இன்று ஆடி அமாவாசை. சென்ற பல வருடங்களாக ஒவ்வொரு ஆடி, தை அமாவாசை தினங்களிலும், சென்னையிலிருந்து சாமான்கள், கைங்கர்யபராள் எல்லாரையும் அழைத்துவந்து இங்கு வருகின்ற அத்தனை ஸேவார்த்திகளுக்கும் ததீயாராதனம் செய்துவைத்து மனமுகக்கும் திருப்புல்லாணி ப்ருஹஸ்பதி பாஷ்யம் ஐயங்கார் குடும்பத்தினர் இந்த ஆண்டும் வந்து சிறப்பாக ததீயாராதன கைங்கர்யம் செய்தனர். ஸ்ரீமத் ஆண்டவன் ஆச்ரமம் கட்டப் பட்ட பிறகு அங்கே நடக்கின்றது. ஆசீர்வாதக் காட்சி இங்கே வீடியோவாக
செவ்வாய், 21 ஜூலை, 2009
திருப்பாதுகமாலை
21. விம்பவெதிர் விம்பப்பத்ததி
711. மாயன ரண்மனை மங்கையர்கட்காயந லப்படி மக்கலமா
வேயதெ ருள்வடி வென்றெனுமத்
தூயப தாவனி போற்றுதுமே. 1
712. அணியுனை யரங்கமா லணிந்தொ துங்குகாற்
பணியது பேணியப் போது மப்பனுக்
கணவரி பாது! நின் கண்க ருத்துமான்
இணையுரு மேவநின் றெதிர்வி ளங்குவான். 2
713. திருவரி பாதுகாய்! திகழு நின்னிடை
வருமுன தெண்டிசைப் பாலர் தம்முருத்
தெரியெதிர் நீழல்கண் டீசர் வேறுநீ
தருமொரு சங்கையிற் போல்வ ணங்குவார். 3
714. தொழவரு சுராசுரர் மோலி யவ்வவை
யெழுமுன் தண்ணலில் விம்ப மாயிரம்
பொழிதலி லாங்குடன் போத பாதுகாய்!
வழிவரு மவர்க்கிடு வண்ண நண்ணுவாய். 4
715. தேவர்க ணினக்கென வீந்த பாகுடம்
மேவரு ணாரணன் பாது! நின்னிடைப்
பூவரு விம்பமின் பூக்க வவ்வவை
ஆவலி னீயுவந் தாத ரித்தவாம். 5
716. கனநெடு கற்கசக் கற்க ளான்றயான்
வனமலர் பாதமெவ் வாறு தாங்குவல்
எனவரி தாண்மலர் நீழ லாமரை
மினினிறை பாதுனத் தவிசி லேந்தியே!. 6
717. உனையரி தாளினிற் புனையு மக்கணம்
இனவரி மீதெதிர் நீழ லிற்பரன்
வனமலி தன்னொரு வடத லந்திகழ்
நனவுரு பாது! நன் றறிவு றுத்துவன். 7
718. உனதிடை பணிந்தெதிர் பலித்த புங்கவர்
வனையரி திருவிழா வவதி யிற்பினும்
நனியெதிர் துளங்களில் நாடி நின்கணே
இனிதவ ராடவ பிரத மென்னவாம். 8
719. பலவுன கற்களிற் கண்டு தன்னுருக்
கலிதரு மூழிதோ றந்த ணர்பலர்
இலகுவி லிற்றையே யியற்றி யோவென
மலரவ னையுற மலர்தி பாதுகாய்!. 9
720. அணிதிரு வரங்கமா லணிந்து பாதுனைப்
பணைமிக வொதுங்கவந் தப்பு ரத்தவன்
துணைவிய ருருக்கணின் கண்டு ளங்களில்
இணையவ ரூசலாட் டென்று தோன்றுமே. 10
721. தவநிதி பாதுகாய்! தாழ்ந்து நின்முனோர்
நவையறு பின்னவ னரசி யல்வகை
நுவலவு னன்மணி யூடு றாசனக்
கவினொளிர் தன துருக் கண்டு வெள்கினன். 11
722. நிலவடி யிடத்திட விராமன் மீண்டுனைக்
கலவுன மணிக்களிற் கவியி ராக்கதர்
வலவனொ டடிநிலாய்! வயங்க வாங்குளோர்
பொலியுனை விளங்கவான் யான நோக்கினார். 12
723. உலகின ரிடுக்கணன் றொடுக்கு நீதிநீர்
மலிமணி பாது! நின் மணிக்க ணத்தொளிர்
நலமிகு சாமரை நீயு றிஞ்சுமாற்
றலரது கீர்த்தியாஞ் சீர்த்தி நாறுமே. 13
724. உலகுக ணோக்கநீ யுவந்து லாவுகால்
உலகுக ணின்கணே ரெதிர்து ளங்களில்
உலகுக ளன்றுதன் குக்கி வைத்தளித்
திலகவ னென்னதா ணிலை! விளங்குவாய். 14
725. உவணமு வந்தரி யூர வானவர்
அவர்படி யூர்வர்தாம் பாது னோடவன்
புவிசெல வும்பர்தம் பிம்ப முன்னிடை
அவிர்தலி லொத்தொரு வாக ராவரே 15
726. ஒளியினளி யமைக்குமணி யிமைக்கும் பாதூ!
ஒருங்குசுரர் மகளிருனை வணங்க வாங்கே
தெளியுருவத் திருநிகழுந் தேவி! நின்கண்
தெரியுமவ ருருவமெனும் விரக தொன்றிற்
கிளரெழிலந் நரவளியன் றொடைப டைத்த
பேதைதமைக் காணவுடனாண வென்றோ
களிமிகநின் னவையறுமா மேனி நீமக்
கடலிலொரு குடியெனவந் தாடு வாரே. 16
727. அத்தனடை நத்துமணிச் சோதி மல்கும்
அடிநிலை! யுன் னிடையமல வரங்க னத்தன்
ஒத்ததிருப் பதகமல மலர்த்தி நின்னோ
டுய்யவிது வையமென நடந்து நாடு
மொத்தமுமே யத்தனது கோயின் மீண்டு
மொய்யதிரு வோடுபணிப் பள்ளி யேறித்
தொத்துமுனைக் கழற்றியுமம் மெத்தை யோடு
முனிலொளிர் தன் முகிலுருவத் திலகுவானே. 17
728. உகவைமிக வுனையிறைவ னணிந்து பாவால்!
உலகடைய நடந்தருளே சுரந்த ளிக்கும்
தகவிலிரு மருங்குதிரு நெருங்கு கோலந்
தருதிருபூ மடந்தையர்க ணடந்த வாறே
அகமகிழ வவருனையே யிமையா துன்னும்
அருமையினின் மணியிலவர் நிலவு நேரிற்
றிகழழகன் திருவடியின் சேவை நீயே
தெளியவர் தமக்குமருள் புரிகின் றாயே. 18
729. தொல்லிறைவன் முனந்துவரை வயங்கு மோரை
யொருபதினா றாயிரவர்க் கொவ்வோர் மேனி
ஒல்லவிலொவ் வொருவருட னுளங்க லந்த
உத்தமனவ் வொத்தனணி யேறு நின்சீர்
வல்லரியின் வரிகளென விளங்கு கல்லின்
வளரொளிமீ தெதிர்விளங்கு முறையில் வள்ளல்
பல்லுருவம் படைத்தரிபா தொருத்தி நின்கண்
படிந்தொருதன் படிக்கேழில் பரிதெ ரிப்பான். 19
730. தாணக நின்கண் ணாநக மேனீ
நீணல மேறும் நீரெதிர் நீமம்
சேணும தந்நேர் விம்பெதிர் விம்பம்
மாணரி பாதிம் மாதிரி சாலும். 20
லேபிள்கள்:
திருப்பாதுகமாலை
திங்கள், 20 ஜூலை, 2009
ந்யாஸதசகம்
நேற்றைய தொடர்ச்சி
பந்தல்குடி திருமலை அய்யங்கார் விரிவுரை
பகவந் - "மைத்ரேய! பகவச்சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித: நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய: ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி, ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத: பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி, பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித: சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:" (விஷ்ணுபுராணம் 6-5-72)
[ மைத்ரேயரே! 'பகவான்' என்னும் சப்தம் ஸர்வகாரணங்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. '(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன், 'ஸ்வாமி' என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே! அவ்வாறே 'ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்' என்பது ககாரத்தின் அர்த்தம். ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் 'பக' என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத 'ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும் 'பகவாந்' என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது. 'பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது' என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]
"பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன்" (திருவாய்மொழி 1-3-5){(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறேஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது; இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது. (அம்பகவன்) -- ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ; "அந்யத்ரஹ்யுபசாரத:" பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம். (அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) -- "நமஸ்யந்தச்சமாம் பக்த்யா" என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தானிறே. அங்கநாபரிஷ்வங்கம்போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது--- ஈடு"}
"இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம் ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும். இவ்வர்த்தத்தை 'நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும் 'உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும், 'சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்' (திருவாய்மொழி 10-10-10) என்றும், 'அமலன்' ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள். மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக் கும். இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும். ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும். இக்குணங்கள் எல்லாம் ஸர்வகாலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும். பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள்தோறும் அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள். அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்" [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]
"வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவ ரூபத்திற்கு பரரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது. இப்பக்ஷத்தை 'குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ, ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:' (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள். இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள் 'ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.' (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம் 'ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ; சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று. [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரயசிந்த நாதிகாரம்.]
பந்தல்குடி திருமலை அய்யங்கார் விரிவுரை
பகவந் - "மைத்ரேய! பகவச்சப்தஸ் ஸர்வகாரண காரணே! ஸம்பார்த்தேதி ததா பர்த்தா பகாரோர்த்த்வயாந்வித: நேதாகமயிதா ஸ்ரஷ்டா ககாரார்த்தஸ் ததாமுநே. ஐச்வர்யஸ்ய ஸமக்ரஸ்ய வீர்யஸ்ய யசஸச்ஸ்ரீய: ஜ்ஞாநவைராக்ய யோச்சைவ, ஷண்ணாம் பக இதீரணா. வஸந்தி தத்ர பூதாநி பூதாத்மந்யகிலாத்மநி, ஸச பூதேஷ்வசேஷேஷு வகாரார்த்தஸ் ததோவ்யய:ஜ்ஞாந சக்தி பலைச்வர்ய வீர்ய தேஜாம்ஸ்ய சேஷத: பகவத்சப்தவாச்யாநி விநா ஹேயைர் குணாதிபி: ஏவமேஷ மஹாசப்தோ மைத்ரேய! பகவாநிதி, பரப்ரஹ்ம பூதஸ்ய வாஸுதேவஸ்ய நாந்யக: தத்ர பூஜ்ய பதார்த்தோக்தி பரிபாஷா ஸமந்வித: சப்தோயம் நோபசாரேண த்வந்யத்ர ஹ்யுபசாரத:" (விஷ்ணுபுராணம் 6-5-72)
[ மைத்ரேயரே! 'பகவான்' என்னும் சப்தம் ஸர்வகாரணங்களுக்கும் காரணபூதனான ஸர்வேச்வரன் விஷயத்தில் சொல்லப் பெறுகிறது. '(ப்ரக்ருதியை) கார்யதசை அடையச்செய்பவன், 'ஸ்வாமி' என்னும் இரண்டு அர்த்தங்களுடன் கூடியது பகாரம்; முனிவரே! அவ்வாறே 'ரக்ஷிப்பவன், ஸம்ஹரிப்பவன், ஸ்ருஷ்டிப்பவன்' என்பது ககாரத்தின் அர்த்தம். ஸம்பூர்ணமான ஐச்வர்யம், வீர்யம், யசஸ், ஜ்ஞாநம், வைராக்யம் என்னும் இந்த ஆறு குணங்களுக்கும் 'பக' என்னும் பதம் வாசகமாயிருக்கிறது. பூதங்களை சரீரமாகக்கொண்டவனும், எல்லாவற்றுக்கும் ஆத்மாவாயிருப்பவனுமான அவனிடத்தில் பூதங்கள் வஸிக்கின்றன. அவனும் அகில பூதங்களிலும் வஸிக்கின்றான். ஆகையால் அழிவற்றவனான பகவான் வகராத்துக்கு அர்த்தமாகிறான். கீழானவையான முக்குணங்கள் முதலியவற்றுடன் சேராத 'ஜ்ஞாநம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ் என்னும் எல்லா குணங்களும் 'பகவாந்' என்னும் சப்தத்தினால் சொல்லப்படுகின்றன. மைத்ரேயரே! இம்மாதிரியாக பகவான் என்னும் இந்த மஹாசப்தம் பரப்ரஹ்மமான வாஸுதேவனுக்கே உரித்தானது. வேறொருவரையும் குறிக்காது. 'பூஜிக்கத்தக்க பொருளைக் குறிப்பது' என்னும் பரிபாஷையுடன் கூடிய இந்த சப்தம் அவன் விஷயத்தில் ஔபசாரிகமாகச் சொல்லப் பெறுவதில்லை. மற்ற விஷயங்களில் ஔபசாரிகமாக அமுக்யமாகச் சொல்லப் பெறுகிறது.]
"பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளியுரைத்த, கணக்கறு நலத்தனன் அந்தமிலாதி யம்பகவன்" (திருவாய்மொழி 1-3-5){(அந்தமிலாதி) ஆப்ததமன். எல்லார்க்கும் உத்பத்தி விநாசங்களாலே யிறேஜ்ஞாந ஸங்கோசம் பிறப்பது; இவனுக்கு அவையில்லாமையாலே அகர்மவச்யன் என்கிறது. (அம்பகவன்) -- ஜ்ஞாநாதிகளால் அல்பம் உத்கர்ஷம் உடையவன் பக்கலிலே பகவச்சப்தம் வர்த்தியாநின்றதிறே ; "அந்யத்ரஹ்யுபசாரத:" பகவச்சப்தம் முக்யமாக வசிப்பது இவன் பக்கலிலே, அல்லாதார் பக்கல் ஔபசாரிகம். (அம்பகவன் வணக்குடைத்தவ நெறிவழி நின்று) -- "நமஸ்யந்தச்சமாம் பக்த்யா" என்று பக்தி சரீரத்திலே நின்று அருளிச் செய்தானிறே. அங்கநாபரிஷ்வங்கம்போலே போகரூப மாயிறே இதுதான் இருப்பது--- ஈடு"}
"இப்படி ஸ்வாதீந ஸர்வ ஸத்தாதிகளை உடையவனாய் இருக்கிற ஈச்வரனுடைய ஸ்வரூபம் ஸத்யத்வாதிகளாகிற ஸ்வரூப நிரூபக தர்மங்களாலே ஸத்யமாய் ஜ்ஞாநமாய் அநந்தமாய் ஆநந்தமாய் அமலமாய் இருக்கும். இவ்வர்த்தத்தை 'நந்தாவிளக்கே யளத்தற்கரியாய்'(பெரிய திருமொழி 3-8-1) என்றும் 'உணர் முழு நலம்'(திருவாய்மொழி 1-1-2) என்றும், 'சூழ்ந்ததனிற் பெரிய சுடர் ஞானவின்பம்' (திருவாய்மொழி 10-10-10) என்றும், 'அமலன்' ( அமலனாதிப் பிரான். 1) என்றும்இத்யாதிகளாலே ஆழ்வார்கள் அநுஸந்தித்தார்கள். மற்றுள்ள குணங்களும் திவ்ய மங்கள விக்ரஹாதிகளும் எல்லாம் ஈச்வரனுக்கு நிரூபித ஸ்வரூப விசேஷணங்களாயிருக் கும். இக்குணங்களில் ஜ்ஞாநபல ஐச்வர்ய வீர்யசக்தி தேஜஸ்ஸுக்கள் என்று ஆறு குணங்கள் பரத்வோபயுக்தங்களாயிருக்கும். ஸௌசீல்ய வாத்ஸல்யாதிகள் ஸௌலப்யோப யுக்தங்களா யிருக்கும். இக்குணங்கள் எல்லாம் ஸர்வகாலத்திலும் ஸ்வரூபாச்ரிதங்களாயிருக்கும். பரவ்யூஹாதி விபாகங்களில் குணநியமம் சொல்லுகிறதெல்லாம் அவ்வோரூபங்களை அநுஸந் திப்பார்க்கு ஸர்வேச்வரன் ஆவிஷ்கரிக்கும் குணவிசேஷங்கள் சொல்லுகைக்காக அத்தனை, ஔபநிஷத வித்யா விசேஷங்கள்தோறும் அநுஸந்தேய குணவிசேஷங்கள் நியதமானாற்போல பகவச் சாஸ்த்ரோக்தமான ரூப விசேஷாநு ஸந்தாநத்துக்கும் குண விசேஷங்கள் நியதங்கள். அவ்விடத்தில் பரரூபத்தில் ஜ்ஞாநாதிகுணங்கள் ஆறும் வேத்யங்கள்" [ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம். தத்வத்ரயசிந்த நாதிகாரம்]
"வ்யூஹங்கள் நாலென்றும் மூன்றென்றும் சாஸ்த்ரங்கள் சொல்லும். நாலு வ்யூஹம் உண்டாயிருக்க வ்யூஹவாஸுதேவ ரூபத்திற்கு பரரூபத்திற்காட்டில் அநுஸந்தாய குணபேதம் இல்லாமையாலே த்ரிவ்யூஹம் என்கிறது. இப்பக்ஷத்தை 'குணைஷ்ஷட்பிஸ்த்வேதை: ப்ரதம தரமூர்த்தி ஸ்தவ பபௌ, ததஸ் திஸ்ரஸ்தேஷாம் த்ரியுக யுகளைர்ஹி த்ரிப்ரபு:' (வரதராஜஸ்தவம் -16) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹித்தார்கள். இப்பரவ்யூஹங்களில் குணக்ரியாவிபாகங்கள் 'ஷாட்குண்யாத் வாஸுதேவ; பர இதி ஸபவாந் முக்தபோக்யோ பலாட்யாத் போதாத் ஸங்கர் ஷணஸ்த்வம் ஹரஸி விதநுஷே சாஸ்த்ர மைச்வர்யவீர்யாத் ப்ரத்யும்நஸ் ஸர்க்கதர்மௌ நயஸிச பகவந்! சக்தி தேஜோ நிருத்த: பிப்ராண: பாஸி தத்வம் கமயஸி ச ததா வ்யூஹ்ய ரங்காதிராஜ.' (ஸ்ரீரங்கராஜஸ்தவம். உத்தரசதகம்.39) என்கிற ச்லோகத்திலே ஸங்க்ரஹிக்கப் பட்டன. ஜாக்ரதாதிபத பேதங்களில் உள்ள விசேஷங்கள் எல்லாம் 'ஜாக்ரத் ஸ்வப்நாத் யல ஸதூரிய ப்ராயத் யாத்ரு க்ரமவதுபாஸ்ய: ஸ்வாமிந்! தத்தத் ஸஹ பரிபர்ஹ; சாதுர் வ்யூஹம் வஹஸி சதுர்த்தா' (ஸ்ரீரங்கராஜஸ்தவம் 2-40) என்று ஸங்க்ரு ஹீதங்களாயிற்று. [ஸ்ரீமத்ரஹஸ்யத்ரய ஸாரம், தத்வத்ரயசிந்த நாதிகாரம்.]
லேபிள்கள்:
சரணாகதிமாலை
ஞாயிறு, 19 ஜூலை, 2009
கோடாக் வீடியோ காமரா

அடியேனது பெண் எனக்கு ஒரு கோடாக் வீடியோ காமரா ஒன்றை அன்பளித்தாள். அதில் எடுத்த முதல் பதிவு இங்கே. என்னுடைய முதல் பதிவில் எங்கள் ஸ்ரீலக்ஷ்மி ஹயக்ரீவர், ஸ்வாமி தேசிகன், இருவரும் கடந்த சில மாதங்களாக தினந்தோறும் திருச்செவி சாற்றும் ரிக் வேத கோஷம் இவைதானே இடம் பெற வேண்டும்!
லேபிள்கள்:
ஒண்ணுமில்லே
ந்யாஸதசகம்

( பகவந்: -- ஞானம், சக்தி, பலம், ஐச்வர்யம், வீர்யம், தேஜஸ்ஸு என்கிற ஆறு குணங்கள் நிறைந்த எம்பெருமானே! தேவி: --ஸ்ரீபூமி நீளைகள், பிராட்டிமார்கள்: பூஷண -- திருவணிகலன்கள்: திருவாபரணங்கள்: ஹேதி -- திவ்யாயுதங்கள்: ஆதி - திருவணுக்கள் முதலானவைகளால்: ஜுஷ்டஸ்ய -- அடையப் பெற்ற: தவ -- தேவரீருடைய: நிரபராதேஷு -- குற்றமற்ற : கைங்கர்யேஷு --குற்றேவல்களில்: அடிமைகளில்: மாம் -- அடியேனை: நித்யம் -- ஒழிவில் காலம் எல்லாம், எல்லாக் காலத்திலும், நியுங்க்ஷ்வ -- நியமித்தருள வேண்டும், விநியோகித்துக் கொள்ளுக.
அகில விபூதிகளுடன் கூடிய தேவரீர் விஷயத்தில் அபராதம் இல்லாத கைங்கர்யத்தை அடியேன் செய்யும்படி நியமித்தருள வேண்டும் என்று பிரார்த்திக்கிறார் இதில்.
ஸ்ரீபூமி நீளைகளாகிற பிராட்டிமார்களாலும், திவ்யாபரணங்களாலும், திவ்யாயுதங்களாலும் அடையப் பெற்று அதனால் ஆநந்தம் அடையும் தேவரீரது, அபராத லேசமும் புகவொட்டாத கைங்கர்யங்களில் நித்யமாக அடியேனை இறுத்திக் கொள்ள வேணும்.
ஷாட்குண்யபரிபூரணனே! அகில ஜகத்தையும் ஆபரணமாகவும், ஆயுதமாகவும் கொண்டு ஸர்வ ஜகத் சரீரகனாய் தேவிமார்களுடனும் ஸகல கல்யாண குணங்களுடனும் கூடிய தேவரீர் விஷயத்தில் இங்குச் சரீரம் உள்ளதனையும், பின்னர் யாவதாத்மபாவியாகவும் எவ்விதக் குற்றமும் இல்லாத கைங்கர்யங்களைச் செய்யும்படி அடியேனை நியமித்தருள வேண்டும்.
[இனி பந்தல்குடியாரின் வியாக்கியானம் தொடர்கிறது. குறைந்தது 7 நாட்களாவது எழுத வேண்டி வரும். பொறுத்தருள்க]
லேபிள்கள்:
சரணாகதிமாலை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)