திங்கள், 15 ஜூன், 2009

அடியேன்மீது மிகுந்த பிரியம் கொண்டவர்களில் டெல்லி ஸ்ரீநிவாஸன் ஸ்வாமியும் ஒருவர். அடிக்கடி தன்னிடமிருக்கும் பல நல்ல பழைய தமிழ் நூல்களை எனக்கு அனுப்பி வைப்பார். சமீபத்தில் அவரிடமிருந்து எனக்கு வந்தவைகளுள் "திருமால் அந்தாதி" யும் ஒன்று. சொற்சுவை, பொருட்சுவை பிரமாதமாகச் சொல்லும் வகையில் இல்லாவிட்டாலும்கூட , அது வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் என்ற சைவர் எழுதியது என்ற அளவிலே தனிச் சிறப்பு பெறுகிறது. திருவல்லிக்கேணித் தமிழ்ச் சங்கத் தலைவர் ப.ரெ.திருமலை அய்யங்கார் இவரைப் பற்றி தான் பதிப்பித்த பல நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இவர் ஸ்வாமி தேசிகன் குறித்தும் நிறைய எழுதியுள்ளாராம். சைவராகப் பிறந்தாலும் சமரச மனப்பான்மையுடன், நெற்றியில் திருநீறு, இரு புஜங்களிலும் இருகலைத் திருமண் இவற்றோடேயே காணப்படுவாராம். அவர் இயற்றிய "திருமால் அந்தாதி" புத்தக வடிவில் இங்கு காணலாம்.
Please take note. Since the pdf is converted to flash file on a trial basis, you can view it only upto 1400 hours of 19.6.2009. Please enjoy the effect of reading a book relaxing on your easy chair by simply movinf your mouse on any corner of the page which will curl as the mouse hovers there.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக