வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ஆராவமுதம்

நேற்று உலகமெங்கும் பலர் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர் அல்லவா ! அதையொட்டி "சந்தவசந்தம்" கூகுள் குழுவில் வந்த ஒரு கவிதை இங்கே !

மலர்பூத்தது வனம்பூத்தது மதிபூத்தது வானோர்
நிலம்பூத்தது நதிபூத்தது நெறிபூத்தது நல்லோர்
தலம்பூத்தது மனம்பூத்தது சனம்பூத்தது ஆயர்
குலம்பூத்தது கருமாமுகில் குழந்தைவர வாலே


இந்தப் பாடல் இன்று பூத்ததும் பொருத்தமே. நமது திருக்குடந்தை ஆண்டவனின் 8 உபந்யாஸங்களில் முதலாவதாக வருவதும் அந்த கிருஷ்ணனைப் பற்றியதுதானே ! இங்கு உள்ள லிங்கில் க்ளிக் செய்து அங்கு காணும் 8 ஆடியோக்களையும் தரவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆடியோ லிங்கின் அருகில் இருப்பது உபந்யாஸம் நடந்த தேதி. (391976 என்பது 3--9--1976 )


http://ishare.rediff.com/music/HHupan


ஓரிரு நாட்களில் தனியே download செய்து கொள்ள லிங்க் தருகிறேன். இப்போதைக்கு இரண்டு உபந்யாஸங்கள் இங்கு உள்ளன. நேரடியாக இறக்கிக் கொள்ளலாம்.


http://www.mediafire.com/folder/9fb4b6836e5e573824a64199ac7f73e552d82ba9a27b8d14b8eada0a1ae8665a

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக