சனி, 10 பிப்ரவரி, 2007

தினம் ஒரு பாதுகாஸஹஸ்ரம்

தத்தே முகுந்தமணிபாதுகயோர் நிவேசாத்
வல்மீகஸம்பவகிரா
ஸமதாம் மமோக்தி
கங்காப்ரவாஹபதிதஸ்ய கியாநிவ ஸ்யாத்
ரத்யோதகஸ்ய யமுநாஸலிலாத் விசேஷ:

ஸ்ரீமத் நம்மாண்டவன்:
கங்கையிலே மழைபெய்து வீதி ஜலமும் விழுகின்றது, யமுனா ஜலமும் விழுகின்றது. இரண்டையும் ஒரே மாதிரியாகவே கங்காஜலமென்று கொண்டாடுகிறர்கள். அதேமாதிரி நான் தாழ்ந்தவனாயிருந்தாலும், என் வார்த்தையானது பாதுகாஸ்தோத்திரமாயிருப்பதால் வால்மீகி செய்த ஸ்ரீமத் ராமாயணம் போலப் பெருமையடையும். அதாவது எல்லாரும் திருஷ்டாதிருஷ்ட ஸகல புருஷார்த்தத்துக்காக ஸ்ரீமத் ராமாயணத்தைப் பாராயணம் செய்கிறார்கள். அதுபோல இந்தக் கிரந்தமும் பாராயணம் பண்ணினால் இது ஸகலமான நல்ல பலன்களையும் கொடுக்கும்.

A.லக்ஷ்மிநரஸிம்ஹன் : மழை பெய்து வீதியில் ஓடும் ஜலம் கங்கையில் சேர்ந்தால் அதுவும் புனிதமடைகிறது. நான் மிகவும் தாழ்ந்தவன்; எனினும் ஸ்தோத்திரம் முகுந்தனின் பாதுகை பற்றினது. எனவே, ராமாயணம் போன்று இதுவும் பெருமை உடையதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக