சனி, 23 பிப்ரவரி, 2008

ஸ்ரீவைஷ்ணவர்களும் காஃபியும்

பொதுவாகவே காஃபி ப்ராமணர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று.அதிலும் வைணவர் களுக்கு காஃபி மட்டும் இருந்தாலே போதும் ; வேறு ஒன்றுமே வேண்டாம். அப்படி என்ன ஒரு ஈர்ப்பு? நாமெல்லாரும் காஃபியில் மஹாவிஷ்ணுவைக் காண்கிறோமாம். திருப்புல்லாணி T P L S லக்‌ஷ்மண சாஸ்த்ரி காரணம் சொல்கிறார். வீடியோவில் பாருங்கள்



புதன், 20 பிப்ரவரி, 2008

ஸ்ரீ தேசிக கீர்த்தனைகள்

ஸ்ரீ ஹயக்ரீவப்பெருமான் நிமந்திரணத்துக்கு
                எழுந்தருளியது.

                    விருத்தம்

பொறுமைமிகுமிவருக்கேவரதநாதன்
         புத்திரனாயவதரித்துவளருநாளிற்
சிறிதுபேர்தரிசினத்தார்தாமேகூடித்
        திருவத்தியயனத்தில்விரோதஞ்செய்தார்
திறமையுள்ளவிவரறிந்துகலக்கமில்லாச்
        சித்தசுத்தராயிருந்த தெளிவினாலே
உறுதிகொண்டுவெண்பரிமுகத்தர்தாமே
       யுண்டிட்டாரமுதுசெய்யக்கண்டிட்டாரே.

தரு - இராகம் - கலியாணி -- தாளம் - ஆதி

                    பல்லவி

அமுதுசெய்யக்கண்டுகொண்டாரே
யருளாளரயக்கிரீவரைக்கண்டாரே.

                அனுபல்லவி

திமிரந்தன்னைத்தீர்க்குந்தேசிகர்க்கேயுகந்து
திருத்தந்தையனந்தார்யர்திருவத்தியயனத்தில்வந்து  (அமு)

                சரணங்கள்

திருவத்தியயனத்தின்முதனாட்டானேயிவர்
    ஸ்ரீவைஷ்ணவர்க       ணிதானம்
வரணஞ்செய்திருக்கவேசிலர்களசூயையாலவ்
    வைஷ்ணவர்களுக்குப்    பரதானந்
தரவும்வாங்கிக்கொண்டவர் மோசஞ்செய்துபுசித்துத்
     தாம்பூலந்தரித்து         மஞ்ஞானம்
விரவியிருந்தவர்கடிருவத்தியானகார்ய
       விக்கினஞ்செய்யக்கண்டந்தவேளை யெம்பெருமானும்
                                                                                       (அமு)

அந்தவேளையில் ஸ்ரீவைணவர்கிடையாமை
       யாலேவிசாரங்கொண்டு       தேடிச்
சிந்தைசெய்திவர்பின்புதெளிந்து நம்குல
      தெய்வம்வரதரென்று           நாடி
எந்தமயக்கிரீவருமிருக்கக்குறையென்னென்
       றிதயத்தில்வைத்தங்கே நீராடி
வந்துதான்கேசவாதிநாமங்களையுஞ்சாத்தி
       மற்றுந்திருவத்தியனகிர்த்தியத்தில்வந்து  கூடி  (அமு)

வகைகொண்டேமூவன்னமும்வரிதங்கேயயக்கிரீவர்
     வந்தருள்வாரென்றன்பு         மீறிச்
சகலபதார்த்தங்களும்பரிபாகமானதெல்லாந்
      தளிகைதன்னிலே           பரிமாறிச்
செகந்நாதரானவயக்கிரீவரைத்தியானித்தங்கே
       திரைபரிமாறித்துதி        கூறிச்
சுகமாய்வெளியில்வைஷ்ணவபிதுருமந்திரங்களைச்     
  சொல்லிக்கொண்டிருக்கின்ற நல்லவேளையிற்  றேறி
                                                                              (அமு)

கட்டியசோறுடன்  கறியுந்தயிருமெல்லாங்
    கலந்துடனுண்டார்வாசு      தேவர்
ஒட்டியமுதுசெய்யு    மோசையுமுறிஞ்சலி
      னோசையுமாயிருந்திங்         கிவர்
சிஷ்டராம்விதுரான்னம்   புசித்ததுபோலேகொண்டார்
      திருப்தியடைந்தார்பிதிரு           தேவர்
சட்டமதாயிருந்து       தாம்பூலாதிவகையுஞ்
      சமர்ப்பிக்கலாலாமுதந்    தந்தாரேயயக்கிரீவர்  (அமு)  

செவ்வாய், 19 பிப்ரவரி, 2008

திருக்கோஷ்டியூர் தங்கப் பல்லக்கு


"தினத்தந்தி " நாளிதழுக்கு நன்றியுடன்

ஞாயிறு, 17 பிப்ரவரி, 2008

தேசிக கீர்த்தனைகள்

கட்டளைக்கலித்துறை

நடையுடைபாவனையெல்லாநடத்தையுஞானமுமே
புடைசூழ்பெரியவர்கொண்டாடவேவந்தபுண்ணியர்காண்
தடையானதில்லைநிகமாந்ததேசிகர்தாரணிமேல்
விடையவிரத்திதொடுத்தாரெனச்சொல்லிவேண்டுவமே.

தரு - இராகம் - பியாகடை - தாளம் - ஆதி

பல்லவி

தொடுத்தாரேவிரத்திவிரதத்தின்மனங்கொடுத்தாரேதேசிகரே.

                அனுபல்லவி

தொடுத்தார்வைராக்கியநிதியென்றும்போதா
வெடுத்தேயருளாளரிவர்சொப்பனத்தில்வரத்        (தொ)

சரணங்கள்

உம்முடையவிரத்திகண்டுகந்தோமானாலு
    முமக்குக்குமாரர்பெற்று    மின்ன
இம்மையிலொருநாளாகிலுந்தேவியா
    ரிடத்தினிற்பிரவர்த்தியு   மென்ன

எம்மாலென்றவவருமனுஷ்டானஞ்செய்வதற்
     கேற்குமோவென்னவும்பிர  சன்ன
செம்மையாயுமக்குநாம்புத்திரராகவந்து
     செகத்திலவதரிப்ப     மென்னத்                  (தொ)

நமக்காகநீருமொருநாள்கர்ப்பாதானஞ்செய்வீர்
    நாட்டினிஷித்தமல்ல     பாரு
முமக்குப்பிறக்குஞ்செல்வர்தமக்குத்திருநாம
     முண்மையாய்ச்சாற்றுமன்பு    கூரு

மெமக்குப்பிரீதியென்றேவரதரருளிச்செய்ய
     விவருமனதிசைந்து      நேரும்
இமைக்குந்திருக்கண்விழித்தாச்சரியங்கொண்டார்
     வயிராக்கியநிதியென்றுயர்     பேரும்            (தொ)

அவனுக்குவுகப்பாகிலப்படிச்செய்வோமென்று
      அருளாளர்கிருபைதன்னை      யேற்றுக்
கவனத்துடனேகர்ப்பாதானஞ்செய்வதற்குயர்
       காலஞ்சோதிஷநூலைப்      பார்த்து
நலமுற்றகிரஹங்களுஞ்சுபமாய்ப்பனிரண்டாண்டி
      னல்லநாளொன்றொன்றுக்குக்   காத்துத்
தவமிக்கதேவியரிடத்திற்கர்ப்பத்தைத்தாமே
      தரிப்பித்தருளியன்பு       சேர்த்து               (தொ)

நயினாராசாரியர்   திருவவதாரம்

கற்பனைசேர்பாமாலைகண்ணனடிக்கேசாற்று
மற்புதவேதாந்தார்யரவர்தாஞ் -- சொப்பனத்தில்
வந்தருளுங்கச்சிவரதர்திருவருளாற்
றந்தருளுஞ்செல்வரைப்பெற்றார்.

தரு - இராகம் - மத்திமாவதி - ஏகதாளம்

பல்லவி

செல்வரைப்பெற்றார்திருவேங்கடநாதர் செல்வரைப்பெற்றார்

அனுபல்லவி

செல்வரைப்பெற்றாரேகல்விமிகுத்தாரே
    சீராருந்தூப்புற்றிருவேங்கடநாதர்               (செல்)

சரணங்கள்

திருநக்ஷத்திரநாற்பத்திரண்டினிற்
     சேர்ந்திடுநளசம்வச்சரத்திலே
பெருமையாகிய வாவணிரோகிணி
      பேரருளாளர்குமாரராகிவரச்                   (செல்)

வருகுமாரர்க்குச்சாதகன்மநெறி
      வண்மையாய்ச் செய்துமீராறுநாளிலே

வரதராசர்தந்நியமனப்படி
     வரதநாமமெனத் திருநாமம்செய்               (செல்)

திருவிளையாட்டுமாடிக்கொண்டேயிந்தச்
     செல்வர்வளர்ந்திட்நாளிலயக்கிரீவர்
திருவிளையாட்டின்மகிமைக்கண்டவர்
      தெரிசனத்தையு  நிலைநிறுத்தினார்          (செல்)