செவ்வாய், 27 செப்டம்பர், 2011

பாட்டுக்கார மாமி வந்திருந்தார்

ஆச்ரம கைங்கர்யங்களில் அடியேனுக்கு மிக்க மகிழ்ச்சியைத் தருவது , ஸ்ரீமத் ஆண்டவனின் நியமனம் மற்றும் அவரது அனுக்ரஹ விசேஷத்தால் திருப்புல்லாணி ஆச்ரமத்தில் நடந்து வரும் ததீயாராதன கைங்கர்யங்கள். ஆடி, தை, மஹாளய பக்ஷ அமாவாசைகள், பங்குனி, சித்திரை ப்ரும்மோத்ஸவங்கள் என்று இப்படிப் பல நாட்கள் நடக்கும் இந்த ததீயாராதனங்களில், எங்கெங்கிருந்தோ வருகின்றவர்கள், வயிறு நிறைந்து மனமும் நிறைந்து சந்தோஷப் படுவதைப் பார்ப்பது ஒரு பாக்யம். அப்படி வருகிறவர்களில் சிலரது அசாதாரணத் திறமைகளைக் கண்டு வியந்து அவர்களை ஸேவிப்பதும் இன்னொரு பாக்யம். அதிலும், அப்படிப் பட்ட சிலர் அடிக்கடி வந்து அடியேனை சந்தோஷப்பட வைப்பதும் மேலும் ஒரு பாக்யம். அப்படிப் பட்டவர்களில் ஒருவரைப் பற்றி ஏற்கனவே இங்கு குறிப்பிட்டிருக்கிறேன்.

            பாடவே பிறந்தாரோ என்று அடியேன் ஆச்சர்யப்படும் அந்த 70 ப்ளஸ் யங் மாமி இன்றைய மஹாளய பக்ஷ அமாவாசையன்றும் சென்னையிலிருந்து வந்திருந்தார். நங்கநல்லூர் பாட்டுக்கார மாமி என்று பிரபலமான அந்த ஸ்ரீமதி ஜெயலக்ஷ்மீ மாமி, கிளம்புகிற அவசரத்திலும், அடியேனுடைய வேண்டுகோளை ஏற்று இன்றும் சில பாடல்களைப் பாடி அடியேனை ஆசீர்வதித்தார். அந்த சில நிமிடங்களை வழக்கம்போல் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். உங்களில் பலருக்கும் அது பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்.

இன்னொன்று தெரியுமோ! மாமி பெருமாள் ஆச்சார்யன் மேலுள்ள பிரபந்தங்கள், பாட்டுக்களை மட்டுமே பாடுவார். இசைத் திறமை அபாரம் என்றாலும் வேறு பாடல்களுக்கு Strictly No தான்.

5 கருத்துகள்:

  1. நமஸ்காரம் சுவாமி,
    பாட்டு மாமி ..பாட்டு மிக அற்புதம்...
    மிக்க நன்றி ...

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா3:54 AM

    Adiyen Nandakumar.Excellent.THanks.Do you have her contact numberor address in Nanganallur so that I can invite her to our temple

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா12:12 PM

    Really enjoyed the Thirucchanda viruttham, Thiruviruttham, Nacchiar thirumozhi and thiruvoimozhi pasurams by Patti. Thanks for posting this
    AdiyEn,
    Vilakkudi Sridharan (USA)

    பதிலளிநீக்கு
  4. Mami's performance is really excellent. I also would like to know her address ( I am living near that area) to meet her and convey our thanks in person when time permits. Dasan.

    v.s.satagopan

    பதிலளிநீக்கு