வெள்ளி, 14 ஆகஸ்ட், 2009

ஆராவமுதம்

நேற்று உலகமெங்கும் பலர் கண்ணன் பிறந்தான் எங்கள் கண்ணன் பிறந்தான் எனக் கொண்டாடி மகிழ்ந்தனர் அல்லவா ! அதையொட்டி "சந்தவசந்தம்" கூகுள் குழுவில் வந்த ஒரு கவிதை இங்கே !

மலர்பூத்தது வனம்பூத்தது மதிபூத்தது வானோர்
நிலம்பூத்தது நதிபூத்தது நெறிபூத்தது நல்லோர்
தலம்பூத்தது மனம்பூத்தது சனம்பூத்தது ஆயர்
குலம்பூத்தது கருமாமுகில் குழந்தைவர வாலே


இந்தப் பாடல் இன்று பூத்ததும் பொருத்தமே. நமது திருக்குடந்தை ஆண்டவனின் 8 உபந்யாஸங்களில் முதலாவதாக வருவதும் அந்த கிருஷ்ணனைப் பற்றியதுதானே ! இங்கு உள்ள லிங்கில் க்ளிக் செய்து அங்கு காணும் 8 ஆடியோக்களையும் தரவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு ஆடியோ லிங்கின் அருகில் இருப்பது உபந்யாஸம் நடந்த தேதி. (391976 என்பது 3--9--1976 )


http://ishare.rediff.com/music/HHupan


ஓரிரு நாட்களில் தனியே download செய்து கொள்ள லிங்க் தருகிறேன். இப்போதைக்கு இரண்டு உபந்யாஸங்கள் இங்கு உள்ளன. நேரடியாக இறக்கிக் கொள்ளலாம்.


http://www.mediafire.com/folder/9fb4b6836e5e573824a64199ac7f73e552d82ba9a27b8d14b8eada0a1ae8665a

புதன், 12 ஆகஸ்ட், 2009

கொல்லன் தெருவில் ஊசி விற்கப் போகிறேன்

அடியேனுக்கு எது தெரியுமோ தெரியாதோ, ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும். இந்த வலையைப் படிப்பவர்கள் வெகு சிலரே ஆனாலும், அவர்கள் எல்லாருமே, சாஸ்த்ரம், ஸம்ப்ரதாயம், ஆசார்ய பக்தி, இவற்றால் விளைந்த ஞானம் ஆகியவைகளுடன் கம்ப்யூட்டர் பயன்பாட்டிலும் அடியேனைக் காட்டிலும் பல மடங்கு உயர்ந்தவர்கள் என்பது அடியேனுக்கு உள்ளங்கை நெல்லிக்கனியாய்த் தெரிந்த ஒன்று. ஆனாலும், அவ்வப்போது அடியேன் ஏதோ நிறைய கைங்கர்யங்கள் செய்வதாய் அவர்கள் பலமுறை தங்களது உயரிய குண நலன்களாலே பாராட்டுவது, நம்மகங்களில் சிறு குழந்தை மழலையில் ஏதோ உளறும்போது உற்சாகப் படுத்தி ஊக்குவிப்பது போல்தான். இன்று இங்கு அடியேன் தொடரப் போவதும் உங்களில் பலர் ஏற்கனவே அறிந்து பயன்படுத்திக் கொண்டிருக்கும் சிலவற்றைப் பற்றித்தான்.

நேற்று ஸ்ரீமத் ஆண்டவன் உபந்யாஸத்தை வலையேற்றியவுடன் அடியேனுடன் தனி மின்னஞ்சல், தொலைபேசி வழியாகப் பலர் தொடர்பு கொண்டு தங்கள் சந்தோஷத்தை வெளிப் படுத்தினர். அவர்களில் சிலருக்கு on-lineல் கேட்பது விருப்பம். வேறு சிலரோ download செய்து கொண்டு நிதானமாக தங்களுக்கு ஸௌகர்யப்படும்போது off-lineல் கேட்க வழி செய்தால் நல்லது என்றனர். இரண்டு பிரிவையும் சந்தோஷப்படுத்த அடியேனுக்கும் ஆசைதான். ஆனால் இரண்டு வெவ்வேறு இடங்களில் தனித்தனியே upload செய்யவேண்டும். எங்களூரிலோ கரண்ட் அடிக்கடி காணாமல் போகும் . அதை நம்பி upload செய்தால் ஒன்றையே திரும்பத் திரும்ப செய்து கொண்டிருக்க வேண்டும். இரண்டையும் ஒரே சமயத்தில், கேட்டுக் கொண்டே download செய்ய வைக்க முடியுமோ? என்ன செய்யலாம்? எங்கள் ஆண்டவன் திருக்குரலை ஆசையுள்ள எல்லாரும் கேட்க ஒரு வழி காட்டு என அடியேன் அடிக்கடி தஞ்சமடையும் கூகுளாண்டவரையே கேட்டேன். வழிகாட்டிவிட்டார். இதைத்தான் நாங்கள் ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறோமே எனப் பலர் சொல்லலாம். தெரியாத ஒரு சிலருக்காக எழுதுகிறேன். எனவேதான் இந்தத் தலைப்பும்கூட.

இப்படி உபந்யாஸத்தைக் கேட்டுக் கொண்டே பதிவிறக்கம் செய்து கொள்ள எளிதான இரு வழிகள் உள்ளன.
Free Recorder என்பது இரண்டிலும் மிக எளிதானது. இதை இறக்கி பதிந்துகொண்டால், internet explorer, firefox browserகளில் இது tool bar ஒன்றினை நிறுவிக் கொள்ளும். இங்கிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம்
http://freecorder.com/sound-recorder/

தரவிறக்கி நிறுவிக் கொண்டவுடன் அடியில் காணும் tool bar address bar கீழே வந்து அமர்ந்து கொள்ளும்.

Photobucket

அதில் Record, Play/Pause, Stop buttons இருப்பதையும் காணலாம்.

settings மாற்ற வேண்டுமா என்று கேட்கும். எதையும் மாற்றாமல் OK கொடுத்து விடலாம். Record from free record driver என்பது மட்டும் தேர்வு ஆகியுள்ளதா என உறுதி செய்து கொண்டு , தேவையானால் saving destinationஐ மட்டும் மாற்றிக் கொள்ளுங்கள்.

Photobucket

இப்போது ஆடியோ லிங்க்கை க்ளிக் செய்து பாட ஆரம்பிக்கும்போது மேலே recorder tool barல் Record பட்டனை க்ளிக் செய்யவேண்டியதுதான் நம் வேலை. உடனே ரெக்கார்டிங் ஆரம்பித்து விடும். அப்போது இந்த மாதிரி கட்டத்தில் பச்சைக் கோடுகள் ஓடுவதைக் காணலாம்.

Photobucket

முழுமையும் பதிவான பிறகு அதாவது அந்த ஆடியோ முழுமையாகப் பாடி முடிந்த பிறகு tool bar stop button மூலம் நிறுத்திவிட்டு மீண்டும் Play button மூலம் உறுதிப் படுத்திக் கொண்டு வெளியேறலாம்.

ஹூ ஹூம் ! இந்த வேலையே வேண்டாம். அது வழியாய் ஏதாவது ஸ்பைவேர், மால்வேர் வந்துவிடும் என நினைப்பவர்கள் MP3MyMP3 என்ற மென்பொருளை நிறுவிக் கொண்டு இதே வேலைகளைச் செய்யலாம்.

Photobucket

Free Recorder நமது கணிணியிலுள்ள sound cardல் வருபவற்றை பதிவு செய்வதால், speaker off ஆக இருந்தாலும் mute செய்திருந்தாலும் பதிவு செய்து விடும். ஆனால் MP3MyMP3க்கு இரண்டுமே on conditionல் இருப்பது அவசியம்.

MP3 formatல் சேமித்தவைகளை உங்களுக்கு வசதியான கோப்பாக ஒரே நொடியில் மாற்றிக் கொள்ள இருக்கவே இருக்கிறது Format Factory.

இவைகளை நிறுவிக் கொண்டு நாளை இங்கு அடியேன் தரப் போகும் சுட்டிகளிலிருந்து ஸ்ரீமத் ஆண்டவன் உபந்யாஸங்கள் எட்டையும் (அதுகூட ஒரு அஷ்டாக்ஷரமாக அமைந்ததும் ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹமே) நெஞ்சுருக அனுபவித்துக் கொண்டே கம்ப்யூட்டரில் சேமிக்கவும் தயாராயிருங்கள். நாளை வரை!

(சில ஸ்ரீக்கள் அப்பனுக்குப் பாடம் சொன்ன சுப்பையா என்று கேலியாகச் சிரிப்பதும் அடியேன் மனதுக்குத் தெரிகிறது)




திங்கள், 10 ஆகஸ்ட், 2009

இன்று ஒரு புதையல்

திருப்புல்லாணி போன்ற சிறு கிராமங்களில் வசிப்பதில் எத்தனையோ சிரமங்கள் உண்டுதான். ஆனால் பெரு நகரங்களில் அல்லது போக பூமிகளில் சகல விதமான ஸௌகர்யங்களுடனும் வாழ்ந்து கொண்டு இருப்பவர்களுக்கெல்லாம் கிடைக்காத ஒரு பெரிய பாக்யம் அடியோங்களுக்கு உண்டு. அங்கெல்லாம் இருப்பவர்கள் பெரிய யதிகளையோ, ஸம்ப்ரதாயத்தில் சிறந்தாரையோ, கைங்கர்ய சீமான்களையோ தேடிச் சென்று ஸேவிக்க வேண்டியிருக்க, இந்தத் திருப்புல்லாணியிலுள்ளவர்களை எல்லாரும் தேடி வந்து அடியோங்களை ஆஸீர்வதிக்கின்ற மஹா பாக்யம் அது. அதிலும் அடியேன் பித்ருக்கள் செய்த நல்லவைகளால் அடியேனுக்குக் கிட்டிய பெரும் பேறு ஸ்ரீமத் ஆண்டவனே இங்கு ஒரு சாதுர்மாஸ்யம் அநுஷ்டித்து அனுக்ரஹித்தது. இப்படி வருகின்ற ஆஸீர்வாதங்களால் ஒரு எழுத்தும் அறியாத அடியேன் வசம் அடிக்கடி புதையல்கள் போல பல புஸ்தகங்கள் வருவதும், அதில் எதுவுமே புரியாமல் யாராவது அர்த்தம் சொல்வார்களோ என்ற ஆசையால் இங்கு அவற்றை இடுவதும் அடியேன் வாடிக்கை என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. ஸ்ரீமத் ஆண்டவன் மண்டுகளைப் பற்றி "நன்றாக அலம்பி, துடைத்து, கவிழ்த்து வைத்த பாத்திரம் " என்று கூறுவதுண்டு. அதற்கு ஒரு நல்ல உதாரணமான அடியேனுக்கு, பரம காருணிகரான ஸ்ரீமத் ஆண்டவன் அனுக்ரஹத்தாலும், இங்கு ஆச்ரமத்தில் தங்கி முழு மன நிறைவுடன் ஊர் திரும்புகின்ற பல பெரியோர்களது இதயபூர்வமான ஆசிகளாலும் இன்று எதிர்பாராமல் கிடைத்த ஒரு பொக்கிஷத்தின் ஒரு பகுதியை இங்கு பகிர்ந்து கொள்கிறேன். சுட்டிகள் மீது க்ளிக் பண்ணி அந்த இன்பத்தை அனுபவிக்கலாம். (இரண்டு பாகங்கள் உள்ளன.)
Get this widget | Track details | eSnips Social DNA


03.9.1976--Side-B....





இங்கு அடியேன் எழுதுவதையெல்லாம் எல்லாரும் படிக்க வேண்டும் என்று இதுவரை நினைத்ததில்லை. ஏற்கனவே அடிக்கடி எழுதியிருக்கிறேன். யாருக்காவது, எப்போதாவது, என்றாவது பயன்படும் என இந்தப் பதிவுகளை எழுதி வருகிறேன். ஆனால் இப்போதோ எல்லாரும் வர வேண்டும் அடியேன் பெற்ற பாக்யம் எல்லாருக்கும் கிடைக்க வேண்டும், எப்படி இன்று முதல் முறையாக இந்த தெய்வக் குரலை அடியேன் கேட்டு பரவசப்பட்டேனோ, அதேபோல் இதுவரை கேட்காதவர்கள் அனுபவிக்க வேண்டும், ஏற்கனவே பல முறை கேட்டிருப்பவர்கள் மீண்டும் கேட்டு அந்த இனிய நாட்களின் நினைவிலே மகிழ வேண்டும் என்றெல்லாம் மனசு ஆசைப் படுகிறது. கேட்டவர்கள் மற்றவர்களுக்குச் சொல்லி பலர் கேட்டு மகிழ உதவ வேணுமாய்ப் பிரார்த்திக்கிறேன்.

சனி, 8 ஆகஸ்ட், 2009

சரணாகதி மாலை

சரணாகதி மாலை 8ம் பாடல்

த்வதேக ரக்ஷ்யஸ்ய மம
த்வமேவ கருணாகர,
ந ப்ரவர்த்தய பாபாநி
ப்ரவ்ருத்தாநி நிவ்ருத்தய: (8)
(ஹே கருணாகர! அருள்மாகடலே! கருணைக்கடலே! த்வத் ஏக ரக்ஷ்யஸ்ய தேவரீர் ஒருவராலேயே காக்கப்பட வேண்டிய : மம அடியேனுக்கு: த்வம் ஏவ தேவரீரே: பாபாநி பாபங்களை : ந ப்ரவர்த்தய நேராமலிருக்கும்படி செய்தருள வேண்டும்: ப்ரவ்ருத்தாநி நேர்ந்தவைகளை : நிவர்த்தய நீக்கி விட வேண்டும்.
பேரருளாளனே! தேவரீராலேயே ரக்ஷிக்கப்பட வேண்டிய அடியேனுக்கு தேவரீரே பாபங்களைச் சேரவிடக்கூடாது: முன்பே சேர்ந்திருப்பவைகளை விலக்கி விட வேண்டும்.
கருணை வள்ளலாகிய வரதனே! தேவரீரை அன்றி வேறு ரக்ஷகன் இல்லாத அடியேனுக்குச் சரணாகதி செய்வதற்கு முன்பு செய்த பாபங்களை ஒழித்து விடும்படியும் சரணாகதிக்குப் பிறகு பாபங்களைச் செய்யாமலிருக்கும்படிக்கும் செய்தருள வேண்டும்.
த்வம் ஏவ தேவரீரே அடியேன் தலையில் வேறொரு சுமையைச் சுமத்தாமலும் தேவரீருக்கு அதீநமல்லாத வேறொரு ஸஹகாரியைத் தேடாமலும் செய்தருள வேண்டும்.
"இப்படி ஸபரிகரமான பக்தி யோகத்தில் அதிகரிக்கைக் கீடான விளம்பக்ஷமத்வ ஜ்ஞாந சக்த்யாதிகளின்றிக்கே 'நின்னருளே புரிந்திருந்தேன்',. 'துணியேன் இனி நின்னருளல்லது எனக்கு', 'உன் திருவருளன்றிக் காப்பரிதால்' என்றிருக்கும் அதிகாரிக்கு அநுஷ்டேயமான சரணவரணம் ஆநுகூல்ய ஸங்கல் பாதிபரிகரயுக்தமாய் 'அநந்ய ஸாத்யே ஸ்வாபீஷ்டே' இத்யாதிகள் படியே ப்ரார்த்த நாந்வித ஸக்ருத் பரந்யாஸ ரூபமாய் இருக்கும். அத்யந்தாகிஞ்சநனுடைய பரந்யாஸத்திற்கு அவ்விஷயத்தில் கர்த்தவ்ய சேஷம் இல்லை. ஸர்வ சக்தியினுடைய ஸங்கல்பத்திற்கு அவாந்தர வ்யாபரராபேக்ஷா நியமம் இல்லை: இரண்டும் இப்படி ஸக்ருத்தாயிருக்கும். ஆசார்யனாலே தன்னை ந்யஸ்த பரனாக அறிந்த சிஷ்யன்தான் பரந்யாஸம் பண்ணான். இவனுக்குப் பலத்தில் சங்காதிகள் வந்தாலும் ஆசார்யனுடைய பரந்யாஸம் பலாவிநா பூதம். அவன் தனக்காகப் பண்ணின பரந்யாஸம் தனக்குப் ப்ரமிதம் அல்லாத போது பரந்யாஸம் பண்ணினால் பூர்வ பரந்யாஸம் பலித்தே விடும். பின்பிலது மிகுதியான ஸுக்ருதத்தின்படியாம்.
உயர்ந்த திடர்க்கு அடைத்து ஏற்றலாம்படி,தாழ்ச்சியுடைய விஷயத்தில்தானே ப்ரவஹிக்கும்படியான க்ருபாகுணத்தாலே ஸ்வதந்த்ர சேஷிதன் கூறாகவும் பேறாகவும் மேலுள்ள நன்மைகளை எல்லாம் விளைக்கும். இந்தப்ரபத்தி 'தாவதார்த்தி' இத்யாதிகள் படியே அங்கமாயும் ஸ்வதந்த்ரமாயும் நின்று ஸகல பல ஸாதந மாகையாலும், அபேக்ஷித ஸித்திக்குக் கைமுதல் அற்று சரண்ய ஸ்வபாவாதி பரிஜ்ஞாநம் உடையார் எல்லார்க்கும் அதிகரிக்கலாம். ஆகையாலும், தன்பலம் போலே தேசகாலாதி நியமமில்லாமையாலும், ஸபரிகரமாக ஸக்ருத் கர்த்தவ்யம் ஆகையாலும், ஸுகரமாகையாலும், 'உபாயஸ்ஸுக்ரச்சாயம் துஷ்கரச்ச மதோ மம' என்னும்படியான வ்யவஸாய கௌரவத்தை உடைத்தாகையாலும், ப்ரஹ்மாஸ்த்ர துல்யை யாகையாலும், யஜ்ஞாதி ஸுக்ருதங்களைப் போலே நச ப்ரதிபந்தார் ஹ மல்லாமையாலும், சரண்யோபநிஷத்துக்களுக்கெல்லாம் சிரோ பூஷணம் என்னும்படி மேலாய் நிற்கையாலும், இதன் ப்ரபாவம் 'ஸத்கர்மநிரதா' இத்யாதிகளாலே பரக்கப் பேசப்பட்டது.
மற்றுள்ள சாஸ்தரார்த்தங்கள் போலே அதிகாரிக்ருத்யமான ப்ரபதநத்தில் சிலருடைய அதிகாரி விசேஷணத்வாதி வ்யபிதேசம் ஸித்தோபாய ப்ராதாந்ய பரம். ஸுதியில் ந்யாஸ ப்ரஹ்ம சப்த ஸாமாநா தி கரண்யம் அந்யபரம். 'பகவதந் யார்ஹ சேஷ பூதனுக்கு பகவதபி மதமில்லாத விஷயத்தில் பக்தியும் ப்ரபத்தியும் கைங்கர்யமும் ஸ்வரூப விருத்தம்' என்னலாயிருக்க பத்தி யோகத்தை விசேஷித்து ஸ்வரூப விருத்தம் என்றவர்களுக்கு அதிகாரி விசேஷ ஸ்வரூப விரோதத்திலே தாத்பர்யம். தேசகால, அதிகார்யாதி பேதத்தாலே குருலகுவிகல்பம் ப்ராயச்சித்தாதிகள் எல்லாவற்றிலும் ப்ரஸித்தம்.
இப்படி யதாதிகாரம் ஸர்வ கர்ம ப்ராயச்சித்தமாக விதித்த பக்தி ப்ரபத்திகளில் ஒரு வழியிலே இழிந்தவனுக்கு அப்போதே உத்தரபூர்வா காச்லேஷம் ப்ராமாதிக விஷயம். விவேகாதி பூர்த்தியுடையாருக்கு புத்தி பூர்வோத்தராகம் அநாபத்தில் புகாது. மந்த விவேகருக்கு மின்னொளி போலே தோற்றிப் ப்ராயச்சித்தாந்தமாய் மறையும். ராகாதி காடிந்யம் உடையாருக்கு சிக்ஷா விசேஷங்களாலே பிரிதலுண்டாம். பூர்வாக விநாசம் ப்ராரப்த வ்யதிரிக்த விஷயம். ஸ்வதந்த்ர ப்ரபத்தி நிஷ்டனான செய்த வேள்வியனுக்குப் ப்ராரப்தகார்யமான கர்ம வர்க்கத்தியிலும் ஆர்த்தியின் அளவுக்கீடாக தேஹாந்தராதி ஹேதுவான அம்சம் கழியும். 'யஸ்ய ப்ரஸாதே ஸகலா:' 'ப்ரஸந்நமபவத் தஸ்மை' இத்யாதிகளின் படியே இவனளவில் ஸத்வஸ்த்தரானவர்கள் எல்லாரும் ஸுப்ரஸந்நராவார்கள். 'பகவத் பரிக்ரு ஹீதனுக்கு யமவச்யத்வாதிகள் இல்லை' என்னுமிடம், 'பரிஹர மதுஸுதந ப்ரபந்நாந்', 'தேவம் சார்ங்கதரம் விஷ்ணும்', 'நலியும் நரகமும் நைந்த நமனுக்கிங்கு யாதொன்றுமில்லை'. 'நமன் கூறு செய்து கொண்டிறந்த குற்றமெண்ணவல்லனே', 'நாவலிட்டுழி தருகின்றோம் நமன் தமர் தலைகள் மீதே', 'நரகமே சுவர்க்கமாகும் நாமங்களுடைய நம்பி' இத்யாதிகளாலே அறியலாம். ஆகையால் இப்படி நிஸ்ஸம்சயனான இவன் 'ஆள்கின்றான். ஆழியான் ஆரால் குறைவுடையம்', 'எத்தினால் இடர்க்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே', 'திருமால் தலைக்கொண்ட நங்கட் கெங்கே வரும் தீவினையே' இத்யாதிகளின் படியே நிரபேக்ஷனாய், நிர்பரனாய், நிர்பயனாம். மங்கும் அவஸ்தையில்லாத போது மடலூரும் அவஸ்தையாய் மாக வைகுந்தம் காண்பதற்கு மனம் ஏகம் எண்ணியிருக்கும்.
முன்செய்த வினைத்திரளின் முளைத்த தன்றி
முற்றுள்ள முதலரிந்து முளைத்த கூற்றிற்
றன்செய்ய திருவருளா லிசைவு பார்த்துத்
தழல் சேர்ந்த துலமெனத் தானே தீர்த்துப்
பின் செய்த வினையினினை வொன்றா தொன்றும்
பிழை பொறுத்து வேறுளது விரகான் மாற்று
மென்செய்ய தாமரைகட் பெருமா னெண்ண
மெண்ணாதா ரெட்டிரண்டு மெண்ணா தாரே
- (ஸ்ரீபரம பதஸோபாநம். 5. ப்ரஸாதநபர்வம்)
(முன்பு செய்த பாபக்கூட்டத்தில் பலன் கொடுக்கத் தொடங்கிய பாபம் தவிர கைம்முதலாக உள்ள பாபங்களை முழுதும் போக்கி, பயன்கொடுக்கத் தொடங்கிய பாகத்தில் ப்ரபந்தனுடைய அங்கீகாரத்தை எதிர்பார்த்து அவன் விரும்பிய காலத்தில் தன்னுடைய ருஜுவான கிருபையால் அக்நியில் சேர்ந்த பஞ்சு என்னும்படி தானே போக்கி ப்ரபத்திக்குப் பிறகு செய்யும் பாபங்களில் அறிவு இல்லாமல், தெரியாமல் நேர்கின்ற பாபங்களைப் பொறுத்து, தெரிந்து செய்ய வேண்டியதாய்த் தீர்ந்த குற்றத்தை பிராயச்சித்தம் முதலியவற்றில் மூட்டிப் போக்குபவனான சிவந்த தாமரை போன்ற கண்களையுடைய எனக்கு நாதனான ஸர்வேசுவரனுடைய திருவுள்ளத்தின் போக்கை அறியாத மானிடர் திருமந்திரம், துவயம், சரமசுலோகம் என்னும் இரகஸியத்திரயத்தை அறியாதவர்களே) என்பன இங்கு அநுஸந்திக்கத்தக்கன.
ப்ராரப்தேதர பூர்வபாபமகிலம்
ப்ராமாதிகம் சோத்தரம்
ந்யாஸேந க்ஷபயந்நநப்யுபகந
ப்ராரப்த கண்டஞ்சந:
தீபூர்வோத்தர பாப்மநா மஜநநா
ஜ்ஞாதேபிதந்நிஷ்க்ருதே:
கௌடில்யேஸதி சிக்ஷயாப்நகயத்
க்ரோடீகரோதி ப்ரபு :
(ஸ்ரீமத் ரஹஸ்யத்ரயஸாரம். அபராத பரிஹாராதிகாரம்)
(சேதநனுடைய கர்மங்கள் ப்ராரப்தம், ஸஞ்சிதம் என இரு வகைப்படும். பலன் கொடுக்கத் தொடங்கிய கர்மம் ப்ராரப்தம் எனப்பெறும். பின் ஒரு காலத்தில் பலன் அளிப்பதற்காகத் தனியாய்க் குவிந்து மூட்டையாய் இருப்பது ஸஞ்சிதம் எனப்படும். பக்தியோகம் ஸஞ்சித கர்மங்களை மாத்திரம் போக்கும். ப்ரபத்தி ஸஞ்சித கர்மங்களைப் போக்கி ப்ராரப்தத்தில் நாம் இந்தச்சரீரம் உள்ளவரை பலனை அனுபவிக்க வேண்டிய கர்மங்களைத் தவிர மீதியுள்ளவற்றையும் போக்கி விடுகின்றது. ப்ரபத்திக்குப் பிறகு அறியாமல் செய்யும் பாபங்களை இவனிடம் சேராதபடி நீக்கி விடுகின்றது. கால தேசங்களைக் கொண்டு மனப்பூர்வமாகச் செய்யும்படி நேர்ந்த பாபங்களையும் ப்ராயச் சித்தாந்திகளைக் கொண்டு ஒழித்து விடுகின்றது. மனப்பூர்வமாய்ச் செய்யும் பாபங்கள் நீங்கும் வகை பின்வருமாறு:-. பாபம் செய்ய நேரிட்டதற்கு வருந்திப் பச்சாத்தாபம் அடைவதால் கால்பங்கும், பிறகு பாபம் செய்யாது நிறுத்தி விடுவதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்ய முயல்வதால் கால்பங்கும், ப்ராயச்சித்தம் செய்து முடிப்பதால் கால்பங்கும் ஆக, பாபம் முழுவதும் தீர்கிறது. ப்ராயச்சித்தங்களில் சிறந்தது மறுபடியும் ப்ரபத்தி செய்வதே. இதுவே ப்ராயச்சித்த ப்ரபத்தி யெனப்படும். ப்ராயச்சித்தம் செய்யாத புருடர் இவ்வுலகிலேயே சில தண்டனையைப் பெறுவர். ஆக எவ்வகையிலும் ப்ரபந்நனுக்கு நரகமோ மறுபிறவியோ கிடையாது. இச்சரீரம் உள்ள வரையிலும் உள்ள விளம்பத்தைக் கூடப் பொறுக்காது உடனே முக்தி வேண்டும் என்பவனுக்கு உடனேயே ஸகல கர்மங்களையும் போக்கிப் பலனை நல்குகின்றது. இத்தகைய பெருமை பக்தி யோகத்திற்கு இல்லை என்பதுங் காண்க)

வியாழன், 6 ஆகஸ்ட், 2009

When we are doing something interesting in our PCs, quite often we face with that irritating announcement "this program is not responding" thereby leading to system hanging and we resort to using windows task manager to kill that not responding program to make our system runs again. But one of adiyen's netguru advises this will slow down the PC gradually and suggests the following. Hope this is useful for all.



By default, Windows system settings doesn't support automatic shutdown of non-responsive programs. So, whenever any application crashes and thus stops responding, you have to take the help of task manager and forcibly End Task the application manually. This is considered as one of the factors that slow down the computers and ruins PC performance.

So, to enhance the performance of your PC it is a good practice for the advanced users to modify and set the system registry settings to automatically End the Task of all non-responsive programs.

Here is how you can 'Enable Windows To Automatically End Task Non-Responsive Programs' :

1. Click Start>Run, type regedit , and then click OK to open the Registry Editor.
Photobucket

2. From the left pane of the registry editor, navigate to the registry key
HKEY_CURRENT_USER\Control Panel\Desktop

3. Now, find a String Value with a Value Name AutoEndTasks in the right pane.
Photobucket


4. Double Click to modify the value to 1 from the default value of 0 and click OK.


5. Close the Registry Editor and restart your PC for the changes to take effect.

That's it!! Now those annoying programs that get hung up need not be closed by going to the task manager.

Hope this helps!