புதன், 3 அக்டோபர், 2018

இராமாயண தருமம்

2.

ஸ்ரீவால்மீகி ராமாயணம்

ஆரண்ய காண்டம் –– சருக்கம். 37. சுலோகம் 13

“ராமோ விக்ரஹவான் தர்ம: ஸாது: ஸத்ய பராக்ரம:'””

"ஸ்ரீராமன் உருவங்கொண்ட தருமம்போலும், நற்குணமுடையோனும், உண்மையான தோள்வலியுற்றவனுமாகின்றனன்" என இராவணனுக்கு, ராமத்வேஷியான மாரீசன் உரைத்த வசனம்.

யுத்த காண்டம் சரு.28. சுலோ.19

யஸ்மின் ந சலதே தர்மோ யோ தர்மம் நாதிவர்த்ததே| ஸ ஏஷ ராம:

எவரிடமிருந்து தருமம் சலிக்கவில்லையோ, எவர் தருமத்தைவிட்டு விலகவில்லையோ, அவரே இந்த இராமபிரான் என, இராவணனைப் பார்த்து சுகனுடைய வசனம்.

யுத்த கா. சரு.91. சுலோ. 69

தர்மாத்மா சத்ய சந்தஸ்ச ராமோ தாசர திர்யதி|
பௌருஷே சாப்ரதித்வந்த: ததைனம் ஜஹி ராவணிம்|||

"ஸ்ரீராமபிரான் தர்மஸ்வரூபி என்பதும், சொன்னசொற் தவறாதவர் என்பதும், இணையற்ற பராக்ரமம் உடையவர் என்பதும் உண்மையாயின், இந்த பாணம் இந்திரஜித்தை ஹதம் செய்யட்டும் " என சபதபூர்வமாயுரைத்த, இளைய பெருமாளுடைய வசனம்.

ஸ்ரீபாகவதம் - ஸ்கந்தம் 9 -- அத்யாயம் 10 -- சுலோகம் 55

"ஏக பத்நீவ்ரததரோ ராஜர்ஷி சரித: சுசி: |

ஸ்வதர்மம் க்ருஹமேதீயம் சிக்ஷயந்ஸ்வய மாசரந் ||'”

"இராமபிரான் ஏகபத்நீ வ்ரதத்துடன், சுத்தராக கிருஹஸ்த தர்மத்தைத் தாம் அனுஷ்டித்தார். ஜனங்களும் அதனைக் கண்டு அவரவர்கள் தர்மத்தை விடாமல் செய்தார்கள்.” என பரீக்ஷித்து மஹாராஜனை நோக்கி, சுகப்பிரம்ம ரிஷியின் வசனம்.

கம்ப ராமாயணம்

“தோன்றிய நல்லற நிறுத்தத் தோன்றினான்” (அயோத்தி நகர் நீங்கு. 163)

நல்லற நிறுத்த நணுகித்,
தாமராவணை துறந்து தரை நின்றவரை” (ஆரணி.விராத.30)

இராமபிரான் உலகத்தில் தருமத்தை நிலைநிறுத்தவே அவதரித்திருப்பதாக, கவிக்கூற்று.

“சூரறுத்தவனுஞ் சுடர் நேமியு
மூரறுத்த வொருவனு மோம்பினும்
ஆரறத்தி னொடன்றி நின்றாரவர்
வேரறுப்பென் வெருவன் மினீரென்றான்.” (ஆரணி – அகத்தி 22)

வெம்புகண்டகர் விண்புக வேரறுத்
திம்பர் நல்லறஞ் செய்ய வெடுத்தவிற்
கொம்பு முண்டருங் கூற்ற முமுண்டுங்க
ளம்பு முண்டென்று சொல்லுநம் மாணையே (கிட்கிந்தா – கிட்கிந்தை 4)

உலகத்தில் துஷ்ட நிக்கிரகமும், தர்ம ஸம்ஸ்தாபனமும் செய்வதற்காக, தாம் அவதரித்திருப்பதாக, இராம பிரானுடைய வசனம்.

“பின்னையேது முதவுந்துணை பெறாளுரை பெறாண்
மின்னையே யிடைநுடங்கிட விரைந்து தொடர்வா
னன்னையே யனையவன் பினாவோர் கடமைவிட்
டென்னையே நுகர்தி யென்றன னெழுந்து விழுவான் (ஆரணி. விராத. 39)

இராம லட்சுமணர் உலகத்துக்கெல்லாம் தாயைப் போன்ற அன்பினையுடைய தருமசுவரூபிகள் என சீதாபிராட்டியின் வசனம்.

ஓயாத மலரயனே முதலாக வுளராகி
மாயாத வானவர்க்கு மற்றொழிந்த மன்னுயிர்க்கு
நீயாகின் முதற்றாதை நெறிமுறையா லீன்றெடுத்த
தாயாவார் யாவரே தருமத்தின் றனிமூர்த்தி

பிரமதேவன் முதலான சகல தேவர்களுக்கும், உலகத்திலுள்ள உயிர்களுக்கும், இராமபிரான் முதல் தந்தையெனவும், தருமஸ்வரூபி எனவும், விராத ஸ்தோத்திரம்.

இருவர் மானிடர் தாபத ரேந்திய
வரிவில்வாட் கையர் மன்மதன் மேனியர்
தருமநீரர் தயரதன் காதலர்
செருவி னேரு நிருதரைத் தேடுவார்.

ஒன்று நோக் கலரும் வலியோங்கற
னின்று நோக்கி நிறுத்து நினைப்பினர்
வென்றி வேற்கை நிருதரை வேரறக்
கொன்று நீக்குது மென்றுணர் கொள்கையார். (ஆரணி. கா. 4,5)

இராம லக்ஷ்மணர்கள் தரும சிந்தை உடையவர்கள், சிறந்த தருமவழியிலே தாங்கள் நின்று ஆராய்ந்து அத்தருமத்தை உலகமெங்கும் நிலைபெறச் செய்யுங் கருத்துடையவர்கள் என கரனிடம் சூர்ப்பனகை வசனம்.

“சங்கு சக்கரக் குறியுள தடக்கை யிற்றாளி
லெங்கு மித்தனையிலக்கணம் யாவர்க்குமில்லை
செங்கண் விற்கரத்தி ராமனத்திரு நெடுமாலே
யிங்குதித்தன விண்டற நிறுத்துதற் கின்னும்

கோதண்டபாணியான இராமன், தர்ம ஸம்ஸ்தாபனத்தின் பொருட்டு இங்கு திருவவதரித்த ஸ்ரீமஹாவிஷ்ணு என்பதாக சுக்ரீவ மஹாராஜனிடம் தெரிவித்த நவவ்யாகரண பண்டித ரான திருவடியின் வசனம்.

“உழைத்த வல்லிருவி னைக்கூறு காண்கலா
தழைத் தயருலகினுக் கறத்தினாறெலா
மிழைத்தவற் கியல்பல வியம்பி யென்செய்தாய்
பிழைத்தனை பாவியுன் பெண்மையா லென்றான்.”

பலபிறப்புகளில் தாம் செய்து சேர்த்த கொடிய கருமங்களை ஒழிக்கும் உபாயத்தைக் காணாமல் வருந்திக் கதறுகின்ற உலகத்தவர்கள் உய்யுமாறு அவதரித்துத் தர்ம மார்க்கங் களை எல்லாம் தான் அனுஷ்டித்துக் காட்டும் புருஷோத்தம னான இராமபிரான், என்பதாக, தாரையிடம் வாலியின் வசனம்.

அறமன்னானுட னெம்பியன்பினோ
டுறவுண்ணா வுயிரொன்ற வோவினான்
பெறவொண்ணாத தொர் பெற்றி பெற்றவற்
கிறவென்னா மிதின்ப மியாவதோ. (கிட்கி. சம்பாதி 45)

தர்மஸ்வரூபியான இராமபிரான் திறத்தில் ஜடாயு உயிரைக் கொடுக்க நேர்ந்தது பெரும் பாக்கியமென்று வானரரிடம் சம்பாதி வசனம்.

இத்யாதி வசனங்கள் ஸ்ரீமத் ராமாயணத்தில் ஸ்ரீராம சரிதத்தினாலே, தரும ஸ்வரூபமும், தர்மானுஷ்டானமும் வர்ணிக்கப் பட்டிருக்கின்றன என்பதற்குப் போதிய சான்றாகும்.

(தொடர்வது இராமாவதார காலம்)

.


     

ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

இராமாயண தருமம்


IMG_0001ஸ்ரீவில்லிபுத்தூர் அருகிலுள்ள சிந்தாமணி கிராம கர்ணமாக இருந்தவர் ஸ்ரீ எஸ்.கே. ரங்கஸ்வாமி அய்யங்கார். (அதாவது இன்றைய VAO) . இவர் எழுதி 1934ல் வெளியான நூல் இராமாயண தருமம். இராமாயணத்திலே மிக ஆழங்கால்பட்டுத் தான் அனுபவித்தவற்றை இப்படி ஒரு அருமையான நூலாக்கியிருக்கிறார். இந்நூலை ஸ்ரீஹயக்ரீவ சேவக ஆசிரியர் மிகுந்த ஆசையுடன் தன் பத்திரிகையில் தொடராக வெளியிட ஆரம்பித்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இப்போது பல மாதங்களாக அந்த இதழ் வெளிவராத சூழ்நிலையில் இங்கே தொடராக பதிவு செய்ய ஆரம்பிக்கிறேன்.
சில முன்னுரைகள் படங்களாக
IMG_0001IMG_0002IMG_0003IMG_0004IMG_0005IMG_0006IMG_0007IMG_0008IMG_0009IMG_0010IMG_0011

இராமாயண தருமம்.
ராமாயணம் என்ற சொல் வடமொழி.
ராமஸ்ய அயனம் எனப்பிரிந்து இராம சரிதமெனவும்,
ராம: அய்யதே அனேன இதி = ராமாயணம் எனப்பிரிந்து இதனால் இராமன் அடையப் படுகிறான் எனவும் பொருள் படும்.
இன்னும் ரமாய இதம் சரிதம் = ராமம், தஸ்யாயன மிதி, ராமாயணம் எனப்பிரித்து, சீதாப்பிராட்டியின் சரிதமெனச் சாற்றலுமுண்டு.
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸநம் ஸீதாயாச் சரிதம் மஹத்
மேன்மையான ஸீதாசரித்திரமாயும், மஹாகாவ்யமுமான ராமாயணத்தை என்பது இதை வலியுறுத்தும்.
தருமம் உலகத்தைத் தரிப்பதால், போஷிப்பதால், தருமமென்று சொல்லுகிறார்கள்.
வேத: ஸ்ம்ருதி: ஸதாசார: ஸ்வஸ்யச ப்ரியமாத்மான:
ஏதத் சதுர்விதம் ப்ராஹு: ஸாக்ஷாத் தர்மஸ்ய லக்ஷணம் என தருமத்திற்கு நான்கு ப்ரமாணங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அதாவது, ஒரு விஷயம், தருமமென நிச்சயிப்பதற்கு அது (1) வேதோக்தமாக இருக்கவேண்டும் அல்லது (2) ஸ்ம்ருதியிலாவது கூறப்பட்டிருக்க வேண்டும். அல்லது (3) அது ஸத்புருஷர்களால் அனுஷ்டிக்கப் பட்டதாக இருக்கவேண்டும்.  அல்லது (4) அது மனதிற்கு இனிப்பாகவும், ஆனந்தகரமாகவும் இருக்கவேண்டும்.
இந்த நான்கு ப்ரமாணங்களுக்கு ஸ்ரீராமாயணம் பொருத்தமாக இருக்கிறதோ என்னில்,
முதலாவது :-- வேதம்
வேதமு மற்றுஞ் சொல்லு மெய்யற மூர்த்தி வில்லோன் (கம்பர்)
கைவிலேந்தி இலங்கையிற் பொருதாரன்றே
மறைகளுக் கிறுதியாவார்.       (கம்பர்)
என்றபடி, வேதத்தினால் அறியும்படியான பரமபுருஷன், ஸ்ரீராமனாக அவதரித்தபோது,
1. வேத:ப்ராசேதஸாதாஸீத் ஸாக்ஷாத் ராமாயணாத்மநா
   அவரை அறிவிக்கிற வேதமும், வான்மீக முனிவரினின்றும் நேராய் ஸ்ரீமத் ராமாயண ஸ்வரூபத்தினாலே அவதரித்தது.
2. இதம்பவித்ரம் பாபக்னம், புண்ணியம் வேதைச்சசம்மிதம்
    இந்த ஸ்ரீராமசரிதமானது, பரிசுத்தம் செய்யத்தக்கதும், பாபங்களை நாசஞ்செய்ய வல்லதும், நன்மைகளை விளைவிக்கத் தக்கதும், வேதங்களோடு சமானமானதுமா யிருக்கின்றது.
    இந்த இரண்டு ஆதாரங்களினால், முதலாவது பிரமாணமாகிய வேதத்திற்குப் பொருத்தமாகிறது.
இரண்டாவது:-- ஸ்ம்ருதி
தர்ம சாஸ்த்ர ரதாரூடா வேதகட்கதரா த்விஜா: |
க்ரீடார்த்தமபி யத் ப்ரூயு: ஸதர்ம: பரமஸ்ம்ருத:|| (போதாயனாச்சார்)


    வேதத்தை நன்கு அப்யசித்தவர்கள் ஸத்புருஷர்கள். அவர்களால் வேதார்த்தங்களைச் சுருக்கிச் சொல்லப் பட்டனவை களே ஸ்ம்ருதிகளாம்.
ஸ்ரீராமாயணம் (2வது சருக்கம்)
மச்சந்தாதேவ தே ப்ரஹ்மந் ப்ரவ்ருத்தேயம் ஸரஸ்வதீ|
ராமஸ்ய சரிதம் ஸர்வம் குருத்வம் ரிஷிஸத்தம ||
ந தே வாகந்ருதா காவ்யே காசிதத்ர பவிஷ்யதி||

    (இதன் பொருள் நான்முகக் கடவுள் வான்மீகரை நோக்கி “நம்முடைய சங்கல்பத்தினாலேயே இந்த ஸரஸ்வதி உம்முடைய வாக்கிலிருந்து தோன்றினாள். நீர் ராம சரிதத்தை ஒரு பிரபந்தமாகச் செய்யக்கடவீர். நீர் செய்யுங் காவியத்தில் ஒரு சொல்லும் பொய்யாகாமலிருக்கும்.” என்றருளிச் செய்த பிரகாரம் வான்மீக முனிவரால் இராமாயணம் செய்யப் பட்டதினால், இதை ஒரு ஸ்ம்ருதியாகச் சொல்லத் தடையில்லை.

மூன்றாவது :-- ஸதாசாரம் = (ஸத்புருஷரால் அனுஷ்டிக்கப் பட்டது)

    பாலகாண்டம் முதலாவது சருக்கத்தில் 2 முதல் 4 சுலோகங்களால் வான்மீக முனிவர் நாரத மகரிஷியை நோக்கி, “சுவாமி! இவ்வுலகத்தில், இக்காலத்தில், சகல கல்யாண குணங்களும் சவுசீல்ய குணமும் மற்றும் அனேக குணங்களுடன் தருமத்தை நன்றாயறிந்த சத்புருஷனைக் கேட்டறிய அடியேன் விரும்புகிறேன். அடியேனுக்கு தேவரீர் அருளிச் செய்யவேண்டும்” என்று வினாவினபோது நாரதமகரிஷி மிகுந்த களிப்புடன் ‘ஓய் முனிவரே! நீர் கேட்ட குணங்களெல்லாம் பொருந்திய புருஷனைச் சொல்லுகிறேன் கேளும்”

இக்ஷ்வாகு வம்ஸ ப்ரபவோ ராமோநாம ஜநை:ச்ருத:|
இக்ஷ்வாகு குலத்தில் அவதரித்த ஸ்ரீராமபிரான் என்பவர்தான் என விடையளித்திருக்கிறார். இதனால் ஸ்ரீராமபிரான் ஸத்புருஷன் என்றும் அவரால் அனுஷ்டிக்கப் பட்டவை ஸதாசாரம் என்றும் ஏற்படுவதால் மூன்றாவது ப்ரமாணமும் பொருத்தமாகிறது.
நான்காவது:—ஆத்ம ஸந்துஷ்டி
பாட்யே கேயேச மதுரம்
ஹலாதயத் ஸர்வகாத்ராணி மநாம்ஸி ஹ்ருதயாநிச | (ராமாயணம்)
    இந்த இராமாயணம் மனதிற்கும் இருதயத்திற்கும் மிக்க களிப்பாக இருக்கின்றது என இராமாயணம் 4-வது சருக்கத்தில் கூறப்பட்டிருக்கிறது.
    இதனால் நான்காவதான ப்ரமாணமும் பூர்த்தியாகின்றது.
இனி ஸ்ரீராமாயணத்தில் தருமங்கள் வருணிக்கப் பட்டிருக்கின்றன வென்பதற்குரிய ஆதாரங்களைக் கவனிப்போம்.  
(தொடரும்)







வெள்ளி, 7 செப்டம்பர், 2018

google-site-verification: googleba9fc2d874a4cc05.html

வியாழன், 31 மே, 2018

அன்பில் ஸ்ரீ கோபாலாசார்யார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்



2. உவர்ந்த வுளத்த னாயுல கமளந் தண்டமுற
 நிவர்ந்த நீண்முடி யனன்று நேர்ந்த நிசாரரைக்
 கவர்ந்த வெங்கணைக் காகுத் தன்கடி யார்பொழி
                                                                   லரங்கத் தம்மானரைச்
 சிவந்த வாடையின் மேற்சென்ற தாமென் சிந்தனையே.

உவந்த உள்ளத்தன் ஆய்மகிழ்ச்சியோடு கூடிய மனத்தை உடையவனாய்க்கொண்டு; உலகம் அளந்துமூவுலகங்களையும் அளந்து; அண்டம் உறஅண்டகடாஹத்தளவும் சென்று முட்டும்படி; நிவர்ந்தஉயர்த்தியை உடைய; நீள்முடியன்பெரிய திருமுடியை உடையனாய்; அன்றுமுற்காலத்தில்; நேர்ந்தஎதிர்ந்து வந்த; நிசாரரைராக்ஷஸர்களை; கவர்ந்தஉயிர்வாங்கின; வெம்கணைகொடிய அம்புகளை உடைய; காகுத்தன்இராமபிரானாய்; கடி ஆர்மணம் மிக்க; பொழில்சோலைகளை உடைய; அரங்கத்துஸ்ரீரங்கத்தில் எழுந்தருளியிருப்பவரான; அம்மான்எம்பிரானுடைய; அரைகுருவரையில் (சாத்திய); சிவந்த ஆடையின் மேல்பீதாம்பரத்தின் மேல்; என் சிந்தனைஎன்னுடைய நினைவானது; சென்றது ஆம்பதிந்ததாம்.

உவந்த உள்ளத்தனாய்
(1) ‘செழுமறையின் முதலெழுத்துச் சேர்ந்த கோயில்என்றும்,प्रणवाकारं रंगम् (ப்ரணவாகாரம் ரங்கம்)  என்றும் சொல்லுகிறபடி, முதல் மூன்று பாசுரங்களும் ப்ரணவாவயத்வாக்ஷரங்களோடு தொடங்குகின்றன.

2) பாதம் நீண்டுவந்ததற்குக் காரணம் உள்ள முவந்ததே என்கிறார். திருவடியின் ஸ்வபாவம்ஓரெண்டானுமின்றியே வந்தியலுமாறு உண்டானை உலகேழும் ஓர் மூவடி கொண்டானைஎன்றபடி நாம் எண்ணாமலும் அனுக்ரஹிப்பதாம். திருவடியின் ஸ்பர்ஸத்தை எல்லாருடைய சிரஸ்ஸுக்கும் அளித்தது உலகு அளந்த திரிவிக்ரமர். ‘என் கண்ணினிடம் நீண்டு வந்தது பெரிதோ அந்த த்ரிவிக்ரமப் பெருமானுக்குஎன்று திருவுல களந்தருளின வ்ருத்தாந்தத்தை நினைத்து ஈடுபடுகிறார். வேதம் டிண்டிமமாக அந்த யசஸ்ஸைப் பரப்பியதென்பர். வேதம் பாடி உத்கோஷிக்கும் அந்த யசஸ்ஸைத் தாமும் பாடுகிறார். ‘ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிஎன்று கும்மியடித்துப் பிராட்டிமாரும் ஆசைப்பட்டுப் பாடும் யசஸ்ஸு.

3) ‘கண்ணுளே நிற்கும்என்றபொருமா நீள்படைத்திருவாய்மொழிப் பாசுரம் மனதிற்கு வந்தது. அதை முதல் பாசுரத்தில் பேசுகிறார். ‘திருமா நீள்கழலேழுலகும் தொழ ஒரு மாணிக் குறளாகி நிமிர்ந்த அக்கருமாணிக்கம் என் கண்ணுள தாகுமேஎன்ற முன் பாசுரமும் சேர்ந்து இங்கே திருவுள்ளத்தி லோடுகிறது. मुदितान्तरात्मा (முதிதாந்தராத்மா) என்று தனியனிற் கூறிய இவர் உவப்பைப் பிள்ளைலோகம் ஜீயர்உவந்த உள்ளத்தரானார்என்று இந்த சப்தங்களால் வர்ணித்தார். பெருமாள் உள்ள முவந்ததிலும் மேற்பட்ட ஹர்ஷமுண்டோ இவருக்கு? பெருமாள் உவப்பு இவர் நெஞ்சில் ப்ரதிபிம்பிதமாகும்.  प्रीतःप्रिणाति (ப்ரீத:ப்ரிணாதி)

உலகமளந்து

1)
இப்பொழுது பள்ளிகொண்ட பெருமாளே அன்று த்ரிவிக்ரமனாய் ஓங்கி உலகளந்தவன் என்கிறார். ‘அன்றுஎன்பதை இங்கும் சேர்த்துக் கொள்ளவேணும். काले दूत्य दृततरगतिम् (காலேதூத்ய த்ருததரகதிம்) என்றதும், இன்று தூங்கும் பெருமாளும் காலம் வந்தால் தூத்யம் செய்யவும் ஓடுபவர் என்றதைக் காட்டிற்று. ‘வஸிஷ்ட சண்டாள விபாகம் பாராதே எல்லார் தலையிலு மொக்கத் திருவடிகளை வைத்தபடிஎன்று நாயனார். நீசனாகிய என்னிடம் திருவடி நீண்டது த்ரிவிக்ரம சுபாவம். த்ரிவிக்ரமர் தாளின் நீதி. வானாட்டு நீதிமட்டுமல்ல.

அண்டமுற நிவந்த நீண்முடியன்:--
(1) திருவடி நீண்டு பரவி உயர வோங்கி நிமிர்ந்தது. திருமுடியும் நிவந்து நீண்டு அண்டமுற ஓங்கிற்று. आपादचूडमनुभूय हरिं शयअनअम् (ஆபாதசூடமநுபூய ஹரிம் சயானம்) என்றபடி பள்ளிகொண்ட பெருமாளைத் திருவடி முதல் திருமுடி பர்யந்தம் நின்ற திருக்கோலமாக அனுபவிக்கிறார். (2) ‘நிவந்த --- பூவலர்ந்தாப்போலேஎன்று பிள்ளை. (3) ‘அண்டம் மோழையெழஎன்பதைப் பிள்ளை உதாஹரித்தார்.

அன்று நேர்ந்த நிசாரரை:-- உடனே ராமாவதாரமாகப் பெருமாளை அனுபவிக்கிறார். ‘த்ரிவிக்ரமாவதாரத்தில் நிசாசரனாகிய மாவலியை வெங்கணையால் கொல்லவில்லை. ராமாவதாரத்தில்தான் அது உண்டுஎன்று வேற்றுமையைக் காட்டஅன்றுஎன்ற ராமாவதார காலத்தைப் பேசுகிறார். (2) நேர்ந்தஅவர்களாக வந்து எதிர்த்தார்கள். (3) அவர்களையும் காப்பாற்ற வேண்டுமென்று கூடியவரையில் ஸாமோபாயத்தை நாடினார். அவர்கள் இணங்கவில்லை.

               கவர்ந்த வெங்கணைக் காகுத்தன்:-- கணை வெங்கணை; அது பொல்லாதது. அவருள்ளம் உவந்ததே. அருள் நிரம்பியதே. ‘உவந்த உள்ளத்தனாய்என்பது காகுத்தனோடும் அந்வயிக்கும். ராவண கும்பகர்ணரை மாளச் செய்ததும் கருணயே. உள்ளத்தின் உவப்பே. சாபத்தால தீரவேண்டிய மூன்று ஜன்மங்களில் இரண்டு கழிவது அவர்களுக்கு ஹிதமே. ‘பொருமா நீள்படை ஆழி சங்கத்தொடுஎன்றபடி திருவாயுதங்களுக்கும் கருணையும் ராகமும் உண்டு. வெங்கணையும் ராகத்தால் அவர்களைக் கவர்ந்தது என்கிறார். ‘கவர்ந்ததுஎன்னும் பதம் ராகத்தையும் கருணையையும் காட்டுகிறது.

               கடியார் பொழிலரங்கத்தம்மான்:-- (1) அரங்கத்தில் சோலைகளின் புஷ்பங்களைக் கந்தவஹ மென்னும் காற்று இவருக்கு என்றும் அநுபவிப்பித்தது. ‘கடிஎன்பது மணத்தைச் சொல்லுவதோடு, ‘’படிச்சோதியாடையோடும் பல்கலனாய் நின் பைம்பொற் கடிச்சோடி கலந்ததுவோஎன்கிற முடிச்சோதி அனுபவத்தின் நினைவையும் காட்டும். (2) ‘அரைச்சிவந்த ஆடைஎன்று அரை என்னும் பதமிருந்தாலும்  ‘கடிஎன்ற சப்த மாத்ரத்தால் அரை ஆடையின் அனுபவத்தால்முடிச்சோதியில் நம்மாழ்வாருடைய விசித்ரமான அனுபவத்தையும் நினைவையும் உட்கொள்ளும். (3) ‘திருவுலகளந்தருளின இடமே பிடித்து அடியொற்றி ராவணவதம் பண்ணித் தெற்குத் திருவாசலாலே புகுந்து சாய்ந்தருளினான். இன்னமும் வேர்ப்பு அடங்கவில்லை. திருச்சோலையில் பரிமளம் விடாய் ஒரு ஶிஶிரோபசாரமானபடிஎன்று பிள்ளை.

               அரைச் சிவந்த ஆடையின்மேல்:-- (1) ஆடையின் சிவப்பு இவரிடம் ராகத்தின் மிகுதியாலே வந்ததுபோலும. ஆடையத்தனை ராகத்தைக் காட்டுகையில் தன் சிந்தனை எப்படி அதன்மேல் செல்லாமலிருக்கு மென்கிறார். कृते प्रतिकर्तव्यमेष धर्मस्सनातनः (க்ருதே ப்ரதிகர்த்தவ்யமேஷ தர்மஸ்ஸநாதன:) என்பர். ஸ்நேகத்திற்கு ஸ்நேகரூபமான ப்ரதிக்ருதி இல்லாமற் போகலாமோ? कृतग्ने नास्ति निष्कृतिः (க்ருதக்னே நாஸ்தி நிஷ்க்ருதி:) என்பரே. (2) तस्य यधा माहारजनं वास: (தஸ்ய யதா மாஹாரஜனம் வாச:) என்று நேதி நேதி ப்ரகரணத்தில் திவ்ய மங்கள விக்ரஹத்திலுள்ள பீதாம்பரத்தை ச்ருதி அனுபவித்தது. माहारजनं वास: (மாஹாரஜனம் வாச:) என்றதைச்சிவந்த ஆடைஎன்று வர்ணிக்கிறார். இது पीतांबरतरःस्रग्नी साक्षान्मन्मथमन्मथः (பீதாம்பரதர: ஸ்ரக்வீ ஸாக்ஷான் மன்மதமன்மத:) என்ற கோவலன் நினைவையும் காட்டும். காகுத்தனுக்குப் பின்பு கோவலன் அனுபவம். क्षौमाश्लिष्टं किमपि (க்ஷௌமாச்லிஷ்டம் கிமபி) என்று ஸோபானத்தில் பட்டு ஆடை ராகத்தோடு திருத்துடைகளை யணைந்ததும் வர்ணிக்கப்பட்டது. (3) ‘செய்ய கார்முகில் திருமேனிக்குப் பரபாகமான திருப்பீதாம்பரம்என்று பிள்ளை. ‘ஸர்வகந்து வஸ்து கண்வளர்ந்தருளுகையாலே கடியார் பொழிலாயிருக்குமிறேஎன்று நாயனார்.

               சென்றதாம் என் சிந்தனையே:-- (1) எனக்கு என் நெஞ்சினால் ஸ்பர்சிக்கவும் அச்சமே. ஆயினும் என் மனசுஎன் சிந்தனைஎன்னை யறியாமலே பாய்ந்து சென்றுவிட்டது. சென்றபிறகுதான் எனக்குத் தெரிகிறதென்பதைசென்றதாம்என்பதால் காட்டுகிறார். (2) ‘என் சிந்தனை மட்டுமே சென்றது, நான் அணுகவில்லைஎன்று தன் அச்சத்தை (நைச்யத்தை) அனுசந்திக்கிறார். (3) இங்கும் ஒரு சந்தி ரஸத்தின் அனுபவம். சந்த்யாகாலம் அருளும் சந்த்யாராகச் சிவப்பும் கலந்ததாக இருக்கும். காரிருள் திருமேனியில் சிவந்த ஆடை பரவி இருப்பதும் ஒரு சந்த்யானுபவமாகும்

வியாழன், 24 மே, 2018

ஸ்ரீஅன்பில் கோபாலாசாரியார் ஸ்வாமியின் அமலனாதிபிரான் அனுபவங்கள்


நிமலன் நின்மலன் திரும்பவும் திரும்பவும் தன்னுடைய சாமீப்யத்தால் என்ன மலம் வருமோ வென்கிற அச்சம் கிளம்புகிறது. உடனுக்குடன் ஹேயப்ரதிபடமான ஸ்வபாவத்தை அறுதியிட்டு மனதைத் தேற்றிக்கொள்ளுகிறார். இந்த ஸங்கை அரங்கத்தமலன் ' என்று மேலும் உதித்து நிவ்ருத்திக்கப் படுவதைக் காண்கிறோம். 'தம்முடைய ஜந்மாதிகளால் உண்டான நிகர்ஷாநுஸந்தாநத்தாலே அகல, அது தானே பற்றாசாகத் திருவுள்ளம் புண்பட்டு மேல் வீழ்ந்த இடத்திலும் அத்தனைக்கு அவத்யமின்றியிலே நிர்மலனாயிருக்கிற படியைக் கண்டு அமலன் என்கிறார்' என்று நாயனார்.
நீதி வானவன் -- விண்ணவர் கோனே நீண்மதிளரங்கத் தம்மானாக எழுந்தருளியிருப்பதால் வானாட்டு நீதியை இங்கும் செலுத்துகின்றான் போலும் ! எல்லாச் சேதநர்களுக்கும் ஸாம்யமே மேனாட்டு நீதி. அந்த நீதியைத் தாழ்ந்த என் விஷயத்திலும் செலுத்தி என்னை உத்தமரோடு அத்யந்த சமமாய் பாவிக்கிறானோ வென்று ரஸமாய்  உபபத்தி செய்யப் பார்க்கிறார்.
நீண்மதி ளரங்கத்தம்மான்- அரங்கத்தின் மதிள் நீண்டதுபோல் அரங்கத்தம்மான் பாதகமலமும் நீண்டதே என்று ரஸம். அரங்கத்தில் பத்ம ஸரஸ்ஸுக்களில் பத்மங்களிருப்பது ஸஹஜம். இவருக்கு முந்திய தொண்டரடிப்பொடியாழ்வார் திருநாமத்தை அநுசரித்து அடியார்க் கென்னை யாட் படுத்த விமலன்' என்று முதலடியிலேயே இவர் ஈடுபட்டது போல இப்பாசுரம் கேட்டுப்போலே காணும் (இவருக்கடுத்த) திருமங்கையாழ்வார் திருமதிள்கள் செய்தது. அழகிய வாயாலே இதருளிக் செய்த பின்பாகாதே திருமாளிகைகளும் திருக்கோபுரங்களும் கனத்தது ' என்று நாயனார். ॠषीणां पुनराद्यानां वाचमर्धोनुधावति (ரிஷீணாம் புனராத்யானாம் வாசமர்த்தாநுதோவதி) (பவபூதி உத்தரராம சரிதம்) என்பார்கள்.
திருக்கமல பாதம் வந்து - தாய் முலையில் போல் பெருமாள் திருவடிகளில் ஸ்நேஹம் என்பர். சஹஜ நிரவதிக ஸ்நேகத்தால் திருவடிக்கு நீண்டு நெருங்கும் ஸ்வபாவம். திருவடி நீளக் காரணம் திருவுள்ளம் உவந்து நீள்வது. சயனத்திருலிருந்த  திருவடிப்பூ ஸ்நேஹ பாரவச்யத்தால் நீண்டு என் கண்ணுள் வந்து நின்றது போலும். 'திரு' என்று இங்கு லஷ்மியைச் சொல்லுகிறது. இது பூமிப் பிராட்டியாருக்கும் உபலக்ஷணம். 'लक्ष्मीभूम्योः करसरसिजैर्लालितं रंगभर्तु: पादाम्भोजम्' (லஷ்மீ பூம்யோ : கரஸரஸிஜைர்லாலிதம் ரங்கபர்த்து: பாதாம்போஜம்) (ஸோபாநம்) என்ற அநுபவம். தாய்மார்கள் இந்தக் கமலத்தைப் பிடித்து லாளநம்செய்து என் கண்ணினுள் ஒத்துகிறார்கள் போலும் ' என்று அநுபவம்.. பிராட்டி திருமுலைத் தடங்களிலும் திருக்கண்களிலும் ஒற்றிக்கொள்ளும் திருவடிகள்' என்று பிள்ளை.
 என் கண்ணிலுள்ளன வொக்கின்றதே - தினமும் இவர் திருக்காவிரிக் கரையிலிருந்து யோகம் செய்கையில் தர்ஸந சமாநாகாரமான பிம்பதர்ஸந மேற்பட்டு வந்தது. 'கண்ணுள்ளே நிற்கும் காதன்மையால் தொழில்’ (திருவாய்மொழி 1,10,2) என்றது போல இவர் காதல் தொழுகையாகிய யோகத்தில் இவர் கண்ணுள்ளே திருவடி நின்றுகொண்டிருந்தது. பெரிய பெருமாள் திருவடிக்கமலம் இவர் கண்ணிற்கு யோக தசையிலே சேவை சாதித்துக் கொண்டிருந்தது. யோக தசையில் சேவை சாதித்து இவர் கண்ணுள்ளே நின்றுகொண்டிருந்த திருவடிக் கமலத்தோடு இப்பொழுது தன் கண் வரையில் நீண்டு வந்த அரங்கன் திருவடிக் கமலத்தை ஒத்துப் பார்க்கிறார். யோகாநுபவ உறுதியால் என் கண் ணுள்ளே நிற்கும் திருக்கமல பாதத்தோடு இப்பொழுது நேரில் ஸாக்ஷாத்தாக சேவிக்கும் திருக்கமலபாதம் மிகவும் ஒக்கின்றதே யென்று அத்புத ரஸம்.
(2) கண்ணினுள்ளே வந்து விட்டாலும் ஸாக்ஷாத் ஸ்பர்சத்தை நினைக்கவும் பச்சையாகச் சொல்லவும் மனமில்லாதவராய், கண்ணில் வந்து புகுந்தது போலிருக்கிறது என்று பேசுகிறார். இப்படியே மேலும் சிவந்த ஆடையின் மேல் சென்றதாம் என் சிந்தனையே' என்று பேசுகிறார். தாமாகப் பெருமாள் பாத கமலங்களைத் தீண்ட அச்சமே; அவையே வலிய என்னிடம் வந்து என்னை ஸ்பர்சிக்கின்றன; நான் என்ன செய்வேன் ! திருமேனி அவயவங்களை எட்டு ச்லோகங்களால் அநுபவிக்கிறார். அஷ்டாங்க யோகக் கணக்கு. பகவத் த்யாந ஸோபாநமும் இதை அநுசரித்தது. அங்கும் அவயவங்களின் அநுபவம் எட்டு ச்லோகங்களால் செய்யப் படுகிறது. இங்கு, 1, 4, 5, 6, 7, 8-வது: பாசுரங்களில் அவயவங்களை தாமாக நெருங்குவதாக அநுபவமில்லை. 2-ம் பாசுரத்தில் சென்றதாம் என் சிந்தனை' என்கிறார். சிந்தனை தொடுவதால் தீட்டில்லை. 'உந்திமேல தன்றோ அடியேனுள்ளத்தின்னுயிரே' என்று தன் ஆத்மா தொடுவதைப் பேசுகிறார். ஆத்மாவுக்கும் தீட்டில்லை.
(3) ஒன்பது பாட்டு வழியிலே அநுசந்தித்துப் பத்தாம் பாட்டிலே திருவடி தொழுதாரென்கிற ஐதிஹ்யத்தின்படியே மாநஸ ஸாக்ஷாத்காரம் தான் கண்ணிட்டுக் கண்டாப் போலே இருக்கை. அங்ஙனமன்றிக்கே மாநஸ ஸாக்ஷாத்காரத்தோடு சேர்ந்திருந்த தீசஷுர் விஷயமான திருப்புகழென்றுமாம்' என்று இரண்டுவிதமாகவும் நாயனார் அருளியது. மாநஸ ஸாக்ஷாத்கார மென்பது  யோக ஸாக்ஷாத்காரம் ; தர்சன ஸமாநாகாரம். கருமணியைக் கோமளத்தைக் கண்ணாரக் கண்டு, மனத்தூணே பற்றி நின்று வாயார வாழ்த்தும் ப்ரபந்தமாகை யாலே ' என்றும் அருளியுள்ளார்