வெள்ளி, 20 ஜூலை, 2007

ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக்

கீர்த்தனைகள்


தரு - இராகம் - சவுராஷ்டிரம் -தாளம் - ஆதி

பல்லவி
வேங்கடநாதர்தேசிகராய்வந்த வேதாந்தகுருவைப்பணிவோம்
அனுபல்லவி>

தீங்குகள்யாவையும் நீங்கிடவேயரு
ளோங்கியசீர்புகழ் தாங்குகண்டாவதார (வேங்)

பொருந்தியவாண்டுநிறை கலியாணஞ்செய்து
புனிதவனந்தாசார்யர் மைந்தனையே
பெருந்தேவியாருடனே புருஷாகாரமான
பேரருளாளற்கு வந்தனையே
திருந்தவுஞ்செய்துவைக்கப்பேரருளாளருஞ்
செல்வநம்பிராமாநு ஜன்றனையே
இருந்திணைசொலவுமே வருந்தரிசனமும்வ
ளரும்படிபிரவர்த்தகன் தருங்கிருபையதும் பெறும் (வேங்)
பக்ஷமதாகியமூன்றாம்வருடத்திற்
பரிந்துசவுளமது பண்ணுவித்து
அக்ஷரவாரம்ப மதுதான் ஸாமிக்கு
ஐந்தாம் வருடத்தி லறியவைத்து
சிக்ஷைசொல்ல இவர்வாசிக்குநாளையிற்
சேர்ந்தபுதுமைவெகு
லக்ஷணமேவிய கக்ஷிகண்மேல்வெகு
கக்ஷிகளே சொல்லி சக்ஷணரேவரு (வேங்)
ஆதிக்கமாகியவம்மாள்கிடாம்பி
அப்புள்ளாருடனே கூடிநல்ல்
மேதினிபுகழும்நடாதூர்பெரியவம்மாள்
வ்யாக்யானகோட்டியின் மீதுசெல்ல
சாதகமாகவே சேவித்திருக்கும்போது
சந்தேகமொன்றுதான் தெளிந்துசொல்ல
ஓதினபேர்களு மீதென்னபுதுமையென்
றேதலைதானசை வேதசிரோமணி (வேங்)

விருத்தம்

நடுத்தெரிந்துசந்தேகந்தீர்க்கக்கண்டு
நடாதூரம்மாளாகும்வரதாசார்ய
ரெடுத்தணைத்துமடியில்வைத்துமிக்குழந்தை
யிவ்வுலகிற்புராணஸம்ஹிதாகர்த்தாவாய்த்
தொடுத்துமுன்னே புலஸ்தியர் பராசரர்க்கே
சொன்னதுபோலவவதாரவிசேஷமென்று
கொடுத்திவரைசிக்ஷிக்கத்தக்கதென்று
கொள்ளார்தாங்கிடாம்பியினப்புள்ளார்தாமே.

இதுவுமது

செப்பமாயிவரையுநீர்நம்மைப்பற்றிச்
சிக்ஷித்துச்சகலகலைசொல்லுமென்றே
அப்புள்ளார்கையிற்காட்டிக்கொடுத்தா
ரக்ஷராரம்பமுதலவர்தாமேசெய்
விப்பவேயுபநீதராகிப்பின்னும்
வேதாத்தியானமதுபண்ணும்போதும்
அப்படித்தானேற்றோதுமிடங்களென்றார்க்
காராவாராளவந்தார்நேராவாரே.


தரு இராகம் - கல்யாணி - தாளம் - ஆதி

பல்லவி

சருவதந்திரசுவதந்திரசுவாமி -- கண்டாவதாரவே
தாந்தகுருசேவடிசிந்தைசெய்மனனே.

அனுபல்லவி

நறுமலர்ச்சோலைசூழ்தூப்புல் நகரமனந்தசூரி
நந்தனராகவேவந்தனர்பாரிலு யர்ந்தனர்மேனி
சிறந்தனரேயிவர்நலவுபயமறையி னிலைகள்
தெளியவுரைசொலவுமதுரமிகு சலநிதியெனவரு (சருவ)
புண்டரீகாக்ஷநாமகரான சோமயாஜி - உயர்
புண்ணியபவுத்திரரெனவருமவரேத யாம்புராசி
மண்டலமெச்சுநடாதூரம்மாள் கிருபைவாசி -- மாதுலர்
வாதிஹம்ஸாம்புதாசார்யரிடமே விசுவாசித்
தண்டியேசாங்கமாகவேதந்தனையு மோதினாரே
அதிநிபுணதையாக விதிகர்ப்பசூத்திரங்கள்
துதிசப்ததர்க்கமீமாம் ஸைதிலியசாஸ்திரங்கள்
அலங்காரங்காவ்ய நலம்பெறும்ஜோதிஷம்
பலங்களினுல்களுஞ் சொலும்திறமாகிய (சருவ)
சாங்கியயோகமென்னுங்கபிலமதத்தை முதற்காட்டி - குருமதஞ்
சைவஞ்சயினமொடுசாங்கரபாஸ் கரமுஞ்சூட்டி
ஓங்கும்பவுத்தமதம்யாதவமத மென்றுநாட்டிச் - சொல்லு
முலகிற்பரமதங்களானவற்றின் கருவமோட்டி
பாங்கதாயிராமாநுஜஸித்தாந்தநிலை நிறுத்தவே
படிதனிலேயுயர் நெடியவனேயிவர்
வடிவெனவேசொலும் படியதுவாய்வரு
பவரிவரெனவிசை யெவர்களுமுறைசொல
நவநலமுடனும திவளரவளர்பவர் (சருவ)
இதிஹாஸபுராணங்கள்தருமசாஸ்திரங்க ளினீதி -- கரைகண்டு
மிவைகளையெல்லாமப்புள்ளார்ஸன்னி தியிலோதி
விதிமுறைப்படியாகவேபஞ்சஸமுஸ் காராதி - யதுகொண்டு
வேதாந்தபாஷ்யமும்பாஷ்யகாரர்பிர பந்தரீதி
அதிகரித்தருளித்திருக்குருகைப்பிரான் புள்ளானிட்ட
வாறாயிரப்படி பேராம்ரகஸியம்
மாறாமலேவர நாராயணர்திரு
அருளதுபெருகிய பொருளிதுவெனவுரை
தருவுபயநிகம குருமணியெனவரு (சருவ)

விருத்தம்

இருபதெனுந்திருநக்ஷத்திரத்துக்குள்ளே
யிப்படியேஸகலகலாநிபுணரானார்
விரதஸமாவர்த்தனமுஞ்செய்திசைந்து
விவாகஞ்சத்குலத்திற்செய்தருளிமேலும்
பெருமாள்கோயினிலேவாழ்ந்திருக்குநாளிப்
புள்ளாராம்வாதிஹம்ஸாம்புதாசார்யர்தாம்
கருடமந்த்ரம்விதிமுறையாய்விண்டுசொல்லக்
கண்டிட்டாருபதேசங்கொண்டிட்டாரே.

இராகம் - காம்போதி - தாளம் - சாப்பு

கண்ணிகள்
மேதினிதனிலெங்கும் புகழ அவதரித்த
வேதாந்தகுரு ஆத்ம யோகருக்கே
மாதுலருமாகி யாசாரியருமான
வாதிஹம்ஸாம்பு வாகர்
திருத்தந்தையாகிய பதுமநாபர்தமக்குத்
திருவாய்மலர்ச்சிசெய்த பொருளே எல்லாந்
திருத்தியருளியாச்சான் சாம்ப்ரதாயங்களெல்லாந்
திருவுள்ளம்பற்றிட அருளே
தெரிசனப்ரவர்த்தக ராகும்படிகடாக்ஷஞ்
செய்யக்கொண்டாரேகவி வாதி சிங்கர்
பெருமாள்கோயில்தனி லெழுந்தருளியிருந்த
ப்ரபலஞ்சொல்லுவாரெங்குங் க்யாதி
பகர்பேரருளாளரை மங்களாசாசனம்
பண்ணிக்கொண்டங்குள்ள பேர்க்கு எல்லாம்
ஸகலசாஸ்திரங்களையும் பிரவசனம்பண்ணிக்கொண்டு
தாமேயிருந்துமுறை வார்க்கு
ஆசாரியர்ப்ரஸாதித்த கருடவுபாஸனையை
யனுஷ்டிக்கவேண்டியுள்ள மதிலே யெண்ணித்
தேசாதேசம்புகழுஞ் செழுநதிவயல்புகுந்
திருவஹீந்திரபுர மதிலே
கடுகியெழுந்தருளி நிகமாந்ததேசிகருங்
கருடநதியிலேநீ ராடி யங்கே
அடியவர்க்குமெய்யனா கியதெய்வநாயகனை
அணிமங்களாசாசன நீடி
ஏகாந்தஸ்தலமான அவுஷதாத்ரிமேலே
யேறியருளியந்தத்
தேகமதைப்பிளந்த அழகியசிங்கர் சன்னி
தியிலேயரசினிழ லிடத்தே
அசையா மனத்தராகிக் கருடமந்திரத்தையே
அனுசந்தித்துக்கொண்டிருந் தாரே யரு
ளிசைந்து பெரியதிரு வடியினாரங்கே
யெழுந்துப்ரச்சன்னராய்வந் தாரே.

விருத்தம்

தோதாநாயகிபாலர்திருமுன்பாகத்
தோன்றியேபெரியதிருவடிநயினாரும்
வேதாந்தஸித்தாந்தப்ரவர்த்தகந்தான்
விளங்குமிராமாநுஜன்றன்தரிசனத்தை
யேதானேவளர்த்திடவேவேண்டியிங்கே
யிவருக்கேஹயக்ரீவமந்திரத்தை
ஸாதாரணமதாகவுபதேசம்பிர
ஸாதித்தார்மூர்த்தியையும்சாதித்தாரே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக