வியாழன், 21 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 10

ஶ்ரீ மஹாபாரத வினா விடை
சபா பர்வம்

வினாக்கள்  33 -- 50

 

வினா33.- யாகம்‌ முடிந்தவுடன்‌ தர்மபுத்திராது மனம்‌ எவ்வாறிருந்தது? ஏன்‌?

விடை- தர்மபுத்திரரது மனம்‌ சிசுபாலவதத்தை நினைந்து குழம்பிக்‌ கொண்டிருந்தது. நாரதர்‌ முன்னமே இந்த யாகத்தைப்பற்றி சொல்லி முடிக்குங்கால்‌, இதற்கு ஏதாவது நடுவில்‌ தடைகள்‌ வந்தால்‌ ஸகல க்ஷத்திரியர்களும்‌ நாசமடையும்படியான யுத்தமுண்டாகும்‌ என்று சொல்லியிருந்த வார்த்தை ஞாபகத்தில்வர, தர்மபுத்திரரது கஷ்டம்‌ அதிகரித்து விட்டது. இதைப்பற்றி வியாஸரிடம்‌ கேட்டதில்‌, அவர்‌ “இந்தச்‌ சின்னங்களுடைய பலன்‌ 13-வருஷம்‌ இருக்கும்‌, அதன்‌ கடைசியில்‌ க்ஷத்திரியருக்‌கே உனது மூலமாய்‌ நாசம்‌ வந்தாலும்வரும்‌. இதற்காக நீ துக்கப்பட்டு பிரயோஜனமில்லை" என்று சொல்லிப்போனார்‌. இதைக்கேட்டு தர்மபுத்திரருக்குத்‌ துக்கமதிகரித்‌தது. கடைசியாக இதைத்‌ தடுப்பதற்குத்தான்‌ யாருக்கும்‌ ஹிதத்தையே செய்வதாக இவர்‌ சபதம்‌ செய்து கொண்டார்‌.

வினா 34.- இந்த யாகம்‌ முடிந்ததும்‌ யார்யார்‌ ஊருக்குச்‌ சென்றார்கள்‌? யார்‌ யார்இந்திரப்ரஸ்தத்திலேயே இருந்தார்கள்‌?

விடை...  கிருஷ்ண பகவான்‌, பீஷ்மர்‌ முதலிய ஸகல இராஜாக்கள்‌ தர்மபுத்திரரால்‌ தகுந்த மரியாதை செய்யப்பட்டுத்‌ தத்தம்‌ இருப்பிடம்‌ சென்றார்கள்‌. ஆனால்‌ துர்யோதனன்‌, சகுனி இவ்விருவர்‌ மாத்திரம்‌ இந்திரப்ரஸ்தத்தில்‌ சிலகாலம்‌ தங்கி இருந்தார்கள்‌.

வினா 35.- இவர்கள்‌ இங்கு இருக்கையில்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை... துர்யோதனனும்‌, சகுனியும்‌ ஒருவரது ஸஹாயமுமின்றி மயஸபையைச்‌ சுற்றிப்பார்க்கப்‌ போனார்கள்‌. போனவிடத்தில்‌ இவர்கள்‌ தண்ணீரில்லாத விடங்களில்‌ துணிகளைத்‌ தூக்கிக்கொண்டும்‌, தண்ணீர்‌ நிறைந்த தடாகங்களில்‌ தெரியாது விழுந்தும்‌, கதவில்லா விடங்களில்‌ பிரமித்து முட்டிக்கொண்டும்‌ தத்தளித்தார்கள்‌. இந்நிலையைக்கண்ட பீமன்‌ முதலிய ஸாதாரண ஜனங்களும்‌ ஸ்திரீகளும்‌ வயிறு வெடிக்கச்‌ சிரித்தார்கள்‌. ஆனால்‌ தர்மாத்மாவான தர்மராஜர்‌ மாத்திரம்‌ சிரிக்காது இவர்கள்‌ படுந்துயரத்திற்கு இரங்கி இவர்களுக்குப்‌ புதிய வஸ்திரங்களையும்‌ அழைப்பித்துக்‌ கொடுத்தார்‌. இதைக்கூட வாங்கிக்கொள்ளாது அதிக கோபத்தோடும்‌ வெட்கத்தோடும்‌ ஒருவரோடும்‌ சொல்லிக்‌ கொள்ளாது, இவ்விருவரும்‌ ஹஸ்தினா புரம்‌ போய்ச்சேர்ந்தனர்‌.

வினா 36.- இவர்கள்‌ ஊர்போய்ச்‌ சேர்ந்ததும்‌ என்ன ஆலோசனை செய்தார்கள்‌?

விடை.- தர்மபுத்திரரது இராஜஸூய வைபவத்தைக்கண்டு வயிற்றெரிச்சல்‌ துர்யோதனனுக்கு அதிகரிக்க, தர்மபுத்திரரது வைபவங்களை அபகரியாது தான்‌ உயிர்‌ தரிப்பது அஸாத்திய மென்று சகுனி, கர்ணன்‌ முதலிய துராத்மாக்களோடு இவன்‌ கலந்து பேசினான்‌. சகுனி தனது மருமகன்‌ படுங்கஷ்டத்தைக்‌ கண்டு தான்‌ தர்மபுத்திரரைச்‌ சூதாட்டத்தில்‌ வென்று அவரது வைபவங்களைத்‌ துர்யோதனனுக்‌ குக்‌ கொடுப்பதாகச்‌ சொன்னான்‌. இதன்பின்பு தர்மபுத்திரரை சூதாட அழைக்க வேண்டியதற்குத்‌ தகுந்த உபாயங்களைச்‌ செய்யத்‌ தொடங்கினார்கள்‌. வினா 37.- இவர்கள்‌ என்னென்ன செய்தார்கள்‌? அவைகள்‌ எவ்வாறு முடிந்தன? விடை- புதிதாய்‌ ஸபை நிர்மாணம்‌ செய்து அதைப்பார்ப்பதற்குப்‌ பாண்டவரை அழைப்பது போல்‌ அழைத்து அவர்களைச்‌ சூதாடும்படி செய்து இராஜ்யம்‌ முதலிய வைபவங்களைப்‌ பறித்துக்கொள்ளவேண்டுமென்று ஒரு ஸபையைத்‌ திருதிராஷ்டிர னது அனுமதியின்‌ பேரில்‌ கட்டத்தொடங்கினார்கள்‌. விதுரர்‌ துர்யோதனாதியரது எண்ணப்படி விடக்கூடாதென்று தடுத்துச்‌ சொல்லியும்‌ திருதிராஷ்டிரனுக்குப்‌ பிள்ளைகளது வார்த்தை ஹிதமாகப்பட, ஸுபைகூடிய சீக்கிரத்தில்‌ கட்டிமுடிந்தது. உடனே விதுரரையே திருதிராஷ்டிரன்‌ பாண்டவரை அழைக்கும்படி ஏவினான்‌.

வினா 38.- விதுரர்‌ இந்திரப்ரஸ்தம்‌ சென்று என்ன செய்தார்‌? கடைசியில்‌ என்ன நேரிட்டது?

விடை.-  பாண்டவரிடம்‌ உண்மையை உள்ளபடி விதுரர்‌ சொல்ல தர்மபுத்திரர்‌ "யார்‌ யார்‌ என்னோடு சூதாடப்‌ போகிறார்கள்‌" என்று கேட்டார்‌. விதுரர்‌, சகுனி முதலிய மோசக்காரர்களே என்றும்‌, அவர்கள்‌ சதியாலோசனை செய்திருக்கிறார்கள்‌ என்றும்‌ வெளியிட்டார்‌. தர்மராஜர்‌ இப்பொழுது திருதிராஷ்டிராது உத்தரவுப்படி நான்‌ ஹஸ்தினாபுரி வரவேண்டியது தான்‌. நானாக புரட்டான சூதாட ஒருநாளும்‌ விரும்ப மாட்டேன்‌. என்னை யாராவது சூதாட அழைத்தால்‌, என்‌ விரதப்படி தடுத்துப்‌ பேசவும்‌ மனம்‌ வராது. கடவுள்‌ விடும்‌ வழிப்படியே யாகட்டும்‌" என்று கடவுளிடம்‌ பாரத்தைப்‌ போட்டு தனது தம்பிமார்‌ திரெளபதி, உறவினர்‌ முதலியவர்களோடு ஹஸ்தினாபுரிக்கு விதுரரை முன்னிட்டுக்கொண்டு புறப்பட்டார்‌.

வினா 39.- பாண்டவர்கள்‌ ஹஸ்தினாபுரி வந்ததும்‌ என்ன செய்தார்கள்‌?

விடை... இங்குப்‌ பாண்டவர்கள்‌ வந்ததும்‌ தமது உறவினர்‌ எல்லோரையும்‌ கண்டு தண்டனிட்டு மரியாதைகள்‌ செய்து விட்டுத்‌ தமக்கு விட்டிருந்த விடுதிகளில்‌ சென்று அன்று இரவை ஸுகமாய்க்‌ கழித்தனர்‌. மறுநாட்‌ காலையில்‌ ஸகல அரசர்களும்‌ நிறைந்திருக்கும்‌ புதிய ஸபையில்‌ பாண்டவர்கள்‌ வந்து பெரியோர்களுக்கு மரியாதை செய்துவிட்டு உட்கார்ந்தார்கள்‌.

வினா 40.- இப்படிப்‌ பாண்டவர்கள்‌ வந்து உட்கார்ந்ததும்‌, சகுனி என்ன செய்தான்‌? தர்மபுத்திரர்‌, கடைசியில்‌ என்ன செய்தார்‌?

விடை. - தர்மபுத்திரர்‌ தம்மால்‌ இயன்றமட்டும்‌ சொல்லிப்‌ பார்த்தும்‌ சகுனி விடாமல்‌ சூதாட அழைப்பதைக்‌ கண்டு, அதற்கு இசைந்தார்‌. உடனே துர்யோதனன்‌ தான்‌ பந்தயம்‌ வைப்பதாகவும்‌, சகுனி தனக்காகச்‌ சூதாடுவதாகவும்‌ சொல்ல, இது நியாயமில்லை என்று முதலில்‌ தடுத்தபோதிலும்‌, தர்மபுத்திரர்‌ கடைசியில்‌ ஒப்புக்‌ கொண்டார்‌. சூதாட்டம்‌ ஆரம்பித்தது.

வினா 41.- சூதாட்டம்‌ எவ்வாறு நடந்தது? யார்‌ யார்‌ என்ன அபிப்பிராயப்‌ பட்டார்கள்‌?

விடை.  சகுனி மோசக்காரனாதலால்‌, எல்லா ஆட்டங்களிலும்‌ தானே ஜயித்து வந்தான்‌. இதில்‌ தர்மபுத்திரர்‌ ஸொத்துக்களையும்‌ இழந்துகொண்டு வந்தார்‌. இதைக்‌ கண்டு துர்யோதனாதியர்‌, திருதிராஷ்டிரன்‌, கர்ணன்‌ முதலிய துராத்மாக்கள்‌ ஆனந்தித்தனர்‌. பீஷ்மர்‌, துரோணர்‌, கிருபர்‌, விதுரர்‌, விகர்ணன்‌ முதலிய சுத்தாத்மாக்‌கள்‌ இதிலிருந்து ஏதாவது பிரமாதம்‌ உண்டாய்‌ விடுமோ என மனங்குழம்பினார்கள்‌.

வினா 42.- இவர்களில்‌ யார்‌ முதலில்‌ தமது அபிப்பிராயத்தைப்‌ பயப்படாது எப்படி வெளியிட்டார்‌? இவரது புத்திமதி பிரயோசனப்‌ பட்டதா?

விடை. விதுரர்‌ ஒருவர்‌ தான்‌ இந்த ஆபத்துக்காலத்தில்‌ தன்‌ மனத்தில்‌ உள்ளவற்றை ஒளிக்காது வெளிக்காட்டினார்‌. சூது முதலியவைகள்‌ போன்றவை அபாயகரமானவை என்றும்‌, அப்பொழுது ஆடும்‌ சூதால்‌ மிகுந்த பிரமாதம்‌ விளையலாம்‌ என்றும்‌, அதற்கு முக்கியகாரணம்‌ துர்யோதனன்‌ என்றும்‌, அவனால்‌ உண்டாகப்‌ போகிற பிரமாதத்தை தடுக்க அவனை அவசியம்‌ கொல்லவேண்டும்‌ என்றும்‌, பலர்‌ ஸுகம்‌ அடைய ஒருவனைக்‌ கொல்லுவது சாஸ்திர விருத்தமல்ல வென்றும்‌, இச்சூதாட்டத்தால்‌ பாண்டவர்களைச்‌ சகுனி முதலியோர்‌ அவமரியாதை செய்து அவர்களைக்‌ கோப மூட்டிவிட்டால்‌ பாண்டவர்களை வெல்லவல்லார்‌ ஸபையில்‌ ஒருவரும்‌ இல்லை என்றும்‌, விதுரர்‌ தமது அபிப்பிராயத்தை நன்றாக வெளியிட்டார்‌. உடனே துர்யோதனன்‌ எழுந்து, விதுரரை நம்பிக்கைத்‌ துரோகி, அவரைக்காப்பாற்றுவது பாம்பிற்கு பாலிட்டு வளர்ப்பதுபோலத்‌ தமக்கே விபரீதமாய்‌ முடியும்‌ என்று சொல்லி விதுரரை வெகுவாகத்‌ தூஷித்தான்‌. தம்‌ சொல்‌ பயன்‌ படாதது கண்டு விதுரர்‌ திருதிராஷ்டிரனை நோக்கித்‌ தமது அபிப்பிராயத்தை வற்புறுத்திச்‌ சொல்லிவிட்டு மெளனமாய்‌ இருந்தார்‌.

வினா 43.- இதன்‌ பின்பு சூதாட்டம்‌ என்னமாய்‌ விருத்தியடைந்தது? எப்படி முடிந்தது?

விடை. - சகுனி ஸகலத்தையும்‌ தர்மபுத்திரரிடம்‌ இருந்து வெகு தந்திரமாய்‌ வென்றான்‌. உடனே அவர்‌ சூதாட்ட ஆவேசத்தில்‌ முதலில்‌ தனது தம்பிமாரையும்‌, கடைசியில்‌ தன்னையும்‌ பந்தயம்‌ வைத்துப்‌ பார்த்தார்‌. அப்பொழுதும்‌ சகுனியே வென்றான்‌. இதன்‌ பின்பு ஒன்றையும்‌ பந்தயம்‌ வைக்கத்‌ தோன்றாது தருமபுத்திரர்‌ விழித்துக்கொண்டிருக்கையில்‌, சகுனி, திரெளபதி ஒருத்தி யிருக்கிறாளே என்று ஞாபகப்படுத்த, அவர்‌. திரெளபதியையும்‌ பந்தயம்‌ வைத்தாடித்‌ தோற்றார்‌.

வினா 44.- இப்படி திரெளபதியைத்‌ தர்மபுத்திரர்‌ தோற்றதும்‌ துர்யோதனாதியர்‌ என்ன செய்ய முயன்றனர்‌?

விடை. - துர்யோதனன்‌ விதுரரை நோக்கி "திரெளபதியை ஸபைக்குக்‌ அடிமைத்தொழில்‌ அவள்‌ செய்ய வேண்டும்‌ என்று கட்டுப்பாடு செய்யுங்கள்‌” என்று சொல்ல, விதுரர்‌ "திரெளபதி அடிமையாவதற்குக்‌ காரணமில்லை; ஏனெனில்‌ தர்மபுத்திரர்‌ தாம்‌ தோற்ற பின்புதான்‌ அவளைப்‌ பந்தயம்‌ வைத்தார்‌" என்று சொல்லி, துர்யோதனாதியரைத்‌ தூஷித்து விட்டு, வாயை மூடிக்கொண்டு ஸபையிலேயே உட்கார்ந்துவிட்டார்‌. பின்பு துர்யோதனன்‌ பிரதிகாமி என்ற ஸூதஜாதி வேலைக்காரனை ஏவவே அவன்‌ சென்று திரெளபதியை ஸபைக்கு வரும்படி அழைத்தான்‌. அவள்‌ தீண்டத்தகாத நிலையிலிருப்பதாகவும்‌, தான்‌ உண்மையில்‌ தோல்வியடைந்தவளா இல்லையா என்பதை அறியவேண்டும்‌ என்பதாகவும்‌, இவனிடம்‌ சொல்லி யனுப்பினாள்‌. துர்புத்திகளான தூர்யோதனாதியர்‌ இவ்வாறு திரெளபதியை அவமானப்படுத்த வேண்டுமென்று எண்ணங்‌ கொண்டார்கள்‌.

வினா 45.- இந்தக்‌ கெட்ட எண்ணத்தை இவர்களுக்கு எவ்வாறு யார்‌ பூர்த்தி செய்வித்தது?

விடை... முன்‌ சொல்லியவைகளை பிரதிகாமி சபையில்‌ வந்து சொல்லத்‌ துர்யோதனன்‌ தனது தம்பியான துச்சாஸனனை ஏவினான்‌. அவன்‌ விரைவில்‌ சென்று திரெளபதியின்‌ தலைமயிரைப்‌ பற்றி அவளை ஸபைக்கு இழுத்து வந்து, யாவரும்‌ பார்த்துப்‌ பரிதபிக்கும்படியான நிலையில்‌ நிறுத்தி வைத்தான்‌.

வினா 46.- ஸபைக்கு வந்ததும்‌, திரெளபதி ஸபையோரை என்ன கேள்வி கேட்டாள்‌? அங்கிருந்தவர்கள்‌ அப்பொழுது என்ன பதில்‌ உரைத்தனர்‌?

விடை...  “தர்மபுத்திரர்‌ முன்பு என்னைப்‌ பந்தயம்‌ வைத்துப்‌ பின்பு தம்மை பந்தயம்‌ வைத்துக்கொண்டாரா, அல்லது தம்மை வைத்துத்‌ தோற்றபின்பு என்னை வைத்துத்‌ தோற்றாரா? அப்படி முன்பு வைத்துத்‌ தோற்றது உண்மையாகில்‌ நான்‌ அடிமைதான்‌, இல்லாவிடில்‌ என்னை அடிமைப்படுத்த துர்யோதனாதியருக்கு என்ன அதிகாரம்‌?” ஸபையோரை நோக்கித்‌ திரெளபதி கேட்டாள்‌. விதுரர்‌, விகர்ணன்‌ முதலிய தர்மாத்மாக்கள்‌ திரெளபதி அடிமையாகவில்லை யென்று உரக்கத்‌ தமது அபிப்பிராயத்தை வெளியிட்டார்கள்‌. கர்ணன்‌ முதலிய துராத்மாக்கள்‌ திரெளபதி எப்படியானாலும்‌ தமக்கு ஊழியக்காரி என்றனர்‌. பீஷ்மர்‌ முதலிய சிலர்‌ இவ்விஷயத்தில்‌ தர்மாதர்ம விவேகமின்றித்தமது அபிப்பிராய குழப்பங்களை வெளியிட்டனர்‌. தர்மபுத்திரர்‌ மாத்திரம்‌ எல்லாவற்றையும்‌ பொறுத்துக்‌ கொண்டு மெளனமா யிருந்தார்‌.

வினா 47.- இப்படி யிருக்க பாண்டவர்களுள்‌ என்ன விசேஷம்‌ நடந்தது?

விடை.- பீமன்‌ முதலிய தம்பிமார்களுக்குக்‌ கோபம்‌ அதிகரித்த போதிலும்‌, தமயன்‌ இருக்கும்‌ பொறுமையை நோக்கித்‌ தாமும்‌ அவருக்கு உட்பட்டு அடங்கியிருந்தனர்‌. திரெளபதி அடிக்கடி கேள்விகேட்க ஸபையோர்‌ அவளைக்‌ கவனியாது இருக்கக்‌ கண்டு பீமனுக்குக்‌ கோபம்‌ அதிகரித்தது. தர்மபுத்திரரது கையை எரித்து விட ஸஹாதேவனை நெருப்பு எடுத்து வரும்படி பீமன்‌ கட்டளையிட, அர்ஜுனன்‌ இதை யறிந்து பீமஸேனனது. கோபம்‌ அடங்கும்படி செய்தான்‌.

வினா 48.. இப்படி ஸபை முழுவதும்‌ திரெளபதியினது கேள்விக்குப்‌ பதில்‌ சொல்லமுடியாது தத்தளிக்குங்கால்‌ துச்சாஸனன்‌ என்ன விபரீத காரியத்தைச்‌ செய்ய யத்தனித்தான்‌? அவன்‌ யத்தனம்‌ எவ்வாறு முடிந்தது?

விடை.-  தான்‌ இதுவரை செய்த அவமானம்‌ போதாதென்று துச்சாஸனன்‌ திரெளபதியை ஸபையில்‌ நிர்வாணமாய்‌ நிறுத்தி வேடிக்கை பார்க்கவேண்டுமென்று துராக்கிரகம்‌ கொண்டு அவளது புடவையை வெகு அவஸரமாய்‌ அவிழ்க்கலா யினன்‌. இவன்‌ எவ்வளவு தான்‌ புடவையை இழுத்து மலைபோல்‌ குவித்தபோதிலும்‌ மேல்மேலும்‌ திரெளபதிக்கு விசேஷப்புடவைகள்‌ உண்டாகிவரக்‌ கடைசியில்‌ கை ஓய்ந்து துச்சாஸனன்‌ கீழேவிழுந்தான்‌. இதை நோக்கியதும்‌ ஸபையோர்‌ எல்லோருக்கும்‌, திரெளபதி அடிமை யல்லவென்றும்‌, துரியோதனாதியர்‌ துராத்மாக்கள்‌ என்றும்‌ நன்றாய்‌ விளங்கியது.

வினா 49.- இவ்விசித்திர விஷயம்‌ நடக்கக்‌ காரணம்‌ என்ன? இதனால்‌ என்ன விளங்குகிறது?

விடை...   துச்சாஸனன்‌, தனது புடவையை அவிழ்க்க இழுக்கும்‌ பொழுது, தன்மானம்‌ கெட்டுப்போகிறதே என்ற எண்ணத்துடன்‌ திரெளபதி தனது புடவையைக்‌ கெட்டியாகப்‌ பிடித்து பார்த்தாள்‌. கடைசியில்‌ தன்னால்‌ முடியாதென்பது கண்டு தனது இருகைகளையும்‌ தலைமேல்‌ வைத்துக்கொண்டு தெய்வத்தின்‌ மேல்‌ பாரத்தைப்‌ போட்டு மனதுருகி கிருஷ்ண பரமாத்மாவைத்‌ துதித்தாள்‌. இந்த உண்மையான பக்தியின்‌ விசேஷத்தால்‌ இவளது மானங்‌ கெடாத வண்ணம்‌ விசித்திரப்‌ புடவைகள்‌ கிருஷ்ண பரமாத்மாவால்‌ அளிக்கப்பட்டு துச்சாஸனன்‌ முக்க இழுக்க வந்துகொண்டேயிருந்தன. இதனால்‌ ஸர்வம்‌ கடவுளது அதீனம்‌ என்ற உள்ளத்துறவுவாய்ந்த மஹான்களுக்கும்‌ வரும்‌ மலைபோன்ற துக்கங்கள்‌ கடவுளது அருளால்‌ ஸுூரியனைக்‌ கண்ட பனிபோல்‌ பறந்தோடிப்போம்‌ என்பது எளிதில்‌ விளங்கும்‌.

வினா 50.- இவ்வாறு திரெளபதியைத்‌ துச்சாஸனன்‌ துகிலுரியுங்கால்‌ பாண்டவர்கள்‌ என்ன செய்தார்கள்‌?

விடை. - தருமபுத்திரர்‌ முன்போலப்‌ பொறுமையோடு மெளனமாய்‌ இருந்தார்‌. பீமன்‌,துரியோதனன்‌, துச்சாஸனன்‌ முதலிய தம்பிமார்‌ 100-பேர்களைக்‌ கொல்லுவதாகவும்‌, அர்ஜுனன்‌ கர்ணனைக்‌ கொல்லுவதாகவும்‌, நகுலன்‌ செளபாலர்களைக்‌ கொல்லுவதாகவும்‌, ஸஹாதேவன்‌ சகுனியைக்‌ கொல்லுவதாகவும்‌ கொடிய சபதம்‌ செய்தார்‌கள்.

புதன், 20 ஜூலை, 2022

ஶ்ரீ மஹாபாரதம் வினா விடை 9

ஶ்ரீ மஹா பாரதம் முதல் பாகம்

சபா பர்வம்

கேள்விகள் 21 முதல் 32 வரை

 

வினா 21.- இவ்வாறு இராஜஸூய யாகத்திற்கு முக்கிய தடையாகிய ஜராஸந்த னைக்‌ கொன்ற பிறகு பாண்டவர்கள்‌ யாகவிஷயமாக என்ன ஏற்பாடு செய்தார்கள்‌?

விடை... தர்மபுத்திரரது தம்பிமார்கள்‌ நால்வரும்‌ மற்றைய அரசர்களை ஜயித்து இராஜஸூய யாகத்திற்கு வரும்படியாக அழைக்க நான்கு திக்கிலும்‌ திக்கு விஜயம்‌ செய்யப்‌ புறப்பட்டார்கள்‌. இதில்‌ அர்ஜுனன்‌ வடக்கு திக்கையும்‌, பீமன்‌ கிழக்கு திக்கையும்‌, ஸ்ஹாதேவன்‌ தெற்குதிக்கையும்‌, நகுலன்‌ மேற்கு திக்கையும்‌ நோக்கி, தர்மபுத்திரரது அனுமதியின்பேரில்‌ சென்றார்கள்‌.

வினா 22.- அர்ஜுனனது திக்கு விஜயத்தில்‌ நடந்த விசேஷங்கள்‌ என்ன?

விடை.- போகும்‌ வழியில்‌ அனேக சிற்றரசர்களை ஜயித்துக்‌ கொண்டு அர்ஜுனன்‌ நரகாஸுரனது பிள்ளை பகதத்தன்‌ அரசாளும்‌ பட்டணம்‌ வர, அவன்‌ இவனோடு சிலகாலம்‌ சண்டை செய்து இவனது பராக்கிரமத்தைக்‌ கண்டு இவன்‌ இஷ்டப்படி செய்வதாக ஒப்புக்கொண்டான்‌. இதன்‌ பின்பு வடக்கே மலைப்‌ பிரதேசத்தரசர்களைத்‌ தன்‌ வசப் படுத்திக்‌ கொண்டு, கிம்புருஷலோகம்‌ சென்று அவர்களை வென்று, உத்தரகுருகண்டம்‌ சென்றான்‌. அது சிறந்த கண்டமாதலால்‌ அதில்‌ மனிதர்‌ சென்றால்‌ உயிர்‌ தரிப்பதரிது. அப்படி யிருக்க அர்ஜுனன்‌ அங்கு செல்ல, வாயில்‌ காப்பவர்‌ அக்கண்டத்தின்‌ ஸ்வபாவத்தைச்‌ சொல்லி அர்ஜுனனைத்‌ திரும்பிப்‌ போகும்படி சொன்னார்கள்‌. பின்பு அர்ஜுனன்‌ வந்த காரியத்தைச்‌ சொல்ல, தர்மபுத்திரரது நன்னடத்தைக்காக அக்கண்டத்தார்‌ அநேக தெய்வீகமான ஆடையா பரணங்கள்‌ கொடுக்க, அவைகளைப்‌ பெற்றுக்கொண்டு வரும்‌ வழியில்‌ பாக்கியிருந்த சில காட்டு ராஜாக்களை வென்று, தர்மபுத்திரரிடம்‌ தான்‌ கொண்டுவந்தவைகளை ஸமர்ப்பித்தான்‌.

வினா 23.. பீமஸேனனது திக்கு விஜயத்தில்‌ நடந்த விஷயம்‌ என்ன?

விடை...  முதலில்‌ பீமன்‌ பாஞ்சால தேசம்‌ சென்று, ஸமாதான வழியால்‌ அரசர்களை வசப்படுத்தி, சில சிற்றரசர்களை வென்று, கடைசியில்‌ சேதிதேசத்தரசன்‌ சிசுபாலனிடம்‌ வர, அவனும்‌ ஸமாதானமாய்‌ தர்மபுத்ரருக்கு வேண்டியது செய்வ தாக வாக்களிக்க, பீமனும்‌ 30 நாள்‌ அவனிடம்‌ ஸுகமாய்‌ இருந்தான்‌. இதன்‌ பின்பு போகும்‌ வழியில்‌ இருந்த சிறு தேசாதிபதிகளை வென்று ஜராஸந்தன்‌ பிள்ளையிடம்‌ வந்து அவனிடமிருந்து மரியாதைகளைப்‌ பெற்று அங்கதேசாதிபதியாகிய கர்ணனை வென்றான்‌. இவ்வாறு அனேக இராஜாக்களை ஜயித்து, அவர்களிடமிருந்து தான்‌ பெற்று வந்த பரிசுகளைத்‌ தர்மபுத்திரர்‌ பாதங்களில்‌ பீமன்‌ ஸமர்ப்பித்து விட்டான்‌.

வினா 24.. ஸஹாதேவனது திக்கு விஜயத்தில்‌ விசேஷமென்ன?

விடை... முதலில்‌ தந்தவக்கிரன்‌, குந்திபோஜன்‌, அவந்தி நகரத்திலிருந்த விந்தானுவிந்தாள்‌, பீஷ்மகராஜா, கிஷ்கிந்தா நகரத்தில்‌ அரசாண்டு வந்த மைந்தத்துவிதாள்‌, முதலிய இராஜாக்களை எளிதில்‌ மஹாதேவன்‌ வென்றான்‌. இதன்‌ பின்பு இவன்‌ மாஹிஷ்மதீ பட்டணம்‌ போனான்‌. அங்கு அரசாண்டு வந்த நீலராஜனுக்கு அக்கினி பகவான்‌ ஸஹாயமாக வர ஸஹாதேவனது ஸேனைகளுக்குத்‌ தாபம்‌ அதிகரித்துவிட்டது. இதைக்கண்டு அவன்‌. அக்கினியைத்‌ துதிசெய்ய அவர்‌ இவனிடம்‌ வந்து தான்‌ பரீக்ஷை செய்ததாகவும்‌ தர்மபுத்திரரது நல்ல எண்ணம்‌ தனக்குத்‌ தெரியும்‌ என்பதாகவும்‌, தான்‌ அப்பட்டணத்தைக்‌ காக்கும்வரை அதை ஒருவராலும்‌ ஜயிக்க முடியாதென்பதாகவும்‌ சொல்லி, அக்கினிபகவான்‌ ஸஹாதேவனுக்கும்‌, நீல ராஜாவுக்கும்‌ ஸ்நேஹம்‌ செய்துவைக்க, பின்பு ருக்மி முதலிய அரசர்களை ஸஹாதேவன்‌ வென்றான்‌. இதன்‌ பின்பு தெற்கு ஸமுத்திரக்கரையை அடைந்து இலங்கையில்‌ அரசாண்டு வந்த விபீஷணருக்குத்‌ தூதரை அனுப்ப, மிகுந்த ஸந்தோஷமாய்‌ அவர்‌ பரிசுகள்‌ அனுப்பினார்‌. இவ்வாறு தெற்கிலுள்ளவர்கள்‌ யாவரையும்‌ வென்று ஸஹாதேவன்‌ இந்திரப்ரஸ்தம்‌ சென்று தர்மபுத்திரர்‌ அடி பணிந்து நின்றான்‌.

வினா 25.- மாஹிஷ்மதீ பட்டணத்தில்‌ அக்கினி பகவான்‌ பிருந்ததற்குக்‌ காரணம் என்ன?

விடை... நீலராஜனது பெண்ணைக்‌ கண்டு அக்கினி பகவானுக்கு ஆசை வர, அந்த அரசன்‌ அரண்மனையில்‌ யார்‌ என்ன செய்தாலும்‌ ஹோமகுண்ட நெருப்புப்‌ பற்றாதிருந்தது. தற்செயலாய்‌ நீலராஜன்‌ பெண்‌ வந்து அக்கினியை ஊதிப்‌ பார்த்தாள்‌. உடனே அக்கினி பற்றிக்‌ கொண்டது. அதைக்‌ கண்டதும்‌, அக்கினி பகவானை இப்பெண்‌ கல்பாணம்‌ செய்துகொள்ள ஒத்துக்கொள்ளவே, அக்கினி பகவான்‌ பிராம்மண வடிவங்‌ கொண்டு இப்பெண்ணோடு விளையாடி வந்தார்‌. இப்படி யிருக்கையில்‌ அரசன்‌ கண்டு இப்‌ பிராம்மணனை தண்டிக்க யத்தனிக்க, உடனே அக்கினி பகவான்‌ தன்‌ ரூபத்தைக்‌ காட்டினார்‌. அரசன்‌ வியந்து தன்‌ பெண்ணை அக்கினி பகவானுக்கு விவாஹம்‌ செய்துகொடுக்க, அன்று முதல்‌ அரசனது வேண்டுகோளின்படி அப்பட்டணத்தை அக்கினி பகவான்‌ காத்துவந்தார்‌. இதை அறியாது அங்கு படையெடுத்துச்‌ சென்றவர்கள்‌ நெருப்பால்‌ எரிக்கப்பட்டு மாளுவது வழக்கம்‌. தெரிந்தவர்கள்‌ அப்பட்டணத்தருகில்கூட வருவதில்லை.

வினா 26.- நகுலனது திக்கு விஜயத்தில்‌ நடந்த விசேஷம்‌ என்ன?

விடை.- அநேக சிற்றரசர்களை ஜயித்துக்கொண்டு, நகுலன்‌ மேற்கே துவாரகை அருகில்‌ வந்து கிருஷ்ண பரமாத்மாவுக்குத்‌ தூதரை அனுப்ப, அவர்‌ யாதவ பரிவாரங்களோடு எதிர்‌ கொண்டு வந்து நகுலனுக்குத்‌ தகுந்த மரியாதைகள்‌ செய்த னுப்பினார்‌. இவன்‌ பின்பு மந்திர தேசாதிபதியும்‌, தனது மாமனுமான சல்லிய ராஜனை தன்‌ வசப்படுத்திக்‌ கொண்டு, அநேக மிலேச்ச ராஜாக்களை ஜயித்து இவன்‌ இந்திரப்ரஸ்தம்‌ வந்து சேர்ந்தான்‌.

வினா 27.- இவர்கள்‌ இவ்வாறு வந்த பின்பு என்ன நடந்தது?

விடை... கொஞ்சகாலம்‌ கழிந்தபின்பு மந்திரிமார்‌ முதலிய பெரியோர்கள்‌ இராஜஸூயயாகஞ்செய்யவேண்டியகாலம்‌ வந்ததென்று தர்மபுத்திரருக்குச்‌ சொன்‌ னார்கள்‌. இப்படியிருக்கையில்‌ அநேக பரிசுகளை எடுத்துக்கொண்டு கிருஷ்ண பகவான்‌ இந்திரப்ரஸ்தம்‌ வந்துசேர்ந்து இராஜஸூய யாகத்தைத்‌ தொடங்கும்படி உத்தரவு கொடுத்தார்‌. உடனே பாண்டவர்கள்‌ யாகத்திற்கு வேண்டிய ஸம்பாரங்க ளைச்‌ சேகரித்தார்கள்‌. அவர்‌ அழைத்துவிட்டு வந்திருந்த அரசர்கள்‌ யாவரும்‌ யாக வைபவத்தைக்‌ கண்டு களிக்க இந்திரப்ரஸ்தம்‌ வந்து கூடினார்கள்‌. அவரவர்களுக்குத்‌ தகுந்த மரியாதைகளைத்‌ தர்மபுத்திரர்‌ செய்து அவரவர்களுக்குத்‌ தகுந்த விடுதிகளை நியமித்தார்‌. துர்யோதனாதியர்‌, பீஷ்மர்‌, விதுரர்‌ முதலியவர்கள்‌, யாதவாள்‌ எல்லோரும்‌ வந்து கூடிவிட்டார்கள்‌. இவர்கள்‌ ஸந்நிதானத்தில்‌ தர்மபுத்திரர்‌ யாகத்தை ஆரம்பித்தார்‌.

வினா 28.- இவ்வாறு யாகம்‌ ஆர்ம்பித்து நடந்து வருங்கால்‌ விக்கினம்‌ போன்றது என்ன நடந்தது?

விடை... சேதி தேசாதிபதியான சிசுபாலனுக்குக்‌ கடைசி நாள்‌ கிருஷ்ண பகவானிடம்‌ கோபம்‌ உண்டாக, அவன்‌ அவரை பலவிதமாக வைதான்‌. இது நிரம்பவும்‌ அதிகமாய்‌ப் போகும்‌ வரையில்‌ பொறுத்திருந்து, கடைசியில்‌ சிசுபாலன்‌ வரம்புகடந்து போனவுடன்‌, பகவான்‌ தமது சக்கிரத்தை எடுத்து சிசுபாலனது தலையை அறுத்தார்‌. உடனே சிசுபாலனது தேகத்திலிருந்து ஒரு திவ்ய தேஜஸ்‌ புறப்பட்டு கிருஷ்ண பரமாத்மாவின்‌ தேகத்துட்‌ பிரவேசித்தது. அப்பொழுது தர்மபுத்திராதிகள்‌ சிசுபாலனது பிள்ளையைச்‌ சேதி தேசாதிபதியாகப்‌ பட்டாபிஷேகம்‌ செய்து, இராஜஸூய யாகத்தை மேல்‌ நடத்த ஆரம்பித்து நிர்விக்கினமாய்‌ செய்து முடித்தார்கள்‌.

வினா 29.- இம்மாதிரியாய்‌ இச்சிசுபாலனுக்கு கிருஷ்ண பகவானிடம்‌ கோபம்‌ உண்டாவானேன்‌?

விடை...  கடைசி நாள்‌ ஸபையோருக்கு அக்ர பூஜை செய்ய வேண்டி வர, யாருக்கு ஸபையில்‌ முதலில்‌ அர்க்கியத்தை ஸமர்ப்பிப்பது என்கிற ஸந்தேகம்‌ தர்மபுத்திரருக்கு வந்தது. கிருஷ்ண பகவானே அதை வாங்கத்‌ தகுந்தவர்‌ என்று பீஷ்மர்‌ சொல்ல, அதன்படி அவர்‌ முதல்‌ முதலில்‌ அர்க்கியத்தைப்‌ பகவானுக்கு ஸமர்ப்பித்தார்‌. கிருஷ்ணபகவானை இடையன்‌ என்று எண்ணியிருந்த சிசுபாலனுக்கு இது அதிக கோபத்தை உண்டாக்கியது. மேலும்‌ இவன்‌ கல்யாணம்‌ செய்துகொள்ள வேண்டுமென்று எண்ணியிருந்த ருக்மணிதேவியை, அவள்‌ இஷ்டத்தின்படி கிருஷ்ணபகவான்‌ தூக்கிகொண்டு நடந்து விட்டார்‌ என்ற கோபம்‌ இவனுக்கு முன்னமேயே இருந்தது. ஆகவே அதிககோபத்தோடு பகவானைச்‌ சிசுபாலன்‌ நாக்கில்‌ நரம்பில்லாது வையத்‌ தொடங்கினான்‌.

வினா 30:- சிசுபாலன்‌ வசவுகளை வெகுநாழிகை வரையில்‌ கிருஷ்ண பகவான்‌ ஏன்‌ பொறுத்திருந்தார்‌? பின்பு ஏன்‌ அவனைக்‌ கொன்றார்‌?

விடை... சிசுபாலனது தாயார்‌ கிருஷ்ண பரமாத்மாவே தன்‌ பிள்ளையைக்‌ கொல்லப்‌ போகிறவர்‌ என்று அறிந்து, அவரிடம்‌ “என்‌ பிள்ளை உமக்கு என்ன அபராதம்‌ செய்தாலும்‌ நீர்‌ பொறுத்தருள வேண்டும்‌" என்று வரங்கேட்டிருந்தாள்‌. இதற்குக்‌ கிருஷ்ண பகவான்‌, "ஸம்ஹரிப்பதே தகுதி என்று சொல்லத்தகுந்த குற்றங்கள்‌ 100 இவன்‌ செய்கிறவரையில்‌ நான்‌ இவனை பொறுத்துக்‌ கொள்ளுகிறேன்‌" என்று வாக்களித்திருந்தார்‌. இதன்படி வரம்பு கடந்து சிசுபாலன்‌ போகிற வரையில்‌ பொறுத்‌திருந்த பகவான்‌, அவனுக்குச்‌ சீக்கிரத்தில்‌ நற்கதி அளிக்கவேண்டுமென்று அவன்‌ வரம்புகடந்ததும்‌ அவனைக்‌ கொன்றார்‌.

வினா 31.- சிசுபாலனது தாயாருக்குக்‌ கிருஷ்ண பரமாத்மா தன்‌ பிள்ளையைக்‌ கொல்லப்போகிறார்‌ என்று எப்படித்‌ தெரிய வந்தது?

விடை.- சிசுபாலன்‌ பிறந்தவுடன்‌ அவனுக்கு மூன்று கண்ணும்‌ நான்கு கையும்‌ ஏற்பட்டது. அவன்‌ கழுதை கத்துவதுபோல்கத்த, தாயார்‌ தகப்பனாருக்கு அடங்காத்‌ துக்கமுண்டாய்‌ விட்டது. உடனே ஒரு அசரீரி வாக்கு “இவன்‌ சீக்கிரத்தில்‌ சாகமாட்டான்‌, ஆனால்‌ இவனைக்‌ கொல்ல ஒரு பலவானான புருஷன்‌ வளருகிறான்‌” என்று சொல்ல, தாயார்‌ "என்பிள்ளையைக்‌ கொல்லுகிறவனை அறியும்‌ வழி என்ன?” என்று கேட்டாள்‌. அதற்கு அசரீரி “நீ யாருடைய மடியில்‌ இப்பிள்ளையை வைத்தவுடன்‌, இவனது அதிக கைகளும்‌, கண்களும்‌ மறைந்து போகின்றனவோ அவனே இவனைக்‌ கொல்லுகிறவன்‌” என்று சொல்லி மெளனமாய்‌ விட்டது. இதுமுதல்‌ தாயார்‌ யார்‌ வந்தாலும்‌ அவர்களது மடியில்‌ எல்லாம்‌ இக்‌ குழந்தையை வைப்பது வழக்கம்‌. இம்படி யிருக்கையில்‌ கிருஷ்ணபகவான்‌ சேதி தேசம்வர, அவரது மடியிலும்‌ இக்குழந்தை வைக்கப்பட்டது. உடனே குழந்தையின்‌ அதிகமான கண்களும்‌, கைகளும்‌ மறைய, பகவானே தன்‌ பிள்ளைக்கு விரோதி என்று சிசுபாலன்‌ தாயார்‌ அறிந்து கொண்டாள்‌.

வினா 32.- இந்த துராத்மாவான சிசுபாலனுக்குப்‌ பகவானது தேகத்துள்‌ புகும்படியான பாக்கியம்‌ எப்படி வந்தது?

விடை. - இச்சிசுபாலனது நிஜரூபம்‌ வைகுண்டத்திலிருக்கும்‌ துவாரபாலக ரூபம்‌. இவனுக்கும்‌ இவனது ஸஹாவுக்கும்‌ ஸனகாதியோகிகள்‌ சாபத்தால்‌ பூமியில்‌ மூன்று ஜன்மம்‌ ஹரித்‌ துவேஷிகளாய்‌ பிறக்கவேண்டிவர, இவர்கள்‌ ஹிரண்‌யக்ஷன்‌, ஹிரண்ய கசிபு, இராவணன்‌, கும்பகர்ணன்‌, சிசுபாலன்‌ தந்தவக்கிரனாக வரிசையாய்ப்‌ பிறந்து ஒவ்வொரு ஜன்மத்திலும்‌ பகவானிடம்‌ துவேஷ ரூப பக்தியைச்‌ செய்தார்கள்‌. ஆகையால்‌ இவர்கள்‌ பகவானாலேயே கொல்லப்பட்டுக்‌ கடைசியில்‌ சிசுபால தந்த வக்கிரர்களாகி கிருஷ்ணனால்‌ உயிரிழந்து அவருட்‌ பிரவேசித்தார்கள்‌. (இவ்விஷயத்தின்‌ விஸ்தாரத்தைப்‌ பாகவத வினா விடையில்‌ காண்க.)