகவதனுக்ரஹத்தால் மோக்ஷ-தசையில் இந்தத் தடை நீங்கியபிறகு வைகுண்டலோகத்தில் வரும். இதில் ஜீவர்களில் அவரவர்கள் யோக்யதைக்குத் தக்கப்படி சிலருக்கு ஸாலோக்யமும், சிலருக்கு ஸாமீப்யமும், சிலருக்கு ஸாரூப்யமும், சிலருக்கு ஸாயுஜ்யமும் வரும்.

ஸாலோக்யமாவது (सालोक्य) :-- வைகுண்டலோகத்தில் எங்கேயாவது இருந்து யதேஷ்டமான போகத்தை அனுபவிப்பது.

ஸாமீப்யமாவது( सामीप्य) :- பகவத்-ஸமீபத்திலிருந்து யதேஷ்டமானபோகத்தை அனுபவிப்பது.

ஸாரூப்யமாவது (सारूप्य):-பகவானைப்போல் நான்கு கைகள், சங்கு, சக்கரம் முதலியவைகளை யுடையவர்களாய் யதேஷ்டமாய் போகத்தை அனுபவிப்பது.

ஸாயுஜ்யமாவது(सायुज्य.) :-பகவானுடைய சரீரத்தில் ப்ரவேசித்து யதேஷ்ட போகத்தை அனுபவிப்பது. இப்படி முக்தர்கள் எல்லாரும் தாரதம்யமுள்ளவர்களாயிருப்பார்கள்.

இந்த மோக்ஷத்திற்கு பக்தியோடு கூடின பகவதுபாஸனம் ஸாதனம். இந்த உபாஸனம் மனுஷ்யோத்தம-கணம் முதல் ப்ரஹ்ம-கணம் வரையில் ஏக-குணோபாஸனம், சதுர்-குணோ பாஸனம், அநேக குணோபாஸனம் என்று பஹுவித-தாரதம்யத்தோடு கூடியதாயிருக்கும்.

ப்ரத்யக்ஷம், அநுமானம். ஆகமம் என்னும் இவை மூன்றும் வஸ்துக்களை அறிவதற்கு ஸாதனமான ப்ரமாணங்கள். ஸர்வ- வேதங்களுக்கும் பொருள் பரப்ரஹ்மமே என்று இந்த ஸித்தாந்தத்தில் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

இந்த ஸித்தாந்தத்தில் ஜீவ-ப்ரஹ்மங்களுக்கு ஸ்வரூப-பேதம் ஒப்புக்கொள்ளுகிற படியால் இது த்வைத-ஸித்தாந்தம் என்று சொல்லப்படுகிறது.

த்வைத-ஸித்தாந்த ப்ரகரணம் முடிந்தது.

வெள்ளி, 23 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 6 (जीवेश्वरभेदभ्रमनिरूपणम् )

 

जीवेश्वरभेदभ्रमनिरूपणम् 
ஜீவேச்வர பேத ப்ரம நிரூபணம்



   ப்ரஹ்மத்தின் ஸ்வரூபத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதான மாயைக்கு இரண்டு அம்சமுண்டு. ஒன்று தலையெடுத்த ஸத்வகுணத்தை யுடையதாயும், மற்றொன்று குறைந்த ஸத்வமுடையதாயும் இருக்கும். இவ்விரண்டில் முதலாவது மாயையென்றும், இரண்டாவது அவித்யை யென்றும் சொல்லப்படும். இந்த இரண்டும் கண்ணாடிபோல் பிம்பத்தை க்ரஹிக்க சக்தியுள்ளது. ஆகையால் ப்ரஹ்மம் இவைகளில் ப்ரதிபலிக்கிறது. இதில் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், அவித்யையில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் ஒரே ப்ரஹ்மத்தில் பேதம் உண்டாகிறது. சிலர் மாயையில் ப்ரதிபிம்பம் ஈச்வரனென்றும், மாயாபரிணாமமான அந்தக்கரணத்தில் ப்ரதிபிம்பம் ஜீவனென்றும் சொல்லுகிறார்கள். அவித்யாம்சங்களும்
அந்தக்கரணங்களும் அநேகங்களாகையால் அவைகளில் ப்ரஹ்ம--ப்ரதிபிம்பத்தால் பல
ஜீவர்கள் ஏற்படுகிறார்கள்.

    கண்ணாடியில் ப்ரதிபலிக்கிற முகம் நேரிலிருக்கும் முகத்தைக் காட்டிலும் உண்மையில் வேறன்று, ஆகிலும் வேறாகத் தோன்றுகிறது. அப்படியே இரண்டு கண்ணாடிகளில் ஒரு முகம் ப்ரதிபலித்தால் கண்ணாடியின் பேதத்தால் ப்ரதிபலிக்கும் முகங்களும் வேறுவேறாகத் தோன்றுகின்றன. வாஸ்தவத்தில் எல்லாம் ஒன்றே. இவ்விதமே ஒரே ப்ரஹ்மம் இரண்டு வஸ்துக்களில் ப்ரதிபலிப்பதால் மூன்றும் வேறுவேறாகத் தோன்றுகின்றன. அவற்றில், ஈச்வரரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான மாயையில் அதிகமான ஸத்வகுணமிருப்பதால், அது அதிகமான ஞானம், சக்தி, முதலியவைகளை யுள்ளதாயிருக்கும். கண்ணாடியிலுள்ள தோஷங்களெல்லாம் அதில் ப்ரதிபலித்த முகத்தில் தோன்றுகிறதுபோல, மாயையிலுள்ள அதிகமான ஞானம், சக்தி முதலியவை அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மத்தில் தோன்றுகிறது. அதனால் ஈச்வரன் ஸர்வஜ்ஞன், ஸர்வசக்தன், ஸத்யஸங்கல்பன் முதலான வ்யவஹாரங்கள் நடந்துவருகின்றன. இவனுக்கு அதிகமான ஞானசக்திகள் இருப்பதால் இவன் ஆராத்யனாயும், (आराध्यः –– பூஜிக்கப்படுபவன்) தன்னை ஆராதிப்பவர்களுக்கு பலப்ரதனாயும் ( फलप्रदः -- 2லத்தைக் கொடுப்பவன்) ஆகிறான். இந்த ஈச்வரன்தான் ஸகுணப்ரஹ்மம் என்று சொல்லப்படுகிறான்.

   ஜீவரூபமான ப்ரதிபிம்பத்துக்கு ஆச்ரயமான அவித்யை அல்லது அந்தக்கரணம் ஸத்வகுணம் குறைவாயிருப்பதால் அல்பமான ஞானசக்திகளை யுடையதாயிருக்கும். அதனால் அதில் ப்ரதிபலிக்கிற ப்ரஹ்மம் அல்பஜ்ஞமாய் அல்பசக்திகமாய்த் தோன்றுகிறது. இதனால் ஜீவன் அல்பஜ்ஞன் அல்பசக்திகன் என்கிற வ்யவஹாரம் நடந்துவருகிறது.

     மாயாபரிணாமமான (பரிணாமம் --விகாரம், மாறுதல்) அந்தக்கரணத்தின் விகாரங்களான ஞானம், இச்சா, (इच्छाः ஆசை) க்ருதி,(कृति - முயற்சி) த்வேஷம், ஸுகம், துக்கம் முதலானவைகள் அந்தக்கரணத்தில் ப்ரதிபலிக்கிற ஜீவனிடத்தில் தோன்றுகிறபடியால் ஜீவனுக்கு நான் ஞாதா, (ज्ञाता --அறிபவன்) போக்தா, (भोक्ता -- அனுபவிப்பவன்) கர்த்தா,(कर्ता -- செய்பவன்) ஸுகீ, துக்கீ முதலிய வ்யவஹாரங்கள் நடக்கின்றன.

