திங்கள், 1 ஆகஸ்ட், 2011

அழகியசிங்கர் அருளமுது 15

இன்று ரொம்ப சந்தோஷமான நாள். எங்களூர் ஸ்தல புராணத்தில் நாங்கள் சொல்வது உண்மையே  என்று ஸ்ரீமத் அழகியசிங்கர் திருவாக்காலே அறிந்த நாள். எங்கள் ஸ்ரீ ஆதி ஜெகன்னாதப் பெருமாளை வணங்கி அவர் அனுக்ரஹம் கிடைத்த பின்பே தசரதன் அயோத்தியில் புத்திர காமேஷ்டி யாகம் செய்து இராமனைப் பெற்றான் என்பது எங்கள் ஸ்தல புராணம். வழிவழியாகச் சொல்லி வருகிறோம். அதற்கான சான்றை இன்று ஸ்ரீமத் அழகியசிங்கர் வால்மீகி வாக்காலே சொன்னபோது நாங்கள் அடைந்த மகிழ்ச்சி அளவு கடந்த ஒன்று. அதேபோல, இன்றைய அனுக்ரஹ பாஷணத்தைக் கவனித்துக் கேட்டால், எங்கள் ஊரைப் பற்றி, அதாவது சேதுக்கரை விசேஷத்தைப் பற்றி இதுவரை நாங்கள் யாருமே கேட்டிராத ஒரு அற்புதமான தகவலைச் சொல்லியிருப்பது தெரிய வரும். திருமங்கை மன்னன் எங்கள் திருத்தலத்தைப் பற்றிப் பாடியதை, பௌராணிகர்கள் வழியிலிருந்து வேறுபட்டு, ஆழ்வார் அருளிய சொற்களுக்கெல்லாம் வேதப் பிரமாணத்தை நிலைநிறுத்துகின்ற அந்த அற்புதமான அனுக்ரஹ பாஷணத்தை இங்கேயே கேட்க

தரவிறக்க

http://www.mediafire.com/?yi28i827c46bnua

இதுவரை கேட்காதவர்கள் 15 நாள் அனுக்ரஹ பாஷணங்கள் அனைத்தையும் தரவிறக்க

https://skydrive.live.com/#!/richupload.aspx/Azhakiasingar%20anugrahabhashanam?cid=4809c9eb88545e42&sc=documents

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக