புதன், 28 செப்டம்பர், 2011

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானம்.

17-1-1958ல் திருவல்லிக்கேணித் தமிழ்ச்சங்கத்தால் வெளியிடப்பட்ட  “ஸ்ரீ  துவரிமான் துய்யமாமுனி தூமணி மாலை”  ஸ்ரீஅஹோபிலமட 40வது பட்டத்தில் வீற்றிருந்த ஸ்ரீவண் சடகோபஸ்ரீ ஸ்ரீரங்கநாத சடகோப யதீந்திரரின் 35வது வார்ஷீக மஹாராதனத் திருநாளில் துவரிமானில் உள்ள அவரது பிருந்தாவனத்தில் வெளியிடப் பட்ட நூலாகும். பல அருமையான விஷயங்களை, பந்தல்குடி ரெ. திருமலை அய்யங்கார், அவருக்கே உரித்தான அசாதாரண முறையில் தொகுத்து அளித்திருக்கிறார். அவற்றுள் ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானம் ஒன்று. இது 41ம் பட்டம் அழகியசிங்கர் அருளியது. இதற்கு 43ம் பட்டம் ஒரு மணிப்பிரவாள உரை எழுதியிருக்கிறாராம். அந்தக் காலத்திலும், அடியேனைப் போல, சம்ஸ்க்ருதம் தெரியாதவர்கள் நிறைய இருந்திருப்பார்கள் போலும். அப்படித் தமிழ் மட்டுமே தெரிந்தவர்கள் மேல் இரக்கப் பட்டு, ஸ்ரீ திருப்பூந்துருத்தி கிருஷ்ணஸ்வாமி அய்யங்கார் என்பவர்  இந்த ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யான சோபானத்தைத் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார். ஸ்ரீ அஹோபில மட நண்பர்களுக்காக அதை இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.

ஸ்ரீ லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ த்யாந ஸோபாநம்

வெள்ளிய தோர்தெய்வ மண்டபமாம் --- அதில்
            விளங்குந் தூண்களோர் நான்குளவாம்.
ஒள்ளிய பொன்றிக ழூசலுண்டாம்  -- அது
        ஒளிவிடும் நவமணி குயின்றதுவாம்.                                     .1.

பொன்றிகழ்  பீடமும்  சேர்த்துளதாம் --- அதில்
    பூமக ளார்வன் வீற்றுளராம்.
தன்சரண் சார்வதோ ராசையினால்  சாரும்
    தமர்கள்தாம் பற்றுதற் கேற்றவண்ணம்.                                   .2.                 

நீட்டிய பாதத்திற் பாதுகையாம் --- அதை
    நேசமாய்க் கருடன்றான் தாங்கிநிற்பான்.
தேட்டமா மிவ்வலத் திருவடியை  எண்ணும்
    திருவுடை யார்பவக் கடல்கடந்தார்.                                          .3.

மடக்கிய திருவடி மற்றொன்றது  --- செழு
    மலர்மக ளெழுந்தருள் பீடமாகும்.
கடக்கரும்  பவக்கடல் கடப்பதற்கு  அவர்
    கணுக்கால்கள் வாய்த்ததோர் தெப்பமாகும்.                              .4.

முழந்தாள்க ளிரண்டுமிக் கெழிலுடைத்தாம் --  அவர்
    முன்றொடை கதலியின் தண்டுநிகர்.
மழுங்காத  வழகுடன் கடிவிளங்கும் -- பொன்
    மணிக்காஞ்சி பீதக வாடைசூழ.                                                      .5.

புரைதீர்ந்து விளங்கிடும்  நாபிமலர் --  இப்
    புவனிக்கெ லாமது பிறந்தகமாம்.
திரையாடு கடல்தந்த மாமகள்வாழ்  அவன்
    திருமார்வுக் கலங்காரம் திருமறுவாம்.                                             .6.

நரசிங்கன் கண்டத்துக் கலங்காரம் -- ஒளி
    நலமிக்க கௌஸ்துப மாமணியாம்.
திருவங்கு மடிதன்னி லிடப்பாகத்தில்  வீற்று
    தேவனார் அணைந்திட மகிழ்ந்திடுவாள்.                                         .7.

மார்புற  வணைந்தங்கு வீற்றிருப்பாள் --  அலை
    மாக்கடல்  பூத்ததோர்  மடக்கொடிதான்.
சார்புறத்  தானின்ற  வண்ணமதை  அவர்
    சரணக்கு  றிகாட்டுங்  கையுணர்த்தும்.                                               .8.


அங்கையொன்  றபயத்தைக்  காட்டிநிற்கும்  -- இரு
    அழகிய  நீண்டபெ  ரும்புயங்கள்.
சங்கமும்  சக்கரமும்  தாங்கிநிற்கும்  -- முகம்
    தாமரை  நாண்மலர்  போன்றுளதாம்.                                                     .9.

பற்பல  வண்ணவில்  வீசுமணி  -- அங்குப்
    பகலவன்  காந்திபோல்  சோதிதிகழ்
நற்கன கம்முடி  சாற்றினராம்  --  திரு
    நரசிங்க  னெழிலுடை  முடிக்கணியா.                                                    .10.

மேற்புறம்  பொன்மயப்  பணியரசாம்  --- அவர்
    மிக்கசெஞ்  சோதிநற்  பணிமுடியால்
நாற்புறமும்  விரித்துநற்  குடைகவிப்பார்  -- மேலே
    நலமிகப்  பொற்ப்ரபை  விளங்கிடுமாம்.                                                  .11.

பொன்மய  மாம்சத்ரம்  மேலுண்டு  அது
    புரையற்று  நலமிக்கு  விளங்கிடுமாம்.
தன்மடி  மேற்றிரு  மாமகளை  -- இடத்
    தாமரைத்  திருக்கண்ணால்  நோக்கிடுவார்.                                            .12.

வலதுதி ருக்கண்ணால்  பத்தியொடு  -- ஆங்கே
    வந்தெதிர்  நிற்பாரை  யாதரிப்பார்.
பொலன்மாலை  கண்டத்திற்  பூண்டிருப்பார் -- மற்றும்
    பூஷணம்  பற்பல  தரித்திருப்பார்.                                                             .13.

சாலக்ரா  மத்தாலே  மாலையுண்டாம் -- இன்னும்
    ஸ்வர்ணத்தால்  யஜ்ஞோப  வீதமுண்டாம்
மாலுக்க  லங்காரம்  காசுமாலை  -- முத்து
    மாலைகள்  சம்பக  மாலையுண்டாம்.                                                       .14.

மதிப்புக்  கடங்காத  விலைபெற்றதாம்  --  காஞ்சி
    மட்டற்ற  மாணிக்க  மிழைத்துளதாம்.
துதிப்பார்க்  கநுகூலம்  செய்பவராம்  -- ஹரி
    தொண்டரைப்  புரப்பதில்  தீக்ஷிதராம்.                                                   .15.

மாலோல  தேவனைக்  கருதுவார்க்கு  --அடி
    மலர்முதல்  முடிவரை  யெண்ணுவார்க்கு
மாலோலன்  திருவடிப்  பத்திதன்னை  -- மிக
    மட்டற்று  வளர்த்திடும்  பெற்றியதாய்
மாலோல  சடகோப  யோகிவரர்  -- பெரு
    மகிழ்ச்சியால்   ஸோபான  மியற்றித்தந்தார்.                                         .16.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக