சனி, 29 டிசம்பர், 2007

திருவருட்சதகமாலை

க்ருதிந: கமலாவாச காருண்யை காந்திநோபஜே
தத்தேயத் ஸூக்தி ருபேணத் ரிவேதீ ஸர்வயோக்யதாம்.  3.

திருப்பர னடிக்கவி யெனத்தமை விடுத்தாங்
கொருப்படு திடத்தொரு கடைப்பிடி நடைக்கண்
உருப்பெறு மறைத்தலை தலைத்தலை யுயக்கொள்
உரித்தருள் தமிழ்க்கட வுளர்க்கெனை யளித்தேன்.

[ஸ்ரீநிவாஸனுடைய தயையொன்றையே தஞ்சமாகப் பற்றியவரும்  தங்கள் செய்யதமிழ் மாலைகளாகிய பிரபந்தங்கள் மூலமாய் வேதங்கள் அனைத்தையும் அனைவருக்கும் யோக்யமாகும்படி செய்வித்த தமிழ்க்கடவுளருமான ஆழ்வார்களை இடைவிடாமல் பிரியமாகத் தொழுகிறேன்.]

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக