சனி, 8 ஆகஸ்ட், 2009

சரணாகதி மாலை

சரணாகதி மாலை 8ம் பாடல்

த்வதேக ரக்ஷ்யஸ்ய மம
த்வமேவ கருணாகர,
ந ப்ரவர்த்தய பாபாநி
ப்ரவ்ருத்தாநி நிவ்ருத்தய: (8)
(ஹே கருணாகர! அருள்மாகடலே! கருணைக்கடலே! த்வத் ஏக ரக்ஷ்யஸ்ய தேவரீர் ஒருவராலேயே காக்கப்பட வேண்டிய : மம அடியேனுக்கு: த்வம் ஏவ தேவரீரே: பாபாநி பாபங்களை : ந ப்ரவர்த்தய நேராமலிருக்கும்படி செய்தருள வேண்டும்: ப்ரவ்ருத்தாநி நேர்ந்தவைகளை : நிவர்த்தய நீக்கி விட வேண்டும்.
பேரருளாளனே! தேவரீராலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய அடியேனுக்கு தேவரீரே பாபங்களைச் சேரவிடக்கூடாது: முன்பே சேர்ந்திருப்பவைகளை விலக்கி விட வேண்டும்.
கருணை வள்ளலாகிய வரதனே! தேவரீரை அன்றி வேறு ரக்ஷகன் இல்லாத அடியேனுக்குச் சரணாகதி செய்வதற்கு முன்பு செய்த பாபங்களை ஒழித்து விடும்படியும் சரணாகதிக்குப் பிறகு பாபங்களைச் செய்யாமலிருக்கும்படிக்கும் செய்தருள வேண்டும்.
த்வம் ஏவ தேவரீரே அடியேன் தலையில் வேறொரு சுமையைச் சுமத்தாமலும் தேவரீருக்கு அதீநமல்லாத வேறொரு ஸஹகாரியைத் தேடாமலும் செய்தருள வேண்டும்.
"இப்படி ஸபரிகரமான பக்தி யோகத்தில் அதிகரிக்கைக் கீடான விளம்பக்ஷமத்வ ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே 'நின்னருளே புரிந்திருந்தேன்',. 'துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு', 'உன் திருவருளன்றிக் காப்பரிதால்' என்றிருக்கும் அதிகாரிக்கு அநுஷ்டேயமான சரணவரணம் ஆநுகூல்ய ஸங்கல் பாதிபரிகரயுக்தமாய் 'அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே' இத்யாதிகள் படியே ப்ரார்த்த நாந்வித ஸக்ருத் பரந்யாஸ ரூபமாய் இருக்கும். அத்யந்தாகிஞ்சநனுடைய பரந்யாஸத்திற்கு அவ்விஷயத்தில் கர்த்தவ்ய சேஷம் இல்லை. ஸர்வ சக்தியினுடைய ஸங்கல்பத்திற்கு அவாந்தர வ்யாபரராபேக்ஷா நியமம் இல்லை: இரண்டும் இப்படி ஸக்ருத்தாயிருக்கும். ஆசார்யனாலே தன்னை ந்யஸ்த பரனாக அறிந்த சிஷ்யன்தான் பரந்யாஸம் பண்ணான். இவனுக்குப் பலத்தில் சங்காதிகள் வந்தாலும் ஆசார்யனுடைய பரந்யாஸம் பலாவிநா பூதம். அவன் தனக்காகப் பண்ணின பரந்யாஸம் தனக்குப் ப்ரமிதம் அல்லாத போது பரந்யாஸம் பண்ணினால் பூர்வ பரந்யாஸம் பலித்தே விடும். பின்பிலது மிகுதியான ஸுக்ருதத்தின்படியாம்.
உயர்ந்த திடர்க்கு அடைத்து ஏற்றலாம்படி,தாழ்ச்சியுடைய விஷயத்தில்தானே ப்ரவஹிக்கும்படியான க்ருபாகுணத்தாலே ஸ்வதந்த்ர சேஷிதன் கூறாகவும் பேறாகவும் மேலுள்ள நன்மைகளை எல்லாம் விளைக்கும். இந்தப்ரபத்தி 'தாவதார்த்தி' இத்யாதிகள் படியே அங்கமாயும் ஸ்வதந்த்ரமாயும் நின்று ஸகல பல ஸாதந மாகையாலும், அபேக்ஷித ஸித்திக்குக் கைமுதல் அற்று சரண்ய ஸ்வபாவாதி பரிஜ்ஞாநம் உடையார் எல்லார்க்கும் அதிகரிக்கலாம். ஆகையாலும், தன்பலம் போலே தேசகாலாதி நியமமில்லாமையாலும், ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ஆகையாலும், ஸுகரமாகையாலும், 'உபாயஸ்ஸுக்ரச்சாயம் துஷ்கரச்ச மதோ மம' என்னும்படியான வ்யவஸாய கௌரவத்தை உடைத்தாகையாலும், ப்ரஹ்மாஸ்த்ர துல்யை யாகையாலும், யஜ்ஞாதி ஸுக்ருதங்களைப் போலே நச ப்ரதிபந்தார் ஹ மல்லாமையாலும், சரண்யோபநிஷத்துக்களுக்கெல்லாம் சிரோ பூஷணம் என்னும்படி மேலாய் நிற்கையாலும், இதன் ப்ரபாவம் 'ஸத்கர்மநிரதா' இத்யாதிகளாலே பரக்கப் பேசப்பட்டது.
மற்றுள்ள சாஸ்தரார்த்தங்கள் போலே அதிகாரிக்ருத்யமான ப்ரபதநத்தில் சிலருடைய அதிகாரி விசேஷணத்வாதி வ்யபிதேசம் ஸித்தோபாய ப்ராதாந்ய பரம். ஸுதியில் ந்யாஸ ப்ரஹ்ம சப்த ஸாமாநா தி கரண்யம் அந்யபரம். 'பகவதந் யார்ஹ சேஷ பூதனுக்கு பகவதபி மதமில்லாத விஷயத்தில் பக்தியும் ப்ரபத்தியும் கைங்கர்யமும் ஸ்வரூப விருத்தம்' என்னலாயிருக்க பத்தி யோகத்தை விசேஷித்து ஸ்வரூப விருத்தம் என்றவர்களுக்கு அதிகாரி விசேஷ ஸ்வரூப விரோதத்திலே தாத்பர்யம். தேசகால, அதிகார்யாதி பேதத்தாலே குருலகுவிகல்பம் ப்ராயச்சித்தாதிகள் எல்லாவற்றிலும் ப்ரஸித்தம்.
இப்படி யதாதிகாரம் ஸர்வ கர்ம ப்ராயச்சித்தமாக விதித்த பக்தி ப்ரபத்திகளில் ஒரு வழியிலே இழிந்தவனுக்கு அப்போதே உத்தரபூர்வா காச்லேஷம் ப்ராமாதிக விஷயம். விவேகாதி பூர்த்தியுடையாருக்கு புத்தி பூர்வோத்தராகம் அநாபத்தில் புகாது. மந்த விவேகருக்கு மின்னொளி போலே தோற்றிப் ப்ராயச்சித்தாந்தமாய் மறையும். ராகாதி காடிந்யம் உடையாருக்கு சிக்ஷா விசேஷங்களாலே பிரிதலுண்டாம். பூர்வாக விநாசம் ப்ராரப்த வ்யதிரிக்த விஷயம். ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனான செய்த வேள்வியனுக்குப் ப்ராரப்தகார்யமான கர்ம வர்க்கத்தியிலும் ஆர்த்தியின் அளவுக்கீடாக தேஹாந்தராதி ஹேதுவான அம்சம் கழியும். 'யஸ்ய ப்ரஸாதே ஸகலா:' 'ப்ரஸந்நமபவத் தஸ்மை' இத்யாதிகளின் படியே இவனளவில் ஸத்வஸ்த்தரானவர்கள் எல்லாரும் ஸுப்ரஸந்நராவார்கள். 'பகவத் பரிக்ரு ஹீதனுக்கு யமவச்யத்வாதிகள் இல்லை' என்னுமிடம், 'பரிஹர மதுஸுதந ப்ரபந்நாந்', 'தேவம் சார்ங்கதரம் விஷ்ணும்', 'நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை'. 'நமன் கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே', 'நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே', 'நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி' இத்யாதிகளாலே அறியலாம். ஆகையால் இப்படி நிஸ்ஸம்சயனான இவன் 'ஆள்கின்றான். ஆழியான் ஆரால் குறைவுடையம்', 'எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே', 'திருமால் தலைக்கொண்ட நங்கட் கெங்கே வரும் தீவினையே' இத்யாதிகளின் படியே நிரபேக்ஷனாய், நிர்பரனாய், நிர்பயனாம். மங்கும் அவஸ்தையில்லாத போது மடலூரும் அவஸ்தையாய் மாக வைகுந்தம் காண்பதற்கு மனம் ஏகம் எண்ணியிருக்கும்.
முன்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்
றன்செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
தழல் சேர்ந்த துலமெனத் தானே தீர்த்துப்
பின் செய்த வினையினினை வொன்றா தொன்றும்
பிழை பொறுத்து வேறுளது விரகான் மாற்று
மென்செய்ய தாமரைகட் பெருமா னெண்ண
மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே
- (ஸ்ரீபரம பதஸோபாநம். 5. ப்ரஸாதநபர்வம்)
(முன்பு செய்த பாபக்கூட்டத்தில் பலன் கொடுக்கத் தொடங்கிய பாபம் தவிர கைம்முதலாக உள்ள பாபங்களை முழுதும் போக்கி, பயன்கொடுக்கத் தொடங்கிய பாகத்தில் ப்ரபந்தனுடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவன் விரும்பிய காலத்தில் தன்னுடைய ருஜுவான கிருபையால் அக்நியில் சேர்ந்த பஞ்சு என்னும்படி தானே போக்கி ப்ரபத்திக்குப் பிறகு செய்யும் பாபங்களில் அறிவு இல்லாமல், தெரியாமல் நேர்கின்ற பாபங்களைப் பொறுத்து, தெரிந்து செய்ய வேண்டியதாய்த் தீர்ந்த குற்றத்தை பிராயச்சித்தம் முதலியவற்றில் மூட்டிப் போக்குபவனான சிவந்த தாமரை போன்ற கண்களையுடைய எனக்கு நாதனான ஸர்வேசுவரனுடைய திருவுள்ளத்தின் போக்கை அறியாத மானிடர் திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்னும் இரகஸியத்திரயத்தை அறியாதவர்களே) என்பன இங்கு அநுஸந்திக்கத்தக்கன.
ப்ராரப்தேதர பூர்வபாபமகிலம்
ப்ராமாதிகம் சோத்தரம்
ந்யாஸேந க்ஷபயந்நநப்யுபகந
ப்ராரப்த கண்டஞ்சந:
தீபூர்வோத்தர பாப்மநா மஜநநா
ஜ்ஞாதேபிதந்நிஷ்க்ருதே:
கௌடில்யேஸதி சிக்ஷயாப்நகயத்
க்ரோடீகரோதி ப்ரபு :
(ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம். அபராத பரிஹாராதிகாரம்)
(சேதநனுடைய கர்மங்கள் ப்ராரப்தம், ஸஞ்சிதம் என இரு வகைப்படும். பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மம் ப்ராரப்தம் எனப்பெறும். பின் ஒரு காலத்தில் பலன் அளிப்பதற்காகத் தனியாய்க் குவிந்து மூட்டையாய் இருப்பது ஸஞ்சிதம் எனப்படும். பக்தியோகம் ஸஞ்சித கர்மங்களை மாத்திரம் போக்கும். ப்ரபத்தி ஸஞ்சித கர்மங்களைப் போக்கி ப்ராரப்தத்தில் நாம் இந்தச்சரீரம் உள்ளவரை பலனை அனுபவிக்க வேண்டிய கர்மங்களைத் தவிர மீதியுள்ளவற்றையும் போக்கி விடுகின்றது. ப்ரபத்திக்குப் பிறகு அறியாமல் செய்யும் பாபங்களை இவனிடம் சேராதபடி நீக்கி விடுகின்றது. கால தேசங்களைக் கொண்டு மனப்பூர்வமாகச் செய்யும்படி நேர்ந்த பாபங்களையும் ப்ராயச் சித்தாந்திகளைக் கொண்டு ஒழித்து விடுகின்றது. மனப்பூர்வமாய்ச் செய்யும் பாபங்கள் நீங்கும் வகை பின்வருமாறு:-. பாபம் செய்ய நேரிட்டதற்கு வருந்திப் பச்சாத்தாபம் அடைவதால் கால்பங்கும், பிறகு பாபம் செய்யாது நிறுத்தி விடுவதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்ய முயல்வதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்து முடிப்பதால் கால்பங்கும் ஆக, பாபம் முழுவதும் தீர்கிறது. ப்ராயச்சித்தங்களில் சிறந்தது மறுபடியும் ப்ரபத்தி செய்வதே. இதுவே ப்ராயச்சித்த ப்ரபத்தி யெனப்படும். ப்ராயச்சித்தம் செய்யாத புருடர் இவ்வுலகிலேயே சில தண்டனையைப் பெறுவர். ஆக எவ்வகையிலும் ப்ரபந்நனுக்கு நரகமோ மறுபிறவியோ கிடையாது. இச்சரீரம் உள்ள வரையிலும் உள்ள விளம்பத்தைக் கூடப் பொறுக்காது உடனே முக்தி வேண்டும் என்பவனுக்கு உடனேயே ஸகல கர்மங்களையும் போக்கிப் பலனை நல்குகின்றது. இத்தகைய பெருமை பக்தி யோகத்திற்கு இல்லை என்பதுங் காண்க)

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

When we are doing something interesting in our PCs, quite often we face with that irritating announcement "this program is not responding" thereby leading to system hanging and we resort to using windows task manager to kill that not responding program to make our system runs again. But one of adiyen's netguru advises this will slow down the PC gradually and suggests the following. Hope this is useful for all.



By default, Windows system settings doesn't support automatic shutdown of non-responsive programs. So, whenever any application crashes and thus stops responding, you have to take the help of task manager and forcibly End Task the application manually. This is considered as one of the factors that slow down the computers and ruins PC performance.

So, to enhance the performance of your PC it is a good practice for the advanced users to modify and set the system registry settings to automatically End the Task of all non-responsive programs.

Here is how you can 'Enable Windows To Automatically End Task Non-Responsive Programs' :

1. Click Start>Run, type regedit , and then click OK to open the Registry Editor.
Photobucket

2. From the left pane of the registry editor, navigate to the registry key
HKEY_CURRENT_USER\Control Panel\Desktop

3. Now, find a String Value with a Value Name AutoEndTasks in the right pane.
Photobucket


4. Double Click to modify the value to 1 from the default value of 0 and click OK.


5. Close the Registry Editor and restart your PC for the changes to take effect.

That's it!! Now those annoying programs that get hung up need not be closed by going to the task manager.

Hope this helps!

புதன், 5 ஆகஸ்ட், 2009

From "TAMBRAS" Magazine







இன்று கைக்கு வந்து சேர்ந்த "தாம்ப்ராஸ்" மாத இதழில் படித்து ரசித்தவற்றை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சரணாகதி மேன்மையை எடுத்துச் சொல்லும் நடாதூர் ஸ்வாமி கட்டுரை படிக்க வேண்டிய ஒன்று. படங்களின் மீது க்ளிக் செய்து படித்துக் கொள்ளலாம்.

அதே இதழில் வந்துள்ள வேத பாடசாலை விளம்பரத்தையும் இங்கு காணலாம். டெல்லியில் பல வருடங்கள் இயங்கி இப்போது நிர்வாக காரணங்களால் தஞ்சாவூர் களஞ்சேரியில் நடந்து வருகிற அப் பாடசாலைக்கு முடிந்தவர்கள் உதவலாம். சென்ற பல வருடங்களாக அடியேனுக்கு நல்ல பல உபயோகமான நூல்கள், வேதக் குறுந் தகடுகள் ஏன் நல்ல சாளக்ராமம்கூடப் பெற்றதுடன், வேதம் படிக்கும் சில குழந்தைகளுக்கு முடிந்த அளவு உதவியதால் பெற்று வரும் ஆத்ம சந்தோஷம் ஆகியவை இந்த வேண்டுகோளுக்கு அடிப்படை.

இப்படி ஒரு கற்பனை

அடியேன் ரசிக்கும் பல வலைத் தளங்களில் கூகுள் குழுமத்தில் உள்ள "சந்தவசந்தம்" மனம் கவர்ந்த ஒன்று. தமிழுக்கு அதிலும் இன்று அநேகமாக நம் இளைஞர்களுக்கு அந்நியப் பட்டுப் போன மரபுக் கவிதைகளுக்கு அங்கு முக்கியத்துவம் உண்டு. மரபில் நகைச்சுவை என ஒரு திரி அங்கு சிறப்பிடம் பெறுவது. அதில் வந்த ஒரு கற்பனை இங்கே.


பிறப்பு-இறப்பு என்ற நியதி இறப்பு-பிறப்பு என்று தலைகீழானால் வாழ்க்கை
எப்படியிருக்கும்? ஹப் மகசீன் ஆகஸ்ட் இதழில் வெளியான கவிதையைப் படித்தால்
விளங்கும்: http://www.mayyam.com/unicode/cgi-bin/t2u.cgi?url=http://hubmagazine.mayyam.com/aug09/?t=13280

அனந்த் 4-8-2009
----------------------------------------------
மரபில் நகைச்சுவை - 33

- அனந்த்

இம்மாதத்திய ’மரபில் நகைச்சுவை’க் கவிதை Woody Allen என்னும் பிரபல
ஆங்கிலக் காமெடி நடிகர் எழுதிய My Next Life என்னும் ஒரு கட்டுரையை
அடிப்படையாகக் கொண்டது. கரு, குழந்தை, இளமை, நடு வயது, முதுமை, இறப்பு
என்று வாழ்வில் ஒரே மாதிரியாக அன்றுமுதல் இன்று வரை நடக்கும்
நிகழ்ச்சிகள், மாற்றத்துக்காக ஒருமுறையேனும், தலைகீழான வரிசையில்
நடந்தால் தன் வாழ்க்கை எப்படி அமைந்திருக்கும் என்று Woody Allen செய்த
கற்பனையின் விளைவே அவரது கட்டுரையும் இக்கவிதையும்.


<> என் அடுத்த பிறவி <>


அடுத்து வந்தெனைப் படுத்திய பிறவிகள்
கொடுத்த துயரம் போதும் இனிநீ
தருமோர் பிறப்பில் வருவன என்றன்
விருப்பப் படியே பொருந்திட அருள்வாய்!

முடிவே அடியாய்த் தொடங்கி முதலில்
அடியேன் பிணமாய்க் கிடந்துயிர் பெற்று
முதியோர் இல்லில் வதிந்தாங் கிருந்து
அதிக நலமுளேன் எனுங்கா ரணத்தால்

துரத்தப் பட்டபின் அரசோ பிறரோ
தரும்வரு மானம் பெறுவேன் அங்ஙன்
வாழ்ந்த பின்னர் பலரும் என்னைச்
சூழ்ந்து பரிசுகள் வழங்கிடு மாறு

தொடங்குவேன் என்றன் முதல்நாள் அலுவலை;
அடுத்த நாற்பது ஆண்டுகள் உடலில்
படிப்படி யாகத் துடிப்புள இளமை
பெருகிட உழைத்தபின் வருகிற ஓய்வில்

மெருகே றியஎன் இளமைப் பருவம்
தருமின் பங்கள் பருகிநான் வாழ்வேன்
பல்கலைக் கழகமோ இல்லைவே றெதுவோ
பட்டம் தருவதை இட்டத் துடன்பெற்(று)

உயர்நிலைப் பள்ளியில் நுழைந்(து)அது முடிந்து
வயதில் சிறியோர்க் கெனஉள வகுப்பில்
ஒருசில ஆண்டுகள் ஆனபின் குழந்தை
உருவம் கொண்டுநான் ஒன்பது திங்கள்

பாற்கடல் போன்ற நீர்க்குடம் தன்னில்
நாற்புறத் திலுமாய் நீந்துவேன் உண்டியும்
எனைத்தே டிவரும் தினமும் இதன்பின்..
தினைத்துணைத் தான சினையென மாறி

அனைத்தும் மறைந்தபின் இறைவா
உனைநான் கேட்பேன் உடல்தா எனவே!

செவ்வாய், 4 ஆகஸ்ட், 2009

சரணாகதி மாலை

சரணாகதி மாலை 7வது பாட்டு

மாம் மதீயம் ச நிகிலம்
சேதநா சேதநாத்மகம்,
ஸ்வகைங்கர்யோபகரணம்
வரத ஸ்வீகுரு ஸ்வயம்

(வரத- வேண்டுவதெல்லாம் தருபவனே! வேண்டுவார்களுக்கு வேண்டும் வரங்களை அளிப்பதால் வரதன் என்னும் திருநாமம் உடைய ஸ்வாமியே! மாம் - அடியேனையும் மதீயம் - என்னுடையது என்று பேர்பெற்ற, என்னுடையவை யென்னும் படியான தேசந ஆசெதந ஆத்மிகம் - உயிருள்ளதும் உயிரில்லாதனவுமான, அறிவுள்ளதும் அறிவில்லாததுமான நிகிலம்ச எல்லாவற்றையும் ஸ்வ கைங்கர்ய உபகரணம் - தன்னுடைய கைங்கரியத்துக்கு உரிய ஸாமக்ரியாக, தேவரீருடைய பணிவிடை தொண்டு ஊழியங்களுக்குக் கருவியாக ஸ்வயம்-தானாகவே ஸ்வீகுரு-அங்கீகரித்தருளுக, ஸ்வீகரித்தருள வேண்டும்.
அடியேனையும் அடியேனைச் சேர்ந்த ஸகல வஸ்துக்களையும் தேவரீரடைய கைங்கர்யத்துக்கு உபயோகமாகும்படி செய்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்
ஹே! வரத! என்னையும் என்னைச் சேர்ந்த சேதநாசேதனங்களாகிய அனைத்தையும் தனது கைங்கர்யத்துக்கு உபகரணமாகத் தானே எடுத்துக்கொள்ளும்.
இச்சுலோகத்தில் இவர் பிரார்த்தித்தபடியே பகவான் இவரை அடிமை கொள்ளுகிறோம் என்ன அதற்கு அமையாது ததிபாண்டாதிகளுக்குப் போல அநுபந்திகளையும் அடிமை கொள்ள வேண்டும் என்கிறார்.
அடியேனையும் அடியேனுடைய பசுபுத்திராதிகளையும் தேவரீருடைய ஊழியத்துக்குத் தக்கபடி உபயோகித்துக் கொள்க.
ஏ வரதனே! தேவரீரிடத்தில் சரணாகதி பண்ணின அடியேனையும் அடியேனுக்குச் சேஷம் என்னும்படி யிருந்துள்ள சேதநர்களையும் அசேதநங்களையும் தேவரீருடைய கைங்கரியத்துக்கு உபயோகமாகும்படி செய்தருள வேண்டும்.
சேதந அசேதந ஆத்மகம் - தத்துவங்கள் மூன்று. அவையாவன: சேதநம், அசேதநம், ஈசுவரன் என்பவை. அறிவுள்ள ஜீவாத்மா சேதநன் எனப்படுவான். இவனுக்கு ஜ்ஞாநம் ஒரு குணமாய் நிற்கும். இந்த ஜ்ஞாநம் தர்ம பூத ஜ்ஞாநம் எனப்பெறும். ஜீவனுடைய ஸ்வரூபமும் ஜ்ஞாந மயமாகவே நிற்கும். ஆதலின் ஜீவன் தர்மபூதஜ் ஞாநம் என்னப் பெறுவான். இந்த ஜீவாத்மா தனக்கு எப்பொழுதும் தோன்றிக் கொண்டேயிருப்பான். தன்னை நான் என்று அறியும் போது தர்ம பூதஜ் ஞாநம் உதவ வேண்டும் என்பதில்லை. ஆனால் ஜீவன் தன்னைத் தவிர வேறு எந்தப் பொருளையும் தன் தர்மபூதஜ் ஞாநத்தால் மட்டுமே அறிய முடியும். தன் ஸ்வரூபத்தைத் தர்ம பூத ஜ்ஞாநத்தைக் கொண்டும் அறியலாம். ஜீவன் அணுவாகவும் ஆநந்த ஸ்வரூபமாகவும் நிற்பவன்; சரீரத்திற் காட்டிலும் வேறுபட்டவன். அழிவற்றவன்; எம்பெருமானுக்கு அடியனாகவே நிற்பவன்; இத்தகைய ஜீவாத்மாக்கள் எண்ணற்றவர்; அவர்கள் பத்தர், முக்தர், நித்யர் என மூவகைப்படும்.
அறிவில்லாத வஸ்து அசேதநம் என்னப்படும். அசேதநத்தால் கிடைக்கக்கூடிய பலனை அநுபவிப்பவன் சேதநனே. இந்த அசேதநம் த்ரிகுணம், காலம், சுத்த ஸத்துவம் என மூன்று வகைப்படும். த்ரிகுணம் என்பதுவே மூல ப்ரக்ருதி. இது சத்துவம் ரஜஸ் தமஸ் என்னும் மூன்று குணங்களை உடையதாதலின் த்ரிகுணம் எனப்பெறும். காலம் என்பது எங்கும் பரந்து நிற்கும் ஒரே த்ரவ்யம். இதில் ஸத்துவம் முதலிய குணங்களில் சுத்த ஸத்துவம் என்பது ரஜோ குணம் தமோகுணம் ஆகிய இரண்டும் இன்றி ஸத்துவ குணத்திற்கு மாத்திரம் ஆதாரமான ஒரு த்ரவ்யம்.
முத்திக் கருள்சூட மூன்றைத் தெளிமுன்ன
மித்திக்கா லேற்கு மிதம்
(தேசிகமாலை அமிருத ரஞ்சனி 3)
(மோக்ஷத்திற்குக் காரணமான பகவானுடைய க்ருபையைப் பெறுவதற்கு சேதநம் அசேதநம் ஈசுவரன் என்னும் மூன்று தத்துவங்களை முதலில் தெரிந்து கொள். இந்த வழியால் உபாயம் பொருந்தும்)
ஸ்வ கைங்கர்ய - இங்குள்ள ஸ்வ என்ற பதம் தன்னையும், தன்னைச் சேர்ந்தவர்களையும் சொல்லும். அடியேனையும், அடியேனைச் சேர்ந்தவர்களையும் உனக்கும், உன்னடியார்களுக்கும் கைங்கர்யத்துக்கு உரிய ஸாமக்ரிகளாக அங்கீகரித்தருள வேண்டும்.
இப்படி அருளிச் செய்தவாறே முன்பு "கூழாள் பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்" என்று நின்ற மஹாராஜர் தெளிந்து, தாம் பண்ணின அபராதத்திற்கு பெருமாளை க்ஷமை கொண்டு, தாமே புருஷகாரமாய் 'வந்து மண்ணும் மணமும் கொண்மின்', 'எமதிடம் புகுதுக' இத்யாதிகளில் ப்ரக்ரியையாலே 'நாங்களும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் ஒரு வாசியற அடிமை செய்யப்பெற வேண்டும்;. நாங்களும் இவனுக்கு 'ஸகா தாஸோஸ்மி' என்னும்படி அடியோமாக வேண்டும்' என்று விண்ணப்பம் செய்ய இப்படி ப்ரதி பந்தகம் கழிந்து அநந்தரம் பெருமாளுக்கு சரணாகத லாபமாகிற புருஷார்த்தம் பிறந்த படியையும் 'தத்தமஸ்யா பயம் மயா' என்கையாலே அபயம் பெற்ற சரணாகதனுக்கும், இப்படி விசேஷித்துப்பெருமாள் பாசுரமின்றிக்கே தங்களுக்கு வேறொரு உபாயமின்றிக்கே சரணாகதனுடைய அபிமாநத்திலே அடங்கிக்கூட வந்த ராக்ஷஸர்களுக்கும் பெருமாள் திருவடிகளைப் பெறுமையாகிற பரம புருஷார்த்தம் பிறந்தபடியையும் பர்யங்க வித்யாதிகளில் படியே பரஸ்பர ஸம்ச்லேஷத்தாலே பிறந்த ப்ரீதிபரீவாஹமான ஸம்வாத விசேஷங்களையும் எல்லாம் இந்த ஸர்க்கத்தின் சேஷத்தாலும் மேலில் ஸர்க்கத்தின் முகப்பாலுமாகச் சொல்லி சரணாகதி வேதமான ப்ரபந்தத்திலே உபநிஷத் பாகமான அபய ப்ரதாந ப்ரகரணத்தைத் தலைக்கட்டுகிறான் ஸ்ரீ வால்மீகி பகவான்' (அபய ப்ரதாந ஸாரம். 9. சரண்ய சரணாகத சங்கலாப:)
'தனக்கு சேஷபூதருமாய் பரதந்த்ரருமாய் இருக்கையாலே தன் கைகளும் கால்களும் போலே தன்னிலே சொருகி தனித்து ஓர் உபாய பலங்கள் இல்லாதநாலு ராக்ஷஸரோடே கூட உத்தேச்யமான திருவடிகளைளவும் செல்லவொண்ணாதபடி ஹர்ஸ பாரவச்யம்தள்ள, திருவடிகளோடே பிற வித்துவக் குடைத்தான பூமியிலே விழுந்தான்.**** இப்படி ஒருவன் சரணாகதனாய் திருவடிகளைப் பெறும் போது, அவனைப் பற்றினார்க்கும் அவனுடைய ஆத்மாத்மீய பரஸமர்ப்பணத்திலே துவக்குண்டானபடியாலே, தனித்து பரீக்ஷிப்பாருமின்றிக்கே, ராஜ ஸேவகருடைய ஸ்தநந்தயருக்குப் போலே புருஷார்த்தலாபம் துல்யமாம் என்று 'பசுர்மநுஷ்ய: பக்ஷீ வா யே ச வைஷ்ணவ ஸம்ஸ்ரீயா: தேநைவ தே ப்ரயாஸ்யந்தி தத்விஷ்ணோ: பரமம் பதம் இத்யாதிகளில் சொல்லுகிற சாஸ்த்ரார்த்தத்தை வெளியிடுகிறான் (சதுர்பி : ஸஹராக்ஷஸை:") (அபய ப்ரதாந ஸாரம். 10.ப்ராப்திப் ரகார:) ப்ரபஞ்சது என்பன இவண் அநுஸந்தேயங்கள்.)

திங்கள், 3 ஆகஸ்ட், 2009

Defer your emails

ஞாபகமறதி+சோம்பேறித்தனம் இரண்டுக்கும் உதாரணம் அடியேன். நண்பர் பிறந்த தினம் 22ம் தேதி என்று அடியேனுக்கு 15ம் தேதியே நினைவுக்கு வந்து விடும். 22 அன்று காலையில் முதல் காரியமாக நண்பருக்கு வாழ்த்து அனுப்ப வேண்டும் என்று 15ம் தேதியே முடிவும் செய்து விடுவேன். ஆனால் பாருங்கள் 21ம் தேதி காலை வரை அது ஞாபகத்தில் இருக்கும். 22ம் தேதி ஒன்று சுத்தமாக அதை மறந்தே போயிருப்பேன். அல்லது எங்காவது இணைய இணைப்பு கிடைக்காத இடத்தில் இருக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு வாழ்த்து அனுப்ப முடியாமல் தவிப்பதும் உண்டு. ஒரு சிலர் உரிமையோடு பின்னால் கூப்பிட்டு அடியேனிடமிருந்து வாழ்த்து எதிர்பார்த்து ஏமாந்ததைச் சொல்லும்போது அசடு வழிய (அப்போது மட்டும்தானா என்று மனதுக்குள் சிரிக்காதீர்கள்) நிற்பது அடியேன் வாடிக்கை.

எங்களை மாதிரி ஆசாமிகளை மேலும் சோம்பேறியாக்கிக் கெடுப்பதற்கென்றே இணையத்தில் பலர் இருக்கிறார்களே ! சும்மா இருப்பார்களா? வாழ்த்துன்னு இல்லைப்பா எந்த விதமான ஈமெயிலையும் நீ வழக்கமா எந்த மெயில்ல அனுப்புவியோ அதில எழுதி யாருக்கு என்னைக்கு எத்தனை மணிக்கு அனுப்பணும்னு எங்கள்ட்ட கொடுத்துடப்பா மிச்சத்தை நாங்க பார்த்துக்கறோம், உங்களுக்கு சேவை செய்யத்தானே நாங்க இருக்கோம்னு இந்த www.deferredsender.com வந்து நிற்கறாங்க. டெஸ்ட் பண்ணிப் பார்த்தேன். சொன்ன வார்த்தையைக் காப்பாத்தறாங்கவளாத் தான் இருக்காங்க. கார்த்தாலே 7 மணிக்கு ஒரு மெயில் ஜிமெயில் அக்கவுண்ட்லே எழுதி பிற்பகல் 2 மணிக்கு என்னோட ஹாட்மெயில் அக்கவுண்டுக்கு அனுப்பச் சொல்லியிருந்தேன். சரியா வந்து சேர்ந்து விட்டது. இது நிறயப் பேருக்கு தேவைப்படாது. ஏன்னா எல்லாரும் அடியேன் மாதிரி சோம்பேறியா இருக்க முடியாது. ஆனாலும் ரொம்ப பிஸியா நேரமே காணல்லைன்னு உழைக்கிறவாளுக்கு இது உபயோகமாய் இருக்கலாம். இது இலவச சேவை. பதிந்து கொள்ள மட்டும் வேண்டும்.

ஞாயிறு, 2 ஆகஸ்ட், 2009

சரணாகதிமாலை

சரணாகதிமாலை 6 தொடர்ச்சி

பகவச்சப்தத்தின் உண்மைப்பொருள் உணர்ந்த தென்சொற்கடந்து வட சொற்கலைக்கெல்லை தேர்ந்த ஸ்ரீவல்லபர் (தெய்வப்புலமைத் திருவள்ளுவ நாயனார்) தாம் இயற்றிய தமிழ் வேதமாகிய திருக்குறள் பாயிரம். முதல் அதிகாரம். கடவுள் வாழ்த்து முதற்குறளை.
அகர முதல வெழுத்தெல்லா மாதி
பகவன் முதற்றே யுலகு.
என அமைத்துப் பாடியுள்ளார். பரிமேலழகரும் "இப்பாட்டான் முதற் கடவுளதுண்மை கூறப்பட்டது" என்று நுண்ணிய உரை வகுத்துள்ளதும் நன்கு நோக்கற்பாலது. யாழ்ப்பாணத்து நல்லூர் ஆறுமுக நாவலரவர்கள் பதிப்பில் இக்குறளின் கீழ் ஐசுவரியம், வீர்யம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்னுமாறுக்கும் பகமென்னும் பெயருண்மையால் பகவனென்பதற்கு இவ்வாறு குணங்களையுமுடையோனென்பது பொருள் எனக்குறிப்பு எழுதியுள்ளார்கள். ஆதிபகவன் என்னு மிருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூன் முடிபு என உரையிட்டனர் பரிமேலழகியார். "அமலனாதிபிரான்" (திருப்பாணாழ்வார் அருளிச்செய்த பத்துப்பாட்டு) வியாக்கியானமான "முநிவாஹந போகம்" ஸ்ரீநிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செய்த இருபத்தெட்டாவது ரஹஸ்யம். இதில் "(ஆதி) 'ஏஷ கர்த்தாந க்ரியதே' இத்யாதிகளிற்படியே ஸர்வஜகதேக காரணபூதன் இத்தால் காரணமே சரண்யம் என்கிறபடியே முமுஷுவுக்கு சரணமாகப் பற்றப்படுபவன் என்று பலிதம்: இக்காரணத்வமும் மோஷப்ரதத்வமும் சத்ரசாமரங்கள் போலே ஸர்வலோக சரண்யனுக்கு விசேஷசிஹ்நங்கள்" என்றுள்ளன காண்க. முழுதுணர் நீர்மையினோராகிய ஸ்ரீவல்லபர் பகவச்சப்தத்தால் பெறக்கூடிய நாராயணன் எனுந் திருநாமத்தை "வாலறிவன்" (2.ஸர்வஜ்ஞன்) "பொறிவாயில் ஐந்தவித்தான்". (6.ஹ்ருஷீகேசன்) "தனக்குவமையில்லாதான்" (7.அதுல:) "எண்குணத்தான்" (9) என்ற அகாரவாச்யனின் பெயர்களை எடுத்தோதி "அடியளந்தான்" (பொருட்பால் 610) என்று உலகளந்த திரிவிக்ரமன் பெயரைக்காட்டி இறுதிப்பாலில் "தாமரைக்கண்ணான்" (புணர்ச்சி மகிழதல் 1103) என்று செங்கண்மாலை ஸ்பஷ்டமாகப் பேசித்தலைக் கட்டியுள்ளது நன்கு நோக்கி இன்புறற்குரியது. "முதற்கடவுள்" யார் என்பது ஆழ்வார்களுள் ஆதியாகிய பொய்கையார் "உலகளந்த மூர்த்தி யுருவே முதல்" (முதல் திருவந்தாதி. 14) என்றும் "முதலாவார் மூவரே அம்மூவருள்ளும் முதலாவான் மூரிநீர்வண்ணன் - முதலாய நல்லான்" (முதல் திருவந்தாதி.15) என்றும் கண்டோக்தமாகக் காட்டியிருப்பதால் தெற்றென அறியலாம். திருவள்ளுவருக்கு வழிபடு கடவுளும் குறளுக்கு ஏற்புடைக்கடவுளும் திருமால் என்பது பேரறிஞர் கண்ட பேருண்மை.
தேவீ -- பிராட்டிமார்கள்.
இப்படி அதிமநோஹரமான அநந்தபோக பர்யங்கத்திலே ரஜதகிரியின் மேலே மரதககிரி இருந்தாற்போலே 'ஏழுலகும் தனிக்கோல் செல்ல' வீற்றிருந்து 'விண்ணோர்தலைவ'னாய் குமாரயுவாவாய் 'சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு' என்னும் படி ஆதித்ய சதஸஹஸ்ர ஸமுதாயம் போலே அநவதிக தேஜஸ்ஸையுடையனாய் 'விச்வமாப்யாயந் காந்த்யா பூர்ணேந்து யுத துல்யயா' என்னும் படி அநவதிக லாவண்யத்தையுடையனாய் ஸர்வசேஷியான தன்னுடைய க்ருபையும் க்ஷமையும் வண்மையும் வடிவு கொண்டாற்போலே இருக்கிற நாச்சிமார்களில் ஸ்வாபிமத, நித்ய, நிரவத்ய, அநுரூபஸ்வரூபாதிகளை உடையனாய் ஸ்வவைச்வரூப்யத்தாலே ஸதாநுபவம் பண்ணாநின்றாலும் இன்று அநுபவிக்கத் தொடங்கினாற்போலே ஆச்சர்யரஸாவஹையாய், 'சாந்தாநந்த' இத்யாதிகளின்படியே ஸர்வப்ரகாரஸம்ச் லேஷத்தை உடையனாய் 'திருமார்வத்து மாலை நங்கை'யாய் அமுதில் வரும் பெண்ணமு'தாய் 'வேரிமாறாத பூமேலிருந்து வினைதீர்க்கு' மவளாய் தன் கடாக்ஷலேசத்தாலே கமலாஸநாதி வைபவத்தையும் கொடுக்குமவளாய் 'தேவதேவ திவ்யமஹிஷீ' என்னும் படியான மேன்மையும் 'கருணாஸ்ராநதமுகீ' என்னும் படியான நீர்மையும் உடையளான பெரிய பிராட்டியார் 'தாக்ஷிண்யஸீமா' என்று தோற்றும்படி தக்ஷிணபார்ச்வத்திலே நீலமேகத்தை அணைந்த நிலை மின்போலே ஸேவித்திருந்து தன்னுடைய சேஷித்வ போக்யத்வ கைங்கர்யப்ரதி ஸம்பந்தித்வங்களைப் பூரித்துக்கொண்டு அகிலபரிஜநங்களை அவஸரோசிதா சேஷவ்ருத்திகளிலும் ஆஜ்ஞாபிக்க 'ஏவம் பூதபூமி நீளாநாயக' என்கிறபடியே பெரிய பிராட்டியாருடைய ரூபாந்தரம் என்னலாம் படி அநவரத பஹுமாந விஷயையாய் 'பச்சைமாமலை போல் மேனி'க்கும் படிமாவான நிறத்தை உடையளான 'பார் என்னும் மடந்தை'யும் 'அல்லி மலர்மகள் போகமயக்குகள் அத்யல்பம் என்னும்படி நித்யப்ரபோதம் நின்றவிடம் தெரியாதே நீளாதுங்க ஸ்தநகிரிதடீஸுப்தம் என்னப் பண்ணுமவளாய் நீலோத்பவச்யாமளையான ஸ்ரீநீளைப் பிராட்டியும்; அடியார் இடத்திலே ஸேவித்திருக்கும்படி தாங்களும் இடத்திலே ஸேவித்திருக்க; 'ஸேவ்ய: ஸ்ரீபூமி நீளாபி:' உடனமர் காதல்மகளிர் திருமகள் மண்மகள் ஆயர்மடமகள் என்றிவர் மூவர்' இத்யாதிகளில் சொன்ன சேர்த்தியிலே அடிமை செய்யுமவர்களுக்கு 'ரஸம்' என்றும் 'ஆநந்தம்' என்றும் சொல்லும்படியான நிரதிசய யோக்யதையுடையனான நிருபாதிகசேஷியை நிருபாதிகஜ்ஞாத விகாஸத்தாலே 'அவாவறச் சூழ்ந்தாய்' என்னும்படி அனுபவித்து (ஸ்ரீபரமபத ஸோபாநம். பராப்திபர்வம்)
தேமா மலர்க்கயஞ்சூழ்
கோயின் மேவுந் திருவரங்கர்
தாமாத ரித்ததிருத்
தேவிமாரிற் றரங்கவுடைப்
பூமாது நாளும்
புரத்தே சுமந்து புரக்குமலர்
மாமாது செல்வங்
கொடுத்தே யுயிர்களை வாழ்விக்குமே.
(திருவரங்கத்துமாலை.80)
(தேனையுடைய பெரிய பூக்கள் நிறைந்த தடாகங்கள் சூழ்ந்த திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற திருஅரங்கர் தாம் அன்புவைத்த திருமகள் நிலமகள் என்னும் உபயதேவியர்களுள் கடலை உடுக்கும் ஆடையாக உடைய நிலமகள் எந்நாளும் உயிர்களைத் தனது உடம்பின் மேலே தாங்கிக் காப்பாற்றுவாள். தாமரையில் தோன்றிய திருமகள் அவ்வுயிர்ட்கட்குச் செல்வத்தைக் கொடுத்துக் காப்பாற்றுவாள். எம்பெருமானது வலப்பக்கத்திலே ஸ்ரீதேவியும் இடப்பக்கத்தில் பூதேவியும் எப்பொழுதும் விட்டுப் பிரியாமல் உடன் உறைவர்.)
பூஷணஹேத்யாதி - ஸ்ரீவத்ஸ கௌஸ்துப கிரீட வநமால நூபுரஹாராதிகள், ஸ்ரீ சங்கு சக்ராதிகள், அநந்தகருட விஷ்வக்ஸாநாதிகள் திருவணுக்கன் முதலானவைகள்.
"அங்கே குமுதாதிகளான திவ்ய பார்ஷதேச்வரர்களும், சண்டாதிகளான திவ்யத்வாரபாலர்களும் ஸஸ்நேக பஹுமாந அவ லோக நம்பண்ண அநீகேச்வர நியுக்தரான ஆஸ்தான நிர்வாஹகர் அருளப்பாடிட அடிக்கடியும் தொழுவ தெழுவதாய்க்கொண்டு திருமாமணிமண்டபத்தின் முகப்பிலே சென்றேறி அங்கே சிறகுடைய மஹாமேருவைப்போலே சிறந்த திருமேனியுடையனாய் த்ரயீமயனாய் 'திருமகள்சேர்மார்ப'னுக்குத் திருக்கண்ணாடி போலே அபிமுகனாய் நிற்கிற 'காலார்ந்தகதிக்கருட'னைக்கண்டு கழல்பணிந்து 'பிணங்கி அமரர் பிதற்றும் குணம்' என்கிற படியே ஓரொரு ஸ்வாமி குணத்தைப்பற்றி வாதி ப்ரதிவாதிகளைப் போலே வாசி வகுப்பதும் அதிஸ்நேஹத்தாலே அஸ்தானேபய சங்கையுடையாரைப்போலே ஸம்ப்ரமம் பண்ணுவதுமாய்க் கொண்டு ரஸிக்கிற நித்ய ஸுரிகள் நிரையாக இருக்கின்ற அழகோலக்கத்தின் நடுவே சென்று: அடியார்கள் குழாங்களை உடன் கூடுவது என்று கொலோ' என்கிற ஆசை நிறைந்து திவ்யபரிஜந பரிச்சத ஆயுத ஆபரணாழ்வார்கள் ஸ்வாஸாதாரண லக்ஷண விசிஷ்ட விக்ரஹங்களோடே யதாஸ்தாநம் ஸேவித்து நிற்கிற நிலைகளைக்கண்டு ஸர்வவிதகைங்கர்ய மநோரதாதி ரூடனாய்க்கொண்டு கிட்டச்சென்று; பர்யங்க பரிஸரத்திலே முன்பு தங்களைக்கொண்டு எம்பெருமான் நடத்தின க்ருஷிபலித்தது என்று பூர்ண மநோரதரான பூர்வாசார்யர்களைக் கண்டு; 'அறியாதன அறிவித்து' 'என்னைத்தீமனம் கெடுத்து' 'நும் கால்கள் என் தலைமேல் கெழுமீர்' என்று க்ருதஜ்ஞதை தோற்றப்பணிந்து உபயவிபூதியும் தனிக்கோல் செல்ல வானிளவரசு மன்னிவீற்றிருக்கிற அமிதெளஜஸ் ஸான திவ்ய ஸிஹ்மாஸந ரூபதிவ்ய பர்யங்கத்தை அணுகி : விபூதித்வயாநுபந்திகளான ஆதாரதத்வங்களும் பர்யங்க வித்தையில் 'பூதபவிஷ்யத்தத்வங்கள்' என்றாற்போலவும் பகவச்சாஸ்திரங்களில் 'தர்மா தர்மாதிகள்' என்றாற்போலவும் பரக்கவும் சுருங்கவும் பலவகையாகச் சொல்லுகிற பாதம் முதலான அவயவங்களுமெல்லாம் அவ்வவ்வபிமாநிதேவதா விசேஷங்களாய் இருக்கும்படியைத் தெளியக்காணும்.*** 'சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்' 'நிவாஸஸய்யாஸந' என்கிறபடியே அவஸரோசித ரூபங்களைக் கொண்டு அசேஷ சேஷ வ்ருத்திகளைப் பண்ணுகையாலே சேஷன் என்றும், த்ரிவித பரிச்சேத ரஹிதனையும் தன் மடியில் ஏகதேசத்தில் வைக்கும்படியான வைபவத்தையுடையானாகையாலே 'அநந்தன்' என்றும் திரு நாமத்தையுடையவனாய், ஸர்வகந்த வஸ்துவுக்கும் வாஸனையுண்டாம்படியான திவ்யபரிமளத்தையுடையவனாய், 'வேரிமாறாத பூமேலிருப்பாளு'டனே புஷ்பஹாஸ ஸுகுமாரனானவன் மூவுலகும் தொழ வீற்றிருக்கும்படி ஸுகுமாரதமனாய், அம்ருத ப்ரவாஹம் சுழியாறு பட்டாற்போலே அவதாதசீதலமான போக வேஷ்ட நத்தையுடையனாய் சேதசத்ர பரம்பரை போலவும் பூர்ணேந்து மண்டல ஸஹஸ்ரங்களை நிரைத்தாற் போலவும் பரந்து உயர்ந்த பணாஸஹஸ்ரத்தின் மணிகிரண மண்டல பாலாதபத்தாலே 'புண்டரீகம்' என்னும் பேரையுடைத்தான பரமபதமெல்லாம் உல்லஸிதமாம்பாடி பண்ணக்கடவனான திருவநந்தாழ்வானைக் கண்டு; அவனோடொக்க ஒருமிடறாய் அநேக முகமாக போக ஸாம்யத்தை ஆசைப்பட்டு, அவனுடைய அம்ருதவர்ஷிகளான இரண்டாயிரம் திருக்கண்களுக்கும் தான் ஏகலக்ஷ்யமாய் அவன் மேலே அமர்ந்திருக்கிற 'மேலாத்தேவர்கள் மேவித்தொழும் மாலாரை'க் கண்டு, தானும் அநந்த த்ருஷ்டியாய் அத்யந்த ஸாமீப்யம் பெறும் (ஸ்ரீபரமபத ஸோபாநம். திவ்யதேசப்ராப்திபர்வம்.)
ஸ்ரீய: பதியான ஸர்வேச்வரனுக்கு ஸ்ரீகௌஸ்துபஸ்தாநீயனாய்க்கொண்டு ஹ்ருதயங்கமனாய், குமாரன் என்றும், புத்ரன் என்றும், சிஷ்யன் என்றும், ப்ரேஷ்யன் என்றும், சேஷபூதன் என்றும், தாசபூதன் என்றும், அவ்வோசாஸ்த்ரங்களிலே ப்ரதி பந்நனா யிருக்கும் ஜீவாத்மா, இவன் தனக்கு வகுத்த சேஷியாய், அயர்வறுமமரர்களதி பதியாய் உயர்வற வுயர்நலமுடையனாய், நமக்கும் பூவின்மிசை நங்கைக்கு மின்பினாய், ஞாலத்தார் தமக்கும் வானத்தவர்க்கும் பெருமானான ஸர்வேச்வரன் 'வைகுண்டேது பரேலோகேச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி: ஆஸ்த்தே' என்றும் 'ஒண்டொடியாள் திருமகளும் நீயுமே நிலா நிற்ப' என்றும் சொல்லுகிறபடியே பெரிய பிராட்டியாரோடே கூடத்தெளிவிசும்பிலே 'யாயோத்யேத்ய பராஜிதேதி விதிதா நாகம்பரேண ஸ்திதா' என்கிறபடியே அயோத்யாதி சப்தவாச்யமான கலங்காப் பெருநகரிலே ஸஹஸ்ரஸ் தூணாதி வாக்யங்களாலே யோதப்படுகிற திருமாமணி மண்டபத்திலே கௌஷீதகீப்ராஹ்ம ணாதிகளிலே யோதப்படுகிற பரியங்க விசேஷத்திலே 'சென்றாற் குடையா மிருந்தாற் சிங்காதனமாம்' என்றும் 'நிவாஸசய்யாஸந' என்றும் சொல்லுகிறபடியே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தோசித ஸர்வவித கைங்கர்யங்களையும், ஸர்வவித சரீரங்களாலே அநுபவித்து, சேஷத்வமே தனக்கு நிரூபகமாகையாலே சேஷன் என்றே திருநாமமாம்படியான திருவனந்தாழ்வானாகிற திருப்பள்ளி மெத்தையிலே வானிளவர சாய்க்கொண்டுதான் வாழ்கிற வாழ்வை. (ஸ்ரீமத்ரஹஸ்யத்ரயஸாரம். உபோத்காதாதிகாரம்)
இவற்றில் த்ரிகுணத்ரவ்யத்துக்கு ஸ்வரூபபேதம் குணத்யாச்ரயத்வம் ஸததபரிணாமசீலமான இத்திரவ்யத்துக்கு ஸத்வரஜ ஸ்தமஸ்ஸுக்கள் அந்யோந்யம் ஸமமானபோது மஹாப்ரளயம். விஷமமானபோது ஷ்ருஷ்டிஸ்திதிகள் குணவைஷம்யம் உள்ள ப்ரதேசத்திலே மஹதாதி விகாரங்கள். இதில் விக்ருத மல்லாத ப்ரதேசத்தையும் விக்ருதமான ப்ரதேசத்தையுங்கூட ப்ரக்ருதி மஹதஹங்கார தந்மாத்ர பூதேந்த்ரியங்கள் என்று இருபத்தினாலு தத்துவங்களாக சாஸ்த்ரங்கள் வகுத்துச் சொல்லும். சில விவக்ஷா விசேஷங்களாலே யோரொருவிடங்களிலே தத்வங்களை யேறவுஞ்சுருங்கவுஞ் சொல்லா நிற்கும். இத்தத்வங்களிலவாந்தர வகுப்புக்களுமவற்றி லபிமாநி தேவதைகளுமவ்வோ வுபாஸநாதிகாரிகளுக்கு அறிய வேணும். ஆத்மாவுக்கு அவற்றிற் காட்டில் வ்யாவ் ருத்தியறிகை இங்கு நமக்கு ப்ரதாநம். இவையெல்லாம் ஸர்வேச்வரனுக்கு அஸ்த்ரபூஷணாதி ரூபங்களாய் நிற்கும் நிலையை
புருடன்மணி வரமாகப் பொன்றா மூலப்
பிரகிருதி மறுவாக மான்றண்டாகத்
தெருள்மருள்வா ளுறையாக வாங்கா ரங்கள்
சார்ங்கஞ்சங் காகமனந் திகிரி யாக
விருடிகங்க ளீரைந்துஞ் சரங்க ளாக
விருபூத மாலைவன மாலை யாகக்
கருடனுரு வாமறையின் பொருளாங் கண்ணன்
கரிகரிமே னின்றனைத்துங் காக்கின் றானே.
என்கிற கட்டளையிலே யறிகை உசிதம் (ஸ்ரீ மத்ரஹஸ்யத்ரய ஸாரம் தத்வத்ரயசிந்தநாதிகாரம்)
நாராயண னென்றது நாரங்களுக்கு அயநம் என்றபடி. (95) நாரங்களாவன நித்ய வஸ்துக்களினுடைய திரள் (96) அவையாவன:- ஜ்ஞாநா நந்தாமலத்வாதிகளும் ஜ்ஞாநசக்த் யாதிகளும் வாத்ஸல்ய ஸௌசீல்யாதிகளும் திருமேனியும் காந்தி ஸௌகுமார்யாதிகளும் திவ்யபூஷணங்களும் திவ்யாயுதங்களும் பெரியபிராட்டியார் தொடக்கமான நாச்சிமார்களும் நித்யஸுரிகளும் சத்ரசாமராதிகளும் திருவாசல் காக்கும் முதலிகளும் கணாதிபரும் முக்தரும் பரமாகாசமும் ப்ரக்ருதியும் பத்தாத்மாக்களும் காலமும் மஹதாதி விகாரங்களும் அண்டங்களும் அண்டத்துக்கு உட்பட்ட தேவாதிபதார்த்தங்களும் (97) அயநம் என்றது - இவற்றுக்கு ஆச்ரயம் என்றபடி. (98) அங்ஙனன்றிக்கே இவை தன்னை ஆச்ரயமாகவுடையவன் என்னவுமாம். (99) (பிள்ளை லோகாசார்யர் அருளிச் செய்த முமுஷப்படி)
நித்யம் நிரபராதேஷு கைங்கர்யேஷு எக்காலத்தும் எவ்விதக்குற்றமும் இல்லாத கைங்கர்யங்களை
ஒழிவில் காலமெல்லாம் உடனாய்மன்னி
வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம்
(திருவாய்மொழி 3-3-1)
(ஈடு முதற்பாட்டில் திருவேங்கடமுடையான் திருவடிகளிலே ஸர்வதேச ஸர்வகால ஸர்வாவஸ்தைகளிலும் எல்லாவடிமைகளும் செய்ய வேணும்) என்கிறார்.
(ஒழிவில் காலமெல்லாம்) முடிவில்லாத காலமெல்லாம் அநந்தமான காலமெல்லாம் என்றபடி 'ஒழிவில் காலமெல்லா'மென்று கீழே கழிந்த காலத்தையுங் கூட்டி அடிமை செய்யப்பாரிக்கிறார் என்று இங்ஙனே அதிப்ரஸங்கம் சொல்லுவாருமுண்டு. அதாகிறது கீழ்கழிந்த காலத்தை மீட்கை என்று ஒரு பொருளில்லையிறே. 'நோபஜநம் ஸ்மரந்' என்கிறபடியே கீழ்கழிந்த காலத்தில் இழவு நெஞ்சிற் படாதபடி மறப்பிக்கையேயிறே உள்ளது 'நமேது: கம்' இத்யாதி ஆகையாலே இனிமேலுள்ள காலமெல்லாம் என்றபடி
(உடனாய்) காலமெல்லாம் வேண்டினவோபாதி தேசாநு பந்தமும் அபேக்ஷிதமாயிருக்கிறது காணும் இவர்க்கு. இளைய பெருமாள் படை வீட்டிலும் அடிமை செய்து வநவாஸத்திலும் அடிமை செய்தாற்போலே
(மன்னி) ஸர்வேச்வரனும் பிராட்டியுமாய்த் திரையை வளைத்துக் கொண்டிருந்தாலும், படிக்கம் குத்துவிளக்குப்போலே அவ்வளவிலும் நின்று அந்தரங்கமான வ்ருத்திகளைப் பண்ண வேணும். இத்தால், ஸர்வாவஸ்த்தைகளையும் நினைக்கிறது. 'ரமமாணாவநேத்ரய' என்னக் கடவதிறே. இருவருக்கு உண்டான அநுபவத்திலே மூவரைச் சொல்லுகிறதிறே, அவ்விருவருக்கும் பரஸ்பர ஸம்ச்லேஷத்தால் பிறக்கும் ரஸம் அச்சேர்த்தியைக் கண்டவனுக்கும் பிறக்கையாலே.
(ஒழிவில் காலம் இத்யாதி) ஸர்வ காலத்தையும் ஸர்வ தேசத்தையும் ஸர்வாவஸ்த்தையையும் நினைக்கிறது. ஆழ்வார் திருவரங்கப் பெருமாளரையர் இத்திருவாய் மொழிபாடப் புக்கால் 'ஒழிவில்காலமெல்லாம் காலமெல்லாம் காலமெல்லாம்' என்று இங்ஙனே நெடும்போதெல்லாம் பாடி, மேல் போகமாட்டாதே அவ்வளவிலே தலைக்கட்டிப் போவராம்.


(வழுவிலா அடிமை செய்ய வேண்டும்) அடிமையிலொன்றும் ஒருவர்க்கும் கூறு கொடுக்க வொண்ணாதாயிற்று. எல்லா வடிமையும் நான் செய்ய வேணும்: இளைய பெருமாள் பிரியாதே காட்டிலேயுங்கூடப் போந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும் : ஸ்ரீ பரதாழ்வான் படைவீட்டிலே பிரிந்திருந்து செய்த அடிமைகளும் செய்ய வேணும். ஸ்ரீ பரதாழ்வானைக் கைகேயி 'ராஜந்' என்ன அப்போது அந்த ஸ்வாதந்தர்யம் பொறுக்கமாட்டாமே படுகுலைப் பட்டாற்போலே 'விலலாப' என்று கூப்பிட்டானிறே; பாரதந்த்ர்யரஸம் அறிவார்க்கு ஸ்வாதந்த்ர்யம் 'அநர்த்தம்' என்று தோற்றுமிறே. 'ஏபிச்சஸசி வைஸ்ஸார்த்தம்' தன்னிற்காட்டிலும் கண்குழிவுடையார் இத்தனை பேருண்டாயிற்று. தன்னோடொத்த ஆற்றாமையுடையார் அநேகரைக் கூட்டிக்கொண்டு போந்தான். எனக்கன்றோ, இவன் தம்பி என்று ஸ்வாதந்த்ர்யம் பண்ணி அவர்க்குக் கண்ணழிக்கலாவது: இவர்களுக்குச் சொல்லிற்றுச் செய்ய வேணுமே: இவர்கள் தாங்களே கார்யத்தை விசாரித்து அறுதியிட்டு நீர் இப்படி செய்யும் என்று அவர்கள் ஏவினால் அப்படி செய்ய வேண்டிவருமிறே அவர்க்கு. அவருடைய வ்யதிரேகத்தில் தனக்கு உண்டான ஆற்றாமையை அறிவிக்கப் போகிறானாகில் தனியே போய் அறிவிக்கவுமாமிறே; இவர்களையெல்லாம் திரட்டிக்கொண்டு போனதுக்குக் கருத்தென்? என்னில் நம் ஒருவர் முகத்துக்கண்ணீர் கண்டால் பொறுக்கமாட்டாதவர் தம்மைப்பிரிந்த பிரிவு பொறுக்கமாட்டாதே கண்ணும் கண்ணீருமாயிருப்பார் இத்தனை பேரைக்கண்டால் மீளாரோ? என்னுங்கருத்தாலே பூசலுக்குப் போவாரைப்போலே யானை குதிரை யகப்படக்கொண்டு போகிறானிறே: அவற்றுக்கும் அவ்வாற்றாமை யுண்டாகையாலே 'சிரஸாயாசித:' என்பேற்றுக்குத் தாம் அபேக்ஷித்துத்தருமவர் நான் என் தலையாலே யிரந்தால் மறுப்பரோ? 'மயா' - அத்தலை யித்தலையானால் செய்யா தொழிவரோ? 'ப்ராது:' 'பஸ்மஸாத் குருதாம்சிகீ' என்னும் படி தம் பின் பிறந்தவனல்லனோ நான்? என் தம்பிமார்க்கு உதவாத என்னுடைமையை அக்நிக்கு விருந்திட்டேனென்றாரிறே. 'யத்விநா' இத்யாதி 'சிஷ்யஸ்ய' ப்ராதாவாகக் கூறு கொண்டு முடி சூடியிருக்குமவனோ நான்? அசேஷரஹஸ்யமும் நம்மோடேயன்றோ அதிகரித்தது. 'தாஸஸ்ய' சிஷ்யனாய்க்ரய விக்ரயார்ஹனன்றிக்கே யிருந்தேனோ? ஆன பின்பு நான் அபேக்ஷித்தகாரியத்தை மறுப்பரோ? இதிறேகைங்கர்யத்தில் சாபல முடையார் இருக்கும்படி.
(வழுவிலா அடிமை) ஓரடிமை குறையிலும் உண்டது உருக்காட்டாதாயிற்று இவர்க்கு.
(செய்ய) முன்பும் உண்டிறே இக்கைங்கர்யமநோரதம் : இப்போது இவ்வளவால் போராது, அநுஷ்டாந பர்யந்தமாக வேணும்.
(அடிமை செய்ய வேண்டும்) கைங்கர்ய மநோரதமே பிடித்து உத்தேச்யமாயிருக்கிறதாயிற்று இவர்க்கு 'க்ஷூத்ர விஷயாநுபவம் பண்ண வேணும்' என்று புக்கால் இரண்டு தலைக்கு மொக்கரஸமான போகத்துக்கு ஒரு தலையிலே த்ரவ்யத்தை நியமித்து, போககாலம் வருமளவும் லீலையாலே போது போக்கி, போககாலம் வந்தவாறே புறப்படத் தள்ளி விடுவார்கள். இனி 'ஸ்வர்க்காநுபவம் பண்ண வேணும்' என்று புக்கால் 'ஸ்வர்க்கே பிபாத பீதஸ்ய க்ஷயிஸ்ணோர் நாஸ்தி நிர்வ்ருதி' என்கிறபடியே அருகே சிலர் நரகாநுபவம் பண்ணக்காண்கையாலே இருந்து அனுபவிக்கிற இதுதானும் உண்டது. உருக்காட்டாதபடியாயிருக்கும்: இனித்தான் அவ்விருப்புக்கு அடியான புண்யமானது சாலிலெடுத்த நீர்போலே க்ஷயித்தவாறே 'த்வம்ஸ' என்று முகம் கீழ்ப்படத் தள்ளுவார்கள். இப்படி ஸ்வரூபத்துக்கு அநநுரூபமாய் அஹங்காரமமகாரங்களடியாக வரும் இவ்வநுபவங்கள் போலன்றிக்கே ஸ்வரூபத்தோடே சேர்ந்ததுமாய், அடிமை கொள்ளுகிறவனும், நித்யனாய், அடிமை செய்கிறவனும், நித்யனாய், காலமும் நித்யமாய், தேசமும் நித்யமாய், ஒரு காலமும் மீள வேண்டாதபடி அபுநராவ்ருத்திலக்ஷண மோக்ஷமாய் க்ஷூத்ரவிஷயாநுபவம் போலேது : கமிச்ரமாயிருக்கையன்றிக்கே நிரதிசய ஸுகமாயிருப்பதொன்றிறே இது
(நாம்) தம் திருவுள்ளத்தையுங் கூட்டி நாம் என்கிறாராதல் : அன்றிக்கே, கேசவன் தமர்க்குப் பின்பு இவர் தாம் தனியரல்லாமையாலே, திருவுள்ளம் போலே யிருக்கும் ஸ்ரீ வைஷ்ணவர்களையும் கூட்டிக்கொண்டு நாம் என்கிறராதல்
(இப்பாட்டால் - ப்ராய்யப்ரதாநமான திருமந்த்ரத்திலர்த்தத்தை அருளிச் செய்கிறார். ஒழிவில் காலமெல்லா முடனாய் மன்னி வழுவிலாவடிமை செய்ய வேண்டுமென்கிற இத்தால் - சதுர்த்தியில் ப்ரார்த்தநையைச் சொல்லுகிறது; நாம் என்கிற இடம்-- ப்ரணவ ப்ரதிபாத்யனான இவனுடைய ஸ்வரூபத்தைச் சொல்லுகிறது சப்த ஸ்வபாவத்தைக் கொண்டு சொன்னோம்' என்று அருளிச் செய்தருளின வார்த்தை; 'தெழிகுரல்' இத்யாதியால் - நாராயண சப்தார்த்தத்தை அருளிச் செய்கிறார். ப்ராப்தவிஷயத்தில் பண்ணும் கைங்கர்யமிறே ப்ராப்யமாவது; இனி ஸௌலப்யமும் வடிவழகும் ஸ்வாமித்வமும் எல்லாம் நாராயண சப்தத்துக்கு அர்த்தமிறே.
("இவனுக்கு பகவான் போக்யமாகலாம். மற்றுமுள்ளவர்களுடைய கைங்கர்யம் போக்கியமாமோவென்ன கர்மபலமன்றிக்கே வருகையால் எல்லாம் போக்கியமாகக் குறையில்லை. பூஷணாதிகள் அசேதனங்களாகிலும் அதின் அதிஷ்டாந தேவதைகளைச் சொல்லும் நிரபராத என்றதால் அபராதங்கலசில் ரஸ்யமாகா தென்கை. நித்யம் என்றத்தால் ஒழிவில் காலத்திற்படியே ப்ரார்த்திக்கப்படுகிறது.)