    ஜலத்தில் ப்ரதிபலித்த சந்திரனிடத்தில் ஜலத்திலுண்டாகும் அசைதல் முதலியவை தோன்றி, சந்திரன் அசைகிறான் என்று ப்ரமத்தால் சொல்லப்படுவதுபோல் அந்தக்கரணத்தில் உண்டாகும் சலநாதிவிகாரம் (चलनादिविकारः –– அசைதல் முதலிய செய்கைகள்) அதில் ப்ரதிபலித்த ப்ரஹ்மத்தில் தோன்றுவதால், ஜீவன் இகலோக பரலோக ஸஞ்சாரம் (इहलोकपरलोक सच्चारः –– இவ்வுலகம், மேலுலகம், இவைகளுக்குப் போவது வருவது) செய்கிறான் என்கிற வ்யவஹாரம் உண்டாகிறது.

      ஜீவனுக்கு ஞானம், சக்தி முதலியவை குறைவு. அதனால் ராகத்வேஷாதிகளாலே தனக்கு இஷ்டமான வஸ்துவை யடைவதற்கும், அநிஷ்டமாய்த் தோன்றுவதை விலக்குவதற்கும் சக்தியற்றவனாய், அதற்காக ஈச்வரனை உபாஸித்து, அவனுடைய அநுக்ரகத்தால் ஐச்வர்யம் முதலான ஸாம்ஸாரிக பலத்தை (संसारिकफल –– ஸ்வர்க்கம், பூமி இவைகளிலேயே அனுபவிக்கக் கூடிய பலம்) அடைகிறான். நிஷ்காமனாய் ஈச்வரனை உபாஸித்தால், அவனுடைய அநுக்ரகத்தால் சித்தசுத்தி உண்டாகி வேதாந்த ச்ரவணத்திற்கு அதிகாரியாகிறான். (अधिकारः –– ஒரு காரியத்தைச் செய்வதற்கு வேண்டிய யோக்யதை. இதையுடையவன் அதிகாரி)

(தொடர்வது பந்தமோக்ஷநிரூபணம்)

செவ்வாய், 13 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 5 -- ப்ரபஞ்ச மித்யாத்வ நிரூபணம்

 

प्रपञ्चमिध्यात्वनिरूपणम्

ப்ரபஞ்ச – மித்யாத்வ - நிரூபணம்

      ச்ருதிப்ரமாணத்தால் இந்த ப்ரஹ்மம் ஸத்யமாய் ஸித்திக்கிறாப்போல், ப்ரத்யக்ஷ ப்ரமாண பலத்தால் ப்ரபஞ்சம் ஸத்யமாக ஸித்திக்கத் தடையென்னவென்றால்-இது ஸத்யமென்று சொல்ல வழியில்லை. இது ஸத்யமாக இருந்தால் எப்போதும் காணப்படவேண்டும். மூன்று காலங்களிலும் உள்ளதுதான் பரமார்த்த த்யமாக ஆகும். ப்ரபஞ்சத்திலுள்ள வஸ்துக்கள், உண்டாவதற்கு முன்னும், நாசத்திற்குப் பின்னும் காணப்படுவதில்லை. ஸத்யமாயிருந்தால் இறந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் எனப்படும் மூன்று காலங்களிலும் இருப்பதாகக் காணப் படவேண்டும். அப்படியன்றிக்கே ஒரு காலத்திலுண்டாய், சிலகாலமிருந்து, பிறகு நாசமடைந்து முன்னும் பின்னும் காணப்படாத. வஸ்துக்கள் பரமார்த்த ஸத்தாக ஆகமாட்டா. ஆகையால் இந்த்ர ஜாலாதிகளில் மாயையினால் அஸத்யமான வஸ்துக்கள் தோன்றுகிறது போல இங்கும் மாயையினால் இந்த ப்ரபஞ்சம் உள்ளதாகத் தோன்றுகிறது. இந்த அர்த்தம் 'மாயையை யுடையவன் ஒருவன் இப்ரபஞ்சத்தை ஸ்ருஷ்டிக்கிறான்' என்றும், 'பரமாத்மா மாயைகளால் அநேக ரூபமுள்ளவனாய்த் தென்படுகிறான்' என்றும் சொல்லும் பல ச்ருதிகளால் கிடைக்கிறது.

     மாயையாவது ஸத்வம், ரஜஸ், தமஸ் என்கிற குணத்ரயமயமாயும், ஸத் என்றும் அஸத் என்றும் சொல்லமுடியாததாயும், ( सत् - ஒரு காலத்திலும் இல்லையென்று சொல்ல வொண்ணாத ப்ரஹ்மம் போன்றவை. असत्-- ஒருகாலத்திலும் இல்லாத முயற்கொம்பு போன்றவை.) தன்னாச்ரயத்தை மறைக்கும் ஸ்வபாவமுள்ளதாயும், மேல் மேல் விகாரத்தை யடைவதுமான ஒரு வஸ்து. இது அஜ்ஞானம், அவித்யை, மோஹம் என்கிற பெயர்களாலும் வ்யவஹரிக்கப்படும். சில ச்ருதிகள் இந்த மாயைக்கு நாசத்தைச் சொல்லுகிறபடியால், இந்த மாயை ஸத்யமன்று. இந்த மாயை ப்ரஹ்மத்தை ஆச்ரயித்து, அதன் ஸ்வரூபத்தை மறைத்து, ஆகாசம், வாயு, தேஜஸ், ஜலம், ப்ருதிவீ என்கிற விகாரங்களையும், அதிலிருந்துண்டாகும் மற்ற விகாரங்களையும் அடைந்து வருகிறது. அப்போது ப்ரஹ்மம் அந்தந்த ரூபமாய்த் தோன்றுகிறது. காப்பு முதலிய நகைகளுக்கு தங்கம் காரணமாகிறதுபோல ப்ருதிவீ முதலியவைகளுக்கு மாயை மூலகாரணமாயிருக்கும். இப்படி அஸத்யமான மாயாகார்யமானதால் (மாயாகார்யம் -- மாயையிலிருந்து உண்டாகும் வஸ்து) இந்த ப்ரபஞ்சம் அஸத்யமென்று கிடைக்கிறது.

     அன்றிக்கே ச்ருதிகள், 'பலவாகத் தோன்றும் வஸ்துக்கள் ஒன்றும் இல்லை என்று சொல்லுகிறபடியாலும், இந்த ப்ரபஞ்சம் மித்யை (मिथ्या –– பொய்) என்று கிடைக்கிறது. ஆனால் முன்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் ஸூர்யகிரணத்தில் தென்படும் ஜலத்துக்கும் ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் தோன்றும் ப்ரபஞ்சத்திற்கும் வாசி யுண்டு : அந்த ஜலாதிகள் ப்ராதிபாஸிக-ஸத்; ப்ருதிவீ முதலிய ப்ரபஞ்சம் வ்யாவஹாரிக ஸத்.

      ஸத் என்பது ப்ராதிபாஸிகம், வ்யாவஹாரிகம், பாரமார்த்திகம் (प्रातिभासिकं, व्यावहारिकं, पारमार्थिकअम्) என்று மூன்றுவகைப் படும். இதில் ப்ராதிபாஸிகஸத்தாவது ப்ரஹ்மம் தவிர வேறு வஸ்துக்களில் தோன்றி, அந்த வஸ்துவின் உண்மையான ஸ்வரூபத்தை அறிவதனால் நிவ்ருத்திப்பது. அதாவது தூரத்திலிருந்து பார்க்கும்பொழுது முத்துச் சிப்பியின் ஸ்வரூபம் மறைந்து அது வெள்ளி என்று ப்ரமம் உண்டாகிறது. பின்பு ஸமீபத்தில் போய்பார்த்தால் இது வெள்ளியன்று, சுக்தி (शुक्ति – முத்துச்சிப்பி) என்று தெரிகிறது. இங்கு ப்ரமத்திற்கு
ஆதாரமான சுக்தியினுடைய ஸ்வரூபஜ்ஞானத்தால் வெள்ளி நிறுத்திக்கிறது. இவ்வாறு முத்துச்சிப்பியில் தோன்றும் வெள்ளிதான் 'ப்ராதிபாஸிகஸத்' என்று சொல்லப்படுகிறது.

     வ்யாவஹாரிகஸத்தாவது, ப்ரஹ்மஸ்வரூபத்தில் தோன்றும் ஆகாசம் முதலிய பூதபௌதிக ப்ரபஞ்சம். ப்ரஹ்மத்தின் உண்மையான ஸ்வரூபம் மறைந்து அதில் அஜ்ஞானத்தால் ஆகாசாதி-ப்ரபஞ்சம் ஏற்படுகிறது. வேதாந்த வாக்யங்களால் தத்வஜ்ஞானம் பிறந்து இரண்டாவது இல்லாததான ப்ரஹ்மஸ்வரூபத்தின் ஸாக்ஷத்காரம் உண்டாகும்போது முன் ஏற்பட்ட ஆகாசாதி - ப்ரபஞ்சம் நசித்துப் போகிறது. இதனால் ப்ரஹ்மஸ்வரூபத்தின் தத்வஜ்ஞானம் தவிர மற்றொரு தத்வஜ்ஞானத்தால் நசிப்பது ப்ராதிபாஸிக-ஸத் என்றும், ப்ரஹ்மஸ்வரூப-தத்வஜ்ஞானம் ஒன்றினால் மாத்ரம் நசிப்பது வ்யாவஹாரிக-ஸத் என்றும் ஏற்படுகிறது.

     பரமார்த்தஸத்தாவது ஒருகாலத்திலும் நிவ்ருத்தியாமல் (निवृत्ति:- நீங்குதல்.) எல்லாக் காலங்களிலும் அநுவர்த்திக்கும் (अनुवृत्ति – இடைவிடாமல் இருத்தல்) வஸ்து. இதுதான் நிர் குணப்ரஹ்மம்.

தொடர்வது

जीवेश्वरभेदभ्रमनिरूपणम्-- ஜீவேச்வர பேத ப்ரம நிரூபணம்

சனி, 10 ஜனவரி, 2026

ஸித்தாந்த த்ரய ஸங்க்ரஹம் 4

 

अद्वैतसिद्धान्त प्रकरणम् ॥
அத்வைத ஸித்தாந்த ப்ரகரணம்.
இனி அத்வைத ஸித்தாந்தத்தை நிருபிக்கிறேம்.
இதற்கு ப்ரவர்த்தகர் ஸ்ரீ சங்கராச்சாரியர்.



ब्रह्मैकं परमार्थसत्तदितरन्मायामयत्वान्मृषा
ब्रह्मैवैकमुपाधिबिम्बितमतो जीवेशभावं गतम् ।
भ्रान्तिस्संसृतिरस्य तत्प्रशमनं मुक्तिस्तदप्यात्मनो
ब्रह्मैक्यावगमाच्छूति श्रवणजादित्याद्दुरद्वैतिनः ॥

ப்ரஹ்மைகம் பரமார்த்த-ஸத் ததிதான் - மாயா - மயத்வான்-ம்ருஷா
ப்ரஹ்மைவைக முபாதி -பிம்பித-மதோ ஜீவேச-பாவம் கதம் 1
ப்ராந்திஸ் - ஸம்ஸ்ருதி-ரஸ்ய தத்-ப்ரசமனம் முக்திஸ்-ததப்யாத்மநோ
ப்ரஹ்மைக்யாவகமாத் ச்ருதி-சரவண-ஜாத் இத்யாஹு ரத்வைதிந்:11

து இந்த ஸித்தாந்தத்தின் ஸங்க்ரஹ சலோகம். இதன் அர்த்தம்:-

ஏகம் = தனக்கு ஸஜாதீயமானதும், விஜாதீயமானதும், ஒன்றுமில்லாததாய், தன்னிலும்
ஒரு தர்மமும் இல்லாததான, ப்ரஹ்ம-ஆத்ம வஸ்து, பரமார்த்தஸத்பரமார்த்தமாயுள்ளது
(
ஆத்மவஸ்துவுக்கு ஸஜாதீயமானது மற்றொரு ஆத்மா, விஜாதீயமானது ஆத்மாவைக் காட்டில் வேறுபட்டது)
   இதனால் இரண்டாவது ஆத்மாயில்லை என்றும், ஆத்மாதவிர மற்றொரு வஸ்து இல்லை என்றும், ஆத்மவஸ்துவில் ஒரு தர்மமும் இல்லை என்றும் சொன்னதாகிறது. இங்கு 'ப்ராதிபாஸிகஸத்' 'வ்யாவஹாரி கஸத்' இவைகளைக்காட்டில் ஆத்ம வஸ்துவுக்கு வாசி தோன்றுவதற்காக 'பரமார்த்தஸத்' என்று சொல்லப்பட்டிருக்கிறது. 'ததிதரன் ... ம்ருஷா'-ப்ரஹ்மத்தைக் காட்டில் வேறுபட்டது மாயையின் கார்யமானதால் பொய்; 'ப்ரஹ்மை.......கதம்'-ஒரு ப்ரஹ்மமே உபாதியில் ப்ரதிபலித்ததாய் அந்த ப்ரதிபலனத்தால் ஜீவனாகவும் ஈச்வரனாகவும் ஏற்பட்டது.

   'ப்ராந்தி: அஸ்ய'ஜீவாத்மாவுக்கு நான்ஞாதா, நான்கர்த்தா, நான்போக்தா, இது முதலிய ப்ராந்திதான் ஸம்ஸாரம்.

'தத்ப்ரசமனம் முக்தி:' அந்த ப்ராந்தியின் நிவ்ருத்திதான் மோக்ஷம்,

   ததபி.........ச்ரணஜாத்' தத்வமஸி என்கிற வேதாந்தவாக்ய ச்ரவணத்தால் உண்டாகும் ப்ரஹ்மாத்மைக்ய ஜ்ஞானத்தால் (தனக்கு ப்ரஹ்மத்தோடு ஐக்யஜ்ஞானத்தால்) அந்த ப்ராந்தி நிவ்ருத்தி யுண்டாகிறது.

'இத்யா... :' என்றிப்படி அத்வைதி வேதாந்திகள் சொல்லுகிறார்கள்.

 

1. ப்ரஹ்மத்துக்கு ஸத்யத்வ நிருபண ப்ரகரணம்.

ப்ரிதிவீ,(पृथिवी ––பூமி) ஜலம், தேஜஸ், (तेझः -அக்னி) வாயு, ஆகாசம் என்று பெயருடைய பஞ்சபூதங்களும், அவைகளுடைய கலப்பாலுண்டான 'பௌதிகம்'(भौतिकं - பூதங்களிலிருந்து உண்டானவை) என்று பெயருடைய சரம், அசரம் என்று இரண்டு வகைப்பட்ட நமக்குத் தென்படும் எல்லா வஸ்துக்களும் வாஸ்தவமானவையன்று. பாலைவனத்தில் மத்யாஹ்நத்தில் (मध्याह्नम्) ஸூர்யகிரணங்கள் பரவ அவ்விடத்தில் வாஸ்தவமாயில்லாத ஜலப்ரவாஹமும் அதின் அலைகளும் காணப்படுவதுபோல இந்த ப்ரபஞ்சமும் உண்மையாயில்லாதபோதிலும் உள்ளது போல் தோன்றுகிறது.அங்கே பரவிய சூரியகிரணங்கள் ஜலம்போல் தென்படுவதுபோல, இங்கும் எங்கும் பரவிய ஒரு வஸ்து இப்படி ப்ரபஞ்சரூபமாய்க் காணப்படுகிறது. இதுதான் பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகிறது.

  வாஸ்தவமாயுள்ள ப்ரஹ்மஸ்வரூபம் தெரியாமல் பொய்யான ப்ரபஞ்சம் காணப்படு வானேன் எனில்- வாஸ்தவமான ப்ரஹ்மஸ்வரூபத்திற்கு அநாதிகாலமாக மாயையென்று ஒரு வஸ்துவின் ஸம்பந்தம் வந்திருக்கிறது. இந்த மாயைக்குத் தனக்கு ஆதாரமான ப்ரஹ்மத்தை மறைப்பது ஸ்வபாவம். அப்படி மாயையினால் மறைக்கப்பட்டதால் ப்ரஹ்மஸ்வரூபம் உள்ளபடி ப்ரகாசிப்பதில்லை.
   இந்த ப்ரஹ்மத்துக்கு ஸத்தை, ப்ரகாசம், ஆநந்தம் என்று மூன்று ஆகாரங்கள் உண்டு. அதனால்தான் இது ஸச்சிதாநந்தஸ்வரூபமென்று சொல்லப்படுகிறது. இந்த மூன்று ஆகாரங்களும் ப்ரஹ்மஸ்வரூபத்தைக் காட்டிலும் வேறுபட்டவையன்று. இந்த ப்ரஹ்ம ஸ்வரூபத்தில் ஒரு குணமும் கிடையாது. ஆகையால் இது நிர்குணம் என்றும் நிர்விசேஷம் என்றும் சொல்லப்படுகிறது.

   ஸச்சிதாநந்த ரூபமான இந்த ப்ரஹ்மம் வாஸ்தவமாக உள்ளதென்று 'ஸத்யமாயும் விஜ்ஞானமாயும், ஆநந்தமாயும் உள்ளது ப்ரஹ்மம்' என்றிது முதலிய ஶ்ருதிகளாலும் அதற்கு ஒத்தாசையான யுக்திகளாலும் கிடைக்கிறது. யுக்தி எதுவெனில் -- கீழ்ச்சொன்ன த்ருஷ்டாந்தத்தில் பாலைவனத்தில் பரவின ஸூர்யகிரணத்தில் ஜலப்ரமம் உண்டாகிறது. இதுபோலவே அந்தந்த ப்ரமங்களில் ஒரு வஸ்துவிலே மற்றொரு வஸ்துவுக்கு ப்ரமம் உண்டாகிறது. அவ்விதமே இங்கும் இந்த ப்ரபஞ்சத்தினுடைய ப்ரமம் ஒரு வஸ்துவில் உண்டாயிருக்கவேண்டும். அந்த வஸ்து ஸத்யமன்று என்று ஒப்புக்கொண்டால், அதன் விஷயமான ப்ரமத்திற்கு *ஆதாரம் ஒன்று ஒப்புக்கொள்ளவேண்டும். இப்படியே மேல் மேல் ஆதார #பரம்பரை ஒப்புக்கொள்ளவேண்டியதாக வருகிறது. ஆகையால் ப்ரபஞ்ச ப்ரமத்திற்கு ஆதாரமான வஸ்து ஸத்யமாக உள்ளது என்று ஒத்துக்கொள்ளவேண்டும் என்பதே.

*ஆதாரம் -- எதில் ஒன்றுக்குத் தோற்றம் ஏற்படுகிறதோ அது ஆதாரம்.

#பரம்பரை -- ஒன்றின் மேல் ஒன்றாகத் தொடர்ந்து ஒரு முடிவின்றிக்கே வருவது.

தொடர்வது 
प्रपञ्चमिथ्यात्वनिरूपणम्  –– ப்ரபஞ்ச மித்யாதவ நிரூபணம்