செவ்வாய், 2 ஜனவரி, 2007

புத்தாண்டு சிந்தனைகள்

இன்று எந்த நாளிதழைப் புரட்டினாலும் பக்கம் பக்கமாகப் படங்கள். தமிழகத்தின் ப்ரசித்தி பெற்ற பெறாத அனைத்துக் கோவில்களிலும் கூட்டமோ கூட்டம். மணிக்கணக்கில் வரிசையில் நின்று சில நிமிடநேர தரிசனமாம். 2007 நல்லபடியாகப் பிறந்து அனைவரும் நலமாக இருக்க ஆலயங்களிலும் விசேஷ பூஜைகளாம். இன்று எல்லாரும் ஆங்கில காலண்டரையே பின்பற்றுவதால் இதில் பெரிய தவறு இல்லை. சந்தோஷம்தான். ஆனாலும், தமிழ் வருடப் பிறப்பன்றும் மக்கள் இப்படி கோவில்களுக்குச் சென்று வழிபட்டால் -- குறைந்த பக்ஷம் தமிழ்நாட்டின் நகரங்களிலாவது-- நன்றாயிருக்கும். ஆனால் பாருங்கள் அன்று எல்லா தொலைக்காட்சிகளிலும் நடிகர்கள் பேட்டி வருகிறதே! புது திரைப் படங்களிலிருந்து பாடல்கள் ஒளிபரப்புவார்களே! தவற விடமுடியுமா? மறுபடியும் குடும்பத்துடன் கண்டு களிக்க முடியுமா? ஆலயங்களில் ஸ்வாமி எங்கே போய்விடப் போகிறார்? அப்புறம் போய்க் கொள்ளலாம். பரவாயில்லை !

ஏகாதசி மரணம் த்வாதசி தகனம் விசேஷமாம். பெரியவர்கள் சொல்கிறார்கள். வைகுண்ட ஏகாதசியோ மிக விசேஷம். திரு சதாம் ஹுசைன் என்ன புண்ணியம் பண்ணினார்? அவரைத் தூக்கிலிட்டது வைகுண்ட ஏகாதசி அடக்கம் செய்தது மறுநாள் த்வாதசியாயிற்றே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக