வியாழன், 19 ஜூலை, 2007

ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்

தரு - இராகம் - தோடி - தாளம் - ஆதி .
பல்லவி
தரிசனபரம்பரைகளின்னந் - தெரியச்சொல்கிறேன்.
அனுபல்லவி
தரணிமீதினிலரங்கமாநகர் வருமெதீந்த்ரரைப்பரவிவந்திடும் (தரிசன)
சரணங்கள்
உபயவேதாந்த விபவங்களெல்லா
மபிவிர்த்தியாகிச் சுபகுணந்தந்து
நிபிடசீடர்கள் ப்ரபலமேகொண்ட
சபையெதீந்த்ர தபோநிதியவர் (தரிசன)
மாம்பலாக்கனி தேன்பொழிவைப்போற்
றாம்பிரசாதிக்குஞ் சம்பிரதாயமே
லாம்பிரகாசர்கி டாம்பியாச்சானென்
றாம்பிரபாகர ராம்புராதன (தரிசன)
ஆத்திரேயர்தன் கோத்திரத்தினில்
வாய்த்தனர்பிரண தார்த்தியபஞ்சனர்
சாத்திரரீதிகள் பார்த்தெதிராச
நேத்திரராகவே காத்திருந்தவர் (தரிசன)
விருத்தம்
மண்டலமெலாம்புகழுமெதீந்திரர்க்கே
மகாநசிகராகவந்தகிடாம்பியாச்சான்
தொண்டுசெய்துரகசியத்தின்பொருளையெல்லாஞ்
சொலக்கேட்டுத்தமக்குற்ற குமாரபாக்யம்
கண்டிடவிராமா நுஜன்றானென்றே
கருணையாய்த்திருநாமஞ்சாத்திப்பின்னும்
பண்டையுடையவர்பிரசாதித்ததெல்லாம்
பாலிப்பார்மிகவுமனுகூலிப்பாரே.
இதுவுமது விருத்தம்
மேதாவிராமா நுஜப்புள்ளானும்
மேதினியிற் ப்ரசித்தராயுபயமான
வேதாந்தப்ப்ரவர்த்தராமவர்குமாரர்
விபுதர்பத்மநாபரென்போர்கருணைதன்னா
லேதாரணியில்வந்துபிரபலங்கொண்டா
ரேராமாநுஜப்புள்ளானென் றோர்மைந்தன்
தோதாநாயகியெனுங்குமாரத்தியாருஞ்
ஜொலிக்கின்றார்பிறந்துபிரபலிக்கின்றாரே.
இதுவுமது
கண்ணிகள் - இராகம் - சௌராஷ்டிரம் - தாளம் - ஆதி.
பூமாதிருக்குங்கிடாம்பிபற்பநாபர்
புண்ணியசாலிகுமாரர் - எங்கும்
ராமாநுஜபுள்ளானென்றுசொல்லுந்திரு
நாமந்தரித்தவர்பேரர்.
வாலவயதுதொடங்கிச்சதுரராய்
மண்டலயீதினிலோங்கத் - தந்தை
பாலிற்சகலங்களானகலைஞான
பாரங்கதப்பெயர்தாங்க
சத்தமுந்தர்க்கமுமீமாஞ்சாதியாஞ்
சாஸ்திரமதிகரித்தாரே -- தம்மைப்
பெற்றவராலேயறிந்தபின்வேதாந்தா
பேக்ஷையுடனிருந்தாரே
இங்கிதைக்கண்டுமங்குள்ள பெரியோ
ரிவருமப்புள்ளாரோவென்றே -- அரு
ளங்ஙனேசெய்தாரேயன்றுமுதலாக
வப்புள்ளாராயினரன்றே.
இங்கிப்படித்தாமேசீரங்கப்புள்ளா
ரெனும்பத்மநாபருக்குவாய்த்த -- வேத
புங்கவரப்புள்ளார்தாமுமிருந்தார்
பொருந்துங்கதையின்ஞ்ஸசாற்ற.
செய்ய எதீந்த்ரர்க்குஞானபுத்திரரான
திருக்குருகைப்பிரான்புள்ளான் -- அவர்
துய்யவனாகியஎங்களாழ்வானுக்குச்
சொல்லவுமேமனதுள்ளான்.
மாறாதபாஷ்யமுதலானவேதாந்த
மார்க்கந்திருவாய்மொழிக்குத் -- துன்னு
மாறாயிரப்படியிட்டாரேயின்ன
மநேகபிரபந்தம்விழிக்கு
பாத்திரராக்கிரகசியமெல்லாம்
பரிந்துபிரசாதித்தாரங்கே -- மன
தேத்திப்பணிவிடைசெய்துமிருந்தாரே
யெங்களாழ்வானவரிங்கே.
எம்பெருமானாருடன்பிறந்தான்பிள்லை
யென்றுஞ்சரஸ்வதிபீடம் -- தானே
யம்புவிமீதினிற்பாஷ்யஸிம்ஹாஸன
வாதிக்கம்பெற்றவிசேடம்.
தேசப்பிரசித்தநடாதூ ராழ்வானுக்குச்
சேருந்திருப்பேரனாம் -- தேவ
ராஜப்பெருமாளுடையகுமாரர்
நடாதூரம்மாளென்னும்பேராம்.
சகலசாத்திரபாரங்கதத்துவமே
தாவிநடாதூராழ்வாரே -- உயர்
ஜெகப்பிரசித்தருமாகியிருந்து
சிறந்துபாரில்வாழ்வாரே.
அவர்தமையனாங்கந்தாடைத்தோழப்ப
ரனுமதிதானேகண்டு -- வெகு
சவரணையாகஎங்களாழ்வானுக்கே
தானபுத்திரகீர்த்தியமுங்கொண்டு.
சந்தேகநீங்கும்ஸ்ரீபாஷ்யமுதலான
தத்துவதரிசனரீதி -- இன்ன
மந்திரமுமாகியவாறாயிரப்படி
மற்றுமெல்லாந்தாமேயோதி.
எங்களாழ்வானைநடதூ ரம்மாளவ
ரிப்படியாசிரயித்தாரே -- புவி
யெங்கும்பிரசித்ததரிசனராகி
யிருந்துமகிமைபெற்றாரே.
நடாதூரம்மாள் - தரிசனம் - விருத்தம்
சீராகுநடாதூரம்மாளுந்தாமே
சிறந்திடுங்கிடாம்பியாப்புள்ளார்தமக்குஞ்
சீராமப்பிள்ளைதிருப்பேரனராஞ்
ஜெயவாக்கால்வென்றபட்டர்திருக்குமாரர்
பேரானதிசைவியாசபட்டருக்குப்
பின்னும்ஸ்ரீபாஷ்யமப்பங்கார்க்குந்தாமே
நாராயணன்றிருவடிப்பிரவர்த்தி
காட்டினார்ஸகலகலைநாட்டினாரே.
இதுவுமது -விருத்தம்
செப்பமாநடதூரம்மாள்சீர்பாதஞ்
சேர்ந்துவேதாந்தமெல்லாந்தெளிந்தேயேங்க
ளப்புள்ளார்தரிசனத்தைவளர்க்குநாளி
லவனியெங்குங்கொண்டாடவிருந்தாரிப்பால்
மைப்புயலிற்றிருமேனிமுதல்வனெங்கள்
வரதராஜப்பெருமாள்மகிழ்ச்சிபொங்கி
யெப்பொழுதும்வளர்பதியேகாஞ்சியென்ன
வேத்துவார்முனிவரெலாம்போற்றுவாரே.
காஞ்சி - மகிமை
தரு -இராகம் - எதுகுலகாம்போதி தாளம் - ஆதி
பல்லவி
காஞ்சிபுரி வாஞ்சி -- தந்தானே
காக்ஷிவரதர்காணியாக்ஷி
அனுபல்லவி
காஞ்சனநவரத்தினமே லாஞ்சிறைப்பாலி
கன்னல்சென்னல் - தென்னஞ்சோலைகதிகபுண்ணியவேலி (காஞ்சிபுரி)
சரணங்கள்
ககரமெனுமக்ஷரங் கமலாஸனன்பேரே
கண்டடைந்தாரிதானே காஞ்சியென்னுநேரே
தகைமைபெருகுமி தேதானத்திகிரியென்பாரே
ஸகலபாபங்கள் விமோசனஞ்செய்யுஞ்சீரே. (காஞ்சி)
எண்ணுவீரத்திகிரி யாமிந்தமலைமேலே
யெம்பெருமானைப் பிரமன்பூஜையொருகாலே
பண்ணினார்யாகமத்திலவிர்ப்பாகங்கொண்டார்பாலே
பரமபத்தராழ்வார்கள் பாடினதினாலே (காஞ்சி)
சூடியாரயோத்தியும் மதுரைமாயாநகர்
சொல்லுங்கச்சியவந்தி நந்துவாரகைப்பிரகாசி
நாடிமுத்திதாயகமாய் நாட்டியேழும்பேசி
நல்லவர்களெந்நாளு மேகொண்டவிசுவாசி (காஞ்சி)
கல்லுயர்ந்தநெடுமதில்சூழ் கச்சியென்றுங்கூடும்
காமருபூங்கச்சியென்று கண்டிசைகள்பாடும்
சொல்லுமணிமாடங்கள் சூழ்ந்ததிருநீடும்
தூயமுத்திப்பிரதமென்றேதொண்டர்கள் கொண்டாடும் (காஞ்சி)
புண்டரீகாக்ஷகர் அவதாரம்
விருத்தம்
சுயமதுரகனிசிறந்தமரமேலெங்குந்
தூயகுயில்கூவுமிளஞ்சோலைசூழ்ந்தெ
வயல்களெல்லாங்கரும்புசங்குசெந்நெல்வேயின்
மணிபரவிவேகவதிவடபாற்கொண்டே
சயிலவரமெனுமத்திகிரியாங்காஞ்சி
ஸத்யவிரதநாமக்ஷேத்திரம்விளங்க
வுயர்புண்டரீகாக்ஷதீக்ஷிதார்ய
ருண்டானார் ஹரிபதத்திற்றொண்டானாரே.
தரு - இராகம் - புன்னாகவராளி - தாளம் - ஆதி
பல்லவி
உண்டானாரேவரதர்பொன்னடித்தொண்டானாரே.
அனுபல்லவி
மண்டலமீதினில்வரும் பண்டிதர்களாலேபுகழ்
கொண்டதிருநாமம்பெற்ற புண்டரீகாக்ஷதீக்ஷிதர் (உண்)
சரணங்கள்
அனன்னியப்பிரயோசனராய் -- வருணாச்சிரமாசார
மதநிலைகள்தவறார்
மனநிலையின்மாறாமலேகனநியமமாயரியை
யனுதினமுநேராயாராதனவிதிகள்தாமேசெய்பவர் (உண்)
செகம்புகழுஞ்சோமயாசி -- அக்னிஷ்டோமாதிவெகு
மகஞ்செய்வதினாற் பிரகாசி
பகவன்றன்னை நாரணனை மிகவந்தனைசெய்து வேதாந்
தகைவலியநாடி வாழ்வேமிகைவுள்லவராகவேதாமும் (உண்)
வபாபரிமளவுல்லாச -- வாசந்தருமதா
ஸபானனவரதராஜ
கிருபாநிதி யிலரேவசுதேவபாலக்ருஷ்டிணமூர்த்திபரம
புருஷராமெனவேதுதிஞானப்பிரபாகரருமிவரேயெனவந்து (உண்)
அநந்தசூரி அவதாரம் - விருத்தம்
ஆனைமலைவரதனுக்கேபிரீதியாக
வநேகயாகங்கள் செய்தார் ஸோமயாஜி
தானதனாற்சரீரவாரோக்கியமின்னந்
தழைக்கின்றபோகங்களயிஸ்வரியங்கள்
ஞானங்கண் மேன்மேலா வரதர்தந்து
நல்லகுமாரனையு மங்கேதந்தாரந்த
வானுஷங்கிகப்பலமாய்வந்தவேத
வாரிதான் உயரனந்த சூரிதானே.
தரு - இராகம் - சங்கராபரணம் - தாளம் - சாப்பு
பல்லவி
உதயஞ்செய்தனரே -- அநந்தசூரிய -- ருதயஞ்செய்தனரே
அனுபல்லவி
உதயஞ்செய்துகச்சிவ ரதர்தந்தகிருபைகொண்டுன்
னதபுண்டரீகாக்ஷ தீக்ஷிதர்தந்தசுகுமாரர் (உதயம்)
சரணங்கள்
தாதைசெய்தசோம யாகத்தின்பலனே
தழைக்குங்கச்சிவரதர் தருங்கிருபைநலனே
மேதினிதனிலெங்கும் வேதமானதுவிளங்கி
நீதிசாரமிதுவென்றே க்யாதியாயறிந்திடவே (உத)
ஜொலிக்குந்காந்தியுள்ள சுகிருதஞ்செய்தேகஞ்
சுபக்கிரக பலமிக்க குருசந்திரயோகம்
பலிக்குமவரெங்கும்பிர பலிக்கும் வரதரையஞ்
சலிக்குந் திருக்கையாளர் கலிக்குப்புதுமையாக (உத)
சுருதிதன்னிலேபாரங் கதராகினரே
தொடுத்தெல்லாஞ்சித்தாந் தரீதியறிந்தனரே
குருகுலவாசமது உரிமையாகவேசெய்து
பிரமசாரிவிரத மருவினவருமிங்கே.
விருத்தம்
இப்படியேசித்தாந்தரீதியெல்லாம்
இசையநந்தாசாரியர்க்குத்தந்தையானார்
செப்பமாங்கிடாம்பிபத்மநாபரென்னும்
ஸ்ரீரங்கவப்புள்ளார்குமாரியாகி
அப்புள்ளார்தங்கையுமாய்வந்ததோதா
ரம்மனையேதிருக்கலியாணந்தான்செய்து
வைப்பவேதர்மபத்னியுடனேகூடி
வருகின்றார்வரதரருள்பெறுகின்றாரே.
கலிநிலைத்துறை
பண்கண்டேயறிவதற்குமரியராய்ப்பத்தபராதீனராகி
விண்கண்டதேவர்கட்குந்தேவரா மிவரெனவேவேங்கடத்துட்
டண்கண்டகோனேரித்தென்கரைமேற் கலியுகத்திற்சகலபேற்குங்
கண்கண்டதெய்வமென்றே வேங்கடாசலபதியைக்கருதுவரால்.
தரு - இராகம் - பூரிகல்யாணி - தாளம் - ஆதி.
பல்லவி
தெள்ளியார்வணங்குமலை - திருவேங்கடமலை
ஸ்ரீநிவாஸனுறைமலையே.
அனுபல்லவி
வெள்ளிநிறங்கொண்டபுள்ளிமானோடியோடித்
துள்ளிவேங்கைப்புலியைத்தள்லிவிளையாடுமலை.
சரணங்கள்
விளங்கும்பிர்மாண்டத்திலொருபக்கத்திலுமிந்த
வேங்கடாத்திரிக்கு நிகரேது
வளங்கொண்டளவில்லாதசருவரத்தினமய
கிரிமண்டலத்திலபுண்ணிய ஸ்தலமீது
களங்கமில்லாஸ்வயம்புஐந்துபனிடபரூப
வேங்கடபூதரமென் றெங்குமோது
உளங்கொண்டபிரிதிநாராயணர்க்கிந்தமலை
யுன்னதப்பிரஸன்னமிகுசொன்னமுயர்நன்னளினம் (தெள்ளி)
பாற்கடல்வைகுந்தமிரவிமண்டலமத்தி
பகருமிந்தமூன்றெனுந் தானம்
பார்க்கிலதிகமெங்களலர்மேன்மங்கைரமண
பரமபுருஷர்க்கு நிதானம்
தீர்க்கமிதுவரமென்றேயாழ்வார்கள்பாடல்பெற்ற
திவ்யதேசம்விளங்கும் விமானம்
ஏற்குங்கோனேரித்தீர்த்தமகிமையுமதிந்தென்பா
லெந்தாதைவைகுந்தாதிபனந்தாவிலாசந்தானிது (தெள்ளி)
கலியுகத்தினிலிந்தவுலகந்தனிலேயார்க்குங்
கண்கண்டதெய்வமாக நின்றே
வலியடிமைகொண்டுவினையெல்லாந்தீர்த்துமவர்
மனதபீஷ்டந்தருவ தொன்றே
பலவும்வேங்கடத்தாய்நால்வேதப்பண்ணகத்தாயென்று
பரமபத்தர்பாடினா ரென்றே
சொலவும்பூமகளுடன்கூடிக்கண்ணன்வளருஞ்
சுந்தரமிகுந்துபலகிரந்தமறையிந்தமலை (தெள்ளி)
விருத்தம்
திசைதிசையின் வேதியர்கள்சென்றிறைஞ்சுஞ்
திருவேங்கடத்தானே தெய்வமென்றே
அசையாதாராதனஞ்செய்திருந்தாரெங்க
ளநந்தாசாரியரிப்பால்வேங்கடேசன்
உசிதமாந்தரிசனத்தின்விரோதமெல்லா
மொழிப்பதுநாவுடையராலாகவேண்டி
இசையுள்ளதிருமணியாழ்வானையிப்ப
டிச்செய்தாரவதரிப்பிக்கச்செய்தாரே.
கலிநிலைத்துறை
திருவாழிதிருச்சங்கைத்தொண்டமான்
சக்கரவர்த்திக்கீந்தேயச்சத்
துருவெல்லாந்துடைத்ததுபோல்வேங்க
டேசனம்மநந்தசூரிபாலே
அருள்செய்துதிருமணியாழ்வாரை
யவதரிப்பிக்கவன்பாயெண்ணி
யொருநாளிராத்திரிச்சொப்பனத்தி
லெழுந்தருளியதும்யோகந்தானே.
தரு - இராகம் - மத்தியமாவதி - தாளம் - ஆதி
பல்லவி
மனந் தனில்மறவேனே - மகிமையை
மனந் தனில்மறவேனே.
அனுபல்லவி
மனந்தனில்மறவாதவநந்தாசாரியர்சொப்
பனந்தனிலெழுந்தருளி நந்தநந்தனர்வந்தார் (மன)
சரணங்கள்
நீர்நம்மைத்திருவடி தொழவாருமலைமேலே
நிறந்தகிருபைசெய்தும்மை யாள்கிறோம்பரிவாலே
சேர்வைதந்துசந்தானந் தருவோமென்றதனாலே
தெளிந்தநந்தாசாரியருந்தேவிகட்குச்சொன்னதாலே (மன)
தம்பதியிவர்கள்தாமே நலமாஞ்சொப்பனம்பண்டு
தரிசனத்தையனுசந்தித் திருந்தாரன்புகொண்டு
எம்பெருமானந்த இரவினிற்கண்முன்கண்டு
இவர்கட்கருள்செய்தாப்போ லெவர்களிடத்திலுண்டு (மன)
அதிசயமிதுவென்று பெருங்கூட்டத்துடன்கூடி
அநந்தாசார்யருந்தேவிகளு
மன்பரசுநாடி
பதியென்னுந்திருமலைக் கெழுந்தருளிகொண்டாடி
பண்பார்ஸ்ரீநிவாசனைப் பணிந்தவகையைப்பாடி (மன)
விருத்தம்
திறமைசேரநந்தாசாரியர்க்குந்தோதா
தேவிகட்குஞ்சொப்பனத்தில்வேங்கடேசன்
சிறுபிள்ளையாய்கோயினின்றும்வந்து
தேவனையீர்நம்மைநிகர்புத்திரன்றன்னை
உறுதியாயுங்களுக்குத்தந்தோமிந்த
வுயர்ந்ததிருமணியைக்கைகொள்வீரென்ன
மறைவல்லோர்திருமணியையிருகையேந்தி
வாங்கினாரற்புதமெய்ப்பாங்கினாரே.
இதுவுமது
திருமணியாழ்வாரையிவர்கையில்வாங்கித்
தேவிகள்கையிற்கொடுக்கவவரும்வாங்கி
யொருமையாய்நிற்கிறபோதிந்தப்பிள்ளை
யும்மணியைவிழுங்கெனவேவிழுங்கக்கண்டார்
இருவர்களுமிப்படிக்கேகண்டதாக
விசைந்துமனதன்புடனேயுற்றார்கட்கே
அருமையெல்லாமருள்செய்தார்வேங்கடேச
ராட்கொண்டார்நல்லதிருநாட்கொண்டாரே.
தரு - இராகம் - கலியாணி - தாளம் - ஆதி
பல்லவி
அதிசயமின்னமென்னசொல்லுவேன் -- கண்டாவதார
அதிசயமின்னமென்னசொல்லுவேன்
அனுபல்லவி
துதிசெய்யுமநந்தாசாரியருக்குந்தோதாநாயகிதமக்குமேதிருப்
பதிவேங்கடேசன்கிருபைசெய்தார்புண்ணியபலமும்
நலமுங்குலமும்பலமும்
சரணங்கள்
தாரணிக்கொருபுதுமையானது சொல்லுகிறேன்மாலே -- வேங்கடபதி
சந்நிதியிலேதிருமணியாழ் வானில்லாமையாலே
பேருயர்ந்திடுஞ்சந்நிதிநம்பி மார்களின்மேலே -- அதிசங்கைபண்ணிப்
பிரபலராநந்தகொத்துப் பரிசனங்களுமொருக்காலே
பாரிக்கும்படியாகமுன்னமே பண்புபெரியகேள்விஜீயர்க்கு
நேரிட்டநந்தாசாரியர்கொண்டரீ திநீதிசாதித்தோதிய (அதி)
சுத்தராகியதானத்தரர்களுக் கெம்பெருமானே -- முன்னிராத்திரிச்
சொப்பனத்திலேயருளிச் செய்ததிப்படித்தானே
ஒத்திருந்ததால்தேசபதிகளுக்கின்னஞ்சொல்வானே -- நம்பிக்கைகொண்டு
உண்மைமானுஷலீலைசெய்தது வேங்கடக்கோனே
பத்தியுடனேதம்பதிகளின் பாக்கியவிசேஷங்களைச்சொல்லியே
மற்றுமெல்லாருங்கூடிவாழ்த்திடு மங்களங்களெங்குமெங்குமே (அதி)
எண்ணின்பலன்பலித்ததம்பதி யிவர்களுந்தேறிப் -- பெருமாள்கோயிலுக்
கெழுந்தருளியேவேங்கடபதி மகிமையைக்கூறி
புண்ணியவதிதோதாநா யகிதவமதுவீறி -- மணிவிழுங்கின
பொருந்துநாள்முதற்றிரு வயிறதுவுரப்பதுமீறி
கண்ணனைமணிவண்ணனை நேமிக்கையனைநீலமெய்யனையுயர்
பண்ணகத்தனைமனதி லிருத்திப்பாடிக்கூடிநாடித்தேடிய (அதி)
விருத்தம்
தேவகிபிராட்டியார்தாமுமுன்னா
டிருவயிற்றினாரணனைத்தரித்தாப்போலும்
பாவனையாய்க்காந்தினியச்மகரையின்னம்
பராசரரைத்தரித்தாற்போற்பன்னிரண்டாண்டு
பூவுலகிற்றிருமணியாழ்வாரையெங்கும்
புகழ்தோதாநாயகியுந்தரித்தாரிப்பால்
நாவுடையரானகண்டாமணியாழ்வாரும்
நண்ணினாரவதாரம்பண்ணினாரே.
தேசிகர் திருவவதாரம்
தரு - இராகம் -சாவேரி - தாளம் -- ஆதி
பல்லவி
அவதாரஞ்செய்தாரே -- கண்டாமணியாழ்வார்
அவதாரஞ்செய்தாரே.
அனுபல்லவி
புவனமெங்குஞ்செழிக்கப் புண்ணியவான்கள் பிழைக்கச்
செவையாய் ராமாநுஜ சித்தாந்தமெங்குந்தழைக்க (அவ)
சரணங்கள்
கருணைமிகப்பெருகி விபவமென்னும் வருஷத்தில்
கதிக்கும்வளமிகுந்த கன்னியென்னுமாதத்தில்
திருவேங்கடமுடையான் ப்ரசன்னசன்னிதானத்தில்
திருக்கலியாணத்தில் தீர்த்தவாரித்திருவோணத்தில் (அவ)
அல்லும்பகலுந்துதிப் பார்பவங்கள்போக
அவனியில்பிர்மத் துவேஷிகள்நிவாரணமாக
சொல்லுந்தரிசனவி ரோதநிரசிதமாகத்
தூப்புற்குடியநந்தா சார்யர்குமாரராக (அவ)
சர்வதந்த்ரசுதந்த்ரர் தாமென்றுகாட்டவே
சகலகலைஞானமுந் தன்னுரைநாட்டவே
உறுதிகொண்டுதான்பர வாதிகளைஓட்டவே
உபயவேதாந்தகுரு வென்னும்பேர்சூட்டவே (அவ)
சீதாராமரிவர்க ளெனவேபுகழ்சிறந்து
திருவநந்தாசார்யார் தமக்குமனதுகந்து
தோதாரம்மன்வருஷம் பன்னிரண்டுஞ்சுமந்து
சுகிர்தமதனாற்பெற்ற சுகுமாரராகிவந்து (அவ)
விருத்தம்
அவதரித்த குமாரருக்கு ஜாதகன்ம
மன்பாகச்செய்தருளியநந்தாசார்யர்
தவமறைதேர்பூசுரோத்தமர்களேத்தத்
தான்றிருவேங்கடமுடையான் திருநாமத்தை
இவருக்கே திருநாமமாகச்சாத்தி
யிசைசங்குவாய்வைத்துக்காதுகுத்திக்
கவிவாதிகேசரியைச் சூரியன்முன்
காட்டினாரன்னையுஞ் சீராட்டினாரே.
இதுவுமது
ஆறாகமூன்றானமாதந்தன்னி
லருக்கன்றந்தரிசனமுநாலாமாதம்
மாறாமற்சந்த்ரதரிசனமுமின்னம்
வருமன்னதரிசனமுஞ்செய்துவைத்தே
ஆறானமாதத்திலன்னமீந்து
மதற்குமேலாண்டு நிறைகலியாணந்தான்
பேறாகச்செய்துவைக்கவளர்ந்தார்தூப்புற்
பிள்ளைதான் வேதாந்தக்கிள்ளைதானே.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக