வியாழன், 29 நவம்பர், 2012

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 5

…………………………………………………………………………………….நஞ்சமன                               34

பாவம் திகைப்புள்ளே பாராயோ
மேவந் திகைப்புறும்என் மேனிவெதும் பாமல்அருட்
பாவந் திகைப்புள்ளே பாராயோ – சேவகஞ்சேர்                    .35.

வண்காற் பவள வரிச்சுகமே வான் பொதிய
வண்காற் பவள வரிச்சுகமே வான்பொதியத்
திண்காற் கொழுந்தடங்கச் செய்யாயோ –எண்பாவு              .36.

பொற்கீரமே நீ புரியாயோ
நற்கீர மேயபதம் நான்அருந்து மாறுசிறைப்
பொற்கீர மேநீ புரியாயோ – எற்கீரம்                                      .37

மெல்லலகை மேய விழுப்புள்ளே
இல்லலகை யாய இருட்பிழம்புக் (கு) என்புரிவல்
மெல்லலகை மேய விழுப்புள்ளே – புல்லியமை                      .38.

அஞ்சாருவே துதித்தேன் ஆளாயோ
நஞ்சாரு மேக நவையகற்றச் சாருதிஎன்(று)
அஞ்சாரு வேதுதித்தேன் ஆளாயோ – தஞ்சாரு                       .39.

அன்னப்புள்  மேவ உள்ளம் ஆராய்ந்து
மன்னப்புள் மேவும் வனசமலர் மீதுறையும்
அன்னப்புள் மேவஉளம் ஆராய்ந்து – நன்னிறத்துப்               .40.

அப்பாலதனை ஓர்ந்து பகர்ந்திடேன்
பாலயனை வேறாய்ப் பகுத்தமையப் பண்ணுறும்அப்
பாலதனை யோர்ந்து பகர்ந்திடேன் – சீலமுறப்                      .41.

பெட்டோகை இல்லாப் பிணிமுகம் என்றோர்ந்து
பெட்டோகை யில்லாப் பிணிமுகம்என் றோர்ந்துமணிக்
கட்டோகை கண்டு கழறிடேன் – உட்டேறித்                           .42.

தாராதரம் எனவே தான் அறிந்து
தாரா தரம்எனவே தான்அறிந்து நீர்கலுழுந்
தாரா தரங்கண்டு சாற்றிடேன் – நேராருஞ்                              .43.

சாரிகை கொண்டு எங்கும் தலைப்படரும் தன்மை
சாரிகைகொண் டெங்குந் தலைப்படருந் தன்மையினாற்
சாரிகைக்கும் உள்ளன்பு சாற்றிடேன்.                                       .44.

குறிப்பு;-
34. நஞ்சமன – விடமனைய கொடிய உளத்தில்.
35. மேவ – பொருந்த; அந்தி – மாலை; கைப்புறும் – கசக்கும்; என் மேனி வெதும்பாமல் – என் உடல் வாடாமல்; அருள் – அருள் செய்; பாவ அம் திகை – பரவிய அழகிய தேமலை ; புள்ளே – கிளியே; பாராயோ – பார்க்க மாட்டாயா; சேவகம்சேர் – வணக்கம் சேரும்.
36. வண்காற் பவள – பவழம்போற் சிவந்த வலிய கால்களை உடைய; வரிச்சுகமே – வடிவுடைக்கிளியே; வான் பொதியத் திண்காற் கொழுந்து – வானளாவும் திண்ணிய பொதிகை மலையின் இளம் சுடர் (தென்றல்) அடங்க- தணிய; செய்யாயோ – செய்யமாட்டாயோ; எண் பாவும் – உளம் பரவிய
37. பதம் மேய  -- திருவடியிற் சார்ந்த; நற்கீரம் – நல்ல பாலை; நான் அருந்துமாறு – நான் பருகும்படி; சிறைப் பொற் கீரமே – பொன் சிறகுள்ள கிளியே; நீ புரியாயோ – நீ செய்ய மாட்டாயா; எற்கு ஈரம் இல் – என் பாலிரக்கமற்ற
38. அலகையாய – பேயான, இருட் பிழம்புக்கு – செறிந்த இருளுக்கு, என்புரிவல் – என் செய்வேன், மெல் அலகைமேய –மென்மையான மூக்கை உடைய, விழுப்புள்ளே – சிறந்த பறவையே, புல்லியமை – கருமை தழுவிய.
39. நஞ்சாரும் – விடம் பொருந்திய, ஏகம் – ஒரே, நவையகற்ற – குற்றம் நீங்க, சாருதி என்று – அடைக என, அம்சாருவே – அழகிய கிளியே, துதித்தேன் – தொழுகின்றேன், ஆளாயோ –ஆட்கொள்ளாயோ, தஞ்சாரும் – தான் சார்ந்துள்ள.
40. மன்னப்புள் – பட்சிராஜன், கருடன்; மேவும் –விளங்கும்,(தலைவனை நீங்காது), வனசமலர் மீதுறையும் – தாமரை மலர் மேலுள்ள, அன்னப்புள் – அன்னப்பறவை, மேவ – அடைய, உளம் ஆராய்ந்து – மனம் தேர்ந்து, நன்னிறத்து – நல்ல வெள்ளை நிற.
41. பால் அயனை – பாலையும் நீரையும், வேறாய் – வேறு வேறாக, பகுத்தமைய –பிரித்தமைய, பண்ணுறும் – செய்யும், அப்பாலதனை – அத்தன்மை கருதி, ஓர்ந்து பகர்ந்திடேன் – தேர்ந்து தூதாகக் கூறவில்லை, சீலமுற – குணமுற.
42. பெட்டோகை இல்லா – தோகையற்ற பெண், பிணிமுகம் என்றோர்ந்து – மயில் என நினைந்து, மணி – அழகிய, கண் – விழியுடைய, தோகை கண்டு – மயிலினைப் பார்த்து, கழறிடேன் – கூறவில்லை. உட்டேறி – மனம் தெளிந்து.
43. தாராதரம் எனவே தானறிந்து – ஆதரவு தாராது என்பது உணர்ந்து, நீர் கலுழும் – நீர் சிந்தும், தாரா – வாத்தின், தரங் கண்டு – தன்மை நோக்கி, சாற்றிடேன் – கூறவில்லை, நேராரும் – நேர்மை கொண்ட,
44. சாரிகை கொண்டு – வட்டமிட்டுச் செல்லுந் தன்மையுடன், எங்கும் – எவ்விடத்தும், தலைப்படரும் – வாழ்வித்திருக்கும், தன்மையினால் – குணத்தால், சாரிகைக்கும் – பூவைப் பறவைக்கும், உள்ளன்பு – என் உள்ளத்துப் (தலைவன் பாலுள்ள) பிரியத்தை, சாற்றிடேன் – கூறவில்லை.  

திங்கள், 26 நவம்பர், 2012

Guru Paramparai Vaibhavam (26-11-2012)

குரு பரம்பரை வைபவத்தை இரண்டு வருடங்களுக்கும் மேலாக ஆவலுடன் கேட்டு வருபவர்கள் மிகவும் ஆசையுடன் எதிர்பார்த்திருந்த ப்ரக்ருதம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் திவ்ய வைபவங்களைப் பற்றி இந்த வாரம் சொல்ல ஆரம்பித்திருக்கிறார் ஸ்ரீ நாட்டேரி ஸ்வாமி. 

“தேசிக னென்னு மாசான்
        தெளிவொடு பொறுமைச் சீரும்
வீசிய கடல்நீர்ப் பாரில்
         விளைத்தபல் விநோதக் கூட்டும்
பேசிட வல்லார் யாரே'”

என்று அன்று நம் ஸ்வாமி தேசிகனைப் பற்றி வண்ணச்சரபம் தண்டபாணி ஸ்வாமிகள் பாடியது நம் ஸ்ரீமத் ஆண்டவனுக்கும் சாலப் பொருந்தும்.  என்றாலும், மிகவுமே கடினமான அந்தக் காரியமாம் ஸ்ரீமத் ஆண்டவன் வைபவங்களை அழகாக ஆச்சரியப்படும் வகையில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார். ஸ்ரீமத் ஆண்டவனுடன் மிக நெருக்கமாகப் பழகிடும் பாக்கியம் பெற்ற சிலருக்கே தெரிந்த ஸ்ரீமத் ஆண்டவனின் பூர்வாச்ரமப் பெருமைகளை, அன்றே வெளிவந்த அவரது உதார குணங்களை, கற்பதிலும் கற்றுக் கொடுப்பதிலும் அவருக்கு அன்றே இருந்த ஆனந்தங்களை, ஸ்ரீகோசங்களைப் படிப்பதில் அவருக்கு இருந்த அபாரமான ஆர்வத்தை என்று விவரித்துக்கொண்டே போகுமளவுக்கு இருக்கும் விவரங்களை ஆசாரியன் என்று தள்ளி நின்று தரிசிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்துள்ள அனைவரும் அறிந்து ஆச்சரியப்பட்டுப் புளாகாங்கிதமடையும் வகையில், என்ன தவம் செய்தனம் இவரை ஆசாரியனாக அடைய என்று சிஷ்யர்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து மெய்சிலிர்க்கும் வகையில், பூர்வாச்ரம விருத்தாத்தங்களில் ஓரிரண்டு சொன்னாலும் அருமையாகச் சொல்லி மகிழ வைக்கும் இன்றைய உபந்யாஸத்தைத் தரவிறக்கிக் கேட்டு மகிழ

http://www.mediafire.com/?60t604c3lnfxrax

அதற்கெல்லாம் பொறுமையில்லை இப்பவே இங்கேயே கேட்கணும்னு நினைக்கிறவர்களுக்கு

இந்த உபந்யாஸத்திலே ஸ்ரீமத் ஆண்டவன் பாதயாத்திரையாய் சஞ்சாரம் பண்ணுகையில் ஒரு கிணற்றில் இறங்கி ஜலத்தில் மிதந்து யோகம் புரிந்ததைக் குறிப்பிட்டதைக் கேட்டபோது 2008ல் திருப்புல்லாணியில் சாதுர்மாஸ்ய சமயத்தில் சக்ரதீர்த்தத்தில் நீச்சலடித்து அதன்பின் வானம் பார்த்துப் பல நிமிடங்கள் மிதந்து அடியோங்களை பிரமிக்க வைத்ததுநினைவுக்கு வருகிறது.

மதுரகவி திருஅரங்கர் தத்தைவிடு தூது 4

மந்தாரச்சோலை வளரும்
பசும் கிள்ளாய்
மந்தாரச் சோலை வளரும் பசுங்கிள்ளாய்
சந்தாபம் எய்தித் தளர்வுற்றேன் –நந்தாத                     .21.
அந்தரங்க மந்திரம் சொல் அஞ்சுகம் முந்தரங்கம் கண்டு முடிச்சோழன் சீர்பொருந்த
அந்தரங்க மந்திரஞ்சொல் அஞ்சுகமே – நந்தணியும்   .22.
நற்புதுவை ஆண்டாள் நற்புதுவை ஆண்டாள் நலங்கனியும் பொற்றொடிக்கை
பொற்பமைய வீற்றிருக்கும் பூங்கிளியே—அற்புதஞ்சேர். .23
சோலைக்குள்ளே வீற்றிருக்கும் தென்றல் சோலைக்கு ளேபிறந்துசோலைக்கு ளேவளர்ந்து
சோலைக்குள் வீற்றிருக்கும் தோன்றலே – சோலைப்   .24.
படைவீட்டு மாரன் பரி படைவீட்டு மாரன் பரியேஅம் மாரன்
படைவீட்டு மாறென் பரியே --  நடையாற்றும்              .25.
அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமாம் அஞ்சுகமே ஓரிரவும் அஞ்சுகமா ஆதரவாய்
அஞ்சுகமே காணல் அரிதாமே – நெஞ்சுகக்குந்             .26.
தத்தையே நீக்குக தத்தையே நீக்குக என் தத்தையே யுற்றவருத்
தத்தையை மேவுமனத் தத்தையே – உத்தமமாம்           .27.
காமன் மலரம்பு பட்டு
உடல் வருந்தினேன்
வன்னியே காமன் மலரம்பு பட்டுடலம்
வன்னியே ஒப்ப வருந்தினேன் –மன்னியசீர்க்                .28.
தென்றலும் சங்கீரணமே கீரமே ஒத்தமனக் கீரமே கொண்டுகிளர்
கீரமே தென்றலுஞ்சங் கீரணமே – ஊரறிய                    .29.
பேசு புகழ் ஏசியே ஏசியே வன்னகண்ணா ரேசிலசொற் கூறலுனக்(கு)
ஏசியே கூறலுளம் ஏறாதோ – பேசுபுகழ்க்                       .30.
கொள்ளையே கொள் ளும் நிலாக்கொள்ளை கிள்ளையே மாரன்மனக் கிள்ளையே என்றனுயிர்
கொள்ளையே கொள்ளுநிலாக் கொள்ளையே – வள்ளைவிழிச்       .31.
சாருமலர்ப் பூங்குழலார் சாருமலர்ப் பூங்குழலார் தங்களுரை போலுமொழி
சாருமதி ரூபமணிச் சாருவே – கூருநயந்                           .32.
தேருஞ் சுவாசகமே தேறுஞ் சுவாசகமே தேறாதிருக்கும் எனைச்
சேருஞ் சுவாசகமே தேற்றாயோ – மாரனடர்
                  .33.
அஞ்சிறைக் கிள்ளாய் வெஞ்சிறையி னின்றும் விடுவிப்பாய் என்றிருப்பேற்(கு)
அஞ்சிறைக் கிள்ளாய் அருளாயோ --                               .34.

21. மந்தாரச் சோலை –கற்பகச்சோலை; வளரும் –வாழும்; பசுங்கிள்ளாய் –பச்சைக்கிளியே; சந்தாபம் எய்தி – மன்மதபாணம் தைக்க, தளர்வுற்றேன் –மெலிந்தேன், நந்தாத—குறைவுபடாத
22. முந்து – முன்பு, அரங்கம் கண்டு –திருவரங்கம் உண்டாக்கி, முடிச்சோழன் –முடியுடைச் சோழமன்னன், சீர் பொருந்த – சிறப்புற, அந்தரங்க மந்திரஞ்சொல் – இரகசிய மந்திரம் கூறும், அஞ்சுகமே – கிளிய, நந்தணியும் – சங்கு வளை புனையும்
23. நற்புதுவை ஆண்டாள் –நல்ல வில்லிபுத்தூர்க் கோதையின், நலங்கனியும் –நலம் பெருகும், பொற்றொடிக்கை  -- பொன்வளையல் புனைந்த கரத்து, பொற்பு அமைய – அழகு அமைய, வீற்றிருக்கும் – அமர்ந்துள்ள, பூங்கிளியே – மென்மையான கிளியே, அற்புதம்சேர்—ஆச்சரியம் அமைந்த,
24 – 25.  சோலைக்குளே பிறந்து – பொழிலின் உள்ளே தோன்றி, சோலைக்குளே – பொழிலகத்து, வளர்ந்து – வாழ்ந்து, சோலைக்குள் வீற்றிருக்கும் –பொழிலிடை அமர்ந்திருக்கும், தோன்றலே –வருபவளே, சோலைப்படை வீட்டு மாரன் – பொழிலே படைவீடாய்க் கொண்ட , பரியே – வாகனமே, அம் மாரன் – அந்த மன்மதன், படை – சேனையை, வீட்டுமாறு – வீழ்த்தும் வழி, என் – என்ன, பரியே –பரிந்து கூறுக, நடையாற்றும் – மெல்நடை பயிலும்.
26. அஞ்சுகமே – கிளியே, ஓரிரவும் – ஒவ்வொரு இராத்திரிப் பொழுதும், அஞ்சுகமா – ஐந்து யுகமாம், ஆதரவாய் – அன்பாக,  அஞ்சுகமே காணல் – அழகார் இன்ப நலம் காண்பது, அரிதாமே – அருமையாம், நெஞ்சு(உ)கக்கும் – மனம் மகிழும்,
27. தத்தையே – கிளியே, நீக்குக என் தத்தையே – என் துன்பத்தை மாற்று, உற்ற – அடைந்த, வருத்தத்தையே – துன்பத்தையே, மேவுமனத் தத்தையே – என் மனத்து விளங்கும் அத் துன்பத்தையே, உத்தமமாம் –நலமாம்
28. வன்னியே – கிளியே, காமன் மலரம்பு பட்டு – மன்மதன் பூங்கணை தைத்து, உடலம் –மெல்லிய சரீரம், வன்னியே ஒப்ப—அக்கினி நிகராக, வருந்தினேன் – துன்புற்றேன், மன்னியசீர் –சிறப்புப் பொருந்திய.
29. கீரமே ஒத்த –பாலை நிகர்த்த, மனக்கு ஈரமே கொண்டு கிளர் – உள்ளத்தில் இரக்கம் கொண்டு விளங்கும், கீரமே – கிளியே, தென்றலும் – தென்றல் காற்றும், சங்கீரணமே – அசுத்தமாம், ஊரறிய – ஊரில் உள்ளோர் அறியும்படி.
30. ஏசியே – பழித்து, வன்ன கண்ணாரே –கொடிய பார்வையர்களே, சில சொற் கூறல் – சில வார்த்தை பேசுவது, ஏசியே – கிளியே, கூறல் – சொல்வது, உனக்கு உளம் ஏறாதோ – உன் உள்ளத்து ஏறவில்லையா, பேசு புகழ் – சிறப்பாகப் பேசப் பெறும்
31. கிள்ளையே – கிளியே, மாரன் – மன்மதன், மனக்கிள் –உள்ளத்தில் நெருடல், ஐயே – ஐயோ, என்றனுயிர் – என் ஆவி, கொள்ளையே கொள்ளும் –கவர்ந்து கொள்ளும், நிலாக் கொள்ளையே – சந்திரனைப் போன்ற குளிர்ந்த, வள்ளை விழி – கொடிபரந்த கண்களும்
32. சாருமலர்ப் பூங்குழலார் – புஷ்பங்கள் கூடிய கூந்தலும் உடைய பெண்கள், தங்கள் உரை போலும் – தம் இன்சொல் நிகர்ப்ப, மொழி சாரும் – உரை பேசும், அதி ரூப – மிக்க வடிவமுள்ள, மணிச் சாருவே – அழகிய கிளியே, கூருநயம் – மேன்மை மிக்கவை
33. தேரும் – தெளியும், சுவாசகமே –கிளியே, தேறாதிருக்கும் எனை – ஆறுதலின்றி இருக்கும் எனக்கு, சேரும் –அடையும், சுவாசகமே – நல்ல வாக்கினால், தேற்றாயோ – ஆறுதலளிக்க மாட்டாயோ, மாரன் அடர் – மன்மதன் வலிய
34. வெஞ்சிறையினின்றும் – கொடும் சிறைச் சாலையிலிருந்து, விடுவிப்பாய் – விடுதலை அளிப்பாய், என்றிருப்பேற்கு – என இருக்கும் எனக்கு, அஞ்சிறைக்கிள்ளாய் – அழகிய சிறகுள்ள கிளியே, அருளாயோ – தயை புரிய மாட்டாயோ.