சனி, 9 செப்டம்பர், 2006

திருப்புல்லாணி மாலை

திருப்புல்லாணி மாலை
இல்வாழ்க்கை (10வது குறள்)
மையற்றவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப்படு மென்பர் புல்லைத் திருநகர்வா
ழையற் கடிமைப்பட்டு இல்வாழ்க்கை நீதி அமைந்தவரை
மெய்மைக் கருத்துறச் சொல்வது அன்றோவந்த மேன்மைகளே.
குறிப்பு:-- மை=குற்றம்;ஐயற்கு=தலைவர்க்கு; மெய்மைக்கருத்து= தூய எண்ணத்துடன்;
வாழ்வாங்கு=வாழும் இயல்பினொடு; வான் உறையும் தெய்வம்= நித்திய
சூரிகள்; (திருப்புல்லாணி ஜகன்னாதனை வணங்கும் அடியார்களைத்
தூயமனதால் வழிபட்டால் எல்லா மேன்மைகளும் கிட்டும்
வாழ்க்கைத் துணைநலம் (4வது குறள்)
தருந்தக்க நாண்மடம் அச்சம்பயிர்ப்புத் தரித்த பெண்ணிற்
பெரும்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண்டாக்கப் பெறிற்
பொருந்தச் சொல்லத்தனமை புல்லைப்பிரான் திருவடிப் பூவடியை
வருந்தித் தவம்புரிமாதர் கற்பல்லது மற்றில்லையே
குறிப்பு:-- தரும்தக்க-- கூறத்தக்க; நாண்-- வெட்கம்; பயிர்ப்பு-- மனம் கொள்ளாமை;
திண்மை-- கலங்காநிலைமை (புல்லைப் பிரானையே போற்றிவாழும் கற்பே
கற்பாகும்)
மலேகானில் குண்டு வெடிப்பு
இப்போது மசூதியில் குண்டு வெடித்தது. மும்பையிலோ,கோவையிலோ
மலேகானிலோ எங்கு வெடித்தாலும் சம்பந்தம் இல்லாத அப்பாவிகள்
உயிரிழப்பது பெரிய வேதனைதான். ஆனாலும்கூட இப்போது மசூதியில்
வெடித்த நாளை எல்லாத் தரப்பாரும் சற்று சிந்தித்தால், மதங்களிடையே
பல விஷயங்களில் உள்ள ஒற்றுமை புலனாகும்.
அன்று ஷப்-ஈ-பரத் என்னும் முக்கியமான தினமாம். மறைந்த முன்னோர்கள்
நினைவாக இந்த தினத்தில் அவர்களை நினைத்து தொழுகை செய்வதைக் குரான்
கட்டாயப் படுத்தியுள்ளதாக அனேகமாக எல்லா நாளிதழ்ச் செய்திகளும் தெரிவிக்
கின்றன.
இந்துக்களுக்கோ அது மாளயபக்ஷ ஆரம்ப தினம். அன்று முதல் அமாவாசை வரை
15 தினங்களும் பித்ருக்களுக்காக (மறைந்த மூதாதையர்கள்) திதி அளித்து விரதம்
அனுஷ்டிப்பது இந்துக்கள் கடமை. (தற்போது அந்தணர்கள் மட்டுமே கடைப் பிடிக்கின்
றார்கள் என்பது வேறு விஷயம்)
ஆக அடிப்படையான ஒன்று மூதாதையரை நினைத்து வழிபடுதல் பொது. அதை அனுசரிக்கும்
விதங்கள் மாறலாம். அது தேசாச்சாரம் எனப்படும். இப்படிபல விஷயங்கள் அடிப்படையிலே
ஒன்றுதான். இதை என்று நாம் எண்ணிப் பார்க்கப் போகிறோம்?
30 வருடங்களுக்கு முன்னே ஜாதியோ மதமோ அவரவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலும்,
துக்க காரியங்களிலும் மட்டுமே ப்ரதானமாக இருந்தன. என்னுடன் பள்ளியில் படித்த நண்பன்
இன்ன ஜாதியென்று போன வருடம் அவரது பெண் கல்யாணப் பத்திரிக்கை பார்த்துத் தான்
35 வருடத்திற்குப்பின் தெரியும். சீறாப்புராணத்தை நாராயணசுந்தரம் ஐயங்கார் அனுபவித்து
எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போல் யார் சொல்லப் போகிறார்கள்? ஈசான்யத்தைப்
பற்றியும், சைவ,வைணவ இலக்கியங்களைப் பற்றியும் நீதிமன்றங்களில் ஒன்றாகக்
காத்திருக்கும்போது கீழக்கரை SVM காசிம் அவர்கள் சொல்லச் சொல்லத் தானே
எனக்கு அவற்றின் அருமையை உணர்ந்து கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிந்தது
அவரவர் வழி அவரவருக்குச் சிறந்ததுதான். ஆனால் அதுதான் சிறந்தது மற்றவை மட்டம்
எனும் நினைப்புத் தானே கலகங்களுக்குக் காரணம்?
மாச்சரியங்களை உண்டாக்கி சுகம் காணும் சில சுயநலக் காரர்கள் விரிக்கும் பொய்மை
புரட்டுகளில் புத்தியைச் செலுத்தி உண்மை நிலை தெளிந்து வேறுபாடுகள் களையப் படவேண்டும்.
நடக்குமா? நடக்காது. ஏனென்றால் நாட்டில் பல அரசியல்வாதிகளுக்கு நாம் பிரிந்தே இருப்பது
தான் வசதி. இல்லையா?
திருதிரு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக