ஞாயிறு, 14 ஜூன், 2009

வளர வேண்டும் போய் வாழ்த்துங்கள்.

ओतो ओतो मोहनकेतो!
क्व नु खलु यातोऽसि?
आहूतोऽसि, नासि, कुतोऽसि?
आखुं गृह्णासि... आऽऽऽ आखुं गृह्णासि १

कोष्णं क्षीरं तवोपनीतम्
आगच्छागच्छ
आगन्तुं ते नेच्छति चित्तं
वाञ्छसि किं ब्रूहि... आऽऽऽ वाञ्छसि किं ब्रूहि २

गेहे गेहे दधिनवनीते
खादसि चौर्येण
पायं पायं पयसः पूरं
पूरितमुदरं ते... आऽऽऽ पूरितमुदरं ते ३





அடியேனின் வழக்கம்போல் இணையத்தில் தேடிக் கொண்டிருந்தேன். ஒரு அபூர்வமான நல்முத்து கண்ணில் பட்டது. அடியேன் எழுதுபவைகளை(?) தொடர்ந்து படிப்பவர்களில் பெரும்பாலோர் ஸமஸ்க்ருதத்தின் மீது அபார பற்று உடையவர்கள் என்பதும், பலர் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்த மொழியைப் பாதுகாத்துப் பரப்புகின்ற முயற்சிகளுக்கெல்லாம் புரவலர்களாக பேருதவி செய்பவர்கள் என்பதும் அடியேனுக்குத் தெரியும். ஆகவே அடியேனது இந்த வேண்டுகோளை இங்கு இடுகிறேன். ஸமஸ்க்ருதத்திலேயே ஒருவர் Blog ஒன்றை நடத்துவதை இன்று கண்டேன். எழுத்துக் கூட்டி வாசித்தும், பக்கத்தில் பாடசாலை வாத்தியாரை வைத்துக் கொண்டு கொஞ்சம் புரிந்து கொண்டதில், அது நல்ல முயற்சியாகத் தெரிந்தது. நிச்சயமாக அவர் வலையை வாசிப்பவர் கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள் என்று அவருக்கும் தெரிந்திருக்கும். இருந்தாலும் மொழியின்மீது அவர் கொண்ட பற்றே அவருக்கு இதை அரம்பித்து நடத்துதற்கான காரணமாக இருக்க வேண்டும். கர்னாடகத்தில் பல சிரமங்களையும் பொருட்படுத்தாமல் ஒரு ஸமஸ்க்ருத தினசரிப் பத்திரிகை 40 வருடங்களாக வந்து கொண்டிருக்கிறதல்லவா? அதைப் போல இந்த மனிதரின் முயற்சியும் வெற்றியடைந்து பல நல்ல விஷயங்களை அவர் தொடர்ந்து தரவேண்டும். அதற்கு நம் ஆதரவை நாம் அளிக்க வேண்டும். ஒரு வலைஞ னுக்கு வாசகர்கள் தரும் ஆதரவுதான் டானிக். ஒரு நாளில் எத்துனை பேர் வந்து படிக்கிறார்கள், அதிலும் எத்தனை பேர் (டெல்லி அன்பில் ஸ்ரீநிவாசன் ஸ்வாமி போல்) உடனுக்குடன் ஆமோதித்தோ மறுத்தோ கருத்துரைக்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வலைப்பூ எழுத்தாளர்களுக்கு தொடர்ந்து எழுதுவதில் ஆர்வம் கூடும் இல்லையா? அந்த வலைப்பூவுக்குச் செல்ல

http://yaajushi.blogspot.com/

இதைப் படித்துக் கொண்டே இருக்கும்போது கமகமவென வாசனை அடியேன் கவனத்தைத் திருப்பியது. (என்னோடு நெருங்கிப் பழகியவர்களுக்கு நான் ஒரு சாப்பாட்டு ராமன் என்பது நன்றாகவே தெரியும். அது தெரியாத வாத்தியார் நல்ல விஷயம் சொல்லிக் கொண்டிருக்கும்போது இப்படி அடுப்பங்கரை கவனமா என்று கோபித்துக் கொண்டு போய்விட்டார்) எங்கேயிருந்து இந்த வாசனை என்று தேடி கடைசியில் நான் எட்டிப் பார்த்தது கமலாவின் அடுப்பங்கரை. அந்த வாசனையை நீங்களும் அனுபவிக்க
http://adupankarai.kamalascorner.com/

போய் எட்டிப் பார்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக