வியாழன், 21 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 6

"மந்த்ர பரச்ந பாஷ்யம் ஸ்ரீ என்.வி.எஸ் அவர்களது நடையில் தொடர்கிறது.”

ஜாதகர்ம ப்ரகரணம்

ஜாத என்றால் பிறந்ததும், கர்மா என்றால் செய்யவேண்டிய ஸம்ஸ்கார விஷயம் என்பது பொருள். ஸத்புத்ரன் பிறந்ததும் பித்ரு கடன் தீருகிறது.

புத்ரன் பிறந்தாலும், யாகத்தின் முடிவில் அவப்ருத ஸ்நாநம், க்ரஹண காலம், ஸங்க்ரமணம் (முடியும் மாதமும் பிறக்கும் மாதமும் சந்திக்கும் தருவாய்) ஆகிய இக்காலங்கள் இரவு நேரம் ஆயினும் ஸ்நாநம் செய்தே தீரவேண்டும். மற்ற காலங்கள் இரவில் ஸ்நாநம் நிஷேதம் (செய்யக்கூடாது).  உணவு உட்கொண்டிருந்தாலும் "சசேல ஸ்நாநம்" என்னும் இடுப்பில் உடுத்தியிருக்கும் வஸ்த்ரத்துடன் (வேஷ்டியுடன்) தீர்த்தமாடி உடனே ஜாதகர்மாவைப் பண்ணவேண்டும்.

குளிர்ந்த ஜலம் உள்ள குளம் - தடாகத்தில் தண்ணீர் மேலெழும்பும்படியாக குதித்துக் குளிக்கவேண்டும். மேலெழும்பித் தெறிக்கும் தண்ணீரினால் பித்ருக்கள் அதிக ஆனந்தமடைகிறார்கள்.

தொப்புள்கொடி அறுக்கப்படும்வரை தீட்டில்லை. அந்த காலத்தில் தானம் செய்வதும், வாங்குவதும் தோஷம் ஆகாது. புதிதாகக் குழந்தை பிறந்த இல்லத்தை நோக்கி தேவர்களும், பித்ருக்களும் ஆவலுடன் வருகிறார்கள். ஆகையால் அந்த தினம் மிகச் சிறந்த தினமாகும். ஆகையால் அன்று முழுவதும் (இரவானாலும்) ஸ்வர்ணம் (தங்கம்), பூமி, பசு, குதிரை, குடை, ஆடு, வஸ்த்ரம், புஷ்பம், படுக்கை, ஆஸநம், வீடு, தான்யம், சித்ரான்னம், வெல்லம், நெய் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

தொப்புள் கொடி அறுப்பதற்கு முன்போ அல்லது தீட்டுப்போன உடனேயோ, ஹிரண்யம் அல்லது ஆம ரூபமாக நாந்தீ ச்ராத்தம், தானங்கள் போன்றவற்றைச் செய்துவிடவேண்டும். நாந்தியை அன்ன ரூபமாகச் செய்வதை தவிர்க்கவேண்டும். தானங்களை உடனே செய்ய இயலாமல் ஏதாவது அஸெளகர்யம் ஏற்பட்டால்தான் 10 நாள் தீட்டுப்போனபின் உடனே செய்யவேண்டும். ப்ரதி (ஒவ்வொரு) வருடமும் அவரவர் பிறந்த நக்ஷத்திரத்தன்று அன்ன தானம் செய்யவேண்டும். ஆஹிதாக்நியாக இருந்தால் ஜாதேஷ்டியைச் செய்யவேண்டும். (யஜ்ஞங்களையும், ஒளபாஸனத்தையும் விடாமல் செய்து வருபவருக்கு "ஆஹிதாக்னி" என்று பெயர்.

மேலும் அக்னிகார்யங்கள் பற்றி விளக்கம்பெற :http://www.brahminsnet.com/forums/showthread.php/1260

இதைச் செய்வதால் - வலிமையான சரீரம், நீண்ட ஆயுள், நிறைந்த செல்வம், நிலைத்த புகழ், கூர்மையான புத்தி, இளமையில் கொடிய நோயினால் பாதிப்படையாமை, துர்க்ரஹங்களின் தொல்லையின்மை போன்ற நன்மைகளைப் பெறலாம். இதைச் செய்யாதபோதுதான் குழந்தைக்கு வயிற்றுக் கட்டி, இதர தீராத வியாதிகள் வருகின்றன. குழந்தை பிறந்ததும் (ஸந்த்யா காலத்தில் அர்க்யம் விடுவதுபோல) ஸ்நாநம் அவசியம் ஆகும். அகாலத்தில் செய்வது செய்யாததோடு ஒக்கும். பலன் தராது. தற்காலத்தில் ஜாதகர்மா, நாமகரணம், அந்நப்ராசனம், சௌளம் யாவும் உபநயனம் செய்யும்போது சேர்த்துச் செய்கிறார்கள். அதை சாஸ்த்ரம் அனுமதிக்கவில்லை. அந்தந்த காலத்தில் அவ்வவற்றைச் செய்து, தேவ-பித்ருக்களின் அநுக்ரஹத்தை பெறவேண்டும். "ஸகால கார்யம் இஹபர ஸாதகம்" என்பது வாசகம். ஏதோ சிலரே உரிய காலத்தில் செய்து ஷேமமாய் இருக்கின்றனர்.

இவ்விஷயங்களை நாம் கர்மாந்தரார்த்தம் மூலம் அறிகிறோம். இதற்காகத்தான் தீர்க்கதரிசிகளான நம் முன்னோர் இம்மாதிரியெல்லாம் எழுதி வைத்துள்ளனர்.

உரிய காலத்தில் செய்யாவிடில், அதற்கான ப்ராயச்சித்த ஹோமங்கள், ஹிரண்யதானம், க்ருச்ரங்கள் எனப்படும் பணமாகச் செய்யப்படும் தானங்களையும் முறையாகச் செய்துவிட்டு காலத்தில் செய்யாது விட்ட கர்மாக்களைச் செய்யவேண்டும்.

வத்ஸ்ப்ர ரிஷியின் குமாரர் இதை ஸமாதி நிலையிலான நிஷ்டையில் ஸாக்ஷாத்கரித்ததால் (நேரிடையாக தரிசித்ததால்) இந்த (ஜாதகர்ம) மந்திரத்திற்கு வாத்ஸப்ரம் என்று பெயர். இம்மந்த்ர ப்ரச்நத்தில் இந்த அநுவாகத்தின் முதல் மந்திரத்தை மட்டும் அடையாளம் காட்டப்பட்டிருக்கிறது. இது தைத்ரிய ஸம்ஹிதை 4ம் காண்டம், 2ம் ப்ரச்நம், 2ம் அநுவாகம் ஆகும். 11 மந்திரங்களைக் கொண்டது. இந்த மந்த்ரங்களுக்கான ப்ரயோகம் மற்ற மந்திரங்களைப்போல் யாகத்தில்தான் பயன்படுகிறது. காலை, மாலை இருவேளையும் அக்நிஹோத்ரம் செய்பவர்கள் இதை இரு காலத்திலும் ஜபம் செய்கிறார்கள்.

திவஸ்பரி :- ஜாதவேதஸ் என்கிற அக்னி பகவான் முதலில் ஆகாசத்தில் ஸூர்யனாகத் தோன்றினார். இரண்டாவதாக யாகங்களைச் செய்யும் நம்மிடம் அரணிக்கட்டையின் வாயிலாக அக்நியாக உற்பத்தியானார். மூன்றாவதாக ஸமுத்ரத்தில் பாடபா அக்நியாக அவதரித்தார். இப்படிப்பட்ட அக்நி தேவரின் அநுக்ரஹத்தைப் பெற, ஒவ்வொருநாளும்  அக்நியை ஜ்வலிப்பித்து உபாஸிக்கின்றனர்.

2. வித்மாதே : - ஓ அக்நிதேவனே! பூமி, ஆகாசம், ஸ்வர்கம் எனும் மூன்று உலகங்களில் நீர் அக்நி, வாயு, ஆதித்யன் என்று மூன்று திருநாமங்களோடு விளங்குவதை யாம் அறிவோம். கார்ஹபத்யம், ஆஹவநீயம், தக்ஷிணாக்நி என்ற உமது மூன்றுவிதமான பயன்பாட்டு நிலையையும் யாம் அறிவோம். வேதம் ஓதாதவர்களுக்குத் தெரியாததான உமது மற்ற பல திருநாமங்களையும் (ஸஹஸோ யஹோ, தேவேத்த மந்வித்த, மந்த்ரங்கள்) நாம் அறிவோம். தீர்த்தத்திலிருந்தும் அவதரிக்க வல்லவர் நீர் என்பதையும் யாம் அறிவோம்.

3. ஸமுத்ரேத்வா :- ஹே அக்நி பகவாநே! ஸமுத்ரத்திலிருக்கும் உம்மை அருள் வழங்கும் தன்மையுள்ள வருணன் வ்ருத்தி செய்கிறான். மேகத்தில் மின்னல் உருவாய் இருக்கும் உம்மை கர்மங்களுக்கு சாட்சியாய் விளங்கும் சூரியன் வ்ருத்தி செய்கிறான். வான்வெளியில் வஸிப்பவரான உம்மை ஜ்ஞானிகள் நன்கு உணர்வர்.

4. அக்ரந்தக்நி: :- காட்டுத் தீ வடிவமான அக்நிதேவன் ஆகாயத்தில் மேகம் கர்ஜிப்பதைப்போல், காட்டுப் பகுதியில் புதர்களில் பரவி அவற்றை சப்தத்துடன் எரிக்கிறார். கொழுந்துவிட்டுப் பெரிதாக எரியும்போது பூமிக்கும் ஆகாசத்திற்கும் பரவி வெகு து}ரத்திலிருப்பவரும் தரிசிக்கும்படி ப்ரகாசிக்கின்றார்.

5. உசிக் பாவக: அரதி: :- அனைவருக்கும் அருள் புரிவதால் யாவராலும் விரும்பப்படுபவராயும், எல்லாப் பொருள்களையும் சுத்தம் செய்பவரும், அசையும் தன்மை கொண்டவரும், அனைத்தையும் அறிபவருமான அக்நிதேவன், புவியில் இல்லற வேள்விக்கு உதவுமாறு கார்ஹபத்ய அக்நியாக என்றும் நிலைத்து இருக்கும்படி எம்பெருமானால் ஸ்ருஷ்டிக்கப்பட்டுள்ளார். அக்நியானவர் புவியிலுள்ளவற்றை ஆவியாக்கி, ஆகாயத்திற்குக் கொண்டு சென்று, மழைபொழியக் காரணமாகி உலகத்தை காத்தருள்கிறார்.   தமது ப்ரகாசமான ஒளியினால் ஆகாயத்தினுள்ளும் புகுந்து, அருள் புரிகிறார்.

(ப்ராஹ்மணர்கள் ஒளபாஸனம் மற்றும் யஜ்ஞங்களைத் நந்தாமல் தொடர்ந்து செய்வதால் அக்நியை நித்யம் - நிலைத்த தன்மையுடையவர் என்று சொல்லப்பட்டுள்ளது.)

6. விச்வஸ்ய கேது: :- அனைத்தையும் அறிபவரும், ஜடராக்நி என்ற பெயரில் ஒவ்வொருவரின் சரீரத்தின் மத்தியில் இருப்பவரும், ஜ்வலிக்க ஆரம்பித்ததும் பூமி மற்றும் ஆகாயத்தை ஒளிபெறச் செய்பவருமான அக்நிதேவன், வேள்வியில் ஸமர்ப்பிக்கப்படும் வஸ்த்துக்களை உரிய தேவதையிடம் கொண்டு செல்லும் வழியில் மலைபோன்ற எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையும் பிளந்து கொண்டு, உரியவரிடம் அடைவிக்கிறார்.

(இந்த வேத வாக்யம் ‘அயஜந்த பஞ்ச" என்று முடிகிறது. ‘பஞ்ச" என்பதால் முதல் நான்கு வர்ணத்தாருக்கு மட்டுமன்றி, எந்த வர்ணத்திலும் சேராதவரான ஐந்தாம் வர்ணத்தைச் சார்ந்தவர் செய்யும் வேள்விப் பொருட்களையும் எடுத்துச் செல்கிறார் என்பது புலனாகிறது.)

7. ஸ்ரீணாமுதார: :- பதினாறு விதமான செல்வங்களையும் அடையச் செய்பவரும், அடைந்த செல்வத்தை நிலைத்திருக்க அருள்புரிபவரும், மேன்மையான அறிவாற்றலைக் கொடுப்பவரும், ஸோம யாகம் போன்ற யாகங்களை காத்தருள்பவரும், சிறந்தவரும், ஸஹஸ் என்கிற பலத்தின் குமாரரும், (அரணிக்கட்டையைக் கடைந்து அக்னி உண்டாக்க வேண்டுமானால் மிகுந்த பலம் தேவை, இதனால் இவ்வாறு சொல்லப்பட்டது) மழை ஜலததில் மின்னலாய் ப்ரகாசிக்கின்றவருமான அக்நி தேவதை, விடியற்காலையில் மிகுந்த ப்ரகாசத்துடன் விளங்குகிறார்.

8. யஸ்தே அத்ய: :- மங்களகரமான ஒளிபொருந்திய ஓ அக்நி தேவனே! என்றும் இளமையாய் இருப்பவரே! நெய்யாலும், புரோடாசம் என்னும் உணவாலும் வேள்வி செய்யும் எனக்கு இஹத்திலும், பரத்திலும் நன்மை அளிக்கக்கூடிய செல்வம் மற்றும் புகழைக் கொடுத்தருளும்.

(ஒருவர் இறந்தால் அவருக்குள்ள புகழைக் கொண்டு ‘செத்த பிணமா? சாகாத பிணமா?" என்று கேட்கும் வேடிக்கையான வழக்கு உண்டு. ‘பூத உடலை நீத்து புகழுடம்பை எய்தினார்" என்றும் வழங்குவதுண்டு. ஸத்ய நெறியால் ஹரிச்சந்த்ரனும், வள்ளல் தன்மையால் கர்ணனும், உத்தம பத்திநி வ்ரதத்தால் அருந்ததியும், பழுத்த பக்தியால் ப்ரஹலாதன், குசேலனும், தவ வலிமையினால் த்ருவனும் புகழுடம்பை எய்திவர்களுக்குச் சில சான்றாவர்.)

9. ஆதம்பஜ :- ஓ அக்நி தேவனே! சரு, புரோடாசம் போன்றவற்றை மிகுதியாக உடைய யாகங்களில் உக்தம் எனப்படும் சஸ்த்ர ஸ்தோத்ரம் சொல்லும்போதெல்லாம், அந்த வேள்வி செய்பவனை ஆசீர்வதிப்பதற்காக நீர் அங்கு செல்லவேண்டும். வேள்வி செய்பவன்;, உம்முடையவும் மற்றும் ஸூர்யனுடைய ப்ரீதிக்கும் பாத்திரமாகவேண்டும். உம்மை ஆராதிப்பவன் தான் தன் சந்ததிகள் அனைவரும் பூவுலகில் அனைத்துப் பகுதிகளிலும் புகழ்பெற்று விளங்கவேண்டும். ‘இவன் தந்தை எந்நோற்றான் கொல்" எனும் இலக்கணத்திற்கொப்பத் திகழவேண்டும். இந்த பாலகனின் சந்ததிகளாலும் அவனைப் பெற்ற தந்தைக்கு ஏற்றம் ஏற்படவேண்டும்.

10. த்வாமக்நே :- அக்நி தேவனே! உம்மை தினந்தோறும் ஆராதிப்பவர் மிகுந்த செல்வந்தராகின்றனர். அசுரர்களால் கவரப்பட்டு குகையில் அடைக்கப்பட்ட தேவர்களின் பசுக்களை  அக்நி, அங்கிரஸ், ப்ரஜாபதி போன்ன தேவர்கள், அசுரர்களை வென்று பசுக்களை மீட்டுக்கொடுத்த வ்ருத்தாந்தம் இம்மந்திரத்தில் இயம்பப்படுகிறது.

11. த்ருசாநோருக்ம: :- தன் ப்ராகசத்தால் வெகு தொலைவில் உள்ளவராலும் தரிசிக்கவல்லவராயும், தங்கம் போல் ஜ்வலிப்பவருமானவர் அக்நி தேவன். இவருடைய ஒளிவெள்ளத்தை திரையிட்டு மறைக்க இயலாது. அக்நியில் விதிப்படி ஹோமம் செய்யப்படும் ஹவிஸ் (ஆஹாரம்) ஸூர்யனை வந்தடைகிறது. ஸூர்யனால் மழை உண்டாகிறது என சாஸ்த்ரம் கூறுகிறது. மழைக்குக் காணமான ஹவிஸே மின்னலுக்கும் காரணமாகிறது. இவருக்கு மழை சுக்கிலம் (வீர்யம்) போல் ஆகிறது. இதனை உடைய ஆகாசம் ஹவிசுடன் கூடிய அந்நங்களால் மின்னல் வடிவமாக ஏற்பட்டது. அக்நி தேவன் ஸம்பத்தாகிய செல்வங்களையும் நீண்ட ஆயுளையும் தரவல்லவர். செய்யப்பட்ட ஹோமங்களால் இவர் அம்ருத நிலையை எய்திவிட்டார்.

இம் மந்திரத்தை இந்த கர்மாவில் சொல்லக் காரணம்: இம்மந்த்ரமானது அக்நிசயந யாகத்தில் புதிதாக உண்டான "உகா" என்னும் அக்நியைத் துதிப்பதற்காக ஏற்பட்டது. அவ்விடத்தில் அந்த அக்னியை ஒரு சிசுவாக (குழந்தையாக) வேதம் வர்ணிக்கிறது. எனவே புதிதாகப் பிறந்த குழந்தையின் ஜாதகர்மாவிலும் தேவதா ப்ரார்த்தனா ரூபமாக ஜபிக்கும்படியாக ஆபஸ்தம்ப ருஷி விதித்துள்ளார்.

மந்த்ரப்ரச்நம் 2ல் 12ம் கண்டம்

குழந்தையைப் தகப்பனாரின் மடியில் வைத்துக்கொள்ள மந்த்ரம்

12. ஸ்வதந்த்ரனாக இந்தக் குமாரன் மூலம் எனக்கும் என் குடும்பத்தாருக்கும் ஸகல ஷேமங்களும் உண்டாகட்டும். அஸ்மிந்.

புத்ரனை அபிமந்த்ரணம் செய்யும் மந்த்ரம்

13 அங்காத்அங்காத் :- ஏ புத்ரனே! நீ எனது ஒவ்வொரு அங்கத்திலிருந்தும் உண்டாகியிருக்கிறாய். ஆத்மாவாக எம்பெருமான் உறைவிடமான ஹ்ருதயத்திலிருந்து நீ உண்டானாய். ஆகையால் அதுவே முக்யமானதாகும். (ஆசை பிறக்குமிடம் மனம். ஸுஹ்ருத் என்று நண்பனை அழைப்பதுபோல்) நானே பிள்ளை என்கிற பெயரில் உன்வடிவில் பிறந்திருக்கிறேன். நீ நீண்டகாலம் ஜீவித்திருப்பாயாக. (சதமானம் பவதி சதாயு: புருஷ:) தோற்றம், குணம், சரீர அமைப்பு, குரல், கை எழுத்து, அங்க அசைவுகள் (மேனரிசம் எனப்படும் சேஷ்டைகள்) போன்றவற்றில் தகப்பனும், மகனும் ஒத்திருப்பதால்  தகப்பன் வேறு, பிதா வேறு என்ற பேதத்தை - வேற்றுமையை மறுத்து ஒன்றுதான் என கூறப்படுகிறது.

புதன், 20 ஜூன், 2012

ஸ்ரீமதாண்டவன் புகழ் பாடுவோமே!

ஸ்ரீரங்கம் வாழும் பேராசிரியர் ஸ்ரீ திருநாராயணய்யங்கார் ஸ்வாமி ஒரு நல்ல கவிஞரும்கூட. சமீபத்தில் நடந்த ஸ்ரீமதாண்டவன் திருநக்ஷத்ர வைபவத்தில் அவர் ஸ்ரீமதாண்டவனைப் பற்றி ஒரு கவிதை எழுதி ஸ்ரீமதாண்டவனின் அனுக்ரஹத்தையும் பெற்றார். அற்புதமாக அமைந்துள்ள அந்தக் கவிதையினை இங்கு எல்லாருடனும் பகிர்ந்து கொள்வதில் அடியேனுக்கும் பெரு மகிழ்ச்சி என்று சொல்ல வேண்டியதில்லைதானே! இங்கு படிக்க சிரமமாக இருந்தால் லிங்கில் க்ளிக் செய்து படிக்கலாம்.

Eulogy for Srimushnam Andavan 24thJune2012

திங்கள், 18 ஜூன், 2012

Guru Paramparai Vaibhavam (18-06-2012)

Why Therazhundur Andavan is known as  nammandavan? Enjoy the great history of the uncomparable Acharyan of Srimad Andavan Ashramam in the voice of Natteri Swamy in his GuruParamparai vaibhavam tele-upanyasam on 18-06-2012.

This is Mediafire link to download the file

http://www.mediafire.com/?w0pft9iy4muapmm

To directly listen online

சனி, 16 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 6

ஸ்ரீஎன்.வி.எஸ்  ஸ்வாமி மூல பாடத்தை அப்படியே தராமல் அவரது நடையில் நூலின் சாராம்சத்தை விவரிக்கிறார். அதை அப்படியே இங்கு இடுகிறேன். நூலை அதன் ஆசிரியர் எழுதியவாறே படித்து ரசிக்க விரும்புபவர்களுக்காக இந்நூலை ஸ்கான் செய்து வலை ஏற்றி தகவல் அளிப்பேன்.

ஆக, இங்கு நீங்கள் இனி படிக்கப் போவது ஸ்ரீ என்.வி.எஸ் அளிக்கும் எளிய நடையில் சுப மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம்! 60 வருடத்திற்கு முந்திய தமிழை இன்றுள்ளவர்கள் சரியாகப் புரிந்துகொள்ள சிரமப்படும் ஸ்ரீ என்.வி.எஸ். ஸ்வாமியின் கைங்கர்யத்துக்கு அடியேனின் நன்றி கலந்த பாராட்டுக்கள்.

பும்ஸவந ப்ரகரணம்


    எந்த கர்மாவால் கர்ப்பிணி புருஷ ப்ரஜையைப் பெறுவாளோ அந்த வைதிக கர்மத்திற்கு ‘பும்ஸவநம்" என்று பெயர். கர்ப்பம் நிச்சயம் என்று தெரிந்தவுடன் மூன்று அல்லது நான்காம் மாதத்தில் இதைச் செய்துவிடவேண்டும்.

    கிழக்கு அல்லது வடக்கு நோக்கிச் செல்லும் ஆலமரத்தின் கிளையிலிருந்து இரு பழங்களுடன் கூடிய, மொட்டு போன்றிருக்கும் (துளிர்க்கும் இலையின்) கொழுந்தைக் கொண்டுவந்து, (ஸீமந்தோந்நயனத்தில் கூறப்பட்ட அதே) எட்டு ஹோமங்களைச் செய்து, ருதுவாகாத கந்யைக் கொண்டு (பூப்பெய்தாத இளம் பெண்ணுக்கு மட்டுமே கந்யை என்ற பெயர் பொருந்தும். பூப்பெய்தி மணமாகாத பெண்ணிற்று ‘ப்ரௌடை" என்று பெயர்.) அம்மியில் வைத்து நசுக்கச் செய்து, அதன் ரஸத்தை வஸ்த்ரத்தால் வடிகட்டி எடுத்துக்கொண்டு, அக்நிக்கு மேற்கே கர்பிணியை, மேற்கு நோக்கி அமர்ந்து, தலை மட்டும் கிழக்கு நோக்கி திரும்பும்படியாக நன்றாக அண்ணார்ந்து உட்காரச் செய்து, ‘(ஓ ஆலந்துளிரின் ரஸமே நீ) புருஷ ப்ரஜையை ப்ரஸவிக்கும்படி செய்பவனாக இருக்கிறாய்" என்று பொருள்படும் (புகுஸுவநமஸி என்ற) வேத வாக்யத்தைக் கூறி, மூக்கின் வலது துவாரம் வழியாக, அந்த ரஸத்தைப் பிழிந்து, கர்பப்பையைச் சென்றடையும்படியாக விடவேண்டும் என்று (ஆபஸ்தம்ப) ரிஷி ஸூத்திரத்தில் கூறியுள்ளார். இப்படிச் செய்வதால் புத்ர உத்பத்தி உண்டாகும்.

அநாயாஸ(சிரமமற்ற, சுக) ப்ரஸவ உபாயம்
    ப்ரஸவ காலம் வந்ததும் ஒரு புதிய மண் பாத்திரத்தில் நதியின் ஜலத்தை எடுத்து வந்து, ‘து}ர்யந்தி" என்னும் மூலிகைச் செடியைக் கொண்டுவந்து, கர்பிணியின் இரு பாதங்களிலும் வைத்துக் கட்டி, ப்ரஸவ வேதனையால் வருந்தும் கர்பிணியை, பின் வரும் ரிக்கால் (மந்திரத்தால்) இரு கைகளாலும் தொட்டு, பிறகு வரும் மூன்று மந்திரங்களை ஜபித்து, ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் ஒரு முறை ப்ரோக்ஷிக்கவேண்டும். (மூன்று மந்திரங்களும் முடிந்த பிறகு ஒரு முறை ப்ரோக்ஷித்தாலும் போதுமானது).

    நான் உன்னை என் கைகளின் பத்து விரல்களால், பத்து மாத கர்பத்தை சீக்கிரம் ப்ரஸவிக்கும்படியாக சுற்றிலும் தடவுகிறேன்.

    ஆபிஷ்ட்வாஹம்
    1. யாகத்தில் ஸோமரஸம் எப்படி எளிதாய் பிழியப்பட்டு, துணி வழியாகக் கசிகிறதோ, கடல் எப்படிக் காற்றால் அசைகிறதோ, அப்படி உன் கர்பமும் (ப்ரோக்ஷிப்பதால்) அசையட்டும். பிறகு, கர்பத்தைச் சுற்றியிருக்கும் ஜராயு (பனிக்குடம் என்பர்) என்ற ஓர் மெல்லிய தோலுடன் ஸுக ப்ரஸவமாகி, ஆயுள், ப்ரஹ்மவர்சஸ் (ப்ராஹ்மண களை), கீர்த்தி (புகழ்), வீர்யம் (சக்தி), அந்ந ஸம்ருத்தி (மிகுதியான அந்நம்) இவைகளுடன் கூடியிருக்கட்டும். யதைவ ஸோம:

    2. இந்த கர்பம், ப்ரஹ்மாவின் ஸங்கல்பப்படி, பத்து மாதங்கள் உன் உதிரத்தில் (கர்பத்தில்) இருந்தது. இனி உனக்கும் அதற்கும் (சிசுவிற்கும்), ப்ராண (உயிர்) ஆபத்தின்றி வெளிவரட்டும். தசமாஸாம்.

    3. ஸரஸ்வதீ நதீ முதலியவற்றுள் உள்ளிருக்கும், அப்பு(தீர்த்த) தேவதைகளே! சக்தியுடைய நீங்கள் இக்கர்பத்தை வெளிப்படுத்துங்கள். நல்லபடி தாயும், சேயும் க்ஷேமமாக இருக்கட்டும். ஆயமநீர்மயத.

ஜராயு என்கிற நஞ்சு விழ மந்த்ரம்
    ஜராயுவுக்கு திலதா என்றும் ஒரு பெயர் உண்டு. அது தலைகீழாக விழட்டும். நீ குடலிலுள்ள எந்தப் பொருளாலும் பாதிக்கப்படாமல் வெளியே வா! நீ மிகவும் ஸ்வல்பம் (சிறிய பகுதி). நீ வெளியில் வந்ததும் உன்னை நாய் உண்ணட்டும். திலதேவ பத்யஸ்வ.

அடுத்து ஜாதகர்ம ப்ரகரணம்

செவ்வாய், 12 ஜூன், 2012

மந்த்ர ப்ரச்ந ஸம்பூர்ண பாஷ்யம் 5

ஸீமந்தோந்நயநம்
பும்ஸவநம் என்றால் புருஷ ப்ரஜை ஜநிக்க (பிறக்க) வேண்டும் என்பது. கர்ப்பம் தரித்த 4ம் மாதத்தில் இதைச் செய்யவேண்டும் என்று ரிஷி விதித்திருக்கிறார். கர்ப்ப பிண்டத்திற்கு லிங்கம் உண்டாவதற்கு முன் இதைச் செய்தால்தான் புருஷ ப்ரஜையை எதிர்பார்க்க முடியும். (கர்பத்தில் உருவாகியுள்ள சிசு ஆண்பாலா பெண்பாலா என்பதை தீர்மானிக்கும் விஷயங்கள் (லிங்கம் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது) உருவாவதற்கு முன் பும்ஸவனத்தைச் செய்தால்தான் ஆண் சிசுவை எதிர்பார்க்க முடியும்.) பகவனால் லிங்கம் ஏற்பட்ட பின்னர் இதைச் செய்தால் அது பலிக்காது.
    ஸீமந்தோந்நயனம் என்றால் வகுடு பிரித்தல் உள்ள கர்மாவாகும். இது 6 அல்லது 8ம் மாதத்திற்குள் செய்யவேண்டியது. இப்போது இவ்விரு கர்மாக்களும் சேர்த்தேதான் அநுஷ்டிக்கப்படுகிறது. இவை சிசுவுக்கும் கர்ப்பிணிக்கும் சேர்ந்து உத்தேசமானது. இதை ப்ரதி( ஒவ்வொரு) கர்ப்பத்திற்கும் அநுஷ்டித்தல் நலம் என்பது பல ரிஷிகளின் அபிப்ராயம். ஏனெனில் முன் மந்த்ரப்படி, கணவன் – ப்ரதி (ஒவ்வொரு)  கர்ப்பத்திலும் உனக்கு புருஷ ப்ரஜையே ஜநிக்க வேண்டும் என்று ப்ரார்தித்துக்கொண்டிருக்கிறான்.


மந்த்ரார்த்தம் 2ம் ப்ரச்னம் 11-ம் கண்டம்
ஸீமந்தோந்நயந ப்ரகரணம்


    இங்கு மந்த்ர ஆரம்பம் மட்டுமே காட்டப்பட்டிருக்கிறது. நாமிங்கு முழுவதையும் எழுதுவோம். இது தைத்ரீய யஜூர் ஸம்ஹிதை காண்டம் 3, ப்ரச்நம் 3, அநுவாகம் 11ல் வருகிறது.
    1. லோகத்திற்கு (உலகத்திற்கு) ரக்ஷகனும், ச்ருஷ்டி, ஸம்ஹாரங்களைச் செய்ய வல்லவனுமான ப்ரஹ்மதேவன் நமக்கு தனத்தைத் தரட்டும். அவர் எங்களது மநோரதத்தை பூர்த்தி பண்ணி வைக்கட்டும் ---அவரது அனுக்ரஹமிருக்கட்டும் என்பதாம்.
    2. ப்ரஹ்ம தேவன்தான் தனத்திற்கும், ப்ரஜைகளுக்கும் அதிபதி. அவர்தான் இந்த உலகத்தை ச்ருஷ்டி செய்தவர். அவர் இந்த ஸீமந்த ஹோமம் செய்கிற யஜமானனுக்கு புத்ரனைக் கொடுக்கிறவர். அந்த ப்ரஹ்ம தேவனுக்கு நெய் நிறைந்த ஹவிஸ்ஸைக் கொடுக்கிறேன்.  ஹோமம் செய்கிறேன்.
    3. ப்ரஹ்ம தேவன்தான் குறைவற்ற தனத்தை பரம்பரை பரம்பரையாய் போதுமளவுக்கு கொடுத்து வருகிறார். அவர் ஸத்யஸங்கல்பர் (எண்ணியது எண்ணியாங்கு எய்தப்பெறுபவர்). அவர் நிச்சயமாய் அநுக்ரஹிப்பார் என்பதை த்யானம் செய்கிறோம்.
    4. புத்ர காமனும் (பிள்ளைச் செல்வத்தை விரும்புகிறவனும்), கர்ப்பாதானம் செய்திருப்பவனும்,  தற்போது (இந்த ஸீமந்த ஹோமத்தில்) ஹவிஸ்ஸை (தேவ ஆஹாரம்) வழங்குகிறவனுமான எனக்கு ப்ரஹ்ம தேவன் ஸந்தாந ஸம்பத்தை (ஸந்தானம் என்றால் குழந்தை, ஸம்பத் என்பது சொத்து அல்லது பாக்யம் என்று பொருள்படும்) அநுக்ரஹிக்கட்டும். மேலும், மரணமில்லாதவர்களான விச்வே தேவர்கள் (எந்த தேவருக்கும் மரணம் கிடையாது, அதனால் அவர்களுக்கு அமரர்கள் என்று பெயர்)  மற்ற தேவர்களைப்போல் என்னிடம் ப்ரியமாய் இருக்கும் 'மதிதி' தேவியும் எனக்கு ஸத்புத்ரனை உண்டு பண்ணட்டும்.
    "தாத்ர இதம் நமம" என்று ஒவ்வொரு ஹோம முடிவிலும் சொல்லப்படும் "தாத்ரு ஹோம மந்த்ரார்த்தம்" முடிவடைந்தது.
    இனி வரப்போகும் ரிக்குகள் (மந்த்ரங்கள்) முதல் காண்டம், 4ம் ப்ரச்நம், 46ம் அநுவாகம்.
    1. ஓ! அக்நிதேவனே! நான் என்றைக்காவது மரிக்கக் கூடியவன், நீரோ மரணமற்றவர். ரக்ஷணார்த்தம் (காப்பதற்காக) உம்மை அழைக்கிறேன். ஓய் ஜாதவேதஸே (பிறந்த யாவற்றையும்  அறிபவர்)! எனக்குக் கீர்த்தியைக் கொடும். ஸந்ததிகளை அடையும் பாக்யத்தை அளித்து என்னை(யும்) மரணமற்றவன் ஆகச்செய்யும். (‘ஆத்மாவை புத்ர நாமாஸி" என்னும் மந்த்ரம், ஒருவன் தானே மகன் ரூபத்தில் பிறக்கிறான் என்று கூறுகிறது. எனவே ஒரு மகனைப் பெறுவதன் மூலம் அவன் மரணத்திற்குப் பின்னும் மகன் உருவில் வாழ்வதால் மரித்தும் மரியாதவனே ஆகிறான்).
    2. உம்மை உபாஸிப்பவருக்கு இஹத்தில் (இவ்வுலகில்) ஸந்ததி, ஸம்பத் (சொத்துக்கள்), பசுக்கள், தாஸபூதர்கள் (வேலையாட்கள்) ஆகியவையும், பரத்தில் (மரித்தபின் செல்லும் உலகில்) ஸுகமும் உமது கடாக்ஷத்தால் (அருளால்) ஏற்படும்.
    3. பலம் மிக்கவனான ‘சவஸ்" என்ற தேவனின் மைந்தனான அதிக பலமுள்ள ஓ இந்த்ர தேவனே! உம்மிடம் போக்ய வஸ்துக்கள் (இன்பத்தை அளிப்பவை) ஸம்ருத்தியாக (தேவைக்கும் மிகுதியாக) இருக்கின்றன. ஆகையால், (இன்பத்தை விரும்பும்) யாவரும் உம்மையே உபாஸிக்கின்றனர். உம்மைவிட மேலான ஒருவரும் இன்மையால் (தக்காரும் மிக்காரும் இல்லாததால்) எனக்கு பலமான (வலிமையுள்ள) புத்ரனை ஸங்கல்பியும் (ஆசீர்வதியும்).
    4. ஒருவன் பெற்ற பிள்ளைகளுக்குள்  சண்டை ஏற்பட்டால், அவர்கள் தம் தந்தையிடம் முறையிட்டு பிரச்சினையைத் தீர்த்துக்கொள்வது போல, மற்ற தேவர்களுக்குள் வழக்கு (பிரச்சினை) ஏற்படும்போது, அவர்கள் உம்மை (பிதாவாக எண்ணி) நாடி, நீதி கிடைக்கப் பெறுகின்றனர். ஒவ்வொரு ஹோமமும் உம்மையே வந்தடையட்டும்.

3ம் காண்டம், 3ம் ப்ரச்னம், 11ம் அநுவாகம்
    பூ லோகம், புவர்லோகம், ஸுவர்லோகங்களும் (மூவுலகும்) ப்ரணவ ப்ரதிபாத்யனான (ப்ரணவ மந்திரத்தின் பொருளானவனான) ஸ்ரீமந் நாராயணனால் நியமநம் செய்து வரப்படுகிறது. ஆகையால் அவரே வகுடு பிரிக்கும் இச்சுப காரியத்திலும் எனக்கு அநுமதி கொடுக்கவேண்டும்.
    (வகுடு பிரிக்கும்போது சொல்லப்படும் இரு மந்த்ரங்களுக்கான அர்த்தம்)
    1. ராகா என்னும் பௌர்ணமாஸி தேவதையை இந்த சுபமான ஸ்துதியால் அழைக்கிறேன். அவள் என் ப்ரார்த்தனைக்குச் செவிசாய்க்கட்டும். அவள் இந்தக் கர்மாவை நியூநம் - அதிரேகம் (குறைவுபட்டது - மிகைப்படுத்தப்பட்டது) (தாழ்வு - உயர்வு) இல்லாததாகச் செய்யட்டும். (அதாவது சாஸ்த்ரப்படி சரியாக அநுஷ்டிக்கப்பட்டதாகச் செய்யட்டும்.) பிறகு விசேஷ தாதா (வள்ளல்) என்று கீர்த்தி (புகழ்) பெறக்கூடிய புத்ரனைத் தரட்டும்.
    2. ஹோமத்தால் உபாஸிப்பவர்களுக்கு வேண்டியதைக் கொடுத்து அருள் புரியும் ஓ ராகா தேவதையே! அதே அநுக்ரஹ ஸங்கல்பத்துடன் (அருள்புரியும் நோக்கத்துடன்) ஸந்தோஷமாய் இப்போது எங்களை வந்தடைவாயாக. நாநா (பலவிதமான) பாக்யங்களை அளித்து அருள்வாயாக.
    பிறகு வீணா கானம் செய்வதற்கான இரு மந்த்ரங்கள்.
    இக்கடைசீ மூன்று மந்த்ரங்களையும் யஜனானன் (கர்த்தா) சொல்லியான பிறகு அக்னிக்கு மேற்கே தன் பார்யையை (மனைவியை கிழக்கு நோக்கி) உட்காரவைத்து, தான் மேற்கு நோக்கி நின்று கொண்டு, மூன்றிடங்களில் வெண்மை உள்ள முள்ளம்பன்றியின் முள், தர்பங்கள், காயுடன் கூடிய பேயத்திக் கொத்து, முளைவிட்ட நெற்பயிர் இவற்றை ஒன்றாக (கட்டி) வைத்துக்கொண்டு, மனைவியின் (கர்பிணியின்) சிரசின் (தலையின்) நடு பாகத்தில் மேல் நோக்கிச் செல்லும்படி ஒரு கோடு கிழிக்கவேண்டும். இதுவே ஸீமந்தோந்நயனமாகும். இது ஸ்த்ரீக்குரிய (கர்பிணி பெண்ணிற்குச் செய்யப்படும்) கர்மா. என் பிள்ளைக்கு ஸீமந்தம் என்று அஜ்ஞர் (விஷயம் தெரியாதவர்) கூறுவர்.
    பிறகு வீணை வாசிக்கத் தெரிந்தவர்களை வீணா கானம் செய்யச் சொல்லவேண்டும். பிறகு இதில் முதல் ரிக் (மந்த்ரம்) ஸால்வ தேசத்தைச் சேர்ந்தவருக்காகும். இரண்டாவது மற்ற தேசத்துக்காம் (மற்ற ப்ரதேசங்களைச் சேர்ந்தவருக்காகும்). இதில் ‘அஸெள" என்ற பதத்திற்குப் பதிலாக யஜமானன் (கர்த்தா) தான் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ப்ரபலமான (தாமரபரணி, வைகை, காவேரி, பாலாறு, கோதாவரி, க்ருஷ்ணா, யமுனா) நதியின் பெயரைச் சொல்லவேண்டும்.
    வீணாகான மந்த்ரம்
    1. ஓ யமுனா நதியே! உனது கரையில் வஸிப்பவர்களான ஸால்வ தேசத்து வாஸிகள், அக்கம் பக்கத்து ராஜாக்களைப் பார்த்து, ‘யுகாந்தர ராஜபுத்ரனே தங்களுக்கேற்ற ராஜா" என்று கானம் செய்கின்றனர்.
    2. மற்ற நதிகளின் கரையில் வஸிப்பவர்களான ப்ராஹ்மணர்கள், ‘ஸோம தேவதைதான் எமக்கு ராஜா" என்கின்றனர்.
    பிறகு முளையுடன் கூடிய நெற்பயிரை நூலில் கட்டி, அதை கர்பிணியின் தலையில் கட்டி, நக்ஷத்ரம் உதிக்கும்வரை மௌனமாய் இருந்து, பிறகு கன்று பசுவை (பெண்பால் கன்றுக்குட்டியை) கிழக்காகவோ, வடக்காகவோ முன் நடக்கவிட்டு, அதைத் தொடர்ந்து சிறிது தூரம் நடந்தபின் மௌனத்தைக் கலைக்கவேண்டும்.
அடுத்தது பும்ஸவனம்.