திங்கள், 20 ஜூலை, 2009

ந்யாஸதசகம்

நேற்றைய தொடர்ச்சி

பந்தல்குடி திருமலை அய்யங்கார் விரிவுரை

பகவந் - "மைத்ரேய! பகவச்சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித: நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய: ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி, ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத: பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி, பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித: சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:" (விஷ்ணுபுராணம் 6-5-72)

[ மைத்ரேயரே! 'பகவான்' என்னும் சப்தம் ஸர்வகாரணங்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. '(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன், 'ஸ்வாமி' என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே! அவ்வாறே 'ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்' என்பது ககாரத்தின் அர்த்தம். ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் 'பக' என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத 'ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும் 'பகவாந்' என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது. 'பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது' என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]

"பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன்" (திருவாய்மொழி 1-3-5){(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறேஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது; இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது. (அம்பகவன்) -- ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ; "அந்யத்ரஹ்யுபசாரத:" பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம். (அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) -- "நமஸ்யந்தச்சமாம் பக்த்யா" என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தானிறே. அங்கநாபரிஷ்வங்கம்போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது--- ஈடு"}

"இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம் ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும். இவ்வர்த்தத்தை 'நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும் 'உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும், 'சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்' (திருவாய்மொழி 10-10-10) என்றும், 'அமலன்' ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள். மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக் கும். இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும். ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும். இக்குணங்கள் எல்லாம் ஸர்வகாலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும். பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள்தோறும் அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள். அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்" [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]

"வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவ ரூபத்திற்கு பரரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது. இப்பக்ஷத்தை 'குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ, ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:' (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள். இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள் 'ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.' (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம் 'ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ; சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று. [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரயசிந்த நாதிகாரம்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக