ஞாயிறு, 12 நவம்பர், 2006
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு--இராகம்--அசாவேரி--தாளம்--ஆதி
பல்லவி
நாராயணனெங்க ளாராவமுதனை
நாவேதுதிருண மேலே
அனுபல்லவி
சீரார்குடந்தையிற் செழிக்கும்கோமளவல்லி
சீரங்கர்தழுவிய காரங்கமேனி சாரங்கபாணி (நாரா)
சரணங்கள்நலமிகுந்ததன்மார்பிற் கவுத்துபமணிபோலே நாடுஞ்சகலஜீவ கோடிகளொருகாலே
கலுஷமதியார்கிங்க ராதிராச்சியமேலே
கடந்ததன்றிருவடி காணவேபரிவாலே
சொலுங்கரணகளேப ராதிகளைத்தொடுத்துத்
தொடர்ந்ததினாலன்னிய பரஞ்சேராமற்றடுத்து
உலகம் பிழைக்கவேண்டி வேதங்களைக்கொடுத்து
உரையறிந்திடவேநற் சாத்திரங்களுமடுத்து
நலவிதிகாசப்பிர மாணங்கள்செய் புராணங்கள்தந்த (நாரா) சநற்குமாராதிகளால் மோட்சசாத்திரங்களோதித்
தானேநாரதபரா சரசுகசவுகனாதி
கனத்தரிஷிகளிட்டாத் துமசம்பிரதாயரீதிகண்டு
நடத்தியின்னம் வியாஸமுனிவராதி
கனித்தமுனிவர்களுந் தாமாகவேபிறந்து
சாரீரகாதிகளைபிர வர்த்திசெய்தேதிறந்து
அனைத்துலகங்களிலும் யாவைகளுநிறைந்து
அணுவுக்கணுமலைக்கு மலையாகவேசிறந்து
மனத்திலெண்ணியதருள் வாசுதேவநங்கேசவதிரு (நாரா)
ஆளிட்டுப்பிரவர்த்திக்கை செயவும்வேண்டுமென்றன்றே
அன்னமச்சவயக்கிரீவ நரநாராயணரென்றே
நாளிட்டுவராகராம கீதாசாரியரென்றே
நல்லவவதாரங்க ளாலேதான்வெளிநின்றே
ஆளுந்திறமைசொல்லிப் புருஷார்த்தங்கள்விண்டு
அறிவிக்கச்சீவன்கள் தன்னையறிந்துகொண்டு
தாளுந்தடக்கைகளுங் கூப்பிப்பணிதல்கண்டு
தானேதரிசனத்தை வளர்த்திநின்றானே
பண்டுவாளுஞ்சங்கமுந்திரு வாழியாருயராழியாரரி. (நாரா)
விருத்தம்
கோதிலாத்தமிழாசாரியர்களின்னங்
குகதேவர்பாவருசிகபர்த்திமூவர்
மாதிரமேற்ப்ரவர்த்தகராம்டீகாசார்யர்
வாக்கியகாரருமெனவேபிரமநந்தி
ஓதுமிவர்களுக்குப்பின் யுகாரம்பத்தி
லுற்றநம்மாழ்வாரெனவேதூப்பிற்பிள்ளை
யாதிசம்ப்ரதாய பரிசுத்திதன்னி
லருள்செய்தார் வேதாந்தப்பொருள்செய்தாரே.
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
தரு--இராகம்--அசாவேரி--தாளம்--ஆதி
பல்லவி
நாராயணனெங்க ளாராவமுதனை
நாவேதுதிருண மேலே
அனுபல்லவி
சீரார்குடந்தையிற் செழிக்கும்கோமளவல்லி
சீரங்கர்தழுவிய காரங்கமேனி சாரங்கபாணி (நாரா)
சரணங்கள்நலமிகுந்ததன்மார்பிற் கவுத்துபமணிபோலே நாடுஞ்சகலஜீவ கோடிகளொருகாலே
கலுஷமதியார்கிங்க ராதிராச்சியமேலே
கடந்ததன்றிருவடி காணவேபரிவாலே
சொலுங்கரணகளேப ராதிகளைத்தொடுத்துத்
தொடர்ந்ததினாலன்னிய பரஞ்சேராமற்றடுத்து
உலகம் பிழைக்கவேண்டி வேதங்களைக்கொடுத்து
உரையறிந்திடவேநற் சாத்திரங்களுமடுத்து
நலவிதிகாசப்பிர மாணங்கள்செய் புராணங்கள்தந்த (நாரா) சநற்குமாராதிகளால் மோட்சசாத்திரங்களோதித்
தானேநாரதபரா சரசுகசவுகனாதி
கனத்தரிஷிகளிட்டாத் துமசம்பிரதாயரீதிகண்டு
நடத்தியின்னம் வியாஸமுனிவராதி
கனித்தமுனிவர்களுந் தாமாகவேபிறந்து
சாரீரகாதிகளைபிர வர்த்திசெய்தேதிறந்து
அனைத்துலகங்களிலும் யாவைகளுநிறைந்து
அணுவுக்கணுமலைக்கு மலையாகவேசிறந்து
மனத்திலெண்ணியதருள் வாசுதேவநங்கேசவதிரு (நாரா)
ஆளிட்டுப்பிரவர்த்திக்கை செயவும்வேண்டுமென்றன்றே
அன்னமச்சவயக்கிரீவ நரநாராயணரென்றே
நாளிட்டுவராகராம கீதாசாரியரென்றே
நல்லவவதாரங்க ளாலேதான்வெளிநின்றே
ஆளுந்திறமைசொல்லிப் புருஷார்த்தங்கள்விண்டு
அறிவிக்கச்சீவன்கள் தன்னையறிந்துகொண்டு
தாளுந்தடக்கைகளுங் கூப்பிப்பணிதல்கண்டு
தானேதரிசனத்தை வளர்த்திநின்றானே
பண்டுவாளுஞ்சங்கமுந்திரு வாழியாருயராழியாரரி. (நாரா)
விருத்தம்
கோதிலாத்தமிழாசாரியர்களின்னங்
குகதேவர்பாவருசிகபர்த்திமூவர்
மாதிரமேற்ப்ரவர்த்தகராம்டீகாசார்யர்
வாக்கியகாரருமெனவேபிரமநந்தி
ஓதுமிவர்களுக்குப்பின் யுகாரம்பத்தி
லுற்றநம்மாழ்வாரெனவேதூப்பிற்பிள்ளை
யாதிசம்ப்ரதாய பரிசுத்திதன்னி
லருள்செய்தார் வேதாந்தப்பொருள்செய்தாரே.
சனி, 11 நவம்பர், 2006
ஸ்ரீவேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனைகள்
ஸ்ரீமதே ராமானுஜாய நம:ஸ்ரீமதே நிகமாந்த மஹாகுரவே நம:
ஸ்ரீ வேதாந்த தேசிக வைபவப் பிரகாசிகைக் கீர்த்தனை ********************************
காப்பு - ஆசிரிய விருத்தம்
பொன்னுறையுமணிமார்பனீலவண்ணன் பூங்கமலங்கண்கைமுகப்பாதன்வேதமென்னுமுயர் வேங்கடவெற்பினில்விளங்கு மெம்பெருமான் கண்டாவதாரமானபன்னுபுகழ்வேதாந்தகுருவிலாசம் பைந்தமிழாற்கூறுதற்கே சேனைநாதன்முன்னின்றுசுபந்தருவானவன் சீர்பாத மூப்பதாமிங்குவந்துகாப்பதாமே.
இதுவுமது.
வேங்கடநாதார்யகவிவாதிசிங்கர் வேதாந்தாசார்யரெனவிளங்கிநாளும்பாங்குபெறுதூப்பினகரநந்தசூரி பாலராய்வந்துதித்துப்பாரின்மீதுஓங்கியராமானுஜஸித்தாந்தஞ்செய்து முபநிஷதப்பொருளெல்லாம்வெளியாக்கண்டாரீங்கிவரையாமெல்லாமனத்துளாக்கி யெண்ணுவோம்வந்தநந்தான்பண்ணுவோமே. விருத்தம்
ராமா னுஜதயாபாத்திரரேயாகி ஞானவைராக்கியபூஷணஸம்பன்னர்தாமனார்வைபவப்பிரகாசிதன்னை தமிழினாற்கீர்த்தனையின்வரிசைபாடப்பூமாதுமணவாளனாதியாகப் புகழ்நாதயாமுநரேநடுவாய்நின்றுஹேமாசனாதிகுருபரம்பரைக்கே யென்செய்வோம்வணங்குதலையுஞ்செய்வோமே.
எம்பெருமான்றிருவடியேசொர்ணமாக இதரங்கள்யாவைகளுந்துரும்பாவெண்ணிநம்பினவரெங்கள்குருகருணைவாரி நல்லிராமா நுஜனார்சரணம்போற்றஅம்புவியிலெங்கணுமேபுகழுந்தூப்பி லநந்தசூரியர்குமரர்பூர்ணசந்த்ரவிம்பமாம்வேதாந்ததேசிகன்றன் விலாசந்தான்சரஸ்வதிவிலாசந்தானே.
எந்தமுடைக்குலங்களுக்குத் தந்தைதாயா யிசையுவதிதநயர்நிறைசெல்வமெல்லாந்தந்தருளியெங்கள்குலப்பதியாய்நின்று சரணமாய்வகுளமலர்த்தொடையல்வேய்ந்தஅந்தமுதற்குரவனடிவாழ்த்தியிந்த அற்புதவேதாந்தகுருவிலாசந்தன்னைச்செந்தமிழ்கீர்த்தனையாகச்செய்யவெங்கள் தேசிகரே வாக்கமுதந்தந்தாள்வாரே.
வாழ்வானகீர்த்திமிகும்பூதர்பொய்கை வரர்பேயர்பட்டர்பிரான்பத்திசாரர்சூழ்செய்குலசேகரனார்யோகிவாகர் தொண்டரடிப்பொடிகலியனெதிகணாதன்தாழ்வியாதுமிலாதபராங்குசருந்தேனார் தண்டுளவத்தார்முடியனடியரானஆழ்வாராசிரியர் திருவடியேசென்னி யணிகுவோமனுதினமும்பணிகுவோமே.
மங்களம்- தரு- இராகம்- சுருட்டி- தாளம்- ஆதி
பல்லவி
வேதாந்தாசார்யருக்கு ஜயமங்களம் - எங்கள்வேங்கடநாதார்யருக்குச் சுபமங்களம்
அனுபல்லவி
மேதாவிசுசு சீலருக்கு மெய்ப்புகழ்விசாலருக்குத்தோதாரம்மன்பாலருக்குத் தொண்டரனுகூலருக்கு (வேதா)
சரணங்கள்
கவிவாதிசிங்கருக்குப் புங்கவருக்குமங்களம்கண்டாவதாரருக்குத் தீரருக்குமங்களம்திவியமாலைக்கர்த்தருக்கு தரிசனப்பிரவர்த்தகருக்குக்கவலையில்லாச்சித்தருக்கு கண்ணனடிப்பத்தருக்கு (வேதா)சகலஜநபூசிகர்க்குத் தேசிகர்க்குமங்களம்சர்வதந்த்ரம் வல்லவர்க்கு நல்லவர்க்குமங்களம்பகவாநாமவாசகர்க்குப் பாசவினைரேசகர்க்குப்அகிலபாபமோசகர்க்கு அயக்கிரீவோபாசகர்க்கு (வேதா)தூப்பின கராதியர்க்கு வேதியர்க்குமங்களம்சொற்பேரருளாளருக்கு ஆளருக்கு மங்களம்யாப்பினில்விசித்திரர்க்கு அநந்தசூரிபுத்திரர்க்குக்காப்புவேதவத்திரர்க்கு கமலநயனர்பௌத்திரர்க்கு (வேதா) வெண்பா
சீரார் குடந்தைத் திருக்கண் வளர்கின்றஆரா வமுத னடியிணையை --- நேராகிச்சென்றடைந்த வேதாந்த தேசிகன்றன் வைபவத்தைஇன்றெடுத்துச் சொல்லுவேன் யான்.
..........நாளை தொடரும்..
திங்கள், 11 செப்டம்பர், 2006
சனி, 9 செப்டம்பர், 2006
திருப்புல்லாணி மாலை
இல்வாழ்க்கை (10வது குறள்)
மையற்றவையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்
தெய்வத்துள் வைக்கப்படு மென்பர் புல்லைத் திருநகர்வா
ழையற் கடிமைப்பட்டு இல்வாழ்க்கை நீதி அமைந்தவரை
மெய்மைக் கருத்துறச் சொல்வது அன்றோவந்த மேன்மைகளே.
குறிப்பு:-- மை=குற்றம்;ஐயற்கு=தலைவர்க்கு; மெய்மைக்கருத்து= தூய எண்ணத்துடன்;
வாழ்வாங்கு=வாழும் இயல்பினொடு; வான் உறையும் தெய்வம்= நித்திய
சூரிகள்; (திருப்புல்லாணி ஜகன்னாதனை வணங்கும் அடியார்களைத்
தூயமனதால் வழிபட்டால் எல்லா மேன்மைகளும் கிட்டும்
வாழ்க்கைத் துணைநலம் (4வது குறள்)
தருந்தக்க நாண்மடம் அச்சம்பயிர்ப்புத் தரித்த பெண்ணிற்
பெரும்தக்க யாவுள கற்பென்னும் திண்மையுண்டாக்கப் பெறிற்
பொருந்தச் சொல்லத்தனமை புல்லைப்பிரான் திருவடிப் பூவடியை
வருந்தித் தவம்புரிமாதர் கற்பல்லது மற்றில்லையே
குறிப்பு:-- தரும்தக்க-- கூறத்தக்க; நாண்-- வெட்கம்; பயிர்ப்பு-- மனம் கொள்ளாமை;
திண்மை-- கலங்காநிலைமை (புல்லைப் பிரானையே போற்றிவாழும் கற்பே
கற்பாகும்)
மலேகானில் குண்டு வெடிப்பு
இப்போது மசூதியில் குண்டு வெடித்தது. மும்பையிலோ,கோவையிலோ
மலேகானிலோ எங்கு வெடித்தாலும் சம்பந்தம் இல்லாத அப்பாவிகள்
உயிரிழப்பது பெரிய வேதனைதான். ஆனாலும்கூட இப்போது மசூதியில்
வெடித்த நாளை எல்லாத் தரப்பாரும் சற்று சிந்தித்தால், மதங்களிடையே
பல விஷயங்களில் உள்ள ஒற்றுமை புலனாகும்.
அன்று ஷப்-ஈ-பரத் என்னும் முக்கியமான தினமாம். மறைந்த முன்னோர்கள்
நினைவாக இந்த தினத்தில் அவர்களை நினைத்து தொழுகை செய்வதைக் குரான்
கட்டாயப் படுத்தியுள்ளதாக அனேகமாக எல்லா நாளிதழ்ச் செய்திகளும் தெரிவிக்
கின்றன.
இந்துக்களுக்கோ அது மாளயபக்ஷ ஆரம்ப தினம். அன்று முதல் அமாவாசை வரை
15 தினங்களும் பித்ருக்களுக்காக (மறைந்த மூதாதையர்கள்) திதி அளித்து விரதம்
அனுஷ்டிப்பது இந்துக்கள் கடமை. (தற்போது அந்தணர்கள் மட்டுமே கடைப் பிடிக்கின்
றார்கள் என்பது வேறு விஷயம்)
ஆக அடிப்படையான ஒன்று மூதாதையரை நினைத்து வழிபடுதல் பொது. அதை அனுசரிக்கும்
விதங்கள் மாறலாம். அது தேசாச்சாரம் எனப்படும். இப்படிபல விஷயங்கள் அடிப்படையிலே
ஒன்றுதான். இதை என்று நாம் எண்ணிப் பார்க்கப் போகிறோம்?
30 வருடங்களுக்கு முன்னே ஜாதியோ மதமோ அவரவர்கள் வீட்டுக் கல்யாணங்களிலும்,
துக்க காரியங்களிலும் மட்டுமே ப்ரதானமாக இருந்தன. என்னுடன் பள்ளியில் படித்த நண்பன்
இன்ன ஜாதியென்று போன வருடம் அவரது பெண் கல்யாணப் பத்திரிக்கை பார்த்துத் தான்
35 வருடத்திற்குப்பின் தெரியும். சீறாப்புராணத்தை நாராயணசுந்தரம் ஐயங்கார் அனுபவித்து
எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது போல் யார் சொல்லப் போகிறார்கள்? ஈசான்யத்தைப்
பற்றியும், சைவ,வைணவ இலக்கியங்களைப் பற்றியும் நீதிமன்றங்களில் ஒன்றாகக்
காத்திருக்கும்போது கீழக்கரை SVM காசிம் அவர்கள் சொல்லச் சொல்லத் தானே
எனக்கு அவற்றின் அருமையை உணர்ந்து கொஞ்சமாவது தெரிந்து கொள்ள முடிந்தது
அவரவர் வழி அவரவருக்குச் சிறந்ததுதான். ஆனால் அதுதான் சிறந்தது மற்றவை மட்டம்
எனும் நினைப்புத் தானே கலகங்களுக்குக் காரணம்?
மாச்சரியங்களை உண்டாக்கி சுகம் காணும் சில சுயநலக் காரர்கள் விரிக்கும் பொய்மை
புரட்டுகளில் புத்தியைச் செலுத்தி உண்மை நிலை தெளிந்து வேறுபாடுகள் களையப் படவேண்டும்.
நடக்குமா? நடக்காது. ஏனென்றால் நாட்டில் பல அரசியல்வாதிகளுக்கு நாம் பிரிந்தே இருப்பது
தான் வசதி. இல்லையா?
திருதிரு