திங்கள், 5 அக்டோபர், 2009

திருப்பாதுகமாலை

30. சித்திரப்பத்ததி

வழியெதுகை

911. தலப்பல நிலைப்பரி தனிப்பரி யரிப்பேர்
           நிலைத்தெதி னலத்திரு நிலத்தலை நிலைத்தான் 
           கலைத்திரு விசித்திர கவித்திர னனைத்தின்
           னிலைப்புகழ் மணிப்பத நிலைப்புக லடைந்தேன்.
     1

வழியெதுகை, வழுப்போலி, பொருட்சித்திரம்.

912. கேட்டிதிவி சித்திரமு னீட்டியுக நீதிப்
         பாட்டிலரி காட்டுபகு பாட்டிலரி பாதூ!
         கூட்டுமணி சித்திரகு ருத்திருபொ றித்துன்
         பாட்டடிந லப்பலப யப்புறுன யப்பாம்.               2

கோமூத்திரி

913. சுரா சுரா திகை தொழு 
         மிரா மசே மபா லிகை
         சரா சரா ளுகை செழு
         முரா ரிசே டபா துகை                                     3

 TPmalai 913

(படம் ஸ்ரீ கேசவ அய்யங்கார் வரைந்தது)

கூடசதுர்த்தம்

914. போதம லர்த்திரு மாமகள் போல
         மாதகை மங்கல நாழிநி ரப்பிப்
        பாதக கோடிது டைத்தெழு வாரிப்
        போதரி மாதிரு பாதுகை வாழி                    4

நிரோட்டியம்

915. கரைந் தகங் கடந் தரத்
         திரைக் கடற் கணே ழையே
        னிரங் கரங் கன்தா ணிலைச்
        சரண் செறிந் தடைந் தனன்                      5

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக