சனி, 4 ஆகஸ்ட், 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகை கீர்த்தனை

                    விருத்தம்

ஆனந்ததீர்த்தியரொருவர்தம்பேர்
      அக்ஷோப்யமுனியென்பார்கலைகள்வல்ல
தானந்தவித்யாரணியர்தர்க்கித்துத்
        தத்வமஸிவாக்கியத்திற்கக்ஷியேற
ஏனந்தம்வேங்கடேசதேசிகன்ற
        மியமெதுவோவதுவேசித்தாந்தமாமென்
றேநினைந்தங்கிருவர்கக்ஷிகளையுமோலை
        தீட்டினாரிங்குவரக்காட்டினாரே.

                 வெண்பா

அக்ஷோப் பியமுநியா  மானந்த  தீர்த்தீயர்
பக்ஷந் திருவுள்ளம் பற்றியே  --  தக்ஷணமே
சிக்ஷித்தே  யவ்வித்தியாரணிய  ரைமடக்குங்
கக்ஷி யொருசுலோ  கம்.

        தரு-இராகம்-தோடி-தாளம்-ஆதி

                          பல்லவி

ஆரியரெங்கள்வேதாந்தா   சாரியர்போலே - சித்
தாந்தமார்செய்வார்               பார்மேலே.

                        அனுபல்லவி

வாரிஜாக்ஷமுகுந்தர் -- பேரிசைந்துகொண்டவ
தாரமதுவனந்த --  சூரியபிள்ளையாய்வந்த                    (ஆரி)

                     சரணங்கள்

தத்வமஸியாகிய           வஸியாலே -- இந்தத்
     தாரணியிலக்ஷோப்பிய      முனியுமேலே
வித்யாரண்யரையாரண்        யம்போலே  -- கண்டு
       வீசினாரென்றாரே         விளங்குவதர்நூலே             (ஆரி)
பரமதநிரஸக              ரிவராமே  --  இந்தப்
       பாரிற்சுமதத்தா           பனராமே
பெரியதிருவடி                மந்த்ரமாமேன் ---- மையில்
     பிரபலர்சந்நிதிகண்டால்    வினையெல்லாந்தீர்ந்துபோமே   (ஆரி)
கவிதார்க்கிகேஸரியெனும்         பேரர் ---- எங்கள்
       கமலநயநருக்கேதிருப்             பேரர்
புவியிற்புகழுந் தூப்புலெனு         மூரர் ----  தொண்டர்
     புண்ணியஸ்வரூபமாகவந்தாண்டாவ       தாரர்        (ஆரி)

                  விருத்தம்

வித்தியாரணியர்கக்ஷிதமக்குமங்கே
       மேலாகவக்ஷோப்பியமுனியென்றேதான்
ஸித்தாந்தஞ்செய்தனுப்பியிருந்தாரந்நாள்
        தென்னாடும்   வடநாடுந்தொழவே நின்ற
பத்திசேர்   திருவரங்கப்பதியிலுள்ள
        பண்புகண்டு   சகியாமற்   சகலசாஸ்த்ர
வித்தாகவிருக்கும்  பண்டிதனோர்வாது
         விளைத்திட்டானங்கு  வந்து  முளைத்திட்டானே.

                   இதுவுமது

நேரிட்டேனெனைச் செயித்துத் தரிசனத்தை
         நிலைநிறுத்திக்கொள்வீர்களென்றானங்கே
பேரிட்டெ  தரிசனத்தெவருங்கூடிப்
        பேசிவிசாரித்திங்கே  யெவருங்காணொ
மாரிட்டேயிவனைவெல்வோம்பண்டைநாட்பே
         ரருளாளர்சந்நிதியினின்றுவந்து
சீரிட்டவெம்பெருமானாரைப்போலுஞ்
        சிங்கந்தான்   கவிவாதிசிங்கந்தானே.

                          தொடரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக