திங்கள், 10 ஆகஸ்ட், 2009

இன்று ஒரு புதையல்

திருப்புல்லாணி போன்ற சிறு கிராமங்களில் வசிப்பதில் எத்தனையோ சிரமங்கள் உண்டுதான். ஆனால் பெரு நகரங்களில் அல்லது போக பூமிகளில் சகல விதமான ஸௌகர்யங்களுடனும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெரிய பாக்யம் அடியோங்களுக்கு உண்டு. அங்கெல்லாம் இருப்பவர்கள் பெரிய யதிகளையோ, ஸம்ப்ரதாயத்தில் சிறந்தாரையோ, கைங்கர்ய சீமான்களையோ தேடிச் சென்று ஸேவிக்க வேண்டியிருக்க, இந்தத் திருப்புல்லாணியிலுள்ளவர்களை எல்லாரும் தேடி வந்து அடியோங்களை ஆஸீர்வதிக்கின்ற மஹா பாக்யம் அது. அதிலும் அடியேன் பித்ருக்கள் செய்த நல்லவைகளால் அடியேனுக்குக் கிட்டிய பெரும் பேறு ஸ்ரீமத் ஆண்டவனே இங்கு ஒரு சாதுர்மாஸ்யம் அநுஷ்டித்து அனுக்ரஹித்தது. இப்படி வருகின்ற ஆஸீர்வாதங்களால் ஒரு எழுத்தும் அறியாத அடியேன் வசம் அடிக்கடி புதையல்கள் போல பல புஸ்தகங்கள் வருவதும், அதில் எதுவுமே புரியாமல் யாராவது அர்த்தம் சொல்வார்களோ என்ற ஆசையால் இங்கு அவற்றை இடுவதும் அடியேன் வாடிக்கை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஸ்ரீமத் ஆண்டவன் மண்டுகளைப் பற்றி "நன்றாக அலம்பி, துடைத்து, கவிழ்த்து வைத்த பாத்திரம் " என்று கூறுவதுண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணமான அடியேனுக்கு, பரம காருணிகரான ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தாலும், இங்கு ஆச்ரமத்தில் தங்கி முழு மன நிறைவுடன் ஊர் திரும்புகின்ற பல பெரியோர்களது இதயபூர்வமான ஆசிகளாலும் இன்று எதிர்பாராமல் கிடைத்த ஒரு பொக்கிஷத்தின் ஒரு பகுதியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சுட்டிகள் மீது க்ளிக் பண்ணி அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். (இரண்டு பாகங்கள் உள்ளன.)
Get this widget | Track details | eSnips Social DNA


03.9.1976--Side-B....





இங்கு அடியேன் எழுதுவதையெல்லாம் எல்லாரும் படிக்க வேண்டும் என்று இதுவரை நினைத்ததில்லை. ஏற்கனவே அடிக்கடி எழுதியிருக்கிறேன். யாருக்காவது, எப்போதாவது, என்றாவது பயன்படும் என இந்தப் பதிவுகளை எழுதி வருகிறேன். ஆனால் இப்போதோ எல்லாரும் வர வேண்டும் அடியேன் பெற்ற பாக்யம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும், எப்படி இன்று முதல் முறையாக இந்த தெய்வக் குரலை அடியேன் கேட்டு பரவசப்பட்டேனோ, அதேபோல் இதுவரை கேட்காதவர்கள் அனுபவிக்க வேண்டும், ஏற்கனவே பல முறை கேட்டிருப்பவர்கள் மீண்டும் கேட்டு அந்த இனிய நாட்களின் நினைவிலே மகிழ வேண்டும் என்றெல்லாம் மனசு ஆசைப் படுகிறது. கேட்டவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி பலர் கேட்டு மகிழ உதவ வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன்.

5 கருத்துகள்:

  1. Yes mama. It's really a bhagyam listening to these. Thank you for your services. But, I am not able to download it from your esnips page.

    பதிலளிநீக்கு
  2. Swami,
    Thank you very much for posting the files here. The file does not play after 23 mins and 55 secs. From my very little experience esnips is pretty unreliable. It could get stuck anywhere anytime. It would really nice to have through Youtube, which in my opinion is more reliable. Thank you agian for the post.

    Ramanuja Dasan
    S Vijayaraghavan

    பதிலளிநீக்கு
  3. Dear Sri Raghuveera Dayal,
    This is really a treasure and I appreciate your innovativeness in using the facilities available in internet. I listned to the Upanyasam in part,I will do it fully, when I have time.
    R.srinivasan

    பதிலளிநீக்கு
  4. Sri Vijayaraghavan and Smt Shanthi,
    From next uploads adiyen will correct some errors in uploading and I will also provide links both for on line listening as well as for downloading also. Thank you for sharing your views.

    பதிலளிநீக்கு
  5. RS Swamin,
    but it seems some experience difficulty. The second part is not playing for many. I shall correct every thing and re-upload after thoroughly checking it up. And before the end of this week I shall upload remaining 4/5 upanyasams also

    பதிலளிநீக்கு